Monday, November 8, 2010

குறும்பட விமர்சனம்-7-11-10-கலைஞர் டிவி

கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர்  நிகழ்ச்சியில் இந்தவாரமும் கல்லூரிக் கதைகள்.

ஒவ்வொரு குறும்பட முடிவிலும் நடுவர் பிரதாப்போத்தன் என்ன சொல்லி கிழிக்கப் போகிறார் என்ற பீதி இயக்குனரின் முகத்தில் தென்படுவது சுவராஸ்யம்.

குறும்படங்கள் ஒன்றுக்கொன்று சவாலானதாக இருப்பது வரவர குறைந்துவிட்டது.

போனவாரம் 31-10-10


படம்:Samaritan இயக்குனர்: தீபன்

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை என்று தலைப்பில் போடப்படுகிறது.

கல்லூரி மெஸ்ஸில் வேலை செய்யும் ஒரு இளைஞன் தன் சுய முயற்சியால் படித்து பட்டம் வாங்கினவன்.தன் அப்பாவிற்கும் படிப்பு சொல்லிக்கொடுத்தவன். அதே மாதிரி ஏழைகள் முதியோர்களுக்கு படிப்புச்சொல்லித்தர ரொம்ப ஆர்வமாக இருக்கிறான்.முதலில் கல்லூரி மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்கிறான்.அவனுடைய ஆர்வப்பொறி அந்த கல்லூரி மாணவர்களுக்கும் பற்றிக்கொள்கிறது.அவர்கள் முதியோர் மற்றும் ஏழைகளுக்கு கல்வி கற்றுத் தர தொடங்குகிறார்கள்.கல்லூரி நிர்வாகம் சந்தோஷப்படுகிறது.

அந்த பையனுக்கு Good Samaritan விருது வழங்கப்படுகிறது.

அருமையான படபிடிப்பு.உறுத்தாத நடிப்பு.கல்லூரி வாழ்க்கையில் பாசிட்டீவ் எண்ணங்கள்.வாழ்த்துக்கள்!

கதை?ஆவணப்படம்?

மாணவர்கள் ஏழைகளுக்கு படிப்பறிவு கொடுப்பதை முதலில் காட்டி இந்தப் பொறி இவனிமிருந்துதான் வந்தது என்று கடைசியில் மெஸ் பையனைக் காட்டி இருக்கலாமோ?

Good Samaritan என்பவர்  கஷ்டத்தில் இருக்கும் முன்பின் தெரியாத ஒருவருக்கு தன்னிச்சையாக உதவி புரிபவர்.இதில் சுயநலம் கிடையாது.இது பைபிளில் வருகிறது.

ஆனால் இந்தக் கதைக்கு இந்த டைட்டில் பொருந்தவில்லையே?

படம்:என் இனிய பொன் நிலவே இயக்குனர்:அருண் ராஜா காமராஜ்

அரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்த திக்குவாய் பிரச்சனை உள்ள ஒரு இளைஞன் கல்லூரியில் சேருகிறான்.பாடங்கள் புரியவில்லை.ஆசிரியர்கள் பேசும் ஆங்கிலத்தைப் பின்பற்ற முடியவில்லை.படிப்பு ஏறவில்லை  என்ற தாழ்வு மனப்பான்மை அவனை குடிக்கொள்கிறது.

அதற்காக தினமும் படிப்பதற்க்கு கல்லூரி நூலகத்திற்க்குச் செல்கிறான். அங்கு ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறான்.தேவதை மாதிரி இருக்கிறாள்.
அவளும் அவனிடம்  தினமும் பேசுகிறாள்.படிப்பு வரா விட்டாலும் காதல் வந்துவிடுகிறது.

அவள் உடுத்தும் உடைகள் சரோஜா தேவி காலத்து  உடைகள்.ஏன் என்று புரியவில்லை.

