Wednesday, August 4, 2010

ரசித்த படம் - “கபில்தேவ்வின் தொப்பி”

ரொம்ப  ரொம்ப வருடத்திற்கு முன்  சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு 40 நிமிட படம் ஒன்று பார்த்தேன். அது இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.

குத்து மதிப்பாக எழுதி இருக்கிறேன்.கதையின் ஆத்மாவை விடவில்லை.

அந்த படத்தின் தலைப்பு “ கபில்தேவ்வின் தொப்பி”.

ஒரு பெரிய காலனி. அங்கு ஏழை, மத்தியதர, பணக்கார குடுமபங்கள் கலந்துக் கட்டியாக வாழும்  காலனி. அங்கு ஒரு பெரிய விளையாட்டு திடல்.அதில் இங்கு குடி இருக்கும் பள்ளி/கல்லூரி மாணவர்கள் தினமும் எந்த வேற்றுமையின்றி விளையாடுவார்கள்.முக்கியமாக கிரிக்கெட் விளையாடுவார்கள்.

அவர்களின் ரொம்ப கால கனவு நேரடியாக இந்தியா விளையாடும்  கிரிக்கெட் மாட்ச் (5 நாள் மேட்ச்) பார்ப்பது. எல்லோரும் காசு சேர்த்து ஒரு கிரிக்கெட் மாட்சிற்கு  டிக்கெட் வாங்கி உள்ளே போகிறார்கள். பிரமிப்புடன் எல்லாவற்றையும் ரசிக்கிறார்கள்.அன்று விளையாடும் மேட்சில் (நான்காவது நாள்)  இந்தியா ஜெயித்துவிடுகிறது.

மேட்ச் முடிந்தவுடன் இந்திய அணி கபில்தேவ்வின் தலைமையில் மைதானத்தை சுற்றி ஊர்வலம் வருகிறார்கள்.இவர்கள் பக்கம் வரும் போது கபில் தேவ் தன்னுடைய தொப்பியை  தூக்கி வீசுகிறார்.அதை காலனியில் வசிக்கும் பாஸ்கர்(கார்பெண்டரின் மகன்) பிடித்துவைத்துக்கொள்கிறான்.

(மேலுள்ள காட்சியெல்லாம் வசனத்தில் சொல்லப்படுகிறது)

வாழ்நாளில் தான் பிறநத பயனை அடைந்துவிட்டதாக கருதி்னான் பாஸ்கர்.

அன்றிலிருந்து பாஸ்கர் ரொம்ப பூரித்துப் போய் மேகத்தில் உலாவிக்கொண்டிருந்தான்.
தினமும் தன் தலையணை அடியில் வைத்துக்கொண்டுதான் தூங்குவான்.கனவு காணுவான்.அதைப் போட்டுக்கொண்டுதான் விளையாடுவான்.

நண்பர்கள் தொட்டுப்பார்க்கதான் அனுமதிப்பான்.நண்பர்கள் தினமும் பொறாமைத் தீயில் வெந்துகருகினார்கள்.

அதில் சீனு (பணக்கார குடும்பம்) என்பவனுக்கு தொப்பியின் மீ்து வெறி.சீனுவின் அப்பாவிற்கும் இது  தெரியும்.அவன் வீட்டில்தான் பாஸ்கரின் அப்பா வேலை செய்கிறார்.

ஒரு நாள் குடிப்பதற்கு காசு இல்லாத நிலையில் முதலாளியிடம் மருந்து வாங்க காசு கேட்கிறார்.”அந்த தொப்பியைத் தந்தா உனக்கு காசு தரேன்” என்கிறார்.அவனும் அதன் மதிப்பு தெரியாமல் கொடுத்து காசு வாங்கிக் குடிக்கிறார்.

பாஸ்கர் தொப்பியை காணாமல் பதறுகிறான்.மிகுந்த துக்கம் ஆகிறான்.ஸ்கூல் போகவில்லை.அடுத்த நாள் ஜூரம் வந்துப் படுத்துவிடுகிறான். தொப்பிக்கு பின்னால் இருக்கும் தீவிர உணர்ச்சிகளை பாஸ்கரின் தந்தை பிறகுதான் உணர்கிறார்.பாஸ்கர் நார்மல் நிலைக்கு வர வேண்டும் என்றால் தொப்பி மிக அவசியம் என்று உரைக்கிறது. தான் கண்டுபிடித்துத் தருவதாக சத்தியம் செய்கிறார்.உண்மையை சொல்லுகிறார்.

மறுநாள் நார்மல் நிலைக்கு வந்ததும் பாஸ்கரை அழைத்துக்கொண்டு சீனுவின் வீட்டிற்கு செல்கிறார்.சீனுவும் அவன் அப்பாவும் வாசலில்.தொப்பியைக் கேட்கிறார்.அவர்
மறுக்கிறார்.பணத்தை கொடுத்துவிடுவதாக சொல்லி கெஞ்சுகிறார்.இவன் நினைத்தே பார்க்க முடியாத அளவு பணம் கேட்கிறார்.தன்னால் முடியாது என்று மீண்டும் கெஞ்சுகி்றார்.சீனு சிரித்தபடி்யே பார்தது்க்கொண்டிருக்கிறான்.

கடைசியாக தன் பையன் தொப்பி மேல் கொண்டிருக்கும்
பக்தியைச் சொல்லி கெஞ்சுகெஞ்சென்று கெஞ்சுகிறார்.பாஸ்கருக்கு அப்பா கெஞ்சுவது என்னவோ போல் இருக்கிறது.மிகுந்த சோகமாகிறான்.கண்ணில் நீர் முட்டுகிறது.

”அப்பா.. தொப்பி வேண்டாம்ப்பா...அவங்களே வச்சுகிடட்டும்..” என்று கோபத்துடன் சொல்லி அப்பாவை அழைத்துக்கொண்டு விறுவிறுவென்று நடக்கிறான்.படம் முடிகிறது.

7 comments:

  1. Chitra said...

    நல்லா இருக்குதுங்க... பகிர்வுக்கு நன்றி.
    August 4, 2010 12:02 PM

    ReplyDelete
  2. நன்றி சித்ரா.

    ReplyDelete
  3. நல்லா பதிவு...
    தந்தையாக லிவிங்ஸ்டன் நடித்திருப்பர்.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு.. நன்றி.

    ReplyDelete
  5. ம்ம்ம்.. நல்ல ஞாபகம்தான்...

    ReplyDelete
  6. Kovai Senthil said...

    // நல்லா பதிவு...
    தந்தையாக லிவிங்ஸ்டன் நடித்திருப்பர்//

    ஆமாம். நன்றி.

    ReplyDelete
  7. நன்றி இராமசாமி கண்ணண்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!