Friday, April 15, 2011

இளையராஜா King of Mellifluous Flute

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் இளையராஜாவின் புகழ் பாடுங்களேன் என்று பாடத்தான் வேண்டும்.பிரபஞ்சத்தில் புல்லாங்குழலுக்கு இந்த அளவிற்கு திரை இசையில் அணி(அழகு) சேர்த்தவர் மேஸ்ட்ரோ ஒருவராகத்தான் இருக்க முடியும்.

பிரமிக்கத்தக்க அளவில் புல்லாங்குழலுடன் விதவிதமாக லீலைப்புரிந்திருக்கிறார்.அதே பிரபஞ்சத்தில் முதலில் தோன்றிய இசைக்கருவி புல்லாங்குழலாகத்தான் இருக்கும் என்பது என் யூகம்.

குழல் பேசும் மொழிகள் பல.ஓவ்வொன்றும் வேறுபட்டவை.சில
ரகசியமானது.சில புரியாதவை.ரசிக்கக்கூடியவை.வேற்று பிரபஞ்ச மொழிகளும் இதில் அடக்கம்.


இந்த நாதங்கள் மனதில் ஊடுருவி கிளர்த்தும் காட்சிகள்/தீட்டும் ஓவியங்கள் விவரிக்க முடியாதவை.

He is a dictionary for  cinema light music flute.Magic Flute magician.

ஒரு இசைக்கலைஞனின் உன்னதம் அவன் இசைக்கும் இசையில் மட்டுமில்லாது தன் வசப்படுத்திய(mastering instruments) இசைக்கருவிகளின் மேன்மைகளும் வெளிப்படவேண்டும் அவன் இசையில்.

அந்த வகையில் All the musical instruments are at Ilaiyaraja"s delight.

இவரின் இசை மனதின் அடியில் வண்டல் போல் படிவதற்குக் காரணம் emotions....emotions ... emotions ... full of emotions!போதை அடிமை போல் ஆகிவிடுகிறோம்.ஒரு நவீன தொனியில் ஆத்மா கலையாமல் கொடுக்கப்படுகிறது.

உயர்தர சைவ உணவகம் மாதிரி உயர்தர இசை.You name it. I music it.

போவதற்கு முன் இசைஞானியின் விதவிதமான வேணுகாணத்தில் நனைந்தபடி போவோம்.
 



Flute-Ooranjaaram-Kakkaisirakinile.mp3

Flute-Sollividu Vellinilave-Amaithi Padai.mp3

Flute-Orampo Orampo.mp3

Flute-Aur Ek Prem Kahani - Naina.mp3 

Flute-Gnan Gnan Paada-Poonthalir.mp3

Flute-Shri Eadukondalaswami.mp3

Flute-Unnaivazhathi Paadukiren-OhoKaalaiKuyilgale.mp3

Flute-Madhuramari.mp3

Flute-Sharadendupaadi-Kaliyoonjalu.mp3

Flute-Pularkindrapozhuthu-Uliyin Oosai.mp3

Flute-84-Oh Vasantha Raja-Neengal Kettavai.mp3

Flute-Chinnakannan Azhaikiran-Kavikkuyil.mp3

தன் புல்லாங்குழல் இசைப் பயணத்தை அன்னக்(குயில்)கிளியுடன்தான் ஆரம்பித்திருக்கிறார்.முன்னால் இசை மேதைகளிடமிருந்து வாங்கி அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

முதல் கட்டம்:

நதியைத் தேடிவந்த கடல்-1980- எங்கேயோ ஏதோ
ராஜாவிற்கு முன் இசையில் புல்லாங்குழல் இந்தப் பாடலில் (இதுவும் ராஜாதான்)வருகிற மாதிரிதான் சம்பிரதாயமாக இருக்கும். சில விதிவிலக்குகளும் இருக்கிறது.
ஜெயலலிதாவும் “படாபட்” ஜெயலட்சுமியும்

Flute-NathiyaiThediVandhaKadal-Engeyo.mp3

அடுத்தக் கட்டங்கள்:(முதலில் நாம் நனைந்ததும் அடுத்தக் கட்டம்தான்)

இந்த மனதை வருடும் உணர்ச்சிகள் நவீன தொனியுடன் இசைக்கப்பட்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது. 

புல்லாங்குழல் -1
அன்னக்கிளி-1976-அன்னக்கிளி உன்ன தேடுதே
 0.12-0.18க்குள் இரண்டு தடவை குழல் நாதம் வருகிறது.வருவதற்கு முன் இரண்டுக்கும் எப்படி ஒரு இசை பில்ட் அப் கொடுக்கிறார் பாருங்கள்!

