Monday, November 8, 2010

குறும்பட விமர்சனம்-7-11-10-கலைஞர் டிவி

கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர்  நிகழ்ச்சியில் இந்தவாரமும் கல்லூரிக் கதைகள்.

ஒவ்வொரு குறும்பட முடிவிலும் நடுவர் பிரதாப்போத்தன் என்ன சொல்லி கிழிக்கப் போகிறார் என்ற பீதி இயக்குனரின் முகத்தில் தென்படுவது சுவராஸ்யம்.

குறும்படங்கள் ஒன்றுக்கொன்று சவாலானதாக இருப்பது வரவர குறைந்துவிட்டது.

போனவாரம் 31-10-10


படம்:Samaritan இயக்குனர்: தீபன்

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை என்று தலைப்பில் போடப்படுகிறது.

கல்லூரி மெஸ்ஸில் வேலை செய்யும் ஒரு இளைஞன் தன் சுய முயற்சியால் படித்து பட்டம் வாங்கினவன்.தன் அப்பாவிற்கும் படிப்பு சொல்லிக்கொடுத்தவன். அதே மாதிரி ஏழைகள் முதியோர்களுக்கு படிப்புச்சொல்லித்தர ரொம்ப ஆர்வமாக இருக்கிறான்.முதலில் கல்லூரி மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்கிறான்.அவனுடைய ஆர்வப்பொறி அந்த கல்லூரி மாணவர்களுக்கும் பற்றிக்கொள்கிறது.அவர்கள் முதியோர் மற்றும் ஏழைகளுக்கு கல்வி கற்றுத் தர தொடங்குகிறார்கள்.கல்லூரி நிர்வாகம் சந்தோஷப்படுகிறது.

அந்த பையனுக்கு Good Samaritan விருது வழங்கப்படுகிறது.

அருமையான படபிடிப்பு.உறுத்தாத நடிப்பு.கல்லூரி வாழ்க்கையில் பாசிட்டீவ் எண்ணங்கள்.வாழ்த்துக்கள்!

கதை?ஆவணப்படம்?

மாணவர்கள் ஏழைகளுக்கு படிப்பறிவு கொடுப்பதை முதலில் காட்டி இந்தப் பொறி இவனிமிருந்துதான் வந்தது என்று கடைசியில் மெஸ் பையனைக் காட்டி இருக்கலாமோ?

Good Samaritan என்பவர்  கஷ்டத்தில் இருக்கும் முன்பின் தெரியாத ஒருவருக்கு தன்னிச்சையாக உதவி புரிபவர்.இதில் சுயநலம் கிடையாது.இது பைபிளில் வருகிறது.

ஆனால் இந்தக் கதைக்கு இந்த டைட்டில் பொருந்தவில்லையே?

படம்:என் இனிய பொன் நிலவே இயக்குனர்:அருண் ராஜா காமராஜ்

அரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்த திக்குவாய் பிரச்சனை உள்ள ஒரு இளைஞன் கல்லூரியில் சேருகிறான்.பாடங்கள் புரியவில்லை.ஆசிரியர்கள் பேசும் ஆங்கிலத்தைப் பின்பற்ற முடியவில்லை.படிப்பு ஏறவில்லை  என்ற தாழ்வு மனப்பான்மை அவனை குடிக்கொள்கிறது.

அதற்காக தினமும் படிப்பதற்க்கு கல்லூரி நூலகத்திற்க்குச் செல்கிறான். அங்கு ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறான்.தேவதை மாதிரி இருக்கிறாள்.
அவளும் அவனிடம்  தினமும் பேசுகிறாள்.படிப்பு வரா விட்டாலும் காதல் வந்துவிடுகிறது.

அவள் உடுத்தும் உடைகள் சரோஜா தேவி காலத்து  உடைகள்.ஏன் என்று புரியவில்லை.

தன் காதலை ஒரு நாள் அவளிடம் சொல்கிறான்.அவள் சிரிக்கிறாள்.தனக்கு குறை இருப்பதால்தான் அவள் காதலிக்க விரும்பவில்லை என்று உரக்கச் சொல்கிறான்.அவள் மறுபடியும் சிரிக்கிறாள்.அப்போது நூலக மேலாளர் “என்னப்பா தனியா பேசிட்டு இருக்கே” என்று கேட்க.” சார்.. இங்க ஒரு பொண்ணு இருக்காங்களே..” என்று சொல்ல மேலாளர் அதிர்கிறார்.

இப்போது நூலகம் இருக்கும் இடத்தில் 40 வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனை இருந்ததாகவும் நூலக இடத்தில் மார்சுவரி(பிண கிடங்கு)இருந்ததாகவும் சொல்கிறார்.நூலகத்தில் ஆவி நடமாட்டம் இருப்பதாகவும் சொல்கிறார்.

