Tuesday, December 17, 2013

ஜெயமோகனும் ஒரு தலை ராகமும் இசையும்

எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் “ஏ.ஏ.ராஜ்-காலம் கடந்து ஒரு அஞ்சலி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது.ஏ.ஏ.ராஜ் என்ற தெலுங்குப்பட இசையமைப்பாளர் டி.ராஜேந்திருடன் இணைந்து இசையமைத்த திரைப்படம் “ஒரு தலை ராகம்”(1980).படமும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.அப்போதைய இளைஞர்கள் விழுந்துவிழுந்து பார்த்தார்கள். பாடல்களை அப்படியே கேட்டார்கள்.

நானும் விரும்பிக்கேட்டேன்.அப்போது படத்தை கடனே என்றுதான் பார்த்தேன்.பல சென்னை இளைஞர்கள் படத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை.தஞ்சாவூர் தலையில் வைத்துக்கொண்டாடியதாக தகவல்.

இன்றைக்கும் மூன்று பாடல்களை உறுத்தல் இல்லாமல் கேட்கலாம்.

(ஜெயமோகனுக்கு விளக்கம் பின்னால் வருகிறது)

ஏ.ஏ.ராஜ்

அதில் சந்திரசேகர் பாத்திரம்(டாஸ்மாக்) இளைஞர்களால் விரும்பப்பட்டது.

எப்போதும் புடவை தலைப்பைப் போர்த்திக்கொண்டு ஹோம்லியாக  பெண்களை ரோடில் பார்த்துவிட்டால்  உடனே ரூம் போட்டு ஒரு தலைக்காதலிப்பார்கள் அப்போதைய இளைஞர்கள்.ரொம்ப சோஷியல் பெண்களை விரும்பமாட்டார்கள்.ரூபா அப்படியான தலைப்பைப்போர்த்திய பாத்திரம்.தமிழில் அபூர்வமாக சைடு வகிடு எடுத்துவாரிய தலைமுடி கதாநாயகி.எல்லாம்  மொத்தமாக இளைஞர்களைப் படுத்தி எடுத்தது.

ரயில்வே ஸ்டேஷன் பின்னணி படத்தை வித்தியாசமாக காட்டியது..


படம்? படு அமெச்சூர்தனமும் அசட்டு+அச்சுபிச்சுத்தனமாக எடுக்கப்பட்ட திரைப்படம்.

ஒரிஜனல் போஸ்டர்
இனி விஷயத்திற்கு வருவோம்.ஜெயமோகன் எழுதுகிறார்..

//ஒருதலை ராகத்தின் இசையில் பெரும்பங்களிப்பாற்றிய ஏ.ஏ.ராஜ்//


//ஒருதலைராகத்தின் இசையில் ஒரே சமயம் ஒரு செவ்வியல்தன்மையும் ஜனரஞ்சகத்தன்மையும் இருந்தது.ராஜேந்தர் அந்த ஜனரஞ்சகத்தன்மையை மட்டும் அவருடையதாக அளித்திருக்கலாம்.பின்னர் அவர் தனியே இசையமைத்தபோது அதை மட்டும்தான் அவரால் கொண்டுசெல்லமுடிந்தது.ஒருதலை ராகத்தின் இசையின் நுட்பமான அம்சங்களை எவ்வகையிலும் அவரால் கையாள முடியவில்லை//

இசையின் ஜனரஞ்சகத்தை டிஆருக்கும் செவ்வியல்தன்மை மற்றும் நுட்பமான அம்சங்களை ராஜூக்கும் அர்பணிக்கிறார். செவ்வியல்தன்மை என்பதை கிளாசிக் என்று சொல்லலாம். இதற்கென்றே நிறுவப்பட்ட தரத்தில் இசை உள்ளது.அதாவது ஹை ஸ்டாண்டார்ட் அண்ட் குவாலிடி மற்றும் சாகாவரம் பெற்றவை.ஆத்மாவும் உண்டு.

படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் எல்லாமே ஜனரஞ்சகம்தான்.நுட்பமான அம்சங்கள் செவ்வியல்தன்மைகளை தேடிதேடிப்பார்த்து களைத்துவிட்டேன்.
இந்த ஜனரஞ்சகத்தினால்தான் மனதில் ஒன்றுகிறது.புதுமை என்று சொன்னால் மெல்லிசையை ரொம்ப மெலிதாக கொடுத்ததாக சொல்லாம்.


புதுவசந்தம் படப்பாடல்களும் இதே எளிமைக்காக வெற்றிப்பெற்றது.


பாடல்களின் வெற்றிக்கு காரணங்கள்:-

1.எளிமையான பாடல் வரிகள்.”வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை உனக்கேன் ஆசை”  ”முந்தானைப்பார்த்து முன்னூறு கவிதை” “நான் ஒரு ராசியில்லா ராஜா”போன்ற வரிகள் அப்போதைய ஒரு தலைகாதல்,சுய இரக்க  தாடிஇளைஞர்களை சுழற்றி அடித்தது.

(உணர்ச்சி உந்துதலில் ஒரு பெண்ணை பல மாதங்கள் தொடர்ந்துவிட்டு அல்லது பஸ் ஸ்டாப்பில் உற்று நோக்கிவிட்டு  அவளிடமிருந்து பதிலுக்கு ஒன்றும் வராமல் போக ”இவளுக்கு இதயமே இல்லை” காதல் தோல்வி என்று தாடி வளர்க்கும் மனோபாவம் அப்போது)


எல்லா பாடல்களையும் எழுதியவர் டி.ராஜேந்தர்.அதுவும் காதல் தோல்வி-விரக்தி. விடுவாரா?பின்னிப் பெடல் எடுத்துவிட்டார்.
படத்துல ரெண்டு வரி இந்தி பாடல்தான் எனக்கு... அதான் தாடி

2.இசை ரொம்பவும் மெலிதான மெல்லிசை.சிக்கலே கிடையாது.school boyish tune என்று சொல்வார்கள். எளிமையான மெட்டை முதலாக வைத்து எளிமையான வரிகள். குறைந்தபட்ச இசைக்கருவிகளை வைத்து கோர்க்கப்பட்டுள்ளது.”வாசமில்லா மலரிது” மற்றும் இரண்டு பாடல்களும் அப்பட்டமான உதாரணம்.

அதனால் இசையில் வித்தியாசமோ,நுட்பமோ,வேறு பரிமாணங்களோ பண்டிதத்தனமோ,அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தலோ இல்லை.எப்படி அனுமானித்தார் என்பதை ஜெயமோகன் சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்.

படத்தில் பலருக்கு தெரியாத சில ஆச்சரியங்கள்:-

1.இரண்டு பாடல்களைத் தவிர எல்லாமே நெகடிவ் உணர்ச்சிகளைக்கொண்டது.
2.படத்தில் டூயட்டே கிடையாது.
3.உலக மகா ஆச்சரியம் படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு ஒரு பாடல் கூட கிடையாது.
4.இளையராஜா பாதிப்பு இல்லை.கூடையிலே கருவாடு  தவிர.பதிலாக எம்எஸ்வி பாதிப்பு.

டைட்டிலில் பின்னணி இசை என்று ஏ.ஏ.ராஜ் பெயர் வருகிறது.பின்னணி இசை? படு மோசம்.

வேறு ஒரு டிவிடி கவரில் இப்படி வருகிறது


வேறு ஒரு இடத்தில்  ஜெயமோகன் சொல்கிறார்...

//பத்தாண்டுகளுக்குப்பின் நான் தற்செயலாக கொழும்பு வானொலியில் தணியாத தாகம் படத்தின் பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் என்ற பாட்டை கேட்டேன். ஓர் இரவு நேரம். அந்தப்பாடல் என்னை பித்துப்பிடிக்கச் செய்தது. ஒருதலைராகத்தில் இருந்து அதன் பின் காணாமல் போன அந்த செவ்வியல் நுட்பம் அந்தப்பாடலில் இருந்தது. கேட்கக்கேட்க நெஞ்சில் தித்திக்கும் இசையமைப்பு.துல்லியமான இசைக்கோர்ப்பு.//

அந்தப் பாடல்:(என் கலெக்‌ஷனில் உள்ளது)

மனதை வருடும் வரிகள்,இசைக்கோர்ப்பு,மெட்டு, இனிமை.ஆனால்  இளையராஜாவின் பாதிப்பில் உருவான பாட்டு.சில இடங்களில் தாளக்கட்ட “அந்தப்புரத்தில் ஒரு மகாராணி”(1977) சாயல்.


Check this out on Chirbit 


அடுத்தப்பாட்டு “அவளொரு மோகனராகம்”.

இதுவும் இனிமையான  இசைக்கோர்ப்பு.இதுவும் இளையராஜாவின் பாதிப்பின் உருவாக்கம். எஸ்பிபியின் வெல்வெட் குரல் இனிமை.



