Sunday, February 28, 2010

நானும் சுஜாதாவும்


 போட்டோவில் எஸ்.ரங்கராஜனும் (நீல வட்டத்தில்)ஜெ.அப்துல் கலாமும்(சிவப்பு)

 சுஜாதாவின் மரணம் பற்றிய செய்தியை(27-02-2008) டீவியில் பார்த்துக்கொண்டிந்தேன். என் முகவாட்டத்தைப் பார்த்து விட்டு என் மகன் கேட்டான்” ஏம்ப்பா... இப்படி பீல் பண்ற....?”

அடுத்த நிமிடம் அவனை அழைத்துக் கொண்டுபோய் மர பீரோவில் அடுக்கப்பட்டிருந்த புத்தங்களை காட்டி “ இவ்வளவு புக்ஸ் படிக்க வைச்சது..இவருதான்” என்றேன். “அவருதான் எழுதவும் வச்சாரு இல்ல” முடித்தான்.

கணையாழியின் கடைசிப் பக்கம், பத்தி எழுத்து,சிறுகதை,
பெருங்கதை,கட்டுரைகளில்........ “புதுமைப் பித்தனைப் படித்துவிட்டுதான்..பேனாவை எடுக்க வேண்டும் “ உடனே பு.பி.படித்தேன். ஞானக்கூத்தனின் “அன்று வேறு கிழமை.”என்பார். படித்தேன்.”மாபசான் கதைகளில் வரும் வசீகரம்”என்பார். படித்தேன். இது போல“அந்த பாரில் மோசார்ட்டின "The Magic Flute"”. கேட்டேன்.இது போல் நிறைய ”ன்பார்” நான் “டித்தேன்”.

 சுஜாதாவையும் படித்தேன் அடுத்தக் கட்டமாக சுஜாதா மேற்கோள் காட்டியதையும் வாசித்து  அதற்கடுத்த கட்டமாக சுயமாக தேர்ந்தெடுத்து வாசிக்கவும் ஆரம்பித்தேன்.


இன்னும் பல பேர் சுஜாதாவை விட்டு வெளிவரவில்லை.

மேல் உள்ள போட்டோ சரியாக தெரிய:

போட்டோ   இங்கு போனவுடன் இதன் மேல் டபுள் கிளிக்குங்கள். தெளிவாகத் தெரியும்


Friday, February 26, 2010

கடைசிப்படியின் அருகே டாஸ்மாக் அல்லது பிரபஞ்சம்




நான் படியில் ஏறப்போவதில்லை

திரும்பி வருவேனா
It is a million dollar question

மேல் படியின் முடிவில்
ரைட் சைடில் சொர்க்கமும்
லெப்ட் சைடில் நரகமும்
சட்டென சைடும் மாறிவிடும்
அபாயம் இருக்கிறது

பின்நவீனத்துவ ஐதீகத்தின்படி
பிரதியின் ஆசிரியர் 
மண்டையைப் போட்டுவிடுவதால்
அவர் ஆவி கூட சுற்றலாம்

உதவி வணிக வரி அலுவலர்(சரகம்-1)
அ.மா.முனிரத்தினம் உட்கார்ந்திருக்கலாம்
யாராவது டைரி சுவீட் பாக்கெட்
எடுத்துப் போனால் அவர் கூட செல்லலாம்

அட்டாச்சுடு டாஸ்மாக் பார் இருக்கலாம்
பிரபஞ்சத்தின் நுனியும் இருக்கலாம்
தோட்டா தரணியும் இருக்கலாம்
”துமித்தல்” சிறு பத்திரிகை
அச்சகமாக இருக்கலாம்
தமிழ் படம் ஷிவா கூட இறங்கி வரலாம்

சிதம்பர ரகசிய சாயலும் இருக்கிறது

தூரம் ஆன அக்கா தேவ குஞ்சரி
மொட்டை மாடியில்
கலைமகள் படிப்பதாகவும் தோன்றுகிறது

காலடிச்சுவடுகளைப் பார்த்தால்
பித்ருக்களின் நடமாட்டம்
இருப்பதாகவும் தெரிகிறது

கருப்புப் பல்லி ஒன்றுதான்
என் மேல் விழுந்தது
படிக்கட்டைக் கவிழ்த்துப்பார்த்து
செக் செய்ததில்

உங்களுக்கும் ஏதேதோ தோன்றலாம்

எதுவும் உறுதியாக
நம்மால் சொல்ல முடியாது
மீறி ஏற முடிந்தால் ஏறுங்கள்
மேலே போனவுடன் எனக்கு

ஒரு SMS அனுப்புங்கள்





புகைப்படம் நன்றி:http://anandvinay1.blogspot.com/

தமிலிஷில் மறக்காமல் ஓட்டு போடுங்கள்

Wednesday, February 24, 2010

பத்து ரூபாய் நோட்டில் சுதா

சிண்டிகேட் வங்கி வாசலில் மோட்டர் பைக்கை நிறுத்தி சைட் ஸ்டாண்ட் போட்டான் சிவகுரு.ஸ்டைலாக சாய்ந்து நின்ற வண்டியைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான்.

சுதா தன்னை அணைத்த சூட்டை இன்னமும் உணர்ந்துக்கொண்டிருந்தான்.முதன் முறையாக சுதா பில்லியனில் உட்கார்ந்து வந்தாள். செல்லமாக தன் இடுப்பை அணைத்தபடி வந்து அவள் ஆபிசில் இறங்கிக்கொண்டாள்.

மனது முழுவதும் நிரம்பிய சந்தோஷத்தை வலுகட்டயமாக தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் திருப்பிக் குறைத்து வேகமாக வங்கிக்குள் நுழைந்தான்.தோராயமாக ஐந்தாயிரம் ரூபாய் எடுக்க வேண்டும்.மீண்டும் புன்னகைத்தவாறே கேஷ் கவுண்டரை நெருங்கினான்.

தன் வருங்கால மனைவி சுதாவிற்கு மோதிரம் வாங்கத்தான் இவ்வளவு பணம்.சுதாவுக்கு சர்ப்ரைஸ் பரிசு. காதல் வழிய வழிய அவள் வெண்டை பிஞ்சு விரலில் அணியப் போகிறான்.அவளும் ஏதாவது அணிவாள்.அணிந்தவுடன் இருவருக்கும் ஒரு கல்யாணக் களை வரும்.

கவுண்டரில் பணத்தை வாங்கி எண்ணினான். பத்து ரூபாய்களை எண்ணும்போது கடைசி நோட்டில் ஏதோ எழுதி இருந்தது. சற்று உற்றுப் பார்த்தான்.Rajesh  Sudhaa என்று ஆங்கிலத்தில் எழுதி இருவருக்கும் இடையே மன்மத அம்பு படம் போட்டிருந்தது.காதல்! இது என் சுதாவா?பெயரின் கடைசியில் ரெண்டு அதே நியூமாராலஜி “aa”.முகம் சுருங்கியது. ஏசியிலும் மெதுவாக வியர்த்தது.விறுவிறுவென வெளியே வந்தான்.


ராஜேஷ் என்பவன் இந்த பாங்கில் வேலை செய்கிறானா?யார் இவன்?.சுதாவும் இந்த வங்கியின் சுற்று வட்டாரத்தில்தான் வீடு.சட்டென்று ஞாபகத்தில் வந்தது.அவள் கொடுக்கப்போகும்  இன்விடேஷன் அட்ரஸ் லிஸ்டில் இந்தப் பெயரைப் பார்த்திருக்கிறான்.திருமணத்திற்கு முன் காதலா?அவள் அணைத்த இடம் தகித்தது.அவள் மோதிர விரல் குஷ்டமாகியது.

