Monday, January 11, 2010

ஒரு மூனு பேரு - கிராமத்துக் கதை

ஒரு மூனு பேரு. அந்த மூனு பேருல ஒருத்தனுக்கு கை எல்லாம் சிறங்கு. ஒருத்தனுக்கு ஊள மூக்கு. ஒருத்தனுக்கு பூள தள்ளி கண்ணு. மூனு பேரும் ஒரு போட்டி போடுறாங்க.நாம ஒரு பத்து நிமிசமாவது எதும் செய்யாம இருக்கணுமுன்னு சொல்லவுமெ போட்டி ஆரம்பமாயிருச்சு.


சிறங்கு வத்திக்காரன் கைய சொறியக் கூடாது. ஊள முக்குக்காரன் மூக்கச் சீந்தக் கூடாது. பூளதள்ளி கண்ணுல ஒட்டுற கொசுவ அவன் பத்தக்கூடாது. இதுதான் போட்டி.மூனு பேரும் போட்டி பத்து நிமிசங்கறதால ஊள முக்குக்காரனுக்கு வாய் வர மூக்கு வடிஞ்சிருச்சு. பூள தள்ளிகாரனுக்கு கண்ணெல்லாம் கொசுவா அப்புது. சிறங்குக்காரனுக்கு கையெல்லாம் நமநமன்னு அரிக்குது. அப்ப மூனு பேரும் யோசன பண்றாங்க.

அதுல சிறங்குவத்திக்காரன்  சொல்றான் எங்க வீட்ல எங்க ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் இப்படித்தான் சண்டை வரும்.இப்படித்தான் சண்டை வரும்னு சொல்லி கைய பிணஞ்சு காட்டி அரிப்ப தீத்துக்கிட்டான்.

ஊள முக்குக்காரன் யோசன பண்ணி எங்க அப்பா வீட்ல ஒரு செம்மறிக்கடா வளத்துகிட்டு இருக்கு. அந்த கிடாவுக்கு இங்கிட்டாம ஒரு கொம்பு.இங்கிட்டாம ஒரு கொம்புன்னு சொல்லி ரெண்டு கையயும் வச்சு ரெண்டு புறத்துலயும் ஒரு இழு இழுத்து மூக்கத் துடச்சுக்கிட்டானாம்.

 பூள தள்ளகாரன் சொன்னானாம்  இப்படி ரெண்டு கையால முகத்துக்கு நேர அடிச்சு அம்புட்டும் பொய்.அம்புட்டும் பொய்யின்னு சொல்ற மாதிரி சொல்லி கொசுவ பத்திட்டானாம்.


நன்றி: கிராமத்துக் கதைகள் - முனைவர் ந.சந்திரன்.

படிக்க:ராஜிவ் கொலை வழக்கு - புத்தகம்

11 comments:

  1. என்ன கொடுமைங்க இது

    ReplyDelete
  2. நன்றி சின்ன அம்மிணி.

    ReplyDelete
  3. எல்லா கதையும் இப்படிதான் இருக்குமா? கப்படிக்குதே!!

    ReplyDelete
  4. லேபிள்ல 'உவ்வே கதை விமர்சனம்' அப்படீன்னு போடுங்க :( ஏங்க இப்படி.. எழுத விஷயமா இல்லை... :(

    ReplyDelete
  5. வோட்டு போட மாட்டேன் போங்க...

    ReplyDelete
  6. கலையரசன் said...

    //எல்லா கதையும் இப்படிதான் இருக்குமா? கப்படிக்குதே!!//

    நல்ல கதை எடுத்துப்போடாமல் தவறு செய்துவிட்டேனோ? சில அற்புதமான கதைகள் இருக்குங்க.

    போட்டுட்டு கூப்பிடுறேன்.

    நன்றி.

    காமெடி என்னென்னா நான் ரெண்டு புத்தகம் விமர்சனம் செய்தேன்.
    1.ராஜிவ் காந்தி கொலை வழக்கு 2.கி.வா.ஜா பதில்கள்.

    அதைப் படிக்காம விட்டுட்டிங்களோ?

    ReplyDelete
  7. Vidhoosh said...

    //லேபிள்ல 'உவ்வே கதை விமர்சனம்' அப்படீன்னு போடுங்க //

    அப்படிப் போட்ட வேற மாதிரி ஆகிவிடும்.

    //( ஏங்க இப்படி.. எழுத விஷயமா இல்லை... :(//

    இருக்குங்க. படிங்க. கருத்துச்சொல்லுங்க.

    1.ராஜிவ் காந்தி கொலை வழக்கு 2.கி.வா.ஜா பதில்கள்.


    நன்றி.

    ReplyDelete
  8. Vidhoosh said...

    //வோட்டு போட மாட்டேன் போங்க...//

    ஓகோ! அப்படி ஒன்னு இருக்கா?

    ReplyDelete
  9. உவ்வே...நல்ல கதைகளை எடுத்துப் போடவும் சார்...

    ReplyDelete
  10. நனறி தமிழப்பறவை

    ReplyDelete
  11. ///
    இருக்குங்க. படிங்க. கருத்துச்சொல்லுங்க.

    1.ராஜிவ் காந்தி கொலை வழக்கு 2.கி.வா.ஜா பதில்கள்.


    நன்றி.///

    :)) ஐயா.. ரீடரில் படிக்கிறதுனால சில நேரம் மிச்சாகிடுது.. :(

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!