Saturday, December 31, 2011

வாய்க்கரிசி,அவன் அவள் மற்றும் ஒரு புன்னகை

                                        வாய்க்கரிசி

”இதானே”

மார்ச்சுவரி அருகே ஸ்டெரச்சரில் பெண் பிணம் காலை விரித்தபடி சாம்பல் பூத்து கிடந்தது.நான்கு மாத கர்ப்பத்தில் வயிறு பூசி இருந்தது.பக்கத்தில் போலீஸ்காரர்.

“கைவுட்டுட்டு ஓடினனே.. அந்த பொறம்போக்கு என்ன ஜாதி?”

எதிரில் இருந்தவர் முகம் இறுகி எதுவும் பேசவில்லை.

”வாய்க்கரிசி தீர்த்தம்ன்னு சம்பிரதாயத்த முடிச்சிடுங்க “

“அதெல்லாம் வேண்டாமுங்க.களுத தொலைஞ்சா போதும்”கத்தையாக ரூபாய் நோட்டுக்களை போலீஸ் கையில் அழுத்தினார்.

“அட ரிக்கார்டலதான் அனாத பொணம்.உனுக்கு நீ பெத்த பொண்ணூ.” சொல்லி முடிப்பதற்குள் அவர் போய்விட்டிருந்தார்.

வார்டுபாயிடம் கால்கிலோ அரிசியும் தண்ணீர் பாக்கெட்டும் வரவழைத்து முகத்தில் தண்ணீர் பீச்சியடித்து கொத்தாக அரிசியை வாயில் போட்டார்.
                                        ------------------

                        அவன் அவள் மற்றும் ஒரு புன்னகை

சந்தியாவுடன் அவனும் சரிசமமாக கூடவே நடந்து வந்துக்கொண்டிருந்தான்.அவன் யாரோ? இவளுக்குத் தெரியாது.

இருவருக்கும் இடையே கால் இன்ஞ் இடைவெளிதான் இருக்கும்.அவள் செருப்பின் அடியும் அவன் ஷுவின் அடியும் பளிச்சென்ற hexagon வடிவ பிளாட்பார வில்லைகளில் மாறி மாறி வைக்கப்பட்டது. ஒவ்வொரு அடிக்கும் தன் செருப்பின் ”சரக்சரக்”கும் அவன் ஷுவின் ”டக்டக்கும்” ஒரு சினிமா பாட்டின் ரிதம் போல காற்றில் தொடர்ந்து வந்தது.

தெருவில் ஒரு திருப்பம் வந்து இருவரும் பிரிந்தார்கள்.

இணைபிரியாமல் நடந்து வந்தது எவ்வளவு நிமிடம் என்று யோசித்தாள். ஐந்து நிமிடம் என்று தெரிந்தது. அந்த hexagon பிளாட்பார கற்களைப் பார்த்தாள்.மெதுவாகப் புன்னகைத்துவிட்டு ஆபிசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

                                        ------------------                     

Saturday, December 24, 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள்..சித்தாரா சூப்பர்!

நேற்று டிவி ரிமோட்டில் சேனல்களை மாற்றிக்கொண்டே வரும்போது ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு சற்று அசந்துவிட்டேன். எனக்காகவே காத்திருந்தவர் போல் பாட ஆரம்பித்தார்.பாடி சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி முடிந்துவிட்டது.

அந்த நிகழ்ச்சி “முப்பொழுதும் கற்பனைகள்” படத்தின் இசை வெளியிட்டு விழா. ஜெயா டிவி.

மேடையில் பாடிக்கொண்டிருந்தவர் சித்தாரா கிருஷ்ணகுமார் என்பது நெட்டில் பார்த்துத் தெரிந்துக்கொண்டேன்.அந்தப் பாடல் “கண்கள் நீயே... கடலும் நீயே”.இசை: ஜி.வி.பிரகாஷ்.படத்திலும் இவரேதான் பாடி இருக்கிறார்.

சித்தாரா
பாம்பேஜெயஸ்ரீ, சித்ரா குரலையும் மிக்சியில் போட்டு அடித்துக்
கலந்தாற் போல் இனிமையான ஜீவனுள்ள குரல்.ஹைபிட்ச்சில் மழலை/கீச் தட்டாமல் அற்புதமாக வழுக்கியபடி பாடுகிறார்.கிளாசிகல் டச்.நல்ல தமிழ் உச்சரிப்பு.


ரொம்ப நாளைக்குப் பிறகு தமிங்க்லிஷ் இல்லாமல் பாடும் பெண்ணின் மெலடியோடு உயிர்துடிப்பானப் பாட்டு கேட்டேன்.ரொம்ப சந்தோஷ் ஆனேன்.

தமிழில் இவருக்கு முதல் பாடல் என்று நினைக்கிறேன்.மலையாளத்தில் சாஜன் மாதவ் இசையில் ”யாக்‌ஷியும் நிஜனும்” படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார்.இன்னும் நிறைய மலையாள படப் பாடல்கள் பாடி உள்ளதாக தெரிகிறது. இக்குட்டி கேரளாவின்னு வந்துன்னூ.

