Monday, November 30, 2009

ஏம்பா..! லாங்கா லுக் விட மாட்டீங்களா?

என் பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் சில மக்குத்தனமான விஷயங்களைப் பார்த்திருக்கிறேன் மற்றும் படித்திருக்கிறேன்.அப்போது எனக்குத் தெரியாது இதெல்லாம் மக்குத்தனம் என்று.சரிதான் இவங்க பண்றது என்கிற ரீதியில் இருந்தேன்.

ஆனால் இதைச் செய்தவர்கள் தலைவர்கள், படைப்பாளிகள்.
சிந்தனையாளர்கள் சுத்தமாக ஒரு தொலைநோக்குப் பார்வை ( லாங் லுக்) இல்லாத மக்குகள என்பது இப்போது அந்த விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து இவர்களைப் பார்த்து வழித்துக்கொண்டு “ஹிஹிஹி” என இளித்துக் கொண்டிருக்கிறது.

அது என்ன? பார்ப்போம்.

1.80 லில் கம்புயூட்டர் தொழில் நுட்பம் மெதுவாகத தலைக்காட்டும் நேரம்.வேலையில்லா திண்டாட்டம் வரும் என்று அதை எதிர்த்து சில யூனியன்களும்,ஒரு பெரிய தலைவரும் மவுண்ட் ரோடில் ஊர்வலம் போனர்கள்.அதே இவர்கள்  சில வருடங்கள் கழித்து ”ஓகே! வரட்டும்..! ஆனா ரயில்வேயில் (ரிசர்வேஷன்)”இதைக்கொண்டு வரக்கூடாது பிடிவாதம் பிடித்துக் கொடிப்பிடித்தனர்.

ஹிஹிஹி.! தாங்க முடியல!

2.டீவி வந்த புதிதில் ஞாயிற்று கிழமைகளில் மாலையில் தூர்தர்ஷனில் திரைப்படம் போடக்கூடாது என கூட்டம் போட்டுத் தீர்மானம் போட்டார்கள் பிறகு ஊர்வலம் போனார்கள் சினிமாகாரர்கள்.போட்டாலும் “இது திரைக்கு வந்து பல பல பல வருடங்களே ஆன” படங்களைத்தான் போடவேண்டும்.அதே மாதிரி மேடை நாடகம் நடத்துபவ்ர்களூம் கொடிப் பிடித்தார்கள்.அவர்களுக்கு ஞாயிறு கிழமைகளில் சபாக்களில் ஈ ஓட்டுவதன் காரணமாக.

ஹிஹிஹி...! தாங்க முடியல!

3.வீடியோ கேசட் வந்த போது அதற்கு சினிமா உரிமையைக் கொடுக்கக்கூடாது என்று கூட்டம் போட்டார்கள்.எதிர்த்தார்கள்.சிறிது மாதம் கழித்து ஒரு படத்தின் உரிமையை இரண்டு வருடம் அல்லது மூன்று வருடம் கழித்துதான் தர வேண்டும் என்று அடுத்தக் கட்டத்திற்க்குப்போனார்கள். அப்புறம்.....?

ஹிஹிஹி...! தாங்க முடியல!

4.கருத்தடை சாதனம்.இது மதங்களுக்கு எதிரானது. கடவுள் கொடுப்பதை தடுக்கக்கூடாது.பிள்ளகள காப்பாத்தவது எங்கள் வேலை.மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்.இதுல கவர்மெண்ட் தல இடக்கூடாது.

ஹிஹிஹி...! தாங்க முடியல!

Thursday, November 26, 2009

'நச்" போட்டி-சிறு கதைகள்-விமர்சனம்

”நச்” போட்டியின் டாப்-20 முடிவுகள் வெளியாகி விட்டது.அதிலிருந்து இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.மீதி 50 ஐ கதைகளை விமர்சனம் செய்வதில் தடை இல்லை என்று நினைக்கிறேன்.உரையாடல் போட்டியில் பல கதைகளை விமர்சனம்(குறை/நிறை) செய்தது அவ்வளவாக  பலர் விரும்பவில்லை விமர்சனம் நடுவர்களை பாதிக்கும் என்பது அவர்கள் கருத்து.

மீதி  20  விமர்சனம் 
டாப் -2  தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னர்.

இந்தப் போட்டியிலும் சில அற்புதமான கதைகள் படித்தேன்.அருமையாக எழுதும் அறிமுக எழுத்தாளர்கள்.வித்தியாசமான கருக்கள்.இவர்கள் எழுதி  எழுதிப் பழகினால் எங்கேயோ போய் விடுவார்கள்.சிலரின் கதைகளை fine tune செய்தால் மேன்மைப்படும்.

நச்” விதியினால் சில கவித்துவமான கதைகள் ஊசிப்போய் ஒரு மாதிரி ஆகிவிட்டது.சில நல்ல கதைகள் என்கெளண்டர் செய்யப்பட்டு விட்டன.சில”நச்” சுக்கள் லூசுத்தனமாக இருக்கிறது.புத்திசாலிதனமானக் கதையும் புத்திசாலித்தனமான “நச்” சிலதுதான் இருக்கிறது.”நச்”க்குப் போய் ரொம்ப சீரியஸ்ஸாக மண்டையை உடைத்துக்கொண்டிருக்க வேண்டாம்..நானும் அதே தப்பு செய்து விட்டேன்.கதை பணால் ஆகிவிட்டது.

சிலவற்றில் ஜாடி(கதை)க்கேற்ற மூடி (நச்)இல்லை.மூடி நல்லா இருந்தால் ஜாடி சரியில்லை.இந்தப் பார்முலாவை கொஞ்சம் சரியாக உள் வாங்கி இருந்தால் ஜாடிக்கேற்றார் மூடியும், மூடிக்கேற்றார் போல் ஜாடியும் செய்திருக்கலாம்.கதைக்கும் SOP(Standard Operating Procedure) உண்டு.


சில கதைகள் ஹோம் வொர்க்/மறுபார்வை/திருத்தி எழுதுதல்/மெருகேற்றுதல்/ஒட்டுப் போடுதல்/ இவைகளுக்கு உட்பட்டார் போல் தெரியவில்லை.கடைசி “நச்” எழுதிய அடுத்த நிமிடம் ..”அவ்வளவுதாண்டி/டா...  பிச்சிட்டடி/டா  ..... அனுப்பு...! ஜன்னலை மூடு..! சர்வேசா...!அமெண்ட NEFT ல என் வங்கிக்கு அனுப்பு!”என்கிற ரீதியில் இருக்கிறது..
 
டிஸ்கி:  பல வருட வெகுஜன/இலக்கிய கதை படித்த/எழுதிய அனுபவத்தில் இந்த விமர்சனங்களை எழுதுகிறேன்.நான் சிறுகதையின் அத்தாரிட்டி அல்ல.சொந்த ரசனையும் வெளிப்படலாம்.பொது ரசனையும் வெளிப்படலாம்.நீங்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும். சற்று விலகி நின்று பார்த்துதான் எழுதினேன்.நீங்களும் சற்று விலகி நின்று பார்த்து சரி/தப்பு தீர்மானிக்கலாம்/எடுத்துக்கொள்ளலாம்.

விமர்சனத்தில் மனம் புண்படுமானால் அட்வான்ஸ் மன்னிப்பு!


 இது என்னுது - புவனேஷ்வரி மாமி - (போட்டிக்கல்ல)
 சர்வேசன் எழுதியது.



நடிகை புவனேஷ்வரி கதை அல்ல.நல்ல “நச்”.ஊகிக்க முடியவில்லை.கதையின் உள்ளடக்க விவரிப்புகளும் கதையை சுற்றி தோதாக வருகிறது.கச்சிதமாக இருக்கிறது.உதாரணம்:”சவரம் செய்யாத முகத்துடன் நின்று கொண்டு”.உரையாடல்களில் ”ரேடியோ டிராமா”த்தனத்தைக் குறைத்திருக்கலாம்.அடுத்து கடைசிவரி தேவையா? “சுகுமாரன், வாயடைத்து வாசலிலேயே நின்று கொண்டிருந்தான்”இதெல்லாம்  ஈஸ்ட் இண்டியா காலத்துப் பழசு..
 

தயவு செய்து கதையில் பின்/முன் குறிப்பு,அண்டர்லைன்,ஹைலைட்,கலர் அடிப்பது /கோனார் நீதி/நோட்ஸ் போடுவது செய்யாதீர்கள். ஏன்? கதைச்சொல்லியின் “அல்டுதல்””இந்த இடத்தில நான் பின்னிட்டேன்” “சொந்தக் கருத்தை திணிப்பது”’படிப்பவரின்  அறிவை மழுங்க அடிப்பது””ஒரே கோணத்திலேயே பார்க்கச் செய்வது” இதில் தெரியும்.படிப்பவர் முட்டாள் அல்ல.
 
  2. அசைன்மென்ட் - கிஷோர்
கதையை கொஞ்சம் டிங்கரிங் செய்ய வேண்டும்.குழந்தைக் கதையில் “முதிர்ச்சி” திங்கிங்கைதவிர்ப்பது கடினம்.ரெண்டு நச்?ஏதோ மிஸ்ஸிங்.ப்ளோ சீர் செய்யலாம்.
 

4. உதவி - ஷைலஜா 
அவன் கடவுளை நம்புகிற மாதிரி “நச்” வைத்திருக்கலாமோ!கடவுள் நமபிக்கை உள்ள யாவரும் உதவி செய்தாற்போல் தெரியவில்லை.அதனால இவன் ரெண்டுபடி மேலே போகிறான்(அம்மா சொன்னதை விட).ஹோம் வொர்க் செய்திருக்கலாம்.



5. உயிரின் உயிரே - R. Gopi
திறமை இருக்கிறது.இன்னும் கூட அழுத்தமாக எழுதலாம்.வேறு சில முடிவுகளும் யோசித்துப் பார்த்து செட் ஆகுதா என்று பாருங்கள்.



6. தொழில் - ராமலக்ஷ்மி
 நல்ல ”நச்” க்கான கரு.இந்த மாதிரி கதைகளை “acton packed"ஆக புனைய வேண்டும்.முதல் அல்லது இரண்டாவது பாராவில் ஆகஷன் ஆரம்பிக்கனும்.”மாட்டவே மாட்டேன்(விவரிப்பு) vs மாட்டுவட மவனே(நச்)” என்ற பார்முலாவில் எழுத வேண்டும்.பெரிய குறை கடைசியில் “நச்”சை உடனே நச்சாமல் ரொம்பத் தள்ளிப்போய் நச்சுகிறார்.கதை முடிந்தவுடன் கதைச் சொல்லாதீர்கள்.ஹோம் ஒர்க்  தேவை?



