Tuesday, June 23, 2009

ரூம் போட்டு திங்கிங் - ஞானக்கதை

ஒரு பணக்காரர் மிகவும் வயதாகி இளைத்து விட்டார்.டாகடரிடம் போனார்.

டாகடர் அவரை செக் செய்துவிட்டு அவரிடம் பேச ஆரம்பித்தார்.

“நீங்க ரொம்ப இளைச்சு துரும்பா போய்ட்டீங்க.நான் ஒண்ணு சொல்றேன் கோச்சுக்க மாட்டீங்களே”

“சொல்லுங்க”

”நீங்க உங்க செக்ஸ் லைஃப்ப சரி பாதியா குறைத்துக்கொள்ள வேண்டும்”

”அப்படியா! எந்தப் பாதி? அதப் பத்தியே ஓவரா திங்க் பண்றதுல பாதியா?இல்ல அதைப் பத்தியே பேசிக்கொண்டே இருப்பதில் பாதியா?”


மூன்று குறட்டைகளும் ஒரு குழந்தையும்


உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டக் கதை

மாலை வேலை முடிந்தவுடன் மனதில் ஒரு இனம் புரியாத உணர்ச்சி படர்ந்திருந்தது. நிம்மதி, சந்தோஷம், ஜாலி என்று கலந்துக்கட்டியாக. ஓவர் அலைச்சல்தான் இன்றைக்கு. மற்ற நாள் மாதிரி வீண் அலைச்சல் இல்லை.

நிறைய ஆர்டர்கள்.எதிர்பார்க்காத கடன் வசூல்கள்.நினைக்க நினைக்க மறுபடியும் அந்த கலவையான உணர்ச்சி.நடையில் கூட வேகம்.மனதிற்குள் சிரிப்பு.

மற்ற வீண் அலைச்சல் நாள்களில் மாலையில் ரிலாக்ஸ்சேஷன் அல்லது ஏமாற்றத்திற்கு சில்ட் பியர் குடித்துவிட்டுத்தான் மற்ற வேலை.பார்காரன் குடிப்பதற்கு பரபரப்பதை என் உடல் மொழியை வைத்து கண்டுபிடித்து விடுவான்.ஆர்டர் கொடுத்தவுடன் விறுவிறுவென மூடியை திறந்து கிளாசில் ஊற்றி விடுவான் சிரித்தபடி.அவனிடமே “சீயர்ஸ்” சொல்லி ஆரம்பிப்பேன்.
அவனும் “சீயர்ஸ்” எனபான் சிரித்தபடி.

இன்று லேட்டாகி விட்டது. நோ பியர். வெறும் சாப்பாடு மட்டும்தான்.சாப்பிட்டு விட்டு ரயிலில் ஏறிய உடன் கட்டையைச் சாய்க்க வேண்டியதுதான்.

ஒட்டலில் சாப்பாடும் நன்றாக இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியே வந்தேன்.ஒரு தம் பற்ற வைத்து இழுத்து இன்றைய அலைச்சலை ஒரு ஓட்டு ஓட்டினேன்.எப்படி இவ்வளவு கடன் வசூல் மற்றும் புது ஆர்டர்கள்.மீண்டும் அதே
கலந்துக்கட்டியாக உணர்ச்சி.சிரித்தபடி சிகரெட்டை முடித்து ஆட்டோவில் ஏறினேன்.ஆட்டோவிலேயே கண் சொருக ஆரம்பித்தது.

ரயில்வே ஸ்டேஷன்.கூட்டம் கம்மிதான்.பத்துமணிக்குக் கிளம்பிய ரயிலில் கண் சொருக படுத்தேன்.திடுக்கிட்டு எழுந்தேன்.குறட்டைச் சத்தம்.அரைமணி நேரம் தூங்கி இருப்பேனா?நான் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த மாதிரிதான் தெரிந்தது. இந்த குறட்டைக்காரர்கள் கனவில் வந்து லேசரால் ஊடுருவது மாதிரி குறட்டையால் ஊடுருவி எழுப்பி விட்டார்களா?

பர்த்தில் எழுந்து உடகார்ந்து கொண்டுப் பார்த்தேன்.

மேல் பெர்த்திலிருந்து ஒரு குறட்டை. அந்த குறடடை கிழ் ஸ்தாயில் இறங்கும்போது அதற்கு எதிர்ப் பாட்டாக மேல் ஸ்தாயில் ஒரு குறட்டை கிழ் பெர்த்திலிருந்து .அடுத்து சைடுலிருந்து ஒரு குறட்டை.மூன்று குறட்டைகள்.
இந்த குறட்டைவாதிகள் ஒரே குடும்பமா? குறட்டையில் குடும்ப ஜாடை அடித்தது. ஒன்றுக்கு மூன்றாக வந்தால் எதிர்க்க முடியுமா?சே!இந்த .. குறட்டை விடும் பிணங்களால் தூக்கம் கலைந்து விட்டது.முட்டாக்குப் போட்டுக்கொண்டு பிணங்கள் மாதிரிதான் இருந்தார்கள்.


