Friday, December 21, 2012

லைப் ஆஃப் பையும் நானும் பின்னே அதிஷாவும்

பேஸ்புக்கில் லைப் ஆஃப் பை படத்தைப்பற்றி என் கருத்தை எழுதி இருந்தேன்.அது “ படத்தில் முக்கியமான விஷயமான புலிக்கும் அந்தப் பையனுக்கும் இடைய உள்ள ஆத்ம உணர்ச்சிகள் சரியாக வெளிப்படவில்லை மற்றபடி காட்சிகளில் ஒரு வித அமானுஷ்யத்தை என்னால் உணர முடிகிறது.’

இதற்கு அதிஷா ” சேம் பீலிங்” என்று கமெண்ட் போட்டிருந்தார்.அவர் தமிழில் இதைப் பார்த்ததாகவும் வளவளவென்று ஓவர் தத்துவம் பேசுகிறார்கள் என்றும் கூறி இருந்தார். அடடா.. தமிழில் பார்த்திருக்கலாமோ (நமக்கு கொஞ்சம் தத்துவம் பிடிக்கும்) என்று யோசனை வந்தது.ஆனால் தமிழ் பதிப்பு இருக்கும் தியேட்டர்கள் எல்லாம் ரொம்ப ”தொலவு”.

பார்த்திருந்தால் ஒரு வேளை ஆத்ம உணர்வுகள் வெளிப்பட்டிருக்குமோ?

சரி விஷயத்திற்கு வருகிறேன்.பல பல வருடங்களுக்கு முன்பு எனக்கும் ஒரு குளவிக்கும் இடையே நடந்த 7 நிமிட திகில் போராட்டத்தில் ஒரு ஆத்ம/ஆன்மீக உணர்வு அல்லது ஏதோ ஒன்று என் மீது படர்ந்து அமைதியாக்கியது.

அது ஒரு பிரவுசிங் செண்டர்.முடை நாற்றம் வரும் செண்டர்.மத்தியான வேளை.ரொம்ப ரொம்ப குட்டி வொர்க் ஸ்டேஷனில் நான் பிரவுஸ் செய்துக்கொண்டு இருக்கிறேன்.என் தலைக்கு மேல் சின்ன வெண்டிலேட்டர்.ஓனர் சாப்பாட்டிற்கு போய்விட்டார்.நான் மட்டும்தான்.


பிரவுசிங்கில் ஆழ்ந்து இருக்கும்போது வெண்டிலேட்டர் வழியாக விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஒரு பூச்சி என் காதருகில் அந்தரத்தில் ஹெலிகாப்டர் போல் சிறகடித்தபடி.அது குளவி (டொக்கென்று கொட்டும்)என்று தெரிந்ததும் உடம்பு உதறி தலையை திருப்பியதும் நேராகப் போய் மானிடரில் ஒரு முட்டுமுட்டிவிட்டு மீண்டும் என் முகத்தருகே அந்தரத்தில் விர்ர்ர்ரென்று  எங்கே லாண்ட் ஆகலாம் என்று யோசித்தப்படி.உயிர் பயத்தில் சட்டென்று மவுசை(மவுஸ் பேட் இல்லாத மவுஸ்) எடுத்து தலை கிழாக(பின் பக்கம் வெயிட் ஜாஸ்தி) திருப்பியபடி சூசூ சூ என்று நடுங்கிக்கொண்டேமுகத்தைத் தள்ளி வைத்துக்கொண்டு  அதை விரட்ட முயற்ச்சித்தேன்.

ஆனால் மவுஸ் எட்டவில்லை.மவுஸ் அடியில் இருக்கும் அழுக்கான ரோலிங் பாலில் கவரப்பட்டு அதை நோக்கி விர்ர்ட்டது.பயத்தில் கையை உதறியவுடன் மவுஸ் சைடில் விழுந்து தொங்கியது.ஏமாற்றத்தில்(கோபத்தில்)அதை விட்டுவிட்டு மீண்டும் என் முகத்தில் விர்ர்ட்டது.
Wasp - Gangnam Style

அடுத்து கழுத்தை பின்னே தள்ளியவாறு ஹார்டு டிஸ்கில் இருக்கும் சிடியை எடுத்து அதை ஆயுதமாக பயன்படுத்த பட்டனை பிரஸ் செய்தேன்.ஒர்க் ஆகவில்லை.அது  டம்மி  டிஸ்க் என்று தெரியவந்தது.

அடுத்த 10 வினாடி அமைதி.குளவி அதே பொசிஷனில்  அந்தரத்தில் விர்ர்ர்ர் அடிக்க நான் அதை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

உதட்டை ஈரமாக்கிக்கொண்டு உற்று பார்த்தபடி  “ ஏய்.. உனக்கு இப்ப என்ன வேணும்.உன்னோட மண் கூட்ட தேடறீயா.....அதோ அங்க இருக்கு பாரு” என்று வெண்டிலேட்டரை கை காட்டினேன்.

அது சற்று நகர்ந்துவிட்டு மீண்டும் தன் பழைய இடத்திற்கே வந்தது.இரண்டு பேரும் கிட்டத்தட்ட இரண்டேகால் நிமிடம் இப்படியே நேருக்கு நேர் ஆத்ம உணர்வுடன் பார்த்தபடி (என் உதட்டில் புன்னகை கொஞ்சம் தவழத்தான் செய்தது) இருக்க திடீரென்று எஸ் வடிவில் மாறி மாறி  விர்ர்ர்ட்டு  பறந்து சடக்கென்று வெண்டிலேட்டர் வழியாக பறந்தது.

வெண்டிலேட்டர் வழியாக  குளவிக்குப் பதிலாக பெங்கால் டைகர் குதித்திருந்தால்?


Monday, December 17, 2012

நீதானே என் பொன் வசந்தம்-விமர்சனம்

பொதுவாக நான் பார்க்கப்போகிறேன் என்று முடிவு செய்துவிட்டு பார்க்கப்போகும் படங்களின் விமர்சனத்தை நெட்டில் படிப்பதில்லை.காரணம் அதில் பாதிக்கப்பட்டு படம் பார்த்து சொந்த ரசனை மற்றும் விமர்சனம் போய்விடும் என்பதால்.டிவிட்டரில் என் (சின்ன சின்ன ஒபினியன்கள்தான்) கண்ணில் பட்டதெல்லாம் படம் மிக மோசம் என்று வந்திருந்தது.

நண்பர் ஒருவர் எனக்கு போன் பண்ணி “என் பொண்ணுப்பாத்தாளாம்...படம் போராண்டா...வளவளவன்னு பேசிட்டே இருக்காங்களாம்”.

என்னடா இப்படி சொல்றாங்களே பார்த்தே ஆக வேண்டுமா என்று திடீரென்று ஒரு குழப்பம்.அதே சமயத்தில் ஒவ்வொருவரின் படத்தை நோக்கும் பரிமாணம் (perspective) மாறும்  என்று திடமாக நம்புபவன்.அதனால் குழப்பத்தை தூக்கிக் கடசிவிட்டு “நீதானே என் பொன்வசந்தம்” நி.நித்யா பாட்டை இரண்டு  முறை கேட்டுவிட்டு டிரைவிங்கில் அதேயே முணுமுணுத்தபடி தியேட்டரில் போய் பார்த்தேவிட்டேன். 20/12/12 க்கு பிறகு பார்க்க முடியுமா முடியாதா என்ற கவலை வேறு.
படம் மோசமா? இல்லவே இல்லை.படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

நித்யா - வருண் இவர்களின்  ஐந்து வயது முதல் இருபத்தி நாலு வரை வாழ்க்கைத் (காதல்) தருணங்கள்தான் படம் என்று டைட்டில் கார்டு வருகிறது.முக்கியமாக உணர்ச்சிகள்தான்.இதை 2.30 மணி நேரத்தில் சொல்ல வேண்டும்.இது மாதிரி படங்கள் ஹாலிவுட்டுக்கு ஓகே நம்ம ஊருக்கு ஓகேயா? அவர்கள் பின்னி பெடல் எடுப்பார்கள்.கோலிவுட் கெளதம் மேனன்?

கெளதம் மேனன் வெற்றிப்பெற்றுவிட்டார். எப்படி?நித்யா வருண் வாழ்ந்திருக்கிறார்கள்.Awesome!

எமோஷன்ஸ் பின்னிடீங்க ....நித்யா!

காரணம் 1.நித்யா-வருண் தருணங்களைச்சொன்ன விதம் 2.அந்த மாதிரி பருவங்களில் வாழ்ந்து அந்த மாதிரி தருணங்களை அனுபவித்துத் திரையில் பார்த்தது ஒரு சந்தோஷம்3.எப்ப பார்த்தாலும் பேச்சு-வார்த்தைகளை போராடிக்காமல் நகர்த்திக்கொண்டே போவதற்கு திறமை வேண்டும்.

பார்வையாளராக இவர்களின் தருணங்கள்  நம் முன்னே காட்சிகளாய் ஓடுகிறது..

அடுத்தடுத்து வரும் படக்காட்சிகளின் எமோஷன்ஸ் சங்கிலியாகப் பின்னப்பட்டு சீராக அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் படத்தின் பெரிய பலம்.
ஒவ்வொரு சீனும் அதனதன் யதார்த்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

குட்டி குட்டி சண்டையின்போது  பேசும் வசனங்கள் ரத்தமும் சதையுமாக படத்தின் எமோஷனோடு பொருந்திப்போகிறது.

ஒரு மிடில் கிளாஸ் பையனுக்கும் (அவரேஜ் அராத்து) ஒரு பணக்காரப் பெண்ணுக்கும்( திமிர் இல்லாத)  இடையே அன்பு,நட்பு,காதல்,பிடிப்பு,காதல், வெறி,காமம்,காதல்-ஹேட்(love-hate),காதல் -ஹேட், காதல்-ஹேட் மீண்டும் காதல் மீண்டும் ....தருணங்களை கிமுவில் ஆரம்பித்து கிபிவரை  சுவராஸ்யமாக சொல்லி இருக்கிறார்.

கடைசியில்தான் கொஞ்சம் ஆற்றிவிட்டு  சூடாக கையில் கொடுப்பார் என்று பார்த்தால் மாற்றி மாற்றி மாற்றி மாற்றி மாற்றி  ஆற்றிக்கொண்டே இருக்கிறார்.

பள்ளித் தருணங்களை இன்னும் கூட நெகழ்ச்சியாக சொல்லி இருக்கலாம்.என்கிட்டே கேட்டிருந்தால் டெம்போவில் அனுப்பி இருப்பேன். பள்ளிப்பருவம் பன்னீர் புஷ்பங்கள் படத்தை ஞாபகப்படுத்துகிறது.பிற்பகுதி  கடைசி விதாவ சாயல்.

தங்கள் சண்டைகளை தாங்கள் சாடிஸ்டிக்காக ரசிப்பது கூட சில இடங்களில் வெளிப்படுகிறது.இது டைரக்டரின் வெற்றி.

சமந்தா நித்யாவாக வாழ்ந்திருக்கிறார்.கொள்ளை அழகு.கொள்ளை எமோஷன்ஸ்.ஜீவாவும் அசத்தல்.ஒரு மிடில்கிளாஸ் பையனின் குற்ற உணர்ச்சியும்,பொறுப்பும்,பயமும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.ஆனால் அவர் குடும்பதான்... அண்ணன் பவுன்சர் மாதிரி இருக்கிறார். இவர் ஒரு தமிழ் பேசுகிறார்.அப்பா “குற்றம் நடந்தது என்ன” ஜி தமிழ் டிவி டப்பிங்  தமிழ் குரல். கொசுறாக இன்னொரு தம்பி.பாலச்சந்தர் படம் போல்.

வருண் தான் வாங்கிய புது காரை நித்யாவிற்கு காட்டும் சீன் ரொம்ப நெகழ்ச்சியான சீன். இதுமாதிரி அங்கங்கே கொண்டு வந்திருக்கலாம்.

சந்தானம் ஷேவாக மாதிரி டப்பு டிப்பென்று மட்டையை சுத்தி கலகலக்க வைக்கிறார்.இவர் இல்லாவிட்டால் படம் சற்று போரடித்திருக்கும்.இவருக்குத்தான் தியேட்டரில் விசில் பறக்கிறது.காலம்!

சந்தானத்தின் காதலியாக வரும் குண்டுப்பெண் வித்யூலேகா ராமன் கலகலக்க வைக்கிறார்.குண்டுப் பெண் கிண்டல்  இது  என்.எஸ்.கிருஷ்ணன் காலத்திலிருந்து இன்னும் தொடருகிறது. க்ளிஷே.

இவர் நடிகர் மோகன்ராமின் பெண்ணாமே?.


இசை இசைஞானி இளையராஜா.பாடல்கள் எல்லாம் தனியாக கேட்டால் அற்புதம்.ராஜா உணர்ச்சிகளை உள் வாங்கிப்போட்டு இருக்கிறார்.பொருத்தம்?காற்றைக்கொஞ்சம்(சூப்பராக) /சாய்ந்து/என்னோடு/படிக்கல மாமு  அற்புதமாக பொருந்தி வருகிறது.