7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
இன்னும் கூட”ஆழம்” தேவை.கதை அப்படி.அப்பத்தான் நச் இம்பேக்ட் கொண்டு வர முடியும்.ஆபிஸ்காரர்களை போலியாகக் காட்டுகிறார்.இதில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் விரலுக்கு மேல் வீங்கும் போலிகள்தான்.ஆபீஸ் பாராவே ஒரு கதைதான் அதற்கு “நச்”செட்டாகிறது.



8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
கதையின் ஓபனிங் ஷாட் விவரிப்புகள் நல்லா இருக்கு.பிரமாண பாஷயை இன்னும் கூட உரையாடலில் பாந்தமாகக்  கொண்டு வந்திருக்கலாம்.பலம் கூடும்.ரசித்த கதை.கடைசியில் நீதி வைக்காமல் யதார்த்தம்.நல்ல நச்.



9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா 
இது இவரின் இரண்டாவது இனிங்க்ஸ் கதை.இந்த ”திடீர்” நாட்டுப்பற்று ஏன்?டு மினிட்ஸ் நூடூல்ஸ் “நச்”சில் நம்பகத்தன்மை இல்லையே?


11. கண்ணால் காண்பதும் - பெயர் சொல்ல விருப்பமில்லை
 கதை மற்றும் விவரிப்புகளில் நம்பகத்தன்மை வேண்டும்.”கதை” விடுகிறார்.



13. ஆவணி பௌர்ணமி - நானானி நம்ப முடியவில்லையே?ராக்கியை முன்னமே கட்டி கல்யாணச் செலவை சேமித்திருக்கலாமே?வேறு முடிவு யோசித்திருக்கலாமோ!விவரிப்பில் சற்று முதிர்ச்சி கொண்டுவரலாம்.புதுசானக் கருக் கூட யோசிக்கலாம்.



14. நொடிப் பொழுதில் - Pappu
 நடை நல்லா இருக்கு.ஆனா குழப்பமா இருக்கு.தெளிவாக சொல்லி இருக்கலாம்.



15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
அருமையான திரில்லர் விவரிப்பு.முடிவு ஈஸ்ட் இண்டியா காலத்துப் பழசு.
இதற்கு வேறு முடிவு வைப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.நண்பரே! யோசியுங்களேன்.



16. ஜாக்கிரதை மழை பெய்கிறது - Vidhoosh
பழைய உத்தி.கதை விவரிப்பு ப்ளஸ்.திகிலை கொண்டுவருகிறார்.செய்யுள் மாதிரி இவ்வளவு பாரா பிரிக்கவேண்டுமா?இதற்கு வேறு முடிவு வைப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.வேற்று நாட்டு திரில்லா கதைகள் அதனால்தான் நன்றாக இருக்கிறன.முகத்தில் ஆசிட் ஊற்ற வரும் ஆட்கள் முகத்தைப் பார்த்தபின் “இவள் அவள் அல்ல” என்று முடித்திருக்க்லாம்.



17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
சென்னைக்கு வரும் வரை வருணனை/கதை அருமை.அங்கேயே முடித்திருக்கலாம்.அதற்குப் பிறகு ரொம்ப நீளம்.பொறுமைப் போய் அலுப்பு வருகிறது.சுருக்கமாக எழுதுங்கள்.சீக்கிரம் கதைக்குள் வந்து விடுங்கள்.அடுத்து நமக்குப் பிடித்ததெல்லாம் எழுதக்கூடாது.(கதையின் கருவைச் சொல்லவில்லை).சீரியஸ் கதை எழுதி உள்ளிர்கள்.



18. ஆதவன் - நான் ஆதவன்
நல்லா இருக்கு ”நச்”.கதையை இன்னும் மெருகேற்றலாம்.எதற்குஅடிக்கடி ”மகனே” என்கிறார் ராவுத்தர்.(மவனே!வா).



20. யாரோ ஒருத்தி - குகன்
”நச்”க்கான ஸ்கோப் நிறைய.Missed the bus.லாஜிக்+விவரிப்பு இரண்டும் சறுக்குகிறது.இரண்டையும் திறமையாக கையாண்டிருந்தால் எங்கேயோ போய் இருக்கும்.எழுத்துப்பிழைகள் கவனிக்க.கதை முடிந்தவுடன் கூட கதைச் சொல்லுகிறார்.தவிருங்கள்.



21. செவப்புத் தோல் - ஈ.ரா
இந்த ”நச்”க்கு இவ்வளவு பெரிய கதை?சுருக்கி இருக்கலாம்.வேறு கதை முயற்சித்திருக்கலாம்.முடிவு யூகித்துவிடலாம்.

22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்
அம்பா சிகண்டியாக மாறி அர்ச்சுனன் பின்னணியில் பிஷ்மரை விழ்த்துவது கதை.தன் வாழ்வை நாசமாக்கியவனுடன் ஒரு உரையாடல் கடைசி தருணத்தில்.இதில் என்ன நச் இருக்கிறது என்று புரியவில்லை.கதையும் உரையாடலிலும் சுவராஸ்யமும் இல்லை.நீங்கள் அட்டகாசமான எழுத்தாளர் ஆயிற்றே.எப்படி இப்படி?



23. அன்னா மரியா குமாரசாமி - செந்தழல் ரவி
விறு விறு நடை.உரையாடலகளும் தோதாக இருக்கிறாது.சரி “நச்”.ஆனால்நச்சுக்கு ஏற்றார்போல் அவளைத் தேடும் காரணம் பலமாக இல்லை.



24. ரெட் லைன் - வண்டிக்காரன்சூப்பர் விறு விறு. ஆனால்இதுவும் ஒரு பழைய உத்தி கலாய்ப்பு “நச்”.இது ஈசி.இதற்கு வேறு முடிவு வைப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.வேற்று நாட்டு திரில்லா கதைகள் அதனால்தான் நன்றாக இருக்கிறன.


25. பச்சை நிற பக்கெட் - Thirumalai Kandasami
கதை வித்தியாசமாக படுகிறது.பக்கெட் காரணமாக அல்லல்.இன்னும் கூட சிறப்பாக எழுதி இருக்கலாமோ.கதை விவரிப்பில் முதிர்ச்சி தேவை.உள்ளடக்கத்தை கச்சிதமாக நெய்யுங்கள்.பழகினால் நல்லா வரும்.



26. கடைசியில் ஒரு திருப்பம் - மணிகண்டன்
 திறமை இருப்பதால் கலாய்ப்பு கதைகளை நிறுத்தி வேறு எழுதலாமே!



27. விடை கொடு எங்கள் நாடே - சங்கர்
 நல்லா இருக்கு.விவரிப்பும் நன்று.ஆனால் “நச்”?தவற விட்டு விட்டீர்கள்



28. மில்லியன் காலத்துப் பயிர் - சத்யராஜ்குமார்
 பூமிகாவின் அப்பா விசாரிக்காமல்  ரவுடி மனித குலத்துக்கு பூமிகாவை ”கல்லாணம்” கட்டி வச்சு விடுவதால்,பூமிகா ஒரு நாள் பொங்கி எழுவாள் என்பதுதான் கதை.டைனோ சொன்ன மாதிரி கடைசி நச் வைத்திருக்கலாம்.



29. டிஸ்லெக்சியா - Vinitha
 ஏதோ மிஸ்ஸிங்!



31. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - கெக்கேபிக்குணி

விவரிப்பில் தாக்கம் கொண்டு வருகிறார். relevant ஆன பின்னணியை நன்றாக பின்னியிருக்கிறார். நடை நல்லா professional ஆக இருக்கு.ரசித்த கதை.ஆனால் கடைசி டிவிஸ்ட் பொருந்தவில்லையே.கணவன் நோக்கில் அவளைப் பற்றி சொல்லப்பட்டு வந்தால் இந்த டிவிஸ்ட் செட் ஆகும.


32. ஜனனி - படுக்காளி
 கவித்துவமான நடை.”நச்”க்கு ஏற்றா கதை இல்லை.என்ன சொல்ல வருகிறார்.புரியவில்லை?



33. எக்ஸ்பிரஸ் இளமதி - SUREஷ் (பழனியிலிருந்த
கதையா? கட்டுரையா?கதாநாயகி விவரமே முக்கால்(பாசஞ்சர் வேகத்தில்) ஓடுகிறது.கதைக்குள் விரைவாக வர வேண்டும்.முடிச்சு போடவேண்டும். நச்சில் அவிழ்க்க வேண்டும்.”அவள்””அவர்” “அவள்” “அவர்” மற்றும் வயது குழப்பம். திருமணம் எக்ஸ்பிரஸ வேகத்தில் நடக்கவில்லையா?அதான் “நச்”சா?


35. புகை - kalyanaraman raghavan 
நம்பகத்தன்மை இல்லையே? ஏழை வீட்டில் தினமும் புகை அடுப்புச் சமையல்தானே? மாற்றி யோசித்திருக்கலாமோ?



36. வசவும் திட்டும் சாம்பலும் - கே.ரவிஷங்கர்
நச் செட்டாகவில்லை. சீரியஸ் கதை எடுத்தது  தவறு. திரில்லர் கதை எழுதியும் போட்டிக்கு அனுப்பாமல் இருந்தது அதை விட இமாலய்த் தவறு.கதைப் பற்றி ஹோம் ஒர்க் செய்யவில்லை.


37. 72877629 - கே.பி.ஜனார்த்தனன

 நல்லா இருக்கு.ரசித்தேன்.மாறவர்மனின் கடிதம் நம்பகத்தன்மையினால் யூகிக்க கஷ்டமாக இருக்கிற்து.ரெண்டு நச் வருகிறது.மாட்டிக்கொள்வது/மேலதிகாரி மன்னிப்பது.



38. ஜாதி கேடயம் - இரும்பித்திரை அரவிந்த்
 
உண்மை சம்பவத்தின் அடைப்படையில் எழுதபட்டிருக்கிறது.ஆனால் கதையில் எஙகு முடிச்சு விழுந்து “நச்”சுவதற்கு தோதாக இல்லையே.வேறு மாதிரி திறமையுடன் சொல்லி இருக்கிறீர்கள்.





40. அந்த இரண்டு ரூபாய் - வி.நா.வெங்கட்ராமன்
அருமையான “நச்”.ஷார்பாக முடிந்தும் கதைச்சொல்லி  கடைசிப் பாரா போட்டு “கருத்து” சொல்வது ஏன்?படிப்பவர்களே அதே உணர்கிறார்களே!கருத்து சொல்வதை தவிருங்கள்.