ஒரு குறட்டையின் பக்கத்தில் நின்றபடி பயணம் செய்யும் ஒருவர் என்னைப் பார்த்துச் சிரித்தார்.என் கஷ்டத்தைப் புரிந்துக்கொண்டுவிட்டாரா?.குறட்டையைப் பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை.அவருக்கு பெர்த் அலாட் ஆகும் வரை குறட்டை கவலை இருக்காது.கம்பெர்மெண்டின் அடுத்த இரண்டு பிரிவுகளிலும் போய்ப் பார்த்தேன்.அங்கும் இவர்களின் குறட்டைச் சத்தம் கேட்டது.பயணிகள் சட்டைச் செய்யாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.


தப்பு செய்து விட்டேன்.பியர் குடித்துவிட்டு ஏறியிருக்கலாம்..ஆர்டர்,வசூல் போன்ற விஷயங்களைத்தான் வருமா வராதா என்று மனதில் கணக்குப் போட்டப்படி எதிர் நோக்க முடியும். குறட்டை விடுபவர்கள் ஒன்றுக்கு மூன்றாக இரவு வருவார்கள் என்று கணக்குப் போடடு ஏறமுடியுமா?எரிச்சல் தாங்க முடியவில்லை.தூக்கம் வேறு கலைந்து விட்டது.மறுபடியும் ஒரு மாதிரி மகுடி ஊதி சுருதி ஏற்றி தூக்கத்தை வரவழைக்க வேண்டும்.

மணி பார்த்தேன்.11.30 என்ன செய்வது? அகால வேளையில்குறுக்கும் நெடுக்கும் நடந்து போகும் ஆர்பிஃப்யையும் இன்றுகாணவில்லை.ஒன்றும்புரியவில்லை.
எழுப்பி சொல்லலாமா? எழுப்பினால் மூன்று பேரையும் எழுப்ப வேண்டுமே.டிடிஆரிடம் சொல்லலாமா?இருக்கும் கோபத்தில் அபாயச் செயினை இழுக்கலாமா என்று கூட இருந்தது.பதில் குறட்டை விட்டு தூங்குவதற்கும் வக்கில்லை.என் தூக்கத்தில் குறட்டைக் கிடையாது.வெறும் தூக்கம்தான். வன்முறை கிடையாது.போலித்தனமாகவும் விடமுடியாது.


நினைத்ததில் ஒன்று கூடச் செய்யவில்லை.தண்ணீர்தான் குடித்தேன்.என்னென்னவோ எண்ணங்கள் அடுக்கடுக்காக சம்பந்தமில்லாமல்.தலை வலிக்க ஆரம்பித்தது.


கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு “எக்ஸ்கியூஸ் மீ” என்று பெர்த்தைத் தட்டினேன்.பதில் இல்லை. இரண்டாவது தரம் தட்டியவுடன் வேறு பக்கம் திரும்பி இருமி விட்டு குறட்டையை தொடர்ந்தார் ஒருவர். மற்ற இரண்டுபேர் பர்த்தையும் தட்டினேன்.பதில் இல்லை.


செல் போனில் எனக்குப் பிடித்த பாட்டை பெரிதாக வைத்து ஏதாவது அசைவு தெரிகிறதா என்று பார்த்தேன்.ஒரு அசைவும் இல்லை..”பளீஸ்...டோண்ட் மைண்ட் பாட்ட ஆஃப் பண்ணிடுங்க...குழந்த முழுச்சுக்கிடும்” ஒரு இருபது சீட் தள்ளி ஒரு பெண் குரல். “ஓகே...ஓகே...” என்று சொல்லி அணைத்தேன்.யாரென்றும் பார்க்கவில்லை.

தலை கவிழ்ந்து கண் மூடி யோசிக்கையில் என் அம்மா வந்தாள். முன் ஜென்ம பாவம் என்றாள். போன ஜென்மத்தில் இதே மாதிரி யாரையாவது படுத்தியிருப்பாய்.அதன் விளைவுதான் என்பாள்.இப்படியே கண் மூடி யோசனைப் போய்க்கொண்டிருக்கும்போது என் தோளை யாரோ தொட்டார்கள். திடுக்கிட்டு கண்ணைத்திறந்துப் பார்த்தேன்.

குட்டியாக ஒரு பெண் குழந்தை சிரித்தப்படி. குட்டியாக ஹவுஸ் கோட் அணிந்து.

”நீ எங்கிருந்து வந்த. உங்க அம்மா எங்க?” மெதுவான குரலில் கேட்டேன்.

உள்ளே கைக் காட்டியது.”அம்மாட்டப் போ.. போ...” என்று மீண்டும் ரகசிய குரலில் அதட்டினேன். குழந்தை என்னை முறைத்தது.என் பாக்கெட்டில் இருந்த செல் போனைக் காட்டியது. “ஓ” பாட்டு கேட்கணுமா.

”சாரி கண்ணு! இவங்கெல்லாம் தூங்கறாங்க.நீ அம்மாகிட்டப் போய்டு”குழந்தைப் போகவில்லை.என்னையே பார்த்தவாறு நின்றிருந்தது.என்னை மாதிரிஅதற்கும் குறட்டை சத்தத்தில் தூக்கம் கலைந்து விட்டதோ.பாவமாக இருந்தது.