ராஜேஷ்-சுதா பெயர் பொருந்தம் பொருந்தி வருகிறதே.ஆனால் தன் பெயர்தான் பொருத்தம் சரியாக இல்லை என்று அவளிடம் ஒரு முறை வருத்தப்பட்டிருக்கிறான்.சொல்லும்போது அவளும் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

திருமணத்திற்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கிறது.அவளிடம் கேட்டுவிடலாமா?

அவளுக்கு போன் செய்தான்.”சொல்லு சிவா..” பதில் பேசாமல் கட் செய்தான்.மறுபடியும் செய்தான”ம்ம்ம்..சுதா ஹியர்..சொல்லு சிவா.” மீண்டும் கட் செய்தான்.
அமுக்கமானான்.எனக்கே எனக்கு என்ற சுதா இப்படிப்பட்டவளா?மனதிற்குள் புழுங்கினான்.

பைக் பிடிக்கவில்லை. பல கிலோ மீட்டர் நடந்தான்.ஏதோ ஒரு நகைக் கடைக்குப்போனான்.ஏனோதானோவென்று எதையோ வாங்கினான்.இரண்டு நாள் கழித்து அவள் விரலில் சொருகினான். அடுத்த சில நாட்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் பூச்சொரிந்து ஆசிர்வதிக்க சுதாவைக் கைப்பிடித்தான்.திருமணம் நடந்தது.

பத்து ரூபாய் நோட்டைச் சுமந்தபடியே சிவகுருவுக்குப் பத்து வருடம் ஓடி விட்டது. தாம்பதியத்தில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் பிறந்தும் ஒன்றும் மாறவில்லை.சுதாவாலும் எதுவும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

“சுதா...உன்ன ரொம்ப பிடிச்சுருக்கு. இன் பாக்ட் ஐ லவ் யூ சுதா!’

ராஜேஷ் புரிந்த புன்னகையும் கண்களில் தேக்கி இருந்த காதலும் அன்று ரொம்ப களையாகக் காட்டியது அவனை.அடுத்த தெருவாசிதான் ”ராஜேஷ்.இஸ் எ வெரி நைஸ் பாய்” என்று தோழி அர்ச்சனா அடிக்கடிச் சொல்லுவாள்.

சுதா ரொம்ப கட்டுபடுத்திக்கொண்டு“சாரி...! ராஜேஷ்.இது ஒத்து வராது.நான் எங்க வீடல பாக்கற பையனத்தான் மேரேஜ் பண்ணுவேன்..” சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து அவனை அன்றே மறந்தாள்.

ராஜேஷ் இன்றும் நினைவில் வந்து போனான்.


                                       முற்றும்




Monday, February 22, 2010

ராஜேஷ் சுதாவைக் காதலிப்பதாக ....

கேனரா பேங்க் கேஷ் கவுண்டரில்
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று அலசப்பட்டு
என் கைக்கு வந்த நோட்டில்
ராஜேஷ் சுதாவைக் காதலிப்பதாக 
சொல்கிறார்


















 புரசைவாக்கம்
முதல் குறுக்குத் தெருவில் இருக்கும்
என்னிடம் வந்திருக்கிறது
கலவரத்துடன்  கவிதை
எழுதி முடித்து
ஆவின் பால் போடும்
கிருஷ்ணகுமாரிடம்
சுதாவை அனுப்பிவிடுகிறேன்

அடுத்த வாரம்  நான்
தாலிகட்டப் போகும்
பெண்ணும் பெயரும்
சுதாதான்

(இது மாற்றி எழுதிய கவிதை)

Saturday, February 20, 2010

இளையராஜா The King of Beats

"வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்.தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும்....”என்ற கிழக்கு வாசல் பாடலில் சொன்ன தாளகதி (beats)பற்றித்தான் இப்பதிவு.

மேஸ்ட்ரோவின் பாட்டுக்களில் இசைக்கப்படும் “தாளங்கள்” துடிப்பானவை.சிக்கலானவை.புதுமையானவை சோதனை முயற்சிகள் உண்டு.சில தாளக்கட்டுக்கள் பிரமிக்க வைப்பவை.

லேத் பட்டறையில் அடிப்பதுப் போல் தாளங்களை அடிப்பது இல்லை.வெண்ட் கிரைண்டர் போல் “டடக்டடக்டடக்டடக்டடக்” என்று ரிதத்தை போட்டுவிட்டு பாட்டை நுழைப்பது இல்லை.வித விதமான தாளங்கள்.புத்திசாலித்தனம் நிறைந்தது.

பாங்கோ ( bongo drums)



இந்த மாதிரி மெட்டுக்கு இந்த மாதிரி தாளக்கட்டுதான் என்பது தாளக்கட்டில் விதிகள் இருக்கிறது..கர்நாடக இசையில் ஆதி ,மிச்ர சாப்பு,கண்டசாபு,அட,ரூபகம் என்று உள்ளது.முக்கால் வாசி கேள்விஞானம்.கால்வாசி படித்தது.

பாமரத்தனமாக சொல்லப்போனால்......

”செண்பகமே செண்பகமே” என்று பாடிக்கொண்டே மேஜையில் கையால் இதற்குத் தாளம் போடுங்கள் அல்லது தொடையில் தட்டுங்கள் அதே மாதிரி “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” ”என் வானிலே ஒரே வெண்ணிலா” க்கும் போடுங்கள். விரல் மடக்கி அடிப்பது (beats) அல்லது தொடை தட்டல் மாறும். அதாவது தாளக்கட்டு மாறும்.ஒரே மாதிரி வராது.ஏன்? பாட்டின் மெட்டு மாறுகிறது.இதைத்தான் பிரித்து தாளத்திற்கு பெயர் வைத்தார்கள்

விரல் மடக்கி மற்றும் உள்ளங்கை மேஜையில் அடிக்கும் போது அடிகளை (beat)கவனியுங்கள். எண்ணுங்கள். 4 அல்லது 5 அல்லது 6 என அடிகள் மாறும்.ஆனால் இந்த அடிகள் மறுபடி மறுபடி வந்துக்கொண்டே இருக்கும்.நீங்கள் மாற்ற முடியாது. மாற்றினால் பாட்டு ஒரு பக்கமும் தாளம் ஒரு பக்கமும் திரிந்துக்கொண்டிருக்கும். அபசுரம் தட்டும்.

பாட்டுக்கு ஏற்றாற் போல்தான் தாளம் இருக்க வேண்டும்.

ஆனால் மேஸ்ட்ரோ புத்திசாலித்தனமாக மாற்றுவார்.

சில தாளகட்டுகளின் தட்டலை குறைத்தும் நீட்டியும் பிரமிக்க வைப்பார்.போட்டு குமுறுவார்.

தாளக்கட்டில் இந்திய,மேற்கத்திய,இந்துஸ்தானி,ஆப்பிரிக்கா போன்ற எதையும் விட்டுவைக்கவில்லை.தன்னைச்சுற்றி விதவிதமான எவர்சிலவர் ட்ப்பாவில் வாசனையாக எதை எதையோ எடுத்துத் தடவிக் கொடுக்கும் பான் வாலா போல் வித விதமான ரிதங்கள்.

அதனால்தான் மேஸ்ட்ரோ "The King of Beats"

ராஜாவின் நிறைய பாடல்கள் Triple Beat கொண்டது.

இவருக்கு பிரசாத்(தபலா),புருஷோத்தமன்,சிவமணி(டிரம்ஸ்),போன்றவர்கள் வாசித்துள்ளார்கள்.

