Wednesday, August 21, 2013

கனகா/சேரன் பெட்ரூம்/ஜார்ஜியானா/சப்பாத்தி சில்வர் ஜூப்ளி

சமீபத்தில் படித்த சில செய்திகளைக் கடந்து போகும்போது ஏன் இப்படி என்று ரொமப யோசிக்கவே செய்தது.அறிவுக்கு அடங்காமல்  செய்திகளின் மையம் பிராண்டியது.செய்திகளின் நாயகர்கள் ஏன் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாக அணுகிறார்கள்.இது சரியா தவறா?


இவைகள் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் சற்று திகிலாகவும் இருக்கிறது.எல்லா செய்திகளும் ஜீனியர் விகடனில் படித்தது.

செய்தி - 1

செல்வி ஜார்ஜியான தாம்சன்( வயது 19) படிப்பில் கெட்டிக்காரி.மிகவும் துறுதுறுப்பான பெண்.பதினாறு வயதில் அமெரிக்கா நாசாவால் அழைக்கப்பட்டார்.அவருடைய கனவு விண்வெளி ஆராய்ச்சி,ராக்கெட் விஞ்ஞானம் இவற்றில் கொடிகட்டி பறப்பது.இதையொட்டி விண்வெளி படிப்புக்காக லண்டன் சென்றவர் அங்கு ஹாஸ்டலில்  தூக்கி மாட்டி இறந்துபோனார்.கொலையா தற்கொலையா விசாரணையில் இருக்கிறது.

அப்பா... ப்ளீஸ் சாரிப்பா...!


இனி செய்தியின் மையம்:
தன் பெண்ணின் கனவு நிறைவேறுவதற்கு அப்பா தாம்சன் இவரின் படிப்பு விஷயமாக செய்த ஒரு செயலை சொல்கிறார்....

“12ம் வகுப்பு தேர்வு நடக்கும்போது என் மனைவி இறந்துவிட்டாள்.அந்தச்சாவு என் மகளை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக மனைவியின் இறந்த உடலை வீட்டுக்கு எடுத்துவராமல் தனியார் குளிரூட்டும் நிலையத்தில் நான்கு நாட்கள் வைத்திருந்தேன்.தேர்வு முடிந்த பிறகுதான் அஞ்சலி செய்து அடக்கம் செய்தேன்”

செய்தி -2

இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரத்தில் தன் பெண் காதலனுடன் செல்போனில் பேசுவதைப்பற்றி  குறிப்பிடும்போது ....

“ நிறைய பணக்காரங்க வீட்டில மகள்,அப்பா,அம்மா எல்லோருக்கும் தனித்தனியா பெட்ரூம் இருக்கும்.ஆனா எனக்கு கல்யாணம் ஆனதில் இருந்து நான், மனைவி, என் ரெண்டு மகள் நாலு பேருக்கும் ஒரே பெட்ரூம்தான்”



செய்தி -3
நடிகை கனகா இறந்ததாக வதந்தியும் அதன் பிறகு நடந்த பரபரப்பான நிகழ்ச்சி ஒன்று... 

தட கள போட்டிமுடிவு. வின்னர் இஸ் ..........
 ”(கனகா வீடு)வீட்டுக்குள் நுழைய முடியாதபடி கேட்டில் இரண்டு பூட்டுக்கள்.தட்டிப்பார்த்துத் திறக்கப்படாததால் பத்திரிக்கையாளர்களும் போலீஸாரும் கேட்டைத் திறக்குமாறு சத்தம் போட்டனர்.வீட்டுக்குள் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை.கேட்டை தாண்டிக்குதித்து போலீஸார் உள்ளே செல்ல,அவர்களோடு மீடியாக்களும் சென்றன.........

வீட்டின் கதவும் பூட்டப்பட்டிருந்ததால்,பின்பக்கம் சென்று பார்த்தனர்.பின்பக்க கதவும் உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கவே, கதவை உடைத்துத் திறந்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் போலீசார்”

செய்தி(கொஞ்சம் பழசு)-4

நீயா நானாவில்  ஒரு பெண்மணியின் பேச்சு:  
ஏய் சப்பாத்தி ....நீயா நானா ஒரு கை பாத்திடலாம்
 
கணவன்: இருபது வருஷமா சப்பாத்தி சரியா பண்ணதே இல்ல இவங்க

மனைவி: என்னமோ தெரியல நானும் டிரை பண்றேன்.ஒண்ணு தண்ணி கூடிடுது.அதுக்கப்பறம் எடுத்து தேய்ச்சா வரமாட்டேங்குது.நானும் மாவத்தொட்டு தொட்டு தேய்ச்சுப் பாக்கறேன் வரவே மாட்டேங்குது.இந்த ஜூலை வந்தா 25 வருஷம் ஆகப்போகுது.

பெண்ணின் பேச்சு 8.11 - 8.50



செய்தி(ரொம்ப பழசு)-4
முல்லைக்கு தேர் கொடுத்தான் மன்னன் பாரிவள்ளல்.


time being கொடுத்திருப்பாரோ?

_______________________________________


நீயா நானாவில் நான் ரொம்ப ரசிப்பது பங்கேற்பவர்களின் முகபாவங்கள்.விஜய் டிவி இதற்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து க்ளோஸ்-அப்பில் நிறைய முகங்களை காட்டுவார்கள்.இதில் கணவனோ மனைவியோ தங்களின் அன்றாட வாழ்வின் லூசுத்தனமான அல்லது காமெடியான நடவடிக்கைகளை சொல்லும்போது  மற்றவர் sadistic pleasureஓடு ரசித்தவாறே சிரிப்பது.

உண்மையான கலாய்த்தல்(கணவனை புலம்ப விட்டுட்டு ரசிப்பது)
மற்றவகை முகபாவங்கள்:


ரொம்ப ஓட்டாதிங்கடி




என்ன பண்றது இந்தக் காஸ்ட்யூம்க்கு இப்படித்தான் நளினமா சிரிக்கனும்



வெரி நைஸ்...

6 comments:

  1. எல்லாமே செம.. குறிப்பா ப்ளஸ்டூ தேர்வும் அம்மா சாவும் மேட்டர்!

    ReplyDelete
  2. பாவம் அந்த சின்ன பெண்

    ReplyDelete
  3. ரொம்ப வித்யாசமா இருக்கு செய்திகள் மற்றும் நீங்க கொடுத்த presentation

    ReplyDelete
  4. ரொம்ப வித்யாசமா இருக்கு செய்திகள் மற்றும் நீங்க கொடுத்த presentation

    ReplyDelete
  5. செய்திக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!