Wednesday, November 30, 2011

ஹாலில் பெய்த மழை -கவிதை



நடு ஹாலில் கொட்டும் மழைக்கு
குடை விரித்த குழந்தை
விரித்துப்போட்டபடி தூங்கிவிடுகிறது

அம்மா அப்பா அண்ணன் தாத்தா பாட்டி
அத்தை மாமா சித்தி சித்தப்பா
பெரியம்மா பெரியப்பா பொம்மைகள்
எதிர்வீடு பக்கத்து வீட்டு குழந்தைகள்
கை நீட்டிப் பார்க்கிறார்கள்

மழை நின்று விட்டது

ஒருவர் பின் ஒருவராக
சத்தம் போடாமல்
குடைக்குள் இருந்து கிளம்புகிறார்கள்

குப்.. குப்.. குப்.. குப்.. குப்.. சென்னை மெட்ரோ ரயில்

வைகை மற்றும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விட்ட புதிதில் அதைப் பார்க்க ரயில்வே லைன் ஓரங்களில் மக்கள் காத்திருப்பார்கள்.”படக் படக் படக்..”புழுதி பறக்கக் கடக்கும் நம்மை.
மெட்ரோ ரயிலும் ”படக் படக் படக்” என்று புழுதி இல்லாமல் சென்னை வாசிகளை கடக்கப்போகிறது.

முதல் தடவையாக சிட்டிக்குள் பாம்பு மாதிரி ஊர்ந்து போகப்போகிறது பூமிக்கு மேலும் கிழும்.நிச்சியமாக அண்டர் கிரவுண்ட் ஓட்டத்தை ஆர்வமாக (பிரயாணம் செய்துக்கொண்டே(ஒரு “மண்ணாங்கட்டியும்”தெரியாது) பார்ப்பார்கள்.பூமிக்கு கிழே சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம்,அண்ணாசாலை,எல்.ஐ.சி,சென்ட்ரல் வழியாக வண்ணரப்பேட்டைக்கு ஒரு ரூட்டு போகிறது,

இரண்டு வருடமாக சென்னையில் அங்கங்கு மெட்ரோ
ரயிலுக்கு வேலைகள் ஜரூராக வேலை நடக்கிறது.போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
ஜவஹர்லால் ரோடு(100 feet Rd)

அது என்ன சென்னை மெட்ரோ ரயில்?

பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தக் காலத்திற்கு ஏற்றார்போல்(fast,reliable,convenient,economical,efficient and modern transport) விரைவான,சிக்கன,நம்பகமான,புகை இல்லாத,திறன் வாய்ந்த, வசதியான,நவீன வாகனம்தான் மெட்ரோ. அடுத்து இது மற்ற போக்குவரத்துக்களுடன் சார்ந்து மக்களுக்கு பயன் அளிக்கவேண்டும்.

இதுதான் இதன் லட்சியம்.விஷன்.
கொல்கொத்தா மெட்ரோ
மெட்ரோவின் மற்றும் பல சிறப்பு அம்சங்கள்:-
  1. மற்ற போக்குவரத்துக்களை ஒப்பிடும்போது இதற்கு பயணிகள் ஐந்தில் ஒரு பங்கு எனர்ஜி செலவிட்டால் போதும்
  2. சாலைகளை அவ்வளவாக ஆக்கிரமிப்பதில்லை
  3. பயண நேரத்தை குறைக்கிறது
  4. புகை, இரைச்சல் இல்லை
  5. பாதுகாப்பானது,நம்பகமானது
முக்கியமாக இந்தச் சென்னை மெட்ரோ அண்ணாசாலை,ஜவஹர்லால் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை மூன்றையும் இணைக்கிறது.

எங்கிருந்து எங்கு போகிறது? இரண்டு ரூட்கள்.
  1. முதல் ரூட் (corridor -1) வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்(23km)
  2. இரண்டாவது ரூட் ( corridor -2) செண்ட்ரல் - செயிண்ட்தாமஸ் மவுண்ட்(22km)
  3. இதில் 24km பூமிக்கு அடியிலும் மீதி மேலும் செல்கிறது
படத்தைப் பார்க்க.
  1. ரூட் -1 வண்ணாரப்பேட்டை -சைதை வரை பூமிக்கு அடியில் பிறகு மேல்
  2. ரூட் -2 செண்ட்ரல் - திருமங்கலம்(அண்ணா நகர்) பூமிக்கு அடியில் பிறகு  மேல்
கிழிருந்து மேல்,மேலிருந்து கிழ் நெருங்கும் பகுதிகளை எப்படி ஜெர்க் இல்லாமல் சரி(அலைன்) செய்வார்கள்?

