Saturday, August 30, 2014

அம்மா காதல் பாட்டு-உருகும் குழந்தை

பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரொம்ப நெகிழ்ந்துபோன பிரபலமான வீடியோ.பாப்பாவிற்கும் அம்மாவிற்குமான தொப்புள்கொடிசார்ந்த ஹைவோல்டேஜ் எமோஷனல் கொந்தளிப்பு.அம்மா பாடும்பாட்டு நம்ம ஊர் தாலாட்டுப் பாட்டா இல்லை அவர்கள் ஊர் லல்லுபையா? இரண்டுமே இல்லை.

அது கணவன் வேறு ஒருத்தியுடன் தொடர்பு வைத்திருப்பதைக் கண்டு மனைவி நம்ம ஊர் சினிமா கதாநாயகிகள் கணக்காக கவித்துமாக  புலம்பும் பாடல்.அம்மாவிற்குப் பிடித்தப்பாடல்?

ஆனால் அம்மா பாடும்போது பாப்பா கட்டுக்கடங்காமல் உணர்ச்சி
வசப்படுகிறது.

அம்மா முழுவதும் பாடவில்லை.”This time I won"t lose control" வரைப் பாடிவிட்டு'”So I let you in knowing" மீண்டும் பாடுகிறார்.ஒன்றை கவனித்தீர்களா? வரிகளைப் பாடும்போது அழுவதும் நிறுத்தியவுடன் சிரிப்பதும் மீண்டும் அழுகை-சிரிப்பு-அழுகை-சிரிப்பு.ஏதோ கண்ட்ரோல் பாயிண்ட் உள்ளுணர்வில் வைத்திருக்கிறது.அம்மா பாடும்போது முகபாவத்தைப் பார்த்து பாப்பா ரியாக்‌ஷன் காட்டுகிறதா?

இதில் இன்னொரு ரசிக்கும்படியான விஷயம் அம்மா குழந்தையோடு ஆரம்பம்  மற்றும் முடிவில் உணர்ச்சிபூர்வமாக உரையாடுவது.வீடியோவின் முடிவில் ‘.ஹனி... பாடல் ரொம்ப வலிக்குதா...!அழக்கூடாது. இது ஒரு ஜஸ்ட் பாடல்தான்....இது ஒரு ஜஸ்ட் பாடல்தான்” ஆறுதலாக  கொஞ்சுகிறார்.பாப்பா சிரிக்கிறது.”மம்மி தாங்க்ஸ்” வேறு பாப்பா சார்பாக சொல்லிக்கொள்கிறார்.

 வயது பத்து மாதம்.பெயர்:Mary-Lynne Leroux அம்மா: Amanda

பாடல் வரிகள் கிழே.




பாடல்:

I don't want you to come 'round here no more
I beg you for mercy
You don't know how strong my weakness is
Or how much it hurts me

'Cause when you say it's over with her
I want to believe it's true
So I let you in knowing tomorrow
I'm gonna wake up missing you
Wake up missing you
When the one you love's in love
With someone else

Don't you know it's torture
I mean it's a living hell
No matter how I try to convince myself
This time I won't lose control

One look in your blue eyes and suddenly
My heart can't tell you no
I don't want you to call me up no more
Saying you need me
You're crazy if you think just half your love
Could ever please me

But still I want to hold you, touch you
When you look at me that way
There's only one solution I know of
You've got to stay away from me
Stay away from me
When the one you love's in love
With someone else

Don't you know it's torture
I mean it's a living hell
No matter how I try to convince myself
This time I won't lose control
One look in your sad eyes and suddenly
My heart can't tell you no, my heart can't tell you no
I don't want you to come 'round here no more
I beg you for mercy

When the one you love's in love
With someone else
Don't you know it's torture
I mean it's a living hell
When the one you love's in love
With someone else

Don't you know it's torture
I mean it's a living hell, living hell
When the one you love's in love
With someone else
Oh, don't you know it's torture
I mean it's a living hell


குழந்தையின் பெற்றோர்
நம்மூர் மாதிரி இந்தக்குழந்தையின் பெற்றோர்களை ஒரு அமெரிக்கா டிவி நேர்காணல் எடுத்தது.இந்தக்குழந்தை இந்தப் பாட்டுக்குதான் அடிமையாம்.அம்மா அதே பாட்டை பாடுகிறார்.குழந்தை கொஞ்சமாக அழுகிறது.நிகழ்ச்சி நடத்துனரும் அழுகிறார்.

குழந்தை ஏன் இவ்வளவு உணர்ச்சியில் பீரிடுகிறது? அதெல்லாம் நமக்கு எதற்கு. பார்க்க நேர்காணல் வீடியோ

http://www.ellentv.com/videos/0-8slkmyjj/


ஒரிஜினல் பாட்டு:

Monday, August 11, 2014

திருட்டு தம் என்னாச்சு?

”சிகரெட் பிடி” (இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை-பனமா,Made for each other-வில்ஸ்) என்று வற்புறுத்தும் விளம்பரங்களால்/ஹீரோக்களால் எப்படி 1960/70/80 தலைமுறை இளைஞர்கள் சீரழிந்தார்களோ அதே  “சிகரெட் பிடிக்காதே” விளம்பரங்களால்/தடைகளால்/ ஹீரோக்களால்  இந்தத் தலைமுறை  இது உடல் நலத்தைக்கெடுக்கும் பழக்கம் என்று நிறையவே விழிப்புணர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி.
இந்த மாதிரி ஸ்டைலா பிடிக்கனும்னு கத்துக்கிட்டேன் நான்
எப்படி இருந்திருக்கிறோம்... மரமண்டைகளாக.

இதுவும் தூண்டிவிடும் விளம்பரம் பக்கத்தில் பெண் வேறு

1960/70/80 சினிமாவில் எம்ஜியார் தவிர சிவாஜி மற்றும் சிவாஜிராவ்/ரங்கராவ்,எம்ஆர்ராதா,நம்பியார்,அசோகன்,மேஜர் etc., etc., ஊதி ஊதி தள்ளுவார்கள்.இதெல்லாம் ஹாலிவுட் பட பாதிப்பு.இப்போது  ஊதுவது “ஸ்டைல்” பெண்களைக் கவர,கம்பீரம்,ஆண்மை அல்ல  என்பது உணரப்பட்டுள்ளது.இது முக்கியமானது.