”காதல் என்பது” இது மேல் வெர்ஷன் ஆஃப் ”முதன் முறை”.

முதன்முறை அண்ட் சற்று முன்பு இரண்டு பாட்டும்  அற்புதமான புது மாதிரியான நெக்ஸ்ட் ஜெனரேஷன் இசைக்கோர்ப்பு.உணர்ச்சிக் கொந்தளிப்பு பாடல்கள்.இதை கெளதம் பின்னணி இசை அளவுக்கு பயன்படுத்தி உள்ளார். மாண்டேஜில் விட்டு விட்டு வருகிறது.

இடைவேளைக்குப் பிறகு பாடல்கள் வரிசையாக வருகிறது.கொஞ்சம் ஹெவி டோஸ்.

என்னோடு வா வா ஆரம்பகால காதல் அரும்பும் காலத்தில் வரப்போகிறது என்று நினைத்தால் வேறு பருவத்தில் வருகிறது.

ராஜாவிற்கு  ஒன் டே மாதிரி கடைசி ஐந்து ஒவர் கொடுத்திருக்கிறார்கள். பின்னுகிறார்.

பின்னணி இசை காலத்திற்கு ஏற்றார்போல் இவ்வளவுதான் இந்தப்படத்திற்கு முடியும் என்று அளவோடு நிறுத்தி இருக்கிறார்.தேவையான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

எப்போதுமே ராஜா தனக்குப் பொருத்தமில்லாத பாடலை பாடுவதை நான் ரசிப்பதில்லை.இதில் “வானம் மெல்ல”.இந்தப் பாடல் சம்பந்தம் இல்லாமல் மாண்டேஜில் ஓடுகிறது.இதில் வரும் உணர்ச்சிகள் எல்லாம் எவ்வளவு  பேர் உள் வாங்க முடியும்.(இதில் வரும் மூன்றாவது இண்டர்லூட் அட்டகாசம்.
சிடியில் இல்லை.)

அடுத்து ஒரு சோகமான நித்யா காட்சியில் இவர் பின்னணியில் இரண்டொரு வரி தன் கட்டைக் குரலில்பாடுகிறர்.தியேட்டரில் சிரிக்கிறார்கள்.தேவையா?வேறு அற்புதமான இசைக்கருவி இசையை கொடுத்திருக்கலாம்.ஆனால்“சாய்ந்து” பாடலை யுவன் ஆரம்பிக்கும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.

யதார்த்தம் இதுதான் ஞானி சார்!

நான் பார்த்த அன்று இளைஞர்கள் படத்தை ரசிக்கத்தான் செய்தார்கள்.படம் ரொம்ப ஓகேதான்.

Tuesday, October 9, 2012

கிரவுண்ட் ப்ளோரில் கேண்டிட் பேய் -திகில் கதை


அது ஒரு பெரிய மால்.மேற்குப் பகுதியில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை.ஒவ்வொரு தளத்திலும் அந்த லிப்ட் நின்று நின்று இறங்கிக் கொண்டிருந்தது.அதில் புதிதான திருமணமான இளம் தம்பதியர் மட்டும் கொஞ்சி குலாவியபடி.

...........9

...........8

...........7

...........6

...........5

...........4

...........3

...........2

...........1

...........G

கதவு திறந்ததும் யாரோ ஒரு இளைஞன் கொடூரமான கருப்புக் கலர் பேய் மாஸ்க்  அணிந்து “பே...பே....பே..பே....ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா.... ஹிஹிஹிஹிஹி பே பே பே பே பே....”கொடூரமாக கத்தி பயமுறுத்திவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.


மனைவி நடுநடுங்கி கைகால் உதறி  வயிற்றைப் பிடித்தபடி (இரண்டு மாதம் கர்ப்பம்) மயங்கி லிப்டில் சரிந்தாள்.கணவன் வேர்த்து வெடவெடத்துப்போய் (பேய் அறைந்தால் போல்???) ஒன்றும் புரியாமல் அவளைப் பிடித்தபடி இருக்க லிப்ட் கதவு மீண்டும் மூட இடது கையால்  தவறுதலாக நான் - ஸ்டாப் பட்டனை அமுக்க,

.........1

.........2

.........3

.........4

.........5 (ஒருவாறு  இருவரும் சகஜ நிலைக்கு வந்தார்கள்.ஆனால் லேசனா நடுக்கம் இருந்தது)

.........6

.........7

.........8

.........9

கதவு திறந்தது.கணவனின் செல்போன் அடித்தது.ஆன் செய்தான்.

“டேய்.... நாயே.. பொறம்போக்கு...எப்படி இருந்தது என்னோட கேண்டிட்  ஷாக் ஷோ? ஞாபகம் இருக்கா.ஆறுமாசம் முன்னாடி ரோட்ல போற எங்க அப்பாவ மலர் டிவி கேண்டிட் ஷோன்னு திடீர்ன்னு நடுரோட்ல  நாதாரி நீ பயமுறுத்தி..அவரு பயந்து போய் ஹார்ட் அட்டாக் வந்து நாலாவது நாள் இறந்துப் போனார்.அவரை நம்பி இருந்த எங்க குடும்பம் தெருவுக்கு வந்தது.”

போன் கட் ஆகியது.


Friday, October 5, 2012

வால்மார்ட் அண்ணாச்சி தற்கொலை குரல் விடும் விஜய் ஆண்டனி

தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தும் 24/7 கவலைகள்

கடந்த பல வருடங்களாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தற்கொலை அதிகமாவதாக ஒரு செய்தி படித்தேன்.இதில் அதிர்ச்சியான செய்தி ஒன்று “செல்போன்கள் இந்த நிலமையை இன்னும்  மோசமாக்குகிறது” என்பதாகும்.

பல வருடங்களுக்கு முன்பு கடிதத் தொடர்பு மட்டும்தான் இருந்தது.அதன் மூலம்தான் குடும்ப சுமைகள் கஷ்டங்கள்  தெரிய வரும் வீரர்களுக்கு.ஆனால் இப்போது செல்போன்கள் மூலம் அன்றாட குடும்ப பிரச்சனைகள் தெரிய வருகிறது.அதனால் அன்றாடம் மன அழுத்தம்,பயம் பிறகு தற்கொலை.


DO NOT USE CELLPHONE WHILE  "LIVING" ALSO

குரல்கள்  விடும் விஜய் ஆண்டனி



இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் “ என் பாடல்களில் இடையிசையில் இசைக்கருவிகளின் ஒலியை விட ஆண்/பெண் குரலிசை நிறைய வரும் அதற்குக் காரணம் இசைக் கருவிகள் வைத்து இசையமைப்பது ரொம்ப காஸ்ட்லி சமாசாரம்.செலவு அதிகமாகும் அதனால் குரல்களைப் பயன்படுத்தி இசையை நிரப்புக்கிறேன்.”

”பாத்தாலே தெரியுது ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க
நெறப்புங்க...  விஜய் நெறப்புங்க...! பெட்ரோல்,டீசல் வெல ஏறுச்சுன்னா பால்,காய்கறி வெலதான் அதிகமாச்சுன்னா இசைக்கருவிகள் வெலயும் ஏறுது இசைக்கருவி வாசிக்கறவங்களும்  கிடைக்க மாட்டேன்றாங்க”

ரஹ்மான் இசையிலும் நிறைய குரல் இசை வரும்??? கற்பனை வறட்சி? அல்லது டிரெண்ட்? விலைவாசி சத்தியமா கிடையாது.

பெப்பர் அண்ட் சால்டுடன் ஒரு ரோல்(சிவாஜி கணேசன்)

இவரின் 84வது பிறந்த தினத்தின்போது அவரைப் பற்றி நினைவுகள் அலையடித்தது.சிறு வயதில் அவரின் தீவிர ரசிகன்."எங்கே நிம்மதி” பாட்டின் நடிப்பைப் பற்றி பல நாட்கள் brain storm செய்து தூங்காமல் செய்திருக்கிறோம்.குரோம்பேட்டை தவப்புதல்வன் சிவாஜி ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறேன்.

இன்றும் மிகவும் ரசிப்பது அவரின் மிகை நடிப்பு இல்லாத டோப்பா தலை இல்லாத பிளாக் அண்ட் வொயிட் படங்கள்.கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,பலே பாண்டியா,அறிவாளி,சபாஷ் மீனா,புதையல்,ரங்கோன் ராதா,கலாட்டா கல்யாணம்,ஊட்டி வரை உறவு.அந்தக் கால பிளாக்வொயிட் படங்களில் ஒரு இன்னசென்ஸ் இருக்கும். செயற்கைத்தனங்கள் ரொம்ப கம்மி. அதுவே எனக்குப் பிடிக்கும்.

இவர் கிட்டத்தட்ட முந்நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.அதுவே இவருக்கு அழிவு காலம்.கிழ் உள்ள அவரின் சினிமா படங்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?பயப்படாதீர்கள்.டிவி சீரியல்கள் இல்லை.
இதெல்லாம் மத்தியான வேளையில் சேனல்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மாடிவீட்டு ஏழை,ஆனந்தக்கண்ணீர்,என் தமிழ் என் மக்கள்,துணை,பந்தம்,நீதிபதி,சுமங்கலி,நெஞ்சங்கள்,பாரம்பரியம்,இரு மேதைகள்,வம்சவிளக்கு,நீதியின் நிழல்,வெற்றிக்கு ஒருவன்,வா கண்ணா வா,சரித்திர நாயகன்,முத்துக்கள் மூன்று.80-90களில் வந்தப்படங்கள்.

இவர் ஒரு அற்புதமான நடிகர்.பாழாய் போன  டைரக்டர்கள் இவரை மிகை நடிப்பு மற்றும் சூட் கோட் போட்ட 20 வயது இளைஞனாக மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் நடிக்க வைத்து கேலிக்கூத்தாகிவிட்டார்கள் கே.விஜயன்/யோகனந்த்/பாலாஜி போன்றவர்கள்.

கொடுமை என்னவென்றால் இவர் மட்டும்தான் மிகையாக இருப்பார்.சுற்றி நடிப்பவர்கள் இயல்பாக இருப்பார்கள்.

இவர் ஜல்லிக்கட்டு,முதல் மரியாதை ,தேவர் மகன் படங்களில் செய்த ரோல் மாதிரி   வித்தியாசமாக அல்லது தன் பிராண்ட் இமேஜ்ஜை உடைத்து  கெஸ்ட் ரோல்கள் 70வதின் இறுதிகளில் தொடங்கி இருக்கலாம்.எங்கேயோ போய் இருப்பார்.ரசிகர்களும் அடுத்த அடுத்தப்படிக்கு நகர்ந்திருப்பார்கள்.இதை அமிதாபச்சன் இப்போது கடைப்பிடிக்கிறார்.



மேல் உள்ள படத்தில் தோன்றுகிற மாதிரி பெப்பர் அண்ட் சால்டு தாடி,அதே உடை,தோற்றத்துடன் ஒரு ரோல் நடிக்க வேண்டும் என்று என்னுடைய கனவு நிறைவேறவில்லை.


வால்மார்ட் அண்ணாச்சிகளாக:

வால்மார்ட்டினால் பாதிக்கப்பட போவது கிர்ரான கடைகள் அதாவது சின்ன மளிகைச் சாமான் (பொட்டிக்கடைகள்)கள் என்பதுதான் முக்கியம்.விழித்துக்
கொள்வது கடமை.


பொட்டிக்கடைகளாக இருந்தாலும் அண்ணாச்சிகள் முதலில் இந்த பொட்டிக்கடை சிந்தனைகளில் இருந்து வெளியே வரவேண்டும்.ஒவ்வொரு நாளும் உலகம் பலவித மாற்றங்களை மேற்க்கொள்கிறது.ஒரு கார்பரேட் நிறுவனம் போல மார்க்கெட்டிங்(strategy) சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.இவைகளை மறுஆக்கம் செய்யவேண்டும். ஆச்சா போச்சா  காமராஜர் அண்ணாச்சிக் கால டெக்னிக்கெல்லாம் காலாவதி ஆகிவிட்டது.

இப்போது இருக்கும் தலைமுறை ஸ்டைல் ஆகிவிட்டது.வாங்கும் திறன்/முறை மாறிவிட்டது.கழுத்தை அறுக்கும் வியாபாரப்போட்டி.அண்ணாச்சி ஊர்காரப் பையன்கள் வேறு வேலைக்குப் போய்விட்டார்கள்.ஆட்கள் இல்லை.ஜார்கண்ட்,சட்டிஸ்கர்,ஒரிஸ்ஸா பான்பராக்அண்ணா(ஜி) பையன்கள்தான் கிடைக்கிறார்கள்.