தாமரையின் வரிகள் பாடலுக்கு மிகப் பெரிய பலம்.இப்பாடல் தெய்வம் தந்த பூவேவின் சாயல் வருகிறது.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜின் வழக்கமான மெலடி வாசனை.

இவர் கேரளா ஜீவன் டிவியில் பாட்டுப் போட்டியில் இரண்டு கோடி ரூபாய் பரிசு வாங்கி உள்ளாராம். கிழ் உள்ள வீடியோவில் ஜானகி அம்மாவின் மலையாளப் பாட்டு ஒன்று பாடுகிறார்.


சித்தாரா என்றால் வட மொழியில் காலை நட்சத்திரம்.மின்னுங்கள் சித்தாரா.வாழ்த்துக்கள்!


Wednesday, December 21, 2011

ரொம்ப தூரத்து உறவு - கவிதை


எப்பவோ பார்த்திருந்த
தூரத்து உறவு அத்தைப் பாட்டி
இறந்துவிட்டதாக தகவல் வருகிறது

பண்டரிபாய் போல்
முகம் இருந்திருக்கிறது
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுத்திருக்கிறார்
சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி இருக்கிறார்
ஈரத்தலையைத் துவட்டி விட்டிருக்கிறார்
சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கிறார்
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்திருக்கிறார்
அம்மா அடிக்கும்போது தடுத்திருக்கிறார்

இப்படியாக
அன்பு சுரந்து முடிகையில்
அவரே வீட்டிற்க்கு வருகிறார்

இறந்தது அவர் இல்லை
வேறு யாரோ ஒரு தூரத்து உறவு


பண்டரிபாய் போல்
முகம் இருக்கவில்லை
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுக்கவில்லை
அல்லது சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி விடவில்லை
ஈரத்தலையைத் துவட்டி விடவில்லை
சினிமாவுக்கு அழைத்துப் போகவில்லை
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்ததில்லை
அம்மா அடிக்கும்போது தடுக்கவில்லை

அந்த இறந்துப் போன
வேறு யாரோ ஒரு தூரத்து உறவின் மேல்
அன்பு சுரக்கிறது

அத்தைப் பாட்டிக்குச் சுரந்ததை விட
இரண்டு படி அதிகமாகவே சுரக்கிறது


Sunday, December 4, 2011

நன்றி

கடைசி தேர்வு எழுதி முடித்த உணர்வு.மண்டை குடைச்சல்கள் இனிமேல் இல்லை.நோ டென்ஷன்.ஏதேதோ யோசித்து பதிவுகள் போட்டு ஒரு வாரத்தை ஓட்டியாயிற்று.புது அனுபவம்.


புது மாப்பிள்ளை ஜோர் ஓவர்.அடுத்த புது மாப்பிள்ளை ரெடியாகிவிடுவார்.

என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி. ஒரு வாரம் என்னை ஆதாரித்து படித்தவர்கள்,பின்னூட்டம் போட்டவர்கள் எல்லோருக்கும் நன்றி.

ஜொலித்து முடித்து சாதாவாக ஆன பிறகும் தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து ஆதரவு கொடுக்கவும்.

நன்றி வருகிறேன் வணக்கம்.


எம்.எஸ்.விஸ்வநாதன் -மெல்லிசை வித்தகர்

வலது கை விரல்களால் ஹார்மோனியப் பற்களை அழுத்தி இடது கை விரல்கள் இரண்டை உயர்த்திச் சொடுக்குப்போட்டு ரெடிமேடாக மேஜிக் மெட்டுக்கள் போட்டு திரையுலகத் தமிழ் இசையை மெல்லிசைத்து 50 வருடம் ஆண்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.முடி சூடா மெல்லிசை மன்னர்.

இவருடன் டி.கே.ராமமூர்த்தி இணைந்து பின்னால் பிரிந்தவர்.

இவரின் பல பாடல்களில் நடுநடுவே stunner(பிரமிப்பு) இசைத் துண்டு வந்து போகும்.லட்சணமாக இருக்கும்.

என்னால் மறக்க முடியாத பாட்டு “ அம்மம்மா கேள் ஒரு சேதி” ”பவள கொடியிலே”இதன் காட்சியும் நம்மை ஒன்ற வைக்கும்.தாளத்திற்கு “ஒரு பெண்ணைப் பார்த்து" " நீயேதான் என் மனவாட்டி” “அவளுக்கென்ன அழகிய” இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம.பல நாட்கள் ஆகும் முடிப்பதற்கு.

ரூமை(அதுவும் இரவில்) இருட்டாக்கி ஒரு திகிலுடன் “எங்கே நிம்மதி” பாட்டை ரசித்ததுண்டு.”ஆயிரம் கரங்கள்
போற்றி”(கர்ணன்),”நாம் ஒருவரை ஒருவர்(குமரிக்கோட்டம்),”நான் காற்று வாங்க”(கலங்கரை விளக்கம்) அடிக்கடி கேட்டு ரசிப்பதுண்டு.

இவரின் குரலில் பல அருமையான பாட்லகள்.”கண்டதை சொல்லுகிறேன்”
(சில நேரங்களில் சில மனிதர்கள்) ,”சொல்லத்தான் நினைக்கிறேன்””சிவ சம்போ” “இன்பத்திலும் துன்பத்திலும்” (சிவகாமியின் செல்வன்”""அல்லா அல்லா”(துக்ளக்)”பயணம்” (பயணம்).