மற்ற திட்டங்கள்:
  • 2-27 கிமீக்கு ரூ8 - 23 வரை வசூலிக்கப்படலாம்(தோராயமாக)
  • 30கிமீ வேகம்.ஆனால் 80கிமீ போவதற்குத் திறன் உள்ளது
  • 45 நிமிட பயணம் முதல் ரூட்டிற்கு 
  • 30 வினாடிகள் நின்று புறப்படும்
  • 5 நிமிடத்திற்கு ஒரு முறை நெருக்கடி நேரத்தில் மற்ற நேரத்தில் 15 நிமிடம் ஸ்டேஷனுக்கு வரும்
  • பேப்பர் இல்லாத டிக்கெட் மற்றும் தானியங்கி ஏறுதல்/இறங்குதல்
  • இதனால் 16 பேரூந்துகளும்,300 நான்கு சக்கர மற்றும் 600 இரண்டு சக்கர வாகனங்கள் சாலையில் குறையும்.ஆட்டோ?
  • ரூட் -1 அன்ட் 2 தலா, 17 ஸ்டேஷன்கள் 
  • தண்டவாள நடுவில் அதிக வோல்ட் மின்சாரம்.அதைத் தேய்த்துக்கொண்ட்டுதான் மெட்ரோ போகும்.தொட்டால் கரிக்கட்டைதான்.வாட்டர் பாட்டில் விழுந்தால் எடுக்காதீர்கள்
  • ஸ்டேஷனிலிருந்து இறங்கியவுடன் வேறு இடத்திற்குச் செல்ல feeder service உண்டு (????)
  • முதல் கட்டமாக ஒரு பகுதி (பூமிக்கு மேல்) 2015ல் பயணத்திற்கு விடப்படும்
  • அவசரத்திற்கு டிரைவரை தொடர்பு கொள்ள அழுத்த விசைகள் உண்டு
  • ஒரே சமயத்தில் 1200-1500 பிரயாணிகள் பிரயாணம் செய்யலாம்
  • ”பாஸ் டைம்” வேர்கடலை,கர்சீப்,ஊசி,பாக்கெட் காலண்ட்ர்,நெய் பிஸ்கட் இத்யாதிகள் தொல்லை இருக்காது
முதலீடு ஜப்பானிடம் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது.அதை 30 வருடங்களில் திருப்பிக்கொடுக்க வேண்டும்.

மறக்காம குடுத்துடங்க கடன் அன்பை முறிக்கும்.

பயணிகள் கவனத்திற்கு ...அடுத்த மெட்ரோ இன்னும் சில நிமிடங்களில் .....திருமங்கலம்(அண்ணா நகருக்கு)



Tuesday, November 29, 2011

சாரகாத்து from ஹிந்தி?கேட்டதும் மயக்கம் என்ன?

ரொம்ப நாளைக்குப் பிறகு கடவுளைப் பற்றி சிம்பிளான இதமான வரிகள்.தபலா தாளத்தை அடிப்படையாகக் கொண்ட பாட்டுக்கள் எப்போதும் எனக்கு சுகம்தான்.அடுத்து சிதார்/வயோலா கருவிகளின் இன்பமான ஓலம்.

நான் சமீபத்தில் கேட்டு ரசித்தப் பாடல்.இதமான இசை.ஹரீஷ் ராகவேந்திரா அருமையாக பாடி உள்ளார்.


படம்:,மயக்கம் என்ன பாடல்:என்னென்ன செய்தோம் இங்கு இசை:ஜி.வி.பிரகாஷ்.


ராகம்:கல்யாணி?

என்னென்ன செய்தோம்

வாகை சூட வா
இதில் இரண்டு பாடல்கள் ஹிட்டாகிவிட்டன.இசை எம்.ஜிப்ரான்.

”போறானே போறானே பாட்டை நேகா பாசின் பாடி உள்ளார்.

அடுத்து “சார காத்து” பாட்டு by சின்மயி

எனக்கும் பிடித்திருக்கிறது.வித்தியாசமான கிராம மெலடி.இரண்டிலும் ஒரு மாதிரி “ஸ்டைலான மேற்கத்திய ” வாசனை வருகிறது.தவிர்த்திருக்கலாமோ?
நம்மூர் கிராமம் காணாமல் போகிறது.

Period film என்பதால் மெட்டைப் பழசாக்கப்போக அதில் மேற்கத்திய சாயல் வந்துவிட்டதோ? வாழ்த்துக்கள் எம்.ஜிப்ரான்.

”சார காத்து”  இந்திப்பாட்டு “inspiration"னா? சுட்டதா?

சார காத்து


படம்: ஆராதனா பாட்டு: Gun Guna Rahe Hai Bhanvare. சிறு வயதில் மிகவும் பாதித்த பாடல்.

கவுண்ட் 0.28 -0.54 முதல் கவனமாக கேட்கவேண்டும்.

ஆராதனா

__________________________________________________________

6.10.11 அன்று பாலிமர் டிவியில் “மைதானம்” படம் பார்த்தேன். நண்பனின் துரோகம் பற்றியது. இயக்கியவர் சக்திவேல். அருமை.உயிர் துடிப்போடு காட்சிகள். நிறைய இரவு காட்சிகள் படத்தை ஆழமாக்குகிறது.

கதாநாயகி நடிப்பு அருமை.”மைதானம்” என்ற தலைப்பு ஏன்?

குறிப்பாக படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரொம்ப நன்றாக இருந்தது.இசை சபேஷ் முரளி.இவரிடம் நேட்டிவிட்டி இருக்கிறது.ஆனால் ராஜாவின் தாக்கம்.

இதில் ஒரு பாடல் சின்மயி பாடிய ”கனவா நெசமா” பாடல் என் மனதை கவர்ந்தது.குறிப்பாக அதை உச்சரிக்கும்போது.ஷரேயா கோஷால்/சாதனா சர்க்கம் போல் மழுப்பிப்(அழுத்தம் திருத்தம் இல்லாமை) பாடாமல்அமர்க்களமாக பாடி உள்ளார். காரணம் தாய்மொழி தமிழ்.