குழந்தையை மடியில் தூக்கி உட்கார வைத்துக்கொண்டேன்.செல்லில் பாட்டு வைத்தேன். “வாழ்க்கை ஓடம் சொல்ல..ஆற்றில் நீரோட்டம் இல்லை..” அவள் அப்படித்தான் படத்தின் பாடலை தபலா பின்னணியில் ஜானகி சோகத்தில் உருகியபடிப்பாடிக்கொண்டிருந்தார்.நடுநீசி உருக்கத்தில் ரெயில் பெட்டிகளும் ஒரு பக்கம் காதால் கேட்டுக்கொண்டே தன் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.

இப்படியே குழந்தையுடன் பல பாட்டுக்கள் கேட்டப்படி நேரம் ஓட குழந்தை மடியில் தூங்கி விட்டது.அட.. கடவுளே.என்ன செய்வது?எந்த சீட்டிலிருந்து வந்த குழந்தை?குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டேன்.


ஒவ்வொரு பெர்த்தாக உற்றுப் பார்த்தப்படி ரயிலின் ஆட்டத்திற்க்கு ஈடு கொடுத்து ஆடியபடி நடந்து சென்றேன்.

முற்றும்





Monday, June 22, 2009

கன் டைம் டெலிவரி சார்! ஞானக் கதை

courier


ஒரு பெரிய தொழிலதிபர் சாகும் தருவாயில் இருந்தார்.குழந்தைப் பருவத்தில் பசி,பட்டினியை அனுபவித்து, முட்டி மோதி,மேடு பள்ளங்களைப் பார்த்து வாழ்க்கையில் முன்னேறியவர். இன்று கோடிகளுக்குச் சொந்தக்காரர்.


அந்த வேளையில் எல்லோரும் போல தன் மகனை அழைத்து தொழிலதிபர் அறிவுரைக் கூறத் தொடங்கினார்.


“மை..டியர் சன்...நான் சொல்வதை கவனமாகக் கேள்.என் வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று நேர்மை. இரண்டு சமயோசித புத்தி.”


மூச்சு விட்டுக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.


“நான் யாருக்காவது கரெக்ட் டைம்ல சரக்க டெலிவரி பண்றேண்ணு வாக்குறுதி கொடுத்துட்ட ,இடி, மின்னல், காற்று, புயல் வந்தாலும் அல்லது கம்பெனியே திவால் ஆனாலும் அல்லது வேறு எது வந்தாலும் கஸ்டம்ர்தான் முக்கியம். நான் சொன்ன டைம்ல சரக்க டெலிவரி பண்ணிடுவேன் அதான் நேர்மை. வாக்குறுதிய காப்பத்துவேன்.”


புரிஞ்சிடுச்சு அப்பா.. அப்படியே செய்கிறேன்...சரி..சமயோசித புத்திஎன்றால் என்ன?


”அவ்வாறு வாக்குறுதி எதுவும் கொடுக்காமல் இருப்பதே”

Sunday, June 21, 2009

பொய்யான சோதனைப் பதிவு!

உண்மையான சோதனைப் பதிவுக்கு எட்டு பின்னூட்டங்கள்.

அதனால் மெய்யாலுமே ஒரு  சோதனைப் பதிவு!

 

frisking2dog

சோதனைப் பதிவு

இது ஒரு சோதனைப் பதிவு.

Friday, June 19, 2009

குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...

குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவது அவர்களுக்கு அன்றாட வாழ்வில் ரொம்ப பயனளிக்கும்.என் பெற்றோர் எனக்குக் கற்று தந்த (Life Skills)வாழ்க்கைத் திறமைகள் எனக்கு ரொம்ப பயன்பட்டது. ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் பயன் படுத்தினேன்.என் பையனுக்கும் அதைக்கற்றுத் தந்திருக்கிறேன்.

வாழ்க்கை ரொம்ப சுலபம் இல்லை.திடீர் திடீர் என்று கிறுக்கல் அடித்து நம்மை வேடிக்கைப் பார்க்கும்.

____________________________________________________________________________________

_________________________________________________________________________________

பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினால படிப்பாளி.திறமைசாலி அல்ல.நூற்றுக்கு நூறு மார்க் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தரும்.பள்ளி படிப்பில் முதலில் இருக்கும் சில பேர் பொரோபஷனல் (professional) வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் ஒளியற்று இருப்பார்கள்.மக்குத்தனம் இருக்கும்.படிப்பு வேறு.புத்திசாலித்தனம் வேறு.

குழந்தைகள் நூற்றுக்கு நூறு பார்டியாக இல்லாவிட்டாலும் “உஷார் பார்ட்டி”யாக (சாமர்த்தியசாலியாக..) இருக்கவேண்டும்.இப்போது இருக்கும் உலக நடப்புக்கு அதுதான் யதார்த்தம்.“உஷார் பார்ட்டி” with நேர்மை/ஒழுக்கம்/பக்தி/அன்பு. Be practical. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வர வேண்டும்.

அது என்ன வாழ்க்கைத் திற்மைகள்(Life Skills):-


உதாரணம்- 1
பக்கத்துவீட்டுப் பையன் படிப்பில் கில்லாடி.ஆனால் தன் சைக்கிளின் செயின் கழண்டால் அதை சரி செய்யக் கூடத்தெரியாது.தள்ளிக்கொண்டுதான் வருவான்.ஆறு கிலோ மீட்டர்.காற்று கூட அடிக்கத் தெரியாது. அடிப்பது அவன் அப்பா.இழப்பு யாருக்கு?