Check this out on Chirbit 


1970/80களில் தடுக்கி விழுந்தால் இதுமாதிரி எஸ்பிபியின்  சோலோ பாடல்கள் நிறைய உண்டு.உதாரணமாக எம் எஸ்வி இசையில்” உன்விழி ஆனந்தபைரவி” படம்: ”பெண் ஒன்று கண்டேன்” (1974)



Check this out on Chirbit 


ஏ.ஏ.ராஜின் மற்ற மூன்று தெலுங்குப்படங்களின் பாடல்களையும் கேட்டேன்.1.Devudichina Bartha-1968  2.Panchakalyani Dongalarani-1969 3.Vikramarka Vijayam-1971.புதுமைகள் ஒன்றும் இல்லை.அந்தக்காலகட்டத்திற்கு தோதுவாக இருக்கிறது.

Devudichina Bartha-1968 ல் ஒரு பாட்டு ”Aa Devudichina Pathivee".கிழே பதியப்பட்ட பாட்டு.ஆனால் இது  எம் எஸ் வியின் “பூமாலையில் ஓர் மல்லிகை” (படம்: ஊட்டி வரை உறவு-1967) பாட்டை அப்படியே ஒத்திருக்கிறது. வித்தியாசம் ஜானகி ரொம்ப கிளாசிகளாக பாடுகிறார்.ராஜாகாலத்து கதை என்பதாலோ?



Check this out on Chirbit


நானும் ”உதயமாகிறது” பாடல்களை கேட்ட ஞாபகம்(சிலோன்?).அப்படி ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை.


ஜெயமோகனின் இசை ரசிப்பு புல்லரிக்கிறது.
 

Thursday, December 12, 2013

ரஜினி-என் வானிலே ஒரே வெண்ணிலா

டைரக்டர் மகேந்திரன் தமிழ்த்திரையுலகில் (1978-90)ஒரு முக்கியமான ஆளுமை.சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியவர்களுள் ஒருவர்.

முக்கியமாக சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை காட்சிகளினூடே பார்வையாளனை பயணிக்க வைத்துக் கதைச் சொல்பவர்.காட்சிகளே கதாபாத்திரமாக,ஓவியமாக  திரையில் தீட்டப்பட்டு உணர்ச்சிகள் பார்வையாளனைத் தீண்டும்.அவன் கதாபாத்திரங்களுடன் உலாவுவான்.

மிக முக்கியமாக காட்சிகளில் விரவிக்கிடக்கும் மெளனம் அர்த்தபுஷ்டியானது.
வெள்ளை உடையில் மகேந்திரன்
இப்படிப்பட்ட படைப்பைப் படைப்பவன்தான் உண்மையான படைப்பாளி. சிருஷ்டி கர்த்தா.டைரக்டர் மகேந்திரன் ஒரு சிருஷ்டி கர்த்தா.பார்த்துப் பார்த்துச் செதுக்கும் ஓவியர்.இப்படி இவருடன் இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் கைக்கோர்த்து ஒரு கவிதையை  ஓவியமாக தீட்டி இருக்கிறார்கள் அல்லது ஒரு ஓவியத்தைக் கவிதையாக எழுதி இருக்கிறார்கள்.

அந்தக் கவிதை  ஜானி திரைப்படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்ற பாடல் காட்சி.இவருடன் இணைந்த மற்ற இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் இசைஞானி இளையராஜா ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.

இந்தப் பாடலின் காட்சி உள்ளும் புறமுமாக விரிக்கப்படுவதில் அசோக்குமாரும் ராஜாவும் தங்கள் கற்பனைத் திறனை அள்ளித்
தெளித்திருக்கிறார்கள்.பாடலை எழுதிய கங்கை அமரனும் பாராட்டுக்குரியவர்.நேரடியாக எதையும் சுட்டாமல் கவித்துமாக உள்ளது.

காட்சி நேர்த்தியாக romanticise செய்யப்பட்டு இருக்கிறது.




இந்தக் கவிதைக்கு  யதார்த்தமான  பின்னணி உண்டு.

குற்றப் பின்னணி உள்ள கதாநாயகன் ஜானி ஒரு இசை ரசிகன்.பிரபல பாடகி அர்ச்சனாவின் ரசிகன்.அன்று கேட்ட”ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்” பாடல் இவனுக்காகவே பாடப்பட்டதுபோல் உணர்கிறான்.மனம் குதூகலிக்கிறது.இசை நிகழ்ச்சி முடிவில் அவளைப் பாராட்டி பூங்கொத்து கொடுக்க முடியாமல் கூட்டம் இவனை தடுத்து விடுகிறது.

மறு நாள் அவள் வீட்டிற்கு தொட்டி தொட்டியாக வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டமே அனுப்பி வைக்கிறான்.மற்றொரு நாள் இருவருக்கும்  இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.கடற்கரையில் அர்ச்சனா உலா போகையில் தான் பாடிய  “ஒரு இனிய மனது” பாடல் காற்றில் அலைந்து வருகிறது.அதை நோக்கி போகையில்  ஒரு படகில் ஜானி மெய் மறந்துப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறான்.பரஸ்பர அறிமுகத்தில் இவன்தான் பூக்கள் அனுப்பியவன் என்று தெரிகிறது.தானும் அர்ச்சனாவைப் போல தனி இருவருக்கும் தங்களைத் தவிர யாரும்இல்லை என்பதில் இருவருக்குள்ளும் மெலிதான பிணைப்பு ஏற்பட்டு ஒரத்தில் ஒரு மொட்டு அவிழ்கிறது.

”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை... எனக்கு மட்டும் எனக்காக மட்டும்.. தனியாக நீங்க பாடனும்.தனியா கேட்கனும்.எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப் படனும்” ஜானி ஆர்வத்துடன் கேட்கிறான்.

”நிறைவேறுவது கஷ்டம்தான்...மாட்டேன்னா என்ன செய்வீங்க....” செல்லமாக சீண்டிவிட்டு ...”நாளைக்கு வீட்டுக்கு வாங்க" புன்னகையுடன் சம்மதிக்கிறாள்.ஜானியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

(ஒரு பாமர ரசிகனின் வெகுளித்தனமான ஆசையை நிறைவேற்றுவதில் அர்ச்சானவுக்கு ஒரு fatal attraction இருக்கிறது)


மறுநாள்: ஜானி சட்டைக்குள்ளே “MUSIC THE LIFE GIVER" என்ற வாசகம் எழுதிய மஞ்சள் பனியன் (பாமரத்தனமாக??) அணிந்து அவளை சந்திக்கச் செல்கிறான்.

வீட்டில் நுழைந்ததும் ஒருஅழகான  பியானவும் அதைச் சற்றி அவன் கொடுத்த வண்ணப் பூக்களும்  பார்வையில்பட்டு ”பியூட்டி புல்... பியூட்டி புல்...” நெகிழ்ந்துப்போய்விடுகிறான்.

பியானோ வாசிக்க முயற்சிக்கச் சொல்லி அவனும் மொன்னையாக  மெட்டுவாசிக்க முயற்சிக்க ” no.. no... just listen..!" என்று பியானவில் அவள் விரல்கள் மீட்ட நாதங்கள்  மீன்களாய் துள்ளி  கவிதையாக எழ ஆரம்பிக்கிறது.

பாடல் முழுவதும் அவன்  உடல்மொழி இயல்பாக இருக்கிறது.

காட்சி......



கேமரா ஊர்ந்து தூரிகையால் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்க  உயிர் துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது காட்சி.இசை மென்மையான வெஸ்டர்ன் கிளாசிகலில் காட்சியை நகர்த்துகிறது.அர்ச்சனாவின் வானில்  வெண்ணிலாவும் காதல் மேகங்களும் கவிதை தாரகைகளும் ஊர்வலம் போக ஆரம்பிக்கிறார்கள்.

அர்ச்சனாவின் உடை ஒரு தனி மொழியே பேசுகிறது.காட்சியின் பின்னணி ஒரு பாத்திரமாக பரவசப்படுத்துகிறது.காட்சிகள் உள்ளேயும் வெளியேயுமாக வழுக்கிக்கொண்டு பயணித்தப்படி போகிறது.ஜானி ” எல்லாம் எனக்குத்தான் எனக்குத்தான் ... எனக்குத்தான்...”கற்பனைச் சிறகடித்துப் பறக்கிறான்.

அர்ச்சனாவின் குரலில்(ஜென்சி) இருக்கும் மழலைத்தனத்தில் காதல் இருக்கிறது.காட்சியை ஆழப்படுத்துகிறது.


முதல் இடை இசையில் ரஜினி மனம் குதூகலித்தப்படி மேகத்தில் பறக்கிறது. உச்சக்கட்டமாக 1.22 ல் சொர்க்கத்திலிருந்து ஆசிர்வதிக்கப்படுகிறான்.Absolutely bliss..!


