Wednesday, August 5, 2009

சிலந்தியை சுமந்த நீர்க் குமிழிகள்.....

























யார் யாரோ
தண்ணீர் மொள்கிறார்கள்
பப்பிள் டாப்பில்

அதிர்வுடன் மேல் நோக்கி
புடைத்துவரும் நீர் குமிழ்கள்

உள்ளேயே உடைந்துப் போய்
சலனமற்ற வெற்றிடம்
ஒவ்வொரு முறையும்

டமளரில் பிடித்தத் தண்ணீரை
குடிக்காமல் சுவற்றை நோக்கி வீசுகிறார்
யாரோ ஒருவர்

தரையில் வழிந்தோடும் தண்ணீரில்
மிதந்தபடி வலையும் சிலந்தியும்
அதைத் தொடர்ந்து போகும்
சில நீர்க் குமிழிகளும்



படிக்க:

ஜென்சி,நான்,எஸ்.ராமகிருஷ்ணன்





4 comments:

  1. கவிதையின் உள்ளார்ந்த பொருள் புரியவில்லை. ஆனால் கவிதையை அப்படியே என்னால் visualise செய்ய முடிகிறது. ரவி சார் டம்ளரில் ( டமளரில் ) என்று இருக்கிறது. அப்பறம் சின்ன வயசிலிருந்தே மொண்டு/மோண்டு என்னை குழப்பியதுண்டு. காட்சியை வர்ணிக்கும் விதம் அற்புதம்.

    ReplyDelete
  2. நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  3. கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. நன்றி யாத்ரா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!