தன் காதலை ஒரு நாள் அவளிடம் சொல்கிறான்.அவள் சிரிக்கிறாள்.தனக்கு குறை இருப்பதால்தான் அவள் காதலிக்க விரும்பவில்லை என்று உரக்கச் சொல்கிறான்.அவள் மறுபடியும் சிரிக்கிறாள்.அப்போது நூலக மேலாளர் “என்னப்பா தனியா பேசிட்டு இருக்கே” என்று கேட்க.” சார்.. இங்க ஒரு பொண்ணு இருக்காங்களே..” என்று சொல்ல மேலாளர் அதிர்கிறார்.

இப்போது நூலகம் இருக்கும் இடத்தில் 40 வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனை இருந்ததாகவும் நூலக இடத்தில் மார்சுவரி(பிண கிடங்கு)இருந்ததாகவும் சொல்கிறார்.நூலகத்தில் ஆவி நடமாட்டம் இருப்பதாகவும் சொல்கிறார்.

சொல்லிய விதம் அருமை.இசையும் அருமை.திக்குவாய் பையனாக நடித்த மணிகண்டன்  நடிப்பு சூப்பர்.அங்காடித் தெரு மகேஷ் சாயல்.படத்தில் இவர் பெயர் மகேஷ்.இவர்தான் வசனமும் எழுதினாராம்.

பாலச்சந்தருக்கு இவரை ரொமப பிடித்துப் போய் இவரை சந்திக்க வேண்டும் என்றார்.

ஆவியை ஒரு தேவதைப் பெண்ணாக காட்டி இருப்பது புதுமை.அந்தப்பெண் வரும் காட்சிகளில் புகை மூட்டத்தில் காட்டி அன்னியப்படுத்தி இருக்கவேண்டாம்.க்ளிஷே?

கடைசி வசனத்தில் திக்கு வாய் போய்விடுவதாக மதன் சொன்னார். நான் கவனிக்கவில்லை.முடிவு செயற்கையோ?

Birds of the same feather flock tegether.(இனம் இனத்தைதான் சேரும் ?) இதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம்.ஆட்டோ பின்னால் எழுதப்படும் அசட்டு வாசகம் போல்?

படம்:வசந்தி இயக்குனர்:சுப்பராஜ்

பேராசிரியர் வசந்தி  கண்டிப்பானவர்.கையில் பிரம்புதான் இல்லை.தன் மாணவர் கொடுக்கும் பிராஜெக்ட் அவன் சுயமாக செய்தது இல்லை என்று கண்டுகொள்கிறாள். அவன் அப்பாவை வரவழைக்கிறாள்.அவர் வசந்தியின் முன்னாள் காதலன்.

வீட்டோடு மாப்பிள்ளை மற்றும் தன் பிராஜெக்ட் முடிக்கும் வரை திருமணம் கிடையாது என்பதால் அவரின் காதல் கைக்கூடவில்லை. அந்த பழைய பிராஜெக்ட்தான் மகனுக்குக் கொடுத்தது.அவளுக்கு அந்த பிராஜெக்ட் பிடித்து விடுகிறது.

மிச்சமிருக்கும்  காதல் ஹாங் ஓவர் துளிகளினால் அதிரடி அனுமதி கிடைக்கிறது.மகிழ்ச்சி பிரவாகமாக ஓடுகிறது.

ஆனால் வெளியில் மாணவனிடம் கைக்குலுக்கிய பெண்ணிடம் சீறுகிறாள்.அவள் அப்படித்தான்?அந்தப் பெண் வசந்தியின் தங்கை?

ஓகே ரகம்.வணிக பத்திரிக்கைக் கதைபோல் இருக்கிறது.வசந்தியின் நடிப்பில் நாடகத்தனம். இசை  வசனங்களை இம்சை படுத்தியது.காதலர்கள் சந்தித்தால் பின்னணியில் ” சங்கத்தில் காணாத கவிதை” பாட்டு.காதல் மறுக்கப்பட்டதும் ”என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு”.இறந்துபோனால் “வீடுவரை உறவு காடுவரை”யா? டி.ராஜேந்தர் & பாக்கியராஜ் அசட்டுத்தனம்.