எந்த வியாபாரத்திற்க்குமே முன்யோசனை/திட்டம்,தொலைநோக்குப்பார்வை, பணம்,நிர்வாகத்திறன் மிகமிக அவசியம்.முதலில் இவர்கள் ஒன் மேன் ஷோவை விட வேண்டும்.ஒருவரே பல கஸ்டமர்களை அட்டெண்ட் செய்வது.அடுத்து பொட்டிக்கடையிலேயே டிராவல்ஸ்,தண்ணீர் சப்ளை,ரியல் எஸ்டேட்,பால் பாக்கெட் போடுவது தவிர்க்க வேண்டும்.ஆள்கட்டு இருந்தால் உசிதம்.

சுத்தம்/டிஸ்பிளே/வேகம்/பிரஷ்னெஸ் மிக முக்கியமாக கைகொள்ளவேண்டும்.கொள்முதலில் அதிகபட்ச கழிவும்,தரமும்,டோர் டெலிவரியும் செய்துக்கொள்ளவேண்டும்.

இன்னும் சில கடைகள் எடைகற்களையே உபயோகிக்கிறார்கள்.பொட்டலம் கட்டுவது,கடன் கொடுப்பது சுத்தமாக இருக்கக்கூடாது.எல்லாம் பாக்கெட்ஸ்.எனக்கு தெரிந்து 10,8,12 ரூபாய்க்கு எல்லாம்  மளிகைக் கடன்கொடுத்து  3000க்கு கடன் சேர்ந்துவிட்டது ஒரு அண்ணாச்சிக்கு.காரணம் இதெல்லாம் கணக்குவைத்து எழுதமுடியாது.

கால்கிலோ தக்காளி,கொத்தமல்லிக்கெல்லாம் டோர் டெலிவரி கொடுத்தால் வேலைக்கு ஆவது.

எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.

Friday, September 21, 2012

சற்று முன்பு பார்த்த மினி கதைகள்

ஐந்து மினி கதைகள்


அர்த்தராத்திரில யாருக்குடீ டெடிகேஷன்?-1
டிஸ்கி: படத்திற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை

நடுநிசியில்(22.40hrs) திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்தார் சுப்ரமணியன்.உடம்பு முழுவதும் வியர்த்திருந்தது.டிவியை ஆன் செய்தார்.

ஏதோ ஒரு சேனலில் ஒரு டீன் ஏஜ் பெண்(ரொம்ப ஓவராக இளித்தவிட்டு):”இவ்வளவு நேரம் கலாச்சிட்டேன்.சரி... பாட்ட யாருக்கு டெடிகேட் பண்றேங்க” செல்லமாக கேட்டாள்.

பட்டென்று  டிவியை அணைத்தார்.“சனியன்... நேரம் காலம் கிடையாது.டெடிகேஷனாம்...வெட்டி முண்ட” ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தார்.” ஏய்..சொட்டை கெழ பாடு! இது ரீபிட் புரோகிராம்.. லைவ் இல்ல.செத்துப்போன உனக்குதான்  டெடிகேஷன்.”மார்பில் குந்தி உட்கார்ந்தபடி கலாய்த்தாள்.

காலையில்  அவர் இறந்திருந்தார்.அவர் வேட்டியில் அங்கங்கு திட்டு திட்டாக ஈரத்துடன் அவரின் ஆண்மை வீர்யம்.


தெரியும் ஆனா தெரியாது -2

மிகமிக பரபரப்பான சிக்னல்.பச்சை விழ இன்னும் 9 வினாடிகள் இருக்கிறது.”இந்த அட்ரஸ் எங்க இருக்கு”.பக்கத்தில் நிற்கும் இரணடு சக்கர ஓட்டுனர்  இவனைக் கேட்கிறார்.பதிலுக்கு இவ்வளவு நீளமான அசட்டுப் புன்னகையை பச்சை விழும்வரை சிக்னலில் காட்டியவன்  இவனாகத்தான் இருக்கும்.

Rear View Mirror - 3

அது ஒரு ரோட் சைட் கார் பார்க்கிங்.அந்த ஏரியா கல்லூரி மாணவன் ஒருவன் ஒரு காரை நோக்கி வருகிறான்.அது அகலமான  Rear View Mirror உள்ள கார்.அதை நேராக்கி குனிந்து அவசர அவசரமாக தலைசீவி மிகமிகமிகமிக அழகாகிக் காத்திருக்க தொடங்குகிறான்.

எதிர்பார்த்தபடி  புன்னகையுடன் அந்த டுயூஷன் போகும் பெண் அந்தக் காரை நெருங்குகிறாள்.கிட்ட வரவர தன் இயல்பான உடல்மொழி செயற்கையாகிறது.செல்போனில் ஏதோ கவனம் செலுத்துவது மாதிரி நடித்து அவனைக் கடக்கிறாள்.அதே புன்னகை ஆனால் செல்லமும் வெட்கமும் கோபமும் கலந்துக்கட்டியாக.

மாணவன் பூரிப்படைந்து மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து தலைசீவி அழகாக்கி கண்ணாடியை மடித்துவிட்டு கிளம்புகிறான்.

அந்தப் பெண் டுயூஷன் முடிந்து திரும்பி அந்த காரை நோக்கி ஒரு புன்னகையுடன் வருகிறாள்.கண்ணாடியை நேராக்கி குனிந்து “வெவ்வவ்வேவே” முகத்தைக் அஷ்ட கோணாலாக்கி அழகுகாட்டிவிட்டு கண்ணாடியை மடித்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிறாள்.


சொதப்பல் - 4

மேலே உள்ள இரு சிறுகதைகளயும் முதலில் கவிதையாக முயற்சி செய்துவிட்டு கவிதை ஆகாமல் எங்கேயும் எப்போதும் சிறுகதையாகவே ரொம்ப நாள் (40) தோற்றம் கொண்டு பெண்டிங் பைலில் இருந்தது.

எவ்வளவு அடித்தும் கவிதையாக கனியவில்லை.ஒரு உரைநடையை பத்துவாட்டி திருப்பி திருப்பி திருப்பி எழுதினால் அது கவிதையாகிவிடும் என்பது இதற்குப் பொருந்தாது.

பின் குறிப்பு -1:

”Objects in mirror are closer than they appear" என்ற வரியை மனதில் வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு கவிதை எழுத வேண்டும் என்கிற பிடிவாதம்தான் காரணம்.

பின் குறிப்பு -2:
”Objects in mirror are closer than they appear"  இந்த வரியை “Rear View..." கதைக்கு கடைசி வரியாக வைத்தால் அப்படியே ஒரு தூக்குதூக்கிவிடும் என்று நண்பர் சொன்னதை  நான் ஏற்கவில்லை.

பிரசாதம் -5

ராதிகா  ரொம்ப டென்ஷனாள்.காரணம் எதிர்வீட்டு தெலுங்குமாமி கொடுத்த பலவித ஷேத்ர சாமி (தெற்கு+வடக்கு) பிரசாதங்கள் கலவையாக.பிரசாதமாக தரப்படவில்லை.மீந்துப் போனது தரப்பட்டிருக்கிறது.பிரிஜ்ஜில் வைக்கப்பட்டது.உள் சாப்பிட உகந்தது அல்ல.

ஒரே ஒரு துளி குங்குமம் மட்டும்  குத்துமதிப்பாக ஒரு சாமியை நினைத்துக்கொண்டு நெற்றியில் இட்டுக்கொண்டாள்.எப்படி டிஸ்போஸ் செய்வது?அஃறினண அல்லது உயர்தினணகளுக்கு தள்ளிவிட மனசாட்சி அனுமதிக்கவில்லை.திருப்பிக்கொடுக்க முடியாது.

ஒரு சுலப வழி இருக்கிறது.ராதிகா என்ன செய்யப்போகிறாள்???தெலுங்கு மாமி கும்பிட்ட எல்லா ஷேத்ரசாமிகளும் ரொம்ப ஆர்வமாக ராதிகாவைக் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

ரெண்டு வேளையாக பய பக்தியுடன் வாயில் வைத்து முழுங்கினாள்.கடவுள்கள் அதிர்ந்தார்கள்.அடி.. மக்கே! இதற்கும் காலாவதி தேதி உண்டு அதன்படி இது குப்பைத்தொட்டிக்குதான் போகவேண்டும்.தெலுங்கு மாமி சாமிகள் ராதிகாவைத் திட்டினார்கள்.

குங்குமம் இட்டுக்கொள்ளும்போது கூட க்ளூ கொடுத்தேனே என்று
திருப்பாச்சூர் தங்காதளி அம்மன் தன்னை ரொம்ப நொந்துகொண்டாள்.

Thursday, September 6, 2012

நீதானே என் பொன் வசந்தம்-பாடல்கள் ஒரு பார்வை



"நீதானே என் பொன் வசந்தம்" 1982ல் வெளிவந்த "நினைவெல்லாம் நித்யா"படத்தின் ஒரு சூப்பர் மெலடி.இப்படத்தின் பாடல்கள்புது விதமான கிளாசிகல் பரிமாணத்தில் போடப்பட்டு இசை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது.தமிழ்த் திரை இசையில் ஒரு மைல் கல்.

அப்போதேல்லாம் காத்திருந்து காத்திருந்து ரேடியோவில்தான்  என்னால் கேட்க முடியும்.



முப்பது வருடம் கழித்து  இதே பாடலின் டைட்டிலில் கெளதம் இயக்கத்தில் ஒரு படம்.இசை இளையராஜா.கெளதமிடம் ஏன் ராஜா என்றால்“ "My music was defined by Raja Sir" என்கிறார்." I missed the bus ...I could have joined Raja  much earlier but I was very shy of approaching him... I don"t know why" என்றும் சொல்கிறார்.

வாரணம் ஆயிரம் படத்திலேயே ராஜாவின் பாடல்கள் பாடப்பட்டது.


இளைஞர்களின்  கனவு டைரக்டர் ராஜாவுடன் இணைவது எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதுவும் புடபெஸ்ட் இசைக்கலைஞர்களை வைத்து லண்டன் ஸ்டியோவில் ராஜா சூட்டுடன் லைவ் ரிகார்டிங் என்றதும் இன்னும் எதிர்பார்ப்பு எகிறியது.


கடந்த 12 வருடமாக புதிய தலைமுறை(new generation) இயக்குனர்களுடன் சேர்ந்து வேலை செய்வதில்லை.நல்ல கதையோடு வரும் புது  இயக்குனர்களை ஊக்குவிப்பதாக அய்யன்,தாண்டவகோனே,செங்காத்து பூமியிலே,மயிலு,அழகர் மலை போன்ற படங்களும் “ஒன்லைன் ஸ்டோரி யோசிக்கறதுக்கு முன்னமே நீங்கதான் இசைன்னு என் கைல பச்சைக் குத்திக்கிட்டேன்” என்று வரும் இயக்குனர்களுக்கும், இவரை விட்டால் வேற ஆளே கிடையாது என்கிற படங்களுக்கும் (விருமாண்டி,பழசி,நான் கடவுள்,பிதாமகன் நந்தலாலா,ஸ்ரீராமஜெயம்,இவன்,பாரதி)இசையமைத்து வந்தார்.

முதன்முதலாக,  இளையதலைமுறையை கையில் வைத்திருக்கும் மற்றும் ஒரு காதல்கதை அதுவும் ராஜாவின் பழைய படத்தின் டைட்டில் மற்றும் கதாநாயகி பெயர் (நித்யா வாசுதேவன்) தொடர்புடைய கதையின் இசைக்கு ராஜா பொறுப்பேற்கிறார் என்பது ஒரு புது விஷயம்.

எதிர்பார்ப்பு மற்றும் எகிறுவது இருந்தாலும் சில லாஜிக்கான கேள்விகள் இருக்கு.

இசைஞானி இதுவரை போட்டது 5500 மேற்பட்ட பாடல்கள். எவ்வளவு வகையான உணர்ச்சிகள் அதிலும் அரைத்தமாவையே அரைத்த உணர்ச்சிகள்.2000-2012 வரையிலுமே கிட்டதட்ட 65 படங்கள்.கார் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மாதிரி பலவித கலவைகளில் எல்லா உணர்ச்சிகளுக்கும் பாட்டு போட்டாகிவிட்டது.கட்டம் கட்டமாக தாண்டி வந்து ஒரு காட்டு காட்டியாகிவிட்டது.

இப்போது மீண்டும் ஒரு காதல்கதை.பழையபாடல்களின் சாயல் இருக்காதா? அதே குறுக்கும் நெடுக்கும் பின்னணியிலும் பலவித இசைக்கருவிகளின் பின்னல்களா? அதே  பல்லவிகளா?சரணங்களா?மிச்ச மீதி ஸ்டாக் இருக்கா?

சாயல் வராமல் இருப்பது உலக மகா கஷ்டம்.அதை நிறைய தவிர்க்கிறார் தன் திறமையால்.ஆனாலும் அங்கங்குத் தலைக்காட்டும்.

பாடல்களுக்கு வருவோம்...

