Friday, June 19, 2009

குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...

குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவது அவர்களுக்கு அன்றாட வாழ்வில் ரொம்ப பயனளிக்கும்.என் பெற்றோர் எனக்குக் கற்று தந்த (Life Skills)வாழ்க்கைத் திறமைகள் எனக்கு ரொம்ப பயன்பட்டது. ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் பயன் படுத்தினேன்.என் பையனுக்கும் அதைக்கற்றுத் தந்திருக்கிறேன்.

வாழ்க்கை ரொம்ப சுலபம் இல்லை.திடீர் திடீர் என்று கிறுக்கல் அடித்து நம்மை வேடிக்கைப் பார்க்கும்.

____________________________________________________________________________________

_________________________________________________________________________________

பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினால படிப்பாளி.திறமைசாலி அல்ல.நூற்றுக்கு நூறு மார்க் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தரும்.பள்ளி படிப்பில் முதலில் இருக்கும் சில பேர் பொரோபஷனல் (professional) வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் ஒளியற்று இருப்பார்கள்.மக்குத்தனம் இருக்கும்.படிப்பு வேறு.புத்திசாலித்தனம் வேறு.

குழந்தைகள் நூற்றுக்கு நூறு பார்டியாக இல்லாவிட்டாலும் “உஷார் பார்ட்டி”யாக (சாமர்த்தியசாலியாக..) இருக்கவேண்டும்.இப்போது இருக்கும் உலக நடப்புக்கு அதுதான் யதார்த்தம்.“உஷார் பார்ட்டி” with நேர்மை/ஒழுக்கம்/பக்தி/அன்பு. Be practical. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வர வேண்டும்.

அது என்ன வாழ்க்கைத் திற்மைகள்(Life Skills):-


உதாரணம்- 1
பக்கத்துவீட்டுப் பையன் படிப்பில் கில்லாடி.ஆனால் தன் சைக்கிளின் செயின் கழண்டால் அதை சரி செய்யக் கூடத்தெரியாது.தள்ளிக்கொண்டுதான் வருவான்.ஆறு கிலோ மீட்டர்.காற்று கூட அடிக்கத் தெரியாது. அடிப்பது அவன் அப்பா.இழப்பு யாருக்கு?

உதாரணம்- 2
பல வலைப்பதிவர்கள் மெது மெதுவாக தங்கள் திறமைகளை(skills) பயன்படுத்தி வலையை ஜொலிக்க வைக்கிறார்கள்.எல்லாம் ரெடிமேடாக கிடைத்தாலும் அதை நிறுவும் பொழுதில் கிடைக்கும் அனுபவம் அடுத்த முயற்சிக்கு தூண்டுகிறது.அறிவு /அனுபவம் வளருகிற்து.திறமைகள் வளர்கிறது.

உதாரணம்- 3
நடிகர் கமல் நாலாவதுதான் படித்திருக்கிறார்.புகழின் உச்சியில் இருக்கிறார்.அவர் கால கதாநாயகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.காராணம் கமல் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார்.(மோகன் மாதிரி மைக் பிடித்துக் காணாமல் போகவில்லை)தொலை நோக்குப் பார்வையில் சினிமாவை எடைப்போட்டு காணாமல் போகாமல் தன்னை நிறுத்திக் கொண்டார்.தன்னுடைய சிவப்பு நிறம் அழகான முகம் ரொம்ப நாள் “தாக்குப்பிடிக்காது” என்று தெரியும்.

உதாரணம்- 4
பக்கத்து வீட்டுப் பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டி நின்று விட்டது.காரணம் தெரியவில்லை மெயின் ரோட்.ஆள் நடமாட்டம் கம்மி.மெக்கனிக் ஆறு கிலோ மீட்டர் தள்ளி.எப்படி நடுரோடில் விட்டு வருவது. ஐடியா! பக்கத்து பங்களாவின் மாடியில் நின்றவரைக் தையரிமாக கூப்பிட்டு ”excuse me, if you don"t mind" சொல்லி புன்னகைத்து வண்டியை உள்ளே விட்டு விட்டாள்.சாமர்த்தியம்!
பிறகு ரிப்பேர்.