கனவா நெசமா



டியூஷன் எத்தனை டியூஷனடா(டி)!

டியூஷனில்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.

ஒரு காலத்தில் டியூஷன் (தனி வகுப்பு) வைத்தால்
அது அவமானம்,மக்கு,பெயில் கேஸ்.இப்போது டியூஷன் போகாவிட்டால் மக்காகிவிடுவார்கள்.93%லிருந்து 98% அடைவதற்கும் டியூஷன் போகிறார்கள்.

காலம் அப்படி.போட்டின்னா போட்டி அப்படி ஒரு போட்டி.

குழந்தைகளின் மேல் பெற்றோர்களின் அவ நம்பிக்கை மற்றும் குழந்தைகளின் மேல் பேஷனைப் போல் டியூஷனை திணிக்கும் டிரெண்ட் வருத்தமளிக்கிறது.
காலையில் எழுந்து பல் துலக்க வேண்டும் என்பது மாதிரி டியூஷன் படிப்பில் ஒரு அங்கமாகிவிட்டது.It is a necessary evil."அந்தக் காலத்தில கிடையாது” என்று பெருசுகள் ஆரம்பித்தால் பருப்பு வேகாது.சுழ்நிலை எல்லாம் மாறிவிட்டது.

பெற்றோர்கள் ஒரு லெவலுக்கு மேல் குழந்தைகளின் படிப்பை மேற்பார்வை செய்ய முடியாததால் “நல்லா பாத்துகுங்க” என்று டியூஷனில்விட்டு விடுகிறார்கள்.குழந்தைகளும் எங்க ஆத்துக்காரரும் கச்சேரி போவது போல் போய் வருகிறார்கள்.scout தவிர எல்லா பாடங்களுக்கும் டியூஷன்.

இங்கும் நல்லா ”பாத்துக்கிறார்களா” என்பதையும் பார்க்க வேண்டும்.

டியூஷன் இப்போது இன்னொரு பள்ளிக்கூடம்.அங்கு விட்டதை இங்குப் பி(ப)டிப்பது.குடியிருக்க வீடு தேடும்போது பள்ளி மற்றும் முக்கியமாக டியூஷனுக்கு வசதியாக இருக்குமாறு பார்க்கிறார்கள்.காலையிலும் மாலையிலும் புத்தக மூட்டைகளை சுமந்தவாறு தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் பள்ளி மாணவ-மாணவிகளைப் பார்க்கலாம்.

இதில் பரிதாபம் பள்ளி முடிந்து அழுக்கு வடிந்தவாறு ரொட்டியோ அல்லது குர்குரே/பேல் பூரி எதையோ சாப்பிட்டுவிட்டு நேரடியாக டியூஷன் செல்பவர்கள்.ஆசிரியர் வீட்டு வாசலில் காத்திருப்பவர்கள்.

அம்மாக்களும் காத்திருப்பார்கள்.மாணவி/மாணவர்களும்
சிங்கிள் ஆட்டோ பேசி குரூப்பாக போகிறார்கள்.சிபிஎஸ்சியும் போகுது.மெட்ரிக்கும் போகுது.ஸ்டேட் போர்டும் போகுது. எல்லாம் போகுது.போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
இதில் ஏசி ரூம் போட்டு சிரிக்கும் அவலம், பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே மீண்டும் அதே சப்ஜெக்டை இங்கும் எடுப்பது.

ஏன் டியூஷன்? கற்றுக்கொடுத்தலுக்கும் கற்றுக்கொள்ளுதலுக்கும் உள்ள இடைவெளிதான் காரணம். இடைவெளி நீண்டுவிட்டது. இதற்கு பல காரணங்கள்.

முக்கியமானவை:

1.கற்றுக்கொடுத்தலைப் புரிந்துக் கொள்ளாமை 2.சரியாக கற்றுக்கொடுக்காமை 3.பயிற்சி 4.மீண்டும் பயிற்சி4.அறிவுத்திறன் 5.நேரம் 6.வகுப்பின் ஆசிரியர்-மாணவர் விகிதம் (1-30தான் சரியான விகிதம்) 6.பள்ளியின் நோக்கம்(vision).7.சேவை வியாபாரம் ஆகிவிட்டது.8.வலுவில்லாத அடித்தளம் (கணக்குப்பாடத்திற்கு முக்கியம்)
9.பெருகிவிட்ட கவனக் கலைப்புகள்.(செல்/நெட்/டிவி/திருட்டு சிடி/டிரைவிங்)
10.(சொல்லிக்கொடுக்க)அண்ணன் அக்கா தங்கை தம்பி என்று இல்லாமல் ஒண்ணே ஒண்ணு கண்ணே நிலமை சில குடும்பங்களில்
11. லட்சங்கள் கொடுக்காமல் இன்ஜினியரிங் சீட் வாங்க12.கடினமான பாடங்கள்
எல்லா ஆசிரியர்களும் அப்படி அல்ல. சில பள்ளிகளில் சிரத்தையோடு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.தன் கிழ் படிக்கும் மாணவி/மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.சேவை மனப்பான்மை இருக்கிறது.

கற்றுக்கொடுப்பது ஒரு கலை(teaching is an art).இது எவ்வளவு பேருக்கு வரும்.மேலும் ஆசிரியர்களின் பணி உன்னதமானது(noble profession).எதிர்கால சந்ததியை உருவாக்குகிறார்கள்.

