Thursday, October 31, 2013

பொறியியல் படிப்பு,கேங் ரேப்,மாணிக்கம்,மாராப்பு

பொறியியல் கல்லூரிகள் மொபைல் ரீசார்ஜ் பொட்டிக்கடைகள் போல திறந்து வைத்துக்கொண்டு பொறியியல் பட்டத்தை சுண்டல் கொடுப்பது போல கொடுக்கிறது.இதனால் நல்ல(???) நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளும் பாதிக்கப்படுகிறது.கட்டுக்கட்டாக பணமும் மெரிட்டும் கலந்து கல்வி வியாபாரம் ஆகி பலவருடம் ஆகிவிட்டது.

மேலே பழைய கதை.புது கதையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.


விளைவு சப்ளை (இன்ஜினியர்கள்)அதிகமாகி தரம் குறைந்து டிமாண்ட்(வேலை)குறைந்துவிட்டது.பி.இ. வெறும் ”பீ” அல்லது அந்தக்கால பி.ஏ.ஆகிவிட்டது.

இப்போது பி.இ.படித்தவர்கள் ரயில்வே-வங்கி-பிபிஓ கிளார்க் வேலைக்கெல்லாம் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.காரணம் வேலைக்கிடைப்பதில்லை.அடி வயிறைக் கலக்கும் படிப்புக் கடனை வேறு அடைக்கவேண்டும்.கிராமம் சார்ந்த பி இ க்கள் ரொம்ப மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.தரம் பாதிக்கப்பட்டதால் பிளேஸ்மெண்ட் கம்பெனிகள் பலவித டெஸ்ட் வைத்துதான் வடிகட்டி எடுக்கிறார்கள்.ஆங்கிலமீடியமே தடுமாறுகிறது.இதில் தமிழ்மீடியம் வேறு.கொடுமைடா சாமி...!

கடுமையான போட்டியில் மீண்டு எப்படி ஜெயிப்பது?இதுதான் இப்போதைய  நிதர்சனம் அல்லது  யதார்த்தம் அல்லது ground reality. கருப்பு எழுத்தில் இருப்பவைகள செய்தே ஆக வேண்டும்.இது வழக்கமான பரம்பரை பரம்பரையான பெரிசு புலம்பல் இல்லை.பின்னால் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.

1.படிக்கும்போதே சைட்பை சைட் தன் பிரிவுக்குண்டான (EEE,MECH,CSE,E&I,ECE etc.,etc.,) (job skill) விவரங்களைத் தெரிந்துகொள்வது

2.கடைசி வருடத்தில் தான் படிக்கும் பிரிவின் வேலையை தினமும் செய்வது மாதிரி அணுகி கற்றுக்கொள்வது.


3.CommnicationSkill(verbal/writing),Aptitudeசத்தியமாக
வளர்த்துக்கொள்ளவேண்டும் பிளேஸ்மெண்ட்டில் தடுமாற்றம் இருக்காது.செல்,பேஸ்புக்,டிவிட்டர்,பிளாக்கில் எழுதும் கொத்துபரோட்டா எழுத்துவகைகள் எங்கும் உதவாது.பள்ளி, கல்லூரியின் சுகமான நினைவுகளாக மனதில் இருத்திக்கொண்டு மறந்துவிட வேண்டும்.

இந்தத் திறமையை எல்லாம் சொல்லிக்கொடுக்க கம்பெனிக்கு ஆளும் இல்லை நேரமும் இல்லை.

4.நாலாவது வருடம் எந்தவித அரியர்ஸ் இல்லாமல் முதல் இருபது இடத்தில் இருப்பது.

5.ஒவ்வொரு வருடமும் படிக்கும் பிரிவின் வேலை டிரெண்ட் எப்படி போகிறது என்று கவனிக்க வேண்டும்.

5.வேலைக்கு சேர்ந்த பிறகோ அல்லது முன்னமோ சூழ்நிலைக்கு ஏற்றார் போல் முதுகலை அல்லது எம்பிஏ படிப்பது.இதுஅடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவிப்போக முடியும்.
_________________________________________________



சரி ஜே ஜே  மாணிக்கத்திற்கு வருவோம்.யார் இவர்?திரைப்பட ஒலிப்பதிவாளர்.சவுண்ட் இன்ஜினியர்.