முதல் சரணத்தில் ”நீரோடை போலவே’ 1.30 -1.56 ஆரம்பித்து முடியும் வரை ரஜினி,ஸ்ரீதேவி,பிரேமி மூவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக 1.46-1.47ல் கேமரா திரும்ப, படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தபடி பிரேமி ஸ்ரீதேவியைப் பார்க்கும் (பெருமிதம்?) பார்வை யதார்த்தம்.

அடுத்து 1.56ல் ”நீராட வந்ததே என் மென்மை” என்று ஸ்ரீதேவி தன் குண்டு விழிகளில் எதையோ தேக்கி (காதல்?காமம்?)புன்சிரிப்போடு காட்டிவிட்டு தலைகுனிவது அருமை.

3.26ல் வாசித்துக்கொண்டே பிரேமியை எட்டிப்பார்க்கும் இடம் ரொம்ப சுட்டி.



இளையராஜாவின் வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்/பியானோ இழைகள் காட்சி  முழுவதும் சில்லென்று வீசிக்கொண்டே இருக்கிறது.

பாட்டை அதன் பரிமாணத்தில் உள்வாங்கி மகேந்திரனும் அசோக்குமாரும்  கவிதையாக செதுக்கி இருக்கிறார்கள்.

காவியக் காதல்களில்இரவு, நிலவு,பூஞ்சோலை, அருவி,அன்னம், புறா,மயில்,உப்பரிகை என்று காதலர்கள் உலா வருவார்கள்.

தமிழ் திரையுலகில் இப்படி உணர்வுபூர்வமாக மென்மையாக மிகைப்படுத்தாமல் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை பின்னணியுடன் பின்னி பினைந்து இசை வழியாக சொல்லி காட்சியை ஆழப்படுத்தியது அபூர்வமான ஒன்று.



Thursday, December 5, 2013

நீயா நானா நீலம் ரகசிய ராத்திரி குரல் டைரி பலன்கள் இளையராஜா

வருடா வருடம்  உலகம் உருண்டு புதுபுது வருடம் வந்து முன்னேறினாலும் டைரிகளில்  இன்னும் சில அவசியமற்ற தகவல்களை சம்பிரதாயமாக பிரசுரிக்கிறார்கள்.அதுவும்  லோகல் இன்ஜினியரிங் கம்பெனிகளில்.

அவை: இண்டர்நேஷனல் பேப்பர் சைஸ்,பல நாட்டின் நேரங்கள், உஷ்ண நிலை,டயர் பிரஷர், பலநாட்டின் கரன்சி பெயர்கள்,விமான தூரங்கள்,மெட்ரிக் அளவு கன்வெர்ஷன்கள்,உணவுகளில் கலோரி கணக்கு,அமெரிக்க,பிரிட்டிஷ்,ஆஸ்திரேலிய கோட்/சர்ட்/பேண்ட்/ஷூ சைசுகள்.


தேவையா?

நல்லவேளை போஸ்டல் பின்கோடு,இன்காம்டாக்ஸ் ரேட்ஸ்,வாழ்த்து தந்தி விவரங்கள்,இன்லெண்ட் கவர்,கார்டு, ரிஜிஸ்டர்டு தபால் விவரங்கள்,ரோமன் நம்பர்கள் வேறு வழி இல்லாமல் தவிர்த்திருக்கிறார்கள்.




ஒரு சிறுகதை:  Guest Role


தன் பெயரை டைப் செய்தாலே நெட் முழுவதும் தன்னைப்பற்றிய செய்திகள் போட்டோக்கள் சினிமா ஸ்டில்கள் போட்டோக்கள் மீண்டும் சினிமா ஸ்டில்கள் குடும்ப போட்டோக்கள்.அதிலும் இவள்தான்.ரொம்ப அலுப்பாகவும் கூடவே திகட்டவும் செய்தது.

வித்தியாசமாக ஒன்றும் இல்லை முகத்தைச் சுருக்கினாள் இன்றைய சினிமா ரசிகர்களின் 22 வயது கனவுகன்னி.

நொந்துக் கொண்டே லேப்டாப்பை மடியிலிருந்து சரிக்கையில் குறுகுறுப்பாக ஒரு எண்ணம் மின்னல் போல் தோன்ற தன் பெயரையும் அதனுடன் சில ஆபாச சொற்களை சேர்த்து டைப் செய்தாள்.

கூகுள் அட்ரஸ்களை கொட்டியது.முதலில் அதிர்ந்து பிறகு ஆர்வத்துடன் கிளிக்கினாள்.கண்கள் விரிந்தது.வெட்கம் பிடுங்கித்தின்றது. சீ.... போ...புன்னகை கலந்த லஜ்ஜையுடன் முறைத்தாள்’.பச்சையான ஆபாச உடல் உறவு காட்சிப்படங்கள்.

எல்லாவற்றிலும் இவள்தான் கதாநாயகி.

மிகவும் கட்டுமஸ்தான எட்டு கருப்பு இளைஞர்களும் ஒரு வெள்ளை ஆணும்.அவன் பின் ஒரு கருப்பு டீன் வயது பெண். எல்லோரும் பச்சை நிர்வாணம்.இவர்களின் நடுவில் இவளும் நிர்வாணமாக படுத்திருந்தாள்.வேறு ஒரு மேல் நாட்டின் பெண்ணின் முகத்தில் தன் முகம் நேர்த்தியாக மார்ப் செய்யப்பட்டிருந்தது.

வெரி நைஸ்... குறுகுறுப்பு கலந்த லஜ்ஜையுடன் தொடர்ந்து பக்கங்களை பிரவுஸ் செய்ய ஆரம்பித்தாள்.

                                       முற்றும்

ராத்திரி நேரத்து ரகசிய குரல்:

கடந்த பத்து ஆண்டுகளாக  பல தமிழ்த் திரைப்பாடல்கள் டூயட்டோ சோலோவோ “பாப்” அல்லது ”கிளப்டான்ஸ்” பாடல்கள் போல் போதை கலந்த அல்லது ராத்திரி நேரத்து ரகசிய குரலில் பாடப்படுகிறது.ஆங்கிலத்தில் husky voice என்று சொல்லலாம்.இதை ஆரம்பித்து வைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்? தொடர்பவர்கள் விஜய் ஆண்டனி,ஜிவி பிரகாஷ் மற்றும் பலர்.

தமிழ்ப்பட விதிகள்படி விரகதாபப் பாடலுக்குத்தான் இப்படிப் பாடுவார்கள்.வி.தாபம் இல்லாமலேயே நிறைய பாடல்கள் வருகிறது.

உதாரணம் 1. காக்க காக்க “ தூது வருமா”  2. உன்னாலே உன்னாலே “ஜூன் போனால் ஜுலை” 3. காதலி விழுந்தேன் “உன் தலை முடி உதிர்வதை இப்போது லேட்டஸ்ட்டாக 4. என்றென்றும் புன்னகை ”கடல் நான் தான்”

தூது வருமா

ஜூன் போனால்

உன் தலைமுடி

கடல் நான்தான்

இளையராஜாவின் நீஎபொ  “சாய்ந்து” “ சற்று முன்பு” “முதல் முறை” பாடல்களை ராத்திரி நேரத்து ரகசிய குரலுக்கு மாற்றிவிட்டார்.”அந்தப்புரத்தில் ஒரு மகாராணி அவன் அன்புக்கரங்களில்” என்கிற ரேன்ஞக்கெல்லாம் பாடமுடியாது.

ஏன்?


கதாநாயகன் - நாயகிகள் மாறிவிட்டார்கள்.உடைகள் மாறிவிட்டது.புடவை ஜாக்கெட் இல்லை.தலைவாரி பின்னல் இல்லை பொட்டு இல்லை. நாயகன் கடுக்கன்போட்டு தலைமுடியில் சாயம் அடித்து எண்ணெய் அப்பி குச்சிகுச்சியாய் நிற்கவைத்தபடி தோன்றுகிறான்.திருமணத்தில் தாலிகட்டும் நேரத்தில் மட்டும் புடவை-வேஷ்டி.மொததத்தில் சினிமா மாறிவிட்டது.அதனால் டிரெண்ட் மாறிவிட்டது.

 கிழே சேட் ரேவதிதான் இப்போதைய கதாநாயகி பேஷன் டிரெண்ட்

ஆனால் அவ்வப்போது ரகசிய குரல் இல்லாமுலும் பாடுகிறார்கள்.

இளையராஜாவும் ஆத்மாவும்

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு....பூத்திருச்சு  வெட்கத்தவிட்டு...

