Thursday, September 6, 2012

நீதானே என் பொன் வசந்தம்-பாடல்கள் ஒரு பார்வை



"நீதானே என் பொன் வசந்தம்" 1982ல் வெளிவந்த "நினைவெல்லாம் நித்யா"படத்தின் ஒரு சூப்பர் மெலடி.இப்படத்தின் பாடல்கள்புது விதமான கிளாசிகல் பரிமாணத்தில் போடப்பட்டு இசை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது.தமிழ்த் திரை இசையில் ஒரு மைல் கல்.

அப்போதேல்லாம் காத்திருந்து காத்திருந்து ரேடியோவில்தான்  என்னால் கேட்க முடியும்.



முப்பது வருடம் கழித்து  இதே பாடலின் டைட்டிலில் கெளதம் இயக்கத்தில் ஒரு படம்.இசை இளையராஜா.கெளதமிடம் ஏன் ராஜா என்றால்“ "My music was defined by Raja Sir" என்கிறார்." I missed the bus ...I could have joined Raja  much earlier but I was very shy of approaching him... I don"t know why" என்றும் சொல்கிறார்.

வாரணம் ஆயிரம் படத்திலேயே ராஜாவின் பாடல்கள் பாடப்பட்டது.


இளைஞர்களின்  கனவு டைரக்டர் ராஜாவுடன் இணைவது எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதுவும் புடபெஸ்ட் இசைக்கலைஞர்களை வைத்து லண்டன் ஸ்டியோவில் ராஜா சூட்டுடன் லைவ் ரிகார்டிங் என்றதும் இன்னும் எதிர்பார்ப்பு எகிறியது.


கடந்த 12 வருடமாக புதிய தலைமுறை(new generation) இயக்குனர்களுடன் சேர்ந்து வேலை செய்வதில்லை.நல்ல கதையோடு வரும் புது  இயக்குனர்களை ஊக்குவிப்பதாக அய்யன்,தாண்டவகோனே,செங்காத்து பூமியிலே,மயிலு,அழகர் மலை போன்ற படங்களும் “ஒன்லைன் ஸ்டோரி யோசிக்கறதுக்கு முன்னமே நீங்கதான் இசைன்னு என் கைல பச்சைக் குத்திக்கிட்டேன்” என்று வரும் இயக்குனர்களுக்கும், இவரை விட்டால் வேற ஆளே கிடையாது என்கிற படங்களுக்கும் (விருமாண்டி,பழசி,நான் கடவுள்,பிதாமகன் நந்தலாலா,ஸ்ரீராமஜெயம்,இவன்,பாரதி)இசையமைத்து வந்தார்.

முதன்முதலாக,  இளையதலைமுறையை கையில் வைத்திருக்கும் மற்றும் ஒரு காதல்கதை அதுவும் ராஜாவின் பழைய படத்தின் டைட்டில் மற்றும் கதாநாயகி பெயர் (நித்யா வாசுதேவன்) தொடர்புடைய கதையின் இசைக்கு ராஜா பொறுப்பேற்கிறார் என்பது ஒரு புது விஷயம்.

எதிர்பார்ப்பு மற்றும் எகிறுவது இருந்தாலும் சில லாஜிக்கான கேள்விகள் இருக்கு.

இசைஞானி இதுவரை போட்டது 5500 மேற்பட்ட பாடல்கள். எவ்வளவு வகையான உணர்ச்சிகள் அதிலும் அரைத்தமாவையே அரைத்த உணர்ச்சிகள்.2000-2012 வரையிலுமே கிட்டதட்ட 65 படங்கள்.கார் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மாதிரி பலவித கலவைகளில் எல்லா உணர்ச்சிகளுக்கும் பாட்டு போட்டாகிவிட்டது.கட்டம் கட்டமாக தாண்டி வந்து ஒரு காட்டு காட்டியாகிவிட்டது.

இப்போது மீண்டும் ஒரு காதல்கதை.பழையபாடல்களின் சாயல் இருக்காதா? அதே குறுக்கும் நெடுக்கும் பின்னணியிலும் பலவித இசைக்கருவிகளின் பின்னல்களா? அதே  பல்லவிகளா?சரணங்களா?மிச்ச மீதி ஸ்டாக் இருக்கா?