பாடம் நடத்துவதைக் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்த்தால்:

1.கற்றுக்கொடுத்தல் அடுத்த நிமிடம் புரிந்துக்கொண்டு கற்றுக்கொள்ளும் திறன். இதில் இருப்பவர்கள் சூப்பர் டூப்பர்.எவ்வளவு பேர் இருப்பார்கள்?

2.கற்றுக்கொடுத்தல்-புரியாமை-விளக்கம் கேட்டல்-மீண்டும் கற்றுக்கொடுத்தல்-ஓரளவுக்குப் புரிந்துக்கொள்ளுதல்-பயிற்சி-பயிற்சியில் தெளிவாதல்-மீண்டும் பயிற்சி-மீண்டும் பயிற்சி-கடைசியில் அடித்தளம் வலுவாதல்.
இந்தச் சுழற்சி முக்கியமாக கணக்குப்பாடத்திற்கு வேண்டும்.

மேற்சொன்ன சுழற்சியில் பிரச்சனை என்றால் டியூஷன்.Practice makes the man perfect என்பார்கள்.டியூஷன் முடிந்தும் இந்த சுழற்சி அவசியம்.எவ்வளவு பேருக்குச் சிரத்தை இருக்கிறது.பயிற்சியை சிரத்தையாகச் செய்தால் எங்கேயோ போய்விடுகிறார்கள்.

31-12-11 அன்று நடக்கப்போகும் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசு வாங்க வேண்டும் என்றால். 1.1.11 அல்லது 1.7.11 அன்றே தினமும் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.அதேதான் படிப்பிற்க்கும்.தினமும் பயிற்சி.


இப்போது பயிற்சி? அவ்வளவு சிரத்தையாக இல்லை.சாதா விடுமுறை மற்றும் இலவசமாக கிடைக்கும் விடுமுறை நாட்களில் விடாமல் சிரத்தையாக செய்தால் டியூஷனே தேவை இல்லை.தூள் கிளப்பலாம்.மேற்பார்வைச் செய்வதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது பெற்றோர்களுக்கு.

டியூஷனை தவிர்க்க: சிறு வயதிலேயே அடித்தளத்தைப் பலமாக்குவது. முக்கியமாக கணக்கு பாடத்தை.இதற்கு பெற்றோர்கள் பல தியாகங்களைச் செய்ய வேண்டும்.

டியூஷன் வைப்பவர்கள் கவனிக்க வேண்டியது:-

1.கூலிக்கு மாரடிக்கும் டியூஷன்களை கண்டுக்கொள்ளுங்கள்.

2.பள்ளியில் கற்றுக்கொடுத்துவிட்டு பள்ளி முடிந்து “சோர்ந்து” வந்து டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களின் எனர்ஜி லெவல் எப்படி இருக்கும்?டியூஷன் செண்டர்களில் பார்ட்டைமாக வேலைப் பார்பவர்களும் இதில் அடங்குவார்கள்.

3.இது one to one குருகுலம் கிடையாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

4.கலந்து கட்டியாக சில இடங்களில் எடுக்கிறார்கள்.(state+Matri+cbse). 9+10+11+12
ஒரு இடத்தில் கண்ணால் பார்த்தேன்.ஜெஜெவென கூட்டம்.தினமும் பைனகுலர் வழியாக பார்த்து என் மகனை அழைத்து வருவேன்.விளக்கு பூஜை செய்வது போல் எல்லோரும் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பார்கள்.

5.எதுவாக இருந்தாலும் கடைசியில் படிக்க வேண்டியது குழந்தைகள் கையில்தான் இருக்கிறது.நாம் திறந்து திணிக்க முடியாது.

6.டியூஷன் வைத்ததும் பள்ளியில் எடுக்கும் மார்க்கை மானிடர் செய்யுங்கள்.

7.டியூஷன் ஆசிரியர்களுடன் அவ்வப்போது உரையாடி feedback வாங்குங்கள்.இரண்டு(ஆசிரியர்+மாணவன்/வி) பேருக்கும் பொறுப்பு வரும

8.ஸ்கூல் விட்டு டியூஷனக்குப் போகும் குழந்தைகளின் எனர்ஜி லெவலயும் மானிட்டர் செய்யுங்கள்.

9.முகத்தைப் பார்த்து முடிவு எடுக்காதீர்கள்.

10.ஒரு டீச்சர் பெயரைச் சொல்லி அங்க டியூஷன் “சூப்பர்” என்பார்கள்.விசாரியுங்கள்.இப்படித்தான் எனக்கு சொன்னஅந்த சூப்பரிடம் டியூஷன் படிக்க 65 மாணவி/மாணவர்கள்.ஒரே ரூம்.வாசலில் ஒரு கோடி செருப்புக்கள்.எஸ்கேப்.

அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களை நினைத்துப்பாருங்கள்.


டெயில் பீஸ்:  

கேள்வி: டியூஷன் என்பதை தடை செய்துவிட்டால் என்ன ஆகும்?