ஹாப்பி

”பொத்தி வச்ச மல்லிகை மொட்டு....வாடுதடி வாசனை கெட்டு..
ரொம்ப சேட்(தேங்க்ஸ் த்ரிஷா)
இது சோகத்தில் பாடும் பாட்டு (மண்வாசனை).மகிழ்ச்சியான தருணத்தை அப்படியே உல்டாவாக சோகமாக்க வேண்டும்.

ஆக்கிவிட்டார். ஆனால் இதில் என்ன ஸ்பெஷல்? 

உதாரணமா பாண்டியன் ரேவதியை கயிற்றில் இழுப்பது (0.18-0.33) எப்படி சோகமாக இசைக்கப்படுகிறது.0.18-0.28 வரை பெரிய  விஷயம் இல்லை.


 0.29-0.33ல்  ஒரு வித்தியாசமான உணர்ச்சி உந்தப்படுகிறது. இது தமிழ்சினிமாவிற்கு புதுசு.




தலைமுறை இடை.............................வெளி் (generation......gap):

01-12-13  விஜய் டிவி நீயா நானாவில் “ எழுபதுகளின் (1970)  திரைஇசையை இப்போதைய இளையதலைமுறையுடன் பகிர்தல்”.ஒரு பக்கம்  அந்தக்கால இசைப்பிரியர்கள்.பிரியைகளே கிடையாது. மறுபக்கம் நவீன இசைப்பிரி(யை)யர்கள்..

 நாங்க டி எம் எஸ் மட்டும்தான்

கோட் கோபிநாத்தும் இவர்களுடன்(70) இடைவெளி இருந்தது.இசை  ஜாம்பவான் ஜி.ராமநாதன்பற்றிக் குறிப்பிடவே இல்லை.

இரண்டாம் உலகம் படம் ரெண்டாவது தடவை போயிருக்கலாமோ?

மூத்த குடிமகன்கள் இவர்களுக்காகவே போட்டுவைத்த நீண்டகால வைப்பு நிதி மாதிரியான  டி எம் எஸ் பாடல்களைப் பாடினார்கள்.பெண்குரல் பாடல்கள் 99% இல்லை.இவர்களே நிறைய நேரம் பாடிக்கொண்டிருந்தார்கள்.

கேட்ட நவீன இசைப்பிரியர்களிடம் விளக்கெண்ணெய் குடித்தாற்போல் முகபாவம்.மயான அமைதி.இன்னும் கேப் ஜாஸ்தியாயிற்று.திடீரென்று ஒரு  பெண் “ நான் பார்த்ததிலே உன்” பாடலைப் பாடி போர்ரைக் குறைத்தார்.ஆறுதலாக இருந்தது.இன்னொரு பெண்ணும் “ இலந்தபயம்” பாடலைப் பாடி அசத்தினார்.

அந்தக்கால சுதர்சன்,கோவர்தன்,சலபதிராவ்,குமார்,விஜயபாஸ்கர்,
சங்கர்-கணேஷ்,எஸ்.தக்‌ஷிணாமூர்த்தி  பாடல்களைப் பற்றி அந்தக்கால இசைப்பிரியர்கள் ஏன் பாடவில்லை. 

இவர்களுக்கும் இந்தக்கால இசையைப்பற்றி தெரியவில்லை. தெரிந்துக்கொள்ளவும் ஆர்வம் இல்லை.எப்போதுமே எந்தக்காலத்திலுமே தலைமுறை இடைவெளி இருந்துக்கொண்டேதான் இருக்கும்.இல்லாவிட்டால் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது.

இப்போதைய தலைமுறை இவர்கள் மாதிரி இருந்தால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

ஹைலைட்: 
கோவை முரளி
மூச்சு விடாமல் பாடுவதை(அம்பிகாவதி-1957) படத்தில் வரும் “வடிவேலும் மயிலும் துணை”) பற்றி டி எம் எஸ் சொன்னதாக இவர் சொன்னது: 

“மூச்சு பிடிச்செல்லாம் பாடல.தமிழ்ல நமக்கு சில வசதிகள் இருக்கு. ச், ப் த், ன், ட், க்  இதிலெல்லாம் ரெஸ்ட் எடுத்திட்டு அப்படியே ஜெர்க் பண்ணி போயிடலாம்”

மூச்சு விடாம நான் பாடலீங்க..பின்னாடி(playback)தான் டி எம் எஸ் பாடி அசத்திட்டாரு

 அந்தப்பாடல்:







Thursday, October 31, 2013

பொறியியல் படிப்பு,கேங் ரேப்,மாணிக்கம்,மாராப்பு

பொறியியல் கல்லூரிகள் மொபைல் ரீசார்ஜ் பொட்டிக்கடைகள் போல திறந்து வைத்துக்கொண்டு பொறியியல் பட்டத்தை சுண்டல் கொடுப்பது போல கொடுக்கிறது.இதனால் நல்ல(???) நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளும் பாதிக்கப்படுகிறது.கட்டுக்கட்டாக பணமும் மெரிட்டும் கலந்து கல்வி வியாபாரம் ஆகி பலவருடம் ஆகிவிட்டது.

மேலே பழைய கதை.புது கதையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.


விளைவு சப்ளை (இன்ஜினியர்கள்)அதிகமாகி தரம் குறைந்து டிமாண்ட்(வேலை)குறைந்துவிட்டது.பி.இ. வெறும் ”பீ” அல்லது அந்தக்கால பி.ஏ.ஆகிவிட்டது.

இப்போது பி.இ.படித்தவர்கள் ரயில்வே-வங்கி-பிபிஓ கிளார்க் வேலைக்கெல்லாம் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.காரணம் வேலைக்கிடைப்பதில்லை.அடி வயிறைக் கலக்கும் படிப்புக் கடனை வேறு அடைக்கவேண்டும்.கிராமம் சார்ந்த பி இ க்கள் ரொம்ப மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.தரம் பாதிக்கப்பட்டதால் பிளேஸ்மெண்ட் கம்பெனிகள் பலவித டெஸ்ட் வைத்துதான் வடிகட்டி எடுக்கிறார்கள்.ஆங்கிலமீடியமே தடுமாறுகிறது.இதில் தமிழ்மீடியம் வேறு.கொடுமைடா சாமி...!

கடுமையான போட்டியில் மீண்டு எப்படி ஜெயிப்பது?இதுதான் இப்போதைய  நிதர்சனம் அல்லது  யதார்த்தம் அல்லது ground reality. கருப்பு எழுத்தில் இருப்பவைகள செய்தே ஆக வேண்டும்.இது வழக்கமான பரம்பரை பரம்பரையான பெரிசு புலம்பல் இல்லை.பின்னால் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.

1.படிக்கும்போதே சைட்பை சைட் தன் பிரிவுக்குண்டான (EEE,MECH,CSE,E&I,ECE etc.,etc.,) (job skill) விவரங்களைத் தெரிந்துகொள்வது

2.கடைசி வருடத்தில் தான் படிக்கும் பிரிவின் வேலையை தினமும் செய்வது மாதிரி அணுகி கற்றுக்கொள்வது.


3.CommnicationSkill(verbal/writing),Aptitudeசத்தியமாக
வளர்த்துக்கொள்ளவேண்டும் பிளேஸ்மெண்ட்டில் தடுமாற்றம் இருக்காது.செல்,பேஸ்புக்,டிவிட்டர்,பிளாக்கில் எழுதும் கொத்துபரோட்டா எழுத்துவகைகள் எங்கும் உதவாது.பள்ளி, கல்லூரியின் சுகமான நினைவுகளாக மனதில் இருத்திக்கொண்டு மறந்துவிட வேண்டும்.

இந்தத் திறமையை எல்லாம் சொல்லிக்கொடுக்க கம்பெனிக்கு ஆளும் இல்லை நேரமும் இல்லை.

4.நாலாவது வருடம் எந்தவித அரியர்ஸ் இல்லாமல் முதல் இருபது இடத்தில் இருப்பது.

5.ஒவ்வொரு வருடமும் படிக்கும் பிரிவின் வேலை டிரெண்ட் எப்படி போகிறது என்று கவனிக்க வேண்டும்.

5.வேலைக்கு சேர்ந்த பிறகோ அல்லது முன்னமோ சூழ்நிலைக்கு ஏற்றார் போல் முதுகலை அல்லது எம்பிஏ படிப்பது.இதுஅடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவிப்போக முடியும்.
_________________________________________________



சரி ஜே ஜே  மாணிக்கத்திற்கு வருவோம்.யார் இவர்?திரைப்பட ஒலிப்பதிவாளர்.சவுண்ட் இன்ஜினியர்.

இவர் பெயரை  முக்கால்வாசி சினிமா டைட்டில்களில் கிட்டத்தட்ட 50 வருடமாக பார்த்து வந்திருக்கிறேன். 1990-95க்கு பிறகு அவ்வளவாக காணப்படுவதில்லை. இவர் தனி ஒரு ஆளாக கொடிக்கட்டி பறந்திருக்கிறார்.அப்போது இந்தத் துறையில் ஆட்கள் குறைவா?