சொல்லிய விதம் அருமை.இசையும் அருமை.திக்குவாய் பையனாக நடித்த மணிகண்டன்  நடிப்பு சூப்பர்.அங்காடித் தெரு மகேஷ் சாயல்.படத்தில் இவர் பெயர் மகேஷ்.இவர்தான் வசனமும் எழுதினாராம்.

பாலச்சந்தருக்கு இவரை ரொமப பிடித்துப் போய் இவரை சந்திக்க வேண்டும் என்றார்.

ஆவியை ஒரு தேவதைப் பெண்ணாக காட்டி இருப்பது புதுமை.அந்தப்பெண் வரும் காட்சிகளில் புகை மூட்டத்தில் காட்டி அன்னியப்படுத்தி இருக்கவேண்டாம்.க்ளிஷே?

கடைசி வசனத்தில் திக்கு வாய் போய்விடுவதாக மதன் சொன்னார். நான் கவனிக்கவில்லை.முடிவு செயற்கையோ?

Birds of the same feather flock tegether.(இனம் இனத்தைதான் சேரும் ?) இதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம்.ஆட்டோ பின்னால் எழுதப்படும் அசட்டு வாசகம் போல்?

படம்:வசந்தி இயக்குனர்:சுப்பராஜ்

பேராசிரியர் வசந்தி  கண்டிப்பானவர்.கையில் பிரம்புதான் இல்லை.தன் மாணவர் கொடுக்கும் பிராஜெக்ட் அவன் சுயமாக செய்தது இல்லை என்று கண்டுகொள்கிறாள். அவன் அப்பாவை வரவழைக்கிறாள்.அவர் வசந்தியின் முன்னாள் காதலன்.

வீட்டோடு மாப்பிள்ளை மற்றும் தன் பிராஜெக்ட் முடிக்கும் வரை திருமணம் கிடையாது என்பதால் அவரின் காதல் கைக்கூடவில்லை. அந்த பழைய பிராஜெக்ட்தான் மகனுக்குக் கொடுத்தது.அவளுக்கு அந்த பிராஜெக்ட் பிடித்து விடுகிறது.

மிச்சமிருக்கும்  காதல் ஹாங் ஓவர் துளிகளினால் அதிரடி அனுமதி கிடைக்கிறது.மகிழ்ச்சி பிரவாகமாக ஓடுகிறது.

ஆனால் வெளியில் மாணவனிடம் கைக்குலுக்கிய பெண்ணிடம் சீறுகிறாள்.அவள் அப்படித்தான்?அந்தப் பெண் வசந்தியின் தங்கை?

ஓகே ரகம்.வணிக பத்திரிக்கைக் கதைபோல் இருக்கிறது.வசந்தியின் நடிப்பில் நாடகத்தனம். இசை  வசனங்களை இம்சை படுத்தியது.காதலர்கள் சந்தித்தால் பின்னணியில் ” சங்கத்தில் காணாத கவிதை” பாட்டு.காதல் மறுக்கப்பட்டதும் ”என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு”.இறந்துபோனால் “வீடுவரை உறவு காடுவரை”யா? டி.ராஜேந்தர் & பாக்கியராஜ் அசட்டுத்தனம்.

மாத்தி யோசிங்கப்பா? இது ”நாளைய” இயக்குனர. ”நேற்றைய” இயக்குனர அல்ல.எல்லாம் வசந்திதான் என்ற வகையில் “வசந்தி” தலைப்பு ஒரு அழுத்தமான குறியீடு.

படம்:பூமராங் இயக்குனர்:அருண் பிரசாத்

தன் வினை தன்னையே சுடும்.மூல சூடு பேராசரியருக்கு ஒரு மாணவன் செய்யும் வினை திரும்ப அவன் மேலே பூமராங் ஆகிறது.அவன் செய்வது அப்படி ஒன்றும் பெரிய வினை மாதிரி தெரியவில்லை.

கடைசியில் புரியவில்லை.இன்னும் கூட நன்றாக கன்வின்சிங்காக சொல்லி இருக்கலாம்.மையம் அழுத்தமாக இல்லை.ஓகே ரகம்.

ஆச்சரியம் ஒன்று.இதில் பேராசிரியராக நடித்தவர் “பதினாறு வயதினிலே” படத்தில் டாக்டராக வரும் சத்யஜித். பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இன்னும் அதே தமிழ்தான் பேசுகிறார்.வட இந்திய பேராசிரியர் ?

சிற்ப்பு படம்: என் இனிய பொன் நிலாவே.எந்த படமும்  இந்த வாரம் வெளியேற்றப்படவில்லை.

5 comments:

  1. நன்றி சித்ரா.

    ReplyDelete
  2. மழை,பவர்கட்... :(

    ReplyDelete
  3. தமிழ்ப்பறவை said...

    //மழை,பவர்கட்... :(//

    நானும் அடுத்தவாரத்திலிருந்து பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.நிறைய இடையூறுகள்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!