இவர் பெயரை  முக்கால்வாசி சினிமா டைட்டில்களில் கிட்டத்தட்ட 50 வருடமாக பார்த்து வந்திருக்கிறேன். 1990-95க்கு பிறகு அவ்வளவாக காணப்படுவதில்லை. இவர் தனி ஒரு ஆளாக கொடிக்கட்டி பறந்திருக்கிறார்.அப்போது இந்தத் துறையில் ஆட்கள் குறைவா?

இவர் பி.இ. சவுண்ட் இன் ஜினியரிங்?



_________________________________________________


மெய்நிகர் ஆடை வெள்ளோட்ட அறை(virtual trial dressing room)



சென்னையில் சில ரெடிமேட் கடைகள் வாங்கும் துணி அளவு சரியாக இருக்கிறதா என்று அணிந்துப் பார்க்க  அனுமதிக்கிறார்கள்.அதுவும் ஒரு கடையில் கொத்துகொத்தாக trial room எடுத்துக்கொண்டுபோய் சரிபார்க்கலாம்.வெளியே வரும் போது வதங்கி கசங்கி சுருங்கி gang raped லெவலுக்கு வரும்.பிடிக்கவிட்டால் மடித்துவைக்கப்படுகிறது.

அடுத்த  கஸ்டமர் அதை  வதங்கி கசங்கி சுருங்கி gang rape..........வெள்ளாவியில் வேகவைத்து  ரின் - சர்ப்- நிர்மா-பொன்வண்டு சோப்பில் தோய்த்து பிறகு அணிந்துகொள்வது  நலம்.ஆனால் நான் எதுவும் செய்யாமல்தான் அணிந்துக்கொள்கிறேன்.

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?

 _________________________________________________

மவனே .... அடி  பின்றண்டா இன்னிக்கு....!

ரொம்ப நாளைக்கு  பிறகு  நான் பார்க்கும் உள்ளே ஒரு  killer instinct (வெறி) டோடு விளையாடும் வீரர் விராட் கோலி.பீமன் போல் கடாயுதத்தை (மட்டையை) சுற்றியபடி பந்தை துவம்சம் செய்து  ரன் அடித்துக்குவிக்க எப்போதும் முனையும் போக்கு. இப்படி இல்லாமல் சாதாரண மூடுக்கும் வருவார். மேற்கந்திய தீவுகள் அணியில் இப்படி ஒரு காலத்தில் பெளலிங் செய்வார்கள்.

dashing batsman.
 _________________________________________________

முந்தானை... மாராப்பு...பல்லு...!

இனிமேதான் கட்டிக்கபோறாங்க

புடவை அழகு பாஷன் போட்டிகளில் புடவை அணிந்து நடந்து நடந்து நடந்து போவார்கள்.ஆனால் பாதி போட்டிகளில் முந்தானையை காற்றில் பறக்கவிட்டு புடவைக்குப் பதிலாக வேறு எதையோ  பாஷனாக காட்டியவாறு புடவையின் மகத்துவத்தையே கலைப்பார்கள்.அச்சுபிச்சுத்தனமாக சுற்றிக்கொண்டு ”பேஷனாக” நடப்பார்கள்.நடுவர்கள் நோக்கர்கள் கிழே குழியில் உட்கார்ந்தவாறு கலைக்கண்ணுடன் நோக்குவார்கள். மார்க் போடுவார்கள்.

இதெல்லாம் பல வருடமாக நடந்து வருகிறது.இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை இது அவர்களின் பிசினஸ் நுணுக்கம்-அணுகுமுறை-ரூல்...


இவங்க கச்சிதமா கவர்ச்சியா இருக்காங்க.எல்லாம் மூடி இருக்கிற இந்த பேஷன் புடிச்சிருக்கு.
இவங்க  புடவையை அணிந்து இருக்காங்க

ஏம்பா... அதுக்காக இழுத்துபோர்த்திக்கொண்டு “மணமகளே மணமகளே வா.... வா’ ன்னு நடக்க முடியுமா.ஹல்லோ.... இது பேசன் சோப்பா....! ஊர் நாட்டானா இருக்க.

Friday, October 18, 2013

பி்ளாக் ஆரம்பித்து ஐந்து வருடம்....சகட்டுமேனி- சமந்தா!