இவர் பி.இ. சவுண்ட் இன் ஜினியரிங்?



_________________________________________________


மெய்நிகர் ஆடை வெள்ளோட்ட அறை(virtual trial dressing room)



சென்னையில் சில ரெடிமேட் கடைகள் வாங்கும் துணி அளவு சரியாக இருக்கிறதா என்று அணிந்துப் பார்க்க  அனுமதிக்கிறார்கள்.அதுவும் ஒரு கடையில் கொத்துகொத்தாக trial room எடுத்துக்கொண்டுபோய் சரிபார்க்கலாம்.வெளியே வரும் போது வதங்கி கசங்கி சுருங்கி gang raped லெவலுக்கு வரும்.பிடிக்கவிட்டால் மடித்துவைக்கப்படுகிறது.

அடுத்த  கஸ்டமர் அதை  வதங்கி கசங்கி சுருங்கி gang rape..........வெள்ளாவியில் வேகவைத்து  ரின் - சர்ப்- நிர்மா-பொன்வண்டு சோப்பில் தோய்த்து பிறகு அணிந்துகொள்வது  நலம்.ஆனால் நான் எதுவும் செய்யாமல்தான் அணிந்துக்கொள்கிறேன்.

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?

 _________________________________________________

மவனே .... அடி  பின்றண்டா இன்னிக்கு....!

ரொம்ப நாளைக்கு  பிறகு  நான் பார்க்கும் உள்ளே ஒரு  killer instinct (வெறி) டோடு விளையாடும் வீரர் விராட் கோலி.பீமன் போல் கடாயுதத்தை (மட்டையை) சுற்றியபடி பந்தை துவம்சம் செய்து  ரன் அடித்துக்குவிக்க எப்போதும் முனையும் போக்கு. இப்படி இல்லாமல் சாதாரண மூடுக்கும் வருவார். மேற்கந்திய தீவுகள் அணியில் இப்படி ஒரு காலத்தில் பெளலிங் செய்வார்கள்.

dashing batsman.
 _________________________________________________

முந்தானை... மாராப்பு...பல்லு...!

இனிமேதான் கட்டிக்கபோறாங்க

புடவை அழகு பாஷன் போட்டிகளில் புடவை அணிந்து நடந்து நடந்து நடந்து போவார்கள்.ஆனால் பாதி போட்டிகளில் முந்தானையை காற்றில் பறக்கவிட்டு புடவைக்குப் பதிலாக வேறு எதையோ  பாஷனாக காட்டியவாறு புடவையின் மகத்துவத்தையே கலைப்பார்கள்.அச்சுபிச்சுத்தனமாக சுற்றிக்கொண்டு ”பேஷனாக” நடப்பார்கள்.நடுவர்கள் நோக்கர்கள் கிழே குழியில் உட்கார்ந்தவாறு கலைக்கண்ணுடன் நோக்குவார்கள். மார்க் போடுவார்கள்.

இதெல்லாம் பல வருடமாக நடந்து வருகிறது.இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை இது அவர்களின் பிசினஸ் நுணுக்கம்-அணுகுமுறை-ரூல்...


இவங்க கச்சிதமா கவர்ச்சியா இருக்காங்க.எல்லாம் மூடி இருக்கிற இந்த பேஷன் புடிச்சிருக்கு.
இவங்க  புடவையை அணிந்து இருக்காங்க

ஏம்பா... அதுக்காக இழுத்துபோர்த்திக்கொண்டு “மணமகளே மணமகளே வா.... வா’ ன்னு நடக்க முடியுமா.ஹல்லோ.... இது பேசன் சோப்பா....! ஊர் நாட்டானா இருக்க.

Friday, October 18, 2013

பி்ளாக் ஆரம்பித்து ஐந்து வருடம்....சகட்டுமேனி- சமந்தா!

06-10-2008 அன்று தமிழ்மணம் வ(ம)லை ஏறினேன்.உச்சிக்கு வந்தேனா?ஐந்து வருடம் ஓடிவிட்டது.வலையேற்ற உதவிய அதிஷாவிற்கும் பதிவுகளைப் பாராட்டி/விமர்சித்து ஊக்கம் கொடுத்த தமிழ்ப்பறவைக்கும் (முதல் பாலோவர்) நன்றி.

அப்பா...
  
 Ervamatin போடுகிறரா?

வலைக்கு வருவதற்கு முன்பும் எழுத்தில் ஆர்வம் உண்டு.பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதிய அனுபவம் உண்டு.சமூகவலைத் தளங்கள், தொலைக்காட்சி சேனல்கள் வரவால் எழுத்து ஊடங்களில் சிறுகதைகள் சுருங்கிப்போய்  பழைங்கதையாகியது.ஒரு கதவு மூடியது.இன்னொரு கதவு திறந்தது.அது எனக்கே எனக்கான வலைத்தளம் இலவசமாக.வடிகால் ஆயிற்று.உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


திரும்பிப்பார்த்து என்ன சாதனை செய்தேன் என்று யோசிக்கிறேன்.


கட்டட்ற சுதந்திரத்தோடும் சகட்டுமேனிக்கு எழுதித் தள்ளிய கதைகள்,கவிதைகள்,விமர்சனங்கள்,இளையராஜா இசை ரசிப்புகள்,எல்லா சப்ஜெக்ட்டிலும் சகட்டுமேனிக்குக் பதிவுகள்,சினிமா விமர்சனங்கள் துணுக்குகள்,விளையாட்டு  etc. etc. etc., etc., என்று போகிறது.அரசியல்,மதம் லேசாகத் தொட்டுப்பார்த்ததோடு சரி.ஆர்வமில்லை.ஏன் ஆர்வமில்லை? ஏன் வம்பு என்றுதான். ஏதோ எழுதினமா... மக்கள் படிச்சாங்களா.... கமெண்ட் போட்டாங்களா... நாம சந்தோஷம் ஆனமா என்கிற சுயநலம்தான்.

புதிதாக முக்கியமாக இளையராஜா பதிவுகளை ஆத்மார்த்தமாக செய்தேன்.ரசித்தார்கள்.பின் தொடர்ந்தார்கள்.அடுத்து கவிதை எழுதப் பழகினேன்.10 நல்ல கவிதைகளும் 105 மொக்கைக் கவிதைகளும் எழுதினேன்.

சொந்தமாகவே சகட்டுமேனிக்கு ரசனை இருப்பதால் எதையும் ரசித்துப் பதிவு எழுதமுடிகிறது.தி.ஜானகிராமனின் எழுத்து வாசிப்பில் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது.


ஆரம்பித்த புதிதில் கமெண்டுகளுக்கும் பாலோவர் வேண்டி பல்லிளித்ததும் உண்டு.ரூம் போட்டு மற்றவர் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டேன். பதில் மரியாதை செய்தார்கள்.பதிவர் சந்திப்பிற்கெல்லாம் போய் “காட்டி”க்கொண்டேன்.

ஐந்து வருடத்தில் பதிவுலகம் பேஸ்புக் டிவிட்டர் வந்தபிறகு மாறிவிட்டது.இதில் இண்டர் ஆக்‌ஷன் குறைந்துவிட்டது. தூரத்து உறவாகிப்போனது தமிழ்மணம்.

மறக்க முடியாதது ராஜா-ரஹ்மான் சண்டை.நான் ராஜா ரசிகன்.பிளாக் ஆரம்பித்த புதிதில் ஏதோ டீக்கடையில் நின்று கதையளப்பது போல் எழுத பிரச்சனை ஆகி டமால் டிமீல் ஆகிவிட்டது.Fuck,Asshole,Bastard போன்ற வசவுகள் தாறுமாறாக வந்தது. இதில் மன உளைச்சல் என்னவென்றால் கமெண்ட்டுக்கு பதிலிளிக்க “மறுபடியும் முதலிலிருந்து” ஆரம்பிக்க வேண்டி இருந்தது.


சினிமா இசையை நேற்று கேட்டுவிட்டு இன்று கமெண்ட் போடும் மொக்கைகள்தான் தாங்கமுடியவில்லை.இவர்கள் எந்த இசையையும் ஒழுங்காக கேட்டதில்லை என்று முடிவுக்கு வந்து விட்டுவிட்டேன்.எது ஆழம் எது மேலோட்டம் என்று சுத்தமாக தெரியவில்லை இவர்களுக்கு.
போறாளே பொன்னுத்தாயி....

எல்லாம் போல் இதுவும் கடந்துப் போயிற்று. 