உதாரணம்- 2
பல வலைப்பதிவர்கள் மெது மெதுவாக தங்கள் திறமைகளை(skills) பயன்படுத்தி வலையை ஜொலிக்க வைக்கிறார்கள்.எல்லாம் ரெடிமேடாக கிடைத்தாலும் அதை நிறுவும் பொழுதில் கிடைக்கும் அனுபவம் அடுத்த முயற்சிக்கு தூண்டுகிறது.அறிவு /அனுபவம் வளருகிற்து.திறமைகள் வளர்கிறது.

உதாரணம்- 3
நடிகர் கமல் நாலாவதுதான் படித்திருக்கிறார்.புகழின் உச்சியில் இருக்கிறார்.அவர் கால கதாநாயகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.காராணம் கமல் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார்.(மோகன் மாதிரி மைக் பிடித்துக் காணாமல் போகவில்லை)தொலை நோக்குப் பார்வையில் சினிமாவை எடைப்போட்டு காணாமல் போகாமல் தன்னை நிறுத்திக் கொண்டார்.தன்னுடைய சிவப்பு நிறம் அழகான முகம் ரொம்ப நாள் “தாக்குப்பிடிக்காது” என்று தெரியும்.

உதாரணம்- 4
பக்கத்து வீட்டுப் பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டி நின்று விட்டது.காரணம் தெரியவில்லை மெயின் ரோட்.ஆள் நடமாட்டம் கம்மி.மெக்கனிக் ஆறு கிலோ மீட்டர் தள்ளி.எப்படி நடுரோடில் விட்டு வருவது. ஐடியா! பக்கத்து பங்களாவின் மாடியில் நின்றவரைக் தையரிமாக கூப்பிட்டு ”excuse me, if you don"t mind" சொல்லி புன்னகைத்து வண்டியை உள்ளே விட்டு விட்டாள்.சாமர்த்தியம்!
பிறகு ரிப்பேர்.

உதாரணம்- 5
பிளாட் லிப்டில் கரெண்ட் போய் ஒரு சிறுவன் மாட்டிக்கொண்டான்.எமர்ஜென்சி அலாரம் வேலைச் செய்யவில்லை.”அய்யோ அம்மா,,அய்யோ அம்மா”என்று பெரும் குரலில் கத்தினான். ஷூவைக் கழட்டி லிப்ட் கதவில் அடித்தான். அடுத்த கணத்தில் உதவி வந்தது.அலாரம் வேலைச் செய்யா விட்டால்”அய்யோ அம்மா,,அய்யோ அம்மா”..கதவைத் தட்டுதல்...” போன்றவற்றை செய்யவேண்டும் என்று சொன்னது அவன் அப்பா.அப்பா கே.ரவிஷங்கர்.பையன் ஆதித்யா.

உதாரணம்- 6
பக்கத்து வீட்டு மாமிக்கு காஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் புதுசு மாட்டத் தெரியாது.வாட்ச்மேன் அல்லது எதிர்வீடுதான் உதவி செய்யவேண்டும்.அந்த இரண்டு பேர் இல்லாவிட்டால் என்ன செய்வார்?


இந்த திறமைகளைப்(skills) பற்றிச்சொல்லும்போது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.

நான் கடையில் ஒரு நாள் ஏதோ வாங்கிக்கொண்டிருந்தேன்.அப்போது என் மகன்
(வயது 10) என்னைக் கடந்து சைக்கிளில் போய் சிக்னலில் நின்றான்.என்னை கவனிக்கவில்லைஅப்போது எதிரில் வந்த தண்ணீர் லாரி சடன் பிரேக் அடித்து ஒரு குலுங்கு குலுங்கி தண்ணீர் பீச்சியடித்து அவன், சைக்கிள்,புத்தகப்பை எல்லாம் அருவியில் குளித்த மாதிரி ஆகிவிட்டது.

வாழ்க்கையைப் பச்சையாக (raw formஇல்) சந்திக்கிறான்.என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு என்னசெய்யப்போகிறான் என்று பார்த்தேன்.

நனைந்ததால் உடலோடு ஆடைகள் ஒட்டி கட் பனியன்,ஜட்டி ஷேப் தெரிந்தது.(வெள்ளை யூனிபார்ம்).அவமானத்தில் முகம் சுருங்கிவிட்டது.வாழ்க்கையின் ஒரத்தில் இருந்தான்.(பொது ஜனங்கள் “உச்” கொட்டிவிட்டு ”பாத்துத் தம்பி” என்று நகர்ந்தார்கள்).கடைசியாக வீடு வந்து சேர்ந்தான்.