Monday, November 28, 2011

பிளாக் அண்ட் ஒயிட் அம்மா -சிறுகதை

அம்மா வளையவரும் அரவம் வீட்டில் கேட்கவில்லை.
ஏதோ உள்ளுணர்வு உந்த விசுக்கென்று படுக்கையை விட்டு எழுந்தாள் ஜனனி.சுற்றும் முற்றும் பார்த்தாள்.அப்பாவின் குரல்தான் கேட்டது.வந்த நாளிலிருந்து அம்மாவின் அருகாமை தேவைப்படுகிறது.இந்த அருகாமை ஏக்கம் திருமணம் நிச்சயம் ஆன பின்புதான்.ஏன் இது?அவளுக்கே புரியவில்லை.திருமணத்திற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது.

இத்தனைக்கும் அம்மாவைப் பிரிந்து டெல்லியில்தான் கை நிறைய சம்பளத்தில் வேலை.பத்து நாள் லீவில் வந்திருக்கிறாள்.

”ஏய் அம்மா..!அம்மா...!”என்று கூப்பிட்டவாறே சமயலறைக்குப் போனாள்.
ஸ்டவ்வின் மேல் ”உஸ்ஸ்ஸ்ஸ்” என்று குக்கரின் சத்தம்.வெயிட்டை ஸ்பூனால் மென்மையாகத்தட்டி ”கீப் கொயட்” என்றாள்.

மற்ற அறைகளிலும் தேடிப் பார்த்துவிட்டு இல்லாமல் டிவி ஸ்டாண்டை நோக்கி வந்தாள்.டிவி ஸ்டாண்டின் மேல் இருந்த அம்மாவின் பிளாக் அண்ட் வொயிட் கல்யாண போட்டோவைப் பார்த்தாள்.இதை எப்போது வைத்தாள்.மனசு பரவசமாயிற்று.

அப்பாவித்தனமும் அழகும் முகத்தில் (கல்யாண)சந்தோஷமும் கொள்ளையாக இருந்தாள்.”ஏ பிளாக் அண்ட் ஒயிட் அம்மா ஒன்ன பாத்தா பொறாமையா இருக்கு” அம்மாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்கவும் அம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
”ஏய் அம்மா..! எங்க தொலஞ்சுப் போயிட்டா..” கத்தினாள்.

“என்னடி ஆச்சு ஒனக்கு.ரொம்ப கிறுக்குப் புடுச்சா போலத்தான் என் பின்னாடி சுத்தற”

சிரித்தாள் அம்மா.சிரிக்கும் போது மேல் உதடு சற்று பட்டையாகி பற்களோடு ஒட்டி வசீகரமாக இருக்கும்.யாராக இருந்தாலும் வசியப்பட்டு பதிலுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியாது.

“அம்மா.. நைட்டு டிஸ்கஸ் பண்ணினமே.!கல்யாணத்துக்கு அப்பறம் நீயும் அப்பாவும் என்னோட டெல்லில செட்டில் ஆவறதப் பத்தி... அது...!”

இடுப்பில் கைவத்தபடி ஜனனியை முறைத்தவாறு நின்றாள் அம்மா.
“அதெல்லாம் நடக்காத கத.கொழந்த பொறந்த பிறகு பாத்துகிடறத்துக்கு வேண ஒத்தாசயா ஒரு வருஷம் இல்லாட்டி ரெண்டு வருஷம் இருக்கலாம்.ஆனா பர்மனெண்டா நாட் பாசிபிள்.நீயே ஆள் வச்சு பாத்துகிட்டு ஆபிஸ் போக வேண்டிதான்"

”ப்ச்.. போம்மா”

“க்கும்.இங்க இருந்ததான் நான் பிளாக் அண்ட் வொயிட் அம்மாவா இருக்க முடியும்”

“ பின்னிட்ட மிஸஸ் விசாலாட்சிமுருகானந்தம்.சூப்பர் சிக்ஸ்”

ஜனனி வீடு அதிர சிரித்தாள்.

“இன்னும் குளிக்கலயா?சீக்கிரம் குளி.எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்டலாம் பின்னாடி பேசலாம்” பேச்சை மாற்றி செருப்பை ஸ்டாண்டில் உதறும்போது கணுக்காலில் கொலுசு சிணுங்கியது.

அம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.புதுப் புடவை அம்மாவை தனியாக எடுத்துக் காட்டியது.

அம்மா ரொம்ப குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை.ஐம்பதை நெருங்கும் வயதிலும் கட்டு விடவில்லை.அளவான மார்பகங்களும் பின் பக்கமும் ரொம்ப புடைக்காமல் புடவைக்குள் கச்சிதமாக அடங்கி கவர்ச்சியாக இருந்தாள்.

ஜனனியை விட கூடுதல் நிறம். தலையில் ஒரு நரை கிடையாது.பூச்சரம் எப்போதும் இருக்கும்.உடுத்தும்உடைகள் அனாவசியமாக எங்கும் அசக்கு புசக்கு என்று தொங்காது.

பிளாக் அன்ட் வொயிட்டில் இருக்கும் அதே எளிமை நேரிலும் தெரியும்.
எப்போதும் புடவைதான்.ஜனனி வந்ததிலிருந்து புதுப் புடவைகள்தான் நிறைய உடுத்துகிறாள்.

மூன்று நாளாக அம்மாவை கவனிக்கிறாள்.

பளிச்சென்று வெளியே போகிறாள் வருகிறாள்.அம்மா இப்படி அடிக்கடி வெளியே போவது ரொம்ப குழந்தைத்தனமாகப்பட்டது.அதே சமயத்தில் பிடிக்கவும் செய்தது.