”நீதானே என் பொன்வசந்தம்” பாடல்களுக்காக லண்டன் போவதற்கு முன் ஹோம்வொர்க் செய்துவிட்டுதான் போய் இருக்கிறார்.யோசித்தபோது என் கவனத்தில் உதித்தவை:

1.மூன்று பாடல்களில் ராஜா ராஜாவை விட்டு விலகி இசைஅமைத்திருக்கிறார்.ஒரு அன்னியத்தனம் (alien)ஆனாலும் ராஜா மின்னல் அடித்துப் போகிறார்.

2.இது எந்த இசையும் கிடையாது இது உங்கள் இசை என்றபடி இருக்கிறது

4.சிம்பனியை மேக்சிமம் பின்னணியில் தோய்த்துக்கொடுப்பது.

5.துல்லியமான  பளிச் பளிச் சவுண்ட் ரிகார்டிங்.

மற்ற இசை அமைப்பாளர்களின் அடுத்த தலைமுறை பாடல்களாக கடந்த 10-15 வருடங்களாக ஆண் அல்லது பெண் பாடும் பாடல்கள் ஸ்டைல் டச் அல்லது பாப் டச்சோடு வருகிறது.ஆனால் 95% பாடல்கள் ஆத்மா இல்லாமல் பிளாஸ்டிக் உணர்ச்சிகளோடு வந்து பயமுறுத்துகிறது.இசையும் தோதாக இல்லாமல் உறுத்துகிறது.

பின் வரும் ராஜாவின் மெட்டுக்களில் வளைவு நெளிவு மற்றும் ஆத்மா எங்கு வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளேன்.

மொத்தம் எட்டு பாடல்கள். பாடல்களை பார்க்கலாம்.நா.முத்துக்குமாரின் வரிகள் எனக்குப் பிடித்துவிட்டது.

ராஜாவின் பாடல்களை கேட்கும்போது படிப்படியாக உள்ளே இறங்கி  வாழ்ந்துவிட்டு வெளியே வரவேண்டும்.இசையில் நிறைய புத்திசாலித்தனம் இருப்பதால் அனுபவித்துக் கேட்கவேண்டும்.


முதல் முறை பார்த்த ஞாபகம்:


Hey Goutham!This is new generation  romantic singing...! Have it ! என்கிறது பாடல்கள்.

பாடியவர் சுனிதி செளகான்.என்னை ஆகார்ஷித்து அள்ளிக்கொண்ட பாடல்.மேடம் குரல் அட்டகாசம்.soulful stylish singing! Real stunner from Maestro Raja.

ஒரு விதமான தேவதை பாடல்!பின்னணி இசை விறுவிறு என்று மிளகு குத்தலுடன் திகிலாக போகிறது?காதல் வயப்படுவது மாதிரி உணர்வு.”நீதானே என் பொன் வசந்தம்”  கோரஸ் அழகு சேர்க்கிறது பாட்டிற்க்கு.ஒரே ஒரு நீண்ட சரணம்.முழுமூச்சில் பாடி அசத்துகிறார்.அதுவும் இதற்கு காட்சி எப்படி இருக்கும். இது மேடையில் பாடும் பாடல்?

1980லும் இதே புலம்பல் ஆனால் அடக்கஒடுக்க ஹோம்லி புலம்பல்”தூரத்தில் நான் கண்ட உன் முகம்” (நிழல்கள்).உருமாற்றம்.

எங்கு ஆத்மாவை  (எனக்கு)  வருடுகிறது?

“இதயத்தில் ஏனோஓஓஓஓஓஓஓஓ பாரம்.... விழியினில் ஏனோ ஓஓஓஓஒ ஒரு ஈரம்....”
“ஊடலில் போனது காலங்கள்...தேடலில்.......இல்லையே......அடையாளங்களா”வரிகள் முடிந்து “நீதானே என் பொன் வசந்தம்” கோரஸ் அட்டகாசம்.

பாடல் சடக்கென்று முடிந்துவிடுகிறது.

சற்று முன்பு பார்த்த: பாடியவர் NSK Ramya

சற்று முன்பு பார்த்த ஞாபகம்
காதல் பிரிவு/ஏமாற்றம் அல்லது தொலைந்துபோன காதலை மீட்பது மாதிரி பாடலில் உணர்வு.இதுவும் ஒரு தேவதை பாட்டு(angel singing.) சுனிதியை விட நல்ல உச்சரிப்பு.பழைய சிரிப்பு நடிகர் என் எஸ் கிருஷ்ணனின் பேத்தியாச்சே.

பாடல் சிம்பனியில் பின்னப்பட்டிருக்கிறது.கனவுலகில் மிதக்க வைக்கிறது.போதையான குரல்.படுத்துகிறது.

ஆத்மாவை வருடும் இடங்கள்:

திடுக்கென்று பின்னணி தாளத்துடன்” நெஞ்சம் துடிப்பதும்... மின்னல் அடிப்பதும்”

’தன்னந்தனி காஆஆஆஆஆட்டில் இன்ன்ன்பம் காஆஆஆஆன  வாஆஆஆடா....ஆஆஆ....”

”தொட்டுத் தொட்டுப்பேஏஏஏஏஏஏசும் உந்ந்ந்.......தன் கைஇ இ இ இகள் எங்ங்ங்ங் கேஏஏஏஏஏஏ...” வேறு உலகத்திற்குக் கொண்டுபோய் தொப்பென்று கிழே போடுகிறார்.இரண்டு இடங்களிலும் இசை பின்னிப்பிணைகிறது.

ஷ்ரேயா கோஷால்/சாதன சர்க்கம் இருவரையும் தவிர்த்தது ரொம்ப சந்தோஷம். இந்த பீல் சத்தியமாக வராது.

இரண்டு பாடல்களிலிருந்தும் மீண்டு வருவதற்கு கொஞ்ச நேரம் ஆகிறது.

காற்றைக் கொஞ்சம்:
ஆரம்ப ஹம்மிங்கே காற்றோடு பிரயாணம் செய்யும் உணர்வு.தாமரைக்கொடி மற்றும் மலையாள கரையோரம் பாடல்களின் தென்றலும் விசுகிறது.ராஜாவின் அட்டகாசமான இசைக்கோர்வை

ஆத்மா:

(முதல் சரணம்) சாத்தி வைத்த வீட்டில் ..தீபம் ஏற்றி வைக்க நீ வா வா ..மீதி வைத்த .......... பேசி தீர்க்கலாம்.. ” (இரண்டாவது சரணம்)என்னை இன்று மீட்கத்தான் ...உன்னை...”

இரண்டாவது இடைஇசையில் வரும் ஹம்மிங்கும் புல்லாங்குழலும்...ரம்யம்.

என்னோடு வா வா:
இந்தப்பாட்டு யூத்துகளின் செல்லப்பாட்டு ஆகிவிட்டது.கார்திக்கின் மென்மையான ஸ்கூல் பையன் குரலில் ரொம்ப சிநேகமாக இருக்கிறது. ராஜாவிற்கு இதெல்லாம சர்வ சாதாரணம்.”என்னோடு .... வா வா என்று....போகமாட்டேன் “ என்று முடித்தவுடன் புறப்படும் கோரஸ் வயலின்/சிந்த் மற்றும் முதல் சரணம் வரும் வரை இசை சூப்பர்.

ஆத்மா:

”சின்னப் பிள்ளை போல நீயும் ,... என்னைவிட யாரும்.... செல்ல கேட்டுக்கொண்டால்”

சொல்லி அடித்திருக்கிறார் மேஸ்ட்ரோ!

சாய்ந்து ...சாய்ந்து:

இதுவும் சிம்பனியில் தோய்க்கப்பட்ட இனிமையான சிம்பிள் மெலடி.யுவன் பாடுவதை என்னால் ரசிக்க முடியவில்லை.அதனால் மனவாடு பாட்டான ஏதி ஏதி (Yeto Vellipoyindi Manasu)(ஷான் - ரம்யா) கேட்டேன்.அதில்மோகனம் கிளாசிகல் டச் இருக்கிறது.தமிழில் வேறு டச் வருகிறது.இரண்டாவது இடையிசை வெஸ்டர்ன் கிளாசிகள் அட்டகாசம்.


கேட்க கேட்க மனதிற்கு நெருக்கமாகிறது.


பெண்கள் என்றால்:
என்னப்பா இது ரஹ்மான் பாட்டை ஏன் யுவன் பாடுகிறார் என்று திடுக்கிட செய்கிறது.இது நம்ம ஏரியா இல்லையே.”என்னடி மீனாட்சி”பாட்டின் 2012 வெர்ஷன்??.ரஹ்மானை யுவன் இமிடேட் செய்வதை விடவேண்டும்.எவ்வளவு பாடகர்கள் இருக்கிறார்களே. ஏன் யுவன்?

வானம் மெல்ல:
வித்தியாசமான மிகவும் மென்மையான மெலடி.அற்புதம்.ராஜா பாடுவதால் ஏறகனவே கேட்ட மாதிரி இருக்கு.பின்னணி இசை மாய உலகத்திற்கு கொண்டு போகிறது.Bela Shindeவும் நன்றாக பாடி இருக்கிறார். ஆனால் குரல் சில இடங்களில் கீச்சிடுகிறது.

“தென்றல் வந்து தீண்டும் போது” பாட்டை வேறு மெட்டில் பாடுவது மாதிரி ஒரு பீலிங்?


கேட்க கேட்க மனதிற்கு நெருக்கமாகிறது.

புடிக்கல மாமு:

ராக் அண்ட் ரோல் பாணியில் அமர்க்களமாக ஆரம்பம்.சுரஜ் ஜகன் குரல் அற்புதமாக இருக்கிறது.குத்துப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட்???இவருடன் கார்த்திக்கும் பாடுகிறார். முதல் பாதி ஒரு மாதிரி மெலடி& ரிதம் அடுத்த பாதி வேறு மாதிரி மெலடி&ரிதம்

டெயில் பீஸ்: எந்த படம் பாட்டு ரிலீஸ் ஆனாலும்  ”எண்பதுகள்  பாடல் பீலிங் மாதிரி வராதுங்க.ராஜா அதை மீட்க வேண்டும்” என்று ஒரு கோஷ்டி சொல்லிக்கொண்டிருக்கிறது.

இப்படி பேசுவது வன்முறை.எப்படி முடியும்? 1980க்கு வயது இன்று 32.அதெல்லாம் ராஜாவின் பொக்கிஷங்கள்.

நான்  பதிலுக்கு 1960 பீலிங்கை மீட்டு எடுக்க வேண்டும் என்கிறேன் ."தன்னிலவு தேன் இறைக்க”(படித்தால் மட்டும் போதுமா) ,”அன்பாலே தேடிய செல்வம் “(தெய்வப்பிறவி),"கலையே என் வாழ்கையின்”(மீண்ட சொர்க்கம்).1960 பீலிங்தான் 1980 மீட்டெடுக்கப்பட்டது.மெலடி எங்கும் கைவிடப்படவில்லை.


Thursday, August 23, 2012

”ஆண்பாவம்” ரீமேக்??வேணாம் ..உட்ரு..பாவம்டா!

கொஞ்சம் வருடம் முன்பு பழைய பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பண்ணி காவியமாக்கி இளைய தலைமுறை கேட்டு புல்லரித்து புளாங்காகிதம் அடைந்து இரும்பூது எய்தினார்கள்.

ஒரிஜினல் மான்விழியாள்

அதில் ஒன்று அன்புள்ள மான்விழியே.இந்த அற்புதமான மெலடி(எம் எஸ் வி)ஒரிஜினலில்(குழந்தையும் தெய்வமும்) அடக்க ஒடுக்கமாக காதலர்கள் பாடினார்கள்.

 ரீமிக்ஸில் (ஜக்குபாய்) பிட்டுப் பட ரேஞ்சில் பாடப்பட்டது.
அன்புள்ள மான்விழியாள் ஜட்டியோடு வந்துப் போனார்.புல்லரித்தார்கள். நானும்தான்.எவ்வளவு பேருக்கு இதன் ஒரிஜனல் தெரியும்.

இந்தப் பாட்டை அதே ஒரிஜினல் மெலடியுடன்இப்போது போட்டால் படு பத்தாம்பசலித்தனம்.போட்டாலும் நடுவில்  ah buddy...why why this a ....ah buddy...why why this a....ah buddy...why why this a" என்று கடுக்கன் போட்ட சாயத்தலைகளின் குரல்கள் வருவது மாறி போடவேண்டும்.

ஜக்குபாயின் மான்விழியாள்

பாட்டில் நடந்தது படத்திலும் நடக்கப்போகிறது.நடந்தது.


பாலைவனச்சோலை படத்தை ரீமேக் செய்தார்கள்.அது ஹீசைன் போல்ட் வேகத்தில்  600 நாள் ஓடி  ஒரிஜினலயே பீட் செய்தது. காரணம் படத்தின் காலக்கட்டம் மற்றும் அதன் அன்றைய மொழி(நேட்டிவிட்டி).1981ஐ  2009க்கு கொண்டுவரமுடியாமல் சொதப்பினார்கள்.28 வருடங்களில் எவ்வளவு மாறி விட்டது.அதை சுத்தமாகப் புரிந்துக்கொள்ளவில்லை.