41. டிஷ்யூங் - கார்த்திகைப் பாண்டியன்
 நல்ல நச்.பிடித்த கதை.கொஞ்சம் சீரியஸ்னெஸ் கொண்டு வந்திருக்கலாம்.



42. சாப்ட்வேர் - ப்ரசன்ன குமார்
 கலாய்ப்பு கதை?ஊகிக்க முடிகிறது.வேறு முயற்சிக்கலாமே?



43. போகமாட்டேன் - புதுவை சந்திரஹரி
நல்லா இருக்கு. இன்னும் கூட வித்தியாசமான கதையை யோசித்திருக்கலாமோ?



46. சன்யாசம் கூறாமல் கொள் - சாம்ராஜ்ய ப்ரியன்
 நல்ல நடை.நல்ல விவரிப்பு.ஆனால் நச்?



47. காமம் வழிந்தோடும் உடல் - graham
 இதுவும் ஒரு மாதிரி சர்-ரியலிசம் கதை.மூன்று கோணத்தில் சொல்லப்படுகிறது.ஆனால் ஏதோ மிஸ்ஸிங்.



48. லாரி விபத்து - MSV Muthu
மன்னிக்க.தலைச் சுத்துது. கதை இன்னொரு தடவைப் படிக்க வேண்டும்.இதுக்கு கோனார் நோட்ஸ் கிடைக்குமா?சுருக்கமாக எழுதுங்களேன்.



49. மாத்தி யோசி - நாஞ்சில் பிரதாப்
  ஓகே விவரிப்பு.ரெண்டு கதை.முடிவு ”மாத்தி யோசி”ச்சிருக்கலாமே.இங்குதான் நாம் மண்டை உடைத்துக்கொண்டு யோசிக்க வேண்டும் நண்பரே!கோட்டை விட்டு விடுகிறோம்.சங்கர்  பண்ணுவது புத்திசாலித்தனம் ஆனால் ”நச்” இல்லையே!



50. பாராட்டு - ஸ்வர்ணரேக்கா
வித்தியாசமான யதார்த்தமான டிவிஸ்ட்.விவரிப்புகளில் “முதிர்ச்சி” கொண்டுவரலாம்.பிடித்த கதை.
 

51. நானே நானா - சுப.தமிழினியன்
 நான் ரசித்துப் படித்த கதை.போட்டியில் எனக்குப் பிடித்த கதை.மெளனியின் கதை போல.படமும் கதைக்கு ஏற்றார்போல்.“நான்”ஐ இன்னும் கூட சில இடங்களில் கொண்டு வந்திருக்கலாம்.மோகன் குமார் என்ற பதிவர் சொன்னது “
துவக்கம் மிக நன்று. அந்த முதல் பாரா போல் முழுதும் எழுதப் பழகுங்கள்”. கரெக்ட்.அப்படி எழுதியிருந்தால் கதை எங்கோ போய் இருக்கும்.”நச்”க்கு செட் ஆகாத கதை?


54. ஐ லவ் யூ - சுவாசிகா
ஆகா! இப்படி ஒரு வித்தியாசமான கதையா?லாஜிக்கலா சொல்லுங்களேன்.கலாய்ப்புக் கதை.



57. முதல் காதல் - chelladhurai 
விவரிப்புகள் நல்லா இருக்கு.ஆனா ஓவரா போய் திகட்டுது.கதைச்சொல்லி  ஒரு கதையில் எல்லா விஷயங்களையும் சொல்ல விழைகிறார்.ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்து நச்ச வேண்டும்.முடிவு? ரொம்ப பழசு.ஓவர் மெலோடிராமா.



58. நெப்போலியன் மேல சத்தியம் - நசரேயன்
நம்ப முடியவில்லை.கதையில் நிறைய பாத்திரங்கள் குழப்புகிறது.காதலியின் போன் நம்பர் எப்படி கிடைத்தது?



60. இந்தியா எப்படி உருப்படும்??? தொழில் - அன்புடன் அருணா
 ஆரம்பமே கதாநாயகியை வில்லியாக உரத்த குரலில் அற்முகப்படுத்துகிறார்.சுயதம்பட்டம் அண்ட் போலி டொனேஷனிஸ்ட் என்று இரு நெகட்டிவ் வில்லிக்கு.ஆனால் “நச்”லும் வேறு ஒரு நெகட்டீவ்.எப்படி நச் ஆகும்?.கதை சரியாக ஹோம் வொர்க் செய்யப்படவில்லை.ஏதோ ஒரு வேகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.



61. நடிகையின் கதை - சாணக்கியன்
 ஏதோ மிஸ்ஸிங்.”நச்”ஏற்றார் போல் இல்லை.படித்த கபிலன் சினிமா மூலமாக சமூக விழிப்புணர்வு கொண்டு வருவேன் என்பது யதார்த்தமாக இல்லை.சினிமா வர்த்தகம் குழந்தைக்கூடத் தெரியும்.



62. Blackhole - இரா.வசந்த குமார்
சூப்பர் கதை.இதே மாதிரி சுஜாதா “திமலா” என்று ஒரு கதை எழுதினார்.”எதிர்காலம்” என்பதால் டெக்னிகல் விஷயங்கள் நல்ல விவரிப்பு.சரியான நச்.பிடித்த கதை.



65. திருடன் - Parameswerey Namebley
 என்னங்க மைனாக்கும் ஒரு ரோல் குடுத்தீட்டீங்க!.குழந்தைகள் கதை டைப்பா இருக்கு.



66. நசிந்தப் பூக்கள் - நீச்சல்காரன்
 நச் நல்லா இருக்கு. உள் விவரிப்புகளில் பிரசாரம் குறைக்கலாம்.கதையை இன்னும் சுருக்கி இருக்கலாம்.நச் முடிந்தவுடன் எதற்கு பல வரிகள்.



67. திடீர் பாசம் - உண்மைத் தமிழன்
ஒரு பக்கத்துக்கான சரியான “நச்”நாட்.கதைக்கு சரியான டீரிட்மெண்ட் இல்லை?கதையின் ப்ளோவை நிறைய மெருகேற்றனும்.உரையாடல்களில் லாஜிக் வேண்டும்.




Tuesday, November 24, 2009

பழசி ராஜா -சினிமா விமர்சனம்

1838 இல் பிரிட்டிஷ் ஈஸ்ட் இண்டியா கம்பேனியை எதிர்த்துப் போராடிய கேரள வர்மா பழசி தம்புரானைப்(ராஜா) பற்றிய படம்.(எனக்குத் தெரிந்தது “தம்புராட்டியின் ராவுகள்”).அவர்கள் கோட்டயத்தை விட்டு வெளியேறவும், வரி வசூலை எதிர்த்தும் புரட்சி செய்தான் பழசி.இது ஒரு பிரியட் பிலிம் என்பதால பீலா நிறைய விடமுடியாது.பட ஆரம்பத்தில் உன்னைப் போல் ஒருவன் மொட்டை மாடி குரலில் கமல் கதையைப் பற்றி வாய்ஸ்(கதைச் சுருக்கம்)கொடுக்கிறார்.படத்தின் நடுவே ஈழம் ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.



    
 நான கடைசியாகப் பார்த்த மலையாளப் படம் “சங்கரன்குட்டிக்கு பொண்ணுவேனம்”.சமூகப் படங்களைப் பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான படம்.நன்றாக எடுத்திருக்கிறார்கள்.ஆனால் மெதுவாகப்போகிறது.என் மகன் வாய்பிளந்தபடிப் பார்த்தான்.காரணம் பிரியட் பிலிம்.

இதிலும்பழசியின்சமகாலகுறுநிலமன்னர்கள்,நண்பர்கள்,ஆள்காட்டிகள்,கட்டிங்குக்காக சோரம் போகிறவர்கள் என்று வருகிறார்கள்.


தமிழ் டப்பிங் வசனங்கள் ஜெயமோகன். டப்பிங்கும் நன்றாக இருக்கிறது.சரத்,மம்மூட்டி சொந்தகுரல்.மம்மூட்டி வழக்கமான தமிழாளம்(எனிக்கி)படம் கிட்டத்தட்ட மூணு மணி நேரம்.முதல் ஒரு மணி நேரத்தில் இடைவேளை.


அந்த நாளின் இயற்கை எழில்,கேரள வீடுகள் /மரசாமன்கள் பார்க்கும் போது, 2009க்கு வராமல் அங்கேயே கேரள வேலைப்பாடு கட்டிலில் உட்கார்நதபடி விவசாயம் பார்க்கலாம்  என்று மனம் ஏங்குகிறது.இந்தப் பிரபஞ்சத்தில் கடவுள் தனக்காக அமைத்துக்கொண்டு நாடு கேரளா என்று சொல்லுவார்கள்.

நடிகர்கள் பத்மப்ரியா(நீலி),கனிகா,திலகன்,கேப்டன் ராஜூ,நெடுமுடிவேணு,ஜெயன்(கைத்திரி அபு) பிஜூ மேனன்(சாந்து),ஜகதி ஸ்ரீகுமார்(காந்தன்மேனன்).கேமரா ராம்நாத் ஷெட்டி,சவுண்ட் மிக்ஸிங் ரசூல் பூக்குட்டி,டைரக்‌ஷன் ஹரிஹரன்,எம்.டி.வாசுதேவன் நாயர்,சண்டை ராஜூ.

மம்மூட்டி சாந்தமான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.முகத்தில் ஆல்வேஸ் ஒரு சீரியஸ்னஸ் .கருப்பு உடை பாந்தமாக பொருந்தி வந்து அட்டகாசமாக இருக்கிறார்.அடுத்து மனதைத் தொடுபவர் சரத்குமார்.வாழ்நாள் ரோல்.உக்கிரமாக ஒரு படைத் தளபதியைப் போல் மிடுக்கான தோரணை/நடிப்பு.கட்டான உடம்பு.பத்மப்ரியா.”சிக்” என்று வடித்தாற் போல் இருக்கிறார்.”நீலியாக வாழ்ந்திருக்கிறார்.கேரளாவின் Martial Art ஆன களரிபயாட்டு சண்டையில் பின்னுகிறார்.நல்ல நடிப்பு.