காங்கா(கோ?) டிரம்ஸ்(conga drums)




"அடி..! ராக்காயி..மூக்காயி..குப்பாயி..??????????, கஸ்தூரி, மீனாட்சி,தங்கபல்காரய்யா ...லெட் ஸ்டார்ட் தி மேஸ்ட்ரோ பீட்ஸ்....”சுத்தச் சம்பா..பச்ச நெல்லு குத்தத்தான் வேணும்...”

















அன்னக்கிளி -”மச்சானைப் பாத்தீங்களா”
எம்எஸ்வி தாக்கம் இல்லாமல் ரொம்ப பிரஷ்.மூணு flavour கொடுக்கிறார்.டீசண்ட் குத்துப்பாட்டு+கல்யாண குஷி மூட்+கிராமியம்.அடித்த அடியில் தமிழ்நாடு அதிர்ந்தது.

இதில வரும் மேளம்+ஜால்ரா+நாதஸ்வரம் மேள கட்டுகள் வர வேண்டிய இடத்தில் (குஷி) வந்து அசத்தி விட்டுப் போகும். ஆச்சரியமான விஷயம்,முதல் சரணம் (வெள்ளிசரம் புன்னகையில்) ,பல்லவிக்கு பின் ரொமப சீக்கிரமாக வருகிறது.

கரகாட்டக்காரன் - “முந்தி முந்தி”
கிராம திருவிழா மேள தாளக்கட்டுக்கள்.

ஆனந்தராகம் - “ஒரு ராகம் பாடலோடு”
ஆரம்ப தாளக்கட்டிலேயே புலம்பல். குமுறல் உணர்ச்சித் தாளக்கட்டு .இதன் புலம்பலில் ஜானகி,புல்லாங்குழல் பிணைந்து மனசைப் பிசைகிறது.அற்புதம்..எப்படி முடிகிறது ராஜாவால்?நடுவில் பாய்மர கப்பல் பீட் வரும்.நெய்தல் நில இசை?.

ஈரமான ரோஜாவே-”கலகலக்கும் மணி ஓசை”
 மேஸ்ட்ரோவின் அற்புதமான தாளக்கட்டு கற்பனை.ஹை ஸ்டைல்தான்.

0.34ல் புல்லாங்குழலைத் தொடர்ந்து வரும் Triple conga drum  அசத்தல் அண்ட் majestic.தட்டல்களை கவனியுங்கள். இவைகள் 1.59ல் சாதுவான தபலா ரிதம் ஆகிவிடும்.மீண்டும் 2.38ல் Triple conga வால்தனம்.கேசட் கடையில்((அந்த காலத்தில்) ஸ்டிரீயோவில்கேட்டு பிரமிப்போம்.


வெள்ளை ரோஜா -சோலைப்பூவில்
”சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்”.பெரிய சந்தம். 0.28ல் ஆரம்பித்து 0.32ல் முடிகிறது..இதைப் பின் தொடரும் தாளக்கட்டு multiple beat ( 6? 8? beats)கொண்ட நீள தாளக்கட்டு.சும்மா கடனே என்று பீட்டாமல் அதிலும் நீள..................வெரைட்டி. அதனால்தான் இவரை prolific composer என்கிறார்கள்."துடும் துடும் துடும்”  இசையைத் வித்தியாசமாக தொடர்வது புதுமை.ஆச்சரியம்!

கையால் மேஜையில் தட்டுங்கள்.எவ்வளவு beat என்று பாருங்கள்.

தென்றலே என்னைத்தொடு-”கவிதை பாடு”
ராஜாவின் இசைகோர்ப்பில் அடுத்து என்ன என்பது யூகிப்பது கஷ்டம்.ஆச்சரியங்களை வாரியிறைத்துக்கொண்டே போவார்.இந்த பாட்டில் 0.27 - 0.34 வரை ஒரு வருடு வருடிவிட்டு  திடீரென ஒரு "U" turn எடுத்து வேறு தாளக்கட்டில்   அதிர வைப்பார். நமக்கு ஜுரம் வரும்.

மூன்றாம் பிறை - “பொன்மேனி உருகுதே”
மேஸ்ட்ரோ இதில் “வுடு கட்டி” சிலம்பாட்டம்.அற்புதமான stylish அரேஜ்மென்ட்ஸ்.ராஜா .0.40 க்கு மேல் படத்தில்(3) இருக்கும் ஆப்ரிக்கன் ட்ரம்ஸ் வித் மூங்கில் குச்சிகள் மாதிரி ஏதோ நாதம்.முதல் interlude முடிந்து 1.59 ல் மீண்டும் ட்ரம்ஸ் அண்ட் கோ ஸ்டைலாக உள்ளே வந்து பிறகு ஜானகி ஆரம்பிப்பது அசத்தல்.2.52ல் தாளத்திற்கும் மற்ற கருவிகளுக்கும் நடக்கும் உரையாடல் சூப்பர்.

கொச்சு கொச்சு சந்தோஷங்கள் -”கான ஷியாமா”
ஒரு கிருஷ்ண பக்தி பாடல்.முதலில் ஒரு சாதாரண மேற்கத்திய ரிதத்தோடு ஆரம்பிக்கும் 0.32ல் ஒரு யூ டர்ன் எடுத்து ஸ்ரீகிருஷ்ணாவின் பிருந்தாவனத்திற்கே கொண்டு போவார். இதில் ஹிந்துஸ்தானி தாளமும் மேற்கத்திய தாளமும் மாறி மாறி அற்புதமாக பின்னியபடிவிளையாட்டுக்
காட்டுவார். 1.31 -1.39 வரும் ஹிந்துஸ்தானின்தாளக்கட்டுகளை கவனியுங்கள்.முடிந்தவுடன் வெஸ்டர்ன் - ஹிந்துஸ்தானி-வெஸ்டர்ன் என்று வழுக்கிக்கொண்டே போகும்.

இந்தப் பாட்டின் கிளைமாக்ஸில் ராஜா full blast! 3.52 -4.21ல் ஹிந்து + மேற்கு இரண்டும் கைக்கோத்துக்கொண்டே வேறு ஒரு தளத்தில் உலவும்.4.22 ல் ஒரு தூக்கு தூக்கி வேறு தளம். 4.31ல் இன்னும் ஒரு தூக்கு தூக்கி விஸ்வரூபம் எடுத்து கடைசியில் சுபம். வெயிட் பண்ணினால் ஸ்ரீகிருஷ்ணனை நேரிலேயேப் பார்க்கலாம்.It is absolutely  divine!

இந்தப் பாட்டின் கோபிகைகள் டான்ஸ் காட்சியில் தாளத்திற்கேற்ப மாறி மாறி காட்டுவார்கள்.பச்சைப்புடவை-லட்சுமி (தபலா ரிதம்) ,சிவப்பு புடவை-பானுப்ரியா (டிரம்ஸ் ரிதம்) இரண்டும் சேர்ந்தால் மிக்ஸ்ட் ரிதம்.யூ டூப் பார்க்க.

மூன்றாம் பிறை - “பூங்காற்று”
0.58 -1.14 தபலாவில் கொஞ்சும் மழலைரிதம்.ஸ்ரீதேவிக்காக “லூசு” இசை.


ராசா மகன் -”காத்திருந்தேன் தனியே”
இதில் வரும் தாளம் என்ன ஒரு ஸ்டைல்.ஆரம்பமே கிராண்ட் ஓபனிங்.இதன் தாளக்கட்டு 7 beat cyle என்றும் மிச்ரா சாபு தாளக் கட்டு என்றும் ரவி நட்ராஜன் என்னும் ராஜாவின் இசை ரசிகர் சொல்கிறார். இது ஒரு கஷடமான முயற்சி என்றும் தெரிகிறது.

இதில் ஒவ்வொரு சைக்கிளுக்கும் வரும் ஏழு ட்ரம்ஸ் தட்டலை எண்ண முடிகிறதா? மேஜையில் தட்டுங்கள். நான் எஸ்கேப்....!