உதாரணம்- 5
பிளாட் லிப்டில் கரெண்ட் போய் ஒரு சிறுவன் மாட்டிக்கொண்டான்.எமர்ஜென்சி அலாரம் வேலைச் செய்யவில்லை.”அய்யோ அம்மா,,அய்யோ அம்மா”என்று பெரும் குரலில் கத்தினான். ஷூவைக் கழட்டி லிப்ட் கதவில் அடித்தான். அடுத்த கணத்தில் உதவி வந்தது.அலாரம் வேலைச் செய்யா விட்டால்”அய்யோ அம்மா,,அய்யோ அம்மா”..கதவைத் தட்டுதல்...” போன்றவற்றை செய்யவேண்டும் என்று சொன்னது அவன் அப்பா.அப்பா கே.ரவிஷங்கர்.பையன் ஆதித்யா.

உதாரணம்- 6
பக்கத்து வீட்டு மாமிக்கு காஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் புதுசு மாட்டத் தெரியாது.வாட்ச்மேன் அல்லது எதிர்வீடுதான் உதவி செய்யவேண்டும்.அந்த இரண்டு பேர் இல்லாவிட்டால் என்ன செய்வார்?


இந்த திறமைகளைப்(skills) பற்றிச்சொல்லும்போது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.

நான் கடையில் ஒரு நாள் ஏதோ வாங்கிக்கொண்டிருந்தேன்.அப்போது என் மகன்
(வயது 10) என்னைக் கடந்து சைக்கிளில் போய் சிக்னலில் நின்றான்.என்னை கவனிக்கவில்லைஅப்போது எதிரில் வந்த தண்ணீர் லாரி சடன் பிரேக் அடித்து ஒரு குலுங்கு குலுங்கி தண்ணீர் பீச்சியடித்து அவன், சைக்கிள்,புத்தகப்பை எல்லாம் அருவியில் குளித்த மாதிரி ஆகிவிட்டது.

வாழ்க்கையைப் பச்சையாக (raw formஇல்) சந்திக்கிறான்.என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு என்னசெய்யப்போகிறான் என்று பார்த்தேன்.

நனைந்ததால் உடலோடு ஆடைகள் ஒட்டி கட் பனியன்,ஜட்டி ஷேப் தெரிந்தது.(வெள்ளை யூனிபார்ம்).அவமானத்தில் முகம் சுருங்கிவிட்டது.வாழ்க்கையின் ஒரத்தில் இருந்தான்.(பொது ஜனங்கள் “உச்” கொட்டிவிட்டு ”பாத்துத் தம்பி” என்று நகர்ந்தார்கள்).கடைசியாக வீடு வந்து சேர்ந்தான்.

தண்ணீரில் நனைந்ததிலிருந்து வீடு வந்து சேரும் வரை அவனுடைய

திறமைகள்:-

1.அடுத்த வினாடி முக்கியமான புத்தகங்களை பையின் பின் அறைக்கு மாற்றினான்.(அங்கு ஈரமில்லை). (மெயிண்டனென்ஸ்/வாழ்வாதாரம்(survival)

2.TNEB Junction Boxலிருந்து தள்ளி நின்று கொண்டு தலையை கர்சீப்பால் தவிட்டிக்கொண்டான். (பாதுகாப்பு)

3.அடுத்து வேறு சந்தில் நுழைந்து சில நிமிடம் காத்திருந்து கிளாஸ் டீச்சரை ரோடில் சந்தித்து “see my position" என்று லேட்டாக வருவேன் என்று பர்மிஷன் வாங்கினான். (முன் யோசனை/சமயோசிதம்/பயம்)

4.PCOக்குப் போய் எனக்கு செல்லடித்தான்.(உதவி/தகவல்)

நான் செல் எடுக்கவில்லை காரணமாக.(இவனுக்கு பணம் எப்படி?இதை தனியாக கவனிக்க வேண்டும்)

திறமையின்மை:

1,வண்டியை ஓட்டாமல் தள்ளிக்கொண்டே வந்து சேர்ந்தான்.
உலகமே தன்னைப் பார்த்து பரிதாபப் பட வேண்டும்.(சுய பச்சாதாபம்)

2.பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள் என்று லாஜிக் யோசிக்கமால் செல்லடித்தது.(முன் யோசனையில்லாமை)

3.ஸ்கூலுக்கு மறுபடியும் திரும்பி போகும்போது வேற சுத்து ரூட்.ஏன்? திரும்பவும் தண்ணீர் லாரி வந்து விட்டால்?(பயம்/வெறுப்பு/உஷார்)