(அப்போது பில்டர் சிகரெட் பிடித்தால்  ஸ்டைலோ ஸ்டைல் அண்ட் ஜென்டில்மேன். பெண்கள் டாவடிப்பார்கள்).

555 ,Malbro,Dunhill,Rothmans பாரின் பிராண்ட்  சிகரெட்டுகள் வாழ்நாளில் ஒரு முறையாவது பிடிக்க வேண்டும் அன்று அடுத்தக் கட்டத்திற்கு நகர்வோம் அப்போது.

இழுக்க இழுக்க இன்பம்  இறுதிவரை (சுடுகாடு வரை)
”திருட்டு தம்” இந்தச் சொல் இப்போது அவ்வளவாக  புழக்கத்தில் இல்லை.குறிப்பாக நகரத்து பள்ளி/கல்லூரி மாணவர்கள் விலக்குகிறார்கள்.

அன்புமணி ராமதாஸை பாராட்டியே ஆகவேண்டும்.

ஆனால்....இப்போது திரவ வடிவத்தில்....


இதற்கு ஹீரோ மட்டுமில்லாமல் காமெடியன்,காமெடியினின் நண்பன், வில்லன், கடுக்கன் போட்ட பாடகர்,ஹீரோயின்  மார்க்கெட் செய்கிறார்கள்.



Sunday, July 27, 2014

கங்கை அமரன் -ஜெயகாந்தன் - கோபிநாத்-ஆதித்யா

சினிமா பாடல் வரிகள் நேரடியாக சுட்டாமல் உள் மன வெளிப்பாடு கவித்துவமாக வெளிப்பட்டால் நான் ரொம்ப ரசிப்பதுண்டு.முக்கால்வாசி பாடல்கள் இப்படித்தான் புனைவார்கள். அதுதான் கவிதை.அதில் கங்கை அமரன் வாலி பாடல்கள் நிறைய பிடிக்கும்.வைரமுத்துவின் பாடல்களை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை.

கங்கை அமரன்: ஆனந்த ராகம்-என்னுள்ளில் எங்கோ-காற்றில் எந்தன் கீதம்-சிறு பொன்மணி அசையும்-ஒரு ராகம் பாடலோடு-அந்தி வரும் நேரம்-அதோ அந்த நதியோரம்-ஏதோ நினைவுகள்


சமீபத்தில் அவரை ஒரு பேஸ் புக் குழுமம் மூலமாக சந்தித்தபோது இதைப்பற்றி சிலாகித்தேன்.”சந்தோஷம்” என்றார்.இயல்பாகவே இவர் எந்த பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் பழகக்கூடியவர்.மனதில் பட்டதைப் பேசக்கூடியவர்.

நான் அவரிடம் ராஜாவின் முக்கால்வாசி பாடல்களில் மைய இழையாக ஒரு இனம் புரியாத சோகம் ஓடுவதாக என் பீலிங்.நிறைய பேர் இதை “அப்படித் தெரியலையே” என்றார்கள் ஆனால் கங்கை அமரன் உண்மைதான் என்றார். ராஜாவின் ஆழ் மனதில் இருக்கும் தேடல் இப்படி வெளிப்படுகிறது என்றார்.

_____________________________________________________

இந்தப் பாடல் கேட்டு எவ்வளவு நாள் ஆயிற்று.எல்.ஆர்.அஞ்சலியும் கோவை செளந்தரராஜனும் பாடியது.சும்மா ஒரு ஜாலி. ஹம்சத்வனி ராகம்.எழுதியது வாலி என்று என் யூகம். “மயிலாப்பூர் மாமி என்ன பாத்தா..............
சொல்லிட்டேண்டா டாட்டா ” வரிகள் சூப்பர். இதை தேடிக்கண்டுப்பிடித்து யூ டூபில் ஏற்றினேன்.

பாட்டு: அய்யர் ஆத்துப் பொண்னு சொன்ன  கேட்டுக்கோட அம்பி



______________________________________________________

இப்போதைய (மிடில் அப்பர் கிளாஸ்)இளைய தலைமுறையைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.விதவிதமான டிரஸ்,செல்போன், வண்டி,நெட்,ஸ்டேஷ்னரி,எண்டர்டெய்ன்மெண்ட்,.காஸ்மெட்டிக்ஸ் என்று அனுபவிக்கிறார்கள்.அப்படியே ஸ்டைல் காட்டுகிறார்கள்.

என் மகன் ஆதித்யா
உதாரணமாக என் காலத்தில் ஒட்டுவதற்கு சோற்றுபருக்கை,கோந்து என்று விரல்களை பிசுபிசு என்று அழுக்காக்கிக்கொண்டு அலைவோம்.கடந்த 15 வருடமாக gluestick என்ற கையில் ஒட்டாத கோந்து வந்துவிட்டது. இதை நான் என் ஆபிஸ் பருவத்தில்தான் பார்த்தேன்.Jeans அணிந்தது என் 24 வயதில்தான்.
இப்போது ஜீன்ஸ்ஸைத் தவிர ஏதும் அணிவதில்லை இவர்கள்.அடுத்து பென்பென்சில்.எல்லாமே ஸ்டைலிஷ் ஆக இருக்கிறது.

_________________________________________________________

போன வாரம் நீயா நானாவில் “ அரசு பள்ளிகள் -தனியார் பள்ளிகள்” கருத்து மோதல்.தனியார் பள்ளி குரூப்பிடம் “மாணவர்கள்  அரசு பள்ளி வேண்டாம்... உங்கள் பள்ளியில் ஏன் சேர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்” என்று கேட்டார் கோபிநாத்.சொன்ன பதில்களில் கோபி திருப்தியாகவில்லை.

தனியார் சேனலுக்கும் அரசு சேனலுக்கும் உள்ள அதே வித்தியாசம்தான் இதற்கும் என்று எனக்குத் தோன்றியது.கோபிநாத்திற்கு தோன்றியதா?

__________________________________________________________

ஜெயகாந்தன்  ஆவியில் எழுதிய கதைகளை அதே பார்மெட்டில் ஆவி புத்தகமாக வெளியிடபோகிறார்களாம்.அந்தப்பக்கத்தில் வெளியான அப்போதைய விளம்பரம்,ஜோக்ஸ்ஸும் பிரிண்டில் வருமாம்.பழைய பார்மெட்டில் படித்த பாக்கியசாலிகளில் ஒருவன் நான்.சில கதைகளைப் படிக்க விட்டாலும் பைண்டிங்கில் படித்த ஒருவன்.”அக்கரகாரத்தில் பூனை” எனக்குப்பிடித்தமான ஒன்று.

