Tuesday, November 29, 2011

டியூஷன் எத்தனை டியூஷனடா(டி)!

டியூஷனில்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.

ஒரு காலத்தில் டியூஷன் (தனி வகுப்பு) வைத்தால்
அது அவமானம்,மக்கு,பெயில் கேஸ்.இப்போது டியூஷன் போகாவிட்டால் மக்காகிவிடுவார்கள்.93%லிருந்து 98% அடைவதற்கும் டியூஷன் போகிறார்கள்.

காலம் அப்படி.போட்டின்னா போட்டி அப்படி ஒரு போட்டி.

குழந்தைகளின் மேல் பெற்றோர்களின் அவ நம்பிக்கை மற்றும் குழந்தைகளின் மேல் பேஷனைப் போல் டியூஷனை திணிக்கும் டிரெண்ட் வருத்தமளிக்கிறது.
காலையில் எழுந்து பல் துலக்க வேண்டும் என்பது மாதிரி டியூஷன் படிப்பில் ஒரு அங்கமாகிவிட்டது.It is a necessary evil."அந்தக் காலத்தில கிடையாது” என்று பெருசுகள் ஆரம்பித்தால் பருப்பு வேகாது.சுழ்நிலை எல்லாம் மாறிவிட்டது.

பெற்றோர்கள் ஒரு லெவலுக்கு மேல் குழந்தைகளின் படிப்பை மேற்பார்வை செய்ய முடியாததால் “நல்லா பாத்துகுங்க” என்று டியூஷனில்விட்டு விடுகிறார்கள்.குழந்தைகளும் எங்க ஆத்துக்காரரும் கச்சேரி போவது போல் போய் வருகிறார்கள்.scout தவிர எல்லா பாடங்களுக்கும் டியூஷன்.

இங்கும் நல்லா ”பாத்துக்கிறார்களா” என்பதையும் பார்க்க வேண்டும்.

டியூஷன் இப்போது இன்னொரு பள்ளிக்கூடம்.அங்கு விட்டதை இங்குப் பி(ப)டிப்பது.குடியிருக்க வீடு தேடும்போது பள்ளி மற்றும் முக்கியமாக டியூஷனுக்கு வசதியாக இருக்குமாறு பார்க்கிறார்கள்.காலையிலும் மாலையிலும் புத்தக மூட்டைகளை சுமந்தவாறு தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் பள்ளி மாணவ-மாணவிகளைப் பார்க்கலாம்.

இதில் பரிதாபம் பள்ளி முடிந்து அழுக்கு வடிந்தவாறு ரொட்டியோ அல்லது குர்குரே/பேல் பூரி எதையோ சாப்பிட்டுவிட்டு நேரடியாக டியூஷன் செல்பவர்கள்.ஆசிரியர் வீட்டு வாசலில் காத்திருப்பவர்கள்.

அம்மாக்களும் காத்திருப்பார்கள்.மாணவி/மாணவர்களும்
சிங்கிள் ஆட்டோ பேசி குரூப்பாக போகிறார்கள்.சிபிஎஸ்சியும் போகுது.மெட்ரிக்கும் போகுது.ஸ்டேட் போர்டும் போகுது. எல்லாம் போகுது.போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
இதில் ஏசி ரூம் போட்டு சிரிக்கும் அவலம், பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே மீண்டும் அதே சப்ஜெக்டை இங்கும் எடுப்பது.

ஏன் டியூஷன்? கற்றுக்கொடுத்தலுக்கும் கற்றுக்கொள்ளுதலுக்கும் உள்ள இடைவெளிதான் காரணம். இடைவெளி நீண்டுவிட்டது. இதற்கு பல காரணங்கள்.

முக்கியமானவை:

1.கற்றுக்கொடுத்தலைப் புரிந்துக் கொள்ளாமை 2.சரியாக கற்றுக்கொடுக்காமை 3.பயிற்சி 4.மீண்டும் பயிற்சி4.அறிவுத்திறன் 5.நேரம் 6.வகுப்பின் ஆசிரியர்-மாணவர் விகிதம் (1-30தான் சரியான விகிதம்) 6.பள்ளியின் நோக்கம்(vision).7.சேவை வியாபாரம் ஆகிவிட்டது.8.வலுவில்லாத அடித்தளம் (கணக்குப்பாடத்திற்கு முக்கியம்)
9.பெருகிவிட்ட கவனக் கலைப்புகள்.(செல்/நெட்/டிவி/திருட்டு சிடி/டிரைவிங்)
10.(சொல்லிக்கொடுக்க)அண்ணன் அக்கா தங்கை தம்பி என்று இல்லாமல் ஒண்ணே ஒண்ணு கண்ணே நிலமை சில குடும்பங்களில்
11. லட்சங்கள் கொடுக்காமல் இன்ஜினியரிங் சீட் வாங்க12.கடினமான பாடங்கள்
எல்லா ஆசிரியர்களும் அப்படி அல்ல. சில பள்ளிகளில் சிரத்தையோடு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.தன் கிழ் படிக்கும் மாணவி/மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.சேவை மனப்பான்மை இருக்கிறது.

கற்றுக்கொடுப்பது ஒரு கலை(teaching is an art).இது எவ்வளவு பேருக்கு வரும்.மேலும் ஆசிரியர்களின் பணி உன்னதமானது(noble profession).எதிர்கால சந்ததியை உருவாக்குகிறார்கள்.