கிழே என் முதல் பதிவு.எதையோ எதிர்பார்த்து இதைப் படித்த அதிஷா “ சரி... இவருக்கு அரை சதவீதம் எக்ஸ்டரா வட்டி கிடைக்கும்  போலிருக்கு” நெளிந்தார்.அவசரத்திற்கு பிளாக் ஆர்வத்தால் எழுதிய பதிவு.வலையேற்ற மூன்று பதிவு கட்டாயமாக எழுதவேண்டும்.எனக்கும் பிடித்துத்தான் எழுதினேன்.

இதற்கு ஒரு கமெண்ட் இல்லை.நொந்துபோனேன்.

பாகவதரின் சாயலில் டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள்:


ஸ்டாக் டேங்கில் மொத்தம் 524 பதிவுகள்.சிறுகதைகள் 50. கவிதை 115.இளையராஜா 35. 294 பாலோயர்ஸ். இது போதும் எனக்கு ... இது போதும் எனக்கு.(அய்யோ....ரஹ்மான் பாட்டா??)

நான் ரொம்பவும் சிலாகித்து எழுதிய சிறுகதை இரண்டு.சலூன் கதையைக் குறும்படமாக இயக்கலாம். சூப்பராக இருக்கும்.கதைகளுக்கு  படமாக நெட்டில் சுட்டு ஆண் பெண் போட்டோக்களைப் போடுவது உடன்பாடு இல்லை.அது படிப்பவர்களின் கற்பனையில் குறுக்கிடுவது.

சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி

திருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் 

எனக்குப்பிடித்த திகில் கதை
பேய் வீட்டில் விழுந்த செல்போன்

எனக்குப்பிடித்த கவிதைகள்

ஹாலில் பெய்த மழை

மொட்டை மாடி

பிடித்த ஹைகூ கவிதை

குட்டையில் விழுந்த
நிலாவைப் பார்க்கும்
மற்றொரு நிலா
 

ஹைகூக்கள்



சமந்தா புராணம்

ஸ்ரீப்ரியாக்கு பிறகு என் மனதில் இடம் பிடித்தவர் சமந்தா.காரணம் நீஎபொவில் இவர் வெளிப்படுத்திய முகபாவங்கள்... குறுகுறுப்புகள்.Stunning ! கெளதம்மேனன் நிறைய ஹோம்வொர்க் செய்து எடுத்திருக்கிறார்.ஸ்ரீப்ரியா போல் இயற்கையிலேயே இவருக்கு சினிமாவுக்கான முகம்(?) உடல் மொழி இருப்பதாக என் யூகம்.


மெளனம்தான் பாடலா
வலி எல்லாம் தரும் ஊடலா
இதுபோதும் இதுபோதும்
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும்
ஒரு கூடல் செய்வாய் நண்பா

கண்ணில் தாகம தீருமோ  மித்ரா.... மித்ரா...

ஒரு குறும்படம்  “கடிதம்”

 குறும்படம் அருமை.ஆரம்ப இசை படத்தின் ஒரு கதாபாத்திரமாக ஏதோ ஒரு வலியை ஏற்படுத்துகிறது.(படத்தின் இசையமைப்பாளர் என்று டைட்டிலில் யாரும் இல்லை.)

கடிதம் என்ற சொல்லில் உயிர் இருக்கிறது.ஆத்மா இருக்கிறது.திறந்த மனம் இருக்கிறது.நிறைய எழுத்தாளர்களுக்கு தலைப்பாக இருந்திருக்கிறது.







You  Tubeல் முதல் அடி.....

ரொமப வருடமாக யூ டுயூபில் சொந்தமாக  இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏதோ ஒரு காரணத்தினால் தள்ளிப்போய் போனவாரம்தான் கைகூடியது.

நான் வலையேற்றிய முதல் பாடல். பழைய சிலோன் ரேடியோவில் கேட்பது மாதிரி ஆடியோ. 2.22 வில் ” என்னாளும் நீ தொட்டால் அடி அம்மாடி” ஜானகி மயக்கும் குரலில் வசீகரிக்கிறார்.

1.30 -2.03 இதெல்லாம் ராஜாவைத் தவிர யாரும் மீட்ட முடியாது.

சமந்தாவின் காதலர்கள் அவர் முகத்தை பார்த்தவாறே பாட்டைக் கேட்டால் தாக்கம் இருக்கும்.




Wednesday, October 2, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் -விமர்சனம்

த்ரில்லர் கதை ஒரு மதத்தின் தத்துவார்த்தங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது.”தத்துவார்த்தங்களோடு” படத்தில் வரும் சில குறியீடுகளும் பெயர்களும் ராஜாவின் பின்னணித் தொகுப்பு ஆல்பத்தில் வரும் இசையின் பெயர்களும் படத்தின் டைட்டிலும் இப்படி நம்ப வைக்கின்றன.கடைசி முடிச்சு அவிழ்க்கும்போது அவரின் மீட்சி அல்லது விமோசனம் அல்லது /வருத்தப்பட்டு பாரம் சுமப்பது வெளிப்படுகிறது.

ரொம்ப பொறுத்திப்பார்த்தால் குழப்பம்தான் வருகிறது.

சமீபத்தில் Life of Pi  படம் கூட ஆன்மிகத் தத்துவ பின்னணியோடு வந்தது.கமல் “கடவுள் பாதி மிருகம் பாதி” என்று அசட்டுத்தனமாக பாடியபடி ஒரு பாசாங்கு படம் வந்தது.மற்றும் நான் கடவுள், குணா.


மிஷ்கின் சினிமாவின் மொழி தனி.சராசரி படங்கள்போல் உள் வாங்க முடியாது.கதையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளும் சடாரென்று யதார்தத்திலிருந்து விலகி நிற்பார்கள்.நாமும் விலகி நிற்போம் மீண்டும் சேருவோம்.டிராமா போல் இருக்கும்.அந்தக் கால அடையார் பிலிம் கல்லூரி மாணவர்கள் எடுக்கும் த்ரில்லர் படங்களில் இப்படி வேண்டாத டிராமாக்கள் இருக்கும்.இப்படிப்பட்ட டெம்பிளேட்டுகளும் இதில் உண்டு.


படத்திற்கு வருவோம். கதை இரண்டு நாள் இரவில் நடக்கிறது (ஓடுகிறது).இரவு மிஷ்கினுக்குப் பிடித்த கேரக்டர்.அதுவும் மஞ்சள் இரவு.

இரவு.ரோடில் குண்டடிப்பட்டு ஒருவன் விழுந்துக்கிடக்கிறான்.அவன் பெயர் Wolf என்கிற எட்வேர்ட்.அவனை மருத்துவம் படிக்கும் சந்துரு (என்கிற ஆட்டுக்குட்டி?)  சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான்.அன்றைய இரவே Wolf தப்புகிறான்.அடுத்த நாள் இரவில் சந்துருவை Wolf பிடித்துவைத்துக்கொண்டு போலீஸ்ஸிடமிருந்து இடத்திற்கு இடம் மாறி மாறி சென்னைக்குள்ளேயே தப்பிச்செல்கிறான். சந்துருவும் அவனுடன் கைதியாக ஓடுகிறான்.இப்படி ஓடுவது யாரையோ காப்பாற்ற..! யாரைக் காப்பாற்ற?

அதே சமயத்தில் அவனை வேட்டையாட வேறொரு மிருக  கும்பல் அதே மயிலாப்பூர் மஞ்சள் இரவில் mindless ஆக மண்டையைப்பிய்த்துக்கொண்டு துரத்துகிறது.துரத்தலின் இடையே நிறைய பேர் சாகிறார்கள்.அடிபடுகிறார்கள்.

இதற்கிடையே சந்துருவும் தப்பிக்கிறான்.ஆனால் இப்போது அவன் ஆட்டுக்குட்டியாக  Wolfஐ வேட்டையாட துரத்துகிறான்.

போலீஸ்+Wolf+சந்துரு+கும்பல்.பிரேமுக்கு பிரேம் இப்படி துரத்தல் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.கடைசியில் துரத்தல் நிற்கிறது. முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.படம் நிற்கிறது.காட்டுவாழ்கை உருவகமாக கடைசியில் சொல்லப்படுகிறது.பார்வையாளர்களுக்கு குறியீடு வைத்து க்விஸ் வைக்காமல் கோனார் நோட்ஸ் போட்டு அவரே முடிச்சை அவிழ்க்கிறார்.
Threshold Guardian

அவிழ்க்கும் முடிச்சு யூகிக்கமுடியாதப்படி இருப்பது மிஷ்கினின் திரைக்கதை அமைப்பு.
 
படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.குறிப்பாக ரயில் நிலையம் மற்றும் தெருவில் துரத்தும் காட்சிகள்.இரவு ,சுடுகாடு, வெறிச்சோடிய ஸ்டேஷன்,தெருக்கள் படத்திற்கு ஆழம் சேர்கிறது. திகில் கூடுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஹோம்வொர்க் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Grim Reaper-(சாவின் உருவகம்)
 ஸ்ரீ, மிஷ்கின் அசத்துகிறார்கள்.ஷாஜியும் நன்றாக நடித்திருக்கிறார்.கேமரா பாலாஜி ரங்கா இரவை நம் முன் நிறுத்துகிறார்.

