Tuesday, August 3, 2010

சைக்கிள் - சிறுகதை

விக்ரம் மாடியிலிருந்து புது சைக்கிளைப் பார்த்தான்.சின்ன அசைவில் சட்டென மிரண்டு தலை தூக்கி பார்க்கும் கலை மான் தோரணையில்  ஸ்டைலாக நின்றிருந்தது.பிராண்ட் நியூ.ரத்த சிவப்பு நிறம் பளபளத்தது.வாசனை கூட போகவில்லை.காம்பவுண்ட் சுவரை எட்டிப் பார்த்தபடி மகள் பூஜாவின் வரவை  எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

பூஜாவும் ஸ்கூலில்  இப்படிஆவலாக எட்டிப்பார்த்தப்படியேதான் இருப்பாள்.

ஜீவன் பீமா நகரின் குண்டும் குழியுமான கொடூரமான ரோட்டிற்கு இந்த  சைக்கிள் பொருத்தமாகவே இல்லை.ரோட்டின் இரண்டு பக்கமும் பூக்கள் உதிர்க்கும் Maple Treeகளுக்கு நடுவே அடர்கருப்பு நிறத்தில் வழுக்கிக்
கொண்டுபோகும்  தார் ரோட்டில்  இந்த சைக்கிளை ஓட்ட வேண்டும் பூஜா.

”வேன்ல போனா ரொம்ப childishஆ இருக்குப்பா” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள் மகள் பூஜா.

சைக்கிளை வாங்குவதற்காகவே  நேற்று ஆபிஸ் மட்டம் போட்டுவிட்டு பூஜா,  மனைவி அர்ச்சனாவுடன்  கடைக்குப்  போனான் விக்ரம். பூஜா தன் தோழிகள் வாங்கிய கடையிலேயே (கடையின் பெயரே ஸ்டைலாக இருந்தது) வாங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள்.

மிகவும் பூரிப்போடு எல்லா சைக்கிளையும் பார்த்த பூஜாவுக்கு  முடிவில் முகம் வாடியது.அவள் தோழிகள் வைத்திருக்கு்ம் பிராண்ட் ஸ்டாக் இல்லை.
மறு நாள்தான் கிடைக்கும் என்றார்கள்.மறுநாளும் லீவ் போட்டு தான் மட்டும் போய்  அதை டெலிவரி எடுதது வீட்டில் நிறுத்தி விட்டான்.

தான்தான் முதலில் ஓட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனாள்.

“சரி..! நீயே இனாகரேட் பண்ணு..நாங்க தொடல”.

 
பூஜா ஸ்கூல் விட்டு வரும் நேரம்.விக்ரமும்  அர்ச்சனாவும்  மாடியிலிருந்து வாசலுக்கு வந்தார்கள்.

“சந்தனம் குங்குமம்  எடுத்துண்டு வரட்டுமா?”

”வேண்டாம் விக்ரம்... அதெல்லாம் அவுட் ஆஃப பேஷன்ம்பா.அவளோடு பேவரைட் ஸ்வாமி அபிராமி.அந்த ஸ்வாமிய  பிராத்தனப் பண்ணிண்டுதான் ஓட்டுவா”

 ”கிரிங்ங்ங்ங்ங்ங்....” அர்ச்சனா  பெல் அடித்து செல்லமாக தொட்டுணர்ந்தாள்.

சின்ன வயதில்   நாட்டார் கடை  சைக்கிள் ஓட்டியது ஞாபகம் வந்தது. இது நாட்டார் கடை  பெல் போல் இல்லை.இது அடித்தவுடன்  தொடர்ந்து சிணுங்குகிறது.அடிக்கும்போது ஏதோ ஒரு இதமான உணர்ச்சி வருகிறது. ரொம்ப அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

 ரொம்ப காதலோடுப் பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரென்று.....

“விக்ரம்  கொஞ்சம் பக்கத்துல வாங்கோ..” ரொம்ப உற்சாகத்துடன் கூப்பிட்டாள்

பக்கத்தில போய்  நின்றான். அவள் செய்கைகளை புன்னகைத்தப்படி பார்க்க ஆரம்பித்தான்.

திருமாங்கல்யம் மற்றும் அதனோடு சேர்ந்த மற்ற செயின்களை எடுதது  கொத்தாக பிளவுசிற்குள் விட்டுக்கொண்டாள்.புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டாள். உள் பாவாடையின் பிரில்களுக்கு வெளியே செக்கச்செவேலன கால்கள் தெரிந்தது.முந்தானையை அடக்க ஒடுக்கமாக இடுப்பில் சொருகி கணவனின் தோளைப் பிடித்துக்கொண்டு “விட்ராதேங்கோ”   பேலன்ஸ் செய்து சைக்களிள் ஏறி  மெதுவாக பெடல் செய்ய ஆரம்பித்தாள்.
  
