Friday, November 3, 2017

Wednesday, July 27, 2016

குரல்கள் -ரஜினி அங்கிள் " அதிர்ச்சி”-பார்க்கிங் இம்சை-முகங்கள்


சமீபத்தில் அப்பா படத்தில் நடித்த சிறுமியின் டிவி பேட்டியைக் கேட்டேன். நன்றாக ஒரு வித பக்குவமாக பேசினாள்.

இந்தத் தலைமுறை சிறுமி சிறுவர்களுக்கு தங்களுடைய திறமையைக் காட்ட
தங்கள் கருத்துக்களைப் பொதுவெளியில் சொல்ல பலவித ஊடகங்கள் இருக்கிறது ஏதோ ஒரு துறையில். போன தலைமுறையை விட கொடுத்து வைத்தவர்கள். ஆனால் அதே சமயம் புகழ் வெளிச்சம் ஓவராக விழுந்து பொய்யான உலகத்தில் மிதக்க ஆரம்பிக்கிறார்கள்.ஊடகங்கள் அதை ஊதிப் பெருக்குகின்றன.

கருத்துக்களை வெளியிடும் போதும் மிகைப்படுத்தல் அதிகமாக இருக்கிறது.இது உலகம் தெரியாமை.



___________________________________________________________


”டமால் டூமில்.....டப் டப் டப் டுப் டமார்....டிஷ்க் டிஷ்க்......டியுங் டியுங்...டமால் டூமில் டப் டப் டப் படார்......”
ரஜினீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....... அங்கிள் கைல இருக்கிற காம்போ ஆஃபர் பாப்கார்ன்லாம் எல்லாம் சைடும் செதறது. ”ஏ” ன்னு போட்டிருக்கிலாம்ல. நாங்க வந்திருக்க மாட்டோம்ல. பேரெண்ட்ஸும் பீல் பண்றாங்க...”
டொய்ங் டொய்ங் டொய்ங்...டங்டன் டங்டன் ..டொய்ங் டொய்ங் டொய்ங்...டங்டன் டங்டன் ..டொய்ங் டொய்ங் டொய்ங்...டங்டன் டங்டன் ..
“அதிர்ச்சி” அங்கிள்



____________________________________________________________________

இது ஒரு இம்சை(வன்முறை) பல வருடமாக நடக்கிறது.
தியேட்டரில் படம் முடிந்ததும்(எல்லா) வாகனப் பார்க்கிங் டிக்கெட்டை கவனமாக வாயில் கவ்விக்கொண்டோ கையில் இடிக்கிக்கொண்டோ பாண்ட்பாக்கெட்டில் வைத்துக்கொண்டோ வண்டியில் சொருகிக்கொண்டோ
ஊர்ந்து ஊர்ந்து ட்ராபிக் ஜாமாகி பார்கிங் attendantடிடம்
காட்டிவிட்டு குறுகிய வாசல் வழியாக வெளியேறுவது.
இதற்கு காரணங்கள் இருக்கலாம்.
1. வண்டி திருடுவது(நிர்வாகம் பொறுப்பா?)
2.தேதி இல்லாத வெறும் கலர் டிக்கெட்
3.டிக்கெட் எடுக்காமல் பார்க் செய்வது




திருப்பதி தரிசன வரிசையை மேம்படுத்த ஒரு வித விஞ்ஞான பூர்வ அல்லது
நடைமுறை அணுகுமுறையை பின்பற்றியது போல் இங்கும் செய்ய வேண்டும்.