இவரை ஒரு முறை அவரது மொட்டை மாடியில் ஒரு குரூப்போடு சந்தித்திருக்கிறேன்.என் வயது அனுபவம் காரணமாக அவர் பேசியது(நிறைய கம்யூனிச சிந்தனை) ஒன்றும் மண்டையில் ஏறவில்லை.
_________________________________________________________



Friday, May 2, 2014

கர்நாடக இசை(கன்)பியூஷன்/சிம்பிள் சிவலிங்கம்/நிலாசோறு

கர்நாடக இசை என்பது  மரபு மீறாத அதற்குரிய இலக்கணச் சுத்தங்களுடன் பாடக்கூடிய சற்று கடினமான இசை.முக்கால்வாசி புரியாத தெலுங்கு மற்றும் வடமொழியில் புனையப்பட்ட பாடல்கள்.ஜனரஞ்கம் குறைவு.இப்படித்தான் பாட வேண்டும் என்று வரைமுறையோடு அதன் ஆதார ஆத்மாவை கலைக்காமல் தொன்றுதொட்டு பாடப்பட்டு வருகிறது.

ஆனால் அதே சமயத்தில்.........

சங்கீத மும்மூர்த்திகள்
இதை ஜனரஞ்கம்,கலப்பிசை(Fusion)அல்லது மெல்லிசைப்படுத்தி பல வருடங்களாக இளைய தலைமுறைகளால் கொடுக்கப்பட்டு வருகிறது.அதாவது இந்த இசைக்கு பின்னணி அல்லது முன்னணியாக சில சம்பிரதாய வாத்தியங்கள் தம்புரா,மிருதங்கம்,மோர்சிங்,கடம், வயலின்,வீணை,ஜலதரங்கம் உண்டு.அவைகளை நீக்கி(அல்லது குறைத்து) விட்டு கிடார்,ட்ரம்ஸ்,கீபோர்ட்,வயலின்,செல்லோ பின்னணியில் கர்நாடகப்பாடல்கள் வித்தியாசமாக பாடப்பட்டது.கிட்டத்தட்ட சினிமா மெல்லிசைக்கு அருகில் செலுத்தப்பட்டது.

கார்த்திக் ஐயர் லைவ்
இப்படி fusion செய்யப்பட்ட பாடல்கள் வெற்றிப்பெற்றதா?பலரால் ரசிக்கப்பட்டதா? பாமரமக்களிடம் அல்லது இசை புரிந்த மக்களிடம் போய் சேர்ந்ததா?இதற்காகத்தான் இப்படிச் செய்யப்பட்டதா?அல்லது இளவயது துடிப்பு பரிசோதனை முயற்சியா?

பல வருடமாக இந்த முயற்சிகளை கேட்கிறேன்.ரொம்ப வெற்றிபெற்றார் போல் தெரியவில்லை.சில பாடல்கள் ஆத்மா பிசிறாமல் கொடுக்கப்பட்டது.பல பாடல்கள் பின்னணி இசை தூக்கலாக அபத்தமாக இசைக்கப்பட்டு முகம் சுளிக்க வைத்தது.பழமையும் நவீனமும் சேராமல் அசட்டுத்தனமாக இருந்தது.கருவிகளின் சத்தம் தூக்கலாக இருந்தது.சில சமயம் சம்பிரதாயத்தை அசட்டுத்தனமாக மீறுவதுபோல் பட்டது.

சிடிக்கள் கேசட்டுகள் விற்காமல் தேங்கிக்கிடந்தது.நவீன சிற்றுண்டி உணவகங்களிலும் நீண்ட பிரயாண சொகுசு பஸ்களிலும் பயன்படுத்தப்பட்டது.

இப்போது.....

இணைய வளர்ச்சியால் உலக மாற்றத்தால் மீண்டும் இவை தனித்தனி bandகள் பெயரில் அதிகமாகிவிட்டது.ஒவ்வொரு தலைமுறையும் தாங்கள்தான் முதன்முதலாக செய்கிறோம் என்று இதைச் செய்கிறார்கள்.செய்துவிட்டு “Fusionலேயே ஒரு வித்தியாசமான Fusion" என்கிறார்கள்.உருவாக்கபவர்கள் நேமாலிஜி/நியூமராலஜி அடிப்படையில் பெயர்களை வித்தியாசமாக வைத்துக்கொள்கிறார்கள்.

இணைய தளங்களில் சுடசுட பரிமாறப்பட்டு நெருங்கிய நண்பர்களால் 'awesome" 'stunning" "nice" beautiful" என்று அப்போதே கமெண்ட் போட்டு புல்லரிக்க
வைக்கிறார்கள்.இப்போது நிறைய ரசிக்கப்படுகிறது.ரசனை மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.கேட்கும்போது இப்போதும்  பழைய உணர்வுகள் வருகிறது.சிலது நன்றாகவும் இருக்கிறது.

சமீபத்தில் கேட்ட சில பாடல்கள்.
 













S.P.JANANIY


தாமரை பூத்த தடாகமடி

_______________________________________________________

சித்திரையில் நிலாசோறு


டிவியில் இந்தப் படம் பார்த்தேன்.ஏனோதானோ என்று நம்பும்படியாக இல்லை.ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த ஆர்.சுந்தர்ராஜன்  இயக்கம். அவர் மகன் அர்ஜீன் சுந்தர்ராஜன்,வசுந்தரா மற்றும் பிரபலமான குழந்தை நட்சத்திரம் சாரா.

”ஒரு காலத்தில்” கொடிகட்டிப்பறந்தவர்கள் மீண்டும் கொடிகட்டமுடியாதா? முடியும் ஆனால் கொடிகட்டிய காலத்தில் இருந்த டிராமத்தனத்தை விட்டுவிட்டு இப்போதைய டிரெண்டில் கதையை நகர்த்தவேண்டும்.இதே கதையை கொஞ்சம் சீரியஸ்ஸாக மகேந்திரன்/பாலு டைப்பில் சொல்ல வேண்டும்.யூத்துக்கு அப்பீல் ஆகும்.சுந்தர்ராஜன் தவறிவிட்டார்.நிறைய ரொமாண்டிக் காமெடிகள் கொடுத்தவர்.

