செருப்பு
உரிமையாளர்கள் உள்ளே
போய் இருக்கிறார்கள்
நடந்து வந்த களைப்பில்
கோணல்மானலாக உருண்டு
தூங்குகிறோம்
யாரோ ஒருவர் காலால்
எட்டி உதைத்து எங்களை
ஒரு பக்கம் தள்ளுகிறார்
நாங்கள் தடுமாறி
பாதி தூக்கம் கலைய
அடுத்த பயணத்திற்கு தயாராகிறோம்
ஒரு கணக்கு
ஆவின்பால் லாண்டரி
தள்ளிப்போன நாள்
கழிக்க வேண்டியது
கேஸ் புக்கிங்
பப்பிள் டாப் டெலிவரி
கணக்கு வழக்குகள் முடிக்க
காலண்டருக்கு
ஒரு மாதம் கூடுதலாக
ஆயுள் கிடைத்துவிடுகிறது
.
Saturday, January 1, 2011
Thursday, December 30, 2010
கவிதையான வயலின்கள்...
கவிதையான வயலின்கள்.. சுட்டியை சொடுக்குக..
http://raviaditya.blogspot.com/2010/12/king-of-enchanting-violins.html
http://raviaditya.blogspot.com/2010/12/king-of-enchanting-violins.html
இளையராஜா- King of Enchanting Violins-1
இந்தப் பிரபஞ்சத்தில் வயலின் என்ற மேல் நாட்டு இசைக்கருவியை இந்த அளவுக்கு விதவிதமாக,கலர்கலராக, பலவித இசைக் கலவைகளில்,விதவிதமான நாதங்களில்,ராகங்களில்,வேறு இசைக்கருவிகளையும் சேர்த்து பாடலுக்கிடையே அழகுப்படுத்திக் கொடுத்தவர் மேஸ்ட்ரோ இளையராஜா மட்டும்தான் இருக்கும்.
கொஞ்சம் யோசித்தால் Violin is maestro"s delightஓ என்று படுகிறது.இது வெஸ்டர்ன் கிளாசிக்கலுக்கு ரொம்ப தோதான கருவி. இசைஞானியும் வெஸ்டர்ன் கிளாசிகல் அபிமானி. இவருடைய இசையிலும் மேற்கத்திய நாதங்கள் விரவிக் கிடக்கும்.
சாஸ்தீரிய சங்கீதத்தில் இல்லாத சுதந்திரம் திரை இசை வயலினுக்கு நிறைய உண்டு.இளையராஜா புகுந்து விளையாடி இருக்கிறார்.இதை தனியாகவும் இசைக்கலாம். கோராஸ்ஸாகவும் இசைக்கலாம். இதோடு தொடர்புடைய செல்லோ, வயோலாவும் வயலின் குடும்பத்தைச் சேர்ந்துதான்.
இதன் நாதம் இசைக்கோர்ப்புக்கு ஒத்து வருவது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இது கறிவேப்பலை மாதிரி எல்லா உணர்ச்சிகளுக்கும் தூவலாம்.
மேல் நாட்டு இசை ரசிகர்கள் யாராவது கிழே கொடுத்துள்ள வயலின் இசைத் துண்டுகள் சிலவற்றைக் கேட்டால் தமிழ் இசைத்திரைப்பாடலகள் இடையே இசைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்பவே மாட்டார்கள்.
படம் பின்னணியிலும் நிறைய இதை இசைக்கிறார். ஏக்கம்,தனிமை,சோகம்,துக்கம் மற்றும் இனம் புரியாத ஆழ் மன உணர்ச்சிகளை கிளறுகிறது. இதயம் படத்தில் மின்னல் கீற்றாக வயலின் தீற்றல்கள் நிறைய வரும. முரளியின் காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தும்.
எம் எஸ்வி அவர்கள் புதிய பறவை என்ற படத்தில் “எங்கே நிம்மதி” என்ற பாட்டிற்கு 100 வயலின்கள் பயன்படுத்தி பாட்டிற்கு ஒரு களேபர உணர்ச்சிகரத்தைக் கொடுத்திருப்பார்.