பின் வரும் இசை பிரமிப்புக்களை கேளுங்கள்:-



மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன்.பிறப்பு 24-06-1928.இன்றும் பல சேனல்களில் தன்னுடன் ஒட்டிப் பிறந்த தோரணையுடன் ஹார்மோனியத்தை செல்லமாக அணைத்தவாறு தன் இசையை சிலாகிப்பார்.

பன்முகத் திறமை இல்லாமல் இவ்வளவு வருடம் குப்பைக்
கொட்டமுடியாது.
பண்டித இசையை மெல்லிசையாக்கி அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திய முக்கியமான ஆளுமைகளில் முதன்மையானவர்.

அதுவும் சிவாஜியின் உதட்டுக்கும்/நடைக்கும் எம்ஜியாரின் கைஆட்டலுக்கும் கொள்கைக்கும் பாடல் எழுதப்படுகிறது.அதற்கு தன்னை உலுக்கிக்கொண்டு மெட்டுக்கள் போட்டு இளைத்துப்போனவர் மெல்லிசை மன்னர்.அவர்களுக்குத் தெரியாமல் நவீனத்தை மறைத்துக்கொடுத்தவர்.

இவர் காலத்தில் இசையமைப்பாளர்களுக்கு பொறுப்பு அதிகம். ஏன்? பல படங்களில் பாட்டிலேயே கதைச் சொல்ல வேண்டும்.வெயிட்டுஜாஸ்தி.சமூகம்,பக்தி,மாயஜாலம்,
சரித்திரம்,புராணம்,மேற்கத்திய நாட்டு கதை,திகில்,பேய்,கிரைம்,கர்நாடகம் என்று பல வித கூறுகளில் படத்திற்கு இசை அமைக்க வேண்டும்.

அயல் நாட்டு இசையை தமிழில் புகுத்தியவர். ”ஆட வரலாம்”(கறுப்புபணம்),”நினைத்தை நடத்தியே”(நம் நாடு),”மலரென்ற முகம்”(காதலிக்க நேரமில்லை)”என்னைத் தெரியுமா”(குடியிருந்த கோவில்).

அப்போது முக்கியமானது நேரலை இசை( live orchestra) அமைப்பு. எல்லா வாத்தியகாரர்களயும் கட்டி மேய்த்து இசை உருவாக்க வேண்டும். இடையில் தப்பு நேர்ந்தால் மீண்டும் இசைக்க வேண்டும்.

இவரின் தாக்கம் அவரின் சமகாலத்து இசையமையப்பாளர்களான வி.குமார்,சங்கர்கணேஷ்,
ஜி.கே.வெங்கடேஷ்,தேவராஜன்,விஜயபாஸ்கர்,ஆர்.கோவர்தன்,ஆர்.சுதர்ஸனம் இருந்தது.

இளையராஜா பாடல்களிலும்பார்க்கலாம்(நினைத்தால் போதும் பாடுவேன்(கலைக்கோவில்).ஆர்.ரஹ்மானுக்கு ரொம்ப செல்லமானவர்.தாக்கத்தில் ரிமிக்ஸ் போட்டதுண்டு.

பயணம் பாட்டைக் கேளுங்கள்.ஒல்டு இஸ் கோல்டு.

http://www.raaga.com/player4/?id=230558&mode=100&rand=0.031038899207487702

எம்.எஸ்.வி தமிழ்த் திரையுலகில் மாபெரும் தாக்கத்தை உண்டாக்கி விலகியவர்.


Saturday, December 3, 2011

டிஸ்கவரி சேனல் -இயற்கையின் பிரமிப்புகள்

டிஸ்கவரி சேனல் தமிழ் வந்த பிறகு நிறைய சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் குறைவதாக எங்கோ செய்திப் படித்தேன். உண்மைதான்.கலக்குகிறார்கள்.

அதே ஆங்கிலம்தான் இப்போது தமிழில்.

சினிமா போல ஆரம்பம்,நடு, கிளைமாக்ஸ் என்று பதப்படுத்திக் கொடுக்கிறார்கள்.சில பிராணிக்குச் செல்ல பெயர் வைத்து பின் தொடர்ந்து கதைச் சொல்கிறார்கள்.இது அம்மா,இது அப்பா,இது அதன் குட்டிகள் என்கிறார்கள்.

மாதங்கள் வருடங்கள் காத்திருந்து படம் எடுக்கிறார்கள்.

ஒரு தனி கிரகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.வாழ்வா-சாவா போராட்டம் நித்தம் நித்தம் நடக்கிறது.

பாம்பு விஷத்தைக் கழுகின் மேல் பீச்சி அடிக்கிறது.ஆமை ஜோடி சேர்வதற்கு படாத பாடு படுகிறது.ஒரு குருவி
வெகுளித்தனமாக வேறொரு குருவி குஞ்சு இனத்திற்க்கு உணவு ஊட்டுகிறது.லட்சக்கணக்கான மீன்கள் அலுக்காமல் நீந்திக்கொண்டே இருக்கின்றன.