அவர் காலத்தில் படம் பார்க்க வந்த குடும்ப மக்கள் இப்போது இல்லை.


சிவலிங்கம்

சமீபத்தில் முதன்முதலாக  பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்றிருந்தேன்.மூலவர் சிவலிங்க ரூபம்.லிங்கத்தை ரொம்ப அலங்காரம் செய்து அதன் ஒரிஜனல் உருவம் மாறி ஏதோ பிள்ளையார் பிரமை கண்ணில் தெரிந்தது.என் மனதில் படிந்துவிட்ட  சிவலிங்கம் அலங்காரம் இல்லாத சாதாரண லிங்கம். இதுமாதிரி ரொம்ப ஓவராக அலங்காரம் செய்தல் மனதில் “லிங்க” ரூபம் லிங்க ஆகமாட்டேன் என்கிறது.



என் மனதில் என்றும் உள்ள சிம்பிள் சிவலிங்கம்



அதுவும் இதுவும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு.


கிழ் இருப்பது மாதிரி சிம்பிளாக அலங்காரம் செய்யலாம்..





Wednesday, April 2, 2014

ஐ மெட் இளையராஜா அண்ட் வீ ஹேட எ டாக்?


மேஸ்ட்ரோவைப் பார்ப்பதற்கு முன் சற்று பின்னோக்கி முப்பத்திமூன்று வருடம்.......

கோடையில் மழை வரும் ......எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ...

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ

சராசரி இசை ரசிகனாக அப்போதைய இசையமைப்பாளர்களான எம்எஸ்வி கே.வி.மகாதேவன்,வி.குமார்,சங்கர்கணேஷ்,கோவர்தன்,விஜயபாஸ்கர்,ஷியாம் ஜி.கே.வெங்கடேஷ் மற்றும் பலர் இசைகளை மேலோட்டமாக கேட்டுக்கொண்டிருந்தவன்.பிறகு வந்த இளையராஜாவையும் மேலோட்டமாக கேட்க ஆரம்பித்து பிறகு உள்நோக்க ஆரம்பிக்க அவரின் பாடல்களின் இனிமையும் இடையிசையும் ஆச்சரியமும்  பிரமிப்பும் ஏற்படுத்தியது.

கங்கையில் என் மனம் பங்கு வைக்க

முக்கியமாக பழைய நெடிபோய் ஒரு லேட்டஸ்ட் ஸ்டைல் இருந்தது.முக்கியமான பாட்டுக்கள் ”பனிவிழும் மலர்வனம்”."எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”.வழக்கமான கேட்ட பழகிப்புளித்துப்போன இசைக்கருவிகளின் நாதங்கள் எல்லாம் புதுசாக “உருவாக்கப்பட்டிருந்தது”.

இசை அடுத்தக்கட்டத்திற்கு  நகர ஆரம்பிக்கிறது என்று தெரியாமலேயே பல வருடம கேட்டுக்கொண்டிருந்தேன்.(இவர் ஆர்.டி.பர்மன் மற்றும் சலீல் செளத்ரியின் தாக்கத்தில் இருக்கிறார் என்று சொல்வார்கள் எதிர்பார்ளர்கள்)

ஆனால் இரண்டு பேரையும் தாண்டி இருக்கிறார் என்று அடுத்தக் கட்ட புரிதலில் தெரிந்தது

எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை...

ரொம்ப முக்கியமாக  பாடல்களில்  மையமாக இருக்கும் ஆத்மா படுத்தி எடுத்தது.அடுத்து விதவிதமான  சம்பிரதாயத்தை உடைத்த  ஹம்மிங்குகள் (காற்றினிலே வரும் கீதம்) என்னை ரொம்பவும் வசீகரித்தது.இவை  மேல் இனம் புரியாத நெருக்கம் ஏற்பட்டு கேட்பது போய் சில பாடல்களோடு வாழத்தொடங்கினேன்.

“காற்றில் எந்தன் கீதம்” (ஜானி) இடையிசைகள் மெலடி மிகவும் போட்டுத் தாக்கியது.இப்படியெல்லாம் ஆத்மாவை குழைத்து இசைக்கமுடியுமா என்று இன்றும் எனக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.

இப்படியாக தீவிர ரசிகனானேன்.இவை எல்லாம் அந்தக் கால சோனி,பயனிர் கேசட்டில்  டூ இன் ஒன் ஸ்டிரியோவில் கேட்கப்பட்ட பாடல்கள்.

நீங்காத நெஞ்சின் அலை ஓய்ந்தால் போதும்

தெரு நண்பர்கள் சேட்(அனந்தகிருஷ்ணன்),சுந்தரராஜன்,அன்வர்கான்,கிருஷ்ணன் கூடும்போதெல்லாம் பாடல்களை ”மயக்கமான” நிலையில் கேட்டு முழுகித் திளைத்தோம்.பிறகு அதே அலைவரிசையில் வந்த அலுவலக நண்பர்கள் பாலாஜி,ஸ்ரீதர்,முருகானந்தம்,கணேசன் ”ரூம் போட்டு” மயக்கமாகி பாடல்களை விடிய விடிய பிரித்து மேய்ந்தோம்.

(1983)ஸ்ரீதர்(கையில் பை) பாலாஜி(நடுவில்) நான் பாலாஜிக்கு இடது

இசையமைப்பில் ஒரு புத்திசாலித்தனம் இருந்தது.இது மாதிரி உயர்தர இசை கேட்பதில் எங்களுக்கு ஒர் பெருமிதம் இருந்தது.இசை நாதங்கள் சேரும்போது அசட்டுத்தனம் ஒட்டு இல்லாமல் வழுக்கிக்கொண்டுபோவது ஒரு பெரிய பிரமிப்பு. ஹிந்திப்பாடல்களை ஓரம் கட்டினோம்.

அடுத்து இதுவரை கவனிக்கப்படாத படத்தின் பின்னணி இசை இவர் மூலம் ரசிகர்கள் கவனத்திற்கு வந்தது.இதற்கும் பிரமிப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது.சிவப்பு ரோஜாக்கள் ஒரு உதாரணம்.

Nothing..... nothing....