சரியான திரைக்கதை அமைப்பினால் ஒழுங்கோடு குழப்பமில்லாமல் போகிறது.மழை காட்சிகள் அருமை.சண்டைக்காட்சிகள் அதை விட அருமை.கேரளாவின் களரி பயாட்டுவைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.நம்ம ஊரில் விஜய காந்த் வானில் பறந்து சுழற்றி அடித்துப் வில்லன்களைப் பந்தாடுவார் அது மாதிரி.இது கேப்டனின் “சரி ப்பை(யா)ட்டு”

டப்பிங்கில் “திருவாசகம் ஒதுவது” என்று ஒரு இடத்தில் வருகிறது.கேரளாவில் ஏது திருவாசகம்?அடுத்து ஒரு இடத்தில்(மம்மூட்டி வீட்டு முற்றத்தில்)ஆண்டாள் திருப்பாவைக் கேட்கிறது. ஒரிஜனல்படியே விட்டிருக்கலாமே!

இசை Master Blaster மேஸ்ட்ரோ ராஜா.பின்னணி இசை அபாரம்.ஓவர் இசை இல்லை.அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அமைதி காக்கிறார்.ரெண்டு பாட்டுக்கள்தான் இதில் வருகிறது. மீதி? வெட்டப்பட்டுவிட்டது?”ஆதிஉஷஸ்சந்தியா பூத்தது”பாட்டின்preludeக்கு ஏற்ப ஒரு வெள்ளைக்குதிரை தண்ணீரைக் கிழித்துக்கொண்டு வருகிறது.”குன்னத்தே குன்னகையும்” பாட்டும் நன்றாக படம் பிடித்து உள்ளார்கள்

டப்பிங் பாடல்கள் மலையாளம் போல வீர்யமாக இல்லை.ஜுனூன் டப்பிங்.இதில் காமெடி என்னவென்றால் தமிழ் டப்பிங் பாடல்களைப் பாடினவர்கள் முக்கால்வாசி மலையாளிகள்.

2.5 வருடம் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை.

ஹாலிவுட் பிரியட் படங்கள் மாதிரி இன்னும் விறுவிறுப்போடு காட்சி அமைப்புகளில் கம்பீரம்,நறுக் எடிட்டிங் என பொளுந்துக்கட்டி இருக்கலாம்.

பழசி ராஜா பாடல் விமர்சனம் கேட்க இங்கே:

இளையராஜா சாரே!.Soங்க்ஸ் மதுரமாயி!

Thursday, November 19, 2009

ஒரு கட்டுப் ”பின்னூட்டம்” ஒரு ரூபா

சில சமயம் பதிவுகளை விட பின்னூட்டம் சுவராஸ்யமாக இருக்கிறது.பதிவர் யுவ கிருஷ்ணா ஒரு நாள் “உங்கள் பதிவை விட உங்கள் பின்னூட்டம் சுவராஸ்யமாக இருக்கிறது என்றார் பின்னூட்டத்திலேயே. நான் நொந்துப் போனேன்..


சரி... இப்போ வித விதமான பின்னூட்டங்களைப் பார்க்கலாம்.


1.மீ... பஸ்ட்பின்னூட்டம்: கண்ணாமூச்சி விளையாட்டில்”நாந்தான் பஸ்ட்” தாச்சியைத் தொடுவது மாதிரி.வைரமுத்து அல்லது வாலி டைப்.சில சமயம் பதிவுக்கு முன்னேயே வந்துவிடுகிறது.இதுக்கு தனியா சாப்டுவேர் இருக்கா?இல்லேன்னா பதிவின் "Add on" ஆ? 


2.அப்புறம் வரேன் பின்னூட்டம்: இது மீ பஸ்டின் rich cousin  என்று சொல்லலாம்.பதிவைப் பார்த்தவுடன் “திரு திரு” வென விழித்துவிட்டு என்ன போடுவது என்று தெரியாதவர் அல்லது முதலில் பதிவை ஒரு லுக் விட்டுவிட்டார்.பின்னால் விரிவான பின்னூட்டத்தில் பொளுந்து கட்டுவார் என்று அர்த்தம்.பதிவர் நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருப்பார்.

3.தேவ நகரி குறிகள் பின்னூட்டம்:அகழ்வாராய்ச்சியில் சில ஆதிவாசிகளின் குகைகளில் சில வினோத சங்கேத குறியீடுகளில் இருக்கும்.அது மாதிரி.:), ?!*?, :D,:P,?????,ம். &*???/!!!!

4.தலைக்காட்டுதல் பின்னூட்டம்: ”தெரிஞ்சவரு.. கல்யாணத்து போகாம இருக்க முடியாது தலை காட்டிட்டு கிளம்ப வேண்டிதான்”என்கிற ரீதியில்.

5.மாமியார் அல்லது டெர்ரரிஸ்ட் பின்னூட்டம்: ”ஹுக்கும்... இது நொள்ளை...இது சொட்டை...இந்த இடத்தில ரெண்டு செண்டிமீட்டர் நீளம்..இங்க வெட்டனும்...””அந்த கடைசி பாரா தேவையில்லை”(ஐய்யோ...!  இது நான் இல்ல)

6.This post has been removed by the Author பின்னூட்டம்: தப்பு தப்பா போட்டதின்
 எச்சம்(fossil)

7.பதிவின்னோட்டம் பின்னூட்டம்:”இப்படித்தாங்க...எனக்கும்.” என்று ஆரம்பித்து பின்னூட்டத்திலேயே பதிவு போடுவார்.

8.ஜாலியன்வாலாபாக்பின்னூட்டம்:வரிசையாக வெகுஜனப் பின்னூட்டம் இட்டு சிலாகிக்கையில் ஒருவர் வந்து படபடவென பதிவைக் சகட்டுமேனிக்கிச் சுட்டு பொத்தல் ஆக்குவார்..வெகுஜனங்கள் “இப்படி ஒரு ஆங்கிள் இருக்கா” என்று மண்டையைச் சொறிந்துக்கொண்டு நிற்கும்.

9.ஆலமரத்தடிப் பின்னூட்டம்:பதிவைப் பற்றி பேசாமல் இங்கு வரும் பின்னூட்டிஸ்டுகள் “கட்டிங் போடலாமா””ஆள ரொம்ப நாளா காணும்””டிக்கெட் கன்பார்ம் ஆயிட்ச்சா””நைட் ஷோ போலான்னு” தங்களுக்குள் டிவிட்டுவார்கள்.


10.பாக்சிங் ரிங்க் பின்னூட்டம்:பதிவைப் பற்றி பின்னூட்டிஸ்டுகள் தங்களுக்குள் குஸ்தி போடுவது .பதிவர் கையைக் கட்டிக்கொண்டு பார்த்திருப்பார் அல்லது வேறு வேலைப் பார்த்துக்கொண்டிருப்பார்.

11.Retail பின்னூட்டம் : மொத்தமாகப் போடாமல் நினைச்சு நினைச்சு (thoughts அ) வரிசையாகப் போடுவார்கள்.

12.ஆட்டு மந்தைப் பின்னூட்டம்:முதலில் போடுபவரை பார்த்து வரிசையாகஅதே பி.ஊ.

13.திடீர் பின்னூட்டிஸ்ட்: அடிக்கடி இடாமல்கழுகுமாதிரி மேலேயே பறந்துக்(பார்த்துக்)கொண்டு என்றைக்காவது ஒரு நாள் சர்ரென பூமியில் இறங்கி ஒரு நச் பின்னூட்டம் இட்டு அதே வேகத்தில் மேலே போய் விடுவார்கள்.

அவ்வளவுதாம்பா!  மிச்சம் இருந்தா சொல்லுங்க பதிவர்களே!


பின் இணைப்பு:


14:விறைப்புப் பின்னூட்டம்: ஸ்டார் பதிவர்கள் ஒரு ஸ்மைலியோ, நல்லாருக்குன்னு ஒற்றை வார்த்தையோ போடுறாங்களே..... (நன்றி:kgjawarlal)


15:சுருள் பின்னோட்டம்:ஒரு பதிவில் பின்னூட்டம் போட்டுவிட்டு, அப்படியே நம்ம பதிவு முகவரியையும் கொடுத்து ‘வாங்க.. படிச்சிட்டுப் போங்க’ அப்படின்னு கூப்பிடுறது...
(நன்றி:தமிழ்ப்பறவை)


16:’வாட் எ கோ இன்சிடெண்ட்’ பின்னூட்டம்: நினைச்சேண்டா! போட்டுட்டான்!
(நன்றி:தமிழ்ப்பறவை)

17:வட போச்சே பின்னூட்டம்:  ஜஸ்ட் மிஸ்டு!


18:சோம்பேறி பின்னூட்டம்:  ரிப்பீட்டேய்!
 (நன்றி:(17&18)பாஸ்டன் ஸ்ரீராம்

Wednesday, November 18, 2009

நட்சத்திரங்கள் மொத்தம் 176 -கவிதை





மொட்டை மாடியில் படுத்தபடி
வானத்தில் தென்படும்
நட்சத்திரங்களை எண்ண
வசதியாக வானத்தை
 “A” அண்ட் ”B” எனப் பிரித்து
இரண்டாக பிரித்துக் கோடுபோட்டு
எண்ணத் தொடங்குகிறேன்

எண்ணும்போது நிறைய தடங்கல்

ஏர்டெல் டவர்  மறைக்கிறது
குறுக்கே மேகம் போகிறது
“A” யிருந்து  ”B”க்கும்
”B” யிருந்து  “A”க்கும்
கள்ளத்தனமாகத்  தாவுகிறது
சில நட்சத்திரங்கள்
வரிசைக் கலைகிறது
சட்டென வானம் மப்பாகிவிடுகிறது
ஒரு நட்சத்திரம் உதிர்கிறது
குழப்பும் விமானத்தின்
லைட் மினுக்கல்கள்
மறைக்கும் வீடு திரும்பும் பறவைகள்

இதே நட்சத்திரங்களை
திருவல்லிக்கேணி மொட்டை மாடியில்
எண்ணியிருக்கிறேன்
நான்காவது படிக்கும்போது


ஒரு அசைவு இல்லாமல்
எனக்குக் காட்டி இருக்கிறது


அப்போது மொத்த எண்ணிக்கை
 175.5 என்பதால்
நான் எண்ணிய 15வுடன்
மீதி 160.5க் கூட்டி ரவுண்ட் ஆப் செய்து
176 ஆக்கி விடுகிறேன்


திருவல்லிக்கேணி
மொட்டை மாடிக்குச் சென்று
சரி பார்க்கலாம்
சந்தேகம் இருந்தால்

Monday, November 16, 2009

இளையராஜாவோடு வந்தவர்கள் எங்கே?

1975ல் ஒருவர் தன் இசைப் பயணத்தை இவர்களுடன் ஆரம்பித்தார்.........

