Friday, November 28, 2008

மீண்டும் ஒரு காதல் கதை

குரோம்பேட்டை ரயில் நிலையத்தைத் தாண்டி ஜி.எஸ்.டி ரோடைக் கிராஸ் செய்தால் வருவது அல்டாஃப் ஹவுஸ். இங்கிருந்து பள்ளி ஒரு கிலோ மீட்டர். இங்குதான் பன்னீர் செல்வம் லூசுநாராயணன் காலரைக் கொத்தாகப் பிடித்துக்கேட்டான். நாங்கள் ஆறு பேரும் திரும்பி பார்த்தோம். 
பள்ளிக்கு நேரம் ஆகிக்கொண்டிருந்தது.
கமலுக்கும் ரஜினிக்கும் சண்ட வுட்டா யார் ஜெயிப்பாங்க?”
லூசுநாராயணன் முகம் பீதியடைந்தது. வழக்கமாக சிங்கம்-புலி, நாய்-பூனை, கரடி-காண்டாமிருகம் போன்ற மிருகங்களுக்குத்தான் சண்டைவிடுவான். திடீரென்று மனித குலம் தாவியது சற்று அதிர்ச்சியாக இருந்தது.புரியாமல் விழித்தான் “லூசுநாராயணன்.
பன்னிர் செல்வம் யார் மீதோ "காண்டு" வைத்து விட்டான்.
இப்படித்தான் சில சிக்கலான கேள்விகள் கேட்டு ஜாடைமாடையாக சண்டையை ஆரம்பிப்பான் . அன்றைக்கு அவன் மூடின் படி எது ஜெயிக்குமோ அதைத்தான் பதிலாக சொல்ல வேண்டும் .அவனை மிஞ்சி யாரும் இருக்கக்கூடாது. அவன் வைத்ததுதான் சட்டம். இந்த மாதிரி நடவடிக்கை எங்களை திகில் படுத்தும். ஏன் என்று   அவனை புரிந்துக்கொள்ள  முடியவில்லை..
ஒரு தடவை உங்க அப்பாவுக்கும் எங்க அப்பாவுக்கும் சண்ட வுட்டா யார் ஜெயிப்பாங்க? என்று கேட்டு குமார் மேல் காண்டு வைத்தான். அந்த காண்டு எடுக்க அறுபது நாள் ஆகியது . ஆனால் இன்று யார் மீது பன்னீர் செல்வம் காண்டு வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை.
குருட்டாம்போக்கில் என்று ஆரம்பித்துபன்னீர் செல்வத்தின் முக பாவம் பார்த்து,பயந்து வாயை மூடிக் கொண்டான் “லூசுநாராயணன். “ஒன்னுக்கு போய்ட்டு வந்து சொல்றேண்டாஒரு விரல் காட்டி விசுக்.. விசுக்..என சார்லி சாப்ளின் போல் நடந்து மறைந்தான். காண்டு அவன் மீது இல்லை என்பது மன்னிப்பில் விளங்கியது.
அடுத்துள்ளவர்களிடம் இதே கேள்வியை கேட்டான்.இவர்கள்லூசுநாராயணன் மாதிரி இல்லை. ப.செ.வின் உளவியல் தெரிந்தவர்கள்.ரஜினிஎன்றார்கள்.
அவர்கள் அடிமைப்பட்டதை பெருமிதமாக எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தான். முறைத்தான்.காண்டு என் மீது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தது.
என்னை பார்த்து வில்லன் செந்தாமரை போல் புன்னைகைத்தான். சற்றுகுழம்பினேன்.கமல் ஜெயிப்பான்என்று கமல் மாதிரியே சொன்னேன். இருவரும் கட்டிப் புரண்டோம்.கண்களில் பூச்சி பறந்தது.எங்கோ தேய்ந்துஎரிந்தது.சட்டைகள் கிழிந்தது.யார் பட்டனோஅறுந்தது. நான் ஜெயிப்பது எனக்கு தெரிய ஆரம்பித்தது. ப.செ.வின் அடிமைகள் கட்சி மாற ரெடியானர்கள்.
லூசுநாராயணன் ஒரு புளிய மரத்தின் பின் மறைந்து கலவரத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். யார் கமல் யார் ரஜினி கட்சி என்று பீதியோடு குழம்பிக்கொண்டிருந்தான்.
டேய்.. வைஜெயந்தி வராடா...!சொன்னான் “லூசுநாராயணன்.மின்னல் வேகத்தில் பிடிகளைத் தளர்த்தினோம். சட்டை பேண்டுகளை சரி செய்தோம்.மண் துகள்களை தட்டிக்கொண்டோம். நிறுத்திடலாம்..அப்புறம் பாத்துக்கலாம் .சொன்னேன்.
கரக்ட்ராமகிழ்ச்சியாக பன்னீர் செல்வம் ஒப்புக்கொண்டான். எல்லோரும் சேர்ந்துக்கொண்டார்கள்.
வைஜெயந்திக்கு மதிப்புக்கொடுத்து உலகப் போரை பாதியில் நிறுத்தும்அளவுக்கு எங்களை வசீகரித்திருந்தாள்.