4.அவன் என்னை வரச் சொல்லியிருந்தான்.செக்யூரிட்டி/லேட் மிஸ் என்று வாசலில் இருப்பவரிடம் நான் விளக்கிச் சொல்லி உள்ளே அனுப்ப.அவன் தன் சொந்த திறமையில் இதை சமாளிக்க வேண்டும்.செய்யவில்லை.
(தன்னம்பிக்கையின்மை)

எந்த குழந்தையிடமும் 100% பெர்பெக்‌ஷன் எதிர்பார்க்கமுடியாது.அப்படி இருந்தால் அது குழந்தை அல்ல.சம்திங் ராங்.குழந்தை குழந்தையாகத்தான் இருந்தால்தான் அழகு.ஆனால் அவ்வப்போது அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல் திறமைகளை வளர்க்கவேண்டும்.

”என் பையன் மாதிரி கம்பூயட்டர் கேம்ஸ் விளையாட.....என்றும் செல்போனக் கொடுத்துட்டா போதும் அதுல பூந்து விளையாடுவான்...அவன மாதிரி..” என்று மற்றவர்கள் முன்னால் குழந்தைகளை செல்லம் கொஞ்சுவார்கள்.இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை காமெடி. ஏனென்றால் 99% சதவீதம் குழந்தைகளுக்குத் இதெல்லாம் தெரியும்.

”கண்ணே...செல்லம்...உச்சு புச்சு..”என்று கொஞ்சிக் கொண்டு இருக்காமல் வைக்கும் இடத்தில் வைத்து சாத்தும் இடத்தில் சாத்துங்கள். குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அடிப்படை எதார்த்தங்களை (ground realities) கற்றுக் கொடுங்கள்.

குழந்தையை வளர்ப்பதும் ஒரு பெரிய(life skill) திறமைதான்.


(Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவதில் என்ன நன்மைகள்:-

1.சுயசிந்தனை
2.அடுத்தவரை சாராமை
3.அனுபவம்
4.அனுபவத்தில் பெறப்படும் அறிவு
5.சுறுசுறுப்பு
6.பொது அறிவு
7.பிரச்சனை எதிர் நோக்கும் துணிவு
8.ஒரு வித சுய சந்தோஷம்(நானே செய்தேன்!)
9.சமயோசிதம்
10.கெளரவம் பார்க்காமை


ஒரு தலைமுறை குழந்தைகளுக்குக்கு(நகர்புறம் சார்ந்த) இருக்கும் lifeskills அடுத்த தலைமுறைக்கு இல்லை.இப்போது இருக்கும் தலைமுறைக்கு எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே கிடைக்கிறது.

பாதுகாக்கபட்ட சுழ்நிலையில் வளர்கிறது.(highly protected zone).போனதலைமுறை மாதிரி அல்லதுஅதற்கு முந்திய தலைமுறை அலைந்துதான் எல்லாம் பெற வேண்டும் .கையில் எதுவும் தொப்பென்று விழாது.

கடைசியாக... மிருகங்கள தங்கள் வாழ்வாதர திறமைகளை எப்படி பயன்படுத்துகிறது என்று டிஸ்கவரி சேனல்,அனிமல் பிளானெட்டில் பாருங்கள்.

Survival of the fittest! நமக்கும் அது நூறு சதவீதம் பொறுந்தும்.


26 comments:

  1. என்ன சொல்ல வரீங்க ? புரிஞ்ச மாறி இருக்கு... புரியலே!

    ஆனா ஒன்னு Survival of fittest அப்படின்னு சொல்லி, ஒருவரை ஒரு கூட்டுக்குள் அடைக்காமல், அதிகம் முயற்சி எடுக்க வைக்க வேண்டுமென்பது என் தாழ்மையான கருத்து. Never give up!

    பரிணாம வளர்ச்சியால், குழந்தைகள் தாமாக வளர்கின்றன. பெற்றோர் எல்லாம், ஒரு படிதாங்கி தான்.

