Showing posts with label ராஜா-கவுண்டர்பாயிண்ட். Show all posts
Showing posts with label ராஜா-கவுண்டர்பாயிண்ட். Show all posts

Sunday, May 30, 2010

இளையராஜா - மயக்கும் Counterpoint

இளையராஜாவின்  இனிமையான பாடல்களை பாமரத்தனமாக ரசிக்கிறோம்.ஆனால் அவர் இந்த மெலடிக்காக சில மேற்கத்திய இசை நுணுக்கம் ஒன்றை தன் பாடல்களில் புகுத்துகிறார்.அது கவுண்டர் பாயிண்ட் (counter point) எனப்படும் ஒன்று.

அது என்ன?

பாடல்களில் பாடகி/பாடகர் பாடி முடிந்ததும் வரும் (முதல் இசையும் அடக்கம்) இடையிசையில்  ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று என ஒன்றுக்கு மேற்பட்ட மெலடிகளை /டுயூன்களை இசைக்கருவிகளில்வாசிப்பது அல்லது குரல்களில் பாடுவது. 
அவைகள் வெவ்வேறாகவும் ஒன்றை ஒன்று சார்ந்தும் அதே சமயத்தில் இவைகள் இசைந்தும்(harmonious) அழகாக போவது. இதுதான் counter point.
 

(counterpoint involves the writing of musical lines that sound very different and move independently from each other but sound harmonious when played simultaneously.)

ரொம்ப எளிதாகப் புரிந்துக்கொள்ள “புத்தம்புது காலை” (அலைகள் ஓய்வதில்லை-1981) பாட்டின்  கவுண்டர் பாயிண்டைக் கேட்டுவிட்டு போவோம்.

 புத்தம் புது காலை 
(அலைகள் ஓய்வதில்லை)
ஆரம்பத்தில்( 00.00 -0.41) ஒரு புல்லாங்குழல் ஒரு மெலடியும்(அ), கும்கும் என்று கிடாரில் வேறு ஒரு மெலடியும்(ஆ),கோரஸ் வயலின் ஒரு மெலடியும்  (இ)ஜானகி ஹம்மிங் ஒரு மெலடியும், (ஈ)

அ,ஆ,இ,ஈ எல்லாம்தனிதனித்தான் ஆனால் கேட்கும்போது(harmonious)இனிமையாகிறது.
அசட்டுத்தனம் இல்லை.கிடைத்த சந்தில் விதவிதமாக சிந்து பாடுகிறார் மேஸ்ட்ரோ.

 விரிவாக படிக்க:இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்
 
எல்லாம் கேள்வி /படிப்பு ஞானம்தான்.தவறு இருந்தால் திருத்தலாம்.இசைக் கருவிகள் தெரிந்த மட்டிலும் எழுதியுள்ளேன் இதிலும் தவறு இருந்தால் திருத்தலாம்.


 பனிவிழும் மலர் வனம்  1982 - நினைவெல்லாம் நித்யா  
(கிடார் vs வயலின்- 0.29 - 0.40) 
இந்தப் பாடல் இசைக் கற்பனையின் உச்சம் என்று சொல்லாம். 
இதில் கர்நாடக ராகம்+மேற்கத்திய கிளாசிகல் இசை+அபரிதமான இசைக்கோர்ப்பு+ புதுமை+எஸ்பிபி குரல் என பலவித சமாசாரங்கள் காணலாம்.இன்னும் இளமையாக இருக்கிறது.

முன்னணியில்  கிடாரின் ஒரு  மெட்டும் பின்னணியில் ஒரு வயலினின்  வேறு ”கீச்” மெட்டும்இசைக்கப்படுகிறது.இந்த கிடார்-வயலின் அலசலின் நடுவே ஒரு குரூப் வயலின்வேறு சந்தில் சிந்து பாடிவிட்டுப்போகிறது.