தண்ணீரில் நனைந்ததிலிருந்து வீடு வந்து சேரும் வரை அவனுடைய

திறமைகள்:-

1.அடுத்த வினாடி முக்கியமான புத்தகங்களை பையின் பின் அறைக்கு மாற்றினான்.(அங்கு ஈரமில்லை). (மெயிண்டனென்ஸ்/வாழ்வாதாரம்(survival)

2.TNEB Junction Boxலிருந்து தள்ளி நின்று கொண்டு தலையை கர்சீப்பால் தவிட்டிக்கொண்டான். (பாதுகாப்பு)

3.அடுத்து வேறு சந்தில் நுழைந்து சில நிமிடம் காத்திருந்து கிளாஸ் டீச்சரை ரோடில் சந்தித்து “see my position" என்று லேட்டாக வருவேன் என்று பர்மிஷன் வாங்கினான். (முன் யோசனை/சமயோசிதம்/பயம்)

4.PCOக்குப் போய் எனக்கு செல்லடித்தான்.(உதவி/தகவல்)

நான் செல் எடுக்கவில்லை காரணமாக.(இவனுக்கு பணம் எப்படி?இதை தனியாக கவனிக்க வேண்டும்)

திறமையின்மை:

1,வண்டியை ஓட்டாமல் தள்ளிக்கொண்டே வந்து சேர்ந்தான்.
உலகமே தன்னைப் பார்த்து பரிதாபப் பட வேண்டும்.(சுய பச்சாதாபம்)

2.பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள் என்று லாஜிக் யோசிக்கமால் செல்லடித்தது.(முன் யோசனையில்லாமை)

3.ஸ்கூலுக்கு மறுபடியும் திரும்பி போகும்போது வேற சுத்து ரூட்.ஏன்? திரும்பவும் தண்ணீர் லாரி வந்து விட்டால்?(பயம்/வெறுப்பு/உஷார்)

4.அவன் என்னை வரச் சொல்லியிருந்தான்.செக்யூரிட்டி/லேட் மிஸ் என்று வாசலில் இருப்பவரிடம் நான் விளக்கிச் சொல்லி உள்ளே அனுப்ப.அவன் தன் சொந்த திறமையில் இதை சமாளிக்க வேண்டும்.செய்யவில்லை.
(தன்னம்பிக்கையின்மை)

எந்த குழந்தையிடமும் 100% பெர்பெக்‌ஷன் எதிர்பார்க்கமுடியாது.அப்படி இருந்தால் அது குழந்தை அல்ல.சம்திங் ராங்.குழந்தை குழந்தையாகத்தான் இருந்தால்தான் அழகு.ஆனால் அவ்வப்போது அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல் திறமைகளை வளர்க்கவேண்டும்.

”என் பையன் மாதிரி கம்பூயட்டர் கேம்ஸ் விளையாட.....என்றும் செல்போனக் கொடுத்துட்டா போதும் அதுல பூந்து விளையாடுவான்...அவன மாதிரி..” என்று மற்றவர்கள் முன்னால் குழந்தைகளை செல்லம் கொஞ்சுவார்கள்.இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை காமெடி. ஏனென்றால் 99% சதவீதம் குழந்தைகளுக்குத் இதெல்லாம் தெரியும்.

”கண்ணே...செல்லம்...உச்சு புச்சு..”என்று கொஞ்சிக் கொண்டு இருக்காமல் வைக்கும் இடத்தில் வைத்து சாத்தும் இடத்தில் சாத்துங்கள். குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அடிப்படை எதார்த்தங்களை (ground realities) கற்றுக் கொடுங்கள்.

குழந்தையை வளர்ப்பதும் ஒரு பெரிய(life skill) திறமைதான்.


(Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவதில் என்ன நன்மைகள்:-

1.சுயசிந்தனை
2.அடுத்தவரை சாராமை
3.அனுபவம்
4.அனுபவத்தில் பெறப்படும் அறிவு
5.சுறுசுறுப்பு
6.பொது அறிவு
7.பிரச்சனை எதிர் நோக்கும் துணிவு
8.ஒரு வித சுய சந்தோஷம்(நானே செய்தேன்!)
9.சமயோசிதம்
10.கெளரவம் பார்க்காமை


ஒரு தலைமுறை குழந்தைகளுக்குக்கு(நகர்புறம் சார்ந்த) இருக்கும் lifeskills அடுத்த தலைமுறைக்கு இல்லை.இப்போது இருக்கும் தலைமுறைக்கு எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே கிடைக்கிறது.

பாதுகாக்கபட்ட சுழ்நிலையில் வளர்கிறது.(highly protected zone).போனதலைமுறை மாதிரி அல்லதுஅதற்கு முந்திய தலைமுறை அலைந்துதான் எல்லாம் பெற வேண்டும் .கையில் எதுவும் தொப்பென்று விழாது.

கடைசியாக... மிருகங்கள தங்கள் வாழ்வாதர திறமைகளை எப்படி பயன்படுத்துகிறது என்று டிஸ்கவரி சேனல்,அனிமல் பிளானெட்டில் பாருங்கள்.

Survival of the fittest! நமக்கும் அது நூறு சதவீதம் பொறுந்தும்.


