Sunday, May 23, 2010

என்னைக் கடந்து போகும் பிணங்கள்

 

நான் நுழையும் போதெல்லாம்
ஏதாவது ஒரு பிணம்
என்னைக் கடந்து விடுகிறது
லயோலா காலேஜ் சுரங்கப்பாதையில்

டொக்கு விழுந்த கிழட்டுப் பிணங்கள்
சொர்க்கமா நரகமா வாய் பிளந்து
மோட்டு வளையைப் பார்த்தபடி
வாய்க்கரிசியை விரயம் செய்தபடி

ரொம்ப அபூவர்மாக கடக்கும்
டீன் ஏஜ் பெண் பிணங்கள்

முக அழகைப் பார்ப்பதுண்டு
சைட் அடிக்க ஆசை
அடிப்பதில்லை
பயம்தான்  காரணம்

பித்ருக்களுக்கு ஏதாவது செய்தி உண்டா
கேட்கும்  சில பிணங்கள்

உலகமே தெரியாமல்
பூமஞ்சத்தில் தூங்கும் பிணங்கள்

போவோர் வருவோரை நாட்டாமைப் போல்
உட்கார்ந்தப்படியே பார்க்கும்
பிணங்கள்

சில பிணங்கள் மூக்குக் கண்ணாடியைக் கூட
அவிழ்ப்பதில்லை
அப்படியே கிளம்பிவிடுகிறது

செல்லில் பாட்டுக் கேட்டுக்கொண்டே
இப்படி பிணங்களை ரசிக்கையில்

ஒரு நாள் ஒரு மிடில் ஏஜட் பிணம்
 செம்மையாக முறைத்தது
முகம் சிவந்துவிட்டது

அன்றையிலிருந்து
ஹாரன் அடிப்பதில்லை
பூக்களைக் கூட மிதிக்காமல் ஓட்டுகிறேன்
பிணங்களைப் பார்த்தால்
stand at ease லிருந்து attentionக்கு
வந்துவிடுகிறேன்
புத்திப்போட்டுக்கொள்கிறேன்
”உச்சு”கொட்டுகிறேன்
ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
இதுதான் லாஸ்ட் என்கிறேன்

இனிமே யாருமே  சாகக் கூடாது

13 comments:

  1. வாவ்......

    தலைவரே....எ.கொ.சா.இது.

    ReplyDelete
  2. சென்னையில் பிணங்களின் ஊர்வலம் ....

    மனதில் இனம் புரியா கவலைகளை விதைத்து செல்லும் ...

    ReplyDelete
  3. Blogger கும்க்கி said...

    //வாவ்......//

    நல்லா இருக்கா?

    // தலைவரே....எ.கொ.சா.இது.//

    நல்லா இல்லையா?

    ReplyDelete
  4. Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

    // சென்னையில் பிணங்களின் ஊர்வலம் ....

    மனதில் இனம் புரியா கவலைகளை விதைத்து செல்லும் ...//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. அன்றையிலிருந்து
    ஹாரன் அடிப்பதில்லை
    பூக்களைக் கூட மிதிக்காமல் ஓட்டுகிறேன்

    ReplyDelete
  6. நல்ல கவிதைங்க. :)

    ReplyDelete
  7. நன்றி மால்குடி

    ReplyDelete
  8. நன்றி விதூஷ்

    ReplyDelete
  9. May 24, 2010 12:09 PM
    Blogger ஸ்ரீ said...

    // Good.super.//

    நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  10. நல்லா இருந்ததுங்க :)

    ReplyDelete
  11. Blogger TKB காந்தி said...

    // நல்லா இருந்ததுங்க :)//

    ரொம்ப நன்றி.

    ReplyDelete
  12. kalaakkal...agmaark ungka brand kavithai ithu... rasithaensir...

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!