பாடம் நடத்துவதைக் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்த்தால்:

1.கற்றுக்கொடுத்தல் அடுத்த நிமிடம் புரிந்துக்கொண்டு கற்றுக்கொள்ளும் திறன். இதில் இருப்பவர்கள் சூப்பர் டூப்பர்.எவ்வளவு பேர் இருப்பார்கள்?

2.கற்றுக்கொடுத்தல்-புரியாமை-விளக்கம் கேட்டல்-மீண்டும் கற்றுக்கொடுத்தல்-ஓரளவுக்குப் புரிந்துக்கொள்ளுதல்-பயிற்சி-பயிற்சியில் தெளிவாதல்-மீண்டும் பயிற்சி-மீண்டும் பயிற்சி-கடைசியில் அடித்தளம் வலுவாதல்.
இந்தச் சுழற்சி முக்கியமாக கணக்குப்பாடத்திற்கு வேண்டும்.

மேற்சொன்ன சுழற்சியில் பிரச்சனை என்றால் டியூஷன்.Practice makes the man perfect என்பார்கள்.டியூஷன் முடிந்தும் இந்த சுழற்சி அவசியம்.எவ்வளவு பேருக்குச் சிரத்தை இருக்கிறது.பயிற்சியை சிரத்தையாகச் செய்தால் எங்கேயோ போய்விடுகிறார்கள்.

31-12-11 அன்று நடக்கப்போகும் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசு வாங்க வேண்டும் என்றால். 1.1.11 அல்லது 1.7.11 அன்றே தினமும் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.அதேதான் படிப்பிற்க்கும்.தினமும் பயிற்சி.


இப்போது பயிற்சி? அவ்வளவு சிரத்தையாக இல்லை.சாதா விடுமுறை மற்றும் இலவசமாக கிடைக்கும் விடுமுறை நாட்களில் விடாமல் சிரத்தையாக செய்தால் டியூஷனே தேவை இல்லை.தூள் கிளப்பலாம்.மேற்பார்வைச் செய்வதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது பெற்றோர்களுக்கு.

டியூஷனை தவிர்க்க: சிறு வயதிலேயே அடித்தளத்தைப் பலமாக்குவது. முக்கியமாக கணக்கு பாடத்தை.இதற்கு பெற்றோர்கள் பல தியாகங்களைச் செய்ய வேண்டும்.

டியூஷன் வைப்பவர்கள் கவனிக்க வேண்டியது:-

1.கூலிக்கு மாரடிக்கும் டியூஷன்களை கண்டுக்கொள்ளுங்கள்.

2.பள்ளியில் கற்றுக்கொடுத்துவிட்டு பள்ளி முடிந்து “சோர்ந்து” வந்து டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களின் எனர்ஜி லெவல் எப்படி இருக்கும்?டியூஷன் செண்டர்களில் பார்ட்டைமாக வேலைப் பார்பவர்களும் இதில் அடங்குவார்கள்.

3.இது one to one குருகுலம் கிடையாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

4.கலந்து கட்டியாக சில இடங்களில் எடுக்கிறார்கள்.(state+Matri+cbse). 9+10+11+12
ஒரு இடத்தில் கண்ணால் பார்த்தேன்.ஜெஜெவென கூட்டம்.தினமும் பைனகுலர் வழியாக பார்த்து என் மகனை அழைத்து வருவேன்.விளக்கு பூஜை செய்வது போல் எல்லோரும் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பார்கள்.

5.எதுவாக இருந்தாலும் கடைசியில் படிக்க வேண்டியது குழந்தைகள் கையில்தான் இருக்கிறது.நாம் திறந்து திணிக்க முடியாது.

6.டியூஷன் வைத்ததும் பள்ளியில் எடுக்கும் மார்க்கை மானிடர் செய்யுங்கள்.

7.டியூஷன் ஆசிரியர்களுடன் அவ்வப்போது உரையாடி feedback வாங்குங்கள்.இரண்டு(ஆசிரியர்+மாணவன்/வி) பேருக்கும் பொறுப்பு வரும

8.ஸ்கூல் விட்டு டியூஷனக்குப் போகும் குழந்தைகளின் எனர்ஜி லெவலயும் மானிட்டர் செய்யுங்கள்.

9.முகத்தைப் பார்த்து முடிவு எடுக்காதீர்கள்.

10.ஒரு டீச்சர் பெயரைச் சொல்லி அங்க டியூஷன் “சூப்பர்” என்பார்கள்.விசாரியுங்கள்.இப்படித்தான் எனக்கு சொன்னஅந்த சூப்பரிடம் டியூஷன் படிக்க 65 மாணவி/மாணவர்கள்.ஒரே ரூம்.வாசலில் ஒரு கோடி செருப்புக்கள்.எஸ்கேப்.

அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களை நினைத்துப்பாருங்கள்.


டெயில் பீஸ்:  

கேள்வி: டியூஷன் என்பதை தடை செய்துவிட்டால் என்ன ஆகும்?


4 comments:

  1. good!! all parents must read
    keep up your good work!!

    ReplyDelete
  2. மிக நல்ல அலசல் சார்... இதைப் பேருந்தில் ஏற்றிவிடுகிறேன்...!

    ReplyDelete
  3. aasiriyarkal palliyil oyveduppathum maalaiyil kattaya tiushanukku alaiththu nadaththuvathum thaan. kodumaiyilum kodumai.

    ReplyDelete
  4. நன்றி அனானி 1 & 2

    நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!