ரீமிக்ஸின் அண்ணான ரீமேக்கில் இப்போது பல படங்கள் இருக்கின்றன.

தில்லுமுல்லு(1981),ஆண்பாவம்(1985),மன்மத லீலை(1976) படங்கள் ரீமேக் ஆகுதாம்.ஆண்பாவம் படத்தை என்ன மதிப்பில் ரீமேக் செய்கிறார்கள்?அதில் இரண்டு அண்ணன் தம்பி அராத்துக் கேரக்டர்கள் ஸோ வீ ஆர் ஆல்சோ அராத்ஸ் என்று  ரீமேக்கில்  உதயநிதியும் சந்தானமும். 2012க்கு தோதாக மாற்றி சந்தானம் வளவளவென்று பேசி இம்சைப் படுத்துவார்.

ஆனால் அந்தப் பழசில் இருக்கும் இதில் ஆத்மா வருமா?பழசை நன்றாக உள்வாங்கி அதில் இருக்கும் நேட்டிவிட்டியை இப்போதைக்கு மாற்றி வெற்றிப்பெற்றால் சந்தோஷம். ஆனால் முடியாது.இது  கதைப் பஞ்சத்திற்காக இந்த ரீமேக். ”நாங்க அராத்து” என்கிற ஒன்லைனுக்காக ரீமேக்.சார்லிசாப்ளின் படங்களை 2012க்கு ஏற்றற்போல் ரீமேக் செய்ய முடியுமா?

ரீமேக் பணால் ஆச்சுன்னா நாரோட சேர்ந்து பூவும் நாறும்.

ஆண்பாவத்தில் அராத்துத்தனம் இருக்கிறது.ஆனால் கதையோடு ஒட்டி  ஒரு மொழி பேசுகிறது.இதில் மற்றும் முக்கியமான விஷயங்கள்.

1.யதார்த்தமான நகைச்சுவை
2.கிராமப் பின்னணி
3.சிறந்த திரைக்கதை
4.வித்தியாசமான தலைப்பு(அப்போதைக்கு)
5.லொகேஷன் மற்றும் செட்டுக்கள்
6.ரேவதி/சீதாவின் இயல்பான நடிப்பு/சீதாவின் வித்தியாசமான அறிமுகம்
7.இளையராஜாவின் பிரமிக்க வைக்கும் பின்னணி இசை


இது மிக சிறந்த தமிழ்ப் பட வரிசையில் ஒன்று.குறைகள் இருந்தாலும் சொல்ல வந்ததை தெளிவாக சொன்னார்கள்.200 நாளுக்கு மேல் ஓடியது.

வி.கே.ராமசாமி வாழ்ந்திருப்பார். கேரக்டர் பெயர்கள் எல்லாம் ஒரிஜினல் பெயர்களே.சீதா,ரேவதி,ராமசாமி,பாண்டியன் இப்படி.இதில் கார் ரிவர்ஸ் காமெடி (பாலத்துல முட்டுதான்னு பாரு)அப்போது ரொம்ப பிரபலம்.

அசோக்குமாரின் கேமராவில் சில கவித்துவமான காட்சிகள் உண்டு.

1.ஒரிஜனல் மாப்பிள்ளை தான் இல்லை என்றதும் சுவற்றில் உயரம் அளப்பதற்கு போடப்பட்ட கோட்டைப் பார்த்துக்கொண்டே அவமானத்தில் வெளியேறுவது.

2.கடியாரத்திற்காக சண்டைப்(வில்லனுடன்) போட்டு பிடுங்கிய அடுத்த நொடி அது ஓடுகிறதா என்று பார்ப்பது.(சீதாவிற்கு ஒரு மணிக்கு ஒரு தரம்  நினைவுப்படுத்த அலாரத்தோடு பாண்டியன் கொடுத்தது)

3.சீதா-பாண்டியன் காதல்-மோதல் காட்சிகள் அதன் பின்னணி இசை


யதார்த்தமான நகைச்சுவை:

1.(பெண் பார்க்கும் வைபவத்தில்) சீதா: யாரு மாப்பிள்ளன்னு தெரிஞ்சுகிறது?
தோழி: நெத்தில மாப்பிள்ளன்னு எழுதி ஒட்டி இருக்கும்.

2.கார் ரிவர்ஸ் எடுப்பவர்: கார் பின்னாடி பாலத்துல முட்டுதான்னு பாரு.
பாண்டியராஜன்: வாங்க... இன்னும் வாங்க...(டமால் டப்பு.கார் பாலத்தை முட்டுகிறது) முட்டிச்சிங்க.

3.சீதாவின் அம்மா: ஏண்டி  ஆத்திலந்து தண்ணீர் கொண்டு வர லேட்டாகுது?இப்பெல்லாம் உன் காலு ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிச்சு.

4.ஜனகராஜ்(ஹோட்டல் ஓனர்) சரக்கு மாஸ்டரைப்(உசிலை மணி) பார்த்து : உன் உடம்பைக் குறைக்க ஒரு சான்ஸ்... ஆயிரம் லட்டு செய்யறதுக்கு ஆர்டர் வந்திருக்கு

இளையராஜாவின் பின்னணி இசை






Thursday, July 19, 2012

மனசுல பெரிய ராஜேஷ்கன்னான்னு நெனப்பு

70களில் யாராவது ஒரு இளைஞன் ரொம்ப ஸ்டைல் காட்டினால் “மனசுல பெரிய ராஜேஷ்கன்னான்னு நெனப்பு” என்று கலாய்ப்பார்கள்.அந்த அளவிற்கு ஹிந்தி நடிகர் ராஜேஷ்கன்னா தமிழ்நாட்டில் புகழ் பெற்றிருந்தார்.

இந்தியா முழுவதும் பெண் ரசிகர்கள் அதிகம்.தமிழ்நாட்டில் கொஞ்சம் ஸ்பெஷல்.

அந்தக் காலத்தில் சென்னை தி.நகர்  ஹோட்டல்  ஒன்றின் வாஷ் பேசின் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகில் இப்படி ஒரு அறிவிப்பு நான் பார்த்திருக்கிறேன்.”நீங்கள் ஒரு ராஜேஷ்கன்னாதான்.தயவு செய்து இங்கு தலை சீவாதீர்கள்”.

இப்போது மாதிரி சிக்ஸ் பேக்ஸ் அல்லது எய்ட் பேக்ஸ் உடம்பில் ஏற்றி macho லுக் இல்லாமல் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர்.ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் அலுங்காமல் நலுங்காமல் மைக் மோகன் மாதிரி நடித்துவிட்டுச் செல்வார்.இங்கு அதைத் “தத்தித்தனம்” என்று சொல்வோம்.இவரின் தலைசாய்த்தல் மற்றும் சிறு புன்னகை ரொம்ப பேமஸ்.

நம்ப ஊர் ஏ.வி.எம்.ராஜனுக்கு இவரின் பாதிப்பு உண்டு????

இவர் அஞ்சு மகேந்திரா என்கிற பெண்ணை ரொம்ப டாவடித்துவிட்டு தடால் என்று கைவிட்டு டிம்பிள் கபாடியாவைக் கைப்பிடித்தார்.அஞ்சு மகேந்திரா நொந்து நூலானார்.

இவரை நான் அறிந்தது இவர் படத்தின் பாடல்கள் மூலம்தான்.எல்லாம் மெலடி.சிவாஜிக்கு டிஎம்எஸ் எப்படியோ அப்படி இவருக்கு கிஷோர் குமார்.கன்னபின்னாவென்று ஒரு கெமிஸ்ட்ரி(பிரமை??) இருவருக்கும்.ராஜேஷ்கன்னாவே சொந்த குரலில் பாடுவது மாதிரியே இருக்கும்.முக்கியமாக Yeh Jo Mohabbat Hai  (Kati Patang)என்னும் பாடல் இவரே பாடுவது மாதிரி இருக்கும்.

Kishore
ஹிந்தியில் சுத்தமாக ஒரு அட்சரம் கூட தெரியாமால் "Daag" என்ற படம் மூன்று முறை பார்த்தேன். காரணம் அதில்”Mere Dil Mein Aaj Kya Hai" வரும் இனிமையான பாடல்.”ரூப்பு தேரா மஸ்தானா”(ஆராதனா) தமிழ் நாட்டில் சூப்பர் ஹிட்.


படங்களில் மல்டி ஸ்டார் ஆக்டிங் டிரெண்ட் வந்ததும் இவருக்கு கொஞ்சம் மவுசு குறைய ஆரம்பித்தது. இவர் கொஞ்சம் தனிதன்மை கொண்டவரால் இவர் மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

இவருக்கு இன்னொரு சிறப்பு உண்டு “A" எழுத்தில் ஆரம்பிக்கும் படங்கள் நிறைய உண்டு.Aaradhana,Aap Ki Kasam,Anand,Amar Deep,Ajnabee,Adhikaar,Avishkar,Aanchal.

இவரின் பாடல்களைக் கேட்க:

http://www.saavn.com/s/#!/play/featured/hindi/Tribute+to+Kaka

சின்ன வயதில் எப்போவோ ஒரு மத்தியான வேளையில் பொட்டிக்கடை டிரான்ஸிஸ்டரில் கேட்ட “Kora Kagaz Tha Yeh Man Mera” ஆராதனா படப் பாடல் நினைவில் அலையடிக்கிறது.


Wednesday, July 11, 2012

பள்ளிக்கருகில் எரிந்த பிணங்கள்

பள்ளிக்கருகில் அல்லது கோவிலுக்கருகில்  டாஸ்மாக் இருக்கிறது என்று மக்கள் அடிக்கடி  புலம்புவதையும் போராடுவதையும் பேப்பரிலும் டிவியிலும் படிக்கிறோம் பார்க்கிறோம்.ஆனால் என் பள்ளிக்கருகில் டாஸ்மாக் இல்லை சுடுகாடு இருந்தது.ரெண்டும் ஒண்ணுதான்????


சுடுகாட்டுக்கருகில்பள்ளி இருக்கிறதே என்று யாராவது அப்போது புலம்பினார்களா?படித்த பள்ளிக்கருகில் ரொம்ப ஆக்டிவான சுடுகாடு.நினைத்தால் deadly ஆக இருக்கிறது.

வெகு தூரத்தில், முக்கால்வாசி மதியத்தில்,” டகர டகர டகர டகர...”என்று பொடிப்பொடியாக சாவு மோளம் அடிக்கப்படும் சத்தம் நெருங்க ஆரம்பிக்கும்.கூடவே திகிலான ”புவ்வ்வய்ய்ங் புவ்வ்வய்ய்ங் ”சீவி சீவி வரும் ஊதல்.”விஷ்க் விஷ்க் விஷ்க்” இடை இடையே சீட்டி.கேட்க ஆரம்பித்தவுடன் வகுப்பில் ஒரு மரண அமைதி நிலவும்.திகிலுடன்  மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஒட்டியவாறு உட்கார்ந்துக்கொள்வோம்.எல்லாம் மண் தரைதான்.
தகனம் நடைபெறுகிறது-மணிகர்ணிகா காட் -காசி
ஆசிரியர் மூட் அப்செட் ஆகி புத்தகத்தை மூடி வைத்துவிடுவார்.அடுத்த நிமிடம் ”ஏலே அது ஒண்ணும் ஜெய்யாது.அது கூட வரானுவ பாரு அதுங்கதான் வெசம்.. குலிப்பறிப்பானுங்க”என்பார்.


சில மணி நேரத்தில் திகுதிகு தீயில் பிணங்கள்  எரிந்தவாறு பள்ளி முழுவதும் புகை அப்பும்.பச்சைத் தசைகள் எரிந்து குமட்டும் நாற்றம்.பிணம் சூடு தாங்காமல் “அய்யோ அம்மா அய்யோ அம்மா” என்று கத்தியவாறு எங்களை நோக்கி ஓடி வருவது மாதிரி பிரமை ஏற்பட்டு திகிலடிக்கும்.


ஆனால் இதெல்லாம் பள்ளி ஆரம்பித்த புதிதில்.பிறகு இதெல்லாம் பழகிப் போய் “டகர டகர டகர டகர...”தாளத்தை ஆர்வமாகக் கற்றுக்கொண்டோம்.இது கிழடா குமரனா ஆணா பெண்ணா என்று எரியும் பிணங்களைப் பார்த்தவாறு படிக்க ஆரம்பித்தோம்.குழந்தையாக இருந்தால் சீக்கிரம் முடிந்துவிடும்.புகை மண்டாது.

எல்லா ஜாதிகளின் சம்பிராதயங்களை தெரிந்துக் கொண்டோம். கிட்டத்தட்ட 50-60 பிணங்களின் புகையை சுவாசித்திருக்கிறோம்!காசியில் இருந்தாலாவது புண்ணியம் உண்டு.


