Monday, March 2, 2009

ஓஷோவின் ஞானக் கதைகள்-கவுண்டமணி

”ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காண்பிப்பாயாக என்று ஏசு நாதர் சொல்லியிருக்கிறார்” என்று ஒரு கிறிஸ்துவத்
துறவி போதனை செய்தார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் உண்மை தானா என்று அந்தத் துறவியையே பரிசோதிக்க விரும்பினான். அவர் இடது கன்னத்தில் பலமாக அறைந்தான். ஏசு நாதர் சொல்படி தன்னுடைய மறு (வலது) கன்னத்தையும் காட்டினார். அதிலும் சாத்து சாத்தினான்.

அறைந்து முடிந்தவுடன் அவனை போட்டு பின்னியெடுத்தார் துறவி.

அவன் கவுண்டமணி கணக்காக வலி தாங்க முடியாமல் “துறவி சார்..துறவி சார்..நீங்கதான சொன்னிங்க..துறவி சார். ஒரு கன்னத்தில் அறைஞ்சா இன்னொரு கன்னம் பீரின்னு...இந்த ஆபர நானு அவைல பண்ணி அடிச்சா என்னப் போட்டு இப்படிப் பின்றீங்களே துறவி சார்! இது ராங்க் இல்லையா துறவி சார்!

துறவி சார் சொன்னார்:- ”ஏசு மறு கன்னத்துடன் நிறுத்தி விட்டார்.மூன்றாவது கன்னம் இல்லை.அதற்குப் பிறகு நான் விரும்பியதைச் செய்து கொள்ளலாம். ஏசு இதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை”


நீதி:

நீ யாரையும் துன்புறுத்தாதே. ஒரு கன்னத்தில் அறைந்து துன்புறுத்துவோர் இந்த உலகத்தில் இல்லாதபட்சத்தில் மறு கன்னத்தை காட்ட வேண்டிய அவசியமில்லை.


என் வேறு ஞானக் கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்:








4 comments:

  1. தல நல்லா இருக்கு.கவுண்ட மணி கற்பனை அட்டகாசம்.

    ReplyDelete
  2. ஞானக் கதை அட்டகாசம்...சில நேரங்களில் சில வேறு கோணங்கள்..

    ReplyDelete
  3. அருமையான பதிவு.

    இந்த நூற்றாண்டின் இணையற்ற சிற்பி ஓஷோவை பற்றி நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  4. வண்ணத்துபூச்சியார் said...

    //அருமையான பதிவு.

    இந்த நூற்றாண்டின் இணையற்ற சிற்பி ஓஷோவை பற்றி நிறைய எழுதுங்கள்.//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!