பின் வரும் இசைக் கோர்ப்புகளில் வழக்கமான இனிமை,புத்திசாலித்தனம்,Professional touch,முக்கியமாக ...மிக மிக முக்கியமாக “ஆத்மா” இருக்கிறது.
அடுத்து சில (பல?)இசைக்கோர்ப்புகளில் finishing touchஐ கவனியுங்கள்!
நான் அடிக்கடி சொல்வது,இவரின் இசை நாத இணைப்புகளில் “ஒட்டு” மற்றும் “அசட்டுத்தனம்” இல்லாமல் இருக்கும்.
ஒரு கட்டத்தில் வயலின் நாதத்தை சிந்தசைசர் என்ற எலெக்ட்ரானிக் கருவியில் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.காலத்தின் கோலம்.
மொத்தத்தில் வயலின் தன் பிறவிப் பயனை அடைந்துவிட்டது.
பின் வரும் ஆடியோக்களில் இசைத்துளிகள் மட்டும்தான்.முழுப்பாட்டு கிடையாது. வயலின் நாதத்திற்க்கு முன்னே அல்லது பின்னே வேறு இசைக்கருவிகளின் நாதமும் வரும். காரணம் ஒரு முழுமைக்காகதான்.
எல்லாமே ஒரு பாமர ரசிகனின் பார்வையில்தான் வைக்கப்படுகிறது.தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.
இனி இசை ஜகதலப்பிரதாபன் இளையராஜாவின் mindblowing and enchanting violins.....
அன்னக்கிளி (1975) -அன்னக்கிளி உன்ன தேடுது
(முதல் படம்.வித்தியாசமான தீற்றல்கள்.ராஜாவின் இயல்பான 1.துரிதகதியில் நாதப்பின்னல் 2.பல வித இசைக்கருவி3.மேற்கத்திய இசை கலவை 4.நாதங்களை ரிபீட் செய்யாமை.அப்போதைய டிரெண்டை காப்பி அடிக்காமல் செய்த வயலின் நாதங்கள் அருமை.கிராமிய மணம் மாறாமல் மேற்கத்திய சாயல் வாசிக்கப்படுகிறது)
Violin-1-Annakiliunna.mp3
காதல் ஓவியம்(1982)-பூவில் வந்து கூடும்
(இனிமையான தனி வயலின்)
Violin-1-Poovilvandu.mp3
பகல் நிலவு(1985)-பூமாலையே தோள் சேரவா
(துள்ளல் கோரஸ் வயலின். 0.14 பிறகு வயலினுக்குள் நடக்கும் உரையாடல் இனிமை.நம்முடனும் உரையாடுகிறது)
Violin-1-Poomaaliye.mp3
அஜந்தா(2007) -யாருக்கு யார் என்று
( இது தமிழ்ப் பட இசையா? 0.19 பிறகு full style)
Violin-1-Ajantha.mp3
டிக் டிக் டிக் (1981)- பூ மலர்ந்திட
Violin-1-poomalarinth.mp3
கர்ஜனை(1981) - என்ன சுகமான உலகம்
(இதில் துடிப்புடன் வரும் நாதம் 0.16ல் மெதுவாக மாறி வித்தியாசமாக அமுங்குகிறது.0.34-0.45ல் வயலினுக்கு கிடார் தாளமாக இசைக்கப்படுகிறது.
அட்டகாசம்..!)