பிறகாலத்தில் சித்தர் பாடல்களில ஆர்வம் வந்தது “இதோட” இன்ஸ்பியரேஷனாக கூட இருக்கலாம்.


“மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து 
வளமான சீவனென்னுந் சூத்திர மாட்டித் 
திரைக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே 
தேகம் விழுமென்று தெளிந் தாடு பாம்பே”


இந்தப் பள்ளி குரோம்பேட்டை ராதா நகரில் (மெயின்) இருந்த வெங்கடேஸ்வரா பள்ளிதான். குரோம்பேட்டைக்கும் பல்லாவரத்திற்க்கும் இடைப்பட்ட இடத்தில் இதன் பிரான்ஞ்ச்.பக்கத்தில் சுடுகாடு. மழை வந்தால் ஏரி ஆகிவிடும். பள்ளி இங்கு மிதந்தக்கொண்டிருக்க பள்ளி ராதா நகருக்கு இடம் பெயர்ந்துவிடும்.ஏரி வற்றியவுடன் மீண்டும் சுடுகாடு.


”ஏரிக்கரை ஸ்கூல்” என்று அழைப்பதுண்டு.


பள்ளியிலிருந்து சுடுகாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த கோணம் போய் சுடுகாட்டிலிருந்து நெய் பந்தம் பிடித்தபடி  பள்ளியைப் பார்வையிட்ட நாள் ஒன்று வந்தது. அது என் தாத்தா இறந்து போய் அங்குதான் தகனம் நடந்தது.


அப்போது ஓடும்  மின்சார ரயிலில் இருந்து பார்த்தால் ஏரி பெரிசாகத் தெரியும்.பெருமழைப் பெய்தால் தண்டவாளம் வரை தண்ணீர் அலை அடிக்கும்.அதில் மிதந்தவாறு சில வீடுகள்.அதிலும் வழக்கமான கிறிஸ்துவ ஜப வீடு ஒன்றும் உண்டு.

இப்போது ஏரி இல்லை.ஏரி ”டகர டகர டகர டகர டகர...புவ்வொய்ங் புவொய்ங்” ஆகிவிட்டது.சுடுகாடு? வெங்கடேஸ்வரா பள்ளி?




Tuesday, June 12, 2012

நித்தியானந்தா,மகான்,சாமியார்,பீடாதிபதி,பாபா,குருஜி பின்னே துறவும்

பல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துறவி என்றால் எல்லாவற்றையும் துறந்து தன்னைத்தானே அறிந்து (இதுதான் அது. அதுதான் இது) உடம்புலிருந்து விடுபட்டு மக்களிடமிருந்து விலகி பிரபஞ்சத்தில் ஐக்கியமாதல்தான்.இது ஒரு நிலை.முக்கியமாக “நான் யார்” என்பதை அறிந்தவர்கள்.

(”நானார்? என் உள்ளமார்? ஞானங்களார்? என்னை யாரறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்”) - திருவாசகம்

இப்படி விடுபடுவன் “சீன்” அல்லது “பில்ட் அப்” கொடுத்து பிரபஞ்சத்தில் ஐக்கியமாவதில்லை.அதைப் பற்றியும் கவலைப்பட்டதும் இல்லை.ஊர் பேர் தெரியாமல் தன்னை அறிந்தார்கள்.

18ஆம் நூற்றாண்டில் வந்த அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் சம்பிராதாயத்திலிருந்து சற்று விலகி காவி தவிர்த்து எளிமையான வெள்ளுடை உடுத்தி மனதில் துறவு பூண்டு மக்களை சாதி,சமய பேதங்களற்ற மற்றும் புலால் தவிர்த்து உயிர்களிடத்து அன்பு செலுத்தும் “சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை” பாதையில் ”என் வழி தனி வழி” என்று கவுன்சிலிங் செய்து அழைத்துச்செல்ல முயற்சித்தார்.

மக்கள் ” மன்னிக்கவும் வள்ளளார் ஸ்வாமிகளே! உங்களின் புதுக் கடையில் எல்லாம் புதுசா இருக்கு.செட் ஆக மாட்டேங்குது.அலர்ஜியா இருக்கு” என்று முகம் சுருக்கினார்கள்.

வள்ளளார் பதிலுக்கு “ கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்று வருத்தப்பட்டு கடையை மூடினார்.மக்கள் சந்தோஷமானார்கள்.

இப்படி தன்னைத்தானே அறிந்த துறவிகள்/யோகிகள் ஆண்டுகள் கடந்து சாமியார்,மகான்,பீடாதிபதி,ஜகத்குரு,சன்னிதானம்,அருட் தந்தை,பாபா,குருஜி, சத்குருஎன்று பலவித ரூபங்களில் போலிகள் நிறைந்து அசல்கள் குறைந்து “தன்னைத் தானே அறிதலை” ரிஜிஸ்டர்டு ஆபிஸ்,பிரான்ச் ஆபிஸ்,மார்க்கெட்டிங் ஆபிஸ், வெப் சைட்,டிவிட்டர்,ஈமெயில்,கூகுள்பிளஸ் என்று விரிவுபடுத்தினார்கள். ஆபிசில் தவறாமல் 2 டன் ஸ்பிலிட் ஏசி வைத்துக்கொண்டார்கள்.

ஜாதிக்கொரு சாமியார் அவதாரம் எடுத்து உலகத்தை உய்விக்கப் போவதாக அருள்வாக்கு கொடுத்தார்கள்.

பலவித கெட் அப்புகளில் வந்து பிரபஞ்சத்தில் “போஸ்” கொடுத்து ஐக்கியம் செய்துகொண்டார்கள். மக்கள் “ இவர்களை அறிந்துக்கொண்டார்கள்”.

மக்களுக்கு எளிதான ஆன்மிகப்பாதையை காட்டி அழைத்துச்செல்லாமல் லூசுத்தனமாக ஏதேதோ செய்து“லூசுப் பையன்” ஆனார்கள்.

சின்ன வயதில் நான் பார்த்து ஆச்சரியப்பட்ட மகான்/சித்தர்/யோகி பெயர் தெரியாத ஒருவர்.பிரம்மச்சாரியான அவர் திடீரென்று ஒரு நாள் துறவு பூண்டு காணாமல் போனார்.ஏன்? தான் இருக்கும் இடம் மக்கள் அறிந்தால் தன்னை வைத்து பிசினஸ் செய்வார்கள் என்றுதான்.

ஆனால் திடீரென்று தோன்றுவார் சாலையில் பல்லாவரம் மலைக்கருகில்.புன்னகைத்தவாறே யாரையும் சட்டை செய்யாமல் நடப்பார்.”அருள் வாக்கிற்காக” மக்கள் துரத்துவார்கள்.மேலே கை காட்டுவார்.அவ்வளவுதான்.

சில வருடங்கள் கழித்து அவரின் உடல் தாம்பரம்/சிட்லபாக்கம் அருகே காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இறந்துபோய் 4-5 நாள் ஆகியும் அழுகாமல் இருந்தது. ஆச்சரியம்!

ஒரு வேளை ஸ்பிலிட் ஏசியில் இருந்திருந்தார் அழுகி இருக்குமோ?

 இப்படி “அறியாமை”யில் முழுகிக் கிடக்கும் சாமியார்களை மக்கள்தான் சரியான பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.


Thursday, May 17, 2012

ஏன் கேட்கிறது? ஏன் வாட்டுது? ஆனால் அதுவும்...


இளையராஜாவின் இசை மொழி ஆத்மார்த்தமானது.ஆழமாக மனதை உழுவுபவை.நினைவுகளில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.

இப்படியாக என்னை  உணர்வுபூர்வமாக உலுக்கி எடுத்தப்பாடல் “என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்”  படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி -1979.பாடியவர்: வாணிஜெயராம.பாடல்: கங்கை அமரன் டைரக்டர்: தேவராஜ் மோகன.

பாடலைக் காட்சியாக்கியவரையும் சற்று உலுக்கத்தான் செய்திருக்கிறது.பாடலை உள்வாங்கிக்கொண்டு காட்சிப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்கள் வெகு வெகு வெகு சொற்பம். தீபாவின் கொழுகொழு வளர்த்தியை ஆபாசப்படுத்தாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.பாடலின் ஆன்மா காட்சியில் புகுத்தப்பட்டிருக்கிறது.

சாதாரண கிராமத்து பெண்ணின் மோகத்தை சலனத்தை மோட்டர்பைக் பயணத்தில்  இலக்கிய தரத்திற்கு கொண்டு போய் இருக்கிறார். 




பாடல் காட்சி: 
திருமணமான கிராமத்துப் பெண் வேற ஒரு ஆணுடன் (அந்த ஊர் மைனர்)”என் உள்ளில் ஏதோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது....ஏன் வாட்டுது” என்று சலனித்தப்படி “ஆனால் அதுவும் ஆனந்தம்" என்று ஆனந்தத்தில் மிதந்தவாறே வெறிச்சோடிய  கிராம இயற்கை சூழ்நிலையில் பைக்கில் பயணித்து பாடலின் முடிவில் அப்பாவித்தனமாக  தன்னை இழக்கிறாள்.

இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்த இசையின் அடி நாதம் இதில் வரும் இரு கதாபாத்திரங்கள் பயணம் செய்தபடியே மெளனமாக பேசும் மொழி.இளையராஜா சிலுப்பி சிலுப்பி உணர்ச்சிகளை  எடுத்து  மொழிந்துள்ளார்.

பாடலும் காட்சிக்கு ஏற்றவாரு புனையப்பட்டுள்ளது.இசையுடன் இணைந்து மொழியை பேசுகிறது. காட்சியும் ஒன்றி போகிறது.



பாடல்  இதமான  தபலா தாளத்துடன்   பைக்கில் இருவருடன்  பயணிக்கிறது. தாளம் பயணிக்கும் உணர்வைத் தருகிறது.எதையோ நோக்கி வெறிச்சோடிய  மத்தியான வேளையில் புரிந்தும் புரியாமுலும் ஒரு பயணம்.தீபா "நாட்டுப்புறத்து” மிட்டாய் கலர் உடையுடன்  (சிவச்சந்திரனும் அவ்வாறே இம்மி பிசாகமல்) பில்லியனில் தள்ளியே ஒரு மாதிரி ஒட்டாமல்  பயணிக்கிறார். பிறகு அணைத்துக்கொள்ளும்போது (1.20 -1.33 )சாரங்கி ஓலமிடுகிறது.ஏதோ ஒரு காம வலி மேல் பூச்சாக ஓடுவதை உணரமுடிகிறது.

அடுத்து 2.50 - 3.15 காட்சியும் இசையின் மொழியும் ஒன்றை ஒன்று போட்டி போடுகிறது.விட்டு விட்டு ஒளிரும் மர நிழல்களின் ஊடே பயணிக்கும் பைக்கும் பயணிப்பவர்களின் உடல் மொழியும் பின்னணியில் அமானுஷ்யமான இசை மொழியும் உயிர் துடிப்பானது.சற்று திகிலாகவும் இருக்கிறது.

மேற்சொன்ன மொழி தமிழ் திரை இசைக்குப்புதிது.

இப்படி போய்க்கொண்டிருக்கும் இசையின் மொழி........

3.16 -3.30ல் அமானுஷ்ய இசை மொழி சகஜமாகி சிதார்-வயலின் -சிதார்-வயலின் -சிதார்-வயலின் மாறி மாறி  பின்னிப் பிணைந்து குழைந்து வர காட்சியில்  பெயர் தெரியாத  மணமில்லாத பூத்திருக்கும் காட்டுச்செடிகளிடையே ரோசாப்பூ ரவிக்கைக்காரி நடந்துவருவது கவிதை.

ஒளிப்பதிவாளருக்குப் பாராட்டுக்கள்.இந்தப் பாடல் “மதுவந்தி” என்ற ராகத்தில் புனையப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.வாணிஜெயராம் உணர்ச்சிகளைக் குழைத்துப்பாடி உள்ளார்.

”மஞ்சளை பூசிய மேகங்களே” வரிகள் வரும்போது  உடனே  காட்சி மஞ்சள் ஆவதுதான்  ரொம்ப  ”லோக்கல்”.அடுத்து முதலில் வரும் சேவல்-கோழி  தவிர்த்திருக்கலாம்.பாலச்சந்தர் பட சிம்பாலிக் காட்சியாக சற்று அமெச்சூராக இருக்கிறது.

32 வருடங்களுக்கு முன்  குட்டி ரேடியோவில் விரும்பிக் கேட்ட பல நேயர்களுடன் நானும் ஒரு நேயர்.அதுவும் இரவு நேரத்தில் தனிமையில கேட்டது. பிறகு  பாடலின் இசைமொழி ஏற்படுத்திய தாக்கம்  எதையோ யாரையோ தரிசித்தது போல ஒரு உணர்வு.ஒரு ஏக்க ஒரு தொலைந்துபோன உணர்வு.

