Wednesday, September 8, 2010

இளையராஜா - ஸ்ரீஏடுகொண்டல ஸ்வாமி டூயட் - பி.பி..ஸ்ரீநிவாஸ்


ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாளும் பத்மாவதி தாயாரும் பாடும் டூயட்.ஹிந்தோள் ராகம்? தெரிஞசா சொல்லுங்க பதிவர்களே..!

அருமையான தெலுங்கு மெலடி.மேஸ்ட்ரோவும் ஜானகியும் பாடுகிறார்கள். படம்: ஸ்ரீஏடுகொண்டல ஸ்வாமி.தமிழில் ஏழுமலையானின் மகிமை.படத்தில் கண்ணழகி பானுப்ரியா அண்ட் அருண்கோவில்.மற்ற பாடல்களும் இனிமை.


ஆரம்ப வயலின் இசை அருமை.நடுவில் வயலின் 2.58-3.15 அண்ட் 3.25-3.28 புல்லாங்குழல் அருமை.பெருமாளுக்கு தனி பக்தி இசைக்கோர்ப்பு?

தெலுங்குப் பக்திப் பாடல்களில் வரும் உணர்ச்சியை இப்பாடலிலும் காணலாம்.



என் அபிமான வெல்வெட் குரல் பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மேஸ்ட்ரோவின் இசையில் ஒரே ஒரு பாட்டுப் பாடியுள்ளார்.கிட்டத்தட்ட 30 வருடம் ஆகிவிட்டது.இன்னும் இனிமை மாறவில்லை. படம்: கடவுள் அமைத்த மேடை.(1979).
 


ராஜா இசையில்  இவர் குரலில் பாட்டு கேட்பது வித்தியாசமாக இருக்கிறது.

ரசிக்க வைக்கும் வரிகள்.

0.19-0.30 இசையில் ததும்பும் உணர்ச்சிகளை கவனிக்கவும்.பழையகிளாசிக் இளையராஜா இசை.”தென்றலே நீ பேசு” பி.பி.ஸ்ரீனிவாஸ்காரு எடுக்கும் இடம் இனிமை.சிவரஞ்சனி ராகம் சாயல் சில இடஙகளில்.

”வார்த்தைகள் தேவையில்லை... அன்பை நாம் பாராட்ட” அருமையான இடம்.




ஏழுமலையான் மகிமை தமிழ் பாடல்கள் கேட்க:
(தெலுங்குப் பாடலின் தமிழ் வெர்ஷன் “எந்த ஜன்மம்”)

ஏழுமலையானின் மகிமை

ஸ்ரீஏடு கொண்டல சாமி சாங்கஸ் டவுன்லோட்

No comments:

Post a Comment

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!