Monday, February 2, 2009

நம்ப முடியாத திகில் கதை



”ஆக்சிடெண்டல... மூளைக்கு நிறைய டேமேஜ்.உங்க பையன் brain dead ஆயிட்டான். உயிர்தான் இருக்கும்.ஆனா பிரயோசனமில்லை. எந்த இயக்கமும்இருக்காது. வருசக் கணக்கா இப்படியேத்தான் இருப்பான்.பிரிஜ்ல வைச்சக் காய் மாதிரிதான். ஒரு யோசனை சொல்றேன்.அவனோட உறுப்புகள தானம் அதாவது கிட்னி,லிவர்,இதயம், கண்ணு... அது பிறருக்கு உதவும்.இந்த பையன் சாவுலயும் ஒரு நல்ல காரியம் நடந்த மாதிரி. ஒரு கோடிப் புண்ணியம். யாருக்கும் கிடைக்காது.”

20 வயதில் இறந்துப் போன மகன் கணேஷ் பாபுவின் தாயும் தந்தையும் துக்கம் பொங்க டாக்டரேயே பார்த்தார்கள்.என்ன சொல்வதென்றே தெரியவில்லை.கடைசியாக தானம் செய்வதற்கு ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டார்கள்.

அடுத்த மூன்றாவது நாள் கணேஷ் பாபு ஆபரேஷன் டேபிளில் கிடத்தப்பட்டு டாகடர் குழு தன் வேலையை ஆரம்பிக்க தொடங்கியது .சீப் டாக்டர் மார்பில் மற்ற சில இடங்களில் பசைத் தடவி கீற ஆரம்பிக்க தொடங்கியதும்......

”சார்.. செத்துத் தொலைச்சாலும் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டீங்களே! எல்லா உறுப்பும் இருந்தாதான் மேல் உலகத்தில மதிப்பாங்க. அங்க ஆள் பாதி உறுப்பு பாதி”. கணேஷ் பாபு படுத்துக்கொண்டேப் புலம்பினான். 

 

5 comments:

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!