Monday, July 25, 2011

தல அஜித்து...நாங்கூட்தான் ஆடிக்றேன் மங்காத்தா

”ரொம்போ ஷ்டைல்லா தல சூட்டு கோட்டு போட்டுகினு வெள்ளாடு மங்காத்தா விடமாட்டா எங்கத்தான்னு  பொன்னுகளோட குரூப்பா  ஆடிகினே பாட்றாரு”.
தல இத்கூடத்தான் மங்காத்தா வெள்யாடு போறயா?

”அல்லோ பிரதர்ஸ்... சிஸ்டர்ஸ்... மங்காத்தான்ற ஜூது,( சீட்டு)கட்டு வச்சுகினு  ரவுடிங்க அல்லாங்காட்டி பொறுக்கி பசங்க அல்லாங்காட்டி சோமாரிங்கதான் முக்கா வாசி வெள்ளாட்ர கேமு. துட்டு பந்தியம் கட்டுவாங்க.கால்வாசி மாடி வீடுங்கள்ள அல்லாகாட்டி அய்யர் வுடுங்கள்ளா சூதுக்கு பத்தியா புளியாங்கொட்ட,கோலி,மேட்சி பாக்சு, லேபிள் வச்சு வெள்ளாடுங்க கொயிந்திங்க”.

”இத்தொட்டு தாம்பரம் -பீச் ட்ரெயினு  ரூட்டு தண்டவாளத்தாண்ட லுங்(கி )கட்டிகினு அத்தொட்டு குந்திக்கினு காதுல பீடி சொருவிகினு  வெள்ளாடனும். இது மெட்ராஸ்ஸாண்ட. ஏன் குந்திக்கிற? எனி மூவ்மெண்டு போலீஸ்காரன் வருவான்.கபால்லுன்னு எந்திரிச்சு ஒட்லாம்.அத்தொட்டு ட்ரெயின் டிராக்காண்ட போலீஸ்காரன் வரமாட்டான்.அத்தொட்டு சைக்கிள் தள்ளிகினு உள்ள வர முடியாது”.

”மாம்பலம் தாண்டி  கோடம்பாக்கம் எல்ட்ரிக் ட்ரெயின் பாஸ் ஆவ சொல அல்லாங்காட்டி கோடம்பாக்கம் செத்பட் ரூட் பாஸ் ஆவ சொல பாத்தின்னா நம் பசங்க ஜீட்டா ஆடிகினு இருப்பானுங்க. தண்டவாளத்து ஒட்டி இருக்கிற செவத்த ஒடிச்சி வச்சுருப்போம்”.

”கன்னுங்களா... இது இப்பத்தி கத இல்ல. எல்லாம் முட்ஞ்சி போச்சு.ரொம்ப ரேர்ரா வெள்ளாட்றாங்க”.

”ரம்மி, மொத்த கட்டு ஆடனும்னா நேரம் ஆகும். சட்புட்ன்னு பாஸ்ட்புட்டு மாதிரி முடியாது.அத்தொட்டு ...த்தா நம்மாளு நாலு பேருக்கு வெள்ளாட தெரியாது.ஆபிசரு கிளப்ல வெளயாடுவாங்க.அத்தொட்டு அதுல அட்த கை பாத்து உள்ள புட்சி  ஆடனும்.இவனுங்க முட்டா கூங்க.உஜார புட்சு ஆட தெரியாது.தெரிஞ்சவன் ரெண்டு பேரு பட்டாபிராம் போய்ட்டானுங்க”.

”ரம்மில ஒரு பேஜாரு இன்னா தெரியுமா, ஹண்ட் ஆனாவ(ன்) ஆட்றவன் பக்கத்துல உட்காந்திகினு ” இத எடு அது போடு”ன்னு அட்வைஸ் குடுத்துகினு பேஜார் பன்னுவான்.பெர்சனலா வெள்ளாட உடமாட்டான்.கன்பீஸ் பன்னுவான்”.

”அது சரி எங்க் கட்டு பாத்துக்கிறியா?”


”ஓவ்வொரு சீட்டு பின்னால பாரின் ஆக்டர் குட்டி ஒன்னு  மார காட்டிகினு போஸ் குடுத்துகினு இருக்கும்.அந்த கட்டுதான் வாங்கினு வருவான் சொம்பு கஜேந்தரன்.பர்மா பஜார்ல கெடைக்கும்.சொம்ம பள்பள்ன்னு இருக்கும்.மேல பாத்திகுனே சர்சர்ன்னு  அத்தினி பேர்க்கும் காடு போடுவான் கன்சன்(கணேசன்)”.

”ஜுது பேரு மங்காத்ததான்  ஆனா ஆட்டம் ஸ்டார்ட் ஆவசொல “உள்யா? வெலியா?” கேட்பானுங்க.இதுக்கு உள்ள வெளியேன்னுட்டு ஒரு பேரு இருக்குது. சால்டு கோட்டர்ஸ்ஸாண்ட இத்தான் ஆடுவானுக”.