போகும்போது கையில் விதவிதமாக குட்டி பர்ஸ் அல்லது ஹேண்ட்பேக். செல்போன்.ஏதோ யோசித்தப்படி திரும்பி வருவாள்.மீண்டும் போவாள்.சில சமயம் அப்பாவுடனும் போவாள்.வெளியே போகாத தருணங்களில் இருவரும் ஏதோ அசட்டுத்தனமாகச் சிரித்துப் பேசியபடி புழங்குகிறார்கள்.விடிய விடிய தன்னுடன் அரட்டை.

ஒரு குறைச்சலும் இல்லை அம்மாவிற்கு.இதே அப்பாவித்தன முகத்துடன் மூத்த அக்காக்கள் இருவருக்கும் திருமணம் செய்து செட்டில் ஆக வைத்துவிட்டாள்.

அம்மாவைப் பார்க்கப் பார்க்க பொறாமைதான் தலையில் ஏறியது.

.“ ஏய்...பிளாக் அண்ட் வொயிட் அம்மா விசாலாட்சிமுருகானந்தம்! எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல நாம ரெண்டு பேரும் மாத்திக்கலாமா?நீ இடத்துக்கு வா நா உன்னோட இடத்துக்குப் போறேன்”

”என்னாங்க எனக்கு திருஷ்டி சுத்திப்போடுங்க.உங்க பொண்ணு எம் மேல காண்டு வச்சிட்டா.குல தெய்வம் ராஜராஜேஸ்வரி எல்லாத்தையும் பொடிபொடியாக்குமா” மேல் நோக்கிக் கைகூப்பிவிட்டு “சீக்கிரம் குளிச்சிட்டு வா.. சூப்பர் சாப்பாடு இன்னிக்கு”.

ஜனனி குளித்துவிட்டு வந்தாள்.அப்பா, ஜனனி, அம்மா மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

”நானும் வேலைக்குப் போனாதான் சமாளிக்க முடியும்.ஒரு ஸ்டேட்டஸ்ஸோட இருக்க முடியும்.இவ்வளவு சம்பளத்த எப்படி விட்றது”கெஞ்சலாகக் கேட்டாள்.
” இதே பல்லவிதான் திருப்பி திருப்பிப் பாடற.ஒரு வருஷம் இல்லாட்டி ரெண்டு வருஷம் கூட இருந்து குழந்தையப் பாத்துக்கலாம்.அப்படியே கத்துக்கிட்டு நீ டேக் ஓவர் பண்ணிக்க அவ்வளதான்.இது ஒண்ணும் பிரம்ம வித்த இல்ல”

”நீனும் அதே பல்லவிதான் பாடறே”

“வேற எதுவும் மாத்திப் பாடமுடியாது.இதான் உண்மை.” அம்மா எழுந்து சமயலறைக்குப் போனாள்.

“புரியதும்மா.புரியாம இல்ல.கல்யாண நிச்சியம் ஆனதிலிருந்து என்னவோ ஒரு பயம்.ஒரு செண்டிமெண்ட்.சரிம்மா..நீயும் அப்பாவும் வந்து மூணு வருஷம் அப்படியே எக்ஸ்ட்ரா ஒரு அரை வருஷம் இருந்து கொழந்த பொறந்தா பாத்துக்கோ.ஓகே வா”

“ஓகே ...ஓகே டபிள் ஓகே” அம்மாவும் அப்பாவும் குரல் கொடுத்தார்கள்.
கல்யாணமும் நடந்தது.குழந்தையும் பிறந்தது. டெல்லியில் இப்போது அப்பாதான் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார்.

அம்மா கல்யாணத்திற்கு முன்பே பிளட் கேன்சரில் இறந்து போனாள்.

                                           முற்றும்

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..!


மன்னிப்பு:
என் தமிழ்மண வாரத்தில் வந்திருக்கும்முதல் மூன்று பதிவுகள்” ஓ கல்கத்தா” “பரத்வாஜின்” மற்றும் “இளையராஜா..ஹம்மிங்ஸ்” ஏற்கனவே போட்டதுதான்.
நேரம் பற்றிய தகவல் தொடர்பு இடைவெளி மற்றும் தொடர்ந்து ஏற்பட்ட மின் தடையால் தயாரித்த நட்சத்திர பதிவுகள் ஏற்றப்படவில்லை.

அதனால் தமிழ்மணம் ஏற்கனவே உள்ள பதிவுகளை ஏற்றி உள்ளனர்.

அடுத்து ஆடியோ (ஹம்மிங் பதிவு)பிரச்சனையும் உள்ளது.ஆடியோ வேலை செய்யவில்லை.

இனி டிவிங்கிள் டிவிங்கிள்.....

சுற்றுல மையங்களில் கயிற்றில் தொங்கிக்கொண்டு வரிசையாக ஊரும் ரோப் கார் போல் ஊர்ந்து போகும் பதிவுகள் திடீரென்று செர்வர் பிரச்சனையால் அங்கங்கு நின்று விடும்.அது போல் இரண்டு முறை என் பதிவு முகப்பில் நின்றுவிட்டது.

மூன்று நாள் கழித்துதான் ஊர ஆரம்பித்தது.