ஓவ்வொரு பாடலும் ஒவ்வொரு பரவசநிலையைக்கொடுத்தது.எல்லாம் பாடல்களும்  Farm fresh.சந்தித்தவுடன்  “மொட்ட  லேட்டஸ்ட் பாட்ட கேட்டய” என்றுதான் ஆரம்பிப்போம்.”Mind blowing" " Absolutely Divine" "Absolutely  bliss" "Stunning" "What a soulful song" "Out of the world" என்ற சொற்கள் அடிக்கடி உபயோகப்படுத்தியது இவரின் பாடல்களுத்தான் அதிகம்.

முன்னோடிகளுக்கும் இவருக்கும் வித்தியாசம் தெரிந்தது.இடையிசைகள் மிகவும் மென்மைப்படுத்தப்பட்டிருந்தது. இனிமைப்படுத்தப்பட்டிருந்தது.பல அடுக்குகள் இருந்தது.அடுக்குகள் பலவித காம்பினேஷ்ன்களில் தொடுக்கப்பட்டிருந்தது.நாதங்களின் உணர்ச்சிகள் மொழிகள் வேறுபட்டது. மனதிற்கு  நெருக்கமானது.புதுவித முயற்சிகள் தெரிந்தது.

 
நாங்கள் கேசட்டில் போட்டு தேய்த்து தேய்த்துக் கதறிய பாடல்கள்:

1.ஒரு குங்கும செங்கமலம் 2.சிறிய பறவை 3.சந்தக் கவிகள் பாடிடும் 4.காற்றில் எந்தன் கீதம் 5.தாமரைக்கொடி 6.பூவே செம்பூவே 7.பனிவிழும் மலர் வனம் 8.பள்ளியறைக்குள் 9.எங்கெங்கோ செல்லும் 10.அந்தரங்கம் யாவுமே11.புத்தம்புது காலை 12.அந்திமழைப்பொழிகிறது13.தேன் பூவே பூ 14.தெய்வீக ராகம்(heavenly humming)15.என்றென்றும் ஆனந்தமே

பாடல்களை கவனித்தால் ஒன்று புரியும்.கிராமிய மெட்டு பாட்டுக்கள் குறைவு.காரணம் நகரம் சார்ந்து வளர்ந்த இளைஞர்கள் நாங்கள்.அடுத்த ரசிப்பு மேற்பாடல்களில் சிக்கலான இசைக்கோர்ப்பு. எல்லாம் புத்தம்புதுசு.

எல்லாம் 1979-1988 இடைப்பட்ட காலத்தில்

பாடல்களில் லயித்துப்போய்  எப்படி இவரால இப்படி மாஜிக்காக  பாடல்களை  கம்போஸ் செய்ய முடிகிறது என்று மண்டை காய்ந்து இவரை மறைமுகமாக  (அப்போது கெடிபிடி ஜாஸ்தி)சந்திக்க முடிவெடுத்து (1988) பிரசாத் ஸ்டியோவிற்குப் போனோம்.

கதவருகில் ஒளிந்தவாறு இடுக்கு வழியாக பார்த்தோம். திருப்பதி பெருமாள்  தரிசனம் மாதிரி சில வினாடிகளே கிடைத்து.அன்றைய பாடல் கம்போசிங் “ மலையோரம் மயிலே”ஒருவர் வாழும் ஆலயம்.

அதற்கு பிறகு நண்பர்கள் பிரிந்தோம்.சில பேர் தொடர்பில் இருந்தோம். பலபேர் தொடர்பில் இல்லை.பிரிந்தாலும் அவரவர்கள் ராஜாவின் பாடல்களோடு தொடர்பில் இருந்தார்கள்.ராஜாவை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அடிமனதில் இருந்தாலும் முயற்சி எதுவும் எடுக்காமல் “அவரைப் போய் ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்” என்ற எண்ணமும் அடுத்து அவர் ரசிகர்களை அவ்வளவாக சந்திப்பதில்லை என்றும் கேள்வி.

கடைசி ஆறு வருட இடைவெளியில் (2008-2014) இணையதளத்தில் இளையராஜாவின் இசைப் பற்றிய அறிவு வேறு ஒரு தளத்திற்கு விரிந்தது.இணையதள ரசிகர்கள் அவரை அடிக்கடி சந்திப்பதும் போட்டோ எடுத்துக்கொள்வதும் நானும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. நிறைய சந்தர்ப்பங்கள் கதவைத் தட்டியதும் தவிர்க்கமுடியாத காரணங்களால்(அம்மாவின் உடல்நிலை) போக முடியவில்லை.

என் அபார்மெண்டில் குடியிருக்கும் சினிமா மற்றும் கமல் பிஆர் ஓ  நிகில் முருகனிடம் என் ஆர்வத்தைச் சொல்ல  “ சொல்லுங்க ... நான் அழைச்சுட்டுப்போறேன் ...”  என்று ஒரு நாள் சொன்னார்.அதற்குப்பிறகு பாலோ அப் செய்யவில்லை.

பிளாஷ் பேக் ஓவர்........

இருபத்தி மூன்று வருடம் கழித்து என்னைச் சந்தித்தார் பழைய அலுவலக நண்பர் முருகானந்தம்.அவர் கோயம்புத்தூர்.மீண்டும் ராஜா பாடல்களைப் பற்றி அலசல்.”ரெடியா இரு... அவரைப்போய் பார்க்கலாம்” மண்டைகாயும் வெய்யிலில் என் வீட்டிற்கு வந்து  ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ‘எப்படி அப்பாயிமெண்ட் இல்லாமல்....” இழுத்தேன்.’கிளம்புப்பா” என்றார்

முருகானந்தம் (குறும்பட  அப்பா கேரக்டர் நடிகர்?)

பிரசாத் ஸ்டியோ:


வடபழனி எப்படி இருந்தது எப்படியோ மாறிவிட்டது.பச்சைப்போய் கல்லும் சிமெண்டும் பெயிண்டும் கான்கிரீட் காடுகள்.ஸ்டியோ இருபத்தி எட்டு வருடத்திற்கு முன் பார்த்தது.மாற்றங்கள் தெரிந்தது.வாசலில் கார்களும் ஸ்கூட்டர்களும் பைக்குகளும் மர நிழலில்.

ரெக்கார்டிங் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிந்ததால் ராஜா இருப்பார் என்ற நம்பிக்கை மனதில் துளிர்விட்டது.வாசல் ரிசப்ஷனில் கார்த்திக்ராஜா புன்னகையுடன் நண்பரை வரவேற்றார்.”இருக்கிறார்” என்றார்.எனக்கு உடம்பில் ஒரு குறுகுறுப்பு.பக்கத்தில் இருந்த ஆபிசில் நண்பர் தகவலை தெரிவித்துவிட்டு உள்ளே போனோம்.