Tuesday, June 16, 2009

ஒரு பெண்ணாக மாறினேன் - கவிதை
























புகைப்படம் நன்றி:http://anandvinay1.blogspot.com/


எல்லா கவிதைகளும் கதைகளும்
எழுதி முடித்துப்
பொழுது போகாத
ஒரு நாளில்
சற்று களையான முகம்
சராசரி உயரம் மற்றும் மாநிறம்
உள்ள ஒரு பெண்ணாக
மாறினேன்
வளர வளர அழகு கூடியது
சூட்டிகையாக் இருந்தாள்
நன்றாகப் படித்தாள்
எல்லாப் படிப்பும் படித்தாள்
பட்டம் வாங்கினாள்
வேலைக்குப் போனாள்
திருமணம் செய்தாள்
குழந்தைக் குட்டிகளோடு
செட்டிலாகி எங்கோ
போய்விட்டாள்
தெரிந்திருந்தால்
திருமணத்திற்கு
அனுப்பியிருக்கலாம்
மலர்ச் செண்டு






பிரபு தேவா...புரியுல மை டியர் பதிவர்கள்!

பிரபுதேவா தன் அன்பு மகன் இறந்த சோகம் தாளாமல் இருக்கிறார்.யாரிடமும் பேசுவதில்லை.துக்கத்தில் துவண்டு விட்டார்.வெளியே போவதில்லை.

பேட்டிக்கொடுப்பதில்லை.ஷூட்டிங் கான்செல்டு.வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார். துக்கம் தொண்டையை அடைக்கத்தான் வீட்டில் பேச்சு.பழைய நிலைக்கு திரும்ப எவ்வளவு நாளாகுமோ.இப்படி சில மாதங்களுக்கு முன்பு வார மாத இதழ்களில் செய்தி.பாவம் மனுஷன் என்றிருந்தது.


பழைய நிலைக்கு திரும்ப எவ்வளவு நாளாகுமோ என்றிருந்தவர் “ஊர்வசி.....ஊர்வசி” ஸ்பிரிங்க் போல் குதித்து ஒரு வாரமாக வேறு செய்தி.பிரபுதேவாவும் நயந்தாராவும் “பத்தி”க்கிச்சாம்.ஒளிந்து ஒளிந்து மீட் பண்ணுகிறார்களாம்.

பிரிவு தாங்கமுடியாதாம்.இந்த பீல்டில் உள்ளவர்கள் “எப்படி முடியுமோ” என்று பல்லைக்கடிக்கிறார்களாம்.அவருக்கு ரம்லத் என்ற மனைவி மற்றும் மூன்று குழந்தைகள்.இவர்கள் கதி என்ன?வருத்தம்.

ரஜினி ”இட் இஸ் நாட் ரைட்” என்கிறார்.பிரகாஷ்ராஜ் “ இட் இஸ் ஓகே” என்கிறார்.

இப்படி கவுன்சிலிங்.

எங்க பாட்டி ஒரு வசனம் (பஞ்ச் இல்லை)சொல்லுவார். “தேர் பத்து, திருநாள் பத்து,அறுத்துப் பத்து,அவுசாரி பத்து,பைத்தியம் பத்து..... எல்லாம் பத்து நாள்தான்”

பதினோருவது நாள்?ஊர்வசி..ஊர்வசி....டேக் இட் ஈசி பாலிசி?


(இதெல்லாம் சினமாவுல சகஜம்பா என்பது போரடிச்சுப்போச்சு)

ஒண்ணும் புரியல..... தல சுத்துது.



Friday, June 12, 2009

அனைத்துக்கும் ஆசைப்படு



எதிர்காலத்தில்
ஜனாதிபதியா
பைலட்டா








இன்ஜினியரா
புரொபசரா
டாகடரா
சார்டர்டு அக்கெளண்டெண்டா
காஸ்டு அக்கெளண்டெண்டா
டாட்டா அல்லது அம்பானியா
என்று கேட்டப்போதில்
இவரைத் தெரிந்திருந்தால்
இவராக வந்திருக்கலாம்








Wednesday, June 10, 2009

காதலியை ஆர்டர் கொடுத்து செய்! - கவிதை!













உன் தோழிகளிடம்
இருக்கும் ஆரவாரம்
உன்னிடம் இல்லை


தோழிகள் பேச்சுக்கு
கவிதையாக தலையசைத்தல்
அர்த்தபுஷ்டி பார்வை
அர்த்தபுஷ்டி மெளனம்
அமைதி முகம்
இதழ் ஓரத்தில்
எப்போதும் கசியும்
புன்னகை


இது போதும் எனக்கு
உன்னைக் காதலிப்பதற்கு


நீயும் ஏற்றுக்கொண்டாய்
என் காதலை

அதே
அர்த்தபுஷ்டி பார்வை
அர்த்தபுஷ்டிமெளனம்
அமைதி முகம் கொண்டு
இதழ் ஓரத்தில்
புன்னகையும் புரிந்து
கவிதையாக தலையசைத்து


பல நாட்கள் ஆகிவிட்டது
காதலிக்க ஆரம்பித்து


அதே
அமைதி முகம்
இதழ் ஓரத்தில்
எப்போதும் கசியும் புன்னகை
கவிதையாக தலையசைத்தல்
அர்த்தபுஷ்டி பார்வை
அர்த்தபுஷ்டிமெளனம்

இப்போது தோன்றுகிறது

உன் தோழிகளிடம்
இருக்கும் ஆரவாரம்
குறைந்த பட்சம் முப்பது சதவீதம்
கலந்திருந்தால்
சூப்பர் காம்பினேஷன்

குறைதான்

Monday, June 8, 2009

சினிமாவில் “டைரக்‌ஷன்” காட்டுதல்

டைரக்‌ஷன் காட்டுதல்

சின்ன வயதில் "ரயில் பயணங்களில்" (T.ராஜேந்தர்) என் அக்கா ராஜலக்ஷ்மியுடன் பார்த்திருக்கிறேன். அக்கா சில சீன்கள் பார்த்து கண் கலங்கியிருக்கிறாள்.