மனைவியின் கனத்தை மனதில் அசைப்போட்டுக்கொண்டே அவள் வீடடைச் சுற்றி ஓட்டுவதை பூரிப்போடு பார்த்தான்.ரொம்ப புதுசாக தெரிந்தாள்.

இரண்டு ரவுண்ட் ஓட்டினாள். மூன்றாவது ரவுண்டில்.....

“எப்படி.. இருக்கு நம்ம ரைடிங்? டபுல்ஸ் வரேளா?”ஏதோ பாட்டை ஹம் செய்தபடியே.

”சர்பர்ரைசிங்..!என்ன கான்பிடன்ஸோட ஓட்டற..!ஆனா சீட்டுக்கு ரெண்டு பககமும் “பம்ஸ்” பொங்கி வழியுது”

”சீ..போ...” என்று சொல்லி பிரேக் அடித்து கணவனின் பின்பக்கத்தில் மோதி  ஸ்டாண்ட் போட்டாள். ஓட்டின சுவடே தெரியாமல் நன்றாகத் துடைத்து
வைத்தாள். இருவரும் கேட்டிற்கு அருகே வர ஸ்கூல் வேன் வந்தது.

 வேன்  வீட்டு வாசலில் நிற்காத நிலையில்  கதவைத் திறந்த பூஜா  தொப்பென்று குதித்து ஓடி வந்தாள்.

”எஸ்... அபிராமி!. ஐ காட் இட்” சைக்கிளைக் கட்டிக்கொண்டாள்.ஹாண்டில் பார் எதேச்சையாக அவள் அசைவில் திரும்பியது.”சாரி....நாளைக்குத்தான் இனாகுரேஷன் .இன்னிக்கு கிடையாது..ஓகே..!.”

”தாங்க்ஸ் அப்பா! தாங்க்ஸ் அம்மா!”மாறி மாறி இருவருக்கும் முத்த மழைப்பொழி்ந்தாள்.
அப்பாவிடம் செல் போன் வாங்கி போட்டோ எடுத்தாள்.தோழிகளுக்குப் போன் செய்து சிரித்தபடி பேசினாள்.

”சரி... டிரெஸ்ஸெல்லாம் கழட்டிட்டு வா.சூடா ரவா உப்புமா பணணித்தரேன்..”

பூஜா சைக்கிளை பார்த்துக்கொண்டே பின் பக்கமாக ஸ்லோமோஷனில் படியேறினாள். அவளுக்கு இணையாக அதே ஸ்லோ மோஷனில் எதேச்சையாக சைக்கிளை ஓட்டிய பூரிப்பில் படியேறிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

மறுநாள காலை.........

சைக்கிளைக் காணவில்லை. பூஜா  மூச்சிரைக்க  படியேறி வந்து அலறினாள்.

விக்ரமும் அர்ச்சனாவும் கிழே ஓடினார்கள். பரக்க பரக்க எல்லா இடத்திலும் தேடினார்கள்.கண்ணில் படவே இல்லை. பூட்டித்தான் இருந்தது.ஆனாலும் திருடு போய்விட்டது.

பூஜா முகம் வாடிப் போய் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.

ஒரு பக்கம் தொலைந்துப் போனது  சொல்ல முடியாத வருத்தம்.இன்னொரு பக்கம்  சைக்கிள் ஓட்டியதை சொல்லாமல் மறைத்தது இப்போது விஸ்வரூபம் எடுத்து துக்கம் தொண்டையை அடைத்தது அர்ச்சனாவிற்கு.  பூஜாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் குற்ற உணர்ச்சிப் படுத்தி எடுத்தியது.சொல்லிவிடலாமா?

”நான் ஓட்றதப் பார்த்து நீங்க திருஷ்டி போட்டுட்டேளா? அதான் சைக்கிள்  காணாம போயிடுத்தா?” சோகமாகக் கேட்டாள்.

”லூசு மாதிரி பேசாத.நம்ம வீட்டுக்குள்ள வச்சுருக்கணம். ஆறாயிரம் ரூபாய் பணால்.”

விக்ரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தான். அவர்களும் ஏனோதானாவென்று வாங்கிக்கொண்டார்கள்.கண்டுப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை.கிடைக்கும் என்ற நம்பிக்கையும்  இல்லை.அடிக்கடி திருட்டு நடக்கும் ஏரியா.

