Thursday, June 9, 2011

சினிமா பாட்டும் புராண/சரித்திர மேற்கோள்களும்

ஒரு கட்டம் வரை (1995 வரை?)தமிழ் சினிமா  டூயட் அல்லது சோலோ பாடல்களில் நிறைய புராண அல்லது சரித்திர கதாபாத்திரங்கள் மேற்கோள் காட்டப்படும்.அதுவும் 80க்கு முற்பகுதியில் அதிகம்.

உதாரணமாக.....

  1. கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா...காளிதாசன் சகுந்தலை(ஆலயமணி-1965)
  1. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்(நெற்றிக்கண்-1981)
  2. காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி காத்திருந்தாள்(வாழ்ந்துக் காட்டுகிறேன்)
  3. மதுரையில் பறந்த மீன் கொடியை....சேரன் வில்லை உன் கண்களில்(பூவா தலையா-1970?)
  4. வா வா கண்ணா வா.....காளிதாசன் காணவேண்டும்........ஷாஜகானைப் பார்த்ததில்லை ...(வேலைக்காரன்-1987)
  5. கம்பன் ஏமாந்தான் ... கன்னியரை மலர்(நிழல் நிஜமாகிறது-1978)
  6. ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே (கனிமுத்துபாப்பா-1972)
  7. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா(அவன்தான் மனிதன் -1975)
  8. ராதா ராதா நீ எங்கே...(மீண்டும் கோகிலா-1981)
  9. கங்கைகரைத் தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம்(வானம்பாடி-1963)
 இன்னும் நிறைய இருக்கின்றன.

காலங்கள் மாற சினிமாவின் கதைகளும் மாறின.பாடல்களும் மாறின.மக்களின் மனோபாவமும் மாறியது.

முக்கியமாக ஒரு கட்டத்தில் தாலி செண்டிமெண்ட்/கற்பு கதைகள் காணாமல் போயி புடவைக் கட்டிய கதாநாயகிகள் காணாமல் போயினர்.பதிலாக ’கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா” நாயகிகள் வந்தார்கள்.

கிலோ கிலோவாக கதையின் மையத்தைச் சுமக்கும் கதாநாயகி கதைகள் மாறின.டோட்டல் குடும்ப செண்டிமெண்டுக் கதைகளும் காணவில்லை.

அடுத்து தாடி வளர்த்து பட்ட மரத்தின் கிழ் நின்று கதாநாயகன் பாடும் தத்துவப் பாடல்கள் சுத்தமாக மறைந்தன.சிவாஜி கணேசன் இதில் பிஹெச்டியே வாங்கி இருக்கிறார்.

கடந்த பத்து வருடத்தில் ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

    10 comments:

    1. ஆயிரம் யானை கொன்றால் பரணி (நந்தா)

      முகுந்தா முகுந்தா (தசாவதாரம்)

      ReplyDelete
    2. This comment has been removed by the author.

      ReplyDelete
    3. அர்ஜுனா அர்ஜுனா அம்புவிடும் அர்ஜுனா...
      அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு...
      விண்ணும் மண்ணும் சொல்லும் ரம்பா ரம்பா..

      ReplyDelete
    4. வா.. சகி வா.. சகி வள்ளுவன் வாசுகி (அரசியல்)

      ..ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ...

      ReplyDelete
    5. நன்றி முரளிகண்ணன்

      நன்றி கார்த்திக்

      ReplyDelete
    6. https://profiles.google.com/ssrividhyaiyer/posts/L6Y8X7uopo8

      Find some more here. I shared your blogpost in the buzz.

      ReplyDelete
    7. Punnagai mannan poovizhi kannan... lot many songs are there. Today also there are some songs as pointed out by others are there but they have become rare. the trend has made it difficult to find out the language of the song with new ashion singers coming in and giving tamizh words an international touch which makes it difficult to understand the lyrics. There are many singers who come from other language speaking state like SPB, S.Janaki, P. Susheela, Surender, Jayachandran, K.J. Yesuda but they sang Tamizh songs very well.

      ReplyDelete
    8. நன்றி விதூஷ்

      ReplyDelete

    எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!