ரொம்ப நாள் கழித்து மறுபடியும் "ரயில் பயணங்களில்" படம் (T.ராஜேந்தர்) TV யில் பார்த்தேன்..


நான் பரிணாம வளர்ச்சி அடைந்தது நல்லதாக போயிற்று அக்கா பரிணாம வளர்ச்சி அடைந்தாளா? கடைசியில் பார்ககலாம்


முக்கோண காதல் கதை. கதைநாயகி சாந்தி (ஜோதி), வசந்தை(ஸ்ரீநாத்) லவ் செய்கிறாள். விதி வசத்தால் சாந்தி ராஜீவை மணக்கிறாள். ராஜீவ் சாந்திக்கு திருமணத்திற்கு முன் ஒரு காதல் உண்டு என்பதை தெரிந்து கொள்கிறான் . ராஜீவ் சாந்தியை கம்பெல்சரியாக கொடுமை படுத்துகிறான் .


கதைநாயகி, இன்னொருவனுக்கு மனைவியாகி விட்டதால் , "ஒரு வார்த்தை எதிர்த்து பேசாமல் " எல்லாவற்றையும் பொறுத்து கொள்கிறாள் .படத்தின் கடைசிவரை புடவை தலைப்பை போர்த்திக்கொண்டு கண்களில் சோகத்தோடு "நடை பிணமாக " உலா வருகிறாள். வசந்த் தாடி வளர்கிறான். ( வசந்த், ராஜேந்தர் ஜாடையில் இருக்கிறான்.)


டைரெக்டர் ராஜேந்தருக்கும் இதெல்லாம் ரொம்ப பிடித்து போய்


நெறைய டைரக்‌ஷ்ன் காட்டுகிறார்.


அது என்ன ”டைரக்‌ஷன்” காட்டுவது?


அந்த கால படங்களில் …………..


உதாரணம் 1.

சி.கே.சரஸ்வதி (அம்மா) ம்கனிடம்(எஸ்.எஸ்.ஆர்) மருமகளைப்பற்றி (விஜய குமாரி) கோள் மூட்டுகிறார்

டைரக்‌ஷன்

அப்பொழுது பட்டாசு திரி பற்ற வைக்கப்படும் காட்சி

.உதாரணம்-2

கதா பாத்திரம் யோசித்துகொண்டிருக்கிறார்.

டைரக்‌ஷன்

சைக்கிள் வீல் (ஸ்டாண்ட் போட்ட ) சுற்ற ஆரம்பிக்கும். யோசிக்கிறார்.

சிறுது நேரம் கழித்து நின்று விடும் . யோசித்து முடித்துவிட்டார்.

உதாரணம் 3

வீட்டின் பெரிய மனிதர் இறந்து விட்டார் .

டைரக்‌ஷன்

அவர் வீட்டு சுவர் கடிகாரம் நின்று விடும் .(blood related கடிகாரம்?)

உதாரணம் 4

கற்ப்பழிப்பு காட்சி. வில்லன் கதா நாயகியை துரத்துகிரான்

டைரக்‌ஷன்

புலி மானை துரத்தும்.

இந்த டைரகஷன் காட்டுதலை தி.ராஜேந்தர் உலக திரை படங்களை மிஞ்சும் வகையில் காட்டியிருக்கிறார்"ரயில் பயணங்களில்"

பார்க்கலாம் கிழே. சிலவற்றை சற்று சரியாக கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.


(இந்த டைரக்‌ஷன் பாலசந்தர்,பாக்கியராஜ்,பாரதிராஜா என்று பலரும்

காட்டியிருக்கிறார்கள்.அது அடுத்த பதிவில்)


சீன் - 1

கதைநாயகி மாயவரம் ஸ்டேஷனில் தனியாக நிற்கிறாள் . வேறுங்கோ காதலன்

கேமரா ஸூம் ஆகிறது : அங்கே ........ இங்கே என்ற புத்தகம் ரயில்வே புத்தக ஸ்டாலில் .வேறு ஒரு எல்.ஐ.சி வாசகமும் காட்டப்படுகிறது.

விளக்கம்

அங்கே ........ இங்கே என்ற புத்தகம் = இவள் இங்கே, அவன் அங்கே


சீன் - 2

மறுபடியும் கதைநாயகி மாயவரம் ஸ்டேஷனில் தனியாக படபடப்புடன்

கேமரா ஸூம் ஆகிறது : பிளாட்பாரத்தில் கிரிக் கிரிக் பொறிகள் யாரோ "வெல்ட்" செய்துகொண்டிருக்கிறார்கள் .