முதல் ஐந்து வருடங்களில்(1979-84)  வயது காராணமாய் தாக்கிய பாடலின் இசைமொழி தெரியாமல்  ”ரொம்ப  சாஃப்ட் மெலடி” என்றுதான் மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்.பின்னாளில் தெரியவந்தது இதன் விஸ்வரூபம்.


டெயில் பீஸ்: 
இப்போது பல வித இசைத் தளங்களை கடந்து வந்துள்ளோம்.அதில் ராஜாவின் இசையிலேயே பல வித கட்டங்களை கடந்தும் வந்தாயிற்று.யோசித்துப் பாருங்கள் 31 வருடங்களுக்கு முன் மேற்கண்ட பாடலின் இசை என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று.


Wednesday, April 4, 2012

மெல்லிசை ஹிம்சைகள்/கேர்ள் பிரெண்ட் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்

மெல்லிசைக் கச்சேரிகளுக்கு நான் செல்லுவது இல்லை.திறந்த அல்லது மூடிய (Closed hall)அரங்கு எல்லா கச்சேரிகளும் இதில் அடக்கம். முக்கியமாக மூடிய சின்ன கல்யாண மண்டபங்களில் ரிசப்ஷனில் வைக்கப்படும் கச்சேரிகள்.அதுவும் லோக்கல் இசைக் குழுக்கள் இசைக்கும் இசை?பட்டீஸ் டிட்டீஸ் என்று ட்ரம்ஸ்ஸூம் கொய்ங் என்ற கீபோர்ட்டு ஒலியும்.இதில் பாடுபவர்கள் அமுங்கிப்போய் ஈன ஸ்வரத்தில் கேட்கும்.

முக்கிய காரணம் இசை இரைச்சல் ஹிம்சை.ஒலி அமைப்புகள் சரியாக இல்லாமை.அதற்கேற்றார் போல் மண்டபங்கள் வடிவமைப்பதில்லை.மேடையில் உட்காரும் ஆர்கெஸ்ட்ரா குழு ஷேர் ஆட்டோவில் உட்காருவது மாதிரி நெருக்கி அடித்து உட்கார்ந்து இசைப்பது.மறுஉருவாக்கத்தில் சுத்தமாக லட்சணம் இல்லாமல் இருப்பது.

அதன் நடுவில் பாடகி-பாடகர்கள்(பின்னணியில் ஓவர் சவுண்டு)பாடுவது சோகம்.சத்தியமாக ரசித்துப் பாடுவது மாதிரி தெரியவில்லை.இசைக் குழுக்களுக்கும் வேறு வழியில்லை.வயிற்றுப் பிழைப்பு.

இப்படி கேட்பது கண்டிப்பாக ஆரோக்கியமும் இல்லை.

அடுத்து அசல் அசல்தான் அது பழசோ புதுசோ நாம் ரசித்து அனுபவித்து வாழ்ந்த பாடல்களை அதன் ஒரிஜனல் இசைக்கருவிகளுடன் இசைக்கப்படாமல் கேட்டால் என்னவோ மாதிரி இருக்கிறது.அதுவும் ராஜாவின் பாடல்கள் சத்தியமாக அவராலேயே மீண்டும் உருவாக்க முடியாது.

ஏதோ வைக்கவேண்டுமே என்று திருமணங்களில் இசைக்கச்சேரி வைக்கப்படுகிறது.இதில் மாப்பிள்ளை-பெண் வீட்டுக்காரர்களின் பந்தாதான் இசை மேல் காதல் இல்லை.

தவிர்க்க முடியாவிட்டால் வெளியே வெகு தூரத்தில் நின்றுகொள்வேன்.இரைச்சல் குறைந்து ஒரளவுக்கு ரசிக்கலாம்.

எப்படி இருக்க வேண்டும்?பின்னணியில் ரம்யமாக மெல்லிசை ”மெலிதாக”இசைத்தபடி இருக்க பார்வையாளர்கள் கல்யாண குஷி காட்சிகளை ரசித்தவாறு இருக்க வேண்டும்.ரசித்தவாறே உறவுகளிடம் உரையாடலாம்.

வீணை வித்தகி ரேவதி கிருஷ்ணா
 

பாடல்: காலையும் நீயே மாலையும் நீயே படம்: தேன் நிலவு

இதே வீணையில் இவர் "மன்மதா ராசா” பாட்டும் வாசித்துள்ளார்.”உன் சமயலறையில்” பாட்டும் அருமை.

நான் விரும்பும் உண்மையான மெல்லிசை “ மெலிதான இசை”. சினிமா அல்லது கர்நாடக கீர்த்தனைகளை ஒற்றை இசைக் கருவிகளில் (புல்லாங்குழல்/வயலின்/சிந்த்,வீணை) வாசிப்பது.முக்கியமாக பின்னணியில் தாளக் கருவிகள் தபேலா,டோலக்,மிருதங்கம்.ஓவர் சவுண்டு இல்லாமல் மற்ற இசைக் கருவிகள் இருக்கலாம்.

இதுதான் மூடிய கல்யாண மண்டபங்களுக்குத் தோதுபட்டு வரும்.இல்லாவிட்டால் சத்தம்தான்.மார்பு கூடு அதிரும்.இல்லாவிட்டால் 1965க்கு முன் உள்ள பாடல்களை இசைக்கலாம். இசைக் கருவிகள் குறைவு.

சமீபத்தில் கலந்துக்கொண்ட திருமணத்தில் மெல்லிசைக் கச்சேரி.ஆச்சர்யம் பிளஸ் அதிர்ச்சி.(திருமண பத்திரிக்கையில் இதைப் பற்றி இல்லை) காரணம் இதை ஒட்டிய (annexe) இன்னொரு மண்டபம் தியான மண்டபம் கம் கோவில்.
அதில் பக்தி பஜனை நடக்கிறது.இதில் மெல்லிசை.சபாஷ் சரியான போட்டி.ஸ்டார்ட் மியூசிக்!

எஸ்கேப்...! எங்க? அவுட் சைட் டிஸ்டென்ஸ் ஸ்டாண்டிங்தான்.

கேர்ள் பிரெண்ட் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்


தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் தன்னுடைய 75 வருடத்தைக் கொண்டாட இருக்கிறது.இப்போது பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு கூடி கலைக் கல்லூரிகள் மங்கிவிட்டன.அப்போது கலைக் கல்லூரிகளிலேயே இது தனித்தன்மை கொண்டது.

ஒன்று கோ-எஜூகேஷன் சிஸ்டம்.இரண்டு இதன் இயற்கை சூழல்.


இப்போது தெரியாது ஆனால் அதன் அன்றைய தோற்றத்தை நினைக்கும்போது சிலிர்க்கிறது.இருபுறமும் மரங்கள் அடர்ந்து பொதிந்த இயற்கையின் ஊடே கல்லூரி வளாகம்.... சர்வகலாசாலை?உள்ளே நுழைந்து ஒரு முறை பார்த்து வருவதே பெரிய பாக்கியம்.ஆறு மாதம் (???)படித்த அனுபவம் உண்டு.ஈஸ்ட் இண்டியா காலத்தில் கட்டப்பட்ட கல்லூரி.

ஒரே மாதிரி தோற்றத்தில் சேலையூர்,செயிண்ட் தாமஸ், பிஷப் ஹீபர் என்று மூன்று ஹாஸ்டல்கள்.கண்ணைக் கட்டி விட்டால் அடையாளம் காண்பது கஷ்டம்.

மாணவ மாணவிகள் ஜோடி ஜோடியாக சுதந்திரமாக உள்ளே வளைய வருவார்கள்.கண்டிப்பு கிடையாது.படிப்பதை விட கேர்ள்பிரண்ட்ஸ் கிடைக்கும் என்று சேர்வதில் நிறைய பையன்கள் துடிப்பார்கள்.அப்போது கேர்ள் பிரெண்ட்ஸ் இப்போது “பிகர உசார் பண்ணுவது”.

கோ எஜூகேஷன் என்பதால் பெற்றோர்கள் சேர்ப்பதற்கு தயங்குவார்கள்.  இங்கு படித்துப் பட்டம் பெற்ற மிடில்கிளாஸ் பெண்களுக்கு மாப்பிள்ளை சற்று தயக்கத்துடன்தான் கிடைப்பார்கள்.

பாவாடை தாவணி(half saree) பெண்களுடன் மார்டன் உடை பெண்களும் சேர்ந்து படித்த அபூர்வ காலேஜ். ஜீன்ஸ் அணிந்த பெண்களை முதன் முதலில் பார்த்தது இங்குதான்.வெளி நாட்டு மாணவி/மாணவர்கள் இங்கு பார்க்கலாம். புத்த பிட்சுக்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.


கலைக் கல்லூரிதான் ஆனால் இதில் படித்து பட்டம் பெற்ற ஜாம்பவான்கள் பலர் பெரிய லெவலில் இருக்கிறார்கள்.சிபிஎம் கட்சி பிரகாஷ் கரத் முன்னாள் மாணவர்.மறைமலையடிகள் மற்றும் பரிதிமாற்கலைஞர் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள்.

இங்கு நிதி நிர்வாகம் செய்பவரை “Bursar" என்பார்கள். இது bursa(purse) என்கிற லத்தீன் சொல்லின் மூலம். முதன் முதலில் காண்டீன் என்பதை கேப்டீரியா என்றுதான்(cafeteria) இங்கு மாணவர்கள் ஸ்டைலாக சொல்வார்கள்.

Tuesday, March 20, 2012

DTS கர்ணா..நீயும் நானுமா!என்டிஆர் டப்பிங் வாய்ஸ்

அப்போது கர்ணன்,வீ.பா.கட்டபொம்மன்,ஆ.ஒருவன்,காதலிக்க நேரமில்லை, இத்யாதிகள் எல்லாம் ஒரு cult படம் ஆக இருந்தது.ஒரிஜினல் ரீலீஸ் முடிந்து பல மாதங்கள் கழித்து ‘புத்தம் புதிய காப்பி” “கண்டிப்பாக ஒரு வாரம் மட்டும்” “கடைசி இரண்டு நாள்” ” இன்றே கடைசி” “வைகுண்ட ஏகாதேசியில் இத்துடன்” ”ஏதோவை முன்னிட்டு” என்று தியேட்டர்களில் ரீரிலிஸ் செய்யப்படும். ஒவ்வொரு ரீலிசுக்கு கூட்டம் முண்டியடிக்கும்.

முக்கியமாக இளைஞர்கள் கூட்டம்.

பழைய கர்ணன்
முதல் காரணம் சிம்ம குரலோன் சிவாஜி!இரண்டாவது இதிகாசம் அதுவும் கர்ணனைப் பற்றி. அடுத்து அப்போது ஸ்பெஷல் எபக்ட்ஸ் கம்புயூட்ட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் சிரத்தையோடு எடுத்த பிரம்மாண்ட படம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அட்டகாசமான உயிர்துடிப்பான இசை மற்றும் பாடல்கள்.

பலவித சரித்திர புராண இதிகாச கதாபாத்திரங்களை சிவாஜியின் பிம்பத்தில்தான் ஒரு தலைமுறை உருவகபடுத்தி உள்ளோம்.கர்ணன் பெயரை உச்சரிக்கும்போதே சிவாஜியின் கம்பிரமான உருவம்தான் கண்முன் தோன்றும்.” இரவும் நிலவும்” பாட்டின் ஒரு இடத்தில் சிவாஜியின் நடைக்கு விசில் பறக்கும்.

இந்தப் பாட்டின் சில வரிகள் இலக்கிய நயத்தோடு இருந்தாலும் டபுள் மீனிங்கும் இருக்கு என்று அப்போதைய யூத்துகள் கிசுகிசுப்பார்கள்.(சுபாங்கி கர்ணன் மனைவி)

சுபாங்கி: மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே
கர்ணன்:  மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே.... அங்கு
சுபாங்கி: இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
கர்ணன்: நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே

இப்போது இந்த ஏற்கனவே கம்பீரக் கர்ணனை சினிமாஸ்கோப்பில் உப்ப வைத்து(blow up)  DTSல் இசையை செலுத்தி மெருகேத்தி ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.சிவாஜி குடும்பத்தார்.புதிய தலைமுறை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில்.

DTS  Karnan
பல முறை டிவி சேனல்களில் ஓடிற்று.அப்போது புதிய தலைமுறை பார்த்ததா?காலம் மாறிவிட்டது.ரசனைகளும் மாறிவிட்டது.நேரம்?பொறுமை?????

எனக்கே கூட இந்த டிடிஎஸ் கர்ணனைப் போய் பார்ப்பதைவிட சின்ன வயதில் பார்த்து அந்த நினைவில் ஓடும் கர்ணன்தான் பிடித்திருக்கிறது.