“தேடுதே” (0.24)என்று முடிக்கும்  இடத்தில் மெலிதாக குழல் வருடிக்கொடுக்கிறது.
Flute-Annakkili Unna Theduthu1.mp3
 
புல்லாங்குழல்-2

ஜானி-1980 -காற்றில் எந்தன் கீதம்
 Flute-KaatrilEnthan.mp3

புல்லாங்குழல் -3
ஹே ராம் - 2000-நீ பார்த்த பார்வை
பின்னணியில் புல்லாங்குழல் சிறு சிறு விரகதாப அலையாக எழுவது அதீத கற்பனை.Out of the world flute interlude!
Flute-Neepaartha-Hey Ram.mp3

புல்லாங்குழல்-4
சாதனை-1986 -ஓ வானம்பாடி 
இசைத்துளியை கவனமாக கேளுங்கள்.0.03 இருந்து இசைக்கப்படும் ஷெனாய்  நாதத்தில் 0.08-0.09லும் மற்றும் 0.11-0.12லும் பு.குழல் இசைத் துளிகள்  தொடுக்கப்படுகிறது.இது என் யூகம்.

முக்கால் ஷெனாய்யும் கால் புல்லாங்குழலும் (இசை)கூட்டணி.
Flute-Saadhanai-OhVaanampaadi.mp3

புல்லாங்குழல்-5
கடவுள்- 1997 -ஆதிசிவன் தோளில்
குழலின் நாதத்தில் ஜீவகளை சொட்டுகிறது.
Flute-Kadavul-AadhiSivan.mp3

புல்லாங்குழல்-6
மண்வாசனை -1983- பொத்திவச்ச மல்லிகமொட்டு
பட்டாம்பூச்சிகள் படபடத்தபடி பூவில் தேனை உறிஞ்சுவது  போல் ஒரு நாதம்.ஆச்சரியப்படுத்துகிறார்.பாரதிராஜா இந்த  மாதிரி இசைத்துளிகளுக்கு காட்சி  அமைக்கத் தடுமாறுவாராம்.

வித்தியாசமான சின்னச் சின்ன  அசட்டுத்தனம் இல்லாத hifi ஊதல்கள்.
Flute-PothiVechcha.mp3

புல்லாங்குழல்-7
இது நம்ம பூமி -1992 - ஆறடி சுவருதான்
0.17/0.21/0.25/0.29ல் நாதம் உச்சஸ்தாயில் போய் நம்மிடம் பேசுகிறது. ஆனால் உச்சஸ்தாயில் வேறு ஒரு இசைக்கருவியும் கலவையாக  வாசிக்கப்படுகிறது என்பது என் யூகம்.உச்சஸ்தாயில் அதன் ஜீவனே மாறுகிறது.
Flute-AaradiChuvarthan.mp3

புல்லாங்குழல்-8
நிழல்கள் - 1980-பூங்கதவே தாழ்திறவாய் 
0.11 பிறகு மென்மையான புல்லாங்குழல் படபடக்கப்போகிறது என்பதை யூகிப்பது கஷ்டம்.
Flute-PoongathaveThazh.mp3

புல்லாங்குழல்-9
ருசிகண்ட பூனை-1980 - என் நெஞ்சம் உன்னோடு
Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3


புல்லாங்குழல்-10
தம்பி பொண்டாட்டி -1992 - என் எண்ணம்
Mind blowing  romantic musical Flute! எவ்வளவு வர்ணங்கள் காட்டுகிறார் ராஜா.
Flute-Un Ennam-Thampi Ponndatti.mp3

புல்லாங்குழல்-11
தீர்த்தக்கரையினிலே -1987- விழியில் ஒரு கவிதை படித்தேன்.
அடுத்தக் கட்டம் என்பதற்கு  பல பல உதாரணங்களில் ஒன்று. கதம்ப இசையில் குழல் சிறிதாக ஒத்தப்பட்டு அலங்காரப்படுத்தப்படுகிறது.

0.03-0.10 பிரமிக்க வைக்கிறார்.real stunner!தேஷ் ராக சுரங்களும் தெறிக்கிறது.
Flute-Vizhiyil Oru Kavithai-Theerthakkaraiyinile.mp3


கிட்டத்தட்ட முதல் 15 வருட மேஸ்ட்ரோவின்  முக்கால்வாசிப் பாடல்களில் வயலினுக்கு அடுத்து புல்லாங்குழல் நாதத்தில் தடுக்கி விழுவீர்கள்.இதில்நிறைய கிராமம் சார்ந்தப் படங்கள்.