ஆர்.கோவர்த்தன்,ஆர்.சுதர்சனம்,வி.குமார்,விஜயபாஸ்கர்,எம்.எஸ்.விஸ்வநாதன்,தக்க்ஷிணாமூர்த்தி,கே.வி.மகாதேவன்,ஜி.கே.வெங்கடெஷ்,சங்கர்-கணேஷ்,
ஜி.தேவராஜன்,ரவீந்தரன்,தேவேந்தரன்,குன்னக்குடிவைத்தியநாதன்,எல்.வைத்தியநாதன்,தேவா,சந்திரபோஸ்,

அம்சலேகா,மனோஜ் கியான்,ஜெயா விஜயா,லஷ்மிகாந்த்பியாரிலால்,
சிற்பி,ஆதித்யன்,கங்கைஅமரன்,மணிஷர்மா,எஸ்.ஏ.ராஜ்குமார்,வி.எஸ்.நரசிம்மன்,எஸ்.பி,பி,பரத்வாஜ்,மனோஜ்பட்நாகர்,பாலபாரதி,மரகதமணி,டி,ராஜேந்தர்,கே.பாக்கியராஜ்,ரஞ்சித் பரோட்,மாணிக்கவிநாயகம்,விஜய் ஆனந்த்,ரமேஷ் விநாயகம்,செளந்தர்யன்

ஜோஸ்வா ஸ்ரீதர்,பரணி,தீனா,எஸ்.பி.சரண்,பவதாரிணி,
ரஹ்னா,தீனா,ஆர்.கே.சுந்தர்,தீபக் தேவ்,ஜெஸ்ஸி கிஃப்ட்,கே.மணிஷ்,டி.ஏ.தாமஸ்,ஸ்ரீலேகா,எஸ்.பாஸ்கர்,எம்.ஜி.ஸ்ரீகுமார்

இதில் இசை மாமேதைகள் மற்றும் திறமையானவர்கள் அடக்கம்.இசைப்“போட்டவர்”களும் அடக்கம்.வெத்துவேட்டுகளும் அடக்கம்.அதிர்ஷடம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் இறந்துவிட்டார்கள்.பலர் காணாமல் போய் விட்டார்கள்.

இதற்குப் பின்னும் இளம் இசையமைப்பாளர்கள் வந்திருக்கிறார்கள்.

 இன்றும் இவர்களுடனும் அமிதாப் பச்சனின் "Paa" வரைத் தொடர்கிறது.

அவர்........யார்?  இசை ஞானி, மேஸ்ட்ரோ இளையராஜா!

ஏன் தொடர்கிறது...?

கேட்க இந்த பாடல்.அதனால் தொடர்கிறது.ஆல்பத்தில் இரண்டாவது பாட்டு.

http://www.thiraipaadal.com/albums/ALBIRR00544.html

Friday, November 13, 2009

இளையராஜா சாரே!.Soங்க்ஸ் மதுரமாயி!




Pazhassi Raja -Ilayaraja

பழசிராஜா என்கிற மலையாளத் திரைப்படம்  கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இது ஒரு period film.இசை Master Blaster மாஸ்ட்ரோ இளையராஜா.இது மாதிரி வித்தியாசமானப் படங்கள்தான் அவரின் திறமையை வெளிக்கொணடுவருகிறது.விடுவாரா? பின்னிவிட்டார் ஞானி.
இதெல்லாம் ஜுஜுபி இவருக்கு.


பாடல்களை பார்ப்போம்: (ஹெட்போனில் கேட்டால் துல்லியமாக கேட்கலாம்)



1.ஆதிஉஷஸ்சந்தியா  பூத்தது இவடே: 


பாடியவர் யேசுதாஸ் மற்றும் எம்.ஜி.ஸ்ரீகுமார்.வீரியமான உச்சரிப்பு.என்ன வீரியமான பாட்டு.அட்டகாசம்.தாய்மொழி ஆச்சே.பிச்சு உதறுகிறார்.இந்த வயதில் (65) என்ன பிச்சிங்.மெல்லிய ட்ரம்ஸ் தட்டல்களோடுஆரம்பித்து, யேசுதாஸ் சேர, பின்னணியில் “பச்சங்...பச்சங்..” ”திடும் திடும்”குருவாயூர்
கோவில் கேரள வாத்தியங்கள் மாதிரி ஒலிகள் விஸ்வரூபம் எடுத்து கவுண்ட் 1.22ல் குட்டி குட்டியாய் அங்குமிங்மாக டிரம்ஸ் “இடி” ஒசைகள் ஒத்த பாட்டு  70mm கணக்கா கிராண்டாக முன்னேறுகிறது.

பல்லவி முடிந்து முன்னேறிய பாட்டின் First interludeஐ மாஸ்ட்ரோவின் கைவரிசை முடிந்து 2.13இல் “ஆர் இவ்விடே” என்று யேசுதாஸ்ஆரம்பித்து அதை ஸ்ரீகுமாரனும் ரிப்பீட் செய்து ஆரம்பிக்கும் இடம் சூப்பர்.அடுத்தவரிகள் பாடி,பாட்டின் டெம்போ ஏறி மெட்டு மாறி ”காற்றோ காற்றருவிகளோ” என்று இவர்கள் மேலும் பாடாமல் நிறுத்த பின்னணியில் ஒரு இனிமையான பெண் குரல்(சித்ரா?) “ ஆதிஉஷஸ்சந்தியா பூத்தது இவ்டே”என்று முதல் சரணத்தை முடிக்கிறார்.இசைச்சாரல். 

அதே மாதிரி இரண்டாவது சரணத்திலும் பிச்சு உதறுகிறார் ராஜா. ஒரு இசைப் பிரளயம் முடிவுக்கு வருகிறது கேட்டு முடித்தவுடன்.

 

2.குன்னத்தே கொன்அச்சம் பொன்மோதிரம்:

பாடியவர் சித்ரா. இனிமையான காதல் பாட்டு. Preludeல் சாரங்கியின் இழைகள் இனிமையாக இழைந்து வந்து மெதுவாக மாறி அதே இழைகள்(இப்போது வயலின்?) துள்ளி துள்ளித் தெறித்து முடிய சித்ரா  பல்லவி பாட ஆரம்பிக்கிறார். கவுண்ட்0.49ல் ”வரவின் புகையால்” என்று அழகான மெட்டு மாறி 1.00 வரை தொடர்ந்து  ஒரு புல்லாங்குழல் finishing touch கொடுக்க மீண்டும் “குன்னத்தே”. அந்த 0.49  to 1.00 வரை “தும் தும்” ஒரு இசைக் கருவி கூடவே அணைவதும் மடக்கி மடக்கி அடிக்கப்பட்டு வரும் தபேலா/ட்ரம்ஸ் இனிமையோ இனிமை.

முடிந்ததும் ஆரம்பிக்கும் முதல் Interlude ல் ஒரு மெலிதாக பீரிடும் சாரங்கிஇசை அதைத் தொடர்ந்து சித்ரா மீண்டும் பாட ஆரம்பிக்கிறார்.2.28ல் ”துணையாய்”மெட்டு மாறி 2.40 வரை தொடர்ந்து, மீண்டும் பழைய மெட்டுக்கு வருவது என்ன அழகு!கேட்டோ சேட்டா! முன்னால் வந்த அதே “தும் தும்”
 கூடவே  அணைவதும் மற்றும்  மடக்கி மடக்கி அடிக்கப்பட்டு வரும் தபேலா/ட்ரம்ஸ்ஸும் இசைக்கப்படுகிறது.

இரண்டாவது  Interlude ல் இதைத் தொடரும் வீணை மற்றும்  இதற்கு எக்கோவாக வயலினின் இனிமையான இசை. முடிந்ததும் 3.07 to 3.15 இடையில் “ ஒரு காட்டு காட்டுதல்” புல்லாங்குழலும் மற்ற இசைக்கருவிகள் வைத்து.அம்மாடியோவ்!முடிந்ததும் சித்ரா தொடர்கிறார்.  மீண்டும் மெட்டு மாறி 4.00  to 4.11 வரை சூப்பர்.

ஆபேரி/பீம்பளாஸ் ராகம்?மேல் சொன்ன  Interlude ல் வீணையில் வாசிக்கப்படுகிறது.

No doubt....It is proved  again 100000000000000th time Raja is the king of Music.

இது தவிர, வழக்கமாக பாடல் இடையே குறுக்கும் நெடுக்கும் தலை காட்டும்இனிமையாக இசை ஒலிப்புகள்.இசை ஒலிப்புக்களுக்கும் ரேஷன் கார்டு உண்டு.அளவுதான்.ஒரு இடத்தில் வருவது இன்னோரு இடத்தில் வராது.




3.அம்பும் கொம்பும் கொம்பன் காட்டில்:

பாடியவர்கள் ராஜா,குட்டப்பன்,மஞ்சரி.காட்டுவாசிகள் பாட்டு மாதிரி இருக்கிறது.சூப்பர் மெட்டு. பின்னி பெடல் எடுக்கிறார்.

4.ஆலமதங்கள வைத்தவனல்லே:
குரூப் பாட்டு.வேகமான பாட்டு.அரேபியன் இசை.ட்ரம்ஸ் பொளுந்து கட்டுகிறார் ராஜா.”ஆயிலாக இல்லலாஹா” என்று வரும் தொழுகை வார்த்தைகள் அற்புதம்.பாட்டைப் பாடியவர்களும் (குரல்)சூப்பர்.

5.ஓடத்தண்ணில் தாளம் கொட்டும் கட்டில்:
பாடியவர்கள் சந்திரசேகர்,சங்கீதா.அருமையான மெட்டு.இதில் ஆண் பாடகர் உள்ளே வரும் இடம் அருமை.அவர் பாடலுக்கு வரும் இசையும் அருமை.
இரண்டாவது interludeல் இசைக்கோர்ப்புகள் அருமை.

6.மாதங்கானான: இது ஒரு சின்ன ஸ்லோகம்.

 பாடல்களின் இடையில் வரும் ”பூஞ்சால் கட்டும்” “ஒரு காணாச்சத்தம்” ”நாத கங்கை ஒழுகி வந்து”  “அசோகோடே..மசக்கோடே” மலையாள வார்த்தைகள் வசீகரமாக இருக்கிறது.

 இதன் லிங்க்:1. பழசிராஜா பாடல்கள்

                             2.பழசிராஜா

                              3.பழசிராஜா பாடல்கள்



டெயில் பீஸ்: ரொம்ப வருடத்திற்கு முன் பிளாக் & வொயிட்டில் ஒரு பழசி ராஜா(இதுவும் மலையாளம்) வந்தது. அதற்கு இசை ஆர்.கே. சேகர்.இவர் ஏ.ஆர்.ரஹமானின் தந்தை.முதல் லிங்கின் சைட்டில் இதுவும் வரிசைப்படுத்தபட்டு இருக்கிறது.