ஆக இந்த வார நட்சத்திரமாக என்னை அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுத்தாலும் unofficialஆக இரண்டு முறை தமிழ்மண நட்சத்திரமாக ஆகி இருக்கிறேன்.

திடீர் மாப்பிள்ளை ஆன உணர்வு.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஜொலிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.இதற்காக டியூஷன்,ஹோம்வொர்க்,ஸ்பெஷல் கிளாஸ்,சேகர் கைடு,கோச்சிங்,மனப்பாடம் என்று எதுவும் செய்யவில்லை.

ஜொலிப்பா அல்லது ஜல்லிப்பா என்பது படிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.

அனுபவம்,கதை,கவிதை,கட்டுரை,இசை,பொது,ஆன்மீகம்,லொட்டு,லொசுக்கு இத்யாதிகள் மக்கா...எதையும் விட்டுவைப்பதில்லை.காரணம் சுதந்திரம்.
பிடிக்கவில்லை என்றால் பத்திரிக்கைகளைப் போல் திரும்ப வருவதில்லை.

கவிதைகள் 111 எழுதினாலும் 4 கவிதைகள்தான் பிடித்திருக்கிறது.எல்லா சிறுகதைகளும் எனக்கு திருப்தி அளித்தது.

நான் எழுதி எனக்குப் பிடித்த சிறுகதை:
சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி

இசைஞானி இளையராஜா பதிவுகள் எனக்கு நிறைய பாலோவர்ஸ் வாங்கித் தந்தது.நிறைய ஹிட்டுகளும் கொடுத்தது.இந்த வாரத்திலும் பதிவு உண்டு. ராஜா அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.

நட்சத்திர பதிவிலும் என்ன புதிதாக எழுத முடிந்துவிடும்.வழக்கமான பதிவுகள்தான்.

எல்லோருக்கும் நன்றி.

Thursday, November 10, 2011

ஓ...கொல்கொத்தா! துர்கா காப்பாற்றுவாள்

ஒவ்வொரு தடவையும் கொல்கொத்தா(Kolkata) செல்லும்போது அது ஒவ்வொரு மாதிரி இன்னதென்று புரியாமல் என்னை வசீகரிக்கிறது.இந்த தடவை மனதின் ஒரு மூலையில் சொந்த சோகம் ஒன்று உறுத்தியபடிதான் ஊர் சுற்ற முடிந்தது.அது என்ன?கடைசி பாராவில்.

நாங்கள் பிரயாணம் செய்த கோரமண்டல் கம்பார்ட்மெண்ட்(ஏசி 2 டயர்) மட்டமான கண்டிஷன்.டமால் டிமீல் என்று இணைப்பில் அதிர்வு.குட்டி கரப்பான்கள்.அதே வழக்கமாக டிடிஇயை சுற்றி வளைத்தபடி அலையும் பிரயாணிகள்.திரும்பும்போது ஹெரா மெயில் பிரயாணம் நன்றாக இருந்தது.

அங்கு கால் வைத்தவுடன் முதல் உணர்வு “சுதந்திர இந்தியாவிற்கு முன்” இருப்பது போல்தான்.காரணம் இன்னும் மாறாத கிழக்கு இந்தியா கம்பெனி ஆட்சித் தோற்றங்கள்.ஹவுரா பாலம்,ஊரும் ட்ராம்கள்,மினி பஸகள்,மஞ்சள் பூத்த வீடுகள்,பச்சை ஷட்டர் ஜன்னல்கள்,கை ரிக்‌ஷாக்கள்,புழுதி,ஏழைகள்.

பூஜா கொண்டாட்டங்கள் முடிந்து உதரியாக அங்கும் இங்குமாக தெரு மூலைப் பந்தல்களில் கொள்ளை அழகாக துர்கா காட்சியளிக்கிறாள். ஒரு மாதிரி fancy dress பொம்மை அலங்காரங்கள்.அருமை.

நம்ம ஊர் மாதிரி வானாளவிய புத்தம் புது சாப்டுவேர்
கட்டிடங்கள்,தனி வீடை இடித்துவிட்டு பல அடுக்கு மாடி கட்டடங்களும் குறைவுதான்.

கொல்கொத்தா இந்தியாவின் தலை நகரமாய் இருந்தது ஒரு காலத்தில்.ஒரு முறை ராஜீவ் காந்தி “இறந்துகொண்டிருக்கும் நகரம்” என்று சொன்னார்.அவ்வளவு பிரச்சனைகள் அந்த ஊரில் முன்னொரு காலத்தில்.

மெளலி ஏதோ ஒரு படத்தில் சொல்லுவார் “உங்க ஊருக்கு கப்பலை தவிர எல்லா வாகனங்களிலும் பிரயாணம் செய்யனம்”.ஆனால் இங்கு கப்பலும் (ferry service)இருக்கிறது.எதிலும் எங்கும் எல்லோரும் பிரயாணம் செய்தபடி இருக்கிறார்கள்.அதனால் பைக், ஸ்கூட்டர்,கார் எல்லாம் ரொம்ப அரிதாக தென்படுகிறது.அடுத்து இங்கு வாங்கும் திறமை(purchasing power) குறைவு என்கிறார்கள்.

பெங்காலிகளில் நிறைய(90%) மிடில் கிளாஸ் மாதவன்கள்?