மேஸ்ட்ரோவின் இசையின் எப்பவுமே ஆச்சரியப்படுவது :-
  • ஒரு இசையிழையும் அதனுடன் துரிதகதியில் இன்னொரு இசையிழை சேரும்போது அசட்டுத்தனம் இல்லாமல் இணைவது... இசைவது...
  •  அபஸ்வரம் தட்டாமல் இணைவது
  • ”ஆத்மா”(soul) கலந்து இந்த  இணைவதும் இசைவதும்  

வெஸ்டர்ன் கிளாசிகல் பின்னணியில் ஒரு பு.குழல் நாதம்:
அஜந்தா-2007 -தூரிகை இன்றி.
Flute-Thoorigaiindri-Ajantha.mp3

முதல் மரியாதை-1985:
மேஸ்ட்ரோ  புல்லாங்குழலை இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டுள்ளார்.அத்தனை புல்லாங்குழல் நாதங்கள். தமிழ்நாடு மறக்கவே முடியாது இந்தப் புல்லாங்குழல் நாதங்களை.

ராசாவே வருத்தமா! கூ கூ!

நவீனப்படுத்தப்பட்ட கிராமிய சாயல் கொடுக்கப்பட்டுள்ளது.குழலின் துளைகளினிடையே கசியும் உணர்ச்சிகள் விவரிக்க முடியாதவை.

Flute-Antha Nilavathan-Mudhal Mariyathai.mp3

Flute-Vettiveru Vaasam-Mudhal Mariyathai.mp3

Flute-Mudhal Mariyathai-PoongatruThirumbuma.mp3

பிரமிக்கத்தக்க விஷயம்:

63 வகையான புல்லாங்குழல் இடையிசைகள்(interludes) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.ஒன்றின் சாயல் மற்றதில் இல்லை.back to back xeroxம் இல்லை. It is a amazing achievement!

காரணம்:
பல வித கலவைகளில் (combinations) இசை கோர்க்கப்படுகிறது.

எப்படி சாத்தியமாகிறது இந்த கலவைகள்?

  • இசைக்கருவிகளைப் பற்றிய நுண்ணிய அறிவு
  • நோட்ஸ் எழுதும் வேகம்/திறமை
  • வெஸ்டர்ன் கிளாசிகல்/கர்நாடக இசை/கிராமியம்,இந்துஸ்தானி.. எல்லாம் விரல் நுனியில்
  • மாற்றிப்போடும் தாளங்கள்/இசைக்கருவிகள்
  • permutation & combination
  • மாத்தி யோசி கான்செப்ட்
  • காட்சியமைப்பு
  • சில வித்தியாசமான இயக்குனர்கள்
  • அனுபவம்
டூயட்டில் புல்லாங்குழல்:
சின்னத்தாயி-1992- நா ஏரிக்கரைமேலிருந்து.
மனதுக்கு நெருக்கமான பாட்டு.
Flute-Naan Eraikkaraimel-Chinnathayee.mp3

கோபுர வாசலிலே-1991- காதல் கவிதைகள்
அமர்க்களமான அரேஞ்மெண்ட்.0.46-0.47 ல் கலக்கல்.054-1.18 பரந்த  வானில் ஏகாந்தமாக கூவிக்கொண்டுச் செல்லும் ஒற்றைப்பறவையின் மொழி.
Flute-Kadhalkavithaigal-Gopura Vaasalile.mp3

ஆராதனை-1981 - ஒரு குங்கும செங்கமலம்
காட்டில் இந்த இசையை இசைத்தால் பதிலுக்கு சத்தியமாக கூவத்தான் செய்யும் பெயர் தெரியாத பறவைகள்.
Flute-Oru Kunguma-Aaradhnai.mp3

கனிவு உணர்ச்சி:
உதிரிப்பூக்கள்-1979-அழகிய கண்ணே
Flute-UthiriPookal-AzhagiyaKanne.mp3

கண்ணே கலைமானே-1988-நீர் விழ்ச்சி தீமூட்டுதே
Flute-Neervizhchi-Kanne Kalaimane.mp3

வித்தியாசமான உணர்ச்சிகள் வித்தியாசமான நாதங்களில்:

மோகமுள்-1995-கமலம் பாத கமலம்
Flute-KamalamPaadha-Mogamull.mp3

பாக்யாதேவதா - 2009-அல்லிப்பூவே மல்லிப்பூவே
Flute-Allipoove-Bhagayadevatha.mp3

மணிப்பூர் மாமியார்-1982 -ஆனந்த தேன்காற்று
Flute-Aanandhathenkaatru-ManipurMamiyar.mp3