06-10-2008 அன்று தமிழ்மணம் வ(ம)லை ஏறினேன்.உச்சிக்கு வந்தேனா?ஐந்து வருடம் ஓடிவிட்டது.வலையேற்ற உதவிய அதிஷாவிற்கும் பதிவுகளைப் பாராட்டி/விமர்சித்து ஊக்கம் கொடுத்த தமிழ்ப்பறவைக்கும் (முதல் பாலோவர்) நன்றி.

அப்பா...
  
 Ervamatin போடுகிறரா?

வலைக்கு வருவதற்கு முன்பும் எழுத்தில் ஆர்வம் உண்டு.பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதிய அனுபவம் உண்டு.சமூகவலைத் தளங்கள், தொலைக்காட்சி சேனல்கள் வரவால் எழுத்து ஊடங்களில் சிறுகதைகள் சுருங்கிப்போய்  பழைங்கதையாகியது.ஒரு கதவு மூடியது.இன்னொரு கதவு திறந்தது.அது எனக்கே எனக்கான வலைத்தளம் இலவசமாக.வடிகால் ஆயிற்று.உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


திரும்பிப்பார்த்து என்ன சாதனை செய்தேன் என்று யோசிக்கிறேன்.


கட்டட்ற சுதந்திரத்தோடும் சகட்டுமேனிக்கு எழுதித் தள்ளிய கதைகள்,கவிதைகள்,விமர்சனங்கள்,இளையராஜா இசை ரசிப்புகள்,எல்லா சப்ஜெக்ட்டிலும் சகட்டுமேனிக்குக் பதிவுகள்,சினிமா விமர்சனங்கள் துணுக்குகள்,விளையாட்டு  etc. etc. etc., etc., என்று போகிறது.அரசியல்,மதம் லேசாகத் தொட்டுப்பார்த்ததோடு சரி.ஆர்வமில்லை.ஏன் ஆர்வமில்லை? ஏன் வம்பு என்றுதான். ஏதோ எழுதினமா... மக்கள் படிச்சாங்களா.... கமெண்ட் போட்டாங்களா... நாம சந்தோஷம் ஆனமா என்கிற சுயநலம்தான்.

புதிதாக முக்கியமாக இளையராஜா பதிவுகளை ஆத்மார்த்தமாக செய்தேன்.ரசித்தார்கள்.பின் தொடர்ந்தார்கள்.அடுத்து கவிதை எழுதப் பழகினேன்.10 நல்ல கவிதைகளும் 105 மொக்கைக் கவிதைகளும் எழுதினேன்.

சொந்தமாகவே சகட்டுமேனிக்கு ரசனை இருப்பதால் எதையும் ரசித்துப் பதிவு எழுதமுடிகிறது.தி.ஜானகிராமனின் எழுத்து வாசிப்பில் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது.


ஆரம்பித்த புதிதில் கமெண்டுகளுக்கும் பாலோவர் வேண்டி பல்லிளித்ததும் உண்டு.ரூம் போட்டு மற்றவர் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டேன். பதில் மரியாதை செய்தார்கள்.பதிவர் சந்திப்பிற்கெல்லாம் போய் “காட்டி”க்கொண்டேன்.

ஐந்து வருடத்தில் பதிவுலகம் பேஸ்புக் டிவிட்டர் வந்தபிறகு மாறிவிட்டது.இதில் இண்டர் ஆக்‌ஷன் குறைந்துவிட்டது. தூரத்து உறவாகிப்போனது தமிழ்மணம்.

மறக்க முடியாதது ராஜா-ரஹ்மான் சண்டை.நான் ராஜா ரசிகன்.பிளாக் ஆரம்பித்த புதிதில் ஏதோ டீக்கடையில் நின்று கதையளப்பது போல் எழுத பிரச்சனை ஆகி டமால் டிமீல் ஆகிவிட்டது.Fuck,Asshole,Bastard போன்ற வசவுகள் தாறுமாறாக வந்தது. இதில் மன உளைச்சல் என்னவென்றால் கமெண்ட்டுக்கு பதிலிளிக்க “மறுபடியும் முதலிலிருந்து” ஆரம்பிக்க வேண்டி இருந்தது.


சினிமா இசையை நேற்று கேட்டுவிட்டு இன்று கமெண்ட் போடும் மொக்கைகள்தான் தாங்கமுடியவில்லை.இவர்கள் எந்த இசையையும் ஒழுங்காக கேட்டதில்லை என்று முடிவுக்கு வந்து விட்டுவிட்டேன்.எது ஆழம் எது மேலோட்டம் என்று சுத்தமாக தெரியவில்லை இவர்களுக்கு.
போறாளே பொன்னுத்தாயி....