சனிக்கிழமையானதால் அன் யூனிபார்மில் ரொம்ப சூட்டிகையாக இருந்தாள். சிறு கொத்தாக எடுத்த முடியை சின்னதாக பின்னி நெற்றிக்கு இரு பக்கமும் கொண்டுப்போய் சேர்த்த பக்கப்படிய வாரிய அடர்த்தியான ஒற்றைப் பின்னல். நெற்றியில் சின்ன விபூதி கீற்று. நீண்ட புருவங்கள். தீர்க்கமான நாசி.சொப்பு வாய். செதுக்கினார் போல் கழுத்து.பிஞ்சு மார்பகங்கள். கச்சிதமாக தைக்கப்பட்டு பொருந்தியிருந்த ஸ்கர்ட். பூனை முடி சுழன்ற வாழைத்தண்டு கால்கள். அதற்கு மேல் ஒரு ஸ்டைல் ஷர்ட். நடையில் ஒரு நளினம்.
ஏதோ ஒரு கிளாஸ் டெஸ்ட் பாடத்தை மனப்பாடம் செய்தவாறு நடந்து போய்க்கொண்டிருந்தாள்.
அவள் பேசும் ஆங்கிலம் ஒரு மாதிரி கல கலவென்று இருக்கும்.அவள்உச்சிரிப்புக்கு ஏற்றாற் போல் தலையை ஆட்டி வைதத கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்போம். இன்னும் பிடித்துப்போயிற்று.
ஜாதி கோட்டாவில் அவளை கவர்ந்து விடலாம் என்ற பத்ம வாசன்தான் முதலில் அவளுக்காக உருகி பின்னால் பணக்காரி” (பேசும் ஆங்கிலத்தை பார்த்து) என்று எண்ணி முதன் முதலில் ஒரு தலை காதலில் தோல்விஅடைந்து கைவிட்டான்...
அவள் உருவம் மறைய தொடங்க.......
நான் ப.செல்வத்தை கிழே தள்ளிண்டை மீண்டும் தொடங்கியது. இதுவைஜெயந்தி யாரு ஆள், என்ற சண்டை.
வைஜெயந்தி யாரு ஆள்என்ற யுத்த வளையத்தில் நானும் பன்னீர் செல்வமும்தான். மற்றவர்கள் காணாமல் போனார்கள்.
ஒரு வாரம் கழிந்த ஒரு நாள். ஆனால் அன்று எனக்கு கெட்ட நாள்.
வைஜெயந்தி வாங்கியிருந்த புது சைக்கிள் பின்னல் ஒடி வெரி நைஸ் என்று சொல்லி அவளை குஷி படுத்த (cheer leader?)முயல, என் கால் ஸ்போக்ஸில் நுழைந்து, சைக்கிள் ஒரு மாதிரி கச்சக்என்று சத்தம் வந்து பேலன்ஸ் தடுமாறி சைக்கிள் நொடித்து கிழே விழுந்தாள். விழுந்த வேகத்தில்,ஸ்கர்ட் தொடை வரை ஏறி, அவமானத்தில் முகம் சிவந்தாள்.
போடா... இடியட் ....பிக் .. துண்டு பீடி..பிஞ்ச செருப்பு...” மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல் சரமாரியாக வந்தது.பன்னீர் செல்வம் எங்கிருந்தோ ஒடி வந்து அவளை சரி செய்து, சைக்கிளையும் சரி செய்து அவளை உட்கார வைத்து,மேலே சாய்ந்தவாறு பத்திரமாக கொஞ்ச தூரம் தள்ளி கொண்டு கூடவே ஒடி அவளுக்கு பேலன்ஸ் செய்து கொடுத்தான். அவள் மெனி மெனி தாங்க்ஸ்என்று என்னை பார்ததவாறு தூதுப்பினாள்.
பன்னீர் செல்வம் சட்டையின் கைகளை மடித்தவாறு முறைத்தான்.
அவமானத்தில் தொள தொளத்து போய் கண்களில் நீர் முட்டியது. பீட்டரும் லூசுநாராயணனும்  ”டேக் இட் ஈசிடா உமா ஷங்கர் என்றார்கள்..நாளாக நாளாக என்னை விளம்பரத்தில் அலட்சியமாக தூக்கியெறியப்படும் படுசாதாரண அழுக்கு சோப் போலவும், பன்னீர் செல்வத்தை மின்னலடிக்கும் பார் சோப் போல நடத்தி பேசுவதேயில்லை.
இந்த world அழியும் வரையும் பேச மாட்டாயா?’ என்று லூசுநாராயணன் கடைசியாக கட்டன் ரைட்டாக கேட்கச் சொன்னான். அதையும் கேட்டேன். எப்படியாவது அவளை வென்று விட வேண்டும் என்று.
அழகுகாட்டி ஸ்டுப்பிட்என்றாள்.
அவமானத்தில் முகம் சுருங்கி அசட்டுத்தனமாக அவளைப் பார்த்துச்சிரித்தேன் லூசுநாராயணன் காணவில்லை.
தினமும் கனவில் வந்து ““அழகுகாட்டி ஸ்டுப்பிட்என்றாள். வேர்த்து நடு இரவில் எழுந்துக் கொள்வேன். அவள் முகத்தை மறக்க முடியவில்லை.இரண்டு நாள் கழித்து “லூசுநாராயணன் வேறு ஒரு ஐடியா கொடுத்தான். பைசாவில் டாஸ்(toss) போட்டுப் பார்த்து வைஜெயந்தியை யார் எடுத்துக் கொள்வது என்று ஒரு மகாபாரத சூதாட்ட ஐடியாவைச் சொன்னான். கடவுள் பல சோதனைகள் வைத்து கடைசியில்தான் வேண்டியது கொடுப்பார் என்று நம்பினேன்.