”அது இன்னா மங்காத்தா? பேர நெனைக்கசொல ஒரு ஐடியா வர்து.குயின் பேஸ் கட்டு பாத்தியா.ஆத்தா (அம்மன்) பேஸ் கட்டு மாதிரி இல்ல.பொட்டுவச்சு கீரிடம் வச்சம்னா அசல்லா ஆத்தாதான். போர்ட் டிரஸ்ட் ஆண்ட ஒரு அம்மன் கோவிலு. மொகம் ஒண்டிதான் தெரியும். பஸ்ட் பஸ்ட்ல ஆட்னவன் இத பாத்து  மெர்சலாயிட்டுகிறான். “ஆத்தா... மங்காத்த”ன்னு கும்பிட்டுஆரம்பிச்சிட்டுக்கிறான்.அதுதான் மங்காத்தான்னு ஒட்டிக்கிச்சு”.

”ஆனா ரம்மில குயின் எடுத்தா ஒரு கிஸ் கொடுத்துட்டுதான் கட்டுவுள்ள சொருகுவோம்.அங்க ஆத்தா கெடயாது.தொரசாணி குயினுதான்”.

”இத்தோட ரூல்ஸ் என்னான்னு தெரியுமா. மொதல்ல துட்டு பெட்டு கட்னம். நானு அஞ்சு ரூபா பார்ட்னர் அஞ்சு ரூபா.மொத்தம் பத்து ரூபா. இத பொதுல வச்சிடனும்”.

”கட்ட நல்ல குலுக்கிட்டு பார்ட்னராண்ட ஒரு கார்டு உருவ சொல்லனும். அது மூனு ஆட்டின்னு வை.அத ஓபனா தர்ல போட்டுன்னம். அத்தொட்டு உள்ளவா வெள்யாவான்னு கேட்கனும். வெளியேன்னு கண்டி சொல்றான்னு வை கையாண்ட இருக்கிற கார்டுங்கள ஒன்னு ஒபன்ல, ஒன்னு கவுத்து போட்டுகினே வர்னம்.இப்ப மூனுல ஸ்பேட்,டமண்டு,கிளாவருன்னு ஏதாவது ஒன்னு கண்டி வெளியே விழுந்துச்சுன்னா  ஜுது துட்டு பார்டனருக்கு போய்டும். கவுத்து வச்ச கார்டலேயே போயிட்சுன்னா என்கு வரும்”.

”ம்மால...  சில சோமாரிங்க “வை ராஜா வைன்னு” குரல் குடுத்துகினே வெள்ளாடுவாங்க. ஆட்டத்துல் ஒரு டெம்பர் கிடைக்கும்.ஆனா போலீஸ்காரன் மோப்பம் புட்சுகினு வந்துருவான். உஜ்ஜார இருக்கனும்.நாங்க சைலண்டு”.

”இதகண்டுகினு மொட்ட பசங்க  சிரெட்டு(சிகரெட்) பாக்கெட்ட சூது வச்சு வெள்ளாட்றானுங்க.அத்தொட்டு துட்டு வச்சுகினு சிங்கமா பொட்டா வெள்ளாட்றானுங்க”.

”இப்ப இருக்கிற  இண்டர்னெட் மாதர்சோத் பேமானிங்க ஐஸ்வர்யாவுக்கு ஆண் கொயிந்தயா பொட்ட கொயிந்தயா பொறக்க போவுதுன்னு  சூது கட்டிஇருக்கானுங்கன்னு பேப்பர்ல படிச்சேன்”.

”பச்ச கொயிந்தீங்க மேல சூது வச்சு வெள்ளாட்னா ஆத்தா... மங்காத்தா கன்ன புடுங்கிடுவ”..

9 comments:

  1. its nice post ravi..keep it up

    ReplyDelete
  2. சூப்பரா எழுதுறிங்க... ஆனா எனக்கு இந்த சென்னை மொழிதான்.. படிக்க கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி....

    ReplyDelete
  3. நன்றி அனானி.

    ReplyDelete
  4. நன்றி குடிமகன்.

    //ஆனா எனக்கு இந்த சென்னை மொழிதான்.. படிக்க கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி.... //
    நீங்க எந்த ஊருங்க.

    ReplyDelete
  5. நான் கள்ளக்குறிச்சி பக்கத்துல வி. அலம்பலம் ங்க ரவி..

    ReplyDelete
  6. நன்றி குடிமகன்.

    ReplyDelete
  7. hello ravi, i could not complete reading this post as i found it very difficult and accepted the google's translation help (shown on top) and it made me go dizzy. atleast the original post was little better. for you to laugh providing the translated link : http://raviaditya.blogspot.com/2011/07/blog-post_25.html haa...ha....

    ReplyDelete
  8. with this kind of translation facility, imagine what it would sound to a non-tamizh speaking person... ha.ah....a

    ReplyDelete
  9. Mira,

    It is very difficult to translate slang "கம்முனு கெட” but அமைதியா இரு can be tranlated. If you open yours eyes and ears wide you can master this madras paashai.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!