எல்லாம் போல் இதுவும் கடந்துப் போயிற்று. 

கிழே என் முதல் பதிவு.எதையோ எதிர்பார்த்து இதைப் படித்த அதிஷா “ சரி... இவருக்கு அரை சதவீதம் எக்ஸ்டரா வட்டி கிடைக்கும்  போலிருக்கு” நெளிந்தார்.அவசரத்திற்கு பிளாக் ஆர்வத்தால் எழுதிய பதிவு.வலையேற்ற மூன்று பதிவு கட்டாயமாக எழுதவேண்டும்.எனக்கும் பிடித்துத்தான் எழுதினேன்.

இதற்கு ஒரு கமெண்ட் இல்லை.நொந்துபோனேன்.

பாகவதரின் சாயலில் டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள்:


ஸ்டாக் டேங்கில் மொத்தம் 524 பதிவுகள்.சிறுகதைகள் 50. கவிதை 115.இளையராஜா 35. 294 பாலோயர்ஸ். இது போதும் எனக்கு ... இது போதும் எனக்கு.(அய்யோ....ரஹ்மான் பாட்டா??)

நான் ரொம்பவும் சிலாகித்து எழுதிய சிறுகதை இரண்டு.சலூன் கதையைக் குறும்படமாக இயக்கலாம். சூப்பராக இருக்கும்.கதைகளுக்கு  படமாக நெட்டில் சுட்டு ஆண் பெண் போட்டோக்களைப் போடுவது உடன்பாடு இல்லை.அது படிப்பவர்களின் கற்பனையில் குறுக்கிடுவது.

சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி

திருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் 

எனக்குப்பிடித்த திகில் கதை
பேய் வீட்டில் விழுந்த செல்போன்

எனக்குப்பிடித்த கவிதைகள்

ஹாலில் பெய்த மழை

மொட்டை மாடி

பிடித்த ஹைகூ கவிதை

குட்டையில் விழுந்த
நிலாவைப் பார்க்கும்
மற்றொரு நிலா
 

ஹைகூக்கள்



சமந்தா புராணம்

ஸ்ரீப்ரியாக்கு பிறகு என் மனதில் இடம் பிடித்தவர் சமந்தா.காரணம் நீஎபொவில் இவர் வெளிப்படுத்திய முகபாவங்கள்... குறுகுறுப்புகள்.Stunning ! கெளதம்மேனன் நிறைய ஹோம்வொர்க் செய்து எடுத்திருக்கிறார்.ஸ்ரீப்ரியா போல் இயற்கையிலேயே இவருக்கு சினிமாவுக்கான முகம்(?) உடல் மொழி இருப்பதாக என் யூகம்.


மெளனம்தான் பாடலா
வலி எல்லாம் தரும் ஊடலா
இதுபோதும் இதுபோதும்
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும்
ஒரு கூடல் செய்வாய் நண்பா

கண்ணில் தாகம தீருமோ  மித்ரா.... மித்ரா...

ஒரு குறும்படம்  “கடிதம்”

 குறும்படம் அருமை.ஆரம்ப இசை படத்தின் ஒரு கதாபாத்திரமாக ஏதோ ஒரு வலியை ஏற்படுத்துகிறது.(படத்தின் இசையமைப்பாளர் என்று டைட்டிலில் யாரும் இல்லை.)

கடிதம் என்ற சொல்லில் உயிர் இருக்கிறது.ஆத்மா இருக்கிறது.திறந்த மனம் இருக்கிறது.நிறைய எழுத்தாளர்களுக்கு தலைப்பாக இருந்திருக்கிறது.







You  Tubeல் முதல் அடி.....

ரொமப வருடமாக யூ டுயூபில் சொந்தமாக  இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏதோ ஒரு காரணத்தினால் தள்ளிப்போய் போனவாரம்தான் கைகூடியது.

நான் வலையேற்றிய முதல் பாடல். பழைய சிலோன் ரேடியோவில் கேட்பது மாதிரி ஆடியோ. 2.22 வில் ” என்னாளும் நீ தொட்டால் அடி அம்மாடி” ஜானகி மயக்கும் குரலில் வசீகரிக்கிறார்.

