Monday, January 3, 2011

காலண்டர் கவிதைகள்

வடக்கே சூலம்
பழைய காலண்டர்
விட்டுச்சென்ற
வெற்றுச் செவ்வகத்தில்
புதுக் காலண்டர் பொருந்தாமல்
வடக்கேயும் தெற்கேயும்
சூலங்கள் துருத்திக்கொண்டு
எட்டிப்பார்க்கிறது

பூட்டிய வீட்டில் காதல்
பூட்டிய வாசல்கதவைத்
திறக்கும்போதெல்லாம்
காலண்டரும் சுவர் கடியாரமும்
பேச்சை நிறுத்தி
மெளனமாகின்றன
காதலன் யார் காதலி யார்
என்று புரியாமல்
ஒவ்வொரு நாளும்
யோசித்தப்படி நானும் மெளனமாகிறேன்

பால்கணக்கு
டைரியைப் போல்
ரகசியம் ஏதும் இல்லை
காலண்டர்களுக்கு






365 நாட்களும் கடந்து போகும்
முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள்
அலுப்பாக இருக்கிறது
காலண்டர்களுக்கு

பிரம்மானந்தம்
மின்விசிறி காற்றில்
தோகை விரித்து
ஆடிக்கொண்டிருக்கிறது
காலண்டர்

.

8 comments:

  1. நல்லாருக்கு சார்...’பூட்டிய வீட்டில் காதல்’ ரொம்பப் பிடிச்சது.

    ReplyDelete
  2. //முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள்
    அலுப்பாக இருக்கிறது
    காலண்டர்களுக்கு//

    நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  3. அடடே... அப்படின்னு சொல்லும் வகையில் கவிதைகள் கலக்கலாக இருந்தன...

    ReplyDelete
  4. நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  5. யோவ் said...

    // நல்லா இருக்குங்க...//

    முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. Philosophy Prabhakaran said...

    // அடடே... அப்படின்னு சொல்லும் வகையில் கவிதைகள் கலக்கலாக இருந்தன...//

    ரொம்ப நன்றிங்க பிரபாகரன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!