குரங்குகள் குளிரில் நடுங்குகின்றன.பூச்சி ஒன்று எதிரி மேல் குசு விட்டு தப்பிக்கிறது.சிங்கங்கள் பிரபஞ்சமே கிடுகிடுக்கும்படி மோதுகின்றன.புணர்ந்த பின் சிலிர்க்கின்றன.வித விதமான பூக்கள் கொத்துக்கொத்தாக பூத்து குலுங்கிக்கொண்டே இருக்கிறது.வெளவால்கள் கண்டம் விட்டு கண்டம் உணவுக்கு பறக்கின்றன.குளிர் போய் வெப்ப காலத்தில் நிறைய மடிகின்றன. கன்றுகள் தொலைந்துப்போய் அம்மாவைத் தேடுகின்றன.
உஷார்...!காவல்காக்கும் மீர்காட்டுகள்
இயற்கையின் வினோதங்களை இண்டு இடுக்குவிடாமல் படம்பிடித்துப் போடுகிறார்கள்.விதவிதமான நவீன தொலைத் தொடர்பு சாதனங்களுடன் உலகத்தை வலம் வருகிறார்கள்.

சாப்பாடு,தற்காப்பு,செக்ஸ் முக்கியமான மூன்று தளங்களில் கோடிகோடி ஜீவராசிகள் தங்களின் இருப்பை நிலை நிறுத்திக்கொள்கின்றன.

எல்லாமே உள்ளுணர்வு மூலம் உந்தப்படுகின்றன.

Survival of the fittest  என்பது நிதர்சனம்.இங்கும் பொறாமை,தகிடுதத்தம்,குழு மனப்பான்மை,பிலிம் காட்டுதல்,அலட்டுதல்(செக்ஸ்ஸுக்காக),திட்டம் போடுதல்,அன்பு,பிரிவு,துக்கம்,போட்டி,வருத்தம், எல்லாம் உண்டு.



யூகிக்க முடியுமா. வெற்றி அல்லது தோல்வி அல்லது டை?

ஆனால் எல்லாம் இருப்புக்கான போராட்டம்தான்.எப்போதும் உயிர் பயம் என்ற டென்ஷனிலேயே இருக்கிறது.ஒரு புல்லைக் கடிப்பதற்க்குள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.24 மணி நேர கண்காணிப்பு கேமராதான்.



தாவரத்தை உண்ணும் பிராணிகள் தாவர பட்சிணி.இங்கு தாவரம் பூச்சியை வூடு கட்டி பிடித்து உண்கிறது. அதற்கு சத்துணவு தேவையாம்.

இயற்கையின் சீற்றங்கள்.மனிதனின் சாகசங்கள்.மருத்துவ உலகின் அதிசயங்கள் என்று உலகம் விரிகிறது.


மனிதன் இயற்கை மற்றும் பிராணிகளுடன் போராட்டம் நடத்தி பிரயாணம் செய்வதை ஒரு டிவி சீரியல் போல் சொல்கிறார்கள்.

ஒரு ஜீவராசிக்காவது, அதன் உள்ளுணர்வில் தெரியுமா, டிவியில் இதன் சொந்த விஷயங்களை நாம் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று. தெரிந்தாலும் அது கவலைப்படப் போவதில்லை.


சேனலின் மொழிப்பெயர்ப்புத் தமிழை இன்னும் எளிமைப் படுத்தலாம்.

Friday, December 2, 2011

எலுமிச்சம் பழம் - சிறுகதை

சாந்தகுமார் உடம்பு முழுவதும் திருநூறு அப்பிக்கொண்டு கைகட்டி பவ்யமாக சாமியாரின் முன் நின்றுக் கொண்டிருந்தான்.தொல்லை எல்லாம் நிவர்த்தி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில்.

“இன்னித்தோட கஸ்டல்லாம் ஓய்யிது.ஒன்னோட புது சலூனுக்கு எந்த திருஸ்டியும் அண்டாது” கையில் கொத்தாக இருந்த எலுமிச்சம் பழங்களை அப்படியும் இப்படியுமாக கசக்கிப் பிழிந்து தூர எறிந்தார் சாந்தகுமாரின் குடும்ப சாமியார்.

ஒரு பழம் மட்டும் எதுவும் ஆகாமல் கையில் இருந்து உருண்டு ஓடியது.சாமியார் அதைப் பார்த்து மிரண்டார்.அபசகுனமா?சாந்தகுமாரும் மிரண்டான்.

“ஏதோ ஒரு பீடை உன்ன உத்துப் பாக்குது.நீ திரும்பிப் பார்க்காத மெட்ராஸ் கிளம்பு.நான் அந்தப் பீடையைச் சுடுகாட்டுக்கு ஓட்றேன்”

சாந்தகுமார் பிடித்த ஓட்டத்தில் சென்னை வந்துதான் நின்றான்.திரும்பியே பார்க்கவில்லை.பீடை உற்றுப் பார்த்தால் எப்படி திரும்பிப்பார்க்க முடியும்.

சென்னை திருவல்லிக்கேணி.

அடுத்த இரண்டு நாளும் நசுங்காத எலுமிச்சம் பழம் இவனையே உற்றுப்பார்ப்பது போல் இருந்தது.மூன்றாவது நாள்தான் கடையைத் திறந்தான்.

