Friday, September 21, 2012

சற்று முன்பு பார்த்த மினி கதைகள்

ஐந்து மினி கதைகள்


அர்த்தராத்திரில யாருக்குடீ டெடிகேஷன்?-1
டிஸ்கி: படத்திற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை

நடுநிசியில்(22.40hrs) திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்தார் சுப்ரமணியன்.உடம்பு முழுவதும் வியர்த்திருந்தது.டிவியை ஆன் செய்தார்.

ஏதோ ஒரு சேனலில் ஒரு டீன் ஏஜ் பெண்(ரொம்ப ஓவராக இளித்தவிட்டு):”இவ்வளவு நேரம் கலாச்சிட்டேன்.சரி... பாட்ட யாருக்கு டெடிகேட் பண்றேங்க” செல்லமாக கேட்டாள்.

பட்டென்று  டிவியை அணைத்தார்.“சனியன்... நேரம் காலம் கிடையாது.டெடிகேஷனாம்...வெட்டி முண்ட” ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தார்.” ஏய்..சொட்டை கெழ பாடு! இது ரீபிட் புரோகிராம்.. லைவ் இல்ல.செத்துப்போன உனக்குதான்  டெடிகேஷன்.”மார்பில் குந்தி உட்கார்ந்தபடி கலாய்த்தாள்.

காலையில்  அவர் இறந்திருந்தார்.அவர் வேட்டியில் அங்கங்கு திட்டு திட்டாக ஈரத்துடன் அவரின் ஆண்மை வீர்யம்.


தெரியும் ஆனா தெரியாது -2

மிகமிக பரபரப்பான சிக்னல்.பச்சை விழ இன்னும் 9 வினாடிகள் இருக்கிறது.”இந்த அட்ரஸ் எங்க இருக்கு”.பக்கத்தில் நிற்கும் இரணடு சக்கர ஓட்டுனர்  இவனைக் கேட்கிறார்.பதிலுக்கு இவ்வளவு நீளமான அசட்டுப் புன்னகையை பச்சை விழும்வரை சிக்னலில் காட்டியவன்  இவனாகத்தான் இருக்கும்.

Rear View Mirror - 3

அது ஒரு ரோட் சைட் கார் பார்க்கிங்.அந்த ஏரியா கல்லூரி மாணவன் ஒருவன் ஒரு காரை நோக்கி வருகிறான்.அது அகலமான  Rear View Mirror உள்ள கார்.அதை நேராக்கி குனிந்து அவசர அவசரமாக தலைசீவி மிகமிகமிகமிக அழகாகிக் காத்திருக்க தொடங்குகிறான்.

எதிர்பார்த்தபடி  புன்னகையுடன் அந்த டுயூஷன் போகும் பெண் அந்தக் காரை நெருங்குகிறாள்.கிட்ட வரவர தன் இயல்பான உடல்மொழி செயற்கையாகிறது.செல்போனில் ஏதோ கவனம் செலுத்துவது மாதிரி நடித்து அவனைக் கடக்கிறாள்.அதே புன்னகை ஆனால் செல்லமும் வெட்கமும் கோபமும் கலந்துக்கட்டியாக.

மாணவன் பூரிப்படைந்து மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து தலைசீவி அழகாக்கி கண்ணாடியை மடித்துவிட்டு கிளம்புகிறான்.

அந்தப் பெண் டுயூஷன் முடிந்து திரும்பி அந்த காரை நோக்கி ஒரு புன்னகையுடன் வருகிறாள்.கண்ணாடியை நேராக்கி குனிந்து “வெவ்வவ்வேவே” முகத்தைக் அஷ்ட கோணாலாக்கி அழகுகாட்டிவிட்டு கண்ணாடியை மடித்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிறாள்.


சொதப்பல் - 4

மேலே உள்ள இரு சிறுகதைகளயும் முதலில் கவிதையாக முயற்சி செய்துவிட்டு கவிதை ஆகாமல் எங்கேயும் எப்போதும் சிறுகதையாகவே ரொம்ப நாள் (40) தோற்றம் கொண்டு பெண்டிங் பைலில் இருந்தது.

எவ்வளவு அடித்தும் கவிதையாக கனியவில்லை.ஒரு உரைநடையை பத்துவாட்டி திருப்பி திருப்பி திருப்பி எழுதினால் அது கவிதையாகிவிடும் என்பது இதற்குப் பொருந்தாது.

பின் குறிப்பு -1:

”Objects in mirror are closer than they appear" என்ற வரியை மனதில் வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு கவிதை எழுத வேண்டும் என்கிற பிடிவாதம்தான் காரணம்.

பின் குறிப்பு -2:
”Objects in mirror are closer than they appear"  இந்த வரியை “Rear View..." கதைக்கு கடைசி வரியாக வைத்தால் அப்படியே ஒரு தூக்குதூக்கிவிடும் என்று நண்பர் சொன்னதை  நான் ஏற்கவில்லை.

பிரசாதம் -5

ராதிகா  ரொம்ப டென்ஷனாள்.காரணம் எதிர்வீட்டு தெலுங்குமாமி கொடுத்த பலவித ஷேத்ர சாமி (தெற்கு+வடக்கு) பிரசாதங்கள் கலவையாக.பிரசாதமாக தரப்படவில்லை.மீந்துப் போனது தரப்பட்டிருக்கிறது.பிரிஜ்ஜில் வைக்கப்பட்டது.உள் சாப்பிட உகந்தது அல்ல.

ஒரே ஒரு துளி குங்குமம் மட்டும்  குத்துமதிப்பாக ஒரு சாமியை நினைத்துக்கொண்டு நெற்றியில் இட்டுக்கொண்டாள்.எப்படி டிஸ்போஸ் செய்வது?அஃறினண அல்லது உயர்தினணகளுக்கு தள்ளிவிட மனசாட்சி அனுமதிக்கவில்லை.திருப்பிக்கொடுக்க முடியாது.

ஒரு சுலப வழி இருக்கிறது.ராதிகா என்ன செய்யப்போகிறாள்???தெலுங்கு மாமி கும்பிட்ட எல்லா ஷேத்ரசாமிகளும் ரொம்ப ஆர்வமாக ராதிகாவைக் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

ரெண்டு வேளையாக பய பக்தியுடன் வாயில் வைத்து முழுங்கினாள்.கடவுள்கள் அதிர்ந்தார்கள்.அடி.. மக்கே! இதற்கும் காலாவதி தேதி உண்டு அதன்படி இது குப்பைத்தொட்டிக்குதான் போகவேண்டும்.தெலுங்கு மாமி சாமிகள் ராதிகாவைத் திட்டினார்கள்.

குங்குமம் இட்டுக்கொள்ளும்போது கூட க்ளூ கொடுத்தேனே என்று
திருப்பாச்சூர் தங்காதளி அம்மன் தன்னை ரொம்ப நொந்துகொண்டாள்.

2 comments:

  1. எனக்கு 3 வதும், 5வதும் பிடிச்சிருந்தது சார். மத்தது புரியலை:(

    ReplyDelete
  2. தமிழ்ப்பறவை

    அவர் டென்ஷாகி எரிந்து விழுந்தாலும் கனவில வந்து அந்த அம்மணி கலாய்த்ததால் ரொம்ப ”டென்ஷானாகி” இறந்துவிட்டார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!