Tuesday, December 30, 2008

தொலைந்து போனவர்கள் - 2

               
       தொலைந்து போனவர்கள் - 2

காணவில்லை.சென்னை மற்றும் அதன் சுற்றுப் 
புறத்தில் பல வருடங்களுக்கு என் முன் கண்ணில் பட்டவர்கள்.

1.”கொசுறு” கொடுத்த பால்காரர்/பழக்காரர்

2.”பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விட்ட” செப்பிடு
வித்தைக்காரன்(ஆனால் விட்டதாக சரித்திரம் இல்லை)

3.பாடையில் பிணத்தை தூக்கிக்கொண்டுச் சென்ற நாலு பேர்

4.நார்மடி கட்டிய விதவை அய்யர்/அய்யங்கார் 
மொட்டைப் பாட்டிகள்
(தசாவதாரத்தில் அசின் பாட்டியாக வரும் கமல் பாட்டி மாதிரி)

5.”பேமிலி ரூம்” உள்ள ஹோட்டல்

6.ஸ்டூலில் உட்கார்ந்து “காஜா” எடுத்த டெயிலர் கடைப் பையன்

7.ராப்பிச்சைக்காரர்

8.ஆபிஸ் ஆபிஸாக படியேறி டெலிபோன் துடைத்து
செண்ட் போட்டுவிட்டு சென்ற பெண்கள்

9.மஞ்சள் துணி உடுத்தி”கோவிந்தோ கோவிந்தோ”
என்று சொல்லி புழுதியோடு ரோடில் உருண்டு கொண்டே
பிச்சை எடுத்தவர்

10.தாவணிப் பெண்களை ”சைட்” அடித்த வேட்டி கட்டிய இளைஞ்சர்கள்

11.டிரான்ஸிஸ்டர் கையில் பிடித்து பாடல்
கேட்டுக்கொண்டே சென்ற நரி குறவர்கள்

12.குழந்தைகளை கைப்பிடித்து ஸ்கூலில் கொண்டுபோய் விட்ட ஆயாக்கள்

அன்றும் இன்றும் மாறாத காட்சி: காஸ் சிலிண்டரை ட்ரை ஸைக்கிள் அல்லது சாத ஸைக்கிளில் வைத்துத் தள்ளி வரும் டெலிவரி பாய்

5 comments:

  1. nice :-)..ithemaathiri yethuvellam kanamal pogumo;-(

    ReplyDelete
  2. அருமையான பதிவு.... டிரான்ஸிஸ்டருக்கு பதிலாக.... செல்போனில் எப்.எம் பாடல் கேட்கும் நறிக்குறவர்களை பார்க்கமுடிகிறது

    ReplyDelete
  3. இய‌ற்கை/கதிர்,

    முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  4. பிரதீப்,

    என் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!