சலங்கை ஒலி - “தகிடதகிட”
மிருதங்கம் பிறகு வரும் தபலா அல்லது தோலக் சூப்பர்.


புதுப்பாட்டு- “நேத்து ஒருத்தரு”
இந்தப் பாடல் பதிவின் போது வடபழனியில் ரிக்டர் ஸ்கேலில் 7.8 புள்ளி நிலஅதிர்ச்சி இருந்ததாம்.தாளக்கட்டுகளின் பேச்சுகள் அட்டகாசம்.தாளக்கட்டுகளின் இடையே கிடார்,சிந்த்,ட்ரம்பெட் போன்றவை அதுவும் ஒரு தாளகட்டுப்போல வந்து அழகுப் படுத்துவது வளமான கற்பனை.

குத்துப்பாட்டு என்றாலும் அதில் ஒரு “லட்சணம்” இருக்கும்.புத்திசாலித்தனம் இருக்கும்.கொஞ்சம் யோசித்தால் இது ஆராய்ச்சிக்கு உட்பட்ட இசைக்கோர்ப்புகள் என்று தோன்றும்.நான் முதலில் சொன்னது போல் “லேத் பட்டறை”  தட்டல்கள் இல்லை.

வண்ண வண்ண பூக்கள்--”இள நெஞ்சே வா”
தாளக்கட்டுகளின் தனி ஆவர்த்தனம்.இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்.பின்னி விட்டார் ராஜா.அற்புதமான மெட்டு.ஜேசுதாஸ் பின்னிவிட்டார்.

காட்டின் அழகை புல்லரித்துக்கொண்டே பாடும் பாட்டில் வித்தியசமான ரிதம்.

வீரம்,கம்பீரம்,உறுமல்தான் தோல் கருவிகளின் பிரதான உணர்ச்சி.”புளகாங்கித மன நிலையை”தோல் கருவிகளில் எழுப்பிக்கொண்டுவருவது ஒரு சவாலான முயற்சி. Hats off  Maestro!

கொச்சு கொச்சு மாதிரி இங்கும் (மேற்கத்திய +இந்திய )தாளக்கட்டுக்கள்.மாறி மாறி இதில் ஒரு தட்டு அதில் ஒரு தட்டு.ஆச்சரியமான விஷயம்,தட்டலின் போது இனிமையை கோட்டை விடாமல் மெயிட்டன் செய்வது.

1.30  முதல் 1.51 வரை வானவில்லின் வர்ணஜால தாளங்கள்.ரேஷன் கார்டு
வைத்துத் தட்டுகிறார்?அவ்வளவு தாள மாத்திரைகள்?

ஒவ்வொன்றும் ஒவ்வொரு எமோஷனில் உரையாடுகிறது.wonderstruck.அதுவும் 1.41-1.45 வரும் நாதம் It is highly divine! 


3.23 -3.50 ராஜாவின் வர்ண மத்தாப்புகள்/புஸ்வாணங்கள்.மாஸ்டர் ஆஃப் வெரைட்டி.

1.30 வரை மேற்கத்திய ரிதம்தான்.முதல் சரணம்,(பச்சை புல்)இரண்டாவது சரணம்(அற்புதம் என்ன) பின் வரும் தாளம் மாறி மாறி தபலாவின் கிழே இறங்கி மீண்டும் டிரம்ஸில் மேல் வரும்.அட்டகாசம்.

R&D பண்ணும் அளவுக்கு தாளக்கட்டுக்கள்.

இளையாராஜா என்னும் இசை மேதை வாழும் காலத்திலேயே நாமும் வாழ்வது நமக்குப் பெருமை.

இன்னும் நிறையப் பாட்டு இருக்கு.பிரமிச்சு பிரமிச்சு களைத்துவிட்டதால் பின்னால் தொடரலாம்.


படிக்க:
இளையராஜாவின் -நாத உரையாடல்கள்


Wednesday, February 17, 2010

சுதா- ராஜேஷ் பத்து ரூபாய் நோட்டில்

கேனரா பேங்க் கேஷ் கவுண்டரில்
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று அலசப்பட்டு
என் கைக்கு வந்த நோட்டில்
ராஜேஷ் சுதாவைக் காதலிப்பதாக 
சொல்கிறார்


















 புத்தம் புது காதல்

பழசாகிவிடலாம்
காட்டாங்குளத்தூர் வருவதற்கு முன்பே

காஷ்மீர் முதல் கன்யாகுமரி
ராஜேஷ் சுதாவை காதலித்தபடிதான்
போவார்

மகாத்மாவும் புன்னகையுடன்
தொடர்வார்

சுதாவிடம் இது போகுமா
என்று தெரியாது

ஆனால் இந்த கவிதை எழுதி
முடித்தவுடன்
ஆவின் பால் போடும்
கிருஷ்ணகுமாரிடம்
போய்விடுவார்கள்


Tuesday, February 16, 2010

மொழிமாற்று சிறுகதைகள் -ஒட்டாமை

பல வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் மொழிமாற்றுக்(அயல் நாடு) கதைகள் படிக்கும் போது, கதைகள் மனசுக்கு ஒட்டாமல் தள்ளியே நின்றது.இதை சிபாரிசு செய்தவர்கள் மீது செம்ம கடுப்பு வரும்.சும்மா ஒரு பில்ட் அப்புக்காக பிடிவாதம் பிடித்துக்கொண்டுப்படித்தேன்.

ஒட்டாமைக்குக் காரணம் அன்னியத்தனம்.இதில் வரும் களம்,கதை மாந்தர்கள்,கதை,பேச்சு,இனம்,உணர்ச்சிகள் வெளிப்படுத்தும் விதம்,ஆழம் புரியாமை முக்கியமாக காலம்.அடுத்து மிக மிக முக்கியமானது இதன் மொழி பெயர்ப்பு மொழி.

நடைமுறைத் தமிழில் இல்லாமல் கட்டுரைத் தமிழ்.படிக்கும்போதெல்லாம்  கல்லூரியில் படித்த nondetail ஞாபகம் வரும்.

”ஜேபியில் இருந்து இரண்டு பிராங்குகளை எடுத்து லேவா தேவிக்காரரிடம் கொடுத்து ”எஜமானனே..! வரும் இலையுதிர்காலத்திற்குள் ரொக்கப்பணத்தைக்
கொடுத்துவிடுவேன் இல்லாவிட்டால் ஜவாப்தாரியாக என் “லோபர்ஸ்” மாளிகையை வைக்கிறேன்”தன் தேனீர் கோப்பையை ஆற்றியபடிச்சொன்னான்.ஜன்னல் கிராதியில் சூர்ய கிரகணக் கற்றைகள் விழுந்திருந்தது.

எப்படி ஒட்டும்?

அடுத்த சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சம் ஒட்ட ஆரம்பித்தது.காரணமும் பிடிபட ஆரம்பித்தது.முதல் காரணம் நான் படித்த காலத்தில் மட்டமான மொழிப்பெயர்ப்பு.(இப்போதெல்லாம் நல்ல மொழிபெயர்ப்பு வருகிறது)அடுத்து வெகுஜனத்திலிருந்து இதற்கு “சட்”டென்று இதற்குள் தாவி குதிக்கக் கூடாது.

ஒரு மாதிரி smooth transition இருக்க வேண்டும். இந்த மெதுவான மாறுதலுக்கு பரந்துபட்ட வாசிப்பு அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும். நம்ம ஊர் புதுமைப்பித்தன் கதைகளைப் படிப்பதற்கே பரந்துபட்ட வாசிப்பு அனுபவம் இருந்தால சில கதைகள் புரியும்.இந்த பின்புலத்தை வைத்துக்கொண்டு மெதுவாக “பழகி”க்கொள்ள வேண்டும்.வெளிநாடுகளின் அரசியல்,வாழ்வு நிலை இத்யாதிகளையும் தெரிந்துக்கொள்வது நல்லது.