இந்தக் கர்ணன் வெளி வந்ததும்தான் ஒரு விஷயம் நேற்று எனக்குத் தெரிய வந்தது.அது என் டிஆர் படத்தில் சொந்தக்குரல் கிடையாது.டப்பிங் குரல் என்று.சின்னவயசில் அவர்(கிருஷ்ணர் )தமிழ் குரலாக உள்வாங்கி நேற்றுவரை அதே நினைப்பு.

அவருக்கு டப்பிங் பேசியவர் கே.வி.சினுவாசன் என்பவர்.போட்டோவில் ஒய்ஜி மகேந்திரனுடன் இருக்கும் முதியவர்(92).சிவாஜி கணேசனை ஒரு டிராமா கம்பெனிக்கு சிபாரிசு செய்தவர். சிவாஜியால் அய்யர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.

இவரின் சுவராசியமான பேட்டி பார்க்கவேண்டிய ஒன்று.

NTR Voice - K V Srinivasan Exclusive interview

Thursday, March 15, 2012

ஆ.. இவங்களா இப்பத்தானே!லாஜிக் லஞ்சம்?எட்டுக்கால் பூச்சி கேள்விகள்

வாழ்க்கையில் இந்த திடுதிப் சந்தோஷம் ஏதாவொறு விஷயத்தில் நம்முன் திடுதிப்பென்று தோன்றி பரவசப்படுத்தும்.உள்ளுணர்வில் அதைப் பற்றி திடுதிப்பென்று உதிக்க அதே சமயத்தில் நம் கண் முன்னால் நடக்கவும் செய்தால் விவரிக்க முடியாத குஷி.

போன(11-03-12) ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட உள்ளுணர்வு முன்னால் தூர்தர்ஷன் சினிமா நிகழ்ச்சியும் அதை நடத்திய பெண்ணைப் பற்றியும்தான்.அதை நினைத்தவாறு டிவியை ஆன் செய்ய விஜய் டிவியில் (நீயா நானா) கைத்தட்டல் ஒலி அதனூடே நடந்துவருபவர் சற்று முன் என் உள்ளுணர்வில் வந்த தூர்தர்ஷன் ”மெட்ரோ ப்ரியா”.

மார்க்கெட் போய் கல்யாணம் ஆகி குடும்பம நடத்தும் தமிழ் நடிகைகளின் அதே உப்பல் கன்னம் உடம்பு தொகுப்பாளினிக்கும்.


அப்போது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு சேனல்.இவரும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு  தமிழ் டிடி மெட்ரோ டூவின் முதல்(?) பெண் தொகுப்பாளினி.ஒரு மணி நேர நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்.

கையை ஆட்டி ஆட்டி தொகுக்கும் ஸ்டைலை அப்பவே கொண்டு வந்தவர்.துடிப்பாக பேசுவார்.இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.பிறகு லாவண்யா என்ற பெண்ணை வைத்து (பாட்டு பாடவா கதாநாயகி) இதே மாதிரி முயற்சித்தார்கள் ஆனால் வெற்றி அடையவில்லை.

இப்போது எவ்வளவு சேனல்கள் எவ்வளவு கை ஆட்டல்கள்/தலையசைத்தல்கள்/கத்தல்கள் ... தோன்றி மறைந்துவிடுகிறார்கள்.காரணம் இப்போது supply is more and demand is less. அப்போ Demand is more because supply is less.

அந்த நிகழ்ச்சியைப் பார்க்க:
டிவி பார்ப்பதில் வீட்டில் சண்டை
________________________________________
லாஜிக் லஞ்சம்?

சமீபத்தில் ஆரணி அரசு ஆசிரியர் பணிக்கு பன்னிரெண்டு,பத்து,எட்டு என்று லஞ்சம் கொடுத்து நிறைய பேர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்.(வாங்கிய ஹெட்மாஸ்டர் போலீசிடம் சிக்கிவிட்டார்)ரொம்ப வருடமாகவே நடக்கிறது. கால் காசனாலும் கவர்மெண்ட் வேலை அதன் பயன்கள் என்றாலும் டீச்சர்கள் லஞ்சம் கொடுப்பதில் லாஜிக் புரியவில்லை.

ஆர்டிஓ,பத்திரப்பதிவு,தாலுக்கா ஆபிஸ் இத்யாதி வேலைகள் என்றால் கொடுத்த லஞ்சத்தை மீட்டு எடுக்க வழி இருக்கிறது.டீச்சர் வேலையில்?இதை நேர்மையாக சம்பாதித்து மீட்பதற்கே 6 அல்லது 7 வருடம் ஆகாது? அதுவும் இந்த கேசில் 5000 அல்லது 6000தான் சம்பளம் வாங்குகிறார்களாம்.

ஒரு வேளை இவர்கள் ஹெட்மாஸ்டர் ஆகி மீட்டு எடுப்பார்களோ?

புரியலா ...தெரிஞ்சா சொல்லுங்க!
________________________________________
எட்டுக்கால் பூச்சி கேள்விகள்


16 பூச்சிக் காலுக்கு எத்தனை கால்?
சூர்யா நடத்தும் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” யை “எல்லோரும் 6.40 லட்சம் வரை வெல்லலாம்” என்று கிண்டல் செய்யப்படுகிறது.ஏன் என்றால்  6.40 வரை கேட்பதெல்லாம் “எட்டுக்கால் பூச்சி” (எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்)கேள்விகள்.

ஏன்? நிறைய பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும்.நிறைய
பார்வையாளர்கள் நிறைய விளம்பரம். நமக்கு இருக்கும் பொது அறிவுக்கு பிபிசி லெவலில் கேள்விகள் கேட்க முடியாது.”அச்சு..அச்சு..” என்றால் 1. இருமல் 2.கொட்டாவி 3.தும்மல் 4.விக்கல் என்று கேட்டு பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும்.

மேலும்....

இது குவிஸ் கம் சூப்பர் சிங்கர் கம் கதையல்ல நிஜம் கம் நீயா நானா கம் ரியாலிடி ஷோவாக நடத்துகிறார்கள்.”அப்பாவுக்கு நெஞ்சு வலி தேவலயா?” என்று கேட்டுவிட்டு கேள்வியை சூர்யா ஆரம்பிக்கிறார். கலந்துக்கொள்ளும் சில இளம் பெண்கள் முதலில் ஜொள்ளை துடைத்துக்கொண்டுதான் சேரில் உட்காருகிறார்கள்.
நிகழ்ச்சியின் அரங்கம்,கலர்,இசை,லைட்டிங் எல்லாம் அட்டகாசம். ரொம்ப கிராண்ட்.Professional to the core. அசட்டுத்தனம் இல்லை.

கேபிசியின் டெம்பிளேட் பார்மட்தானே.

கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி -சன் டிவி குவிஸ்


பணம் என்றால் டெட் பாடி ஆல்சோ ரெடி என்ற சித்தாந்தத்தில் இதுவும் வருவதால் பார்வையாளவர்கள் வாய் பிளந்து கலந்துக்கொள்ள தூண்டப்படுகிறது.கையில் அள்ள முடியாத கட்டுகட்டாக பணம்,பெண் செக்யூரிட்டிகள், ஏழு கேள்விகள் என்று பணத்தைத் துரத்திக்கொண்டு போகும்விளையாட்டு.

ஏழு கேள்விவரை விளையாட வேண்டும்.போதும்பா என்று கழட்டிக்கொள்ள முடியாது.சுலபமாக இருந்தாலும் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும். இந்த நிகழ்ச்சி எனக்குப்பிடித்திருக்கிறது.

ஆறு கேள்விகள் வரை ஒரு கோடியை விடாமல் ஜெயித்துவிட்டு ஏழாவது கேள்வியில் தவறினால் ஒரு கோடி ஊத்தி மூடிக்கொண்டுவிடும்.

தாங்கமுடியாது.ஏழாவது பதில் தப்பாக இருக்கக்கூடாவே கூடாது. ஆப்ஷனும் கிடையாது. ஆனால் தோற்றால் ஆறுதலாக சன் டிவியின் ஒரு லட்சம் உண்டு.



Friday, February 24, 2012

வங்கிக் கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்

வழக்கமாக இது போன்ற குற்றங்களில் போலீஸ் குற்றவாளிகளைப் பிடிப்பார்கள்.பிடித்தவுடன் பிடிப்பட்ட பணத்தை மைசூர்பாக் போல் டேபிளில் அடுக்குவார்கள்.பின் பக்கம் குற்றவாளிகள் முகத்தில் துண்டு அல்லது முகமூடி அணிந்து தலைகுனிந்து நிற்க போலீஸ்காரர்கள் மிடுக்காக
போஸ் கொடுப்பார்கள்.கமிஷனர் அல்லது எஸ்பி பேட்டிக்கொடுப்பார்.

சேனல்கள் இதையே மாறிமாறி கோழிகூவும் வரை காட்டிக்கொண்டே இருப்பார்கள்.எப்போது டிவியை ஆன் செய்தாலும் இதுதான் வரும்.
ஆனால் நேற்று வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர் ரத்தம்தெறிக்க சுட்டக்கொல்லப்பட்டது அதிர்ச்சி கிளைமாக்ஸ்.சென்னை மக்கள் எதிரே பார்க்கவில்லை.சேனல்களும் மக்களின் நாடி அறிந்து அடக்கி வாசித்தன.

யோசித்தால் இதில் முக்கியமான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது.அது சமீபத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுக்கொண்டிருக்கும் வட இந்திய குற்றவாளி கும்பலுக்கா?

அடுத்த விஷயம்.....
எந்த குற்றவாளியுமே தனக்குத்தெரியாமல் ஏதாவொறு
தடயத்தை குற்றம் நடந்த இடத்தில் விட்டுச் செல்வான் என்பது
எழுதப்படாத விதி.இதிலும் தவறாமல் நடந்திருக்கிறது.வீடியோவில் மாட்டிக்கொண்டது.

கடந்த பல வருடங்களாக பீஹார்,சட்டீஸ்கர் மற்றும் வேறு மாநிலத்தவர்கள் இங்கு பிழைப்புக்காக வந்து கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள்.கண்கூடாகப் பார்க்கிறேன்.ஆனால் இந்த வட இந்திய வங்கிக் கொள்ளையர்கள் அமெச்சூர்த்தனமாக் ஏதோ செய்துவிட்டு ரத்தம் கக்கி இறந்துப்போனார்கள். தேவையா?

Wednesday, February 15, 2012

தோனி - சினிமா விமர்சனம்

தோனி திரைப்படம் Shikshanachya Aaicha Gho என்ற மராத்திப் படத்தின் தாக்கம் என்று சொல்லப்படுகிறது.பிரகாஷ்ராஜின் இயக்கத்தில் முதல் படம்.வெற்றி பெற்றுவிட்டார்.சொல்ல வந்த விஷயத்தை பலமான காட்சி அமைப்புகளுடன் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
பிடிக்காத ஏட்டுப்படிப்பை பிள்ளைகளின் மண்டையில் ஏற்றி அவர்களின் மற்ற துறை ஆர்வத்தை கண்டுக்கொள்ளாமல் அவர்களை சீரழிப்பதுதான் கதை.

பிரகாஷ்ராஜ மிடில்கிளாஸ் மாதவனாக வந்து பிரச்சனையை மிடில் கிளாஸ்தனமாகவே கையாண்டு நொந்து நூலாகும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். நடிகராகவும் வெற்றி.அடுத்து பையன் ஆகாஷ் அற்புதம்.



முகத்தில் எப்போதும் ஒரு சோகம்.பக்கத்துவீட்டுக்காரியாக வரும் ராதிகா ஆப்தே கோலிவுட்டுக்குப் புது வரவு.தோற்றமும் அடுத்தவீட்டுப் பெண் தோற்றம்தான்.இந்தத் தோற்றத்தில் எல்லா படங்களிலும் நடிக்க முடியுமா. நடிக்கத்தான் விடுவார்களா.பாலிவுட்டில் வேறு மாதிரி இருக்கிறார்.


மொழி படத்தின் வசன கர்த்ததான் இதிலும்.ஞானவேல்.காமெடி வசனங்கள் கலக்கல்.படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.எல்லா பிரச்சனைகளும் பாசீட்டிவாக முடிவதாக காட்டப்படுவது ஒரு புது முயற்சி.

இரண்டுமொழியில் எடுக்கப்பட்டு இருப்பதால் பாத்திரங்கள் இரண்டுக்கும் பேலன்ஸாக இல்லாமல் தெலுங்கு சாயல்.போலீஸ் ஸ்டேஷன் ஆபிஸ் எல்லாம் பளிச் பளிச்சென்று இருக்கிறது.கந்துவட்டிக்காரராக வருபவர் ஒட்டவே இல்லை.

கடைசி கால் படம் ஓவர் மிகை.விசுவின் அரட்டை அரங்கம் பார்ப்பது போல இருந்தது.

படத்தின் அடுத்த பலம் இளையராஜா. பின்னணி இசை படத்தோடு இசைந்துப் போகிறது.”விளையாட்ட படகோட்டி” பாடல் வைத்த இடம் அற்புதம்.