Tuesday, November 9, 2010

குடைக்குள்ளும் வெளியிலும் சில கவிதைகள்


சில குடைகள்
மழைக்குப் பிடிக்கப்படாமலேயே
பார்மசிகளிலும்
ஊத்துகுளி வெண்ணைக் கடைகளிலும்
காபிப்பொடி கடைகளிலும்
பட்டாணி கடைகளிலும்
சாத்திவைத்தபடி
மறதியில் தொலைந்துவிடுகிறது
____________________________________

மழை பெய்யும் இரவுகளில்
யாருக்கோ எப்பொழுதோ
கொடுக்க இருந்த 
காதல் கடிதங்கள் 
நனைந்துவிடுகிறது
பிழிந்துவிட்டு மீண்டும்
எல்லாவற்றையும் எழுதுகிறேன்
____________________________________

இப்போதெல்லாம்
எந்த பூகோள டீச்சரும்
வெய்யிலுக்கு குடை
பிடித்தப்படி பள்ளிக்கு
வருவதே இல்லை
____________________________________

குடையைப்
பிரிப்பதற்கு முன்
சட்டென மழைப் பெய்துவிட
வேண்டாம்
நனைந்த பிறகு
விரித்த குடையின்
தெறிக்க போகும் சாரலில்
இருக்கும் கவிதையை
ரசிக்க முடிவதில்லை
____________________________________






பாட்டிகளுக்குக்
குடையே கிடையாது
எல்லாம் தாத்தா குடைகள்தான்












e

18 comments:

  1. எல்லா குடை கவிதைகளும் அட! போட சொல்கின்றன .ரசித்து வாசித்தேன்

    ReplyDelete
  2. நன்றி பத்மா.

    ReplyDelete
  3. டீச்சர் கவிதை சூப்பர்.

    ReplyDelete
  4. //பாட்டிகளுக்குக்
    குடையே கிடையாது
    எல்லாம் தாத்தா குடைகள்தான்//

    ஆணாதிக்கமோ!

    ReplyDelete
  5. நன்றி அன்பரசன்.

    ReplyDelete
  6. வாங்க அருண் பிரசாத்.முதல் வருகை?

    அருண் பிரசாத் said...

    //ஆணாதிக்கமோ!//

    இது கொடையின் தோற்றத்தைக் குறித்துதான் “தாத்தா கொடை” என்றுச் சொல்லப்படுகிறது.

    நன்றி.

    ReplyDelete
  7. பாட்டிகளுக்குக்
    குடையே கிடையாது
    எல்லாம் தாத்தா குடைகள்தான்

    ......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... எப்படி இப்படி?

    ReplyDelete
  8. சூப்பர் சார்... ரொம்பநாள் கழிச்சு கவிதைகள் எல்லாமே கொள்ளை அழகு.... ரசித்தேன்...

    ReplyDelete
  9. கடைசி கவிதை அருமை

    ReplyDelete
  10. குடை கவிதைகள் சூப்பர் !

    ReplyDelete
  11. நன்றி சித்ரா

    ReplyDelete
  12. தமிழ்ப்பறவை said...

    //சூப்பர் சார்... ரொம்பநாள் கழிச்சு கவிதைகள் எல்லாமே கொள்ளை அழகு.... ரசித்தேன்...//

    சந்தோஷம்.ஒன்றும் ஓடாமல் ஏதோ யோசித்து மழைக் கவிதைகள் வந்தது. நன்றி

    ReplyDelete
  13. லதாமகன் said...

    //கடைசி கவிதை அருமை//

    நன்றி

    ReplyDelete
  14. இராமசாமி கண்ணண் said...

    //குடை கவிதைகள் சூப்பர் !//

    நன்றி இராமசாமி கண்ணன்.

    ReplyDelete
  15. //பாட்டிகளுக்குக்
    குடையே கிடையாது
    எல்லாம் தாத்தா குடைகள்தான்
    //

    தாத்தா குடை அருமை.

    கவிதைகள் சூப்பர் !

    ReplyDelete
  16. நன்றி சே.குமார்

    ReplyDelete
  17. //விரித்த குடையின்
    தெறிக்க போகும் சாரலில்
    இருக்கும் கவிதையை
    ரசிக்க முடிவதில்லை//

    அருமை அருமை... வாழ்த்துக்கள் நண்பரே..
    --
    அன்புடன்
    கவிநா...

    ReplyDelete
  18. நன்றி கவிநா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!