Tuesday, August 17, 2010

எந்திரன் (காதல் அணுக்கள்) இசை, ராஜாவின் தாக்கம் ????

ஆஸ்கர் தம்பி A.R.ரஹ்மான் எம்.எஸ்.விஸ்வநாதனின் பரம ரசிகர்.அவர் பாடல்களில் எம்.எஸ்.விஸ்வநாதனின் தாக்கத்தைப் பார்க்கலாம்.சமீபத்தில் ராவணன் படத்தில் வரும் “கள்வரே” பாடல் கூட இவரின் தாக்கம்தான்.

இளையராஜாவும் அவரைப் போட்டுத் தாக்கி இருக்கிறார். எப்படி? கிழே பார்க்கலாம்.

(....கபர்தார் ரஜினி.... ...கபர்தார் ரஜினி.... ...கபர்தார் ரஜினி....)

A.R.ரஹ்மான் இசையில் எந்திரன் படத்தில் “காதல் அணுக்கள்” என்ற பாடல் உள்ளது. விஜய் பிரகாஷும் ஷீரேயா கோஷாலும் பாடி இருக்கிறார்கள்.இது 5.46 நிமிடம் ஓடுகிறது.

ராஜா தாக்கிய தாக்கலில் ரஹமானின் மனதை விட்டு அகலவில்லை.இன்ஸ்பியரேஷனா?

ஆனந்தகும்மி:

படம்: ஆனந்தகும்மி(1983)(இளையராஜாவின் சொந்தத் தயாரிப்பு)பாடல்: ”தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி”




ஆரம்ப இசை(prelude).மிக முக்கியமான இடம் 0.20-0.25


எந்திரன்:

 “காதல் அணுக்கள்” எந்திரன் பாடல்.
  மிக முக்கியமான இடம் 0.12-0.24

 
 ____________________________________________________________

படம்: பாக்கிய தேவதா(மலையாளம்)-2009
பாட்டு: ”அல்லிப்பூவே மல்லிப்பூவே”
இசை: இளையராஜா




எந்திரன்:

அதே “காதல் அணுக்கள்”பாட்டு.





.

30 comments:

  1. அற்புதம்..அற்புதம்... மிக அற்புதம்... ஷங்கர் உங்களால் மட்டுமே இப்படியான் சுவையான காரியங்களை செய்ய முடியும்.... நன்றி.

    ReplyDelete
  2. raja said...

    // அற்புதம்..அற்புதம்... மிக அற்புதம்... ஷங்கர் உங்களால் மட்டுமே இப்படியான் சுவையான காரியங்களை செய்ய முடியும்.... நன்றி//

    நன்றி ராஜா.ரஹமான் சொந்தமாக முயற்சிக்கலாமே?

    ReplyDelete
  3. starting Guitar music resembles Devan thiruchabai malargale start

    ReplyDelete
  4. அன்பரசன் said...

    /// சூப்பர் //

    நன்றி அன்பரசன்.

    ReplyDelete
  5. krubha said...

    // starting Guitar music resembles Devan thiruchabai malargale start//

    ”தேவன் திரு”வை விட தாமரைக்கொடிக்கு நன்றாக ஒத்துப்போகி்றது.

    நன்றி.