பன்னீர் செல்வம் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. இதில் எதோ சூது இருக்கிறது என்று. ஒரு வாரம் வெறுப்பேற்றினான். மான அவமானங்களை விட்டு, இதுதான் லாஸ்ட்டுக்கு லாஸ்ட் என்று சொல்லி  கெஞ்சி கூத்தாடி ஒப்புக்கொள்ள வைத்தேன்.
வைஜெயந்தி வரும் போது 90 டிகிரியில் அவளைப் பார்த்தபடி நின்று டாஸ் போட்டு விட்டுலூசுநாராயணன் பீதி பிடித்து தலைத் தெறிக்க ஒடி மறைந்தான். ”head" விழுந்து பன்னீர் செல்வம் வைஜெயந்தியை எடுத்துக்கொண்டுவிட்டான். லாஸ்ட்டுக்கு லாஸ்டாக
சுக்கல் சுக்கலாக உடைந்து போனேன். ஒரு சின்ன சுக்கல் கூட வைஜெயந்தி கண்ணுக்குப்படாமல், ஏதோ மனப்பாடம் செய்தபடி, ஒரு மண்ணும் தெரியாமல் போய்க்கொண்டிருந்தாள்.
அடுத்த பல மாதங்கள் வாழ்கையில் எல்லாமே கசந்து வழிந்து ஏதோ ஸ்கூல் வருவதும் போவதுமாக இருந்தேன். தாடி கூட வளர்க்க முடியாத பருவம்.
பன்னீர் செல்வம் வாழ்கையில் தினம் தினம் வித வித பூக்கள் பூத்து வசந்த ருதுதான்.
லூசுநாராயணன் ஏதாவது மந்திரம் போட்டு சூனியம் வைக்கலாமா என்று கேட்டபோது மறுத்து விட்டேன்.
வருடங்கள் கடந்து பள்ளி முடிந்து பல பேர் பல திசைகளில் சிதறினோம் .
பன்னீர் செல்வம் கல்லூரியிலும் வைஜெயந்தியை தொடர்வதாக கேள்விப்பட்டேன்.
கல்லூரி படிப்பில் புது நண்பர்கள் வந்து சேர்ந்து அவர்களும் வேலையில் சேரும்போது காணாமல் போனார்கள். திருமணத்தில் சக அலுவலக நண்பர்கள் வந்து வாழ்த்து தெரிவித்துவிட்டு போனார்கள். வைஜயந்தி மட்டும் நினைவில் எங்கோ மூலையில் "அழகு" காட்டிக்கொண்டு இருக்கத்தான் செய்தாள். 
ஒரு நாள் ஒரு ஷாப்பிங் மால் லிப்ட் டில் . நானும் என் எட்டு வயது மகள் சந்தியாவுடன் உள்ளே நுழைய ..........வைஜயந்தி . மைசூர் சில்க் புடவையில் . சற்று பூசினாற் போல்.
"என்ன தெரிகிறதா ?" வைஜயந்தி 
"உன்ன மறக்க முடியுமா?"
"என் ஹஸ்பெண்டு கீழ வெயிட் பண்றாங்க”
லிஃப்ட் கிழே இறங்கியது. பார்த்தேன்.
“ஹஸ்பெண்டு” யாரு? நம்ம லூசு நாராயணன்தான். பழைய சுக்கல் சுக்கலாக உடைந்தது ஞாபகம் வந்தது.செளக்கியமா என்று கேட்டு விட்டு கழட்டிக்கொண்டான்.அவளும் எதுவும் பேசாமல் பின் தொடர்ந்தாள்.அதே graceful walk.
லூசு என்று அவள் முன் கூப்பிட்டுவிடுவேன் என்ற பயமா? மறுபடியும் "toss" போடுவேன் என்ற பயமா? இவளை “toss" எதுவும் போடாமல் எடுத்துக்கொண்டு விட்டானே. ஏன்? ஏதற்கு?எப்படி? திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுகிறதா?
தாங்கமுடியவில்லை.
”அப்பா ...வைஜெயந்தி ஆண்டி ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க” சிலிர்த்துக்கொண்டே சொன்னாள்.
இதையும் தாங்கமுடியவில்லை.
முற்றும்

