Thursday, February 26, 2009

நான் கடவுள் - படம் - நிறைகள் - குறைகள்


பாலா, ரசிகர்களை விசா கொடுத்து ஒரு பாக்கெஜ் டூரில் வேறொரு உலகத்திற்க்கு அழைத்துக் கொண்டுபோய் காட்டி மிரட்டியுள்ளார்(பிரமிக்கவும் வைத்து). படம் முடிந்து வழக்கமான உலகத்திற்க்கு வரும் போது மனது சாம்பல் பூசி ஜெட்லாக் (jetlock)  ஆகி ஒரு மாதிரி ஆகிறது.




மகனால் குடும்பத்திற்கு நிறைய கெட்டவிஷயங்கள் நடப்பதால் சின்ன வயதிலேயே அவனை காசியில் விட்டு விடுகிறார்கள். பல வருடங்களுக்குப்
பிறகு அம்மா அவனைப் பார்க்க வேண்டும் என்று துடிக்க அப்பா மகளுடன் காசிவந்து ஆர்யாவை சந்திக்கிறார்.


அங்கு அவன் அஹம் பிரம்மாஸ்மியாகிய,ஒரு உக்கிர சிவ பக்தனாக(அகோரி) சாமியார்களுடன் வாழக்கை நடத்துகிறான்.அவன் குருவிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு தன் ஊருக்கு அழைத்து வருகிறார் அப்பா.ஒட்டு உறவு இல்லாமல் ”சித்தம் போக்கு சிவம் போக்காக” நாட்களை கடத்துகிறான்.அம்மாவும் அப்பாவும் அவன் போக்கில் விட்டு விடுகிறார்கள். 


இவனோடு அங்கஹீனம் உள்ள பிச்சைகாரர்களை வைத்து (இவர்களுக்கு ஒரு godown வைத்து)பிசினஸ் செய்யும் தாண்டவன் & கோவோடு கதைப் பிண்ணப் பட்டுள்ளது.இந்தக் கூட்டத்தில் குருட்டுப் பிச்சைக்காரியாக பூஜா வருகிறார்.




அட்டகாசமான ஆரம்பம்.காசியின் சாமுத்திரிகா லட்சணம் கங்கையும் எரியும் பிணங்களும்தான்.பின்னணியில் “ஓம் சிவோகம்” பாடலோடு காமிரா எரியும் பிணங்களிடையே ஊர்ந்து சுடலை மாடனை(ஆர்யாவை)தலைகீழாக அறிமுகப்படுத்துகிறது.. மூட் லைட்டிங்கும் ,காமிராவும்,இசையும் பிண்ணி எடுக்கிறார்க்ள்.இந்த உலகம் மிரள வைக்கிறது. காசியில் பிணத்தை வைத்து
”அரசியல்” கிடையாது “கருமாதி” அல்லது “இழுத்து (கங்கையில்)விடுதல்” தான். 


ஆரியா, நானே கடவுள் நிலைக்கு(அஹம் பிரம்மாஸ்மி) வந்து விட்டதாக உக்கிரமாக இருக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி என்பதை “நான் கடவுள்” என்று சொல்வது பாமரத்தனம். கடவுள் நிலையை கடந்து “நானே பிரம்மம்” என்னும் நிலை. இந்த நிலை எதுவும் இல்லாத நிலை.இது ”அதை” உணர்ந்த நிலை.
"தத்வமஸி” அதுதான் இது.


சிவனுக்கு மூன்று முகங்கள் என்று சொல்வதுண்டு. 1.மென்மையான பெண் முகம் (வல்து)-படைத்தல் 2. சாந்தமான முகம்(நடு) -ஞானம் 3. உக்கிரமான முகம்(இடது) ருத்ரன். இது அழித்தல் .இந்த முகத்தை வணங்குபவர்கள் “அகோரிகள்” என்னும் பிணம் தின்பவர்கள்.




நிறைகள்:
பூஜா வாழ்ந்து விட்டார். அவார்டு நிச்சியம்.ஒரு உயரமான கருப்பின basket ball player  போல வில்லன் தாண்டவன் அட்டகாசம்.ஒரு விதமான கருப்பு பாம்பு முகம்.அடுத்து ஏஜண்ட் கிருஷ்ண மூர்த்தீ.இந்து சாமிகள் கைவிட்டதால் பூஜா கிறிஸ்துவ சாமியிடம் வேண்டுவது.


சுற்றி நடக்கும் அநியாயங்களைப் பார்த்து மிரளும் “சிவன்” ”முருகன்””ஆண்டாள்” “அனுமான்”.அதுவும் "சிவன்" மிரளுவது நகைமுரண் (irony?) .ஆர்யா /காசி பாத்திர வசனங்களும் வட இந்தியா வாடையோ வருவது. ஆர்யாவும் நல்ல ந்டிப்பு.கஞ்சா கண்கள்.ஆர்யா பிணம் தின்னும் காட்சிகள் மறைமுகமாக(suggestive) ஆகக் காட்டப்பட்டுள்ளது.


கலை இயக்கம் (கிருஷ்ணமூர்த்தி)பிரமாதம். காட்சிகளோடு கதை யதார்த்தமாக
நகருகிறது.எல்லாம் live வாகப் பார்ப்பது போல் உள்ளது.


ஒவ்வொரு பாத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளது. பிச்சைகாரர்Exchange offer க்காக வரும் மலையாளி பாத்திரம் நல்ல திருப்பம்.




குறைகள்:
கடைசிக் காட்சி பூஜா வசனங்கள் சற்று செயற்கை.காசியில் தன் காணாமல் போனப் பையனை விசாரிக்கும் போது, பதில் சொல்லும் காசி பண்டிட் மொழி அதட்டல் தொனியில் இருக்கிறது. அனுதாப மொழியில் இருக்க வேண்டும். 
கோர்ட் சீன் ரொம்ப ஓவர். போலீஸ் ஸ்டேஷன் ஆட்டமும் “கலெக்‌ஷ்ன்” உத்தி?
”கோர முக” பிச்சைக்காரர் ஒரு திணிப்பு. shock value க்காக? ஆர்யாவின் சிஸ்டராக
வருபவருக்கும் பிச்சைகார பாவாடை சட்டை ஏன்? பழைய சூடிதார் அணியலாமே?


காசி காட்சிகள் ரொம்ப குறைவு.மெயின் கதையோடு ஆர்யா ஒட்டாமல் சில நேரம் தடுமாறுகிறது.


மகன் வேத மந்திரங்களைக் கத்துக் கொள்ள காசி போனான் என்று அம்மா(அப்பா?)சொல் கிறார்.வேத மந்திரங்கள் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்குதான் காசியில் சொல்லிக்கொடுக்கப்படும். ஆனால் ஆர்யா பேமிலி அந்த வகுப்பைச் சேர்ந்தார் போல் நடை உடை பேச்சு பாவனைகள் சொல்லவில்லை. 




மொத்தத்தில் “நான் கடவுள்” தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல். 


1 comment:

  1. //கோர்ட் சீன் ரொம்ப ஓவர். போலீஸ் ஸ்டேஷன் ஆட்டமும் “கலெக்‌ஷ்ன்” உத்தி?”கோர முக” பிச்சைக்காரர் ஒரு திணிப்பு. shock value க்காக?//

    நல்ல விமர்சனம் தல..

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!