    ReplyDelete
  6. ஷங்கர்.... ரஹ்மான், இளையராஜாவிடமிருந்து இசைத்தாக்கத்தை கொண்டிருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே... எந்த இசைக்கலைஞனும் சுயம்புவாக உருவாகிவிடமுடியாது... ஒரு சம்பவம் சொல்கிறேன்.. சன் டிவியில் சில வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் வாரம் என்று அவரது திரைப்படங்களை ஒரு வாரம் முழுக்க திரையிட்டுக்கொண்டிருந்தார்கள்.. ஒரு நாள் நெஞ்சம் மறப்பதில்லை.. இரவில் திரையிடல். மறுநாள் காலை இளையராஜா ஸார் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்தார்.. எம்.எஸ்.வி. க்கு தொலைபேசியில் அழைத்து அவரது இசையை வியந்து பாராட்டிக்கொண்டிருந்தார்...வரலாற்று சிறப்பு மிக்க அந்த கணத்தில் நான் அங்கு இருந்தேன்.. சிலிர்க்க வைத்த கணம் அது.. நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை இளையராஜா பாடினார்..தொலைப்பேசி வாயிலாக.. எம்.எஸ்.வி என்ன சொன்னார் என்று தெரியவில்லை .. இளையராஜா பதிலாக ... அண்ணா இந்த பாடலேல்லாம் கேட்டுட்டுத்தாண்ணா நான் சினிமாவுக்கு வந்தேன் என்று சொன்னார்..கலைஞன் என்பவன் வீம்புமிக்க குழைந்தயின் இன்னொரு வடிவம்.இந்த உலகில் பிறரது பாதிப்பு இல்லாமல் ஒருவரும் இல்லை....

    ReplyDelete
  7. raja said...

    // ஷங்கர்.... ரஹ்மான், இளையராஜாவிடமிருந்து இசைத்தாக்கத்தை கொண்டிருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே//

    தாக்கம் இருக்கலாம்.ஆனால் அதே அப்படியே போடக்க்கூடாது அடுத்தக் கட்டத்திற்கு போக வேண்டும்.ர்

    //எந்த இசைக்கலைஞனும் சுயம்புவாக உருவாகிவிடமுடியாது//

    100% உண்மை.

    //வரலாற்று சிறப்பு மிக்க அந்த கணத்தில் நான் அங்கு இருந்தேன்.. சிலிர்க்க வைத்த கணம் அது..//

    உண்மை.நீங்கள் சினிமா சம்பந்தப் பட்ட வேலையில் இருக்குறீர்களா?


    //இளையராஜா பதிலாக ... அண்ணா இந்த பாடலேல்லாம் கேட்டுட்டுத்தாண்ணா நான் சினிமாவுக்கு வந்தேன் என்று சொன்னார்.//

    ராஜாவிலும் எம் எஸ் வியின் தாக்கத்தைப் பார்க்கலாம்.மற்ற இசை அமைப்பாளர்களின் தாக்கத்தையும் பார்க்கலாம்.ஆனால் தன் தனித்துவத்தை விடமாட்டார்.

    நன்றி ராஜா.

    ReplyDelete
  8. deluxe said...

    // raja raja than //

    எப்பவுமே ராஜா ராஜாதான். நன்றி.

    ReplyDelete
  9. நான் ரஹ்மான் அப்படியே பிரதி எடுத்துவிட்டார் என்று நிணைக்கவில்லை... காதல் அணுக்கள்.. பாடலின் தொடக்க இசையானது... உறவெனும் புதியா வானில்.. எனும் பாடலின் தொடக்க இசையே..இளையராஜா அந்த ஒலியை கழுகு, பன்னீர் புஷ்பங்கள், போன்ற படங்களின் பாடல்களில் இடம் பெறசெய்திருக்கிறார்..

    ReplyDelete
  10. Hats off to you Ravi. Henceforth U R Called "Raja Shankar" Not Ravi Shankar (Shri Krishnamoorthy Sir - Pardon me for changing your son's name) but he should be named "Raja Shankar" only for the excellent work he has done on Raja Sir's Songs.
    I am sure Raja Sir himself wouldn't have noticed this "Copy & Paste" of A.R.Rehman.

    ReplyDelete
  11. இந்த Strumming pattern வேண்டுமென்றால் ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் நிச்சயம் ஒரே நோட்ஸ் கிடையாது. 6 நிமிட பாட்டில் 5 செக்ண்ட் வேற பாட்டின் சாயலில் இருந்தால் உடனே காப்பி பேஸ்ட்டா? என்ன சார் இது?