14 comments:

  1. நல்லா இருக்குங்க.. :)
    கொஞ்சமும் சலிப்பூட்டாத நடை..

    தவறாக நினைக்க வேண்டாம், சில இடங்களில் சுஜாதா சாயல்..

    இன்னமும் உங்கள் வாரணம் ஆயிரம் படிக்கல.. :o) கூடிய சீக்கிரம் படிச்சிடறேன்..

    ReplyDelete
  2. /////வைஜெயந்திக்கு மதிப்புக்கொடுத்து உலகப் போரை பாதியில் நிறுத்தும்அளவுக்கு எங்களை வசீகரித்திருந்தாள்.////


    /////”அப்பா ...வைஜெயந்தி ஆண்டி ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க” சிலிர்த்துக்கொண்டே சொன்னாள்.
    இதையும் தாங்கமுடியவில்லை./////

    இரண்டு இடங்களும் சூப்பராக உள்ளது.
    ஜாமாயுங்கள்!

    ReplyDelete
  3. நன்றி,

    SP.VR. SUBBIAH சார்,

    Bee'morgan,

    நன்றி,
    தெரிந்து செய்யவில்லை.தற்செயலாக இருக்கலாம்.திருத்திக் கொள்கிறேன்.

    //தவறாக நினைக்க வேண்டாம்//

    எதுக்கு நினைக்கனும். உண்மையான
    விமர்சனங்கள்தான் என்னை சீர்படுத்தும்.