Thursday, November 12, 2009

டீக்கடையில் கடவுள் - கவிதை





அந்த டீக்கடையில்தான்
அவரைப் பார்த்தேன்
மரபெஞ்சில் உட்கார்ந்திருந்தார்
கடவுள்
அந்தப் பித்தளை பாய்லர்
ரொம்ப பிடித்துப்போய்
அதையேப் பார்த்துக்கொண்டிருந்தார்

கவனத்தைத் திருப்பி
சட்டெனக் கேட்டு விட்டேன்
ரொம்ப நாளாக மனதில்
அசைப்போட்டிருந்த  கேள்வி
பிரபஞ்ச தோற்றத்தின் முதல் கணம்
எப்படி இருக்கும் சுவாமிஜி

சொன்ன பதில் புரியவில்லை
அழைத்துக் கொண்டுபோய்
அந்த முதல் கணத்தைக் காண்பித்தார்
மீண்டும் கொண்டுவந்தும் விட்டார்

அவ்வளவு சுவாரஸியம் இல்லை
நான் எதிர்பார்த்ததுபோல்
அவரும் அவ்வளவு ஈர்க்கவில்லை
நான் எதிர்பார்த்ததுபோல்

உப்புசப்பில்லாத முதல் கணம்
என்றபடி பெஞ்சில் அமர்ந்து
அந்தப் பித்தளை பாய்லர்
ரொம்ப பிடித்துப்போய்
ரசித்திருந்த நேரத்தில்
பிரபஞ்ச தோற்றத்தின் முதல் கணம்
எப்படி சுவாமிஜி என்று
சட்டெனக் கேட்டுவிட்டார்
 புதிதாக வந்தவர்


Wednesday, November 11, 2009

ஜுனியர் விகடன் - குற்றம்-மக்குகள்

பலவருடங்களாக ஜுவி மற்றும் ஆங்கில  தினசரிகள் படிக்கிறேன்.அதில், முக்கியமாக என் கவனத்தைப் பெறுவது குற்றம் பற்றிய செய்திகள்.தினசரிகளில் சற்று மேலோட்டமாக இருக்கும்.ஆனால் ஜூவி “குற்றம்...நடந்தது என்ன?”பாணியில் படம் வரைந்து பாகங்களைக் குறிப்பார்கள்.”திருந்தவே மாட்டார்களா” என்று கட்டுரையின் முடிவில்  தன் கருத்தைச்சொல்லி முடிப்பார் அதன் ரிப்போர்ட்டர்.

இதையெல்லாம் படித்துப் படித்து நானும் இன்ஸ்பெக்டராகி,
உள்ளங்கையில் லத்தியைத்தட்டி“அந்த சம்பவம் நடந்தபோது நீங்க” என்று யோசிக்கஆரம்பித்துவிடுகிறேன்சிலவற்றைப் படிக்கும்போது (பிணத்தை காய்கறி நறுக்குவது போல் நறுக்குவது) நடுங்குகிறது.தூக்கம் வருவதில்லை.மெண்டல் ஆகிவிடுவேனோ என்ற பயம்.ரொம்ப மனதில் அசைப்போட்டால் இதான் பிரச்சனை.

சரி! குற்றங்களுக்கு வருவோம்....

அம்மாடியோவ்! விதவிதமான குற்றங்கள்.குற்றவாளிகள் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ! முன்னணியில் இருப்பது (இருக்க முடியாது) கள்ளக்காதல்(?). ஒரு வாரம் கொள்ளை,லஞ்சம்,ஊழல் வந்துவிட்டால் ”அடுத்தது நாந்தாம்ப்பா..!”  என்று கள்ளக்காதல்கியூவில் நிற்கிறது. வட்டம்  மாதிரி வந்துக்கொண்டே இருக்கிறது.பூமி சூரியனைச் சுற்ற மறந்தாலும் இந்த கள்ளக்காதல் நடப்பது மறப்பதில்லை.

குற்றம் செய்பவர்கள் 100% குற்றவாளிகள்தான் சட்டத்தின் முன்பு.அதற்கு முன்பு  இவர்கள் உலக மகா முட்டாள்கள் (அ) மக்குகள் (அ) அசடுகள் என்பேன்.அதுவும் முதல் கொலை குற்றம் செய்பவர்கள்.குற்றவாளிகள் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ! என்றேன்.ஆனால் ரூம் போட்டு யோசிக்காதா  சுத்தமான முட்டாள்கள்தான் இவர்கள்.

ஏன் முட்டாள்கள்? பார்க்கலாம்.

ஹிந்துவில்நேற்றுப் படித்தது.கள்ளக்காதல் கொலை.மனைவியும் குழந்தையும் விடி காலை(3.30மணி-அக்டோபர்-26) எழுந்திருக்கிறார்கள்.பெட்ரூம் கதவு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருக்கிறது.கதவைத்தட்டி ஹாலில் படுத்திருக்கும் கணவனை(வயது 36) எழுப்புகிறாள்.கணவன் எழவில்லை. தன் செல் போனில் எதிர் வீட்டில் இருக்கும் கணவனின் உறவுக்காரப்பையனை(வயது-23)கூப்பிட்டு கதவைதிறக்க உதவி கேட்கிறாள்.உதவ வந்தவன்.(எப்படி உள்ளே வந்தான்? அவனுடன் சகோதரியும் வருகிறாள்) பதறுகிறான்.கணவன் ஹாலில்  பிணமாக கிடக்கிறான். கழுத்தில் கயிறு இறுக்கின சுவடுகள்.பதறியபடி கதவைத் திறக்கிறான்.தற்கொலை என்றுமுடிவாகிறது.

அது தற்கொலை அல்ல.கொலை.சிறிது நாள் கழித்து இறந்தவனின் மனைவியும் அந்த உறவுகாரப் பையனும்  கைது செய்யப்படுகிறார்கள.இருவருக்கும் கள்ள உறவு.தூக்கத்தில் மனைவி கணவனின் கால்களை பிடித்துக்கொள்ள(helping hand)  கழுத்தைக் கயிற்றால் கள்ளக்காதலன் நெறிக்க,கணவன் இறந்துபோகிறார்.வெளியில் தாழ்பாள் போட்டு,காலையில் கூப்பிடுவது போல் ஒரு செட்ட அப்.கணவன் ஒழிந்தான்.இனிமே ஜாலிதான்.உலகத்துல யாருமே கண்டுபிடிக்க முடியாது.பின்னணியில் ராஜாவின் வயலின் இசை ஒலிக்க கிழ்வானில் மறைந்துபோய்விடலாம்.

அட லூசுகளா?இதற்கு எவ்வளவு நுணக்கமான முன் திட்டமிடல் வேண்டும்.

காட்டிக்கொடுத்தது செல்போன்.மனைவியின் செல்போன் கால்களை ஸ்கான் செய்த போது  அதில் கள்ளக்காதலுனுக்கு நிறைய கால்போய் இருக்கிறது.கள்ளக்காதலனை மிரட்டியவுடன் கக்கிவிட்டான்.

கள்ளக்காதலன் கணவனின் nephew,அதாவது கணவனின் சகோதரி அல்லது சகோதரனின் மகன்.கள்ளக்காதலனுக்கு பெரியம்மா/சித்தி/மாமி  இதில் ஏதோ ஒரு உறவு முறை வருகிறது.Incestuous  Sex.பெருந்திணை?பொருந்த காமம்.இதனால்தான் முதலில் போலீஸ் பார்வை இவன் மேல் விழவில்லை.

எந்த செயலுக்கும் முன் திட்டமிடல், தொலைநோக்குப் பார்வை வேண்டும்.அது செயலின் தன்மையைப் பொறுத்தது.அதுவும் கொலைக் குற்றம் செய்வதற்கு இரண்டு மடங்கு தேவை.Professional க்கே இவ்வளவு தேவை  என்றால் முதன்முதலாக செய்யும் amateurக்கு எவ்வளவு தேவை?

எந்த குற்றவாளியும் தனக்குத் தெரியாமல் ஒரு சாட்சியை விட்டுச்செல்வான் என்பது எழுதாத விதி. அடுத்து குற்றத்திற்குப் பிறகு எவ்வளவு பாதக விஷயங்கள் இருக்கிறது.ஒரு பொய்யைச் சொன்னாலே அதை மறைப்பதற்குப் பத்து பொய்கள் சொல்ல வேண்டும்.அவ்வளவு கஷ்டம்.இதை யோசித்தாலே குற்றம் செய்வதை நிறுத்திவிடுவார்கள்.அப்படி எதற்கு கள்ளக்காதல்.ருசி?

அடுத்து இவர்களின் பொது அறிவு.சுத்தம்?FIR,போலீஸ்,
கோர்ட்,விசாரணை,வாய்தா,சாட்சிகள்,போலீஸ் நாய்,
தடயங்கள்,போலீஸ்”விசாரிப்பு”,ஊடகங்களில் அடிபடுவது,தலையை துண்டுப் போட்டு போர்த்திக்கொண்டு போவுதல்...ஒரு குற்றவாளி அப்ரூவராக மாறி போட்டுக்கொடுப்பது.... எவ்வளவு இருக்கிறது.இதைப் பற்றியெல்லாம் யோசித்ததுண்டா இவர்கள்?இடுப்புக்குக் கிழே மட்டும் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

சும்மா சொப்பு வைத்து விளையாடும் குழந்தை விளையாட்டா இது?இதே மாதிரி வேறு ஒரு குற்றம்.திருமண ஹனிமூனில்(மூணார்) கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றுவிட்டு “இனிமே ஜாலிதான்...எங்கள் காதலுக்கு குறுக்கே யாருமே..இல்லை .” என்றவர்கள் இப்போது ஜெயிலில்.குறுக்கே கம்பிகள்.

அப்பா கொலையாகிவிட்டார்.அம்மா ஜெயில்.இவர்களின் குழந்தைகள் கதி?நினைத்தால் மனது கனக்கிறது.

டெய்ல் பீஸ்:ஒருவர் ஸ்பேம் மெயிலில் 100 கோடி பரிசு விழுந்ததுப் பற்றி மகிழ்ந்து அதைப் பெறுவதற்கு அதற்குமுன்பணமாக(வரி,ஆட்டோ,டெம்போ போசார்ஜ்,டிபன்,விமான செல்வு) 20 லட்சம் தவணை முறையில் கட்டி ஏமாந்து(கடைசி தவணையில்தான் இது ஏமாற்று வேலை என்று விளங்கியதாம்)போனாராம்.