    என்ன வேணும் தின்னுங்க்டா டோய் பாட்டு கேட்டு இருகிஙக்ளா? இப்ப வாழவைக்கும் காதலுக்கு ஜே பாட்டை கேளுங்க. ரெண்டுமே ராஜா பாட்டுன்னு சொல்ல மாடிங்கன்னு நம்பறேன்..

    ReplyDelete
  12. வாங்க கார்க்கி(சகா?).

    கார்க்கி said...
    //உடனே காப்பி பேஸ்ட்டா? என்ன சார் இது?//

    எப்படி வந்தது? எனக்கே ஆச்சரியம்.அதை எடுத்துவிட்டேன்.ஏன்?

    விளக்கம்:
    என்னுடைய முதல் published போஸ்டில் இது (காப்பி பேஸ்ட்)இருக்காது.முதல் பின்னூட்டம் போட்ட 3 அல்லது நான்கு பேர் இதைப் பார்த்திருக்கலாம்.
    போடாதவர்களும் பார்த்திருக்கலாம்.அடுத்து பாட்டிற்கு மேலே ‘Stunning " " மனதை வருடும்”
    என்பது கூட இருககாது.

    காரணம் ஆடியோ பைல்ஸ் தகராறு செய்வதால் (எபிக் பிரெளசர்)பதிவுகள் நகல் ஒன்று வைத்திருப்பேன்.அதில்தான் மேல் உள்ளவை இருந்தது.மறுபடியும் ஆடியோ பைல்ஸ் தகராறு செய்ததால் (பயர்பாக்ஸ்) போய் அதை(ஒரிஜனலை) காபி செய்து போட்டேன் அதில் அப்படியே வந்துவிட்டது.

    டிராப்ட்டில்(நகல்) எது வேண்டுமானலும் இருக்கும். ஆனால பைனலில்.....?எடிட் செய்யப்படும்.

    ‘Stunning " " மனதை வருடும்” இதை அடிக்கடி (cliche)என் ராஜா பதிவில் யூஸ் செய்வதால் இதையும் எடுத்துவிட்டேன்.

    அதற்குப் பதிலாக “இன்ஸ்பியரேஷனா” என்று போட்டேன்.டிவிட்டரிலும் திருத்திவிட்டேன்.
    (தலைப்பை காப்பி எடுத்து பேஸ்ட் செய்தது)

    அடுத்து உங்கள் பின்னூட்டத்திற்கு வருகிறேன்.

    ReplyDelete
  13. கார்க்கி,
    //இந்த Strumming pattern வேண்டுமென்றால் ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் நிச்சயம் ஒரே நோட்ஸ் கிடையாது//
    நான் கேட்டவரையில் சாயல் வருகிறது.

    //என்ன வேணும் தின்னுங்க்டா டோய் பாட்டு கேட்டு இருகிஙக்ளா?//

    ”என்ன வேணும் தின்னுங்க்டா”கேட்டதில்லை.என்ன படம்?

    // இப்ப பாட்டை கேளுங்க. ரெண்டுமே ராஜா பாட்டுன்னு சொல்ல மாடிங்கன்னு நம்பறேன்..//

    படத்தைச் சொன்னால் கேட்டுவிட்டு சொல்லுவேன்.

    நன்றி கார்க்கி.

    ReplyDelete
  14. Anantha said...

    // Hats off to you Ravi. Henceforth U R Called "Raja Shankar" Not Ravi Shankar //

    நான் ராஜாவின் ரசிகனாகவே இருக்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  15. நன்றி அதிஷா.

    ReplyDelete
  16. என்னவேனும் தின்னுங்கடா டோய்.. பாடலின் திரைப்படம் உயர்ந்த உள்ளம் , கமல் அம்பிகா நடித்தது. இசை இளையராஜா.

    ReplyDelete
  17. கலக்குறிங்க தல ;)))

    ReplyDelete
  18. inspiration...
    ''உறவெனும் புதியா வானில்.. '' kalakkal song...இதோட தெலுங்கு வெர்சன் டாப்...