சாயல் வராமல் இருப்பது உலக மகா கஷ்டம்.அதை நிறைய தவிர்க்கிறார் தன் திறமையால்.ஆனாலும் அங்கங்குத் தலைக்காட்டும்.

பாடல்களுக்கு வருவோம்...

”நீதானே என் பொன்வசந்தம்” பாடல்களுக்காக லண்டன் போவதற்கு முன் ஹோம்வொர்க் செய்துவிட்டுதான் போய் இருக்கிறார்.யோசித்தபோது என் கவனத்தில் உதித்தவை:

1.மூன்று பாடல்களில் ராஜா ராஜாவை விட்டு விலகி இசைஅமைத்திருக்கிறார்.ஒரு அன்னியத்தனம் (alien)ஆனாலும் ராஜா மின்னல் அடித்துப் போகிறார்.

2.இது எந்த இசையும் கிடையாது இது உங்கள் இசை என்றபடி இருக்கிறது

4.சிம்பனியை மேக்சிமம் பின்னணியில் தோய்த்துக்கொடுப்பது.

5.துல்லியமான  பளிச் பளிச் சவுண்ட் ரிகார்டிங்.

மற்ற இசை அமைப்பாளர்களின் அடுத்த தலைமுறை பாடல்களாக கடந்த 10-15 வருடங்களாக ஆண் அல்லது பெண் பாடும் பாடல்கள் ஸ்டைல் டச் அல்லது பாப் டச்சோடு வருகிறது.ஆனால் 95% பாடல்கள் ஆத்மா இல்லாமல் பிளாஸ்டிக் உணர்ச்சிகளோடு வந்து பயமுறுத்துகிறது.இசையும் தோதாக இல்லாமல் உறுத்துகிறது.

பின் வரும் ராஜாவின் மெட்டுக்களில் வளைவு நெளிவு மற்றும் ஆத்மா எங்கு வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளேன்.

மொத்தம் எட்டு பாடல்கள். பாடல்களை பார்க்கலாம்.நா.முத்துக்குமாரின் வரிகள் எனக்குப் பிடித்துவிட்டது.

ராஜாவின் பாடல்களை கேட்கும்போது படிப்படியாக உள்ளே இறங்கி  வாழ்ந்துவிட்டு வெளியே வரவேண்டும்.இசையில் நிறைய புத்திசாலித்தனம் இருப்பதால் அனுபவித்துக் கேட்கவேண்டும்.


முதல் முறை பார்த்த ஞாபகம்:


Hey Goutham!This is new generation  romantic singing...! Have it ! என்கிறது பாடல்கள்.

பாடியவர் சுனிதி செளகான்.என்னை ஆகார்ஷித்து அள்ளிக்கொண்ட பாடல்.மேடம் குரல் அட்டகாசம்.soulful stylish singing! Real stunner from Maestro Raja.

ஒரு விதமான தேவதை பாடல்!பின்னணி இசை விறுவிறு என்று மிளகு குத்தலுடன் திகிலாக போகிறது?காதல் வயப்படுவது மாதிரி உணர்வு.”நீதானே என் பொன் வசந்தம்”  கோரஸ் அழகு சேர்க்கிறது பாட்டிற்க்கு.ஒரே ஒரு நீண்ட சரணம்.முழுமூச்சில் பாடி அசத்துகிறார்.அதுவும் இதற்கு காட்சி எப்படி இருக்கும். இது மேடையில் பாடும் பாடல்?

1980லும் இதே புலம்பல் ஆனால் அடக்கஒடுக்க ஹோம்லி புலம்பல்”தூரத்தில் நான் கண்ட உன் முகம்” (நிழல்கள்).உருமாற்றம்.

எங்கு ஆத்மாவை  (எனக்கு)  வருடுகிறது?

“இதயத்தில் ஏனோஓஓஓஓஓஓஓஓ பாரம்.... விழியினில் ஏனோ ஓஓஓஓஒ ஒரு ஈரம்....”
“ஊடலில் போனது காலங்கள்...தேடலில்.......இல்லையே......அடையாளங்களா”வரிகள் முடிந்து “நீதானே என் பொன் வசந்தம்” கோரஸ் அட்டகாசம்.

பாடல் சடக்கென்று முடிந்துவிடுகிறது.