மாத்தி யோசிங்கப்பா? இது ”நாளைய” இயக்குனர. ”நேற்றைய” இயக்குனர அல்ல.எல்லாம் வசந்திதான் என்ற வகையில் “வசந்தி” தலைப்பு ஒரு அழுத்தமான குறியீடு.

படம்:பூமராங் இயக்குனர்:அருண் பிரசாத்

தன் வினை தன்னையே சுடும்.மூல சூடு பேராசரியருக்கு ஒரு மாணவன் செய்யும் வினை திரும்ப அவன் மேலே பூமராங் ஆகிறது.அவன் செய்வது அப்படி ஒன்றும் பெரிய வினை மாதிரி தெரியவில்லை.

கடைசியில் புரியவில்லை.இன்னும் கூட நன்றாக கன்வின்சிங்காக சொல்லி இருக்கலாம்.மையம் அழுத்தமாக இல்லை.ஓகே ரகம்.

ஆச்சரியம் ஒன்று.இதில் பேராசிரியராக நடித்தவர் “பதினாறு வயதினிலே” படத்தில் டாக்டராக வரும் சத்யஜித். பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இன்னும் அதே தமிழ்தான் பேசுகிறார்.வட இந்திய பேராசிரியர் ?

சிற்ப்பு படம்: என் இனிய பொன் நிலாவே.எந்த படமும்  இந்த வாரம் வெளியேற்றப்படவில்லை.

Saturday, November 6, 2010

வ குவார்ட்டர் கட்டிங் - பட விமர்சனம்

மதுபான விளம்பரத்திற்குத் தடை என்று வந்ததும் King Fisher மினரல் வாட்டர்,Haywards/Bagpiper சோடா,Smironoff காசெட்டுகள்,Teacher"s
சாதனை விருதுகள் மற்றும் Royal Challenge கிளாஸ் டம்ளர்கள் என்று மறைமுகமாக(surrogate ad)விளம்பரம் கொடுத்து”டகால்டி”செய்தார்கள்.
ஆனால் இதையும் அரசாங்கம்  தடை செய்தது.

அதே மாதிரிதான் டைட்டிலில் “வ குவார்ட்டர் கட்டிங்”.டைட்டிலுக்கே சப் டைட்டிலாம்.படத்தில் கண்டமேனிக்கு எல்லோரையும் கலாய்ப்பது போல் டைட்டிலிலும் கலாய்ப்பா?உள்ளே மவுண்ட்ரோடு,மெட்ராஸ்..?

சுந்தர்ராஜன்(சிவா)என்கிற சுரா(சுரா என்று கூப்பிட்டால்தான் அவனுக்குப் பிடிக்கும்)கோயம்பத்தூரிலிருந்து சவுதிக்குப் போக சென்னை வந்து தன் வருங்கால மாமா(சரண்)(அக்காவை காதலிப்பவர்)ரூமில் தங்குகிறான்.

சரண் ஒரு மாட்டு டாக்டர்.

மறுநாள் காலை நாலு மணிக்கு விமானம்.அன்று இரவு ஒரு குவார்ட்டர் கட்டிங்(XXX)போட்டுதான் விமான ஏறுவது என்று லட்சியமாக் கொண்டு கட்டிங்த் தேடி மாமாவுடன் தருமமிகு சென்னையில் அலைகிறான்.
தேர்தல் நாள் வருவதால் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் கிடையாது.நொந்து போகிறான்.

கட்டிங்கைத் தேடி ஓடுகிறான்...ஓடுகிறான்...
வாழ்க்கையின் ஓரத்திற்க்கே ஓடுகிறான்.அவன் லட்சியத்திற்குக் குறுக்காக நிறைய இடையூறுகள்...சவால்கள்...கடைசியில் அவன் கட்டிங் லட்சியம்நிறைவேறுகிறதா.? படம் பார்க்கவும்.
 
இதுதான் வ குவார்ட்டர் கட்டிங்கின் சரக்கு(கதை.