வருஷம்-16 -பூ பூக்கும் மாசம்
ராஜாவின் மாஸ்டர் பீஸ்.வீணையும் புல்லாங்குழலும் தனியாக உரையாடிபடியே கடைசியில் இணைவது அருமை.Awesome maestro! He is music magician.இந்த மாதிரி இசைக்கோர்ப்புகள் அனாசியமாகப் போடுகிறார்.
Flute-Varusham-16-PooPookkum.mp3

முரட்டுக்காளை-1980- மாமன் மச்சான்
தாளம் புல்லாங்குழலை தோற்கடிக்கிறது.
Flute-MamanMachan-Murattu Kalai.mp3

அரண்மனைக்கிளி-1993-ராசாவே உன்னை விட
 

”அன்னக்கிளி உன்ன தேடுதே”வின் 1993 வெர்ஷன். ரெண்டுமே ஜானகிதான்.0.35-0.54 அட்டகாசம்.இந்தப் பாட்டின் மெட்டை மிகவும் ரசிப்பவன்.
Flute-Raasave Unnai-Aranmanaikili.mp3

சிங்காரவேலன் - 1992 -தூது செல்வதாரடி.
புல்லாங்குழலோடு தபலாவும் தட்டப்படும் இடம் 0.10 அருமை ரம்யம்.
Flute-ThoodhuSelvadharadi-Singaravelan.mp3

என்றும் அன்புடன் - 1992 - நிலவு நிலவு வந்தது


மெல்லத் திறந்தது கதவு -1986 - குழலூதும் கண்ணனுக்கு
 Flute-KuzhaloothumKannanukku.mp3

மோகமுள்-1995-சொல்லாயோ
Flute-Sollayoo-Mogamull.mp3


Flute-Sevanthipoomudicha-16Vayathinile.mp3

Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3

Flute-SalangaiOli-VaanPole.mp3

Flute-Bharathi-EthilumIngu.mp3

Flute-ThendraNeePesu-Kadavul Amaitha Medai.mp3

Flute-SandhyavukkuVirinja-Manjum Kulirumi.mp3

ரோசாப்பூ ரவிக்கைக்காரி-1979-என்னுள்ளில் எங்கோ
இந்தப்பாட்டின் ஒரு துளியும் அதன் உணர்ச்சிகளும் மனதைக் பிசையக் கூடியது.b>0.36-0.55 இரு புல்லாங்குழல் பேசும் மொழி ரகசியமானவை.அதன் அந்தரங்கம் புனிதமானவை.

இளையராஜாவின் முதல் ஐந்து பாடல்களில் இது கட்டாயம் இடம் பிடிக்கும்.


மெட்டி-1982-சந்தக்கவிகள் பாடிடும்
புல்லாங்குழலுக்கு இணையாக கோரஸ் வயலின்கள் டால்பின் மீன்கள் போல துள்ளி விளையாடுகின்றன.
Flute-Sandhakavigal-Metti.mp3

Flute-KalaKalakkum-Eramana Rojave.mp3

கிளாசிகல் ரொம்ப ஸ்டைலாக(மல்லுவேட்டி).
Flute-MalluvettiMinor-Kathiruntha Malli.mp3 

செந்தாழம் பூவில் வந்தாடும் புல்லாங்குழல் நாதங்கள்.
 Flute-Senthazham Poovil-Mullum Malarum.mp3

 வித்தியாசமான சின்னச் சின்ன நாதங்கள்:-

லேடிஸ் டெய்லர்-1986(தெலுங்கு)-பொரப்பட்டித்திதி
Flute-Ladies Tailor-Porapaatidhi.mp3

ஆ ராத்திரி -1983-நீலிமதன்(மலையாளம்)
Flute-Aa Rarathri(movie)-Ee Neelimathan.mp3

மகளிர் மட்டும்-1994 கறவ மாடு மூணு
Flute-KaravaiMaadu-Magalirmattum.mp3

மரகதவீணை-1986 -மரகதவீணை இசைக்கும்
Flute-MaragathaVeenai.mp3

உள்ளம் கவர்ந்த கள்வன் - 1988

குணா-1991 - உன்னை நானறிவேன்

குருசிஷ்யன் -1988 - உத்தமபுத்திரி நானு

உதிரிப்பூக்கள்-1979-ஹேய் இந்த பூங்காற்று

கோடை மழை-1986 -துப்பாக்கி கையிலெடுத்து
Flute-KodaiMazhai-ThupakiKayil.mp3

என் அருகில் நீ இருந்தால் - 1991
Flute-Udhayam Neeye-En Arugil Nee.mp3


டெயில் பீஸ்:
(30-03-11)ஆ.விகடன் கேள்வி:“ மத்த இசையமைப்பாளர்களை ரசிப்பீர்களா?”


இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பதில்: “ ஒரே ஒரு இசையமைப்பாளரை ரசிப்பேன். அவர் இளையராஜா. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவருக்கு “மாஸ்ட்ரோ”னு சின்ன பட்டத்தைக் கொடுத்திருக்காங்க. அந்த யானை சாப்பிட்டுப் போட்ட மிச்சத்தை வெச்சுத்தான் நாங்க விளையாடறோம்!’


47 comments:

  1. நல்ல தொகுப்பு...
    பொருமையாக அனைத்தையும் கேட்பேன்..

    அப்படியே டவுன்லோடு லிங்க் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

    ReplyDelete
  2. இந்த தொகுப்புல எனக்கு பிடிச்ச ஃப்லூட்ஸ்

    சொல்லிவிடு வெள்ளி நிலவே!!

    மதுர மரிக்கொழுந்து வாசம் !!!

    ஓஹ் வசந்த ராஜா

    சின்னக்கண்ணன் அழைக்கிறான் (chance less flute)

    அன்னக்கிளி உன்னைத்தேடுதே !!

    நீ பார்த்த பார்வையின்

    பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

    பூங்கதவே தாழ் திறவாய்

    அந்த நிலாவத்தான் நான் கையில பிடிச்சேன்

    வெட்டி வேறு வாசம் ( Chance less )

    நான் ஏரிக்கரை

    காதல் கவிதை

    நீர் வீழ்ச்சி ( Chance less )

    பூ பூக்கும் மாசம் ( பாட்டுல இந்த ஃப்லூட் கேட்டாலே இனம் புரியாத சந்தோஷம் வரும்)

    ராசாவே உன்னை விட மாட்டேன் ( இதையே நீங்க பதிவின் தலைப்பா வச்சிருக்கலாம் )

    குழலூதும் கண்ணனுக்கு ( Chance less )

    வான் போலே வண்ணம் கொண்ட

    என்னுள்ளே எங்கோ

    கலகலக்கும் மணியோசை ( Chance less )

    செந்தாழம் பூவில் ( Chance less )

    ReplyDelete
  3. உங்களைப்போல ராஜா சாரை அணு அணுவாய் ரசிப்பதற்க்கு இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்

    கிரேட் மேன் :)

    ReplyDelete
  4. ராஜாவின் இசை நம் உயிரை ஊடுருவதற்குக் காரணம் அவர் வயலினில் இசைப்பது நம் நரம்புகள். குழலில் இசைப்பது நம் சுவாசம்.

    ராஜாவின் ஆஸ்தான Flautist அருண்மொழி பெருந்தவம் செய்திருப்பார்.

    நீ பாதி நான் பாதி, மண்ணில் இந்தக் காதலன்றி, பூமாலையே தோள் சேரவா மேலும் பல பாடல்களில் வரும் குழல் முதலிசை/இடையிசை என்னைக் கவர்ந்தவை :-)

    ReplyDelete
  5. //All the musical instruments are at Ilaiyaraja"s delight.

    இவரின் இசை மனதின் அடியில் வண்டல் போல் படிவதற்குக் காரணம் emotions....emotions ... emotions ... full of emotions!போதை அடிமை போல் ஆகிவிடுகிறோம்.ஒரு நவீன தொனியில் ஆத்மா கலையாமல் கொடுக்கப்படுகிறது.

    உயர்தர சைவ உணவகம் மாதிரி உயர்தர இசை.You name it. I music it.// :-) மிகவே உண்மை :-) மேலும் இதனுடன் கேளடி கண்மணி படத்தில் வரும் "நீ பாதி நான் பாதி" பாடலின் புல்லாங்குழல் இடையிசை மிகவே அற்புதமான ஒன்று அதையும் இங்கே பகிர்ந்துகொள்ள விருப்பம் :-)
    http://bit.ly/eptdHG

    ReplyDelete
  6. அண்ணா..இந்த வாட்டி பிளேயர் ரொம்ப கிளியரா இருக்கு...எந்த பிரச்னையும் இல்லை...கேட்டுட்டே தான் இந்த பின்னூட்டம்...வழக்கம்போலே இப்பவும் மலைக்கிறேன்.புதிதாய் தெரிஞ்சு கொள்கிறேன்...

    ReplyDelete
  7. விஜய் அந்தோனி சொன்னதை ஒரு கோடி தடவைக்கும் மேலே ஆமோதிக்கிறேன்...