சற்று முன்பு பார்த்த: பாடியவர் NSK Ramya

சற்று முன்பு பார்த்த ஞாபகம்
காதல் பிரிவு/ஏமாற்றம் அல்லது தொலைந்துபோன காதலை மீட்பது மாதிரி பாடலில் உணர்வு.இதுவும் ஒரு தேவதை பாட்டு(angel singing.) சுனிதியை விட நல்ல உச்சரிப்பு.பழைய சிரிப்பு நடிகர் என் எஸ் கிருஷ்ணனின் பேத்தியாச்சே.

பாடல் சிம்பனியில் பின்னப்பட்டிருக்கிறது.கனவுலகில் மிதக்க வைக்கிறது.போதையான குரல்.படுத்துகிறது.

ஆத்மாவை வருடும் இடங்கள்:

திடுக்கென்று பின்னணி தாளத்துடன்” நெஞ்சம் துடிப்பதும்... மின்னல் அடிப்பதும்”

’தன்னந்தனி காஆஆஆஆஆட்டில் இன்ன்ன்பம் காஆஆஆஆன  வாஆஆஆடா....ஆஆஆ....”

”தொட்டுத் தொட்டுப்பேஏஏஏஏஏஏசும் உந்ந்ந்.......தன் கைஇ இ இ இகள் எங்ங்ங்ங் கேஏஏஏஏஏஏ...” வேறு உலகத்திற்குக் கொண்டுபோய் தொப்பென்று கிழே போடுகிறார்.இரண்டு இடங்களிலும் இசை பின்னிப்பிணைகிறது.

ஷ்ரேயா கோஷால்/சாதன சர்க்கம் இருவரையும் தவிர்த்தது ரொம்ப சந்தோஷம். இந்த பீல் சத்தியமாக வராது.

இரண்டு பாடல்களிலிருந்தும் மீண்டு வருவதற்கு கொஞ்ச நேரம் ஆகிறது.

காற்றைக் கொஞ்சம்:
ஆரம்ப ஹம்மிங்கே காற்றோடு பிரயாணம் செய்யும் உணர்வு.தாமரைக்கொடி மற்றும் மலையாள கரையோரம் பாடல்களின் தென்றலும் விசுகிறது.ராஜாவின் அட்டகாசமான இசைக்கோர்வை

ஆத்மா:

(முதல் சரணம்) சாத்தி வைத்த வீட்டில் ..தீபம் ஏற்றி வைக்க நீ வா வா ..மீதி வைத்த .......... பேசி தீர்க்கலாம்.. ” (இரண்டாவது சரணம்)என்னை இன்று மீட்கத்தான் ...உன்னை...”

இரண்டாவது இடைஇசையில் வரும் ஹம்மிங்கும் புல்லாங்குழலும்...ரம்யம்.

என்னோடு வா வா:
இந்தப்பாட்டு யூத்துகளின் செல்லப்பாட்டு ஆகிவிட்டது.கார்திக்கின் மென்மையான ஸ்கூல் பையன் குரலில் ரொம்ப சிநேகமாக இருக்கிறது. ராஜாவிற்கு இதெல்லாம சர்வ சாதாரணம்.”என்னோடு .... வா வா என்று....போகமாட்டேன் “ என்று முடித்தவுடன் புறப்படும் கோரஸ் வயலின்/சிந்த் மற்றும் முதல் சரணம் வரும் வரை இசை சூப்பர்.

ஆத்மா:

”சின்னப் பிள்ளை போல நீயும் ,... என்னைவிட யாரும்.... செல்ல கேட்டுக்கொண்டால்”

சொல்லி அடித்திருக்கிறார் மேஸ்ட்ரோ!

சாய்ந்து ...சாய்ந்து:

இதுவும் சிம்பனியில் தோய்க்கப்பட்ட இனிமையான சிம்பிள் மெலடி.யுவன் பாடுவதை என்னால் ரசிக்க முடியவில்லை.அதனால் மனவாடு பாட்டான ஏதி ஏதி (Yeto Vellipoyindi Manasu)(ஷான் - ரம்யா) கேட்டேன்.அதில்மோகனம் கிளாசிகல் டச் இருக்கிறது.தமிழில் வேறு டச் வருகிறது.இரண்டாவது இடையிசை வெஸ்டர்ன் கிளாசிகள் அட்டகாசம்.


கேட்க கேட்க மனதிற்கு நெருக்கமாகிறது.