எல்லாம் ஓகே.ஏதோ மிஸ்ஸிங் என்கிற பீலிங் வருகிறது.கடைசியில் அவிழ்க்கப்படும் முடிச்சை நோக்கித்தான் கதை துரத்தப்படுகிறது.படத்தின் நாயகன் அதற்காகத்தான் பாரங்களை சுமந்தப்படி மீட்சிக்காக ஓடுகிறான். பார்வையாளர்களும் அதே அனுதாபத்தோடு ஓட வேண்டாமா?அதன் பிளாஷ்பாக் காட்டினால சாதாரண மசாலா படம் ஆகிவிடும் அல்லது துரத்தலில் விறுவிறுப்பு இருக்காது என்றுதான தவிர்த்திருக்கிறார்களோ?

ஆனால் படத்தின் பின்னணி இசை   Wolfக்குள் இருக்கும்  விமோசனத் தேடலை ஆழமாக வெளிக்கொணர்கிறது.

வீணப்போன கருப்பு மெண்டல் காமெடிப்படங்களுக்கு இந்தப்படம் 1000 மடங்கு மேல்.

இளையராஜா
இந்தத் த்ரில்லர் கதைக்கு இவரை விட்டால் இந்தியாவில் யாரும் கிடையாது. காரணம் தத்துவார்த்த(??) பின்னணியோடு கதை ஓடுகிறது.இவருக்கு இந்தத் தத்துவார்த்தம் எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. காரணம் அவர் இசையில் வழக்கமாகவே இருக்கும் ஆத்மா(soul).மற்றும் இதில் வேறு ஒரு ஆச்சரியமான விஷயமும் இருக்கிறது.


அது இதில் இசைக்கப்படும் இசையின் இழைகள்.இதுவரை இசைக்கப்படவில்லை.வழக்கமான தமிழ்ப்பட உணர்ச்சிகள் இல்லை.இல்லாமல் இன்னும் ஆழமாக போகிறது.பழக்கப்பட்டுப்போன ஜானகியோ எஸ்பிபியோ ஷ்ரேயாலோ கார்த்திக்கோ ராஜாவோ இல்லாமல் கருவிகள் நம்மை சிலிர்க்க வைப்பது புதுமைதான்.அதற்காக அன்னியமாகவில்லை. இன்னும் ஆழமாக்குகிறது.குறிப்பாக Walking through life and death இசை படத்தின் ஆன்மாவை  துளைக்கிறது..

திகிலுக்கும் பரபரப்புக்கும் தத்துவார்த்திற்கும் இடையே சர்வ சாதாரணமாக எதையும் கலைக்காமல் மாறி மாறி இசைக்கிறார்.தனி genre ஆகவே இருக்கிறது.

எவ்வளவோ படத்தின் இறுதிக் காட்சிகள் கட்டடத்தின் பேஸ்மெண்டில் தீவிரமாக இயங்கும்.ஹாலிவுட் படங்களும் இதில் அடங்கும். இதில் வரும் பேஸ்மெண்ட் காட்சியில்  ராஜா புகுந்து விளையாடியிருக்கிறார்.

இளையராஜா இசையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்.ரொம்ப ரொம்ப லேட்டாக நிகழ்ந்திருக்கிறது.காரணம் அவர் இல்லை.இயக்குனர்கள்.



Friday, September 27, 2013

ராஜா ராணி - விமர்சனம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  இளையராஜாவின் பிஜிஎம்மும் நொந்த ரெவிசெங்கரும் பின்னே ராஜா ராணியும்......


ரொம்ப ஆர்வமாக ஓ-ஆயும் படத்திற்கு முதல்நாள் முதல் ஷோ(12.00 Noon) சங்கம் தியேட்டரில் நெட்டில் புக் செய்து வைத்திருந்தேன்.தானைத் தலைவரின் பிஜிஎம் இந்தத் த்ரில்லர் படத்திற்கு எப்படி செட் ஆகிறது என்று மிக ஆர்வமாக  நுழைந்தால் “ சார்.... பொட்டி வரல..! க்யூப் எண்டர்டெயின்
மெண்டுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏதோ பிரச்சனை.ரீபண்ட் கொடுக்குறோம் இல்லேன்னா “ராஜாராணி”(இன்றுதான் ரிலீஸ்(27-09-13) படம் போடறோம் பாருங்க”.


படம் இல்லையா? நொந்தே போனேன்.ஓநாய் மாதிரி உள்ளுக்குள் ஓலமிட்டு ஆட்டுகுட்டி மாதிரி ம்ம்ம்மேமே என்று முடித்தேன். பின்னணியில் ஓ-ஆகுட்டியின் பிஜிஎம் “I Killed an angel" சோகமாக.அந்தக்காலத்தில்தான் “இதயவிணை” “அடிமைப்பெண்” ”உலகம் சுற்றும் வாலிபன்” போன்ற படங்களின் பொட்டி வராது.வரும் ஆனால் மூணு மணி என்றால் ஆறுமணிக்கு வரும்.

மிஸ்கினுக்கும் ராஜாவிற்கும் எட்டாம் பொருத்தம்.நந்தலாலா படம் ரெண்டு வருஷமா வரல.இது தியேட்டருக்கு வந்துவிட்டது. ஆனால் பொட்டி வரல.போஸ்டர்தான் வந்திருக்கு.


ஓநாய் இல்லை. ஆட்டுக்குட்டி இல்லை. ராஜாராணி? பார்ப்பதா வேண்டாமா? இதுமாதிரி வழக்கமான படங்களை பார்ப்பதை நிறுத்தி ரொம்ப நாள் ஆயிற்று. இப்போதெல்லாம் ரசிக்கமுடியவில்லை.ஏன்? என் எண்ணத்தை அப்படியே சுகாசினி சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

 //Unless we get out of these mindless comedies and a good-for-nothing fellow trying to win over the heroine kind of films,Tamil cinema will not be taken seriously//

இந்தப் படம் அதை அப்படியே அச்சுஅசலாக பின்பற்றுகிறது.

ஏதாவது வித்தியாசமாக இருந்ததால்தான் சினிமாவுக்கு போவது என்ற முடிவு எடுத்து ரொம்ப நாள் ஆச்சு.மனதை சமாதானப்படுத்திக்கொண்டு ஓநாய் -ஆட்டுக்குட்டி  பதிலாக ராஜா-ராணி.நல்ல காம்பினேஷன்.எதிர்பாராத ரிலீசால் ஆர்யா ரசிகர்களின் விசில் கத்தல் சத்தம் இல்லை.


விமர்சனம்

மெளனராகம்  படத்தை  கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாமல் வெட்டித்தனமாக எடுத்தால் எப்படி இருக்கும்.அதுதான் ராஜா ராணி.காதல் தோல்விக்கு பிறகும் காதல் உண்டு. வாழ்கை உண்டு.இதுதான் படத்தின் ஆங்கில டைட்டில் கார்டு மெஸ்ஸேஜ். ஆர்யா-நயன் திருமணம்.இருவருக்கும் இதில் இஷ்டமில்லை.இருவரும் ஒட்டாமல் டாம் அண்ட் ஜெர்ரி கணக்காக இருக்கிறார்கள்.படம் விழுகிறது. ரொம்ப சீரியஸ்ஸாக ஓட்டாமல் மெளனமாக இருப்பதாகக்  காட்டினால  மெளன ராகம் சாயல் வந்துவிடும் என்று டாம் அண்ட் ஜெர்ரி.

ஏன் ஒட்டவில்லை? இருவருக்கும் திருமணத்திற்கு முன் காதல் தோல்வி.பிளாஷ்பேக்.கட்டுடல் ஸ்மார்ட்டான ஆர்யா.லட்டான  அழகான நயன்.”சீக்கிரம் சேர்ந்து வாழுங்கப்பா.என்ஜாய் லைப்” என்றாலும் பொறுமையை சோதித்துவிட்டு சேருகிறார்கள்.

ஆரம்பிக்கும்போது ரொம்ப பிரமாதமாய் ஆரம்பிக்கிறார்கள்.ஆகா என்று நிமிர்ந்தால் கொஞ்ச நேரத்தில் படம் தொய்கிறது.