    "me first" என்று “கண்ணா மூச்சி ரே..ரே..“தாட்சியை” தொட்டு விட்டு விமர்சனங்கள் சீர்படுத்தாது.
    உள்ளதை உள்ளபடியே சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. நல்ல எதார்த்தமான கதை..

    ஒரு சிறுகதைக்குள்ளே ஒரு வாழ்க்கைக் கதையைச் சொல்லிவிட்டீர்கள்..

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா இருந்தது.
    :)

    ReplyDelete
  6. அன்புள்ள கார்த்திக்,

    என் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  7. ரவிசார்...
    கதை நடை அருமை.
    //லூசு” என்று அவள் முன் கூப்பிட்டுவிடுவேன் என்ற பயமா? மறுபடியும் "toss" போடுவேன் என்ற பயமா? இவளை “toss" எதுவும் போடாமல் எடுத்துக்கொண்டு விட்டானே. ஏன்? ஏதற்கு?எப்படி? திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுகிறதா?தாங்கமுடியவில்லை.”அப்பா ...வைஜெயந்தி ஆண்டி ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க” சிலிர்த்துக்கொண்டே சொன்னாள்.//
    நல்ல களைமேக்ஸ்..(உங்கள் வருத்தம் தெரிந்தாலும்...)
    நல்ல வேளை நான் சுஜாதா அதிகம் படிக்கவில்லை....
    பால்ய நினைவுகளையும், பழைய படங்களையும் கிளறிச் சென்றது கதை.
    கதையில் ஒரே ஒரு குறை... அது இறுதியில் போட்ட 'முற்றும்' ... உண்மையிலேயே அது 'முற்றும்' தானா...?

    ReplyDelete
  8. உங்களுக்கு எழுத்து மிக இயல்பாக வருகிறது. ஆனால் கதையில் வரும் நிகழ்வு ரொம்பவும் பெரிதாக இருக்கிறது. ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்லி அதிலிருந்து மாறுபட்ட ஒரு கோணத்திற்கு கதையை நகர்த்துங்கள். பளிச் சென்று முடிய வேண்டும். பள்ளி வாழ்க்கை ப்ளாஷ் பேக் என்றால் தற்கால செய்தி அதிலிருந்து பூத்த ஒற்றை பூவாக இருந்தால் நல்லது.

    லூசு நாராயணன் தான் தன் முன்னாள் காதலியின் கனவன் என்பதை ஒற்றை வரியில் முடித்திருந்தால் சுவாரஸ்யம் கூடும்.

    மெலட்டூர் இரா நடராஜன்

    ReplyDelete
  9. மெலட்டூர் இரா.நடராஜன்,

    என் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற formulaவை பின் பற்றியுள்ளேன். தொடுப்பில் உள்ள முடிச்சு/முரண்பாடு
    முடிப்பில் சரியாக அவிழ்கிறது என்று
    நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. ரவி.. லூசு வைஜெய்ந்தியின் கணவன் என்கிற போதே கதை முடிந்துவிட்டது. இன்னம் கொஞ்சம் நடையில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் எனபது என் தாழ்மையான அபிப்ராயம்

    ReplyDelete
  11. //கழித்து “லூசு” நாராயணன் வேறு ஒரு ஐடியா கொடுத்தான். பைசாவில் டாஸ்(toss) போட்டுப் பார்த்து வைஜெயந்தியை யார் எடுத்துக் கொள்வது என்று ஒரு மகாபாரத சூதாட்ட ஐடியாவைச் சொன்னான். //
    //“லூசு” என்று அவள் முன் கூப்பிட்டுவிடுவேன் என்ற பயமா? மறுபடியும் "toss" போடுவேன் என்ற பயமா? //

    மகாபாரத touch இருக்கும் போல் லூசு நாராயணன் இருக்கும் போல ;).. கொஞ்சம் நேடும் தொடர். இரண்டு பகுதியாக எழுதி இருக்கலாம். மற்றபடி உங்களுக்கு ஆலோசனை கூற எனக்கு அனுபவம் இல்லை. :)

    ReplyDelete
  12. நன்றி சந்துரு. என்னை மதித்து என் வலைக்கு வந்து கருத்துச் சொன்னதற்கு.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!