Violin-1- Ennasugamaana.mp3
புவனா ஒரு கேள்வி குறி(1977)-விழியிலே மலர்ந்தது
(அப்போது பிரமிக்க வைத்த இசைக் கோர்வைகள். 1980ல்தான் தீவிரமாக கவனிக்க முடிந்தது)
Violin-1-Vizhiyilae.mp3
அலைகள் ஓய்வதில்லை(1981)-புத்தம் புது காலை
(எனக்கு மிகவும் பிடித்த இசைத் துண்டு.மிகவும் ரம்யமான வயலின்..!வயலினில் புத்தம் புது காலையை காட்டுகிறாரோ?ஆச்சரியப்படுத்துகிறார்)
Violin-1-PuthamPuthu.mp3
சூரக்கோட்டை சிங்கக் குட்டி(1983)-காளிதாசன் கண்ணதாசன்
Violin-1-Kalidasan.mp3
கிழக்கே போகும் ரயில்(1978)-பூவரசம்பூ பூத்தாச்சு
(வயலின் நாதத்தோடு பின்னால் ஒரு புல்லாங்குழல் அழகுப்படுத்துகிறது.பாஞ்சாலிக்காக தலை சுற்றும் வயலின்)
Violin-1-Poovarasum.mp3
பூந்தோட்ட காவல்காரன்(1988)-சிந்திய வெண்மனி
(உணர்ச்சிகரமான வயலின்.பாட்டின் ஹோம்லி மூடைச் சொல்கிறது )
Violin-1-SinthiyaVenmani-PKaval.mp3
ஜானி(1980) காற்றில் எந்தன் கீதம்
(கோரஸ் வயலின்கள் உண்டாக்கும் உணர்ச்சிகள் புதுசு.பிரமிக்க வைக்கிறது.இது ஒரு தமிழ் திரை இசைப் பாடல் இடையே வருகிறது என்று வெளியாட்கள் நம்புவார்களா?உள் ஆட்களே நம்ப மாட்டார்கள்)
Violin-1-Katrilenthen.mp3
அவள் அப்படித்தான்(1978) வாழ்க்கை ஓடம் செல்ல
Violin-1-Vazhkaioodam.mp3
மெட்டி(1982) மெட்டி ஒலி
Violin-1-MettiOli.mp3
பன்னீர் புஷ்பங்கள்(1981)-ஆனந்த ராகம் கேட்கும்
(இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்.கிளாசிகல்(சிம்மேந்திர மத்யமம் ராகம்) வயலின் பிரவாகம் எடுத்து குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறது.0.26 ஆரம்பிக்கும் வயலினை உற்றுக் கேளுங்கள் ஒரு வித வலியுடன் உரையாடுகிறது.குறுக்கே ஷெனாய்யும் வலியுடன்.கவுண்டர் பாயிண்ட்.Musical riot..! Stunning..!)
Violin-1-Anandaraagam.mp3
எங்க ஊரு பாட்டுக்காரன்(1987) மதுர மாரிக்கொழுந்து
(பெண்கள் ஹ்ம்மிங்கிறகு எப்படி பதிலலிக்கிறது பாருங்கள்.இரண்டு ஹ்ம்மிங்கிற்கும் இரண்டுவிதமான வயலின் தீற்றல்கள்)
Violin-1-Madhuramari.mp3
உறவாடும் நெஞ்சம்(1976)- ஒரு நாள் உன்னோடு
(finishing touchஐ கவனியுங்கள்.அட்டகாசம்)
Violin-1-OruNaalUnnodl.mp3
முந்தானை முடிச்சு(1983)-அந்தி வரும் நேரம்
(இதிலும் வித்தியாசமான நாதங்கள்)
Violin-1-Andhivarum.mp3
மண் வாசனை(1985)-பொத்தி வச்ச மல்லிகைமொட்டு
Violin-1-PotthiVech.mp3
நிழல்கள்(1980)-இது ஒரு பொன்மாலைப் பொழுது
(ஞானியின் செல்லமான வெஸ்டர்ன் கிளாசிகல் தீற்றல்கள்.0.51 முடிகிறது என்று முடிவு செய்தால் 0.52-0.53 அழகான finishing touch கொடுத்து முடிக்கிறார்)
Violin-1-Ithuoruponfinal.mp3
தென்றலே என்னைத் தொடு(1985)-தென்றல் வந்து என்னை
Violin-1-ThendlVanEnnaiThodum.mp3
ஆராதனை(1981)- இளம்பனி துளிர்விடும் நேரம்
Violin-1-Ilampanithuli.mp3
பூந்தளிர்(1979)-ஞான் ஞான் பாடனும்
(ஓற்றை வயலின் அதன் சம்பிரதாயமான நாதத்தில்.அற்புதமாக அமைக்கப்பட்ட 0.15-0.19.புல்லாங்குழலுடன் உரையாடல்.)