”யாரு இப்படி பாக்கறாங்க நம்மள?”கையில் கத்திரிக்கோலும் சீப்புமாக வெளி வந்தான் சாந்தகுமார். இரைச்சலுடன் கடை எதிர் சைடில் நின்ற பஸ்ஸிலிருந்து ஒருவர் ஜன்னல் சீட் வழியாக சாந்தகுமாரின் பள பள ”தனுஷ் சலூனை” உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவரின் சிவப்புச் சட்டை எடுப்பாகத் தெரிந்தது.

யோசித்தவாறே சாந்தகுமார் உள்ளே போய் கஸ்டமருக்கு தலை முடியை வெட்டியவாறே குனிந்து மீண்டும் பார்த்தான்.பஸ்காரர் அதேபோல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.இப்போது பஸ்கார் (பஸ்காரர்)சலூனைத் துழாவிப் பார்ப்பது போல் இருந்தது.

சாந்தகுமார் சற்று டென்ஷன் ஆனான்.

எச்சைத் துப்புவது போல் வெளியே வந்து மீண்டும் ஜன்னலை உற்று நோக்கினான்.பதிலாக பஸ்காரும் உற்று நோக்குவது போல் இருந்தது.பஸ்ஸு ஏன் இவ்வளவு நேரம் இங்க நிக்குது.அதுவும் ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் பஸ் நின்று ஒருவர் ரொம்ப நேரம் உற்று நோக்குகிறார் என்றால் ஏதோ தீய சக்திதான்.அதான் எலுமிச்சம் பழம் நசுங்கவில்லை.

 ரொம்ப விசனமாகி உள்ளே போய் விட்ட வேலையைத்
தொடர்ந்தபடி மீண்டும் குனிந்துப்பார்த்தான்.பஸ்காரரும் அப்படியேதான் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.


சாமியார் சொன்ன பீடையா?கலவரமாகி கையில் இருந்து கத்திரிக்கோல் நழுவ சுதாகரித்துப் பிடித்துக்கொண்டான்.

சாந்தகுமாரரின் நடவடிக்கையில் கவனம் ஈர்க்கப்பட்டு
கஸ்டமரும் சேரில் அமர்ந்தபடி சாந்தகுமாரனுடன் தலைக்
குனிந்துப் பார்த்தார்.ம்ம்ம் என்று பெருமூச்சுவிட்டபடி சாந்தகுமாரை விழித்துப் பார்த்தார்.கஸ்டமரின் விழி பீதியைக் கிளப்பியது.

சாந்தகுமார்அரண்டுபோய் ”பேய்” வேகத்தில் கட்டிங் மற்றும் சேவிங் செய்து முடித்து அவரை அனுப்பினான்.சலூன் புதுப்பித்து முதல் கஸ்டமர் இவர்தான்.

சேவிங் துணியை கையில் பிடித்து உதறுகையில் கையில் ஏதோ பிசுபிசுத்தது.ரத்தம்.ஷேவ் செய்யும்போது இது இல்லையே? மிகுந்த டென்ஷானகி இதயம் படபடத்தது.

வழுவழுப்பாக உருண்டையாக ஏதோ உள்ளங்காலில் தட்டுப்பட்டது.நல்ல குண்டுக்கட்டான எலுமிச்சம் பழம்.குனிந்துபார்த்தால் பாதத்தின் கிழ் ஒன்றும் தட்டுப்படவில்லை.சே! பிரமை.

சே! கடையை அப்படியே பழசாக விட்டுருக்கலாமோ? ஏன் லட்சம் செலவிட்டு புதுப்பித்தோம்.பழசு ஸ்ரீதேவி போய் புதுசு பீடை நம்மைப் பிடிக்கிறதோ.நம்மையே பிடிக்க உற்றுப் பார்க்கிறதோ.

பஸ் போய்விட்டதா?பீடை இருக்கிறதா?மீண்டும் ஏதோ அவனைப் படுத்தியது.

கண்ணாடியை வாசல் நோக்கிக் காட்டிப் பிடித்து கண்ணாடியைப் கவனமாக சற்று பயத்துடன் பார்த்தான்.பஸ் அங்கேயே இருந்தது.என்னாச்சு பஸ்ஸூக்கு.வெளியே போக பயமாக இருந்தது.

லைட் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு கதவை ஒருக்களித்து மீண்டும் பார்த்தான்.பீடை இங்கேயேதான் பார்த்துக்கொண்டிருந்தது.சற்றுத் தள்ளி பக்கத்துக் கடையில் எலுமிச்சம் மூன்று வாங்கினான்.கடைக்கு எதிரே நின்று சூடம் காட்டி கண்ணை மூடி ஏதோ வேண்டினான்,யார் யாரையோ சபித்தான்.

சூடம் அணைந்ததும் பழங்களை காலால் அமுக்கிப் பிய்த்து மூலைக்கொன்றாக மூன்று முறை சுத்தி இடது வலது பின் எறிந்தான்.ஒன்று பஸ்ஸின் அடியில் விழுந்தது.பரம திருப்தியானன்.பெரிய பழம் ஒன்று எடுத்து கிழே வைத்து காலால் அழுத்தி சப்பை ஆக்கினான்.பழம் சக்கைகள் தெரிய கிழிந்து சாறு பீச்சியது.மனம் ஒரு நிலைக்கு வந்தது.