அல்லிபபூவே மல்லிப்பூவே  - 2009 -பாக்யதேவதா(மலையாளம்)

(பியானோ-????-வயலின் 0.00 -0.20)
ரம்யமான மென்மையான பியானோ வாசிக்கப்பட அதன் எதிர்திசையில் ஒரு நாதம் மற்றும் 0.10இல் வயலின் இழைகள் வேறொரு நாதத்தில் உள்ளே நுழைகிறது.இந்த பியானோ இசையை ஒரு தடவையாவது கேளுங்கள்.

அட்டகாசம். Hats off Maestro! This is magical music maestro!

தேன் பூவே பூ  -1984 -அன்புள்ள ரஜனிகாந்த்
(கிடார் vs புல்லாங்குழல்- 2.33 - 2.45)   கிடாரும் புல்லாங்குழலும்  ஒன்றை ஒன்று எப்படி அதனதன்  தனி நாதத்தில் செல்லம் கொஞ்சுகின்றன.
 

பூந்தளிர் ஆட  - 1981 - பன்னீர்புஷ்பங்கள்
 (சிந்த்(?)-கிடார்-கிடார் 2.49-3.06)

இது ராஜாவின் மாஸ்டர் பீஸ்.சில இடங்களில் ஹம்மிங்கும் கிடாரோடு 0.31-0.42 & 1.44 -1.57 கவுண்டர்பாயிண்ட் உண்டு.1.44 -1.57 இரண்டுக்கும் நடக்கும் உரையாடல்களையும் கவனியுங்கள்.மயக்கும் நாதம்.

 தூரிகை இன்றி   - 2007 -அஜந்தா (பியானோ-புல்லாங்குழல்-வயலின்- 0.00 -0.17)கவுண்டர் பாயிண்டை ”ஒருகாட்டு”காட்டுகிறார்.மிரண்டுப்
போய்விட்டேன்.


 ஆரோ பாடுன்னு தூரே -2010-கதா தொடரன்னு(மலையாளம்)

 (0.28-0.45 பியானோ- வயலின்)

 ஓ.... சத்யன் அந்திகாடு சாரே.. இந்த பியானோவும் வயலினும் எத்தர சந்தோஷத்தோட பிரேமிச்சு....கேட்டோ

செம்பூவே  -1996 -சிறைச்சாலை
(செல்லோ-புல்லாங்குழல்-பெல்ஸ்-??????-0.00-0.17) 

ஆரம்பமே கவுண்டர்பாயிண்ட் கலக்கல்.பிரமிக்க வைக்கிறார்.Mindblowing counterpoint.


 கொடியிலே மல்லிகைப்பூ
 (1986 - கடலோரக்கவிதைகள்-1.01 -1.20)
 கிடார்-சிந்த்-பு.குழல்-வயலின்(?).அருமை
  
கண்ணன் வந்து - 1987- ரெட்டைவால் குருவி
(கிடார்-சாக்ஸ்+வயலின் 0.00 - 0.22)
மென்மையான கிடார் தீற்றல் ஒரு மெட்டில்ஆரம்பிக்க பின்னணியில் ஒரு கீச் வயலின் வேறொரு மெட்டில் உரையாட பிறகு சாக்ஸ்போன் சேர்த்துக்கொள்கிறது வேறொரு மெட்டில்.

தாமரைக்கொடி - 1983 -ஆனந்தகும்மி
(பியானோ(?)-கிடார்-சிந்த்-வயலின்- 0.17 - 0.45 )
அட்டகாசம். வயலின் பறக்கிறது.

 
உறவெனும்  - 1980-நெஞ்சத்தைக் கிள்ளாதே
(கிடார்-கிடார்-வயலின்-???? -0.00 -0.23 & 3.19-3.30)   
 
காதல் வானிலே  - 1995 - ராசய்யா
(1.34-1.41)

மேலே பார்த்தது இசை மெலடி வித்தைகள்.ராஜா இப்படித்தான் விதவிதமாகப் போட்டு பிடிக்கிறார் இந்த வீடியோவில் வருகிற மாதிரி.