__________________________________________________________________


சொன்னா கேட்டாதானே?
நண்பர் ஒருவர் அடிக்கடி கூகுளில் வியாதிகள்...... மருந்துகள்.... என்று ”பொது அறிவு” மற்றும் ”விழுப்புணர்ச்சி”க்காக தேடித் தேடி பார்ப்பதுண்டு.
அப்புறம் திகில் அடித்து ஒரே வாரத்தில் தெளிந்தார்.
”சாதாரண ஜூரம் வந்தாலே கூகுள்ள சொல்லப்படும் எல்லா வியாதியும் எனக்கே இருக்கறா மாதிரி ஒரு பீலிங்.படங்கள், மருந்துகள் அதன் பக்க விளைவுகள் ... ஒரே திகிலா இருக்கு.கொடுத்த மருந்த சீட்ட பத்துவாட்டி படிச்சு அந்த மருந்தா இந்த மருந்தான்னு ஒவ்வொரு வாட்டியும் திங்கிங் போகுது. வேண்டாத வேல எதுக்கு
Ignorance is blissப்பா. பெஸ்ட் நம்ம பேமிலி டாக்டர்தான்”.
சொன்னா கேட்டாதானே? நாங்களும் மூணு வருஷம் முன்னாடி திகில் அடிச்சு வெளில வந்தோம்.



____________________________________________________________

பல வித முகங்கள்

______________________________________________________

Thursday, October 29, 2015

கவிதை -இடது கால் டச்சிங் தூக்கம்- இளையராஜா பிஜிஎம்














கவிதை

பெய்த மழையை

தலையில் வாங்கிய
மரங்களும் செடிகளும்
இன்னும் அழகாக
மழையைப்
பெய்துக்கொண்டிருக்கின்றன
______________________________________

சமீபத்தில் ஒரு உறவினரைப் பார்க்க சென்றிருந்தேன்.இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அவர் வீட்டில் தங்க நேர்ந்துவிட்டது.எனக்கு படுக்க ஒரு இடம் கொடுத்து என்னைப் படுக்கச் சொன்னார்.அவர் எங்கே படுப்பார் என்று யோசித்தேன். ஏன் என்றால அவர் படுக்கும் கட்டிலில் வேறு ஒரு தூரத்து உறவினர் பகிர்ந்துக்கொண்டுப் படுக்க வேண்டும்.

நாலடி கட்டிலில் இரண்டு பேர் விஸ்தாரமாக தூங்க முடியாது.” தூங்க முடியும்.சித்தப்பா (உறவினர்) படுக்கும் ஸ்டைலை  அவரு தூங்கின பிறகு பாருங்க காட்றேன்”.சித்தப்பா சீக்கிரமே படுக்கும் பழக்கம் உள்ளவர். நாங்கள் பேசிவிட்டு தூங்கும் நேரம் வந்தது. அவர் தன் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றர்.குறட்டைச் சத்தம்.

சித்தப்பா தூங்கும் போஸைப் பார்த்து திடுக்கிட்டேன். எந்த சமயத்திலும் கிழே விழுந்துவிடுவார் போல் இருந்தது. கட்டிலின் ஒரு ஓரத்தில் கட்டிலின் விளிம்பின் நேர்கோடாக ஒருக்களித்துவாறு சுவற்றை பார்த்தவாறு.ஆனால் அவரின் இடது காலின் பாதம் தரையை தொட்டவாறு.அவர் நாலடிக் கட்டிலில் யில் முக்கால் அடிதான் ஆக்ரமித்திருந்தார்.

“உங்களுக்காக இப்படி படுத்திருக்காரா?”

“ நோ... நோ.. இவரோட ஸ்டைலே இப்படித்தான். இப்படி படுத்தால்தான் இவருக்கு தூக்கம் வரும்.30 வருட பழக்கம்.கிழே எல்லாம் விழ மாட்டார். இடது காலுக்கு  ஏதாவது பிரச்சனை வரும் என்று   டாக்டரிடம் காட்டினால் டாக்டர் நார்மல் என்று சொல்லிவிட்டராம்”

அடுத்து சொன்னதுதான் டாப்.

ஏதோ ஒரு வயதில் ஒரு வெயில் காலத்தில் படுக்கையின் சூடு தாங்காமல் ஒருகளித்துப் படுத்து  இடது காலை மொசைக் தரையின் குளிர்ச்சிக்காக வைத்து  அதில் சுகம்(?) கண்டு அதற்கு அடிமை ஆகி விட்டராம்.மாற்றவே முடியவில்லையாம்.


தூக்கம் மனிதனுக்கு அவசியம் எப்படி தூங்கினால் என்ன?படுத்த அடுத்த நிமிடத்தில் தூங்குபவன் கொடுத்து வைத்தவன்.