விறுவிறுவென்று கடையை மூடினான்.பஸ்ஸில் ஏறி ”பீடை”யின் பக்கத்தில் நின்று அது பீடையா அல்லது சாதா பஸ் பிரயாண மனிதனா என்று கண்காணித்து ஏதாவது நிவர்த்திச் செய்ய வேண்டும் என்று எதிர்பக்கம் கிராஸ் செய்து பஸ்ஸில் ஏறினான்.

பஸ் ஏதோ கோளாறால் நின்றிருந்தது.உள்ளே வந்தான்.ஆனால் “பீடை” உட்கார்ந்திருந்த சீட் காலியாக இருந்தது.

பஸ்ஸின் உட்புறம் எல்லா இடத்திலும் தேடி குனிந்தவாறு எதிர் திசையைப் பார்த்தான்.அதே சிவப்புச்சட்டைகாரர் தன் கடையின் எதிரில் நின்றுக்கொண்டு கடையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு திடிரென்று பக்கத்து காய்கறி கடைக்கு விறுவிறு என்று நடந்தார்.

அங்கு அவர் ஒரு எலுமிச்சம் வாங்கிக்கொண்டு திரும்பும் தருணம்  பஸ் புறப்பட்டு அடுத்த சந்தில் திரும்பியது.”நல்ல வேளை மறக்காமல் எலுமிச்சம் பழம் வாங்கினோமே” வீட்டை நோக்கி நடந்தார் சிவப்புச்சட்டை.
                                 
                               முற்றும்



Thursday, December 1, 2011

இளையராஜா - King of Musical Trills

இந்தப் பதிவில் Trill என்னும் இசையின் ஒரு கூறு பற்றிப் பார்க்கப் போகிறோம்.

ட்ரில் என்பது இசையை குட்டியாக அழகுப்படுத்த இயற்றப்படும் சின்ன இசைத் துண்டுதான்.முகத்தில் மெஹந்தி பொட்டு ஒற்றுகள் மாதிரி ஒரு குட்டி ஒப்பனை.அலங்காரம்.


வயலின்,கிடார்,கிளாரினெட்,பு.குழல்,பியானோ மற்றும் வேறு இசைக் கருவிகளால் இதற்குண்டான நோட்ஸ் பார்த்து வாசிக்கப்பட்டு அலங்கரிப்படுகிறது.

நாக்கு,உதடு,தொண்டை இவற்றால் கூட ட்ரில் இசைக்கிறார்கள்.வெண்ணிற ஆடை மூர்த்தி போல் பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ட்ரில்லும் உண்டு.பார்க்க யூ டியூப்.

வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களும் வயலினில் இது மாதிரி செய்வார்.

ட்ரில் பற்றி......

விக்கிப்பிடியா/ஆக்ஸ்போர்டு அகராதி:
1.(the effect achieved by)  the fast playing of a note and the note above or below it, one after another.

2.(bird song) Birds to sing a series of  quickly repeated high notes.

3.Singing two musical notes one after the other, repeatedly and very quickly


It was known from the 16th until the 19th century used in  French/German/Italy music compositions
 

பேஸ் புக்கில் Raja Fans Groupல் ராஜீவ் ஷங்கர் இதைப் பற்றி எழுதி எல்லோரும் தெரிந்துக் கொள்ள வைத்தார்.அவரும் தெரிந்துக்கொண்டார்.அவருக்கும் அங்கு கலந்துரையாடி ராஜாவின் ட்ரில் ஆடியோ பகுதிகளைப் பதித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றிகள் கோடி.

அங்கு பல மேஸ்ட்ரோவின் பல இசைக் கூறுகள் ஆரோக்கியமாக விவாதிக்கப்பட்டு தெரிந்துக்கொள்கிறோம்.

உன் எண்ணம்,ராஜபார்வை,தீபம், அடுக்கு மல்லி,16 வயதினிலே,அஞ்சலி ஆயிரம் நிலவே வா தவிர மீதி அங்குப் பகிரப்பட்டது.

டிஸ்கி:பொது அறிவில் உள்வாங்கி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.பண்டித ஞானம் அல்ல.தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

ட்ரில் பற்றி எளிமையாக புரிந்துக்கொள்ள: அதிவேக நாத அதிர்வுகள் அல்லது சிலிர்ப்புகள் அல்லது அலசல்கள்.

குளத்தின் மேற்பரப்பில் கல் எறிந்தால் எதிர்வினையாக ஏற்படும் அதிவேக அலை அதிர்வுகள்.

கேட்டால் செய்வது சுலபமாகத் தெரியும். ஆனால் இதற்கும் திறமை வேண்டும் என்று தெரிகிறது.

(Filedon floating audio பிரச்சனையால்(அங்கு பிரச்சனை) மற்றொரு ஆடியோ Divshare வைக்க வேண்டியதாயிற்று.நல்ல நட்சத்திர நாள் அதுவுமா ரொம்ப விசேஷம் போங்க பைல்டென்! பிரச்சனை எப்போது தீரும் என்று தெரியவில்லை)

இசைஞானி இளையராஜாவின் Trills?