Violin-1-Jnan jnan.mp3
அவதாரம்(1995)-தென்றல் வந்து தீண்டும்போது
(உள்ளே ஊடுபாவாக போகும் வயலின் ஆத்மாவை தீண்டுகிறது)
Violin-1-Avatharam-Then.mp3
மெட்டி(1982)-சந்தக்கவிகள் பாடிடும்
(00.00-0.09/0.13-0.20/0.27-0.29/0.47-.053 விதவிதமான soulful வயலின்கள்(செல்லோ?ஆரபி ராகத்தில் கிளாசிக்கலாக ஆரம்பித்து ........பாட்டை எப்படியெல்லாம் அழகுப்படுத்துகிறது)
Violin-1-Sandakavigal.mp3
வள்ளி(1993)-என்னுள்ளே என்னுள்ளே
Violin-1-EnnulleEnnul.mp3
அரங்கேற்றவேளை(1990)- ஆகாய வெண்ணிலாவே
(கானடா ராகத்தில் லீடில் ஒரு சுணுங்கியபடி தனி வயலினும் அதை தொடரும் கோரஸ்(?) வயலினும் 0.06ல் சேரும் தபலாவும் 0.20ல் மாறும் வயலின் நாதமும் அதன் உரையாடலும். அட்டகாசம்.Highly Divine!Hats of Maestro!.தபலாவை ஏன் 0.06ல் சேர்க்கிறார்?)
Violin-1-Aagayavennilave.mp3
நினைவெல்லாம் நித்யா(1982)-பனிவிழும் மலர்வனம்
(வித்தியாசமான கலவை/மணம்/உரையாடல்)
Violin-1-PaniVizhMal.mp3
.படிக்க: பகுதி-2
http://raviaditya.blogspot.com/2011/01/king-of-enchanting-violins-2.html
Monday, December 20, 2010
விழா/மழையே போ/சுஜாதா/மன்மத அன்பு/தீம் சாங்
சென்னையில் கிட்டத்தட்ட இரண்டு மாதமாக வானம் ஒரு மாதிரி அழுதுவடிந்துக்கொண்டிருக்கிறது.யோசித்து யோசித்து மழைத் தூறுகிறது.பெய்கிறது.அடிக்கிறது.குளிர்கிறது.ரூம்
போட்டு யோசித்து கொசுறாக வெய்யில்அடிக்கிறது.
துணிக்காயப்போட்டால் மீண்டும் தூறுகிறது.துணிகளை எடுத்தால் நின்று விடுகிறது.
வருண பகவான் சார் ஒன்னியுமே புர்ல? ஓன் பாடில தொண்டி விழுந்து மெர்சல் ஆயி கோபமா?
_____________________________
இப்போதெல்லாம் பாடல்கள் வெளியீட்டு விழா என்று
சேனலுக்கு சேனல் போட்டிக்கொண்டு ஒளிப்பரப்புகிறார்கள்.
வழக்கம்போல பேசுபவர்கள் பின்னால் இடுக்கு வழியே சினிமா PROக்கள் தலை நீட்டிக்கொண்டு எட்டிப்பார்க்கிறார்கள்.
பாடல்களை மக்கள் போட்டிக்கொண்டு கேட்கிறார்களா? மக்கள் கேட்பதைவிட நிறைய (வீடியோ) பார்க்கிறார்கள்.படத்தில் பாடல்களுக்கான மவுசு குறைந்துவிட்டதா? பாடல்கள் இல்லாவிட்டால் ரசிகன் என்னோவோ போல் ஆகிறான்.