    ReplyDelete
  19. raja said...

    // என்னவேனும் தின்னுங்கடா டோய்.. பாடலின் திரைப்படம் உயர்ந்த உள்ளம்//

    நன்றி.

    ReplyDelete
  20. கோபிநாத் said...
    // கலக்குறிங்க தல //
    நன்றி தல.

    தமிழ்ப்பறவை said...

    //inspiration...//

    சரியே.

    // ''உறவெனும் புதியா வானில்.. '' kalakkal song...இதோட தெலுங்கு வெர்சன் டாப்...//

    படம் பெயர் சொல்லமுடியுமா?மனசுல்லு கிள்ளாதண்டி? நானும் கேட்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  21. கார்க்கி,

    //என்ன வேணும் தின்னுங்க்டா டோய் பாட்டு கேட்டு இருகிஙக்ளா? இப்ப வாழவைக்கும் காதலுக்கு ஜே பாட்டை கேளுங்க.ரெண்டுமே ராஜா பாட்டுன்னு சொல்ல மாடிங்கன்னு நம்பறேன்.. //

    உயர்ந்த உள்ளம்-1985 பாட்டு கேட்டேன்.”வாழ வைத்த”(1989) பாட்டில் இதில் சாயல்(மெட்டு) வருகிறது.அதை இம்புரூவைஸ் செய்திருக்கிறார்.
    இசைக்கோர்ப்பு மாறுபடுகிறது.

    இந்த டுயூன் அவரின் செல்ல குழந்தை.அதை எடுத்து ஆள்வது அவரின் உரிமை.

    நன்றி.

    ReplyDelete
  22. //படம் பெயர் சொல்லமுடியுமா?மனசுல்லு கிள்ளாதண்டி? நானும் கேட்கிறேன்.//
    மவுனகீதம் நு நினைக்கிறேன்...’செலிமிலோ வலப்பு ராகம்’.. பாடலை மெயிலுக்கு அனுப்பி விடுகிறேன் சார்...

    ReplyDelete
  23. இளையராஜா இசையில் நிழல்கள் படத்தில் இடம்பெறும் "பூங்கதவே தாழ் திறவால்" பாடலின் தொடக்க இசை ரஹ்மானால் காபி அடிக்கப்பட்டு காதலர் தினம் படத்தில் "என்ன விலை அழகே" பாடலின் தொடக்கமாக இடம் பெற்று உள்ளது.

    ReplyDelete
  24. ராஜாவின் தாக்கம் தெரிகிறது.ஆனால் இசைக்கோர்ப்பு
    சரியில்லை.இதே மாதிரி “ போறாளே பொன்னுத்தாயி”(கருத்தம்மா)-(சோகம்-ஸ்வர்ணா) பாட்டு “ஒரு கணம் ஒரு யுகமாக”(நாடோடித் தென்றல்)பாட்டின் தாக்கம்.

    நன்றி.

    ReplyDelete
  25. இது போல் ஒரு உதாரணத்தை காட்டி நான் ஒரு பதிவிட்ட போது, நீங்கள் வந்து கமெண்டியது ஞாபகத்திற்கு வருகிறது...

    என் பதிவில் நான் எழுதியது :

    1) மாப்பிள்ளை படத்தில் வரும் “என்ன தான் சுகமோ நெஞ்சிலே” பாடல்

    2) மனதில் உறுதி வேண்டும் படத்தில் வரும் “கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்” பாடல்

    இரண்டும் டிட்டோ சாங்க்ஸ்...

    இதெல்லாம் அரசியல்ல சகஜம் ரவிஜி....

    ReplyDelete
  26. Wonderful Bro..!!
    Ithu pole innum neraya ethir parkiraen..!!
    Keep up the good work..!!
    Now getting even more prouder to be a friend of you..!!

    ReplyDelete
  27. நன்றி கிரன் சுப்ரமணியம்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!