பெண்கள் என்றால்:
என்னப்பா இது ரஹ்மான் பாட்டை ஏன் யுவன் பாடுகிறார் என்று திடுக்கிட செய்கிறது.இது நம்ம ஏரியா இல்லையே.”என்னடி மீனாட்சி”பாட்டின் 2012 வெர்ஷன்??.ரஹ்மானை யுவன் இமிடேட் செய்வதை விடவேண்டும்.எவ்வளவு பாடகர்கள் இருக்கிறார்களே. ஏன் யுவன்?

வானம் மெல்ல:
வித்தியாசமான மிகவும் மென்மையான மெலடி.அற்புதம்.ராஜா பாடுவதால் ஏறகனவே கேட்ட மாதிரி இருக்கு.பின்னணி இசை மாய உலகத்திற்கு கொண்டு போகிறது.Bela Shindeவும் நன்றாக பாடி இருக்கிறார். ஆனால் குரல் சில இடங்களில் கீச்சிடுகிறது.

“தென்றல் வந்து தீண்டும் போது” பாட்டை வேறு மெட்டில் பாடுவது மாதிரி ஒரு பீலிங்?


கேட்க கேட்க மனதிற்கு நெருக்கமாகிறது.

புடிக்கல மாமு:

ராக் அண்ட் ரோல் பாணியில் அமர்க்களமாக ஆரம்பம்.சுரஜ் ஜகன் குரல் அற்புதமாக இருக்கிறது.குத்துப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட்???இவருடன் கார்த்திக்கும் பாடுகிறார். முதல் பாதி ஒரு மாதிரி மெலடி& ரிதம் அடுத்த பாதி வேறு மாதிரி மெலடி&ரிதம்

டெயில் பீஸ்: எந்த படம் பாட்டு ரிலீஸ் ஆனாலும்  ”எண்பதுகள்  பாடல் பீலிங் மாதிரி வராதுங்க.ராஜா அதை மீட்க வேண்டும்” என்று ஒரு கோஷ்டி சொல்லிக்கொண்டிருக்கிறது.

இப்படி பேசுவது வன்முறை.எப்படி முடியும்? 1980க்கு வயது இன்று 32.அதெல்லாம் ராஜாவின் பொக்கிஷங்கள்.

நான்  பதிலுக்கு 1960 பீலிங்கை மீட்டு எடுக்க வேண்டும் என்கிறேன் ."தன்னிலவு தேன் இறைக்க”(படித்தால் மட்டும் போதுமா) ,”அன்பாலே தேடிய செல்வம் “(தெய்வப்பிறவி),"கலையே என் வாழ்கையின்”(மீண்ட சொர்க்கம்).1960 பீலிங்தான் 1980 மீட்டெடுக்கப்பட்டது.மெலடி எங்கும் கைவிடப்படவில்லை.


15 comments:

  1. என் விருப்ப தேர்வும் முதல்முறை பார்த்த ஞாபகம் பாட்டு தான்...:-) சுனிதி செளகான் செம...பல்லவி முடிவில் சுனிதி இழுக்கும் அழகு அசத்தல்...இண்டர்லூட் இல் நம்ம ராஜா...:-)) ம்ம்...கொஞ்சம் வித்யாச ராஜா சார் நீ.தா.பொ.வ இல் தெரிவதை தவிர்க்க முடியலை ரவி சார்:-(

    ReplyDelete
  2. கண்டிப்பா வித்தியாசமா இருக்கு பாடல்கள். இன்னும் கேட்டுட்டு இருக்கேன் சார்...
    பாடல்களைக் கேட்டுக்கொண்டே பதிவை இன்னொருமுறை வாசிக்க வேண்டும்...
    டெயில் பீஸ் நச்:)
    எனக்கு யுவன் சாய்ந்துசாய்ந்து பிடிச்சிருக்கு..
    என்னோட ஃபர்ஸ்ட் சாய்ஸ் : என்னோடு வா வா என்று....
    இரண்டாவது: சாய்ந்து சாய்ந்து
    மூன்றாவது: வானம் மெல்ல...

    ReplyDelete
  3. நம்முடைய இணைய இசை விமர்சகர்கள் கிழித்துக் கொண்டிருக்கையில் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன்.இது போன்ற பல தகவல்கள் அடங்கிய விரிவான விமர்சனம் வருமென்று...