  1. இளையராஜா இதைப் பன்முகமாக (versatile) இசைத்துக்காட்டுகிறார்
  2. பாட்டின் நுனி முதல் அடி வரை ஏதோ ஒரு பகுதியில் எதிர்பார்க்காத இடங்களில் வந்து சின்னதாக சிலிர்த்துவிட்டுப் போகிறது
  3. இசையின் ஓட்டத்தில் பொருந்தி இதுவும் ஓடுகிறது
  4. வண்ணமயமானது
  5. Grand and beautiful
  6. லூசுத்தனமாக (அமெச்சூர் நெடி?) இல்லாதது
  7. ஆத்மா உள்ளது
எதற்காக இது பாட்டின் நடுவே வருகிறது? பல காரணங்கள்.நான் சொல்வது யூகத்தின் அடிப்படையில்.

திகில்/பேய் எமோஷன்,பொழுது புலர்வது,குறும்பு/குறுகுறுப்பு,ஜஸ்ட் ஒப்பனை,தண்ணீர் பீச்சி அடித்தல்,கிராம காட்சிகள்,மெல்லிய சலனங்களோடு தொடங்குதல்,கனிவு, குழந்தைத்தனம்,திடீர் வேகம் etc.,etc.,.

பாட்டின் முழு சரத்தில் ஏதாவது இடத்தில் இதைப் பொருத்தி அழ்காகத் தொடுக்கிறார்.புல்லாங்குழல் நிறைய வருகிறது. காரணம் நிறைய கிராமீய மெட்டுக்கள்.



Let"s get thrilled with his Trills!

கிழ் வரும் முதல்  நான்கு (ராஜா அல்ல) ஆடியோ
உதாரணங்கள் எளிமைப்படுத்தும்.இவைகள் நானே என் சொந்த ஆர்வத்தில் சேகரித்தது.

நன்றி: you tube


கிழ் வரும் ஆடியோக்கள் வேலை செய்யவில்லை, கடைசியில் செல்லவும்.அங்கு பிளே ஆகிறது.

Trills- Violin.mp3

Trills-Piano.mp3

Trills-Guitar.mp3

Trills-Clarinet.mp3


Trill-Nadodi Thendral-92-ManiyeManikuyile.mp3
0.15-0.22 சிந்தசைசரின்(சிந்த்தானா?)சிலுப்புகள்.

Trill-KelviumNaane Pathilum-88-Title.mp3
இது படத்தின் டைட்டில் இசையில் வருவது.
0.18-0.22  அன்ட் 0.38-.044 பியானோவில் ட்ரில்

Trills-Thambi Pondatti-92Unennam.mp3
0.08-0.24

Trill-Thalapathi-91-YamunaiAatrile.mp3
ஆரம்ப புல்லாங்குழல் ட்ரில் கிளாசிகல் டச்சோடு வருகிறது.

Trills-PallaviAnupallavi-83-.mp3
0.31-0.33(சிந்த்?) அண்ட் 0.47-1.04(பின்னணி வயலின்)

Trills-Mella Pesu-83-Uyire_Uravil.mp3
0.10-0.14 இதன் பின்னணியை கவனியுங்கள்.இதனுடன் வேறு ஒரு எமோஷன் வயலின்(double bass?) குறுக்கிட்டு இசைக்கப்படுகிறது.

RajaParvaiViolin.mp3
ட் ரில் எங்கு ?தமிழ்ப்பறவை அண்ட் கோபிநாத்

Trills-Alaigal Oivathillai-81-PuthamPuthu.mp3
ட்ரில் எங்கு?தமிழ்ப்பறவை அண்ட் கோபிநாத்
அதிகாலை உணர்வுக்குக்காக இந்த ட்ரில்?

Trill-Nenjathai Killathe-80 -Title.mp3
படத்தின் டைட்டில் இசை 0.37-0.40

Trill-Aavarampoo-91-AdukkuMalli.mp3
0.04-0.11 புல்லாங்குழல்

Trill-Athisiya Piravi-90-Annakilye.mp3
0.19-0.25 புல்லாங்குழல்(சின்னதாக)

Trill-Edhomogam-Kozhikovuthu.mp3
வயலின் 00.00-00.05, 0.19-0.22

Trill-NalamVaazha-Marupadiyum-93-.mp3
00.00-00.03 வயலின்

Trills-Gopurangal Saivathillai-83-Poovadaikatru.mp3
0.43-0.45 புல்லாங்குழல்

Trills-Ullasa Paravaigal-80-.mp3
00.19-0.26 சிந்த் அல்லது பு.குழல்

Trill-Time-99-NiramPirithu.mp3
பியானோ 0.00-0.11

Trill-Solla Marantha Kathai-02-Etho Onna.mp3
00.00-0.10 வயலின்

கிழ் வரும் ஆடியோவில் ட்ரில் எங்கு வருகிறது. பின்னூட்டத்தில் சொல்லவும்.
Trills-Sri Ramarajayam-11-Rama Rama Ane.mp3

Trills-Deepam-77-Poovizhivasalil Yaradi1.mp3
0.04-0.08

Trills-Kumbakarai Thankaiah-77-ThendralKaathe(duet).mp3
???????? சொல்லுங்கப்பா.