மன்மதன் அன்பு பாடல் கேட்டேன்.பாடல்களை எல்லோரும் சுருதியோடு பாடுவார்கள். கமல் மட்டும் சுருதியோடு பேசுவார்.இதில் கமல் எப்படி?
கமலின் நீல வானம் பாட்டை ரசிக்க முடிகிறது.வயலின் அருமை.”பன்னீர் புஷ்பங்களே”(அவள் அப்படித்தான்) குரல் ஞாபகம் வருகிறது.ரொமாண்டிக் தலைப்பு உள்ள படத்தில் இன்னும் கூட romantic interludes கொடுத்திருக்கலாமே?
ரஹ்மான் பட பாடல் போல திடீரென்று சம்பந்தமே இல்லாமல் கோரஸ் குரல்கள் எதற்கு?
கமல் கவிதைப் படிக்கிறார்.”கடவுள் பாதி மிருகம் பாதி” டெம்பிளேட் குரலில்.அதை விடவில்லை.”கலவி””ஆணுறை” என்று புரட்சி செய்திருக்கிறார்.வழக்கமாக அவர் பார்ட் டைமாக செய்யும் “இந்து” மத கிண்டல்.புல் டைம்மாக செய்தால் படம் போணியாகது என்று கமலுக்குத் தெரியும்.த்ரிஷா தமிழ் பேசி புரட்சி செய்திருக்கிறார்.
_____________________________
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கிழே வீழ்த்தினான்.அதை சுமந்துக்கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் தமிழ் சினிமா சாங்குகளைப் பற்றிச் சொல்லிவிட்டு எள்ளி நகைத்து“விக்கிரமா .. தீம் சாங் என்று ஒன்று காணப்படுகிறது எல்லா தமிழ் பட ஆல்பங்களிலும் . அது என்ன? அதன் தாத்பர்யம் என்ன?சொல்ல விட்டால் உன் மண்டை சுக்கு நூறாக வெடித்துவிடும்” என்றது.
_____________________________
உலகத்திலேயே சின்னஞ்சிறு கதை ஒன்று தான் படித்ததாக சுஜாதா எழுதியதாக ஞாபகம்: (நினைவிலிருந்து)அது:
”கதவின் தாழ்ப்பாள் இறுக சாத்தப்பட்டு பூட்டப்படுகிறது” என்று இருந்தால் இன்னும் திகில் கூடும் என்று சுஜாதா எழுதி இருந்தார்.
நான் இதற்கு வைத்த முடிவு:
அவனுக்கு ஒரு SMS வருகிறது. அதில் “இன்று நாள் எப்படி? ராசிபலனுக்கு 125க்கு டயல் செய்யவும்.கட்டணம் கிடையாது”
_____________________________
(ஆண்டாள் அல்ல மதுரை மீனாட்சி போஸ்)
பொதிகையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆண்டாள் திருப்பாவை நாட்டிய நாடகம் ஒளிபரப்பினார்கள். ரொம்ப பழசு என்று நினைக்கிறேன்.பத்மா சுப்ரமணியம் குழுவினர் செய்தது.
பாடல்கள் வித்தியாசமான ராகங்களில் மற்றும் மெட்டுக்களும்.அபிநயங்களும் வித்தியாசமான பாவங்களில்.
.
போட்டு யோசித்து கொசுறாக வெய்யில்அடிக்கிறது.
துணிக்காயப்போட்டால் மீண்டும் தூறுகிறது.துணிகளை எடுத்தால் நின்று விடுகிறது.
வருண பகவான் சார் ஒன்னியுமே புர்ல? ஓன் பாடில தொண்டி விழுந்து மெர்சல் ஆயி கோபமா?
_____________________________
இப்போதெல்லாம் பாடல்கள் வெளியீட்டு விழா என்று
சேனலுக்கு சேனல் போட்டிக்கொண்டு ஒளிப்பரப்புகிறார்கள்.
வழக்கம்போல பேசுபவர்கள் பின்னால் இடுக்கு வழியே சினிமா PROக்கள் தலை நீட்டிக்கொண்டு எட்டிப்பார்க்கிறார்கள்.