    எங்கள் அப்பார்ட்மென்ட் அருகில் இரு கவன்மெண்ட் பள்ளிகள் உள்ளன ( ஆண், பெண் ). இரண்டு குரங்குகள் ஜோடியாக சில வருடம் முன், பெரிய அரச மரத்தில் வாழ்க்கை ஆரம்பித்தது. இப்போ அதற்க்கு மூன்று குட்டிகள்... எப்படியோ நகர சந்தடியில் வாழ்கின்றன. தினம் ஒரு முறையாவது பார்த்துவிடுவேன்... நகர வாழ்க்கையில் அவை ஒன்றி, குப்பை மேட்டில் உணவு எடுத்து, பெட்டிக்க்கடைக்காரர் போடும் அழுகியபழம் தின்று... என்ன ஒரு பயம் என்றால், அவை யாரவது குரங்காட்டி இழுத்து சென்று விட்டால்? நாம் தான் அவைகளுக்கு இடம் கொடுக்காமல், இருக்கும் இடம் எல்லாம் எடுத்துக்கொள்கிறோம். ( கொல்லுகிறோம் - ஒபாமா உட்பட - கரக்ட் தான் - தொந்தரவு செய்தால்)

    குழந்தைகள் குழந்தைகளாக இருக்க விடுங்கள்!

    ReplyDelete
  2. Vinitha said...
    வந்து கருத்துக்கு சொன்னதற்கு நன்றி.

    //என்ன சொல்ல வரீங்க ? புரிஞ்ச மாறி இருக்கு... புரியலே!//

    படிப்பு(academic)மட்டும் அல்லாமல் non-academic
    க்கிலும் திறமை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

    ஏன்? மாறி வரும் உலக சுழ் நிலை.

    //குழந்தைகள் குழந்தைகளாக இருக்க விடுங்கள்!//

    இருக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே.
    என்ன சொல்ல வருகிறீர்கள்? எனக்குப் புரியவில்லை.

    ReplyDelete
  3. பாதுகாப்பு, போதனை, வழிகாட்டுதல் என்ற நம் பிரயத்தனங்கள்ளில் கொஞ்சம் இப்போது அதிகப்படியாக அநேகர் கவனம் செலுத்துகிறோம் என்றே தோன்றுகிறது...

    ReplyDelete
  4. ரொம்பவும் சரி.நன்றி.

    ReplyDelete
  5. ரொம்ப அருமையான கட்டுரை. வாழ்க்கைக் கல்வியின் அவசியத்தை நன்றாக உணர்த்திவிட்டீர்கள். நன்றி ரவி

    ReplyDelete
  6. அண்ணே, உண்மையிலேயே ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க, குழந்தைகளுக்கு மட்டும் இல்ல, பெரியவுங்களும் skill இல்லாட்டி ரொம்ப கஷ்டம்.,

    ReplyDelete
  7. //ச.பிரேம்குமார் said..//

    ரொம்ப அருமையான கட்டுரை. வாழ்க்கைக் கல்வியின் அவசியத்தை நன்றாக உணர்த்திவிட்டீர்கள். நன்றி ரவி

    நன்றி பிரேம்குமார்.

    ReplyDelete
  8. சூப்பர் பதிவு.. !!!

    ReplyDelete
  9. //வைக்கும் இடத்தில் வைத்து சாத்தும் இடத்தில் சாத்துங்கள்//
    ரொம்ப சரி!
    வாழ்வியல் கல்வியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  10. தேனீ - சுந்தர் said...

    //அண்ணே, உண்மையிலேயே ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க, குழந்தைகளுக்கு மட்டும் இல்ல, பெரியவுங்களும் skill இல்லாட்டி ரொம்ப கஷ்டம்.//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. நல்ல பதிவு..!!

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. யாத்ரீகன் said...

    //interesting view.. usefull too :-)//

    நன்றி யாத்ரீகன்.

    ReplyDelete
  13. அன்புடன் அருணா said...

    //ரொம்ப சரி!
    வாழ்வியல் கல்வியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!//

    நன்றி அருணா.உங்களுக்கு தெரியாததா? கல்வித்துறையில் உள்ளீர்கள்.

    ReplyDelete
  14. நல்ல பதிவு, ... அது ஏனோ, அப்பாக்கள் இது போல திறமை .... போன்ற விஷயங்களில் கவலை பட்டாலும், இந்த கால அம்மாக்கள் பரிட்ச்சை , மார்க்கு, பாடம்ன்னு கொஞ்சம் ஓவரா பிலிம் காட்டறாங்க ...

    நல்ல கருத்து , ஆனால் சடார்ன்னு முடிவு பண்ணி படார்ன்னு எழுதினா மாதிரி இருக்கு ... தவறு இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  15. kannla eduthu othikaramadiri irukku

    ReplyDelete
  16. அது ஒரு கனாக் காலம் said...

