Monday, June 22, 2009

கன் டைம் டெலிவரி சார்! ஞானக் கதை

courier


ஒரு பெரிய தொழிலதிபர் சாகும் தருவாயில் இருந்தார்.குழந்தைப் பருவத்தில் பசி,பட்டினியை அனுபவித்து, முட்டி மோதி,மேடு பள்ளங்களைப் பார்த்து வாழ்க்கையில் முன்னேறியவர். இன்று கோடிகளுக்குச் சொந்தக்காரர்.


அந்த வேளையில் எல்லோரும் போல தன் மகனை அழைத்து தொழிலதிபர் அறிவுரைக் கூறத் தொடங்கினார்.


“மை..டியர் சன்...நான் சொல்வதை கவனமாகக் கேள்.என் வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று நேர்மை. இரண்டு சமயோசித புத்தி.”


மூச்சு விட்டுக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.


“நான் யாருக்காவது கரெக்ட் டைம்ல சரக்க டெலிவரி பண்றேண்ணு வாக்குறுதி கொடுத்துட்ட ,இடி, மின்னல், காற்று, புயல் வந்தாலும் அல்லது கம்பெனியே திவால் ஆனாலும் அல்லது வேறு எது வந்தாலும் கஸ்டம்ர்தான் முக்கியம். நான் சொன்ன டைம்ல சரக்க டெலிவரி பண்ணிடுவேன் அதான் நேர்மை. வாக்குறுதிய காப்பத்துவேன்.”


புரிஞ்சிடுச்சு அப்பா.. அப்படியே செய்கிறேன்...சரி..சமயோசித புத்திஎன்றால் என்ன?


”அவ்வாறு வாக்குறுதி எதுவும் கொடுக்காமல் இருப்பதே”

11 comments:

  1. //“புரிஞ்சிடுச்சு அப்பா.. அப்படியே செய்கிறேன்...சரி..சமயோசித புத்திஎன்றால் என்ன?


    ”அவ்வாறு வாக்குறுதி எதுவும் கொடுக்காமல் இருப்பதே”//

    *********

    நெத்தி அடி........ இதத்தான் எல்லா தொழிலதிபர்களும் பாலோ பண்ணுறாங்களா??

    சூப்பர் மேட்டர் தான்..........

    ReplyDelete
  2. முன்னாடியே படிச்சுருக்கேன். அதனால் தலைப்பு சூப்பர்! :)

    ReplyDelete
  3. ”அவ்வாறு வாக்குறுதி எதுவும் கொடுக்காமல் இருப்பதே”


    நச்...

    ReplyDelete
  4. எல்லா மேனேஜ்மெண்டும் இதத்தான பண்ணுது...
    நல்ல ஞானக்கதை சார்....

    ReplyDelete
  5. சென்ஷி said...
    //முன்னாடியே படிச்சுருக்கேன். அதனால் தலைப்பு சூப்பர்! //

    நன்றி.

    கயல்விழி நடனம் said...
    ”அவ்வாறு வாக்குறுதி எதுவும் கொடுக்காமல் இருப்பதே”

    நன்றி.

    ReplyDelete
  6. //”அவ்வாறு வாக்குறுதி எதுவும் கொடுக்காமல் இருப்பதே”//
    அது மேட்டரு.

    ReplyDelete
  7. ஒரு பக்க நச் கதை(கருத்து!)..

    ReplyDelete
  8. //சமயோசித புத்திஎன்றால் என்ன?


    ”அவ்வாறு வாக்குறுதி எதுவும் கொடுக்காமல் இருப்பதே”//

    Superb

    ReplyDelete
  9. ஸ்ரீதர் said...

    //அது மேட்டரு//

    நன்றி ஸ்ரீதர்.

    ReplyDelete
  10. பட்டிக்காட்டான்.. said...
    //ஒரு பக்க நச் கதை(கருத்து!)//

    நன்றி.

    இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!