    இந்த வீடியோவின் இசை அருமை
 

 

Friday, January 15, 2010

இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்

மேற்கத்திய இசையில் கவுண்டர் பாயிண்ட்(counterpoint) எனபது ஒரு இசை நுணுக்க சமாசாரம். மேஸ்ட்ரோ இளையராஜா இந்தக் கவுண்டர் பாயிண்ட் சமாசாரத்தை பல பாடல்களில்  எப்படி பிரமிக்க வைக்கும் (ஒரு மாஜிக் நிபுணர் போல்)முறையில் கையாண்டிருக்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.


                                 (தல! சிஷ்யன் உங்களயே மிஞ்சிட்டாரு)
இந்த படத்தில் இருக்கும் ஜே.எஸ்.பாக் (Johann Sebastian Bach)என்னும் ஜெர்மன் இசை கம்போசருக்கு இளையராஜா ஆத்மார்த்தமான ரசிகர்.இவரின் காலம் 1685-1750. இவர் (Johann Sebastian Bach) இதை(counterpoint)அதிக அளவில் பயன்படுத்தி இசைக் குறிப்புகளை எழுதுவார்.அதன் தாக்கம்தான் ராஜாவுக்கும்.

டிஸ்கி:இந்த கவுண்டர் பாயிண்ட்(counter point)என்னுடைய கேள்விஞானம்.புத்தகம்,நெட்,நண்பர்கள்,பாடல்கள் என  கேட்டு புரிந்துக்கொண்டு இந்த அறிவை வளர்த்துக்கொண்டேன்.இதுவே முழு விளக்கம் ஆகாது. தவறு இருந்தால் திருத்தலாம்.

கவுண்டர் பாயிண்ட்(counter point) என்றால் என்ன? (சின்ன கவுண்டருக்கும் இந்தக் கவுண்டருக்கும் ஸ்நானப்பிராப்தி கூட இல்லை.)


ஒரு சாதாரண சினிமா பாட்டு என்று எடுத்துக்கொண்டால்:-

1.பாட்டு ஆரம்பிக்கும் முன் குட்டியாக ஒரு இசை வரும்.  
அது (prelude)

2.இது முடிந்தவுடன்  ஒரு பாடகரோ அல்லது  பாடகியோ ஏதோ ஒரு மெட்டில் இரண்டு வரிகளைப்பாடி விட்டு விடுவார். 
இது பல்லவி.

3.பல்லவி முடிந்தவுடன் ஒரு இடையிசை வரும்.  
இது ( interlude -1 ).

4.interlude -1  முடிந்தவுடன் அடுத்து நான்கு அல்லது ஐந்து வரிகள் பாடி மீண்டும் பல்லவி வரிகளை பாடி விடுவார்கள்.
இது சரணம்-1 .

5.இந்த சரணம்-1  முடிந்தவுடன் மீண்டும் ஒரு இடையிசை. 
இது ( interlude -2 ) 

6. interlude -2 முடிந்தவுடன் மீண்டும் நான்கு அல்லது ஐந்து வரிகள் பாடி மீண்டும் பல்லவி வரிகளை பாடி பாட்டை முடிப்பார்கள். 
இது சரணம்-2.

பெரும்பாலும் சினிமா  பாட்டில் வரும் prelude, interlude-1,interlude-2 ன்களின் இசைக்கோர்ப்புகள் இசைக்கருவிகளால் அடுத்தடுத்து இசைக்கப்படும்.அதில் எழும் இனிமை/சத்தம்  முழுவதும்  படர்ந்திருப்பது ஒரே மெட்டு/மெலடி/டுயூன்கள்தான். அதாவது மெயின் பாட்டின் மெட்டுக்கு இசைவாக.எல்லாம் ஒரேதான்.