  
ரிக்கார்டிங் ஹால்

ராஜாவின் இசைக்குழு வல்லுனர்கள் தம்தம் வாத்தியங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.இதை பல தடவைப் போட்டோவில் பார்த்து பரவசப்பட்டிருக்கிறேன்.இன்று பரபரப்பு இல்லை.லன்ச் பிரேக் மாதிரி மெலிதான அலை அடித்துக்கொண்டிருக்கும் இசை ஆற்றைக் கடப்பது மாதிரி உள்ளுணர்வு.

அதையும் கடந்து அவரின் தனி அறைக்குச்செல்லும் வழியில்.....


நான்: “ போட்டோ எடுக்கனும்... ரெடியா செல்ல வச்சுக்கோ”

நண்பர்: “ இன்னொரு நாள் எடுக்கலாம்...முதல்ல அவர பாரு”


”இன்னொரு நாளா” எனக்கு உள்ளுக்குள் “பக்” என்றது.சற்று எரிச்சல் ஏற்பட்டது.எனக்கு எப்போதுமே “அன்றே செய்... நன்றே செய்” பாலிசி.அதுவும் மேஸ்ட்ரோவை பார்ப்பது என்பது.நாளை என்பது நமக்கு தெரியாத ஒன்று.
இன்றேதான் எனது மனதில் முடிவு செய்தேன்.நண்பரிடம் எதுவும் சொல்லவில்லை.


“வாங்க ....செளக்கியமா....”  நண்பரைப் புன்னகையுடன் வரவேற்றார்.

பரவசத்தில் புன்னகைத்துவிட்டு அவர் காலில் விழுந்தேன்.எழுந்தப்போது மார்பில் கையை வைத்தப்படி ஆசிர்வாத போசில் இருந்தார்.

பேசுவதற்கு ஒன்றும் இல்ல்லை.எழுந்து...” சார் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” மேஸ்ட்ரோவிடம் கேட்டேன். நண்பர் தயங்கியபடி இருக்க மேஸ்ட்ரோ “ எடுங்க முருகானந்தம்” என்று எனக்குஆதரவாக சொல்ல புல்லரித்தேன். பக்கத்தில் நிற்க நண்பர் போட்டோ எடுத்தார்.

 முடிந்தவுடன் கண்களாலேயே "டைம்  முடிந்தது" என்று சொல்லி மாரில் கைவைத்தப்படி விடைகொடுத்தார். புன்னகையுடன் விடைப்பெற்றோம்.

பரவசத்துடன் ரூமை விட்டு வெளிவந்தோம்


ஜன்மாந்திர  சாபம் தீர்ந்தது.ரொம்ப லேட்டாக தீர்ந்தது.புராணக்கதைகளில் சாபம் தீர்ந்தவுடன் ஒரு வசனம் வரும்.அதுமாதிரி  “ பக்தா..... இன்றுமுதல் உன்னுடைய  ராஜா ரசிகன் என்ற வட்டம் முழுமைப் பெறுகிறது.”




 டிஸ்கி:
”போட்டோவா ... இன்னொரு நாள் எடுத்துக்கொள்ளலாம் எவ்வளவு பெரிய வன்முறையான வார்த்தை

Thursday, March 20, 2014

ஆத்மா-மலேசிய விமானம்-பேய்-பீதி-தேர்தல் ஹாஹா

 மாயாமாய் போன விமானத்தைப் பற்றி வரும் ஹேஷ்யங்கள்/கதைகள்/அலசல்கள் நெட்டில் கொட்டிக்கிடக்கிறது.சில யூகங்கள் (ஹேஷ்யங்கள்)
விஞ்ஞான பூர்வமாக அலசப்பட்டு ஒரு அளவுக்கு லாஜிக்கலாக இருக்கிறது. சிலது கன்னாபின்னா கற்பனையில் பீதியைக் கிளப்புகிறது.

அதில் ஒன்று:

இதுக்கெல்லாம் கன்னாபின்னான்னு ஹோம் வொர்க் செய்யனுமே?

விமானம் கடத்தப்பட்டு தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு ரகசியமான இடத்திற்க்கு கொண்டுச்செல்லப்படுகிறது.போகும் வழியிலேயே  ஆக்ஸிஜன் குறைப்பாட்டை இயக்கி பயணிகளை மூசசை அடக்கி உயிரிழக்கச் செய்வது.பிறகு விமானத்தை பிளான் செய்தபடி ரகசிய இடத்திற்கு கொண்டுசென்று  அதில் பண்டல் பண்டலாக வெடிக்குண்டுகளை ஏற்றி பிடிக்காத நாட்டின் மீது மோதுவது.இந்தியா பக்கத்தில் இருக்கா?

 சடன் லெப்ட் டர்னிங்.... ஏன்???

இரண்டு:

தீவிரவாதிகள் தாங்கள் தீவிரவாதத்தை உலகத்திற்க்கே வெளிச்சம்போட்டுக் காட்டிதான் எப்போதுமே  நாச வேலைகளைச் செய்வார்கள்.ஆனால் இது சிதம்பர ரகசியமாய்அல்லது கமுக்கமாய் அல்லது அமைதியாய்  விமானத்தை கடலில் இறக்கிநொறுங்க செய்திருக்கிறார்கள்.“நடந்தது என்ன?” என்று ஆளாளுக்கு ஒரு யூகம் செய்து மண்டையைப் பிய்த்துக்கொள்ளவேண்டும்.

மாத்தியோசி இதிலுமா? கடவுளே எல்லோரும் நல்லாபடியா திரும்பி வரணும்.
 
நம்பிக்கை-பிரார்த்திப்போம்


இது மாதிரி 83 விமானங்கள் மாயமாய் மறைந்திருக்கிறதாம்.அதில்  சிலது மாயம்.சில விபத்தில் மாட்டிக்கொண்டது.


தகவல் தொடர்பின் உச்சத்தில் உலகம்  இருந்தாலும் இன்னும் கண்டுப்பிடிக்காதது  சவாலாகத்தான் இருக்கிறது.