அடுத்து ஹாலிவுட் கிளாசிக் படங்கள்,உலக திரைப்படங்கள்,நம்ம ஊர் கிளாசிக்ஸ் என்று பார்த்துப் பழகிக்கொள்ள வேண்டும்.இதெல்லாம் செய்தால்  அந்த அலைவரிசைக்கு வருவோம்.நம்மூர் கதா பாத்திரங்களை அப்படியே அங்கு எதிர்ப்பார்க்க கூடாது.அப்படி இருந்தால் கதை கந்தல் ஆகிவிடும்.மொழிமாற்றுக் கதையின் ஆதார ஆன்மாவே போய்விடும்.

மொழிபெயர்ப்பு சாதாரண வேலை இல்லை.மொழிபெயர்ப்பாளர் வாசிப்பவனைவிட பத்து மடங்கு மேலே இருக்கவேண்டும்.

”கோசலையம்மாள் எல்லாக் குடும்பத்திலும் காண்கிற நடுத்தர ஸ்திரீதான்.பங்கரையாக இருக்க மாட்டாள்; சப்பை மூக்கில்லை; சோழி முழியில்லை; நவக்கிரகப் பல்லில்லை; புஸூ புஸூவென்று ஜாடி இடுப்பில்லை; தட்டு மூஞ்சி இல்லை; எண்ணெய் வழியும் மூஞ்சியில்லை; அவ்வளவுதான். அவலட்சணம் கிடையாது. அழகு என்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. மாநிறம்” 

இது ”சண்பகப் பூ” சிறுகதையில் வரும் ஒரு பாரா -  தி.ஜானகிராமன்

ஜெர்மனிலோ/பிரெஞ்சிலோ/உஸ்பெஸ்கிதானிலோ மொழிபெயர்ப்பில் படிக்கும் ஒருவருக்கு  நமக்கு ஒட்டுவது மாதிரி ஒட்டுமா?

சும்மா  சுமாரான ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தேன்:-

“Kosalai Amma looks  like  typical next door middle class  lady.Yet she does n"t look ugly.Her nose is  not flattened; Her eyes are never..bulged one? Has  teeth never look unevenly projected.Her waist does not look like barrel.Has face that never looks ....?She is not pretty,but not sluttish.Has no oily face. little fair complexioned..that"s all."

Saturday, February 13, 2010

அதிரும் காதல் குறுஞ்செய்திகள்

கங்கா”ஸ் காப்பிக்கொட்டை கடை
முதல் கிராஸ் தெரு முக்கு
டைப்ரைட்டிங் இன்ஸ்டிடீயூட்
பெருமாள் கோவில் பிரகாரம்
ரயில்வே ஸ்டேஷன் பிரிட்ஜ்
கோபிநாயர் டீக்கடை
டுயூஷன்  மாமி வீடு


யார் காதலையோ
எவர் காதலையோ
எப்பவோ எதிர்பார்த்து
தோற்றுப்போன இடங்கள் மீது


மோதி அதிர்கின்றன
குறுக்கும் நெடுக்குமாக
காதல் குறுஞ்செய்திகள்



Wednesday, February 10, 2010

கெய்சனும் ”கட்டிங்” பாரும் திஜாவும்

இந்தியாவில் கடந்த 25 (மேலேயே?)வருடங்களாக பைவ் எஸ்,சிக்ஸ் சிக்மா,கெய்சன் போன்ற சித்தாந்தங்கள் பொருள் உற்பத்தி மற்றும் சேவை கம்பெனிகளில் முழுமூச்சில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கு  ஒரு கார்பரேட் குமபலே (VP/P/GM)அதிக சம்பளத்தில் ஏசி கான்பரன்ஸ் ரூமில் (கையில் லேப்டாப்புடன்) தீவரமாக சிந்தித்து இதை நடை முறைப்படுத்துவார்கள்.படுத்தியதும்,படுத்தியது சரியாக இருக்கிறதா என்று  சரி பார்க்க ஒருவர் (அவர் Global Head) ஜப்பானில் இருந்து வருவர்.

எல்லாம் முடிந்து மாலை மங்கியதும் இந்திய நிர்வாகிகள் அவருடன் ேர்ந்து பாரில் ”கட்டிங்”
போடுவார்கள்.ஒரு MNC யில் இருந்த போது நானும் ”கட்டிங்”போட்டிருக்கிறேன்.ரூமுக்கு கொண்டுவிடும்போது பார்த்தால்அவர் ரூம் தாறுமாறாக இருக்கும்.

முதல் முறை இந்த பைவ் எஸ்,சிக்ஸ் சிக்மா,கெய்சன்களை உள் வாங்கியபோது “அட... புண்ணாக்குகளா...! இது ”ஒயிங்க சர்வீஸ் கொடு,பர்பெக்ட்டா பொருள செய், எதையும் வேஸ்ட் பண்ணாத,இடத்த கலீஜ் பண்ணாத வச்சுக்கோ,தேங்கிப்போகாம மேல மேல மேம்படுத்து.எல்லாம் ஒழுங்கா செஞ்ச சூப்பர் லாபம்,சுத்தம்,நம்பர் ஒன் கம்பெனி”
இதப்போய் ஸ்பைரல் பயிண்டிங்கில் கொடுக்கும்  ”பில்ட்-அப்” பாண்டுரங்கன்கள் இவர்கள் என்று ”சிப்பு” வந்தது.

கடைசியில் ஜென் தத்துவம் மாதிரி “அவ்வளவுதான்.. நீ போகலாம்” என்று மனம் சொல்லியது.

என்ன வித்தியாசம்?நமக்கு எல்லாம் தெரியும்.நாம் “கச்சா முச்சா” வென்று செய்வதை இவர்கள் ஒழுங்குப்படுத்தி சீர்படுத்தப்பட்ட முறையில் செய்ய வைக்கிறார்கள்.

தி.ஜானகிராமனின் ஒரு சிறு கதையில் ஒரு பழைய பேப்பர் வியாபாரி தன் எடைபோடும் தராசைப் பற்றிச்சொல்லும்போது”இது எளுதின கடுதாசிக்கும் எளுதாத (வெள்ளை) கடுதாசிக்கும் வித்தியாசம் காட்டும்”.அவ்வளவு துல்லியமாக எடைப் போடும் மிக தரம் வாய்ந்த தராசு.

அவ்வளவு துல்லியமாக குறையில்லாமல் இருக்க வேண்டும் தயாரிக்கப்படும் பொருள்கள்.

Six Sigma:பொருள் உற்பத்தி அல்லது சேவையை பழுது (100%சதவீதம் பெர்பெக்ட்)இல்லாமல் கொடுப்பதை அணுகும் முறை.அதற்கான வழிமுறைகள்.

Five "S":(பாக்டரிகளில்)ஒழுங்கா,சுத்தமா,அடுக்கி வை.வேண்டாதத ஒரம் கட்டு,டக்னு தெரியமாதிரி வை,ஈசியா ஹாண்டில் பண்ற மாதிரி வை,சரியாக்கி அதேயே பாலோ பண்ணு,

Kaizen:செய்யும் வேலைகளை ”தொடர்ந்து” மேம்படுத்திக்கொண்டே இருத்தல்.சுலபமாக செய்தல்.இந்த பிரபஞ்சம் முடியும்வரை.சிறப்பாக செய்தல்.இது கம்பனியில் எல்லா துறைக்கும் எல்லோருக்கும் பொருந்தும்.

