Monday, January 11, 2010

பெற்றோர் - ஆசிரியர் --பின்னூட்டம்

பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு என்னும் சம்பிரதாயம். இது வருடத்திற்கு இரண்டு முறையோ நான்கு முறையோ பள்ளியில் படிக்கும் தம் குழந்தைகளின் ”எப்படி படித்துக் கிழிக்கிறார்கள்” பற்றிய பின்னூட்டத்தை(feed back) நேரடியாக ஆசிரியர்களிடம் பெறுவதுதான்.பெற்றுக்கொண்டு சீர்படுத்துவது.இங்கு அனானி பின்னூட்டம் இல்லை.பிள்ளைகளின் ”ஓபன் சீக்ரெட்”

இது எவ்வளவு பள்ளிகளில் இருக்கிறது என்பது தெரியாது.

இதில் “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை _________ “எனக்கேட்க அம்மாவும் “ மகன் தந்தைக்கு _____________இவன் தந்தை  என்னோற்றன் கொல்லொனுஞ் சொல்”லை கேட்க அப்பாவும் வருவதுண்டு. கடந்த நான்கு வருடங்களாக நிறைய அப்பாக்கள் தென்படுகிறார்கள்.

என் வீட்டில் மாறிமாறிப் போவதுண்டு.நான் போவதற்கு முன் எனக்கும் ஒரு கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடக்கும்.அங்கு போய் இதைப் பற்றி பதிவுப் போடுவதற்கு மண்டையில் யோசித்துக்கொண்டிருக்காமல் ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை கவனமாக காதில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்பதாக."படிப்பு முக்கியம்...பதிவு அல்ல.understand?" "Yes.... mam!"
 
புத்தகத்திருவிழாவில் ஸ்டால் ஸ்டாலாகப் போவது போல் இங்கு வகுப்பு வகுப்பாகப்  போக வேண்டும்.முக்கால்வாசி கவலைத் தோய்ந்த முகங்களைப் பார்த்தாலும் இங்கு நடக்கும்  இந்த சந்திப்புகள் பார்த்தால்  நன்றாக பொழுதுபோகும்.

ஆசிரியரைக் கும்பலாக சூழ்ந்துக்கொண்டு மற்ற குழந்தைகளின் மார்க்கை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அவர்களின் “ஓபன் சீக்ரெட்டை”காதில் கேட்டுக்கொண்டுதான் நடக்கும்.அடுத்து அழுவது.ஒரு முறை ஒரு மாணவனின் தாயார் (விசும்பி விசும்பி) அழுதைப் பார்த்தேன்.(இது கண்டிப்பாகத்  தவிர்க்க வேண்டிய செயல்.)பிறகு மாணவ/வியின் காதைத் திருகி அங்கேயே கண்டிப்பது.அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் குழந்தைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது.
  
ஒரு ஆசிரியர் ஒரு நாளில் கிட்டத்தட்ட 200 பெற்றோர்களைச் சந்தித்து பின்னூட்டம் கொடுக்கிறார்.பரிதாபம்.முப்பது அல்லது நாப்பதாவது பின்னூட்டத்திலேயே சலிப்பு வந்து ரோபோவாகி “டெம்பிளேட் பின்னூட்டம்” ஆகிவிடுகிறது. ”நிறைய பிராக்டீஸ் பண்ணனும்” “கான்செப்ட்ட தெரிஞ்சிகிடனும்””சில்லி மிஸ்டேக்ஸ்””வாய்விட்டு படிக்கணும்” “She/He can still do better"”lacking concentration".
 
( Lacking concentration எனும்போது இப்போது இருக்கும் தலைமுறைக்கு கவனக்கலைப்புகள் அதிகம்.இதிலிருந்து மீண்டு படிப்பில் பாடம் செலுத்துவது இமாலய சாதனை.)இது பெற்றோர்களுக்கும் ஒரு சவால்.இதில் பல பெற்றோர்கள் சலித்துப்போய் அலுத்து நொந்து விடுகிறார்கள்.

