Thursday, January 7, 2010

கி.வா.ஜா.பதில்கள்-புத்தகம்

கேள்வி:அண்ணாச்சி என்று தமையானரைக் குறிக்கத் தமிழ் நாட்டில் சில பகுதிகளில் சொல்கிறார்கள். இந்திப் பெயர்களில் “ஜி” என்பது மரியாதையைக் குறிக்க வரும் விகுதி.அண்ணாஜி என்பதே அண்ணாச்சியா?

பதில்: உறவின்முறைப் பெயர்களுக்குச் “சி” என்பதை சேர்த்து வழங்குவது தமிழ் நாட்டில் ஒரு வழக்கு.ஆய் என்பது ஆய்ச்சி(ஆச்சி) அப்பன் என்பது அப்பிச்சி என்றும் அக்கா என்பது அக்கைச்சி என்றும் தங்கை என்பது தங்கச்சி என்றும் வழங்குவதைக் காணலாம்.”சி” என்பதைச் சேர்த்து வழங்கும் முறை தமிழ் வழக்கே என்று கொள்ள வேண்டும்.

கேள்வி: சும்மா என்பது சுகமாக என்றதன் சிதைவா?

பதில்:வாளாது என்ற சொல் வாளா என்று வருவது போலச் சும்மாது என்பது சும்மா என்று வந்தது..உலக்கையினால் குத்தும்போது”சும்சும்” என்று மூச்சு விடுவார்கள்.அப்போது “சும்மேலோ சும்முலக்காய்” என்று பாடுவதாக பரணி நூல்களில் வருகிறது.”சும்முதல்”என்பதை மூச்சு விடுதல் என்று பொருள் கொண்டு,மூச்சு விடாமல் இருப்பதைச் சும்மாது இருத்தல் என்று கொள்ள வேண்டும். பின்னால் இது சும்மா,பேச்சற்று,செயலற்று என்ற பொருள்கள் வந்திருக்க வேண்டும்.

 கேள்வி: புத்தகங்களை ஏன் நூல் என்று குறிப்பிடுகிறார்கள்?

பதில்:இது உவம பெயர் ஆகும்.பஞ்சினை ஒரு பெண் ராட்டையில் கதிரின் முனை வழியாக நூற்றுக் கையால் நூலை உண்டாக்குவது போல, சொல்லால் புலவன் தன் மதிநுட்பம் கொண்டு வாயால் நுவல்வதால் நூலாயிற்று (உவமையாயிற்று).

 கேள்வி:பிலாக்கணம் என்ற பெயர் எப்படி வந்தது?

பதில்:பிணக்கானம் என்பதே பிலாக்கணம்

கேள்வி: கொள்ளுப்பேரன்,எள்ளுப்பேரன் எப்படி வந்தது?

பதில்:கொள்ளைவிட எள் சிறியது.உறவு சிறுத்தவன் என்பதனால் அப்பெயர் வந்தது.A,B,C,D,E, என்றவர்கள் உறவு முறை Aயின் மகன்B, B யின் மகன்C, C யின் மகன்D, D யின் மகன்E என்று கொண்டால் Aக்கு பேரன்C, கொள்ளுபேரன்D, எள்ளு பேரன்E.

 கேள்வி:  ”எங்கும் செத்து நாக்குச் சாகவில்லை” இதன் கருத்து?

பதில்:மனிதனுக்கு முதுமை வரவர அவனுடைய புலன்கள் மங்கிடும்.ஆனால் நாக்கு சபலம் மட்டும் விடாமல் நிற்கும்.

 கேள்வி: அத்திம்பேர் என்பது எந்த உறவைக்குறிக்கும்?

பதில்:இது அந்தணர்கள் சொல் வழக்கு.அத்தையின் கணவரையும்,தமக்கையின் கணவரையும் அத்திம்பேர் என்பர்.அத்தையின் அன்பர் அத்திம்பேர்.தமக்கையின் கணவர் அத்தான் என்பது ஒரு வழக்கு.அத்தானின் அன்பர் அத்திம்பேர் ஆகியிருக்கலாம்.

நன்றி: கி.வா.ஜா. பதில்கள்-1 - அல்லயன்ஸ் பதிப்பகம்.(இதில் மூன்று பாகம்(1,2,3 ) உள்ளது.வாங்கினால் மூன்றும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும்.தனியாக வாங்க முடியாது)


படிக்க:ராஜிவ் கொலை வழக்கு - ரகோத்தமன்

7 comments:

  1. அறிஞர் பதில்கள். நற்பகிர்வு.

    ReplyDelete
  2. அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. அறிமுகத்திற்கு நன்றி சார்...

    ReplyDelete
  4. நன்றி ஸ்ரீ

    நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete
  5. :) அருமையான பகிர்வு. நன்றிங்க.

    ReplyDelete
  6. Vidhoosh said...

    //அருமையான பகிர்வு. நன்றிங்க.//

    அம்மாடி!பிரயாசித்தம் பண்ணிட்டேன்.

    நன்றிங்க.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!