எல்லாம் இழந்து ஒரு துண்டைக்கட்டிக்கொண்டு கமிஷனர் ஆபிசுக்கு ஓடி இருப்பார்.அடுத்து ஒருவர் SMS ல் பரிசு விழுந்து இதே மாதிரி..ஓடினாராம்.மற்றொருவர் தற்கொலை.இங்கும் காமென் சென்ஸ் மருந்துக்குக் கூட இல்லை.அட லூசுகளா!

இதற்கெல்லாம் நான் ரூம் போட்டுச் சிரிக்காமல், கிரெடிக் கார்டில் ஒரு five star ஒட்டலில் கான்பிரன்ஸ் ஹால் புக் செய்து விழுந்து விழுந்து சிரித்தேன்.

டெயில் பீஸ்-2: காலேஜ் படிக்கும்போது நானும் ஒரு குற்றம் செய்து ஒரு சாட்சியை விட்டு மாட்டிக்கொண்டேன்.காலேஜ் நூலக பீஸ்(fees) ரசீதில்ரூபாய் 80/- ஐ 88/- ஆகத் திருத்தினேன்.பேனா இங்கின் நிறம், amount in words,ரப்பர் அழித்த அழுக்குகளை மறைத்தல் ...எல்லாம் professional ஆக செய்தேன்.ஆனால் மாட்டிகொண்டேன். எப்படி?

அந்த ரசீதின் கீழே அச்சிடப்பட்டதைக் கவனிக்கவில்லை. அது -
Fees accepted are strictly  rounded off to  the nearest five or ten.

Friday, November 6, 2009

நனைந்து விட்ட குடை - கவிதை




















கல்யாணத்தின் போது
அடைமழைப் பெய்தது
குதூகலமானது காசியாத்திரை குடை
புது மாப்பிள்ளைக் கணக்காய்
நனைவதற்கு


மாப்பிள்ளையைத் தவிர 
எல்லோரும் நனைவார்கள் என
மண்டபத்திற்குள்ளேயே
பிடிக்கப்பட்டு உடனே
மடக்கப்பட்டும் விட்டது


அன்று மடக்கப்பட்டு
மாப்பிள்ளை வீட்டின்
ஹால் கதவின் பின்னால்
வளைந்த மரப் பிடி கொண்டு
பல வருடங்களாக
வாக்கிங் ஸ்டிக் மற்றும்
பாச்சா உருண்டையுடன் 
ஜோடியாக தொங்கிக்கொண்டிருந்த
இக்குடை

மழையில் சொட்ட சொட்ட
நேற்றுதான் நனைந்தது
வீட்டின் நடு ஹாலில்

விருந்தினர் குழந்தை
இக்குடையை எடுத்து
மழை விளையாட்டு
விளையாடுகையில்

படிக்க:

வசவும் திட்டும் சாம்பலும் -”நச்” சிறு கதைப் போட்டி




Wednesday, November 4, 2009

பத்து.. பத்து ...என பித்துப் பிடித்த பத்துக்கள்

எனக்குப்பிடித்த பத்து:  1,2,3,4,5,6,7,8,9,10.


எனக்குப் பிடிக்காத பத்து:  கிச்சன் சிங்கில் கழுவாமல் முடை நாற்றம் அடிக்கும் பத்து, பத்துப்பாத்திரங்கள்

வசவும் திட்டும் சாம்பலும் -”நச்” சிறு கதைப் போட்டி

”டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்...”

விடிகாலை மணி 5.30.அடையார். செளந்தர்யா அபார்ட்மெண்ட்ஸ்.ஹேமா-கணேஷ் தம்பதியர் வீடு.

“கணேஷ்! போன் அடிக்கறது..!கொஞ்சம் எழுந்து எடுங்கோளேன்.”

”ப்ச்” தூக்க அசதியில் புரண்டபடி “நீயே எடு டியர்”எனறு சொல்லிவிட்டு மீண்டும் தூக்கத்தில் விழுந்தான்.

”எவ்ளோ ரிங் போறது!உங்க பக்கத்துல வாகா இருக்கு எடுக்க...எடுக்காமா என்ன எடுக்கச் சொல்றேளே.”ஹேமா கடிந்து கொண்டே எழுந்தாள்.

அடிப்பது நின்று விட்டது.மறுபடியும் அடிக்கும் என்று உள்ளுணர்வு சொன்னது.தன் செல்லையும் பக்கத்தில் வைத்துக்கொண்டாள்.

காத்திருந்த நேரத்தில் உள்ளாடைகளைச் சரி செய்து கொண்டாள்.தலை முடியை கையால் லாவகமாக அளைந்து கோடாலி முடிச்சுப் போட்டுக்கொண்டாள்.டைம் பீசில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒற்றிக்கொண்டாள்.

”டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்..”  மீண்டும் அடிக்க”கமிங்...கமிங். கமிங்..”எதிர்பாட்டுப் பாடியபடி பாய்ந்து எடுத்தாள்.

 “ஹலோ...!ஹேமா ஹியர்!”

“.....................”

“அட கடவுளே...நிஜமாவா...? நன்னாதானே இருந்தார்...எப்போ?”கண்களில் குபுக்கென நீர் தளும்பி கன்னத்தில் வழிந்தது.

“.....................”

”கொஞ்சம் இருங்கோ...கூப்பிடறேன்..”

போனை வைத்துவிட்டு ”கணேஷ் ..கணேஷ்” என்று இருகைகளாலும் கலவரத்துடன்  அவனை உலுக்கினாள்.”பச்”புரண்டபடி எழுந்து ”என்ன?” என்றான்.

”உங்கப்பா...தவறிப்போயிட்டாராம்...”

”என்ன சொல்ற.” முகம் இறுகியது. உடைகளைச் சரி செய்து கொண்டு ரிசீவரை வாங்கிக்கொண்டான்.சலனம் இல்லாமல் செய்திகளை  காதில் வாங்கினான்.  பதில் எதுவும் பேசவில்லை..போனை வைத்தான்.

”நா எந்த காரியமும் பண்ணப்போறதில்ல.....போயிட்டு வந்துடுவேன்.அவாளே எடுத்து செய்யட்டும்”
போனை விரோதமாக முறைத்தபடி சொன்னான்.

ஹேமா அதிர்ந்தாள். மெலிதாக விசித்தபடியே அவன் முகத்தைப் பார்த்தாள்.அப்பா சாவு பாதிப்பின் சுவடு தெரியவில்லை.சாதாரணமாகத்தான் இருந்தான்.வழக்கம் போல கொட்டாவி விட்டு முகத்தை அலம்பி பல் தேய்த்தான்.

“காபி போடேன்....”.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோளேன்...எனக்கு எதுவும் ஓடல”

“சரி..! நானே போட்டுக்குடிக்கிறேன்”சொல்லியபடி சமையலறைக்குச் சென்றான்.

ஹேமா குழந்தைகளை எழுப்பி விஷயத்தைச்சொன்னாள்.குழந்தைகள் புரியாமல் விழித்துக் கலங்கின.துக்கத்திலிருந்து விடுபட ஹேமாவிற்கு கொஞ்ச நேரம் ஆயிற்று. தானும் தயாராகி குழந்தைகளையும் தயார் செய்து  கிழே போக கணேஷ் மெதுவாக அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான்.

கார் சாவு வீடு நோக்கிக் கிளம்பியது.அவன் ஏதோ தீவிரமான யோசனையில் ஓட்டுவது அவளுக்கு கவலையளித்தது.என்ன அசட்டுத்தனமான பேச்சு?உண்மையாகவே அப்படி நடந்து விடுவானா?காலையில் அவன் பேசினது நெருடி இம்சைப் படுத்தியது.கவலையும் அளித்தது.

“கார்ர பாத்து ஓட்டுங்கோ..”

.“ஐ ஆம் ஆல்ரைட்...நீதான் ஓவரா பில்ட் அப் குடுக்கர...”

“நா எதும் குடுக்கல வாஙகல.அவர் போயாச்சு....பழசெல்லாம் மனசுல வச்சுக்க வேண்டாம்.அவர் காரியம்  எதுவும் பண்ண மாட்டேங்கற வென்ஜன்ச மனசுலேந்து எடுத்துடுங்கோ. மனச சுத்தமாக்கி ஆக வேண்டிய பதிமூணு நாள் காரியத்த சிரத்தையாபண்ணிக்குடுங்கோ.பித்ருக்கள்ட சேத்து புண்ணியம் கட்டிக்கோங்கோ..அவாளுக்கும் நல்லது நம்ம கொழந்தைகளுக்கும் நல்லது.”

”எனக்கு எதுவும் வேண்டாம்..காரியத்த அவுட் சோர்சிங் பண்ணிட்ட பண்றவனுக்குப் புண்ணியம் உண்டு...!

” முருகா.! கார்ர கொஞ்சம் ஓரமா நிறுத்துங்கோ....ஐ வாண்ட் டு சே சம்திங்”

நிறுத்தினான்.

“நீங்க ஒண்ணாம் நம்பர் கோழைங்கிறது தெரியர்து இப்ப. யூ ஹாவ் புரூவ்டு இட் அகெய்ன்.இப்ப வக்கணையாப் பேசுங்கோ.அவர் இல்ல இப்போ...? 20 வருஷமா திட்டும் வசவும் அப்பா கிட்ட வாங்கிண்டு...அதுவும் கல்யாண ஆகறத்துக்கு முதல் மாசம் வர...எதிர்த்து பேச திராணிஇல்லாம எல்லா திட்டையும் வாங்கிண்டு.மனசுல போட்டு புழுங்கிண்டு..அப்படியே வளர்ந்து கல்யாணமாகி குழந்தையும் குட்டியுமா ஆயாச்சு.நல்ல வேள நான் தள்ளியே இருந்துட்டேன்.”

“நா செய்வேன்..என்னப்பத்தி தெரியாது..”

“வெஞ்ஜன்ஸ அவர் இருக்கும்போது சொல்லிட்டு எடுக்கரதானே?”

“அவருக்கு ஒரு பாடம் .பித்ருக்கள்ட போகமா பாதிலேயே தொங்கட்டும்”

”அச்சுபிச்சுன்னு ஏதாவது உளறிக்கொட்டாதீங்கோ.எல்லாம் தெரியும் எனக்கு.காரை ஸ்டார்ட் செய்யுங்கோ  போலாம்”

காரை ஸ்டார்ட் செய்தான்.

