Thursday, October 6, 2011

எங்கேயும் எப்போதும் - சினிமா விமர்சனம்

தமிழ் சினிமா வரலாற்றில் பட முடிவில் 99% “சுபம்” போட்டுத்தான் முடிப்பார்கள்.பொழுதுபோக்க வரும் வெகுஜனங்கள் அதைத்தான் விரும்புவார்கள்.மக்கள் விரும்பாத சோகத்தோடு முடித்தப் படங்களின்  கடைசிக் காட்சிகளை “சுபமாக” எடுத்து இணைத்து வெளியிட்டும் உள்ளார்கள்.

ரொம்ப வருடத்திற்க்குப் பிறகு சோகத்தோடு முடியும் அதுவும் முக்கியமாக ஸ்டார் ஆகிவிட்ட நடிகை/நடிகர்களை வைத்து சோகத்தோடு முடிப்பது தைரியம் வேண்டும். அது “எங்கேயும் எப்போதும்” படம்.

எங்கேயும் எப்போதும் நல்லதும் கெட்டதும் நடப்பதற்கு
வெயிட்டிங் லிஸ்டில் காத்துக்கொண்டிருக்கிறது.அன்னியராக நேருக்கு நேர் பழகிய தருணங்கள்  முடிந்து பிரிந்து  நினைவு பொதிகளாகி நெஞ்சத்தில் மிதந்து ஒரு ஓரத்தில் காதல் சாரல் அடிக்க ஆரம்பிக்கிறது அமுதாவிற்கும் கெளதமமுக்கும்.அதைச் சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் அவரவர் ஊரில் தேடி அலைந்து கிடைக்காமல் ஏமாந்து எதிரெதிர் திசையில் பஸ்ஸில் பயணிக்க, பஸ்கள்  நேருக்கு நேர் கோரமாக மோதி விபத்தாகி நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

 தவிர இவர்களுடன் பிரயாணம் செய்த மற்ற பிரயாணிகளின் கனவுகள் ஆசைகள் திட்டங்கள் கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் சின்னபின்னமாக்கிவிடுகிறது இந்த நேருக்கு நேர் மோதல் விபத்து.இதில் மற்றொரு காதல் ஜோடியும் அடக்கம்.

 
படத்தின் முக்கியமான விஷயம் கதையின் freshness.விபத்தின் பின்னணியில்  சொல்லப்பட்ட காதல் கதை.அதுவும் சென்னை பிசி ரோடில்இருவரும்
சர்வ சாதாரணமாக (அனன்யா /சர்வா) நடந்தபடி  பிரயாணித்தபடி கதையை நடத்திச் செல்வது இன்னும் fresh.அந்தப் பக்கம் திருச்சியில் அஞ்சலியும் ஜெய்யும்.

இடை இடையே வீடியோ கோச் பஸ் விர் விர்ரென்று நெடுஞ்சாலையில் பறப்பதைக் காட்டுவது speed படத்தை நினைவூட்டுகிறது.சாகும் தருவாயில் தன் காதலன் பெயரைத் தெரிந்துக்கொள்ள முனகி கேட்பதும் பிறகு கண்ணீர் துளி வழிவதும் ரொம்ப டச்சிங்.

சொல்ல வந்த விஷயத்தை சுவராசியமாக சொன்னாலே வெற்றிதான்.

முக்கிய பாத்திரங்களாக வரும் நான்குபேரும்
அனன்யா(அமுதா), அஞ்சலி(மணிமேகலை), ஜெய்(கதிரேசன்), கெளதம்(சர்வா) பின்னி இருக்கிறார்கள்.
முன் ஜாக்கிரதை முத்தம்மாக்களாக வரும் அஞ்சலி மற்றும் அனன்யா நடிப்பு அருமை.

Anjali has killing look. Ananya has சமத்துப் பெண் look.

படம் முடிந்து வீடு திரும்பிய பிறகும் நான்கு பேரும் நினைவில் சுழன்று சுழன்று அடிக்கிறார்கள்.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. விபத்தை முதலிலேயே cut shot மூலம் சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தால் கிளைமாக்ஸில் தாக்கம் அதிகம் இருந்திருக்கும். உடல் உறுப்புக்களை தானம் செய்வதில் ஆர்வம் காட்டும் குணம் உள்ள  அஞ்சலி கதிரேசனின் சம்பளப் பணத்தை இப்படித் தண்ணீராக செலவு செய்வது நெருடுகிறது.

B.E. படித்த அமுதா (அனன்யா) ரொம்ப உஷாராக இருப்பது ஓவர்.

படத்தின் மிகப் பெரிய மைனஸ் பின்னணி இசை.


4 comments:

  1. நல்ல விமர்சனம்...
    படம் சூப்பர்....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  2. நன்றி கண்ணன்.

    ReplyDelete
  3. //சோகத்தோடு முடிப்பது//

    அப்படியா... அடடா.. படத்தை பாக்கலாம்ன்னு நெனச்சேனே...

    ReplyDelete
  4. மிஸ் பண்ணாதீங்க ஸ்வர்ணரேக்கா. பாருங்க.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!