Thursday, December 18, 2008

மீண்டும் ஒரு காதல் கவிதை

அடம் பிடித்து ஒரு காதல்  

எஸ்.எம்.எஸ்.அனுப்பினாலும்

காதல் கடிதம் கொடுத்தாலும்

விடாமல் பின் தொடர்ந்தாலும்

எவ்வளவு அழுது புரண்டாலும்

கனவில் வந்து பின்தொடர்ந்தாலும்

முகம் காட்டி பேசப் போவதில்லை

உன் பாதையை மாற்றுவாய்

முகம் சுளித்து அழகு காட்டுவாய்

நகம் கடித்து துப்புவாய்

முணுமுணுப்பு சாபம்தான்

காதல் வந்ததற்க்கான

காரணங்கள் சொன்னால்  

நிராகரிப்பதற்க்கான காரணங்கள்

நிறைய உள்ள உன்னிடம்

உனக்கு என்னைப் பிடிக்கப்போவதில்லை

எல்லாம் தெரிந்துதான்

முடிவெடுத்தேன்

காதலித்தே தீருவது என்று

3 comments:

  1. இது வாழ்க்கையைத் தொலைக்கும் முட்டாள்தனம்.பிடிக்கலைனு சொன்னாலும் தொடர்வது காதலா?

    ReplyDelete
  2. அழகான கவிதை.

    அவசியம் தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    http://www.newspaanai.com/easylink.php

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!