ஹேமாக்குஎரிச்சல் தாஙகமுடியவில்லை.எக்கேடு கெட்டாவது ஒழியட்டும்.எதற்கு ஓடி ஓடிப் போய் துக்கத்தை குழந்தைக்கு சாதம் ஊட்டுகிறார் போல் இவனுக்கு ஊட்ட வேண்டும்.சற்று கவலையோடு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.

குழந்தைகள்தான் தாத்தாவைப் பற்றி வாய் ஓயாமல் போகும் வழியெல்லாம் பேசிக்கொண்டிருந்தது ஆறுதலாக இருந்தது.சோகத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.நெய் பந்தம் பிடிப்பதுப் பற்றி ஹேமா சொல்ல குழந்தைகள் அதைப்பற்றி கற்பனையில் முழுகியபடி தாத்தாவிற்கு நெய் பந்தம் பிடிக்க ஆர்வமாய் இருந்தன.

போகும் வழியெல்லாம் மாமனாரைப் பற்றிய நினைவுகள் கண்ணாடி கதவுகள் ஊடேஓடிக்கொண்டிருந்தன.புரசவாக்கத்தை கடக்கும்போது  தன் கல்யாண குரூப் போட்டோ ஞாபகம் வந்தது.

மாமனாருக்கும் மாமியாருக்கும் எப்படியான திடகாத்திரமான உடம்பு.இரானியன் போல் செக்கச்செவேல் நிறம். நாத்தனார்,மைத்துனர்களும் அதே வார்ப்பு.அதே நிறம்.கணேஷ் மட்டும்தான் குடும்பத்தோடு சேராத ஒரு ஒட்டாத கருப்பு நிறம்.மாமனாரிடம் கணேஷ் ஒட்டாமல் போன காரணம்.வசவும் திட்டும்.ஆனால் ஹேமா அதைப் பற்றி அலட்டிக்கொண்டதில்லை.

கணேஷும் தனக்கும் குழந்தைகளுக்கும் இது நாள் வரை ஒரு குறையும் வைத்ததில்லை.கல்யாணம் முடிந்து தனி குடித்தனம் வந்து விட்டதால் மாமானார் மாமியாரோடு எந்த வித பிரச்சனையும் இது நாள் வரைஇல்லை ஹேமாவுக்கு.

“நம்ம கல்யாண போட்டோல எப்படி இருப்பார். பாத்தேளா இப்பயும் அதே கெத்து...”அவனை சகஜமாக்க முயன்றாள்.

”ஆமா போட்டோல கூட வசவும் திட்டும்தான். போஸ்தான்...”

”திட்டும் வசவும்..” உதடுகளில் உச்சரித்தவுடன் மனதிற்குள் கோபம் கடுகாக அங்குமிங்குமாக கொப்பளித்து வெடித்துச் சுள்ளியது. ”எதுக்கு செய்யனும்”சற்று மூர்க்கமானான்.கார் ஸ்டீயரிங்கை இறுகப் பிடித்து அழுத்த அது ராங்க் சைடில் போக,சட்டென் உணர்ந்து மோதலைத் தவிர்க்க சடன் பிரேக் அடித்தான். டயர் “கீரிச்”ட்டு ரோடில் தேய்ந்தபடி கார் நின்றது.

லாரிக்காரன் நின்று திட்ட,கணேஷ் பயந்துப்போய் மன்னிப்புக் கேட்டான்.

ஹேமாவும் குழந்தைகளும் கிலி பிடித்துப் போனார்கள்.புது மாதிரியான அனுபவம்.சே!தான்தான்அசட்டுத்தனமாக டாபிக்கை ஆரம்பித்து மூடை கெடுத்து விட்டோமோ என்று ஹேமாவிற்கு தன் மீது கோபம் கோபமாக வந்தது.சற்று நேரம் அமைதி காத்து மிரட்சியிலிருந்து விடுவிடுவென மீண்டு அவனிடம் இருந்து கார் சாவியை வாங்கி அவள் ஓட்ட ஆரம்பித்தாள்.

“வீடு போறவரையும் எதுவும் பேச வேண்டாம். மனச போட்டுக்குழப்பிக்காத சமத்தா வாங்கோ”

கணேஷ் எதுவும் பேசாமல் பின் சீட்டில் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்துக்கொண்டான்.ஒன்றா இரண்டா இந்த திட்டும் வசவும்.யோசனையில் மூர்க்கம், துக்கமாக மாறி கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.இவ்வளவு டார்ச்சர் கொடுத்த ஆளுக்கு பதிமூணுநாள் காரியம்,பித்ரு கித்ருன்னு..? டீசண்டாக முடியாது என்று சொன்னால் என்ன?யார் என்ன செய்ய முடியும்.இறந்த அப்பா எழுந்து திட்டப்போவதுமில்லை.வசவப்போவதும் இல்லை.

வீடு வந்துவிட்டது.ஹேமா கணேஷின் காதில் மெதுவான குரலில் அவனிடம் ஏதோ சொன்னாள்.அவன் பதிலுக்கு முகத்தை ”உர்” என்று வைத்துக்கொண்டான்.ஹேமாவிற்கு பயம் பிடித்துக்கொண்டது.

நுழைந்ததும் அப்பாவின் பிணத்தைப் பார்த்தான்.மிரண்டான்.எப்பேர்பட்ட உருவம்.சாப்பிட்டு விட்டு ஒரு மத்தியான தூக்கம் போடுகிற மாதிரிதான் படுத்திருந்தார்.தூக்கம் கலைந்தால் வசவும் திட்டும்தான்.
மிரட்சியோடு நழுவி பின்பக்கம் சென்றான்.

பின்பக்கம் சென்றவன் அப்படியே அடுத்த வந்த 13 நாள் காரியங்களும் சிரத்தையாக நடத்தினான்.இடையில் அப்பாவின் சாம்பலை ராயபுரத்தில் ஆரம்பித்து அடையார்,பெசண்ட் நகர்,திருவான்மியூர்,,ஈசிஆர்,விஜிபி,
பாண்டிச்சேரி எல்லா சமுத்திரகரைகளிலும் கரைத்து அப்பாவின் அன்னமயகோசத்தை ஒரு துளி இல்லாமல் கரைத்து வசவும் திட்டும் இல்லாமல் நிம்மதியானான்.


                                      முற்றும்







சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டிக்காக எழுதப்பட்ட கதை.



Tuesday, November 3, 2009

மழை....சாரல்...! மொட்டு...பூ..! - கவிதை



அவசரமாக ஓடி வந்து
ஜன்னல் கதவின்
கொக்கிகளை எடுத்துச்
சாத்துகையில் முகத்தில்
செல்லமாக தெறிக்கிறது
சாரல்  வீட்டிற்குள்
வீட்டுக்கு  வெளியே பெய்கிறது
மழை

_____________________________





கைக்கடக்கமாக இருப்பதை
கைப்பையிலிருந்து எடுத்து
அதன் காம்பில் விரலால் அழுத்த
தலைக்கு மேல் வண்ணத்தில்
 பட்டென மலர்கிறது பூவாக
 மொட்டு

மழை முடிந்தவுடன்  மடிக்கப்பட்டு
கைக்கடக்கமாகி கைப்பையில்
மீண்டும் மொட்டாக்கி விடுகிறது
பூ

மொட்டோ பூவோ
எந்த நிலையிலும் மறப்பதில்லை
செல் பேசுவதை -அதுவும்
கைக்கடக்கம்தான்

Monday, November 2, 2009

யாருக்குத்தான் பிராப்ளம் இல்லை..?

கேள்வி: நான எங்கள் வகுப்பில் மானிட்டர்(கிளாஸ் லீடர்).டீச்சர் இல்லாத சமயத்தில் நான்தான் வகுப்பைச் சத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.யாராவது பேசினால் பெயர் எழுதி டீச்சரிடம் காட்ட வேண்டும்.என் நண்பர்களின் பெயர்களை எழுதினால் அவர்கள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு எமோஷனலாக பிளாக் மெயில் செய்கிறார்கள். நான என்ன செயவது ?அவர்கள்பெயர்களை எழுதி என் நட்பை இழக்கலாமா?
                                                     - மும்பையிலிருந்து ஒரு பள்ளி மாணவன்


பதில்:நீங்கள் இருக்கும்  நிலமை தர்மசங்கடமான ஒன்று.நீங்கள் உங்கள் மனசாட்சிக்கும் நண்பர்களுக்கும் நியாமாக நடக்கவேண்டிஇருப்பதால் ,உங்கள் நண்பர்களிடம் சொல்லி விடுங்கள் ,இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருக்கப்போகிறேன் என்று.ஏனென்றால் நீங்கள் டீச்சரை ஏமாற்ற விரும்பவில்லை.

வகுப்பில் பேசாமல் அமைதியாக ஏதாவது ஒரு புத்தகத்தை வாசிக்கச் சொல்லுங்கள் டீச்சர் வரும் வரையில்.இந்த யோசனையையும் கண்டிப்பையும் மீறி இவர்கள் நடந்தால் உங்களுக்கு ஒரே வழி அவர்கள் பெயரை எழுதுவதுதான். உங்களுக்கு குற்ற உணர்ச்சி இருக்காது.

                                                            நன்றி: கோகுலம்.The Magazine for Children

குழந்தைகள் எப்படியெல்லாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

_______________________________________________________________________

நான் ரசித்த லாஜிகல் ஜோக்ஸ்:

செந்தில்: அண்ணே! என்ன பத்தி இப்போ எதுவும் தெரியாது.போகப்போத்தான் என்னப் பத்தித் தெரியும்.

கவுண்டமணி: என்னது போகப்போகவா... போகப்போக போரதுதான் தெரியும்.வேற என்னடா தெரியும்
                                       _____________________
செந்தில்: அண்ணே! ஆத்துல போட்டாலும் அளந்துப் போடணும்
கவுண்டமணி:டேய்...! ஆத்துல போடறதே தப்பு.இதுல அளந்து வேற போடனுமா?
                                       _____________________
                                     
செந்தில்: அண்ணே!எல்லா மனிதனுக்கும்மறுபக்கம் உண்டுண்ணே!

என்னோடமறுபக்கத்தயும்  ஒரு நாள பாக்கப்போறீங்க.

கவுண்டமணி:டேய்! பிளேடுக்குக் கூட மறு பக்கம் இருக்கு. ஒரு பக்கம் சேவிங் முடிச்சாலும் அதோட மறுபக்கத்த அடுத்த சேவிங்க்கு யூஸ் பண்ணலாம். உன்னோட மறுபக்கத்த வைச்சு நான் என்னடா பண்றது.