சில கம்பெனிகளில் கத்தை கத்தையாக கெய்சன் போட்டு அசத்துவார்கள்.

மேலுள்ள சித்தாந்தங்களை நாம் வீடு நாடு எல்லாவற்றிலும் நடைமுறைப்படத்தலாம்.சிரத்தையாக செய்தால் உண்மையிலேயே நல்ல பயன்.

ஒரு காலத்தில் ரயில்வே டைம்டேபிள் பார்த்தால் தலைசுத்தும்.அங்கும் Kaizen போடப்பட்டு (Continuous improvement?)எளிமையாக்கப்பட்டதாக கேள்வி.இப்போது(கடந்த 20 வருடங்களாக)அட்டகாசம்.It is very very  userfriendly.


நான் என் பளாட்டில் போட்ட கெய்சன்(ரொம்ப ரொம்ப பழசு): பேப்பர் போடுபவர் ஒவ்வொரு மாடிக்கும் லிப்டில் போகாமல் முதலில் மேல் மாடிக்கு லிப்டில் போய் அங்கிருந்து ஆரம்பித்து வரிசையாக போட்டு படியில் இறங்கியபடியே கிழே  வந்துவிடலாம்.இதில் நிறைய எனர்ஜி,டைம்,செருப்புத் தேய்மானம்,வெயிட்டிங்,சேமிக்கலாம்/குறைக்கலாம்.

பாரில் போட்ட கெய்சன்: அருணா இன் பாரில் வித விதமான  சைட் டிஷ்ஷை ஜலதரங்கம் கப் போல் டேபிள் புல்லாக வைப்பார்கள்.”கிளாஸ்” வைப்பதற்கு இடமே இருக்காது.சில  அயிட்டங்கள் (பிடிக்காமல்)சாப்பிடாமல் வேஸ்ட் ஆகும்.முதலிலேயே சொல்லிவிடுவது பிடிக்காத அயிட்டங்களை கொண்டுவரவேண்டம் என்று. சரி என்ன பயன்?


1.வெயிட்டர் எல்லாவற்றையும் சுமக்க வேண்டாம்.
2.டேபிளில் நிறைய இடம் இருக்கும்
3.வேஸ்ட் ஆகாமல் இருக்கும்
4.பாருக்கும் சைட் டிஷ் சேமிப்பு அதிகமாகும்
5.ஆறிப் போய் திரும்ப எடுத்துப்போனால் நமத்துப்போகும்.


(மேல ஒரு சார்ட் இருக்கே அது என்னங்க? சைட் டிஷ் சார்ட்டா?)

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக  “பாரில்” கெய்சன் போட்ட முதல் தமிழ் குடி மகன். 



Monday, February 8, 2010

இளையராஜாவின் -நாத உரையாடல்கள்

மேஸ்ட்ரோவின் பாடல்கள் ஆரம்பம் முதல் முடியும் வரை மெலடியான வர்ணஜாலம்தான்.மிக முக்கியமானது இசைக்கருவிகளுக்குள் நடக்கும் இனிமையான நாத உரையாடல்கள். “கலகல” வென்று இவைகளின் இடையில் நடக்கும் பல வித ரசங்கள் படர்ந்த உரையாடல்கள் மனதை வருடும். Full of emotions and soul stirring!

சின்ன சின்ன நாதங்கள் ஆச்சரியமாக சந்தில் சிந்து பாடி கண்ணாமூச்சி ஆடும்.எலக்ட்ரானிக்சில் எழுப்பப்பட்ட செயற்கையான நாதம் கிடையாது.ஆதமார்த்தமாக பார்த்துப்பார்த்து இயற்கை இசைக்கருவிகளில் மீட்டெடுத்தது.உரையாடல்களில் மியூசிகல் சேர் இசை போல் அமெச்சூர் நெடி அடிக்காது.

இசைக்கோர்ப்புகள் இணையும் இடங்களில் அசட்டுத்தனம் இருக்காது.

எண்பதில் வந்த பாடல்களின் உரையாடல்கள் முக்கியமானவை.ஏன்? எல்லாம் நேரலை ஒலிப்பதிவுகள்.தப்பு செய்தால் மீண்டும் இசைக்க வேண்டும்.அடுத்து சிங்கிள் மைக்(?).

சில உரையாடல்கள் eternal bliss!

புதுப்பட்டி பொன்னுத்தாயி 
ஊர் அடங்கும் சாமத்திலே (உமாரமணன்-ஸ்வர்ணலதா)

இதமான தாளக்கட்டு..”யாரு அது யாரு யாரு” ஸ்வர்ணா கேட்க பதிலாக உமாவின் ஹம்மிங் அருமை.1.05 - 1.16 வரை ஹிந்தோள சாயலில் புல்லாங்குழலும் வயலினும்(செல்லோ?)நடத்தும் பேச்சுவார்த்தை பிரமிக்க வைக்கிறது.
அமானுஷ்யமாக வரும் வயலினின் மேற்கத்திய நாதம் வித்தியாசம்.

தாளத்தின் ரிதத்திலேயே ”நீ தந்த பட்டுச் சேலை” என்று உமா முதல் சரண வரிகளை எடுப்பது அருமை.

கிழே படத்தில் இருக்கும் காயத்ரி மேம்தான் ஆரம்பகாலத்தில் ராஜாவுக்கு வீணை வாசித்தவர். (மேம்..!ராஜா off the trackல் வாசிக்கச் சொல்லுவாரமே!)



படம்:பூந்தளிர் 
பாடல்-ஞான் ஞான் பாடனும்   ( ஜென்சி)

பாடல் 1979.இன்னும் கமகமவென இப்போது பறித்த கறிவேப்பிலை மணம்.இது ஒரு வித்தியாசமான கலர்புல் கம்போசிங்.ஜென்சியின் இளசான ரம்மியமான குரல்.
மலையாளமும் தமிழும் கலந்து வருவது ஒரு வசீகரம்.இந்த பாட்டில்இசை நாதங்கள் பூத்துக்குலுங்கியபடிதொங்கிக்கொண்டிருக்கும்.

ஆரம்பமே  ரொமாண்டிக் தபலா.. 00.00-0.23 முதல் 0.10ல் வயலினில் அழகு படுத்தி 0.23ல் பாடகி பல்லவி வரும் என்று நினைப்போம் ஆனால் 0.24ல் வேறு ஒரு நாதத்தில் (synth)ஒரு பைனல் டச் கொடுத்துவிட்டுதான் பல்லவியில் சேச்சி பாட்டு படிக்கும் .அடுத்து 1.10 -1.39 வர்ணஜால உரையாடலைக் கவனியுங்கள்.அதுவும் 1.31 -1.36 புல்லாங்குழல் - வயலின் உரையாடல் சுகந்தம்.அடுத்த பேச்சு வார்த்தை 2.31 -3.07

(ஓ... சேட்டா! ஜென்சி குட்டிக்கு பாட்டுப் பறையானும்?)



படம்:புதிய வார்ப்புகள்
பாடல்-தம்தனனம் (ஜென்சி/வசந்தா)



பாடகி வசந்தா(”மணமாலை வரும்..! சுப வேளை வரும்..!மண நாள் திருநாள்)



(இவங்க பேரு புண்யா ஸ்ரீனிவாஸ்.இவங்களும் ரிக்கார்டிங்கில்ராஜாவுக்கு வாசிச்சதா கேள்வி)

சின்ன சின்ன சந்தங்களில் ஒரு இனிமை கம்போசிங்.

