Friday, June 5, 2009

மனைவியா...வேலைக்காரியா...யாரடி நீ

மனைவியின் பழசாகிப்போன
நைலக்ஸ் புடவை
மேட்சிங்க் பிளவுஸ்
குறைந்த காலமே உபயோகித்த
லெதர் செருப்பு
வெள்ளி கொலுசுகள்

கச்சிதமாகப் பொருந்தி
அணிந்து எதிர்ப்படுகிறாள்
வீட்டு வேலைக்காரி
வீதியில் நடக்கையில்

அசப்புல...அம்மா மாதிரியே
தயங்காமல் சொல்கிறாள் மகள்

பெருமிதப் புன்னகையுடன்
கடக்கிறாள் வேலைக்காரி

மனைவியோ அம்மாவோ
இரண்டுமே பிடித்திருக்கிறதோ
என்னவோ!


இங்கே கிளிக்குக:ஹைக்கூ..ஹைக்கூ..ஹைக்கூ...



11 comments:

  1. \மனைவியோ அம்மாவோ
    இரண்டுமே பிடித்திருக்கிறதோ
    என்னவோ\\

    கலக்கல்v

    ReplyDelete
  2. //மனைவியோ அம்மாவோ
    இரண்டுமே பிடித்திருக்கிறதோ
    என்னவோ

    இது கொஞ்சம் ஓவரா தெரியல???

    ReplyDelete
  3. முரளிகண்ணன் said...

    //கலக்கல்//

    நன்றி சார்.

    ReplyDelete
  4. கயல்விழி

    //மனைவியோ அம்மாவோஇரண்டுமே பிடித்திருக்கிறதோஎன்னவோஇது கொஞ்சம் ஓவரா தெரியல???”//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. குழந்தையை விட உங்களுக்கு (அதாவது கவிதையின் நாயகன்) ரொம்ப பிடித்து இருக்கும் போல..!! அதான் குழந்தை மூலமா வெளிபடுதோ

    ReplyDelete
  6. நல்லா இருக்கு சார்...
    //மனைவியோ அம்மாவோ
    இரண்டுமே பிடித்திருக்கிறதோ
    என்னவோ!//
    இதுக்குப் பதில் ‘மனசுக்குள் மத்தாப்பு’ அப்பிடின்னு முடிச்சிருக்கலாமோ..?!

    ReplyDelete
  7. ஆ.முத்துராமலிங்கம் said...

    //குழந்தையை விட உங்களுக்கு (அதாவது கவிதையின் நாயகன்) ரொம்ப பிடித்து இருக்கும் போல..!! அதான் குழந்தை மூலமா வெளிபடுதோ//

    கவிதையை பல பரிமாணங்களில் புரிந்துக் கொள்ளலாம்.நன்றி.நான் எதுவும் சொல்லமாட்டேன்.

    ReplyDelete
  8. தமிழ்ப்பறவை said...

    //நல்லா இருக்கு சார்...//

    நன்றி.
    //மனைவியோ அம்மாவோ
    இரண்டுமே பிடித்திருக்கிறதோ
    என்னவோ!//
    இதுக்குப் பதில் ‘மனசுக்குள் மத்தாப்பு’ அப்பிடின்னு முடிச்சிருக்கலாமோ..?!

    சரி வராது.

    ReplyDelete
  9. thala...thala....superru.

    ReplyDelete
  10. நந்திதா தாஸின் படம் அழகு! :)

    ReplyDelete
  11. Deepa said...

    //நந்திதா தாஸின் படம் அழகு! :)//

    நன்றி தீபா

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!