பேய்-1
Trills-Aayiram Nilave Vaa-83-DevathaiIllam.mp3
00.05-0.08

Trills-Thavani-Kanavugal-84-SengamalamSir.mp3
0.04-0.11,  0.41-0.47,1.03-1.04

பேய்-2
அஞ்சலி-90-ராத்திரி நேரத்து
0.13-0.20


மேலே உள்ள filedon floating audio வேலை செய்யாவிட்டால் கிழே divshare audio



என் பழைய இளையராஜா பதிவுகள்:

1.இளையராஜாவின் மேஜிக் புல்லாங்குழல்கள்

2.ராஜாவின் மேஜிக் வயலின் நாதங்கள் -1

3.இளையராஜாவின் மேஜிக் வயலின் நாதங்கள் -2

ஏன்? ஏன்? ஏன்? ஏன்?ஏன்? அம்மா எமனை ஓடிப் பிடித்தார்?

வீடியோவில் நடந்த சாவிற்க்கு காரணம் ஆயிரம் சொல்லலாம். ஆனால் முக்கியமான காரணம் “முன் திட்டம் இல்லாமை”(planning).ஒரு ஆழ்துளை ஆராய்ச்சி(drill down analysis).


இடம்: மைசூர் ரயில்வே ஸ்டேஷன்.வண்டி:சாமுண்டி
எக்ஸ்பிரஸ்.அம்மா இறந்துவிட்டார்.பெண் படுகாயம்(?)

எந்த பிரச்சனைக்கும் Why-Why analysis?  ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் என்று ஐந்து கேள்விகள் கேட்டு பிரச்சனையில் வேருக்குச் சென்று அதைக் களைய வேண்டும்.மேலோட்டமாக பிரச்சனையை அணுகக் கூடாது.

நிகழ்வின்(effect)  உண்மையானக் காரணத்தை(cause) அறியவேண்டும்.”விதி” “அவன் செயல்” ”மங்கு சனி”எல்லாம் ஒரு நம்பிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள்.ஆனால் யதார்த்தம் வேறு.

மேற்கண்ட நிகழ்வு ஏன் நடந்தது.அதன் அடிவேர் என்ன?

ஐந்து ஏன்கள் கேட்டு அடிவேரைப் பிடிப்போம்.

இது சும்மா மொக்கையோ டமாஸ்ஸோ அல்ல.நிதர்சனம்.விஞ்ஞான பூர்வமானது.அந்த அம்மாவை நம் சொந்த அம்மா போல் கற்பனைச் செய்து பாருங்கள்.

 1.ஏன் இறந்து போனார்?
ஓடும் ரயிலில் ஏறினார்
2.ஏன் ஓடும் ரயிலில் ஏறினார்?
சரியான நேரத்திற்கு ஸ்டேஷனுக்கு போகவில்லை
3.ஏன் போகவில்லை?
வீட்டிலிருந்துப் புறப்பட தாமதம் ஆகிவிட்டது.
4.ஏன் தாமதம்?
அது இது என்று பல வேலைகள்
5. ஏன் அது இது என்று பல வேலைகள்?
எதுமே, முக்கியமாக பிரயாணம் உட்பட சரியாக திட்டமிடவில்லை. 

”அவசர எமர்ஜென்சி பிரயாணம்”என்று தப்பிக்க முடியாது.இதற்கும் ஒரு அவசர திட்டமிட்டுதான்(emergency plan) கிளம்ப வேண்டும்.

இந்த whyயை தலைகிழாக திட்டமிட்டு கிளம்புவதாக போட்டுப்பாருங்கள்.மகள் டாட்டா காட்ட அம்மா பதிலுக்கு சிரித்தபடி டாட்டா காட்டிக்கொண்டே போயிருப்பார்.

"பிளான் பண்ணா எதுவும் நடக்கிறதில்ல.டக்குன்னு திங்க் பண்ணுவேன் டக்குன்னு கிளம்பிடுவேன் “ இப்படி ஒரு கோஷ்டி எப்போதும் சொல்லிக்கொண்டு திரியும்.

திங்க் பண்ணிட்டு டக்குன்னு வாயு (திங்க் பண்ணாமலும்)விடலாம்.பாத்ரூம் போகலாம்.
சொறிந்துக்கொள்ளலாம்.கொட்டாவி விடலாம்.சாமுண்டி எக்ஸ்பிரஸ்ஸைப் பிடிக்க முடியாது.

(டக்குன்னு இப்படி ஒண்ணு ( நண்பர்) வண்டியில்
கிளம்பிப்போய் வாரிக்கொண்டு விழுந்தது.சைடு ஸ்டாண்டு மடக்கப்படவில்லை.இவரு “டக்குன்னு” திங்க் பண்ணிட்டாரு.அதான் காரணம்)
_____________________________________

கிழ் உள்ளவர் தப்பித்துவிட்டார்.ஆனால் பைக்.ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்? படம் வரைந்து பாகங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


பைக்கின் தலைவிதி அப்படி இருந்தா யாரால மாத்த முடியும்?