முதலில் வீணையில் மீட்டெடுத்த ராகம் ஷண்முகப்ரியாவின் நாதங்கள் அலையாக அலையாக வரும்.இதில் குரல் உரையாடல்கள் ஒன்றை ஒன்று இனிமையாக பின்னியபடி வரும்.இதில் ஜென்சியின் மூக்கிசை சூப்பர்அடுத்து முதல் 1.08 -1.44 வரை ”ஒரு ரூம் போட்டு” நாதங்களின் வயலின்,வீணை,புல்லாங்குழல்,synth,பெலஸ்,ஹம்மிங்கலந்துரையாடலைகவனியுங்கள்.ஆச்சரியமாக மேற்கத்திய talkக்கும் வரும்.

தெலுங்கச்சி(வசந்தா) vs மலையாளச்சி (ஜென்சி)உச்சரிப்பையும் கவனியுங்கள்.

படம் -மோகமுள்பாடல் :சொல்லாயோ வாய் திறந்து -ஜானகி

”தம்தனனம்” மெட்டும் இந்தப் பாட்டின் மெட்டும் ஒரே சாயல் அடிக்கும்.காரணம் ரெண்டுமே ஷண்முகப்பிரியா ராகத்தில் கம்போஸ் செய்யப்பட்டது.”தம்தனன”பாட்டின் எமோஷன் ஒரு விதம்.

இது ஒருசோகஎமோஷன்.எப்படி?.அதான் மேஸ்ட்ரோ.

இந்த ராகம் பல உணர்ச்சிகளைப் பிரதிபலிக்ககூடியது.பிரித்து மேயலாம்?
1.08 -1.34 சோக உரையாடலில் வீணை(சிதார்?)யின் நாதத்திற்கு எக்கோவாக வயலின் நடுவே புல்லாங்குழலின் சந்தில் சிந்து. உருக்கும் பாடல் வரிகள்.

படம் வந்த போது தி.ஜானகிராமன் உயிரோடில்லை.



பாடம்: நீங்கள் கேட்டவை(ஜானகி/எஸ்பிபி)
ஒ.. வசந்த ராஜா!

ஆரம்பமே ராஜா கம்பீர ட்ரம்சில் குமுறல்.1.03 - 1.35 இந்திய இசையில்மிருதங்கம்,சிந்தசை,புல்லாங்குழல்,வயலின்,
வீணை 
(மிருதங்கம் -புல்லாங்குழல் ஸ்டைல் உரையாடல் அட்டகாசம்)உரையாடல்.

2.39 -3.14 மேற்கத்திய இசையில் உரையாடல்.ஒரு இடத்தில் நின்னு பேசுவார்.ஓ ... ராஜா சூப்பர்!


படம்: தம்பிக்கு எந்த ஊரு

0.00 -0.44  பிறகு 1.08 -1.28 தபலா vs கிடார் 1.28 -1.55 வயலின் -சிந்தசை-கிடார் வயலின் -வீணை-புல்லாங்குழல்-ட்ரம்ஸ் அடுத்து 3.33 -3.55ஊட்டி டிரெயினுக்கு உரையாடலில் ஒரு பிஜிஎம்.அசத்தல்!

படம்:தீர்த்தக்கரையினிலே

பாட்டு::விழியில் ஒரு கவிதை மனோ-சிதரா


ஆரம்பமே ஷெனாயின் நாதக் கிளர்ச்சியில் வயலினின் உரையாடல் பிறகு கிடார்....1.20 -1-29 என்ன ஒரு மங்களகரமான இசை சங்கமம்? stunning! தேஷ் ராகத்தின் ஸ்வர சாயல்கள் (?) தெறித்தப்படி .........

அடுத்த இசை அதிர்ச்சி அண்ட் கவுண்டர் பாயிண்ட்ஸ் 2.40 - 3.03 .

தபலா அசத்தல்.சித்ரா குரல் இனிமையோ இனிமை.! அட்டகாசம். 

நெருடல் “இத”ளி”ல் ஒரு அமுதம் குடித்தேன் - மனோ

சோகத்திற்கு ஷெனாய். ஆனால் இதில் மகிழ்ச்சிக்கு வாசிக்கப்பட்டிருக்கும்.  தல! லொள்ளு ஜாஸ்தி!இது மாதிரி நிறைய லொள்ளு பண்ணுவார். 

ஹெட்போனில் கேட்டால் வேறு சில கருவிகளின் நாதங்களும் கேட்கலாம்.





இவர்தான் அருண்மொழி பாடுவார்.ராஜாவுக்கு புல்லாங்குழல் வாசிப்பார்.(இது ஒரு பொன்மாலைப் பொழுதில் வரும் பீஸ் வாசிக்கிறீங்களா!)


 காதல் ஓவியம்

பூவில் வண்டு - SPB

முதலில் ரம்மியமான ஹம்மிங்கைத் தொடர்ந்து மோகன சாயலில் 0.27.....................0.56 ?.அடுத்து 2.56 ...3.10 ?

(ஹல்லோ! மிஸ்டர் Tamil bird! நீங்க சொல்லுங்க!)

 
படிக்க:
இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்



Saturday, February 6, 2010

காணவில்லை- Followers & Hits விட்ஜெட்ஸ்

என் வலையில் குடித்தனம் இருந்த 105 Follwers பிறகு 45000 மேலான ஹிட்ஸ் விட்ஜெட் திடீரென்று காணாமல் போய்விட்டது.மூளியாக இருக்கிறது.பார்க்கவே சகிக்கவில்லை.உழைச்சு சம்பாதித்தது.

என்னுடைய பழைய பேக்-அப்பை(11-1-10) இறக்குமதி செய்தால் இவர்கள் மீண்டும் வருவார்களா?அல்லது பதிவுகள் மட்டும்தான் வருமா?11க்கு பிறகு போட்ட பதிவுகள் அழிந்துவிடுமா?

வேறு ஏதாவது வழி இருக்கா?(நல்லா வேணும் .ஆடிய ஆட்டம் என்ன? கூறிய வார்த்தை என்ன? அப்படின்னு லவுட்ஸ்பீக்கர்ல பாட்டுப் போட்டு நினைக்காதீங்க)சொல்லுங்க ஜெண்ட்டில் வுமன் அண்ட் மேன்.

”கழுதையாவாரிகள்”- கோணங்கி-கனக்கிறது

நகரவாழ்க்கையில் ”செல்லத்திற்காக” புசுபுசுவென பூனைகளும் நாய்களும் வளர்ப்பார்கள்.மேலை நாட்டில் குழந்தைகள் (இங்கும்தான்)”டெட்டி பியர்”என்னும் டெட்பாடி புசுபுசுவை இரவில் கட்டிக்கொண்டு உறங்குவார்கள்.இயற்கையாகக் கிடைக்காத தொப்புள் கொடி உறவுகளை “அவுட் சோர்ஸ்” செய்து கட்டிக்கொள்ளுவது மானுட்டத்தின் அவலம்.


ஆனால் கோணங்கிக் கதையில் ஒரு வண்ணார் தன் கழுதை செல்லங்களைப் பிரிந்துவாடுவதுதான் கதை.

”என்னைப்பார் யோகம் வரும்” என்று வீடுகளில் இரண்டு கழுதைச் சாமிப்படம் மாட்டி யோகத்தை எதிர்பார்த்து தினமும் பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஒரு பக்கம்.தன் தொப்புள்கொடி உறவாகப் பிணைந்துவிட்ட தினமும் நேரடியாகவே பார்த்துக்கொண்டிருக்கும் பொதிசுமக்கும் கழுதைகளை எந்த யோகமும் வராமல் ”அடிமாட்டு” விலைக்கு,தன் மகனின் படிப்புக்காக விற்றுவிட்டு அதன் நினைவு சுழலில் மாட்டிக்கொண்டு பொதி சுமக்கிறான் அய்யன் என்கிற கிராமத்து வண்ணான் இது மற்றொரு பக்கம்.