    ReplyDelete
  8. உங்களின் உழைப்பிற்கு ராயல் சல்யுட் நண்பரே...
    இந்த முயற்சி இடைவிடாது தொடரவேண்டும்...........

    ReplyDelete
  9. # கவிதை வீதி # சௌந்தர்

    நன்றி செளந்தர்.

    //அப்படியே டவுன்லோடு லிங்க் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. //

    மெளசை வைத்து வலது சொடுக்கினால் DLOADவரும் என்பது என் யூகம்.

    ReplyDelete
  10. April 15, 2011 3:15 PM
    ப்ரியமுடன் வசந்த் said...

    // உங்களைப்போல ராஜா சாரை அணு அணுவாய் ரசிப்பதற்க்கு இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்//
    மேஸ்ட்ரோ அப்படியே நம்பள புல்லரிக்கவிட்டு ரசிடாங்கறாரு.

    நன்றி வசந்த்.
    கிரேட் மேன் :)

    ReplyDelete
  11. வாங்க கார்த்திக்.வருகைக்கு நன்றி.

    //ராஜாவின் இசை நம் உயிரை ஊடுருவதற்குக் காரணம் அவர் வயலினில் இசைப்பது நம் நரம்புகள். குழலில் இசைப்பது நம் சுவாசம்.//

    சூப்பர்.அதேதான்.soul இல்லாத எந்த இசையும் இசை அல்ல.

    ReplyDelete
  12. மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இந்தப் பின்னூட்டம். எப்படி இந்த இடுகையில் இருந்து கடந்து போகப்போகிறேன்!!

    ReplyDelete
  13. Aishwarya Govindarajan said...

    //கேளடி கண்மணி படத்தில் வரும் "நீ பாதி நான் பாதி" பாடலின் புல்லாங்குழல் இடையிசை மிகவே அற்புதமான ஒன்று அதையும் இங்கே பகிர்ந்துகொள்ள விருப்பம் :-) //

    ஆமாம் அற்புதமான ஒன்று.

    ReplyDelete
  14. இளையராஜாவின் புகழை, இசை கீதத்தை,ரசனையாக, அனுபவித்து, அதை எழுத்தாக்கி நீங்கள் தொடர்ந்து செய்யும் யாகம் , அனலாய் பரவட்டும்.

    ReplyDelete
  15. நல்ல ரசனை நண்பா உங்களுக்கு
    பகிர்வுக்கு நன்றி :-))

    ReplyDelete
  16. மிக அருமையான தொகுப்பு ரவி.உங்களின் பலமணி நேர உழைப்புக்கு ஒரு சலாம் .

    வாரம் ஒன்றாக இந்த புல்லாங்குழல் இசை என் செல்பேசி ரிங்க்டோனாக ஒலிக்கும் :-)

    அமைதிப்படை படத்திற்கு இசை அமைத்தது ராஜாவாக இருந்தாலும் "சொல்லிவிடு வெள்ளிநிலவே " பாடல் மட்டும் கார்த்திக்ராஜா இசையமைத்தது என்று சொல்லக் கேள்வி.ராஜா இசையமைத்த ரஜினி நடித்த பாண்டியன் படத்தின் "பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலால " பாடலும் அவ்வாறே.என்னால் இதை 100 % உறுதி செய்ய முடியவில்லை.தெரிந்தவர்கள் சொல்லலாம்.

    ReplyDelete
  17. நன்றி மற்றும் வாழ்த்துகள். அற்புத படைப்பு இது.

    ReplyDelete
  18. @கே.ரவிஷங்கர், "நீ பாதி நான் பாதி" பாடலின் அக்குழலிசைக்கான லிங்க்கினை மேலே என் முந்தைய கமெண்டில் பகிர்ந்துள்ளேன் ஆனால் அது சொடுக்குவதர்க்குத் தகுந்தவாறு சரியாகப் பதிவாகவில்லை மன்னிக்கவும்:( ஆகையால் அதனை கட் காப்பி பேஸ்ட் செய்துகொள்ளவும் :). மேலும் , அதைபோல் கண்களும் கவிபாடுதே படத்தில் வரும் "மாலை நிலா மஞ்சளிலே" பாடலில் ராஜா அவர்களும் மஞ்சரியும் பாடும் வரிகளுக்குப் பின்னணியில் ஏதோ சட்டென நம் கால்களை நனைத்துவிட்டு செல்லும் அலைகள் போல மிகவே மெலிதாய் விட்டு விட்டு ஒலிக்கும் குழலிசை,மிகவே அருமை,மிகவே ரசிக்கும் ஒன்று கூட.மற்றும் உங்கள் தயவால் இன்னும் அந்த இசையை அணுஅணுவாய் ரசிக்கின்றோம் நாங்கள் ஆக இதுபோன்ற படைப்புகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  19. அருமைய்யா அருமை..! கலக்கீட்டிங்க.