கதை ஒரே இரவில் நடக்கிறது.சீரியஸ்னெஸ் இல்லாத கதை.ஆனால் நிறைய சிரிக்க வைக்கிறார்கள்.நடுவில் நமுத்த அப்பளம் போல் கதை சுவராசியம் இல்லாமல் போய் பின்னால்  1/24 அளவு விறுவிறுப்பு கூடுகிறது.சில இடங்களில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பார்ப்பது போல் லாஜிக்கே இல்லை.
கடைசியில் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்து  கூரையைப் பிச்சிட்டு கொடுப்பது நல்ல டிவிஸ்ட்.

வித்தியாசமான கேமரா ஒளியில் சொல்லப்பட்டு ரசிக்க முடிகிறது. 

தமிழ்ப்படத்தின் ஹாங்க் ஓவர்கள் அங்கங்கு தெரிகிறது.ரசிகர்களும் அதே ஹாங்க் ஓவரில்தான் படத்திற்கு வந்திருப்பார்களோ?டைட்டில் குவார்ட்டர் கட்டிங் ஆச்சே?

கதாநாயகன் சிவா வழக்கமான எஸ்வி சேகர்த்தனமான காமெடி.இது அவருக்குப் பொருந்தி வருகிறது.நன்றாக செய்திருக்கிறார்.ஆனால் அதே தமிழ்ப்பட வாய்ஸ் மாடூலேஷன் காமெடி.இது மாதிரியே தொடர்ந்தால் மேஜர் சுந்தராஜன் ஆகி விடுவார்.மாமாவாக வரும் சரண் நன்றாக செய்திருக்கிறார்.இவர் மனதில் நிற்கிறார்.வித்தியாசமான கேரக்டர்.
         டைரக்டர் காயத்ரி-புஷ்கர்

கதாநாயகி(?)லேகா வாஷிங்டன் ஜோடி அல்ல.கட்டிங் லட்சியத்தின் குறுக்கே வந்துபோகும் ஒரு மக்குப் பெண்.அவரும் நன்றாக செய்திருக்கிறார்.

செட்டிங்குகள் ஏன் சைனீஸ் ரெஸ்டாரெண்டுபோல் சிவப்பு நிறத்தில்?நைட் எபெக்ட்டா?இசை ஜி.வி.பிரகாஷ்.சுமார்.லேகா பாடும் பாட்டின் நடன அமைப்பு நன்றாக இருக்கிறது.”உன்னைக் கண் தேடுதே” பழையப் பாட்டு ரிமிக்ஸ் வேறு உண்டு.கொடுமை.

மறு நாள் 4 மணிக்கு விமான ஏறப்போவதின் சீரியஸ்னெஸ் இல்லாமல் குவார்ட்டருக்கு அலைவது ஒரு கட்டத்தில் அபத்தம்.வசனங்களில் மட்டுமில்லாமல் பின்னணி,உடை,சக நடிகர்கள் முகங்கள்,ஆங்கிலோ இந்தியர்கள் பேசும்தமிழ்,வாகனங்கள் என்று நகைச்சுவையை கொண்டுவந்திருக்கிறார்கள்.

சொன்ன கதை குழப்பில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.படபிடிப்பு அருமை(நிரவ் ஷா).

ரசித்த ஜோக்குகள்:

(பாலத்தில் தற்கொலைக்கு முயலும் பெண்ணை காப்பாற்ற தூக்கும்போது)”சாவற்த்துக்கு முன்னேமே பொணம் கனம் கனக்கற”.

சரண் அணிந்திருக்கும் சட்டைப் பாண்ட்டைப் பார்த்து “மூணு மொட்டை மாடில திருடினா மாதிரி இருக்கு”

படத்தில் இன்னும் கூட புல் கதைக்கொண்டு வந்து சுவராஸ்யம் கொண்டு வந்திருக்கலாம்.




Tuesday, November 2, 2010

கமல் பாடல் கேட்டு இடி கைத்தட்டும்?

