Monday, October 25, 2010

ங்கொய்யலா... தாங்கமுடியலடா..!

போன வாரத்தில் ஒரு மதிய வேளை.ICICI Bank ஏடிஎம் கியூவில் நின்றிருந்தேன்.பெரிய கியூ. செக்யூரிட்டியை காணவில்லை.அதில் ஒருவர்,எனக்கு அடுத்து நின்றவர், செல்லில் கத்திப் பேசிக்கொண்டு(கெட்ட வார்த்தையுடன்) இம்சை கொடுத்தார்.

தோற்றத்தில் டிசெண்டாக படித்தவர் போல் இருந்தார்.

அவரை நாசுக்காகப் பார்ப்பதும் முகம் சுளிப்பதுமாக மெதுவாக கியூ நகர்ந்தது.அவர் எதையும் சட்டைச் செய்யவில்லை. மேலும் குரலை உயர்த்திக்கொண்டு பில்ட் அப் கொடுத்தார்.அடுத்து சடாரென்று கியூவிலிருந்து விலகி ஏடிஎம்முக்குள் போய்விட்டார். மறுபடியும் கியூவில் முகம் சுளிப்பு. உள்ளே சென்றும் செல் பேச்சு.அதுவும் பணம் எடுக்கும் காட்சியைப் பார்த்தவாறு.

மூன்று  பேர்களுக்கு முன் பணம் (10000/-)எடுத்தவர் (எனக்கு ஓரளவு அறிமுகமானவர்,கொஞ்சம் முதுமையானவர்) அவர் அங்கு நிறபதை நாசூக்காக ஆட்சிபித்திருக்கிறார். அதற்கு அந்த மொள்ள மாரி சொன்ன பதில்:

”சார்... நா ரொம்ப டீசெண்டான ஆளு. வெளில வெய்யில் தாங்க முடியல.அதான் உள்ள வந்துட்டேன். செக்யூரிட்டியும் தெரிஞ்ச ஆளு.அதுவும் என் டர்ன் வரும்போதுதான் பணம் எடுப்பேன்”

டேய்....ங்கொய்யலா... தாங்கமுடியலடா..!

(நான் எடுக்கும்போதும் உள்ளேதான் இருந்தார்)

______________________________________________

போன மாதம் ஒருவர் வீட்டிற்குப் போய் இருந்தேன். வாசலில் திருஷ்டி பரிகாரமாக  ஏதோ ஒன்று ஒரு சணலில் தொங்கிக்கொண்டிந்தது.அதில்  நான்கு மாத ஒட்டடை.முடை நாற்றம். சுவற்றில் ”கண் திருஷ்டி” கணபதி போட்டோ. அதிர்ஷட இரும்பு ”யூ” வடிவ லாடம் கதவில். சுவற்றில் “ஐஸ்வர்யம்” “ஸ்ரீ” போன்ற சிவப்பு குங்கும எழுத்துக்கள். கதவை திறப்பதற்கு முன் இவ்வளவு இருக்கிறதே உள்ளே நுழைந்தால் எவ்வளவு வஸ்துக்கள் இருக்கும். அடி வயிறு பகீரென்றது.


உள்ளே நுழைந்தவுடன் wind chime bells. ஆனால் அது கம்பிகள் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. செருப்பு வைக்கும் இடத்தில் ஒரு தவளை பொம்மை. அதே என்னயே பார்த்துக்கொண்ட்ருந்ததால் பயந்துவிட்டேன். வாசலில் இருந்த பாத்ரூமை இடித்துக்கட்டி ஒரு பெரிய கண்ணாடி.அங்கேயும் ஒரு கண் திருஷ்டி கணபதி. மூலைகளில் ஜிகினா கண்ணாடிகள். சிரிக்கும் புத்தர்.சிரிக்காத புத்தர். ஹால் சுவற்றில் திருப்பதி வெங்கடசலபதி படம்.

மற்ற ரூம்களிலும் சி.பு, பெல்ஸ்,கண்ணாடி....etc etc etc.

இதெல்லாம் ஓகே.ஆனால் வீடு? அலங்கோலம். போட்டது போட்டபடி.சுத்தம்  ஒரு பைசாவுக்குக் கூட இல்லை.

புத்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.





டேய்....ங்கொய்யலா... தாங்கமுடியலடா..!
Cleanliness is next to Godliness டா!

6 comments:

  1. //டேய்....ங்கொய்யலா... தாங்கமுடியலடா..!//

    உண்மைதான்

    ReplyDelete
  2. நன்றி அன்பரசன்

    ReplyDelete
  3. நன்றி யூர்கன் க்ருகியர்.

    ReplyDelete
  4. ங்கொய்யால தாங்க முடியலை :)

    ReplyDelete
  5. நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!