    //நல்ல பதிவு, ... அது ஏனோ, அப்பாக்கள் இது போல திறமை .... போன்ற விஷயங்களில் கவலை பட்டாலும், இந்த கால அம்மாக்கள் பரிட்ச்சை , மார்க்கு, பாடம்ன்னு கொஞ்சம் ஓவரா பிலிம் காட்டறாங்க ..//

    எனக்குத் தெரிந்து 100/100 மார்க + சாமர்த்தியம்
    இந்த காம்பினேஷனல பசங்க கம்மிதான்.100/100
    ஒண்டி வேல வாங்கிக்கொடுத்துடும்.வேல கிடைச்சதா.பையன் வாழ்க்கைல செட்டில் ஆயிட்டான்னு நிம்மதி. அதான் இதுல
    இந்த கால அம்மாக்கள் ஓவரா பிலிம் காட்டறாங்க


    //நல்ல கருத்து , ஆனால் சடார்ன்னு முடிவு பண்ணி படார்ன்னு எழுதினா மாதிரி இருக்கு //
    இரண்டு நாள் எடுத்துக்கொண்டேன்.நன்றி.

    இங்கு போய் பாருங்கள்.எவ்வளவு கஷ்டம்.

    நானும் என் மனைவியும் இப்படித்தான் ஓடியிருக்கிறோம்.(ஆனா நம்ம பசங்க சொகுசா இருக்காங்க)

    http://www.hindu.com/2009/06/20/stories/2009062060100400.htmhttp://www.hindu.com/2009/06/20/stories/2009062060100400.htm

    ReplyDelete
  17. biskothupayal said...

    //kannla eduthu othikaramadiri irukku//

    நன்றி. உங்கள் ஊக்கம் உற்சாகம் அளிக்கிற்து.

    ReplyDelete
  18. தல

    நல்ல பதிவு......... எல்லாரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது...........

    நீங்கள் சொல்லும் நிறைய விஷயங்கள் இந்த கால பிள்ளைகளுக்கு உபயோகமானதா இருக்கிறது............

    பின்பற்றுவோம்............. பயனடைவோம்........

    வாழ்த்துக்கள் ரவிசங்கர்...........

    ReplyDelete
  19. ரவி சார்.. மிகமிக அருமையான பதிவு...பெரியவர்களுக்கும் உபயோகமானது.சூப்பர்.

    ReplyDelete
  20. R.Gopi said...
    //தல

    நல்ல பதிவு......... எல்லாரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது.//

    நன்றி கோபி.

    ReplyDelete
  21. தமிழ்ப்பறவை said...

    //ரவி சார்.. மிகமிக அருமையான பதிவு...பெரியவர்களுக்கும் உபயோகமானது.சூப்பர்//

    நன்றி.

    ReplyDelete
  22. சூப்பர்.

    ReplyDelete
  23. Anonymous said...
    //சூப்பர்//

    நன்றி.

    ReplyDelete
  24. /எந்த குழந்தையிடமும் 100% பெர்பெக்‌ஷன் எதிர்பார்க்கமுடியாது.அப்படி இருந்தால் அது குழந்தை அல்ல.சம்திங் ராங்.குழந்தை குழந்தையாகத்தான் இருந்தால்தான் அழகு.ஆனால் அவ்வப்போது அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல் திறமைகளை வளர்க்கவேண்டும்.//

    உண்மை சார், பழைய பகிர்வாக இருந்தாலும் எந்த காலத்துக்கும் பொருந்தும்.

    குழந்தை வளர்ப்பு ஒரு கலை, அதை முழுவதும் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதானதல்ல.
    தங்களிடம் உள்ள தெளிவு கண்டு அச்சர்யப்படுகிறேன்.

    நானும் ஒரு குழந்தையை இளைஞராக்கிவுள்ளேன், மனிதனாக்கி உள்ளேனா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  25. //குழந்தை வளர்ப்பு ஒரு கலை, அதை முழுவதும் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதானதல்ல.
    தங்களிடம் உள்ள தெளிவு கண்டு அச்சர்யப்படுகிறேன். //

    முதல் வருகைக்கு நன்றி அமைதி அப்பா.எனக்கு வந்த ”தெளிவு” எல்லோருக்கும் வரும் அடிபட்ட பிறகுதான் சார்.

    கருத்துக்கு நன்றி சார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!