பாகவதர் காலத்தில் நடிக்கத் தெரிந்தவருக்கு பாடவும் தெரியவேண்டும்.இல்லாவிட்டால் வாய்ப்பு இல்லை.அழகு இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை சங்கீத ஞானம் வேண்டும் என்ற கால கட்டம்.நிறைய பாடிக்கொண்டே நடித்தார்கள்.

பின்னாளில் பின்னணி பாடும் தொழில்நுடபம் வந்து விட்டாலும் உலக நாயகன் கமல் அதையும் விட்டு வைக்கவில்லை.அவரும் டூயட் அல்லது சிங்கிள் அல்லது குரூப் பாடிக்கொண்டே நடித்தார்.வேறு நடிகர்களுக்கும் பின்னணியும் பாடினார்.அதுவும் இரண்டு முன்னணி பின்னணி பாடகிகளுடன்.



கமலின் பன்முகத் திறமையில் சினிமாவில் பாட்டுப் பாடுவதும் ஒன்று.அவர் முதலில் பாடிய பாட்டு “ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்”. படம்:அந்தரங்கம் (1975).இசை: ஜி.தேவராஜன்.கிட்டத்தட்ட 35 வருடம் முன்பு..

இவர் நுழைந்த காலத்தில் எந்த கதாநாயகனும் பாடுவதற்கு இவர் போல் ஆர்வம் காட்டிய மாதிரி தெரியவில்லை. கமலை சத்தியமாக பாராட்ட வேண்டும்.பாடுவது என்றால் சும்மா இல்லை நடிப்பதுபோல் சவாலான ஒன்று.

முதல் பாட்டு அவ்வளவாக குறை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெயிட் லிஸ்டில் வைக்கப்பட்ட பாடகரின் குரல்வளம்.



முதல் பாட்டுக்கும் அடுத்துப் பாடிய பாட்டுக்களுக்கும் இடைவெளி நிறைய.

கமல் தன் ஆரம்ப கால படங்களில் பெண்களைக் கவருவதற்கு வேணுமென்றே திறந்த மார்புடன் கட்டாயமாக ஒரு காட்சியில் வருவார். சில படங்களில் ஜட்டியுடன் தோன்றுவார்.அது பாணியில் தான் பாடகராக காட்டிக்கொள்ளவேண்டும் என்று இசையமைப்பாளர்களைச் செல்லம் கொஞ்சி அல்லது தன் கதாநாயக அந்தஸ்த்தை பயன்படுத்தி சான்ஸ் வாங்கிப் பாடிய மாதிரி தெரியவில்லை

தான் பாடும் காட்சியில் தானே பாடினால் சிறப்பாக இருக்கும் என்ற ஆர்வ கோளாறுதான்.(இஞ்சி இடுப்பழகி/கடவுள் பாதி/பன்னீர் புஷ்பங்களே/அன்பே சிவம்).
ருக்கு ருக்கு (அவ்வை ஷண்முகி) சவாலான பாடல்.படம் முழுவதும் வயதான பெண்ணாகவே பேசி அதே குரலில் பாடவும் செய்துவிட்டார்.சூப்பர்.

கிட்டதட்ட 70 பாடல்கள் பாடி இருப்பார் என்று நினைக்கிறேன்.இவருக்கும் இசை ஞானிக்கும் கெமிஸ்டரி பொருந்தி போகும் போல.இசை ஞானியின் படங்களில் நிறைய பாட்டியுள்ளார்.ஆனால் ராஜா அவ்வளவாக இவரை டூயட்டுக்கு பயன்படுத்தவில்லை. கமலின் குரல் ரேஞ்ச் தெரியும். ரிஸ்க் எடுக்கவில்லை.தன் இசையை வைத்து சில பாடல்களை ஒப்பேற்றிவிட்டார்.

இதே  மாதிரி குரல் வேறு யாருக்கேனும் இருந்தால் இளையராஜா பாட அனுமதித்திருப்பாரா? சந்தேகம்தான்.