பாடல்களை மக்கள் போட்டிக்கொண்டு கேட்கிறார்களா? மக்கள் கேட்பதைவிட நிறைய (வீடியோ) பார்க்கிறார்கள்.படத்தில் பாடல்களுக்கான மவுசு குறைந்துவிட்டதா? பாடல்கள் இல்லாவிட்டால் ரசிகன் என்னோவோ போல் ஆகிறான்.
மன்மதன் அன்பு பாடல் கேட்டேன்.பாடல்களை எல்லோரும் சுருதியோடு பாடுவார்கள். கமல் மட்டும் சுருதியோடு பேசுவார்.இதில் கமல் எப்படி?
கமலின் நீல வானம் பாட்டை ரசிக்க முடிகிறது.வயலின் அருமை.”பன்னீர் புஷ்பங்களே”(அவள் அப்படித்தான்) குரல் ஞாபகம் வருகிறது.ரொமாண்டிக் தலைப்பு உள்ள படத்தில் இன்னும் கூட romantic interludes கொடுத்திருக்கலாமே?
ரஹ்மான் பட பாடல் போல திடீரென்று சம்பந்தமே இல்லாமல் கோரஸ் குரல்கள் எதற்கு?
கமல் கவிதைப் படிக்கிறார்.”கடவுள் பாதி மிருகம் பாதி” டெம்பிளேட் குரலில்.அதை விடவில்லை.”கலவி””ஆணுறை” என்று புரட்சி செய்திருக்கிறார்.வழக்கமாக அவர் பார்ட் டைமாக செய்யும் “இந்து” மத கிண்டல்.புல் டைம்மாக செய்தால் படம் போணியாகது என்று கமலுக்குத் தெரியும்.த்ரிஷா தமிழ் பேசி புரட்சி செய்திருக்கிறார்.
_____________________________
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கிழே வீழ்த்தினான்.அதை சுமந்துக்கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் தமிழ் சினிமா சாங்குகளைப் பற்றிச் சொல்லிவிட்டு எள்ளி நகைத்து“விக்கிரமா .. தீம் சாங் என்று ஒன்று காணப்படுகிறது எல்லா தமிழ் பட ஆல்பங்களிலும் . அது என்ன? அதன் தாத்பர்யம் என்ன?சொல்ல விட்டால் உன் மண்டை சுக்கு நூறாக வெடித்துவிடும்” என்றது.
_____________________________
உலகத்திலேயே சின்னஞ்சிறு கதை ஒன்று தான் படித்ததாக சுஜாதா எழுதியதாக ஞாபகம்: (நினைவிலிருந்து)அது:
பிரபஞ்சமே அழிந்து கடைசியில் ஒரே ஒரு மனிதன் சாத்திய அறையில் கவலையுடன் சேரில் உட்கார்ந்திருக்க கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது.
”கதவின் தாழ்ப்பாள் இறுக சாத்தப்பட்டு பூட்டப்படுகிறது” என்று இருந்தால் இன்னும் திகில் கூடும் என்று சுஜாதா எழுதி இருந்தார்.
நான் இதற்கு வைத்த முடிவு:
அவனுக்கு ஒரு SMS வருகிறது. அதில் “இன்று நாள் எப்படி? ராசிபலனுக்கு 125க்கு டயல் செய்யவும்.கட்டணம் கிடையாது”
_____________________________
(ஆண்டாள் அல்ல மதுரை மீனாட்சி போஸ்)
பொதிகையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆண்டாள் திருப்பாவை நாட்டிய நாடகம் ஒளிபரப்பினார்கள். ரொம்ப பழசு என்று நினைக்கிறேன்.பத்மா சுப்ரமணியம் குழுவினர் செய்தது.
பாடல்கள் வித்தியாசமான ராகங்களில் மற்றும் மெட்டுக்களும்.அபிநயங்களும் வித்தியாசமான பாவங்களில்.
.
Subscribe to:
Posts (Atom)