கதாநாயகன் - நாயகி-பிரெண்ட்(சரக்கு சந்தானம் அல்லது டாஸ்மேக் சந்தானம்)-அப்பா-கோபி எல்லோரும் ஜாலியாக இருக்கிறார்கள்.நன்றாக நடிக்கிறார்கள்.குடிக்கிறார்கள்.பெண்களை கலாய்க்கிறார்கள்.காதலிக்கிறார்கள்.குடிக்கிறார்கள்.சைட் டிஷ் சாப்பிடுகிறார்கள். மக்காக லாஜிக் சுயசிந்தனை ஒன்றும் இல்லாமல் இருக்கிறார்கள் அழுகிறார்கள்.செல் பேசுகிறார்கள். காதலிகளைப் பிரிகிறார்கள்.பின்னால் மீண்டும் அழுகிறார்கள்.

சந்தானம் வந்தால் தியேட்டர் அதிர்கிறது. வழக்கமான அவரின் “மச்சான் பொண்ணுன்ன” என்கிற prefixஓடு ஆரம்பிக்கும் வசனங்களை பேசி கைத்தட்டல் பெறுகிறார்.படத்தின் டைட்டில்தான் மாறுகிறது சந்தானம் மாறவில்லை.

கானா பாலா காதில் தோடுகளோடு வருகிறார். நல்ல வேளை பாடவில்லை. ஸ்டிரியோ டைப் ஆகிவிடும் என்று விட்டுவிட்டர்கள் என்று நினைக்கிறேன்.

நூறு ஆண்டு ஆன சினிமாவில் இன்னும் காமெடியன் கதாநாயனுக்கு பிரெண்ட் ஆக இருக்க வேண்டிய கட்டாயம்.கடந்து பத்துவருடமாக add-on ஆக சரக்கு அடிக்க வேண்டும்.அதுதான புதுமை.



ஜெய் இதில் மிகவும் “வித்தியாசமான” ரோல் பயந்தாங்கொள்ளி.நன்றாக செய்திருக்கிறார்.மனதில் நிற்கிறார்.படம் ரொம்ப ரிச்சாக இருக்கிறது.அட்டகாசமான கேமரா காட்சிகள்.பாடல்களில் அருமையான விஷுவல்ஸ் பாடல் காட்சிகள். ஆனால் இசை பொருத்தமில்லாத ஜி வி பிரகாஷ்குமாரின்  ஹை டெசிபல் இசை.கத்தல் பாடல்கள்.

ஆர்யா-நயன்-ஜெய் ரசிகர்களுக்குப் பிடித்த படம்.பொழுதுபோகிறது.

Wednesday, August 28, 2013

நான் மெட்ராஸில்தான் இருக்கிறேன்.

நான் மெட்ராஸில் இருந்துக்கொண்டே மெட்ராஸில்தான் இருக்கிறேன் என்று ஐந்து அல்லது ஆறு வயதில்தான் தெரியும்.

மெட்ராஸுக்குத் தள்ளி நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்து ஊர்காரர்கள் ஆவலோடு ”மெட்ராஸ்” போகிறேன் என்று சொல்கிற மாதிரி சும்மா 10 கி.மீ தள்ளி அதே சென்னை பின்கோடில் குரோம்பேட்டைக்காரர்களில் (வசித்த ஊர்) படிக்காதவர்கள் சிலர்  ”மெட்ராஸ்” போகிறேன் என்று சொல்வதுண்டு.படித்தவர்கள் “சிட்டி” போகிறேன் என்று சொல்வார்கள்.எங்களுக்கும் அவ்வளவு மோகம் மெட்ராஸ் மேல்.


மெட்ராஸின் நிறுவன நாள் 22-08-1639 என்று சொல்லப்படுகிறது.மெட்ராஸூக்கு 374 வயது முடிந்து 375 வயது ஆரம்பித்துவிட்டது.22-8-13முதல் 25-08-13 வரை மெட்ராஸ் வாரம் கொண்டாடப்படுகிறது.

ஈஸ்ட் இந்தியா கம்பேனி தெலுங்கு (அரசர்)நாயக்கர்களிடமிருந்து வாங்கி இருக்கிறார்கள்.அதனால்தானோ என்னவோ சென்னையின் நிலப் பத்திரங்களின்(Parent document) ஓனர்கள் நாயுடு அல்லது நாயக்கர் பெயர் கண்டிப்பாக இருக்கும்.

இப்போது வாங்கினால் சென்னையின் விலை என்னவாக இருக்கும்?ஒரு கொசுகூட இல்லாத 15 வருஷம் கேரண்டி கொடுத்தால் நான் வாங்குவதற்குக் தயார்.

மெட்ராஸ் எத்தனை மெட்ராஸடி..!

மின்சார ரயிலில் 15வது நிமிடத்தில் குரோம்பேட்டையிலிருந்து கிண்டியை நெருங்கும்போது மெட்ராஸ் வந்துவிடும்.ஆனால் சினிமாவில் மெட்ராஸ் என்றால் சென்ட்ரல் ரயில்வே அல்லது எல்.ஐ.சி. கட்டிடம்.

பள்ளிச்சுற்றுலாவில் மீயூசியம் (செத்த காலேஜ்),ஜு(உயிர் காலேஜ்),அடையாறு ஆலமரம்,அண்ணா சமாதி,செயின் ஜார்ஜ் கோட்டை.

வீட்டோடு பார்த்த மெட்ராஸ் ரங்கநாதன் தெரு,நல்லி,குமரன்,பாட்டா,மிதிலாபுரி,ஆனந்தவல்லி கல்யாண மண்டபம்,அடஞ்ஞான் முதலி தெரு,அறுபத்துமூவர் மைலாப்பூர்,அயோத்திய மண்டபம் மேற்கு மாம்பலம்.

தலைவர்கள் இறந்துவிட்டால் தெரியும் மெட்ராஸ் மவுண்ட்ரோடு மற்றும் ராஜாஜி ஹால்.

கல்லூரி பருவத்தில் பார்த்த மெட்ராஸுக்கு ஆங்கிலம் மற்றும் இந்திப்படங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.தியேட்டர் சத்யம், சபையர்,தேவி காம்ளக்ஸ்,உட்லெண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல்,புவுண்டன் பிளாசா,தி.நகர் ஐஸ்கிரீம் பார்லர்.


தேவி தியேட்டர்
தேவி தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு கெளரவம்.கொடுக்கும் காசுக்கு தரமான ஜிலுஜிலு ஏசி, செண்ட்,ஒலி-ஒளி,இருக்கைகள்.உள்ளே நுழைந்தது முதல் வெளிவரும் வரை மிதந்தபடி இருப்போம்.மூன்று வகையான ஜனங்கள் கலந்துகட்டியாக படம் பார்க்க வருவார்கள்.தேவி பாரடைஸ்(தமிழ்),தேவி(ஆங்கிலம்/தமிழ்/ஹிந்தி), தேவிபாலா(ஹிந்தி/தமிழ்).
காமதேனு தியேட்டர்-லஸ் கார்னர்

1978-நான் (உட்கார்ந்தபடி வலது கடைசி)கைக்கட்டி இருப்பவரின் இடதுபக்கம்
பைக்கிராப்ட்ஸ் ரோடில் இருந்த சந்திரிகா ஸ்டியோவில் எடுத்தது.இப்போது  அங்கு இருக்கிறதா????


போட்டோவில் எல்லோரும் அப்போதைய ஹேர்ஸ்டைலான “ஸ்டெப் கட்டிங்” வைத்திருப்போம்.நுங்கம்பாக்கத்தில் உள்ள ரஞ்சித் பியூட்டி பார்லரில் ரூ25 (சாதா கட்டிங் 3.00 குரோம்பேட்டையில்) கொடுத்து செய்துக்கொள்வோம்.
ஹிந்தி ஹீரோக்களின் பாதிப்பு.

அப்போது மெட்ராஸில் மல்லிகைப்பூ விற்பவர்கள்  நிறைய பேர் தென்படுவார்கள்.பெரும்பாலும் பெண்கள்.இப்போது குறைந்துவிட்டார்கள். கல்லூரி மற்றும் அலுவலக  பெண்கள் மல்லிப்பூ சூடுவது குறைந்துவிட்டது. காரணம் உடை?
பின்னால் ஷோகேசில் இருக்கும் பெண்களுக்கு மல்லிப்பூ செட் ஆகுமா?



மாம்பலம் ஸ்டேஷனில் “இந்த வாரம் ஆனந்தவிகடன் வாசித்துவிட்டீர்களா” நீல கலர் இரும்புபோர்டு இருக்கும்.

இப்போது  இது உயிருடன் இல்லை





 காலத்தின் ஓட்டத்தில் பழையன எல்லாம் கழிந்து புதியன புகுந்து விட்டது. பழையன நினைவில் ஏக்கத்தோடு அவ்வப்போது நிழலாடும்.பெருமகிழ்ச்சி என்னவென்றால் நாம் இழந்ததை எல்லாம் நெட்டில் பொக்கிஷமாக கொட்டிவைத்து  நினைவுகளில் சர்ஃப் செய்ய வைக்கிறார்கள்.