உலக நாயகன் கமல் என்ற அந்தஸ்த்தில் இவர் பாடல்கள் இவரது ரசிகர்களால்  ரசிக்கப்படுகிறது.புரட்சித் தலைவி ஜெயலலிதா கூட தேர்தல் நேரங்களில் பாடுகிறார். ரத்தத்தின்  ரத்தங்கள் புல்லரிக்கிறார்கள்.
 
பொதுவாக கமல் குரல் எப்படி?

தன்னுடைய பன்முக திறமை வைரங்களில் இதுவும் ஒரு வைரம் என்று சொல்ல முடியாது.குட்டையாக நடிக்கலாம். நெட்டையாக நடிக்கலாம்.ஜார்ஜ் புஷ் அல்லது பலராம நாயுடுவாக தோன்றலாம். ஆனால் பாடுவது தனக்கு இயற்கையாக இருக்கும் குரலில்தான் பாட வேண்டும். ருக்கு ருக்குக்கு மாத்தலாம்.ஆனால் மெலடிக்கு?

ஓகே ரகம்.நூத்துக்கு நாற்பது மார்க் போடலாம். கணீர் குரல் கிடையாது.தனி இழையாக  கேட்காமல் தூசு படிந்து வருகிறது.அதாவது finetune ஆகவில்லை.

 இவருக்கு பொருத்தமாக  நிறைய “பேசும்” பாட்டுக்கள் பாடியுள்ளார்.கடவுள் பாதி/சொன்னபடி கேளு,கண்மணி காதல்,விகரம்,ஆள்வர்பேட்டை ஆளுடா.

இவர் ”மைக்” மோகனுக்கு பின்னணி பாடி இருக்கிறார்.” பொன் மானே தேடுதே” படம்: ஓ மானே மானே(1984).இசை இளையராஜா.ரொம்ப ஆச்சரியமான நிகழ்வு.



ஆனாலும் சில பாடல்களை சிறப்பாக பாடி உள்ளார். எனக்குப்பிடித்த சில பாடல்கள்.

1.எங்கேயோ திக்கு திசை(மகா நதி)
2.அன்பே சிவம் அன்பே சிவம்(அருமையான இசை)
3.சுந்தரி நீயும்
4.பொன் மானே தேடுதே
5.ராஜா கைய வச்சா
6.போட்டு வைத்த காதல்
7.கண்மணி காதலன் அன்போடு
8.ஞாயிறு ஒளி மழையில்

இவர் குரல் சில சமயங்களில்   ஜெயசந்திரன் சாயல் வருகிறது.

”எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்” என்று மழையில் நனைந்தபடி என்னைப்போல் ஒருவன் படத்தில் கமல் பாடுவார்.அதுதான் பதிவின் தலைப்பு.

டெயில் பீஸ்:

எஸ்.பி.பி. கமலுக்கு நிறைய பின்னணிப் பாடி கமல் பாடுவது மாதிரியே ஆகி கமல்  கமலுக்கு பாடினால யாரோ மாதிரி இருக்கிறது.



Monday, November 1, 2010

நாளைய இயக்குனர் -குறும்பட விமர்சனம் - 31-10-10

இந்த வாரம் “கல்லூரிக் கதைகள்”. கல்லூரிக்குள் நிகழும் சம்பவங்களை அடைப்படையாக வைத்து.இயக்குனர்களின் செல்ல சப்ஜெக்ட் ஆச்சே புகுந்து விளையாடுவார்கள் என்று பார்த்தால் ஆரம்பமே சரியில்லையே??

ஒன்றுதான் தேறுகிறது.

போன வாரம்-24-10-10
 

படம் எடுப்பதை சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டு இயக்குமாறு மதன் சார்,பிரதாப் போத்தன் சார் அறிவுரையோடு ஆரம்பித்தார்கள்.

படம்: DSP  இயக்குனர்: N.S.ராகேஷ்

கல்லூரியில் Digital Signal Processing என்ற சப்ஜெக்டில் தேறுவது மாணவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.அதில் சந்தோஷ் என்ற ஹீரோவும் அடக்கம்.பிட் அடித்துதான் பாஸ் பண்ண முடியும்,அதாவது  DSP யை அடக்கி கைக்குள் கொண்டு வரமுடியும் என்கிறான், ஹீரோவின் தம்பி சுரேஷ். ஆனால் அண்ணனுக்கு அதில் துளியும் இஷ்டமில்லை.