ஆனால் அப்படி இல்லாமல் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று என பல மெலடிகளை /டுயூன்களை இசைக்கருவிகளில்வாசிப்பது அல்லது குரல்களில் பாடுவது . அவைகளும் வெவ்வேறாகவும்  ஒன்றை ஒன்று சார்ந்தும் அதே சமயத்தில் இவைகள் இசைந்தும்(harmonious) அழகாக போவது. இதுதான் counter point.இதற்கு இதில்  பயிற்சி இருக்க வேண்டும்.

(counterpoint involves the writing of musical lines that sound very different and move independently from each other but sound harmonious when played simultaneously.)

சரி, இது எதற்கு?

1.பாட்டின் அழகை மெருகூட்டுவதற்கு.Romanticization
2.இசையை அடுத்தத் தளத்திற்கு நகர்த்துதல்
3.புது முயற்சி
4.புது உருவாக்கம்(creativity)
5.இசைக்கருவிகளின் நாதத்தை வைத்து சிலம்பாட்டம்
6.கருவிகளின் உரையாடல்
 7.இசைக்கருவிகளின் குட்டி குட்டியான நாதங்களை பயன்படுத்துதல்
8.point,counterpoint,point  என்று தனிதனியாக  நாதங்களை உருவாக்கி அதை எல்லாவற்றையும்  ஒன்றுபடுத்தும் அழகில் எழும் நாதம்

உதாரணமாக கிழ் உள்ள புடவையின் நூல் வேலைப்பாடைப் பாருங்கள். அதே மாதிரிதான் பாட்டின் உள்ளே மேஸ்ட்ரோவின் நேர்த்தியான கவுண்டர் பாயிண்ட் என்னும் இசைக்கோர்வைகளும்.


இந்த கவுண்டர் பாயிண்டுகளைத்தான் முக்கியமாக prelude,  interlude -1 , interlude -2 போன்ற முதல  இடையிசைகளில் வாசித்து பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.இதில் கர்நாடக இசை ஸ்வரங்களும் மற்றும் ஹம்மிங்களும் ஊடுபாவாக  நெய்திருப்பார்.


 
                    மேஸ்ட்ரோவின் பெண் ரசிகர்கள்  (கவுண்டர் பாயிண்டுகள்?)



இனி மேஸ்ட்ரோவின்  riot of   counterpoints நிறைய பாடல்கள் உள்ளன.சிலவற்றைப் பார்ப்போம்.

ஒரு வேண்டுகோள்! சற்று உன்னிப்பாகக் கேளுங்கள்!

1:அலைகள் ஓய்வதில்லை (புத்தம் புது காலை)
C.PointPuthamPuthu.mp3

ஆரம்பத்தில் ஒரு புல்லாங்குழல் ஒரு மெலடியும்(அ), கும்கும் என்று கிடாரில் வேறு ஒரு மெலடியும்(ஆ),கோரஸ் ஹம்மிங் ஒரு மெலடியும்(இ), கோரஸ் வயலின் ஒரு மெலடியும்(ஈ) எல்லாம் கலந்து இந்த அ,ஆ,இ,ஈ க்களுக்குள் நடக்கும் உரையாடலைக் கவனியுங்கள்.இனிமை!இனிமை!இனிமை!

அட்டகாசம்.

1A.அவதாரம் (தென்றல் வந்து தீண்டும்போது

அவதாரம்

இந்தப் பாட்டின் prelude 00.00 இருந்து 00.08 வரை ஒரு ”தானத்தந்தம்” என்று ஒரு பெண் குரலும் அதற்கு கவுண்டராக வேறு ஒரு “தானத்தந்தம்”பெண்குரலும் விதவிதமாக பின்னிக்கொண்டே வரும். 00.09ல் இசைக்கருவி இழைகள் (bells,synth,violin,humming)  இதோடுப் பின்னிக்கொள்ளும்.ராஜா 00.17ல் “தந்த தந்த தான” என்று இவைகளுடன் சேர்ந்துக்கொள்வார்.முதல் அடுக்கில் ராஜா ஒரு மெலடியும்,இரண்டாவது அடுக்கில் பெண்குரல் இதற்கு கவுண்டராக வேறு மெலடியும், மூன்றாவது அடுக்கில் பெண் குரல்  முற்றிலும் வேறாக ஹம்மிங்குகள் நெய்யப்பட்டிக்கும். இது தவிர இதனூடே இசைக்கருவிகளும் பின்னிக்கொண்டே வரும்.ஆனால் எல்லாம்  harmonyஆக இசைந்து வரும்.