    ReplyDelete
  4. என்ன இன்னும் வரலியேன்னு இருந்தேன்...கொடுத்துட்டிங்க..வழக்கம் போல கலக்கல் ;))

    நானும் உங்க கட்சி தான் தல...எனக்கும் முதல்முறை தான் ;))

    எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அனைத்து பாடல்களும் ரொம்ப புது அனுபமாக இருக்கு.;)

    http://www.youtube.com/watch?v=OP0wEADK8_c

    http://www.youtube.com/watch?v=C1ieW0djTa0

    இந்த ரெண்டு வீடியோகளை பாருங்கள் ;)

    \\ஏன் யுவன்\\
    இதற்க்கு முழுகாரணம் கெளதம் அவர்கள் தான் என்பது அவரே நிகழ்ச்சியில் சொல்லவிட்டார்...யுவன் பாடும் போது தெய்வம் இருக்ககூடாதுன்னு அவரை வெளியே அனுப்பிட்டாங்களாம் ;))

    http://www.techsatish.net/2012/08/ilayaraja-gautam-menon-interview.html

    இந்த வீடியோவில் பாருங்கள் ;))

    ReplyDelete
  5. நன்றி ஆனந்தி.ரொம்ப நாளாக காணோம்.

    நன்றி தமிழ்ப்பறவை/சேலம் தேவா/Peppin

    நன்றி கோபிநாத்

    ReplyDelete
  6. சற்று முன்பு பாடலின் - இசைக்கோர்வை நமக்கு மிகவும் புதிது.. ஆனால் வெத்து மெட்டுக்கு சேர்ந்திருப்பதாலாயே மதிப்பில்லாம போயிருச்சுங்க


    உங்க பதிவுகளின் எண்ணிக்கை கம்மியாகிருச்சுங்களே :(

    ReplyDelete
  7. ஒரு வாரமாக என்னுடைய Favourite மாறிக்கொண்டே இருக்கிறது. தற்சமயம் “சற்று முன்பு”. நல்ல அலசல் சகோதரர்..! :-)

    ReplyDelete
  8. ILA(@)இளா

    // வெத்து மெட்டுக்கு//
    கருத்தில் உடன்பாடு இல்லை.

    பேஸ்புக்/டிவிட்டரில் நேரம் நிறைய போகிறது.

    ReplyDelete
  9. நன்றி இசைஞானி பக்தன்.

    ReplyDelete
  10. //நன்றி ஆனந்தி.ரொம்ப நாளாக காணோம்.//

    குருஜி...மேற்படிப்பில் கவனம் செலுத்தியதால் இணையம் வரும் நேரம் குறைஞ்சிருச்சு...:-(

    ReplyDelete
  11. நான் கூட நினைவெல்லாம் நித்யா பட பாடல்களின் சாயலில் இளயராஜா பாடல் போடுவார் என்று எதிர் பார்த்தேன். என்னோடு வா வா என்கிற பாடல் தவிர பிற மனதில் உட்கார மறுக்கின்றன. தலைப்பு மட்டுமே சுகமாக இருக்கிறது. அந்த பழைய இளையராஜா அனுபவம் தேடியும் கிட்டவில்லை.ரோஜாவை தாலாட்டும் தென்றல், பனி விழும் மலர் வனம், நீ தானே எந்தன் பொன் வசந்தம் போன்ற பாடல்கள் மீண்டும் வராது என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  12. ////ரோஜாவை தாலாட்டும் தென்றல், பனி விழும் மலர் வனம், நீ தானே எந்தன் பொன் வசந்தம் போன்ற பாடல்கள் மீண்டும் வராது என்றே தோன்றுகிறது.//

    எப்படி வரும்? இப்போது 2012.

    ReplyDelete
  13. கடந்த மூன்று மாதமா இந்தப் பாடல்கள் தான் என் ஆடியோவில் போய்கிட்டு இருக்கு..விமர்சனங்களை தாண்டி அனைத்துப் பாடல்களும் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. instant songs'உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் NEP எவ்வளவோ மேல்.

    ReplyDelete
  14. கடந்த மூன்று மாதமா இந்தப் பாடல்கள் தான் என் ஆடியோவில் போய்கிட்டு இருக்கு..விமர்சனங்களை தாண்டி அனைத்துப் பாடல்களும் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. instant songs'உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் NEP எவ்வளவோ மேல்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!