    இந்த இடுகையை பண்டிட் ஹரிபிரஸாத் சௌராஸியாவிற்கு சமர்பிக்கலாம்.

    ReplyDelete
  20. நன்றி ஆனந்தி(கிடார் பதிவு பார்த்தீங்களா)

    நன்றி மாணவன்

    ReplyDelete
  21. வாங்க எம்.எம்.அப்துல்லா. வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.

    காவிரி கணேஷ் நன்றி.

    ReplyDelete
  22. நன்றி கார்த்திக்

    நன்றி ஸ்ரீமதன்
    //அமைதிப்படை படத்திற்கு இசை அமைத்தது ராஜாவாக இருந்தாலும் "சொல்லிவிடு வெள்ளிநிலவே " பாடல் மட்டும் கார்த்திக்ராஜா இசையமைத்தது என்று//

    முதன் முறை கேள்விப்படுகிறேன்.ஆனால் பு.குழலோடு வயலின் உரசல்கள் ராஜாவின் பாணி தெரிகிறது.தாளமும் சற்று வித்தியாசப்படுகிறது.

    சைக்கிள் கற்றுக்கொள்ளும்போது பையன் சீட்டிலும் அப்பா காரியரிலும் உட்கார்ந்து பிடித்தவாறு கற்றுக்கொடுப்பதுப் போல்(???????)ஒரு இசையோ?

    ReplyDelete
  23. நன்றி ஜோதிஜி

    Aishwarya Govindarajan said...

    // "நீ பாதி நான் பாதி" பாடலின் அக்குழலிசைக்கான லிங்க்கினை மேலே என் முந்தைய கமெண்டில் பகிர்ந்துள்ளேன் ஆனால் அது சொடுக்குவதர்க்குத் தகுந்தவாறு சரியாகப் பதிவாகவில்லை மன்னிக்கவும்://

    கொஞ்சம் டைம் கொடுங்கள்.சேர்க்க முயற்ச்சிக்கிறேன்.இல்லாவிடடால் பாகம்-3ல் சேர்த்து விடலாம்.

    // கண்களும் கவிபாடுதே படத்தில் வரும் "மாலை நிலா மஞ்சளிலே" பாடலில் ராஜா அவர்களும் மஞ்சரியும் பாடும் வரிகளுக்குப் பின்னணியில் ஏதோ சட்டென நம் கால்களை நனைத்துவிட்டு செல்லும் அலைகள் போல மிகவே மெலிதாய் விட்டு விட்டு ஒலிக்கும் குழலிசை,மிகவே அருமை,மிகவே ரசிக்கும் ஒன்று கூட//

    பாடலை அறிமுகம் செய்ததற்கு நன்றி ஐஸ்வர்யா.முதன் முறை கேட்கிறேன்.First interlude is absolutely divine and soulstirring.ஆனால் புல்லாங்குழல் மாதிரி தெரியவில்லை.மறுபடியும் நாளை கேட்கிறேன்.ராஜாவின் இசையில் இது ஒரு சவால்.இசைக் கருவிகளைக் கண்டுப்பிடிப்பது.

    நன்றி.

    ReplyDelete
  24. நன்றி இந்தியன்.

    ReplyDelete
  25. ரொம்ப நாளாய் எதிர்பார்த்தது நன்றி :))

    ReplyDelete
  26. 2 words - Awesome collection!!!

    Thank you very much.....!

    ReplyDelete
  27. தல

    இந்த பதிவை படிக்கும் போது தப்பு உணரும் போதும் முதல் மரியாதையில் அப்படியே புல்லாங்குழல் எல்லாம் மேல பறக்கும் பாருங்க அப்படி இருந்துச்சி மனசு ;)

    \\மேஸ்ட்ரோ புல்லாங்குழலை இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டுள்ளார்\\

    மிக அற்புதமான புல்லாங்குழல் இசை அதுவும் அந்த செவலி இறந்த பின்பு அவளை அந்த ஆற்றில் இருந்து தூக்கும் போதும் அதை அவனோட காதலன் பார்க்கிறதுமுன்னு என்று புல்லாங்குழலின் மூலமாகவே அந்த ஒட்டுமொத்த உணர்வையும் உணர்த்தியிருப்பார் !