”மாயமாய் மறைதல்” என்ற சொல்லுக்கு தமிழில் ”அறு” “தீரு” “இல்லாமல் போ” “கண்மறைவுறு” “இன்மையாகு” என்று பல அர்த்தங்கள்.”திடீர் மறைவு” என்ற சொல் என் நினைவுக்கு உடனே வந்தது.அன்றாட வாழ்வில் புழக்கமான சொல்.

__________________________________________________________

 தேர்தல்...உஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....




இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல்.கூட்டணி காம்பினேஷன்கள் அல்லது ஒட்டுக்கள் சுவராஸ்யமாக இருக்கிறது. திநகர் ரங்கனாதன் தெரு கூப்பாடுகள் பேரங்கள்.உஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

தேர்தல் கூட்டணியில் யார் யாருக்கு எவ்வளவு சீட் என்பதில் ”நீயா நானா” சண்டை.இவ்வளவு ஏன் கஷ்டபடவேண்டும்.ஒரு பெரிய விளையாட்டுத் திடலுக்கு எல்லா கட்சிகளும் வரவேண்டியது. வட்டமாக நின்று ”ஷாட் பூட் த்ரி” போட்டு முதலில் கூட்டணி அமைக்க வேண்டும் பிறகு கூட்டணிக்குள் சீட்டுக்குள் முடிவு செய்ய ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டி விட்டு “சிங்கமா  பொட்டா” சொல்லி முடிவு செய்ய வேண்டும்.

Facts are stranger than fiction( உண்மை நடப்புகள் கட்டுக்கதைகளை விட புதிரானவை). அது இந்த தேர்தலில் ஒரு விசித்திரம்.சொந்த மகனே தன் கட்சிக்கு எதிராக பேசி ஓட்டுக்களைக் கலைப்பார் என்று  யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு பேய்  குறும்படம்: " Lights Out"

எனக்கென்னவோ வழக்கமான பாணியில்தான் எடுக்கப்பட்டமாதிரிதான் தெரிகிறது.பீதிக்காக பயன்படுத்தும் எல்லா உத்திகளும் இதில் உள்ளது. பயத்தில் செல்லோ டேப்  லாஜிக் வித்தியாசம்.செல்லோ டேப் எடுப்பது ஏன் தொடர்காட்சியில் வரவில்லை.

டிஸ்கி:This Video Is Not For The Weak Of Heart! Don't Watch This Alonehttp://www.sharedots.com/this-video-is-not-for-weak-of-heart-don-t-watch-this-alone-163.html


பாடலின் இனிமையை மீறும் ஆத்மா:
 
கருப்பு வெள்ளையிலும் ஆத்மா(சந்திரகலா-விஷ்ணுவர்த்தன்)

 கிழ்வரும் பாட்டில் மெட்டு-உணர்ச்சி-தாளம்-குரல்-பாடல் வரிகள்-கவித்துவம் நெருக்கமாக இனிமையாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மீறி ஆத்மாவை தொடுகிறது.இப்படி எல்லாம் அமைவது அபூர்வம்.

ஆத்மா இல்லாத பாடல் சவம்.


0.30 - 0.40  & 0.55 - 1.05 & 1.54-1.57  இடையிசை ஐம்புலன்களை மீறி  ஆத்மாவோடு  உரையாடுகிறது..

.....மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு  மல்லிகைப்பூ
யார் வருவார்
யார் பறிப்பார்
யார் அறிவார்  இப்போது....

என்ற அழகான மெட்டுடன் கவித்துவமான  வரிகளுடன் ஜெயச்சந்திரனின் குரல் மிருதுவாகஆத்மாவோடு உரையாடுகிறது.

குளிர்ச்சியான மலைவாச ஸதலத்தில் டூயட் நடப்பதால் பாடல் மிருதுவான குளிருடன் நம்மை ஆக்கிரமிக்கிறது.





படம்: அலைகள் (1973) 
பாடியவர்:ஜெயச்சந்திரன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் 
பாடல்:கண்ணதாசன்
இயக்கம்: ஸ்ரீதர்

Friday, January 31, 2014

இளையராஜா-கூடு விட்டு கூடு-ஆனந்தராகம்-சாராயே ஆலம்

சொந்த மாநிலத்திலேயே ஓர் ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு இடம் பெயரும்போது அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் மாறவேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது நம்மிடம் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.மாற வேண்டியது அவசியமாகிவிடும்.காரணம் அங்கு நிலவும் பண்பாடு, அரசியல், உணர்ச்சிகள், உணவு,உடை மற்றும் இன்னபிற.

மனிதனைப்போல சினிமா பாடலும் புலம் பெயரும்போது தன் ஒப்பனையை உணர்ச்சிகளை மாற்றிக்கொள்கிறது.

இளையராஜா தன் பாடல் ஒன்றை இப்படி கதை, சூழ்நிலை, புலம், உணர்ச்சிகள் மாறினாலும் பாடலின் மைய இழையை ஆதார கருவை (மெட்டை) விடாமல் கூடுவிட்டு கூடு இசைத்திருக்கிறார்.

படம்: பன்னீர் புஷ்பங்கள்(1981) பாடல்: ஆனந்தராகம் கேட்கும்.பாடல்

இந்தியில் “சாராயே ஆலம்” படம்: ஷிவா(2006).25 வருடங்கள் ஆகியும் பாடலின் மெருகு கலையாமல் இருக்க அதையே ஷிவா படத்திலும் உபயோகப்படுத்த சொல்கிறார் இயக்குனர்.

கிழ் ஆடியோவில் இரண்டுபாடல்களின் குரலிசைகள் பல்லவி,சரணம் என்று மாறிமாறி கோர்ப்பட்டுள்ளது.

ஆனந்தராகம்    கேட்கும்  VS  சாராயே.... ஆலம்

கன்றுக்குட்டி வெகுளி காதல்(infatuation love)  VS  இளம்பருவ விரகதாபம்(Sensuous love)

” ஆனந்தராகம் கேட்கும்” (பன்னீர் புஷ்பங்கள்-1981)பாட்டு ”சாராயே ஆலம்” என்று ஹிந்திப் படமான  “ஷிவா”(2006).25 வருடங்களுக்குப் பிறகு வேறுவிதமாக இசைக்கப்பட்டது( ரீமிக்ஸ்?).


”ஆனந்தராகம்” வெகுளித்தனமான பள்ளிப்பருவ காதல்.மனதில் எழும் ஆனந்த உணர்ச்சிகள்...சந்தோஷதருணங்கள் - சோலோ-உமாரமணன்


”சாராயே” இளம்பருவ விரகதாபம்-ஏக்கம்-காதல். -டூயட்-ஷ்ரேயா-ரூப் குமார் ரத்தோட்.

