Showing posts with label ராஜா-Call-Response. Show all posts
Showing posts with label ராஜா-Call-Response. Show all posts

Friday, November 12, 2010

இளையராஜா- King of Musical Call & Response

இளையராஜாவின் பாடல்களில் நுனி முதல் அடிவரை எங்கும் அழகுணர்ச்சி மிளிரும்.அதில் ஒரு துளியைத் தொட்டு நாக்கில் வைத்தால் இனிக்கும்.அதில் ஒன்றுதான் Call & Response

இது ஒரு வகை இசைக்கோர்பு.தமிழில் மொழிபெயர்த்தால் அழைப்பும் மறுமொழியும் அதாவது இசைஅழைப்பு அதற்கு இசையிலேயே மறுமொழி.இந்த அழைப்பு & மறுமொழி பல்லவி-1, சரணம்-1,பல்லவி-2, சரணம்-2,Interlude-1,Interlude-2 எங்கு வேண்டுமானாலும் வரலாம்.

இது மேஸ்ட்ரோவே நினைத்து செய்ததா என்று கேட்டால் என்னிடம் பதில் கிடையாது.இசையின் ஒரு வகையா? தெரியாது.

இதை ஒரு வகை ரசனையாக உள்வாங்கி இசையை ரசித்தால் வரும் அனுபவம் புதுமை. 

இதை நான் தெரிந்துகொண்டது எப்படி?

கானடா வாழும் இளையராஜாவின் தீவிர ரசிகர் திரு ரவி நடராஜன் அவர்களின்http://geniusraja.blogspot.com/  பதிவில் காணப்பட்டது.அவர் இசை ஆராய்ச்சி விஞ்ஞானி லெவலுக்கு ராஜாவின் இசையை அலசி ஆராய்கிறார். அவர் இந்த மாதிரி நாதத்துளிகளை இப்படித்தான் குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொன்னதை வைத்து கிழே உள்ளே இசைத்துளிகளைக் கேட்ட போது சரியாக பொருந்தி வந்தது. அவர் சொன்னதை ஒரு பாமர ரசிகனாக உள் வாங்கிக்கொண்டு இப்பதிவைத் தொடர்கிறேன்.


நண்பர் ரவி நடராஜனுக்கு நன்றிகள் கோடி.

கிழே கொடுத்த பாட்டின் உதாரணங்கள் என்னுடைய சொந்த தேர்வுகளே.இதற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த பிரபஞ்சத்தில் முதல் முதலாக இந்த நாத அழைப்பு/மறுமொழியை இசைத்தவர்கள் யார்? காட்டுவாழ் மிருகங்கள்தான்.முக்கியமாக பறவைகள்.

அதன் கூவல்கள் எதிர் கூவல்கள்தான், எல்லா இசை மேதைகளுக்கும் பின்புலம் என்பது என் யூகம்.இந்த கூவல்கள் முக்கியமாக காதல் செய்ய கூவப்படுகிறது.

ஆனால் நவீனத்தில்மனித உணர்வு ஆலாபனைகளும் அதற்கு மறுமொழியாக இசைக்கருவிகளின் ஆலாபனைகளும் இசைக்கப்படுகிறது.




அதைக் காதால் கேட்போம்.

உதாரணம் -1

ஏ... மச்சான...!(அன்னக்கிளி-1975) என்று ஜானகி ஆலாபித்து
(call ) முடிந்தவுடன் புல்லாங்குழலில் வழியும் நாத மறுமொழி(response).கடைசியில் வரும் அழைப்பு ”மச்சானப் பார்த்தீங்களா” இதற்கு வரும் புல்லாங்குழல் மறுமொழி குறும்புத்தனமாக.
CR Machanapaarthinka.mp3

உதாரணம் -2  

பாடும் வானம்பாடி....ஆ..(நான் பாடும் பாடல்1984)என்று எஸ்பிபி இதமாக அழைக்க(call ) அதற்கு வீணையில் மறுமொழி (response) செல்லம் கொஞ்சியபடி வருகிறது.
CRPaadumVanamPaadi.mp3

ராஜாவின் தனித்தன்மை என்ன? மாத்தி யோசி கான்செப்ட்தான்.
That"s all folks. Now let"s start  diving   in Maestros"  call & response நாத வெள்ளம்


கீரவாணி...(பாடும் பறவைகள்).இரவிலே... பகலிலே... பாடவா நீ. ஒவ்வொன்றுக்கும் உடனடி ரெஸ்பான்ஸ் சிதாரில்(??.துறுதுறுவென ரொம்ப சுட்டித்தனம் நிறைந்தது.
CRKeeravani.mp3