கழுதைவிற்றப் பணத்தில் படித்து,”தபால்” பொதி சுமக்கும் வேலைக்குப் போகிறான் அய்யன் மகன்.

அவன் அப்பாவாவது தேவலை நினைவில் பொதி சுமக்கிறார். ஒரு நாள் இவன் ராசப்பன் தோளில் தபால் பொதியை சுமந்தப்படி நேரலையாக தன் வீட்டுக் கழுதைகளை ரோட்டில் பார்த்து மனது கனக்கிறான்.அவைகள் இப்போது சுமப்பது ரொம்ப வெயிட்டான “மணல் பொதிகள்”.

ஒரு குறும்படத்திற்க்குண்டான எல்லா விஷயங்களும் இதில் “பொதி”ந்துள்ளன.எடுப்பவர் நன்றாக உள்வாங்கி எடுக்க வேண்டும்.

கதைச்சொல்லி அப்பன், மகன் என்று இரு பார்வைகளில்
பாவப்பட்ட ஜென்மங்களைச் சொல்கிறார்.கதைச்சொல்லி உணர்ச்சிகளைப் பின்னிய பின்னலில் கதைப்பூராவும் கழுதைகள் நம்மை உற்றுப்பார்த்து வலிக்க வைக்கிறது.விற்ற கழுதைகள்(நாய் பூனைப் போல) வீட்டிற்க்கு திரும்பி விடாதா என்று மனம் ஏங்குகிறது.

படிக்கும்போது ரததமும் சதையுமாக கண்முன் ஓடி பிராண்டிய காட்சிகள்:-
(ஹாலிவுட் படங்களில்தான் இது (கணவன்-மனைவி) மாதிரி உணர்வு பூர்வமான காட்சிகளை மூட் லைட்டிங்கில் அசத்துவார்கள்)

”ஏத்தா...சுந்தரீ..என்று அய்யன் பெஞ்சாதியைக் கட்டிக்கொள்ள ”அய்யனே உனக்கு ஆங்காரம் ஆகாது.உம்ம மனசு குளுந்திரனும்.எப்பவும் போல இருக்கனும்.” என்று சுந்தரி அவனைத்தேத்தி,அவளின் குளுந்த வார்த்தைக்குக் கிறங்கிப்போய் தூங்கி விடுகிறான். soul stirring!(இந்த மாதிரி கதை கணங்களில்,அதுவும் கிழ் மட்டத்தில், கணவன் மனவி உணர்ச்சிகள் ஒரு அலைவரிசையில் இருப்பது அபூர்வம்) 

கழுதைகளின் முகத்தில் கவிந்த சோகபாவத்தைப் பார்த்ததுமே ஈரக்குலை நடுங்கியது..................கண் தூரத்தில் மணல் பொதிகளுடன் அவற்றின் குள்ம்பொலிகள் தார் ரோட்டில் ஒலித்துக்கொண்டிருந்தன.

.........கழுதைகள் போகிற இடத்தைக் கண்டுபிடிக்கும் ஆசை உந்தித்தள்ள(sadistic pleasure அல்லது நகை முரண்?).....ராசப்பன் அவற்றைப் பின் தொடர்ந்தான்...

....அய்யன் வானத்தை அண்ணாந்துப் பார்த்தான்.வெளுத்த உருப்படிகளாய் மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன.வானத்து உயரத்தில்..........மேகங்களுக்கு இடுவலில் இருந்து ராசப்பன் இறங்கி.......”

.”..தெருக்களும் காரைச் சுவர்களும் கழுதைகளைப்போல் தலை அசைத்து நடந்துக்கொண்டிருந்தன.........”

இது மாதிரி நிறைய வரிகள்.

கதைக்கு திருஷ்டிப்போல “மனித அவமதிப்பின் மொத்த”என்ற கடைசிப்பாரா கதைச்சொல்லியின் குரல் ஏன்? கதை எழுதி முடிக்கும்போது வெடித்துவிட்டரா?

சற்று உற்று நோக்கினால் மட்டுறுத்தப்பட்ட தி.ஜானகிராமன் உணர்ச்சி நடைகாணலாம்.

நன்றி: ”முத்துக்கள் பத்து -கோணங்கி கதைகள்”-அம்ருதா பதிப்பகம்

Monday, February 1, 2010

ஆயிரத்தில் ஒருவன் - சென்சார் கட்ஸ்

பொதுவாக சினிமா படங்கள் படப்பிடிப்பு முடிந்ததும் சென்சாருக்கு சென்று "A" (வயது வந்தோர் மட்டும்)அல்லது "U" (தடையில்லாமல்அனைவரும்)அல்லது "U/A"(தடையில்லாமல் ஆனால் 12 வயதுக்கு கிழ் உள்ளோர் பெற்றோரின் வழிகாட்டுதல் படி  பார்க்கலாம்) என்று அதன் உள்ளடக்கத்திற்கு ஏற்றாற்போல் சான்று வாங்கி ரிலீஸ் செய்யப்படும்.



எந்த காட்சிகள்  வெட்டப்பட்டது அல்லது எந்த வசனங்கள் ஊமையாக்கப்பட்டது (mute)(”கொய்ங்”என்று  ஒரு ஒலி வரும் வசனத்தினிடையே ) என்று விவரங்கள் அடங்கிய ஒரு போட்டோ காபி சினிமா தியேட்டர்களில் டிஸ்பிளே செய்திருப்பார்கள். இதைப்பார்க்க ஒரு கூட்டம் பார்க்க அலை மோதும். எனக்கும் ரொம்ப ஆர்வம் உண்டு.

 டிஸ்கி:பின்வருவன சில பேருக்கு அதிர்ச்சி தரலாம்.முதலில் எனக்கும் அதிர்ச்சிதான்.ஆனால் இதையெல்லாம் கிட்டத்தட்ட 25 வருடமாக பார்ப்பதால் மற்றும் சென்னை மாநகரத்தின் செம்மொழிகள் அத்துபடியானதால் இதெல்லாம் ஜூஜூபி ஜக்குபாய் ஆகிவிட்டது !




ரீமா என்ன சொல்றாங்க? muted?



ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சென்சார் பரிந்துரைகள்: (என் ஞாபகத்தில் இருந்தது.தவறு இருந்தால் திருத்தலாம்)


1.”தயவு செய்து இது முழுவதும் கற்பனையே.சோழ பாண்டிய வரலாறு இதன் சம்பந்தம் இல்லை என்று ஒரு டைட்டில் கார்ட் போடுங்கள்”(செல்வராகவன்தான் இதை போட்டவர் என்று நாம் நினைக்கிறோம்.ஆனால் கதை வேறு)

2.”நாதாரி முண்ட” ”ஓத்தா” “புண்ட மவளே” “தேவடியா பையா” “ass hole""fuck you” போன்ற வார்த்தைகளை நீக்கவும்.(ஊமைப்படுத்தவும்(mute)?)

3. “அந்த இரண்டு பெண்களும் மது அருந்தும் காட்சியை ரொம்ப நீட்ட வேண்டாம்”

4.”ஆர்மி சிறு பெண்னை வன்புணரும் காட்சியின் தீவரத்தைக் குறைக்கவும் (அல்லது வெட்டவும்?).”

5.”சோழ மன்னனின் மனைவியை வன்புணரும் காட்சியை நீக்கவும் (வெட்டவும்?)

6.”தலை வெட்டப்படும் காட்சியின் தீவரத்தை குறைக்கவும்.”(வெட்டவும்?)


சென்சார் போர்டு பற்றிய சிறு பதிவு விரைவில்.....