இப்போது கை ரிக்‌ஷாக்கள் மற்றும் மினி பஸ்கள் குறைந்துவிட்டன.ஆனால்ஆட்டோக்கள் அதிகமாகி விட்டன.இங்கு மாதிரி ஆட்டோ பகல் கொள்ளை கிடையாது. மெட்ரோ ரயில் ரொம்ப வருஷமாக ஓடுகிறது.அதிலும் பிரயாணம் செய்தாகிவிட்டது. டிக்கெட் கிடையாது. அதற்கு பதிலாக ஒரு கருப்பு கலர் கேரம்போர்ட் காயின் மாதிரி ஒன்றை கொடுக்கிறார்கள். ஸ்டேஷன் உள்ளே போகவும் வெளியே வரவும் இதைத்தான் பயன்படுத்த வேண்டும்.


பிரயாணிகள் தவிர நிறைய சுற்றலா பயணிகளும் இதில் பயணிக்கிறார்கள்.

நம்ம ஊர் போல் பளபளவென்று டியூப் லைட் போட்டு வசந்தா/சங்கீதா/சரவண போன்ற சைவம் மற்றும் அசைவ உணவகங்கள் ரொம்ப ரொம்ப குறைவு.

நிறைய ரோட் சைட் கையேந்தி அசைவ பவன்கள்தான்.விதவிதமான அசைவ உணவுகள் ரொமப ஸ்டைலாக கொடுக்கிறார்கள்.மூலைக்கு மூலை நிறைய இனிப்பு பலகாரக் கடைகள். வித விதமான இனிப்புகள்.

பெங்காலிகள் நம்மூர் மசால்தோசையும்,வடையையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நான் சாப்பிட்டது மிஷ்டி தொய்,சந்தேஷ்,வர்த்தமான் வாழைப் பழம்,ரசகுல்லா,சிங்காரா,கச்சோரி,ராஜ்போக் மற்றும் பெயர் மறந்துபோன இனிப்புக்கள்.

அங்கு ஏதோ ஒரு தியேட்டரின் சினிமா போஸ்டர் சின்னதாக.உற்றுப் பார்த்தால் அதில் Seventh Sence morning show.

சந்துக்கு சந்து டாஸ்மாக் கடைகள் கிடையாது. ரொமப அபூர்வமாகத்தான் தென்படுகிறது.கிரில் போட்டு இடைவெளி வழியாகத்தான் எல்லாம் சப்ளை. கியூவில் நிற்க வேண்டும்.

காளி கோவில் (பூசாரி) பண்டாக்கள் கையில் 500,100,50 கை விரல்களில் சொருகிக்கொண்டு,(இது பிச்சைகாரர்கள் டெக்னிக்.மினிமம் இவ்வளவுதான் ஏற்றுக்கொள்வோம் என்று காட்டுவது)கையை மேல் நோக்கி நீட்டியபடி கியூவில் வரும் பகதர்களுக்கு பூஜை மற்றும் தொட்டு ஆசிர்வாதம் செய்து பணம் வாங்கிக்கொள்கிறார்கள்.காளி நாக்கை வெளியே நீளமாக துருத்தியபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

காளியிடம் வேண்டியபடி நானும் நகர எனக்கும் நெற்றியில் குங்கும் இட்டு ஆசிர்வதித்து பணத்திற்காக உள்ளங்கையை பண்டா சொரண்டினார்.”காளிட்ட வாங்கிக்கோ என்றேன்” அதற்கு அவர் “கீ போல்சா” என்றார்.

அங்கு சங்கு ஊதும் ஒலி கேட்டால் காளி. நம்மூரில் காலி.

டோவர் லேன் மார்க்கெட் அருகே லெதர் பேக் (travel bag) விலை 650/- என்றார். நான் 325/- கேட்டேன்.கடைசியில் 350க்கு கொடுத்தார்.”ஆப் தமில் ஹை” பேக்  செய்துக்கொண்டே கேட்டார்.பதிலுக்கு நான் "ஹான்”.
_________________________________________

சோகம்:

என் மைத்துனி (மனைவியின் தங்கை) கழுத்திற்கு கிழ் எந்த இயக்கமும் (அவ்வப்போது சுமாரான இயக்கம்) இல்லாமல் படுத்தப் படுக்கை.எல்லாம் படுக்கையில்தான்.சுவாசம் வெண்டிலேட்டர் மெஷின் வழியாகத்தான்.

கழுத்திற்கு மேல் எல்லாம் நார்மல்.பேசுகிறாள்.சாப்பிடுகிறாள். டிவி பார்க்கிறாள்.சிரிக்கிறாள்.எல்லோருடனும் கலந்து பேசுகிறாள்.எல்லாம் ஓகே.

ப்ளஸ் ஒன் படிக்கும் ஒரு பையன் மற்றும் கணவர் மொத்தம் மூன்று பேர்தான்.

1991ல் நடுமண்டையில் ஏற்பட்ட விபத்து(வாசல் நிலைப் படி இடித்து) சிகிச்சை எடுத்து 2005 வரை நன்றாக இருந்து மீண்டும் தடுக்கி விழுந்து கொல்கொத்தா மருத்துவமனை சிகிச்சையில் ஏதோ கோளாறாகி படுத்தப்படுக்கையாகிவிட்டாள்.

கொல்கத்தா துர்காவும் காளியும்தான் நம்பிக்கை.எங்கள் பிரார்த்தனை வீண் போகாது.