ஆற்றில் ஓடம் செல்ல(அவள் அப்படித்தான்-1978).எனக்குத் தெரிந்து இந்திய திரை இசையில் இது மாதிரி கேட்டதில்லை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ!High voltage emotion!
CRVazhaioodam.mp3

பூந்தளிர் ஆட (பன்னீர் புஷ்பங்கள்-1981).எஸ்பிபி ரொமப குழைந்து அழைக்கிறார்.உற்றுகேளுங்கள்.ரெண்டுவிதமான ஹம்மிங் ரெஸ்பான்ஸ்.பாட்டிலேயே ஐந்துவிதமான ஹம்மிங் வரும்.மாத்தியோசி.
CRPoonAada.mp3

நீ பாதி நான் பாதி...(கேளடி கண்மனி-1990).அருமை.
CRNeePathi.mp3


தென்றல் வந்து என்னை(ஒரு ஓடை நதியாகிறது-1983.
CRThendralEnnai-Oru oodai.mp3

ராக்கம்மா கையத்தட்டு(தளபதி-1991).எஸ்.பி.பி. நாலு அழைப்பு அதற்கு நாலு மறுமொழி.3ம்4ம் இசைக்கருவிகள்+மனிதகுரல் சேர்ந்து வருகிறது.ஆனால் இதிலேயே குரல்கள்(3,4) வித்தியாசமாக வருகிறது. இது சுவர்ணலதாவுக்கும் ரிப்பீட் ஆகிறது.5வதுக்கு மெல்லிய வேறு மறுமொழி.
CRRakkam.mp3

உறவுகள் தொடர்கதை.....(அவள் அப்படித்தான்-1978)
CR Uravugal.mp3


பள்ளியறைக்குள் மல்லிகையை(பால நாகம்மா-1981)
CRPalliyarikkul.mp3


நான ஏரிக்கரை மேலிருந்து (சின்னத்தாயி-1992).புல்லாங்குழல் ரொம்ப stylishஆக இசைக்கப்படுகிறது.ரம்யம்.
CRNaanYerikarai.mp3

உன்னவிட உலகத்தில யாரு(விருமாண்டி-2004)இதில் வரும் 0.16-0.19 அன்ட் 0.36-0.39 மறுமொழி எமோஷன் stunning!
CROnnaVida.mp3

இது ஒரு பொன் மாலைப் பொழுது(நிழல்கள்-1980).இதில் வரும் புல்லாங்குழல் மறுமொழி தெரியாதவர் தமிழ்நாட்டில் யாராவது உண்டா?
CRlIthuOruPon.mp3

வனிதாமணி(விக்ரம்-1986).கிடார் தீற்றல்கள் சம்பிராதயமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது.
CRVanithaMani.mp3

கலகலக்கும் மணியோசை(ஈரமான ரோஜாவே-1991)
CRKalaKalakkum.mp3

நீ பார்த்தப் பார்வைக்கொரு நன்றி(ஹேராம்-2000).

இதில் அழைப்புக்கும் மறுமொழிக்கும் இருக்கும் கெமிஸ்டரி made for each other.0.20-0.28 இசையை கவனியுங்கள்.புல்லாங்குழலோடு பினைந்துவரும்  ஹம்மிங்கில் ஒரு விகிதம் இருக்கிறது.நான்கு ஹம்மிங். இதில் மூன்று மென்மை ஒரு பினிஷிங் ஹம்மிங்(3:1).கவிதை.

பிரமிக்கவைக்கிறார் இசைஞானி.பாட்டைக் கேட்க கூடாது.உள்ளே குதித்து ஆழ் நீச்சல் அடிக்கவேண்டும்.You have to live with the song.
CRNeepaartha.mp3

வா வா பக்கம் வா(தங்கமகன்-1983)
CRVaVaPa.mp3

சின்ன ராசாவே சித்தெறும்பு உன்ன(வால்டர் வெற்றிவேல்-1993).இது ஒரு freakout response.அஜால் குஜால்.
CRChinna Raasave.mp3

தெய்வீக ராகம் தெவிட்டாத(உல்லாசப் பறவைகள்-1980)
CRDeivigaRagam.mp3

மீட்டாத வீணை (பூந்தோட்டம்-1998).(கிடாரில் கவிதை மறுமொழி.ரித கெளள ராக சுவரங்கள் தெறிக்கிறது.
CRVarudal-MeetVeenai-Poon.mp3