இரண்டு பேரும் இரட்டையர்கள். அண்ணனுக்குப் பதிலாக தம்பி போய்  பிட் அடித்து பரீட்சை எழுதி (எல்லோருக்கும் அதை விநியோகித்து)  பாஸ் செய்ய வைக்கிறான்.தம்பி உடையான் படைக்கு அஞ்சன்?

எடுப்பு தொடுப்பு முடிப்பு என்று சுவராஸ்யமாக இல்லையே?DSP என்னவென்று சில நிமிடங்கள் சஸ்பென்ஸாக வைத்து பின் சொல்கிறார்கள்.அதிலும் அவ்வளவு கெத்து இல்லையே?

ஓகே ரகம். நிறைய ஹோம் வொர்க் பண்ணுங்க இயக்குனர் சார்.

படம்: ஹீராதி ஹீரோ  இயக்குனர்:ஸ்ரீமணிகண்டன்

தன் நண்பர்களுக்கிடையே தன்னை ஹீரோவாக காட்ட வேண்டும் என்று மூன்று பேர் உதார் விட்டு ஹீரோ ஆவதுதான் கதை.உண்மையில் ஜீரோ எல்லோரும்.

இதுவும் சுமாரான படம்.

படம்: ரெண்டு இட்லி ரெண்டு வடை இயக்குனர்:அருண்குமார்

ஒரு சில கல்லூரி ஹாஸ்டல் மாணவர்களுக்கும் அதே கல்லூரியின் மெஸ்ஸின் சமையற்காரர் அழகர் பிள்ளைக்கும் உள்ள பாசப்பிணைப்புதான் கதை.இவர்க்ள் கொடுக்கும் தொல்லைகளை பெத்த அம்மாவைப் போல் எடுத்துக்கொள்கிறார்.

அழகர் பிள்ளை  தன் நீண்ட நாள் சேமிப்பை வைத்து அந்த மாணவர்களை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றுகிறார். அந்த சேமிப்பு தன் பேத்திக்கு ஒரு செயின் வாங்குவதற்காக வைத்திருந்தது. மாணவர்கள் நெகிழ்கிறார்கள்.

அதே செயின் பணத்தை அவருக்கு செயினாகவே திருப்பிக்கொடுக்கிறார்கள்.அவரும் நெகிழ்கிறார்.

கதையை  சொன்னவிதம் நன்றாக இருந்தது. சமையற்காராக நடித்த முருகன் என்பவரின் நடிப்பு  அட்டகாசம். அவர் குரலும் அருமை.யதார்த்தம்.”உங்க அம்மா சோறு போட்டிருந்தா... இப்படித்தான் தண்ணியடிச்சிட்டு வருவீங்களா” வசனம் நன்று. படபிடிப்பும் யதார்த்தமாக இருந்தது. 

இந்தப்படத்தை 70% இவர்தான் தாங்குகிறார்.நடுவர்கள் இருவரும் இதைப்பற்றி ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை.

அந்த மாணவர்கள் கல்லூரி முடிந்து வேலையில் செட்டிலாகி இவருக்கு கடிதம் எழுதுகிறார்கள் .இவர் கையில் கடிதம் இருக்க பின்னணியில் இவர்கள் எல்லோரும் படிப்பதுமாக எடுத்திருப்பது அருமை.இதை மதனும் குறிப்பிட்டார்.


இந்த வாரம் சிறப்புப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது “ரெண்டு இட்லி ரெண்டு வடை”

சிறந்த நடிப்புக்காக முருகனும் பரிசு பெற்றார்.

படம்:வேகம் உண்டு விவேகம் இல்லை இயக்குனர்:சந்திரன்

இயக்குனர் ஒருவருக்குத்தான் இதன் கதை என்னவென்று தெரியும்.