    உணர்வுகளை இசையில் சொல்லக்கூடியவன் இசை தெய்வம் ஒருவரே ;)

    ReplyDelete
  28. உங்களைப்போல் இப்படி தனித்துவமாக இளையராஜாவின் இசையை ரகம்பிரிப்பது சிறப்பான விசயம் பாராட்டுக்கள் நண்பரே!

    ReplyDelete
  29. அருமையான தொகுப்பு.இது மாதிரி மனதை இசைய வைக்கும் புல்லாங்குழல் இசையை எப்படியாவது கத்துக்கணும்ன்னு நிறைய தடவை முயற்சி செய்தும் வெறும் காத்துதான் வருது. :(

    ReplyDelete
  30. இன்னுமொரு அருமையான தொகுப்பு.. மிக்க நன்றி ரவி.. :)))

    ReplyDelete
  31. அடேயப்பா இசைஞானியின் குழலை அலசி ஆராய்ஞ்சு அசத்தியிருக்கீங்க. உபயோகமான பதிவு. நான் பண்டிட் சௌராசியாவின் பரம ரசிகை. திரை இசையின் சௌராசியா, குழலிசையை அற்புதமாய் உபயோகப்படுத்தும் இசைஞாநிதான்.

    ReplyDelete
  32. நன்றி ஆயில்யன்

    நன்றி சித்ரா

    நன்றி கோபிநாத்
    நன்றி நேசன்

    ReplyDelete
  33. நன்றி சேலம் தேவா

    //புல்லாங்குழல் இசையை எப்படியாவது கத்துக்கணும்ன்னு நிறைய தடவை முயற்சி செய்தும் வெறும் காத்துதான் வருது.//
    ஹா ஹா ஹா.... வரும் சார். விடாத முயற்ச்சி செய்யுங்க.

    நன்றி இனியவள் புனிதா

    நன்றி சென்ஷி

    ReplyDelete
  34. //அமைதிப்படை படத்திற்கு இசை அமைத்தது ராஜாவாக இருந்தாலும் "சொல்லிவிடு வெள்ளிநிலவே " பாடல் மட்டும் கார்த்திக்ராஜா இசையமைத்தது என்று சொல்லக் கேள்வி.ராஜா இசையமைத்த ரஜினி நடித்த பாண்டியன் படத்தின் "பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலால " பாடலும் அவ்வாறே.என்னால் இதை 100 % உறுதி செய்ய முடியவில்லை.தெரிந்தவர்கள் சொல்லலாம்.
    // அமைதிப்படை படத்திற்க்கு பின்னனி இசை அமைத்தது கார்த்திக் ராஜா என்று மணிவண்னன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பாண்டியன் படபாடல் கார்த்திக்ராஜா இசை என்று டைடில் கார்டிலே போட்டிருப்பார்கள்.

    ReplyDelete
  35. மிக அருமையான தொகுப்பு. நன்றி!

    ReplyDelete
  36. Excellent! Awesome! Great work and interesting research. Thanks a lot.
    Regards
    Sudharsan

    ReplyDelete
  37. நன்றி வித்யா

    நன்றி செந்தில்

    நன்றி முகில்

    நன்றி சுல்தான்

    நன்றி சுதர்ஷன்

    ReplyDelete
  38. தொகுக்கவே ரொம்ப மெனக்கெட்டுயிருக்கனுமே?

    ReplyDelete
  39. இன்னும் முழுவதும் கேட்கவில்லை... கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
    உழைப்புக்கும், தொகுப்புக்கும் நன்றி சார்...

    ReplyDelete
  40. பெரும்பாலானவை பல நூறு முறை கேட்ட பாடல்கள்தான். இருந்தாலும் உங்கள் விளக்கங்களுடன் புதிதாய் கேட்பது போல் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  41. D.R.Ashok said...

    //தொகுக்கவே ரொம்ப மெனக்கெட்டுயிருக்கனுமே?//
    கஷ்டம் இருக்கு. ஆனால் முன் திட்டம் இருந்தால் கஷ்டப்படவேண்டும்.

    நன்றி.

    ReplyDelete
  42. நன்றி தமிழ்ப்பறவை

    நன்றி செல்வா

    ReplyDelete
  43. நல்ல அனலைஸிஸ்! இதையெல்லாம் ஒரு புத்தகமாக போட்டு ராஜாவிடமே காண்பித்து வெளியிடலாமே?

    ReplyDelete
  44. கலக்கிட்டீங்க கே.ரவிஷங்கர்.

    ReplyDelete
  45. நன்றி ரவிஷா

    நன்றி தவறு

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!