1.30 -2.03 இதெல்லாம் ராஜாவைத் தவிர யாரும் மீட்ட முடியாது.

சமந்தாவின் காதலர்கள் அவர் முகத்தை பார்த்தவாறே பாட்டைக் கேட்டால் தாக்கம் இருக்கும்.




Wednesday, October 2, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் -விமர்சனம்

த்ரில்லர் கதை ஒரு மதத்தின் தத்துவார்த்தங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது.”தத்துவார்த்தங்களோடு” படத்தில் வரும் சில குறியீடுகளும் பெயர்களும் ராஜாவின் பின்னணித் தொகுப்பு ஆல்பத்தில் வரும் இசையின் பெயர்களும் படத்தின் டைட்டிலும் இப்படி நம்ப வைக்கின்றன.கடைசி முடிச்சு அவிழ்க்கும்போது அவரின் மீட்சி அல்லது விமோசனம் அல்லது /வருத்தப்பட்டு பாரம் சுமப்பது வெளிப்படுகிறது.

ரொம்ப பொறுத்திப்பார்த்தால் குழப்பம்தான் வருகிறது.

சமீபத்தில் Life of Pi  படம் கூட ஆன்மிகத் தத்துவ பின்னணியோடு வந்தது.கமல் “கடவுள் பாதி மிருகம் பாதி” என்று அசட்டுத்தனமாக பாடியபடி ஒரு பாசாங்கு படம் வந்தது.மற்றும் நான் கடவுள், குணா.


மிஷ்கின் சினிமாவின் மொழி தனி.சராசரி படங்கள்போல் உள் வாங்க முடியாது.கதையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளும் சடாரென்று யதார்தத்திலிருந்து விலகி நிற்பார்கள்.நாமும் விலகி நிற்போம் மீண்டும் சேருவோம்.டிராமா போல் இருக்கும்.அந்தக் கால அடையார் பிலிம் கல்லூரி மாணவர்கள் எடுக்கும் த்ரில்லர் படங்களில் இப்படி வேண்டாத டிராமாக்கள் இருக்கும்.இப்படிப்பட்ட டெம்பிளேட்டுகளும் இதில் உண்டு.


படத்திற்கு வருவோம். கதை இரண்டு நாள் இரவில் நடக்கிறது (ஓடுகிறது).இரவு மிஷ்கினுக்குப் பிடித்த கேரக்டர்.அதுவும் மஞ்சள் இரவு.

இரவு.ரோடில் குண்டடிப்பட்டு ஒருவன் விழுந்துக்கிடக்கிறான்.அவன் பெயர் Wolf என்கிற எட்வேர்ட்.அவனை மருத்துவம் படிக்கும் சந்துரு (என்கிற ஆட்டுக்குட்டி?)  சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான்.அன்றைய இரவே Wolf தப்புகிறான்.அடுத்த நாள் இரவில் சந்துருவை Wolf பிடித்துவைத்துக்கொண்டு போலீஸ்ஸிடமிருந்து இடத்திற்கு இடம் மாறி மாறி சென்னைக்குள்ளேயே தப்பிச்செல்கிறான். சந்துருவும் அவனுடன் கைதியாக ஓடுகிறான்.இப்படி ஓடுவது யாரையோ காப்பாற்ற..! யாரைக் காப்பாற்ற?

அதே சமயத்தில் அவனை வேட்டையாட வேறொரு மிருக  கும்பல் அதே மயிலாப்பூர் மஞ்சள் இரவில் mindless ஆக மண்டையைப்பிய்த்துக்கொண்டு துரத்துகிறது.துரத்தலின் இடையே நிறைய பேர் சாகிறார்கள்.அடிபடுகிறார்கள்.

இதற்கிடையே சந்துருவும் தப்பிக்கிறான்.ஆனால் இப்போது அவன் ஆட்டுக்குட்டியாக  Wolfஐ வேட்டையாட துரத்துகிறான்.

போலீஸ்+Wolf+சந்துரு+கும்பல்.பிரேமுக்கு பிரேம் இப்படி துரத்தல் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.கடைசியில் துரத்தல் நிற்கிறது. முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.படம் நிற்கிறது.காட்டுவாழ்கை உருவகமாக கடைசியில் சொல்லப்படுகிறது.பார்வையாளர்களுக்கு குறியீடு வைத்து க்விஸ் வைக்காமல் கோனார் நோட்ஸ் போட்டு அவரே முடிச்சை அவிழ்க்கிறார்.
Threshold Guardian

அவிழ்க்கும் முடிச்சு யூகிக்கமுடியாதப்படி இருப்பது மிஷ்கினின் திரைக்கதை அமைப்பு.
 
படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.குறிப்பாக ரயில் நிலையம் மற்றும் தெருவில் துரத்தும் காட்சிகள்.இரவு ,சுடுகாடு, வெறிச்சோடிய ஸ்டேஷன்,தெருக்கள் படத்திற்கு ஆழம் சேர்கிறது. திகில் கூடுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஹோம்வொர்க் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Grim Reaper-(சாவின் உருவகம்)
 ஸ்ரீ, மிஷ்கின் அசத்துகிறார்கள்.ஷாஜியும் நன்றாக நடித்திருக்கிறார்.கேமரா பாலாஜி ரங்கா இரவை நம் முன் நிறுத்துகிறார்.

எல்லாம் ஓகே.ஏதோ மிஸ்ஸிங் என்கிற பீலிங் வருகிறது.கடைசியில் அவிழ்க்கப்படும் முடிச்சை நோக்கித்தான் கதை துரத்தப்படுகிறது.படத்தின் நாயகன் அதற்காகத்தான் பாரங்களை சுமந்தப்படி மீட்சிக்காக ஓடுகிறான். பார்வையாளர்களும் அதே அனுதாபத்தோடு ஓட வேண்டாமா?அதன் பிளாஷ்பாக் காட்டினால சாதாரண மசாலா படம் ஆகிவிடும் அல்லது துரத்தலில் விறுவிறுப்பு இருக்காது என்றுதான தவிர்த்திருக்கிறார்களோ?

ஆனால் படத்தின் பின்னணி இசை   Wolfக்குள் இருக்கும்  விமோசனத் தேடலை ஆழமாக வெளிக்கொணர்கிறது.

வீணப்போன கருப்பு மெண்டல் காமெடிப்படங்களுக்கு இந்தப்படம் 1000 மடங்கு மேல்.

இளையராஜா
இந்தத் த்ரில்லர் கதைக்கு இவரை விட்டால் இந்தியாவில் யாரும் கிடையாது. காரணம் தத்துவார்த்த(??) பின்னணியோடு கதை ஓடுகிறது.இவருக்கு இந்தத் தத்துவார்த்தம் எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. காரணம் அவர் இசையில் வழக்கமாகவே இருக்கும் ஆத்மா(soul).மற்றும் இதில் வேறு ஒரு ஆச்சரியமான விஷயமும் இருக்கிறது.


அது இதில் இசைக்கப்படும் இசையின் இழைகள்.இதுவரை இசைக்கப்படவில்லை.வழக்கமான தமிழ்ப்பட உணர்ச்சிகள் இல்லை.இல்லாமல் இன்னும் ஆழமாக போகிறது.பழக்கப்பட்டுப்போன ஜானகியோ எஸ்பிபியோ ஷ்ரேயாலோ கார்த்திக்கோ ராஜாவோ இல்லாமல் கருவிகள் நம்மை சிலிர்க்க வைப்பது புதுமைதான்.அதற்காக அன்னியமாகவில்லை. இன்னும் ஆழமாக்குகிறது.குறிப்பாக Walking through life and death இசை படத்தின் ஆன்மாவை  துளைக்கிறது..

திகிலுக்கும் பரபரப்புக்கும் தத்துவார்த்திற்கும் இடையே சர்வ சாதாரணமாக எதையும் கலைக்காமல் மாறி மாறி இசைக்கிறார்.தனி genre ஆகவே இருக்கிறது.

எவ்வளவோ படத்தின் இறுதிக் காட்சிகள் கட்டடத்தின் பேஸ்மெண்டில் தீவிரமாக இயங்கும்.ஹாலிவுட் படங்களும் இதில் அடங்கும். இதில் வரும் பேஸ்மெண்ட் காட்சியில்  ராஜா புகுந்து விளையாடியிருக்கிறார்.

இளையராஜா இசையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்.ரொம்ப ரொம்ப லேட்டாக நிகழ்ந்திருக்கிறது.காரணம் அவர் இல்லை.இயக்குனர்கள்.