உணர்ச்சிகள், நிகழும் இடம்,புலம்,வரிகள்,மையம் இவைகளை மனதில்கொண்டு ஆனந்தராகத்தை மொழிபெயர்த்துள்ளார்.கருவிகளின் மொழிகள் முக்கியமானவை.

 குரல்கள் மட்டும் ஆ.ராகம்-சாராயே ஆலம் மாறிமாறி  வரிசையாக




சிம்மேந்திரம மத்தியமம் ராகத்தை இரண்டிலும் பாடலின் மைய்ய இழையாக அமைத்துள்ளார்.

இடையிசை  மட்டும் ஆ.ராகம்-சாராயே ஆலம் மாறிமாறி  வரிசையாக


Monday, January 27, 2014

நாலுமணி டிபனும்-புத்தகமும்-கவிதையும்

ரவா உப்புமா என்றால் அது மாலை நாலுமணி டிபன் என்பதாக நினைவில் ஆழமாக பதிந்துவிட்டது.காரணம் 3.20க்கு பள்ளி விட்டதும்  பல தடவை சுடசுட சாப்பிட்ட சுவை நாக்கிலிருந்து மூளைக்குப்போய் உறைந்ததுதான்.அந்த நாலுமணி வெயில்,தெரு சத்தங்கள்,வெங்காய வாசனை,கிண்டும் ஓசை,மணம் எப்போதாவது வந்துபோகிறது நாலுமணிக்கு.

அன்றைய Two minutes Noodles!

இப்போது மாதிரி வீட்டு உப்புமாவில் பணக்காரத்தனம் இருக்காது.பட்டாணி, மு.பருப்பு,குடமிளகாய்,கொத்தமல்லி,நெய் இல்லாத லோயர் மிடில்கிளாஸ் லுக்குடன்தான் இருக்கும்.

இப்போது அதே பணக்காரத்தனத்துடன் உப்புமாவை 5.15 டிபனாக  செய்துபோட ஆசை இருந்தாலும் ஏதோ உப்புமா கம்பெனியைப் பார்ப்பதுபோல் என்னைப்பார்க்கிறான் என் மகன்.இதுதான் வாழ்க்கை.

கண்ணுக்கெதிரே சமையலின்  ஒரு சுவையை மகன் இழந்துக்கொண்டிருக்கிறப்பதை அசட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.



அப்போதைய  இளையதலைமுறையின் 50% விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது 20% ஆக குறைந்துவிட்டது.காரணம் காற்றடித்த உப்பிய பிளாஸ்டி பைகளில் கிடைக்கும் நொறுக்குத்தீனிகள் மற்றும் துரித உணவுகள். உப்புமாவை உப்புமா கம்பெனிபோல்  ஒன்றும் இல்லாம ஆக்கிவிட்டது.

2011ல் இந்திய வம்சாவளி சமையல்காரர் ஒருவர் அமெரிக்காவில்  உப்புமா டிபன் செய்து ஒரு லட்சம் டாலர் பரிசுபெற்றார்.”தங்கள் வாழ்வில் பாதித்த அல்லது எப்போதும் நினைவில் ஊசலாடும் ஒரு டிபன்” என்ற பிரிவில் இவர் செய்த டிபன் உப்புமா. என் நாலுமணி டிபன்.....!

இதன் கசின் ஆன கிச்சடியும் சுவையானது.


37வது சென்னை புத்தகக் காட்சி

நான் கூட தவறுதலாக புத்தகக்கண்காட்சி என்றே எழுதுவேன் ஒவ்வொரு தடவையும்.கண் கிடையாது வெறும் காட்சிதான்.காட்சி என்றாலே கண்ணால் காண்பதுதானே.


சிறுகதைகள்,நாவல்கள், கவிதைகள் தவிர்த்து விட்டேன்.அலுப்புதான்.விமர்சனங்கள்,பக்தி,தத்துவம்,சரித்திரம்,சுயசரிதை சம்பந்தமான புத்தகங்கள் வாங்கினேன்.ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆனந்த்ராகவ் எழுதியது.எப்போதுமே தவிர்க்காமல் வாங்குவது வேடிக்கைக் கதைகள்,முட்டாள் கதைகள்,கஞ்சன் கதைகள், புதிர்கதைகள்.
இவையெல்லாம கடினப் புத்தகங்களுக்கு ரிலாக்ஸ்சேஷன்.அடுத்து சாகித்ய அகாடமி வெளியிடும் சுயசரிதை நூல்கள்.

எப்போதுமே ஒரே மூச்சில் படிப்பதில்லை.எல்லாவற்றையும் பிட்டுபிட்டாக படிப்பதால் சுவராஸ்யமாக இருக்கிறது.


புத்தகம் வாங்கிய மகிழ்ச்சியை அடுத்து  இன்னொரு மகிழ்ச்சி பதினாலு வருடம் தொடர்பு விட்டுப்போயிருந்த நண்பர் ஸ்ரீதரை சந்தித்தது.நாங்கள் முக்கியமாக  இளையராஜா இசையில் ஒரே அலைவரிசையில் இருப்போம்.குசலங்கள் விசாரித்த பிறகு முதல் டாபிக்கே ராஜாதான்.”காற்றில் எந்தன் கீதம்”.இருவரும் ராஜாவின் பாடல்களோடு வாழ்பவர்கள்.

கவிதை

நான் பேய் அல்ல
பள்ளி மாணவிதான்
பாடங்களை மனப்பாடம் செய்ய 
தினமும் வீட்டு தோட்டத்தில் இருக்கும்
உஞ்சலில் நடுஇரவில் ஆடுவேன்

தூரத்தில்
இரண்டு கண்கள் தினமும் 
நான் ஆடுவதைப் பார்க்கும்
உடனே நிறுத்திவிடுவேன்

என் அருகில்அது வருவதில்லை


என் நிழலும் தயங்கி
பாதி தூரத்தில்  பேயோயென
பயந்தபடி நிற்கிறது


ஒரு நாள் தம் பிடித்து
மிக வேகமாக  உந்தி ஆடுவேன்
என் நிழல் அதைத் தொடும்
நான் பேய்யல்ல
பள்ளி மாணவிதான்
அதற்குத் தெரிந்துவிடும்