விளக்கம்

கிரிக் கிரிக் பொறிகள் = கதாநாயகியின் பட பட பட பட பட பட படப்பு


சீன் - 3

கதைநாயகி (திருமணம் ஆன சில நாள் பிறகு ) காரில் வரும்போது , எதிர் சைடில் பழைய காதலன் காரில் வருகிறான் கண்கள் நோக்குகின்றன .கலங்குகின்றன

கேமரா ஸூம் ஆகிறது :: "நலந்தானா ! நலந்தானா!" பூம் பூம் மாட்டுக்காரன் வாசிக்கிறான் நட்ட நடு ரோட்டில்.

(,கதைநாயகி, பழைய காதலன் ,பூம் பூம் மாடு, பூம் பூம் மாடு உரிமையாளர் ,

அவர் பையன், அசிஸ் டென்ட், நலந்தானா பாட்டு, பட படக்கும் வெயிலில்,

பெசன்ட் நகரில் எல்லாம் எப்படிஒரே நேரத்தில்.

(இதுதான் butter fly effect ஆ? ) அய்யோ...தாஙக முடியலடா சாமி!

விளக்கம்:

"நலந்தானா ! நலந்தானா!" பூம் பூம் =

1. இருவ்ர் உள்ளமும்(வாய் பேச

முடியாத சிட்ச்சுவேஷன்) பேசுகிறது.

2. தில்லானா மோகனாம்பாள் சிச்சுவேஷன் வந்து விடுகிறது


சீன் - 4

கல்யாண ஏற்பாடு நடக்க ஆரம்பித்துவிடுகிறது

அவசரமாக காதலனோடு பேச போனில் அழைக்கிறாள். . வேலைக்காரன்தான் பேசுகிறான் .ஏமாற்றம் அடைகிறாள் .

கேமரா ஸூம் ஆகிறது:

அந்த வீட்டில் டைனிங் டேபிளில் , ஒரு பையன் ஒரு சாசெரை (டீ) விரிசில் விட்டு உடைக்கிறான்

விளக்கம்:

சாசெரை (டீ) விரிசில் = அவர்கள் காதலில் விரிசல்.

சீன் - 5

கதைநாயகி திருமண பத்திரிக்கை கொடுக்க, பழைய காதலன் வீட்டிற்கு வருகிறாள்

க.நா.: "உங்க பேரு N..வசந்த் ?

ப.கா. "ஆமாம் N..வசந்த் .........என் வசந்த்

க.நா: என் வசந்த் ஆ ?” சோகமாகிறாள்.

க.நா: என் பேரு கவருக்குள் உள்ள பத்திரிகையில் இருக்க வேண்டும் .ஆனால் கவரில் இருக்கிறது

க.நா: மௌனம் . கண்ணீர் வருகிறது .

கேமரா ஸூம் ஆகிறது ::

ஒரு துளி கண்ணீர் 90 டிகிரியில் Nக்கும் வசந்துக்கும் உள்ள புள்ளியில் விழுந்து புள்ளி அழிகிறது . Nன்னும் வசந்தும் சேர்க்கிறது

விளக்கம்:

ஒரு துளி கண்ணீர் 90 டிகிரியில் Nக்கும் = (துக்கம் நெஞ்சை அடைப்பதால் விளக்கம் எழுதமுடியவில்லை.)


சீன் - 6

. கடைசியில் பழைய காதலன், அவள். இருவரும் இறந்துவிடுகிறார்கள் .பிணங்கள் அருகருகே சற்று இடைவெளி விட்டு PARALELL ஆக .

கேமரா ஸூம் ஆகிறது ::

அவர்கள் பிணத்தின் மேல் , தண்டவாளம் ,அவர்கள் --இருவர் ,

அவர்கள் இருவர்-- தண்டவாளம் , என்று மாறி மாறி .தண்டவாளம் சீன் ஓவர் லேப் செய்யப்படுகிறது.....

"தண்டவாளம் இணைந்து செல்லுமே தவிர சேராது

அது மாதிரி இவர்கள் காதலும் ".((பின்னணியில் குரல்)

விளக்கம்:

தண்டவாளம் = அவர்கள் காதல்

_______________XXXX___________________


என் அக்கா ராஜலக்ஷ்மிக்கு போன் செய்து கேட்டேன் , படம் பார்த்தியா என்று?

'ம்... பார்த்தேன் . சூப்பர் டைரக்‌ஷ்ன் டா !

_______________XXXX___________________

கேமரா ஸூம் ஆகிறது :

Arnold Schwarzenegger (Terminator XI) டெலிபோன் பூத்தில் .டெலிபோன் புக்கை புரட்டுகிறார் . O….P…….Q……R… பிறகு RA……...கண்கள் சிவக்க உற்று பார்க்கிறார் .மிலிடரி பைக்கில் விர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் பறந்து ஒரு வீட்டின் முன் நிற்கிறார் .காலிங் பெல் அடிக்கிறார் . மிஷன் கன்னை கைகளில் ஏந்தி படக் கிரிசிக் என்று trigger சரி செய்து கொள்கிறார் . கதவு திறக்கிறது .

..பட பட பட பட பட பட பட பட பட ..... பட பட பட பட பட பட பட

Rajalakshmi ? Ravishankar ? Rajender ?

முற்றும்