பூஜாதான் உடைந்துப் போய் விட்டாள்.மறுபடியும் childishஆ வேன்தானா?

மூன்று பேரும் அடுத்த இரண்டு நாட்களையும்  ஜடமாக சுரத்தே இல்லாமல் நகர்த்தினார்கள்.புது சைக்கிள் வாங்க முடியுமா?
  
மூன்றாவது நாள் இரவு 8 மணி. கம்புயூட்டர் பார்த்துக்கொண்டிருந்த பூஜா திடீரென்று கிச்சனுக்கு ஒடி வந்து அர்ச்சனாவை கட்டிக்கொண்டு.....

”எப்பேர் பட்ட பொய்க்காரி நீ. நீயும் உங்க ஆத்துக்காரரும் என்ன மாதிரி சீன் போட்டீங்க ..” சந்தோஷம் பொங்க அம்மாவை உலுக்கிச் சிரித்தாள்.

”என்னடி பூஜ்..?” மகளின் பிரகாச முகத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள்.

”ரொம்ப குஷியா இருக்கேம்மா. ரெண்டு நாள் துக்கம் ஆவியா போயிடுத்து. ஐ ஆம் ஓகே நவ்..! வா.., காட்றேன்” அழைத்துக்கொண்டுப் போய் கம்புயூட்டர் முன் உட்கார வைத்தாள். எதையோ கிளிக் செய்தாள். ” பாரு ..உன்னோட லவ்விங் ஆத்துக்காரார்  எடுத்தத...!”

21 இன்ச் கம்புயூட்டர் திரையில் ....

”விக்ரம் கொஞ்சம் பக்கத்துல வாங்கோ”வில் ஆரம்பித்து   “”சீ..போ..” அர்ச்சனா கணவனை வீலால்  இடித்து ஸ்டாண்ட் போட்டு முடித்தவுடன் காட்சி ஓடி திரை பிளாங் ஆகியது.பூஜா திரையை மூட டெஸ்க் டாப்பில் புது சைக்கிள் படம் இருந்தது.

அர்ச்சனாவுக்கு  வருத்தம் இரண்டு மடங்கு ஆகியது.


                               முற்றும்

குறிப்பு:
(பக்கத்து காம்பவுண்டில்  குடி இருக்கும் விக்ரமின் அக்கா  தெரியாமல் வீடியோ எடுத்து பின்னர் விக்ரமிடம் கொடுத்தது)
                                          
                                          

8 comments:

  1. nalla irukunga
    //அர்ச்சனாவுக்கு வருத்தம் இரண்டு மடங்கு ஆகியது///

    rasithen

    ReplyDelete
  2. LK said...

    // nalla irukunga
    //அர்ச்சனாவுக்கு வருத்தம் இரண்டு மடங்கு ஆகியது///

    rasithen //

    நன்றி எல்.கே.

    ReplyDelete
  3. எதுவோ எதிர்பார்த்து புஸ்சென ஆகிவிட்டது.

    ReplyDelete
  4. shortfilmindia.com said...

    //எதுவோ எதிர்பார்த்து புஸ்சென ஆகிவிட்டது//

    இந்தக் கதைக்கு இதுதான் முடிவு.கதையை சரியாக உள் வாங்கினால் “புஸ்” தெரியாது.வேறு முடிவுகள் இருக்கு. ஆனால் அவை பொருத்தமாக இருக்காது.

    நன்றி கேபிள் சங்கர்.

    ReplyDelete
  5. video eppadi edukkap pattathu enRa kaeLvithaan rasiththa kathaiyai kooda rasikka mudiyaamal seykiRathu...
    nalla iyalpaa irunthathu kathai.

    ReplyDelete
  6. தமிழ்ப்பறவை said...

    // video eppadi edukkap pattathu enRa kaeLvithaan rasiththa kathaiyai kooda rasikka mudiyaamal seykiRathu...
    nalla iyalpaa irunthathu kathai.//

    விக்ரம் சொன்னது:
    பக்கத்து காம்பவுண்டில் என் அக்கா எங்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து எடுத்து என்னிடம் கொடுத்தது.


    நன்றி.

    ReplyDelete
  7. விஷயம் தெரிந்து பூஜா கோபிப்பாள் என்று எண்ணினேன்...

    //சந்தோஷம் பொங்க அம்மாவை உலுக்கிச் சிரித்தாள்.//

    நல்ல திருப்பம்/முடிவு..

    ReplyDelete
  8. ஸ்வர்ணரேக்கா said...

    // நல்ல திருப்பம்/முடிவு..//

    நன்றி ஸ்வர்ணரேக்கா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!