இங்கும் ஒரு பக்கப் பார்வைதான்(one sided view) பார்க்கப்படுகிறது.அதாவது ஆசிரியர்களிடம் குற்றமே இல்லாத மாதிரியும் மாணவ/விகள்தான் முழு பொறுப்பு என்பதாக.பெற்றோர் மற்றும் குழந்தைகளிடமும்  பதிலுக்கு உண்மையான “டெம்பிளேட் பின்னூட்டங்கள்”தொண்டையில் உண்டு.ஆனால் சொல்வதில்லை. அவை” போர்ஷ்ன்களை மின்னல் வேகத்தில் நடத்திக்கொண்டுப் போவது” “பாடத்தை எழுதுவதற்குள் அழித்துவிடுவது””எப்படி இருந்தாலும் மாணவ/விகள் டுயூஷன் வைத்துவிடுவதால் மேலோட்டமாக சொல்லிக்கொடுப்பது”” மார்க் குறைந்தாலும் பணம் இருப்பதால் இன்ஜினியரிங் கல்லூரி சேர்த்துவிடலாம்”

வகுப்பில் ஆசிரியர்களின் கண்டிப்பில் வீரியம்  குறைவாகத்தான் இருக்கிறது.காரணம் மாணவ/விகள் தற்கொலை.மனித உரிமைக் கழகம்.ஏதாவது நடந்தால் ரெடியாகக் காத்திருக்கும் புலானய்வு ஊடகங்கள்.

நான பார்க்கும்  உலக மகா அபத்தம் கம் குற்றம்  ஒரு வகுப்புக்கு 65 மாணவ/விகள் மேல் இருப்பது.இருக்க வேண்டியது 30.எவ்வளவு சொல்லியும் இந்த டெம்பிளேட் பின்னூட்டத்தை யாரும் காதில் போட்டுக்கொள்வதில்லை.

குறைவாக மதிப்பெண் பெறும் மாணவ/மாணவிகளின் பெற்றோர்களுக்கு எங்கு தவறு என்று நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது.தெரியவில்லை என்றால் முட்டாள் பெற்றோர் என்றுதான் சொல்வேன்.

சில படித்தப் பெற்றோர்கள் டுயூஷன் வைக்காமல் சொல்லிக்கொடுக்கிறார்கள்.ஆனால் இதற்கு.எல்லையில்லா பொறுமையும் எனர்ஜியும் வேண்டும்.அதுவும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கும் வீடு? அம்மாடியோவ்!


பெரும்பாலும் கணக்குப்பாடத்தில் சறுக்குவது சகஜம்.காரணம் இதில் கதை விட முடியாது. அடிப்படைத் தெரியவேண்டும்.கவனம் குறைந்தால் காலிதான்.

அடுத்து ஆங்கிலம்.இலக்கணம் மிக முக்கியமானது.ஆசிரியர்/மாணவர் இரண்டுமே இங்கு சொதப்பல். மூன்றாம் நான்காம் வகுப்பிலேயே அடித்தளம் பலமாக போட வேண்டும்.இல்லாவிட்டால் காலி.தமிழ்(2nd language) இங்கும் சொதப்பல்.காரணம் மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பதால்.இதை இரு தரப்பும் அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை.காரணம் இது சோறுப் போடப்
போவதில்லை என்பதால்.பிளாக் எழுத உதவும்(????).

என் மகன் 2nd language தமிழ்தான். ”ஐனூத்தி என்பத்தி நாலு ரூபாய்” என்பதை மார்வாடி போல் தட்டுத்தடுமாறி உச்சரிப்பான்.


இந்த சந்திப்பில் வெளி வரும் விஷயங்கள்:

  • பாடத்தின் அடைப்படையை மண்டையில் ஏற்றுதல்
  • மாணவ/விகளின் சோம்பேறித்தனம்
  • கணக்கில் பயிற்சி நிறைய செய்யவேண்டும்.அசுர சாதகம்.போட போட கணக்கு, பாடபாட பாட்டு.....
  • அடித்தளம் பலமாக இருக்கவேண்டும்.இது ஆரம்ப நிலையிலேயே
  • பொறுமையின்மை(பெற்றோர்/குழந்தைகள்)
  • கவனக்கலைப்புகளை கண்டறிதல்
  • டீச்சர்களுக்கும் கவனக்கலைப்புகள்
  • பாடச் சுமை
  • வாய்விட்டுப் படித்தல்
  • தனி கவனம் இல்லாமை
  • கூலிக்கு மாரடைப்பது

கவனக்கலைப்பு: டிவி,ரேடியோ,டிவிடி,நண்பர்கள்,வீட்டு உறுப்பினர்கள்,ஷாப்பிங்,குர்குரே இத்யாதிகள்

12 comments:

  1. கல்வி வெறும் வியாபாரந்தான் இப்போது.அனுபவம் இல்லாத அல்லது குறைந்த ஆசிரியர்களுக்கே முன்னுரிமை.ஏனென்றால் அவர்களுக்குத்தான் சம்பளம் குறைவு.படித்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை என்பது மற்றொரு கொடுமை. பள்ளியில் கொடுக்கும் சம்பளம் அரிசி பருப்பு வாங்க மட்டும்தான் போதுமானது.எனவே எல்லா ஆசிரியர்களும் டியூஷனில்தான் சம்பாதிக்கிறார்கள்.இது இன்னுமொரு கொடுமை.சில இடங்களில்தான் இப்படி.அரசுப் பள்ளிகள் நல்ல தரத்துடன்தான் இருக்கிறது.

    ReplyDelete
  2. //கல்வி வெறும் வியாபாரந்தான் //

    முற்றும் சரியே.

    ReplyDelete
  3. அடடா, வட போச்சே.. நானும் எழுத நினைச்சது.

    நல்லா எழுதியிருக்கீங்க. இங்கயும் (அபுதாபியில) இதே கதைதான். ஆனா ஒரு நல்ல விஷயம், ஒரு வகுப்புக்கு 30-35 மாணவர்கள்தான்.

    நான் திருநெல்வேலியில (எண்பதுகளில்) படிக்கும்போது, பள்ளியில் ஒரு வகுப்புக்கு 90 மாணவர்கள் வரை உண்டு. அதுவும் ஆங்கில மீடியம் ஒரே ஒரு பிரிவுதான் அனுமதி என்பதால், தந்திரமாக A-செக்‌ஷன் & A1 செக்‌ஷன் என்று வைத்திருந்தார்கள்!!

    ReplyDelete
  4. ஹுஸைனம்மா said...

    // அடடா, வட போச்சே.. நானும் எழுத நினைச்சது.//

    உங்க அனுபவத்த எழுதுங்க.

    //ன் திருநெல்வேலியில (எண்பதுகளில்) படிக்கும்போது, பள்ளியில் ஒரு வகுப்புக்கு 90 மாணவர்கள் வரை உண்டு.//

    இது மாதிரி கவர்மெண்டலயும் இருக்கு.கல்வி வியாபாரம் ஆகிப்போச்சு.

    நன்றி.

    ReplyDelete
  5. உன் கூட நான் பேச மாட்டேன். நீ அரை மணி நேரம் வீட்டை விட்டு வெளியே நில்லு. எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன்.

    - u.k.g படிக்கும் என் பையனின் வகுப்புத் தோழனின் அப்பா, தன் மகன் அரையாண்டு மார்க் குறைவாக எடுத்ததற்கு கூறியது

    :(

    ReplyDelete
  6. நன்றி பின்னோக்கி.

    ReplyDelete
  7. மிகத் தேவையான பதிவு இது. இப்போது தேவையில்லை..தேவைப்படும்போது கவனத்தில் கொள்கிறேன் சார்.

    ReplyDelete
  8. தமிழ்ப்பறவை said...

    //மிகத் தேவையான பதிவு இது. இப்போது தேவையில்லை..தேவைப்படும்போது கவனத்தில் கொள்கிறேன்//

    மறக்கக்கூடாதது அடித்தளம் ஸ்ட்ராங்க்.

    ReplyDelete
  9. இதை http://parentsclub08.blogspot.com/-இல் பகிர உங்கள் அனுமதி தேவை.

    நல்ல கருத்துக்கள்.

    --வித்யா

    ReplyDelete
  10. Blogger Vidhoosh said...

    // இதைhttp://parentsclub08.blogspot.com/-இல் பகிர உங்கள் அனுமதி தேவை.நல்ல கருத்துக்கள்.//

    கருத்துக்கு நன்றி.தாராளமாக பகிருங்கள்.மேலும் கிழ் உள்ள சுட்டியில்இருக்கும் கட்டுரையை படித்துப் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.


    ”குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...”
    http://raviaditya.blogspot.com/2009/06/blog-post_8967.html

    ReplyDelete
  11. http://parentsclub08.blogspot.com/2010/01/blog-post_18.html

    Thank you. Post is published in Parents club. this will be useful to many. Thanks again
    Vidhya

    ReplyDelete
  12. நன்றி ஸ்ரீவித்யா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!