மெதுவாக ஊர்ந்து வரும் இவைகள்   ”தென்றல் வந்து தீண்டும்” என்று பல்லவி யை ராஜா ஆரம்பிக்க 0.32ல் டிரம்ஸ்ஸால் அறைந்து அறைந்து பாட்டின் டெம்போ மெதுவாக  உயர்ந்துக்கொண்டே வர  0.38 to 0.39ல் ஒரு இசை இழை (என்ன கருவி?) மெலிதாக தழுவி விட்டுப் போகும்.அசத்தல்!

இதுதான் கவுண்டர் பாயிண்ட்.

பார்வையற்றவர்கள் பாடுகிறார்கள் என்பதைக் கற்பனைச் செயதுக்கொள்ளுஙகள்.Hats of Maestro!

2. திருவாசகம் சிம்போனி:பூவேறு கோனும் புரந்தரனும்
   (கவுண்ட் 0.06 to .24)
CpointPooverukonum-Thiruvasagam.mp3

இதில் உண்மையாக வயலின்/சாரங்கி,புல்லாங்குழல்/கிடார் எனநெய்திருப்பார்.என்ன உச்சரிப்பு.
3.பன்னீர் புஷ்பங்கள்(ஆனந்தராகம்)(கவுண்ட் 0.06 to .26)
 ஆரம்பம் வயலின் ரகளை.cello,flute,synth,violin என்று பின்னல்.இதனிடையே சிம்மேந்திர மத்யமம் என்கிற ராகம் கசியும்.

CpointAnandaRaagamKetkum.mp3
 
4.கோழிகூவுது (ஏதோ மோகம்): 0.01 - 0.15

 CpointYethoMoham.mp3
 

இது நமக்கானப் பாட்டா?அவருக்கா?

5.மண் வாசனை (பொத்திவச்ச)1.24 - 1.33

 MCpointPotthiVecha.mp3

6.அரங்கேற்ற வேளை(ஆகாய வெண்ணிலாவே) (0.58 - 1.18)
  CpointAgayavennilave.mp3


என்ன ஒரு மங்களகரமான ஆரம்பம்.
இந்த கவுண்டின் லீடில் ஒரு வயலின் மெலிதாக தர்பாரி கானடாவை தீற்றிக்கொண்டே வர பின்னணியில் அண்ணன் வயலின்மார்கள் துரத்திக்கொண்டே வர..... மேஸ்ட்ரோவின் பிரமிக்க வைக்கும் கற்பனை.

 7.வைதேகி காத்திருந்தாள்(மேகம் கருக்கயிலே)0.00 -0.22
மேகம் கருக்கயிலே

8.பதினாறு வயதினிலே(செந்தூரப்பூவே)1.13 -1.20
  CpointSenthooraPoove.mp3


9.சத்ரியன்(மாலையில் யாரோ மனதோடு)
 (0.05-0.17)

CpointMaalayil.mp3

 இது பூமிக்காகப் போடப்பட்ட பாட்டல்ல.காதல் கிரகம் வீனஸ்ஸூக்குப் போடப்பட்டது.முதலில் வரும் interlude கற்பனையின் உச்சக்கட்டம்.It is a stunner.

நான் பேசுவதை விட  என் ரசிகர்களோடு என் இசை மூலம்தான் பேசகிறேன் - இளையராஜா

படிக்க:
இளையராஜா-பாலுவை கேளடி கண்மணி