__________________________________

இளையராஜா காதல் உணர்ச்சிகளை எப்படி வாரியிறைக்கிறார்.எவ்வளவு மெட்டுக்கள். காட்சியை முடிக்கும் போது வரும் இசை அருமை. மெஜெஸ்டிக் அண்ட் ஸ்டைல்.




________________________________

எந்த வேலை செய்தாலும் அதில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி அதில் லயித்து (பிடித்து) செய்யவும்.இது ஒரு பொன்மொழி.ஜென்  தத்துவம் ஒரு படி மேலே போய் அதுவாகவே இரு என்கிறது.

விஜய சூப்பர் சிங்கரில்  தோல்வியோடு வெளியேறும் சில பேருக்கு பல காரணங்கள் இருக்கலாம்.வெளியேறிய இரண்டு மூன்று பேர்கள் மேலே சொன்னதை செய்யவில்லை.




Tuesday, October 20, 2015

மோனோலிசா புன்னகை உண்டு ஆனால் இல்லை


கடவுள் மாதிரி உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை

உலகபுகழ் பெற்ற ஓவியம் மோனோலிசா .இதில் மோனோலிசாவின் புன்னகை மர்மம் மிகுந்தது. உண்மையிலேயே புன்னகை இருக்கும் ஆனா இருக்காது டைப் மர்மம்.புன்னகைப்பது போல் தோன்றும் ஆனால் தோன்றாது. எனக்கு ஒரு வயது வரை  “உம்” என்று மூஞ்சியை கொஞ்சமாக தூக்கி வைத்துக்கொண்டார்போல் இருந்தது. அப்புறம் புன்னகைப்பது அல்லது நமட்டு சிரிப்பு மாறி மாறி வரும்.

மனசுக்கேற்றார் போல் புன்னகை மாறும் மேஜிக் இது

ஏன் இப்படி என்று இந்தப் புன்னகையை வைத்து பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கிறார்கள்.தூரத்திலிருந்து பார்த்தால், ஆங்கிளை மாற்றினால், வெறும் கண்களை மட்டும் பார்த்தால் புன்னகைப்பது போல் தோன்றும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.வரைந்த ஓவியர் லியோர்னோ டாவின்சி ரொம்ப சாமர்த்தியமாக இப்படி தோன்றுவதற்காகவே வாய் அருகில் சில கலர் டச் அப் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

இதே ஸ்டைலில் இவரின் சின்ன வயது ஓவியம் இருக்கிறதாம்.அதன் பெயர்  ஐசெல்வொர்த் மோனோலிசா.





உலகத்திலேயே அதிகம் ரசிக்கப்பட அதே சமயத்தில் கலாய்க்கப்பட்ட ஓவியம் இதுதான் என்கிறார்கள்.



ஓவியத்த ஒருவாட்டி பாருங்க அம்மணி புன்னகைக்கிறாங்களா இல்லையா.


Monday, June 1, 2015

மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொள்ளுதல்




முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளுதல்


அது ஒரு கலை
அந்த முகம் அழகு
வெளிப்படும் உடல்மொழி
நடனத்திற்கோ இசைக்கோ ஒப்பானது
உயிரோட்டமான குறும்படம்
பெண்களுக்கான வரம்

இவரும் தூக்கி வைத்துக்கொண்டுள்ளார்

கோபத்தில் ரப்பர்பேண்டை அவிழ்த்து
முடியை முன் தள்ளிவிட்டார்
விளக்கை அணைத்து
ஜன்னல் ஓரம் அமர்ந்துவிட்டார்
நிலைகுத்திய பார்வை
கால் அளவு தூக்கிய 
திரைச்சீலையின் ஊடேதான்
வெளி உலகம் என பிடிவாதத்தில்
விரல்களை முட்டுக்கொடுத்துள்ளார்
இவை எல்லாம் கவித்துவமான
பிளாக் அண்ட் வொயிட்டில்
சித்திரமாக தீட்டி உள்ளார்

இவ்வளவு இருந்தும்
இவர் வித்தியாசமானவர்
இவர் மேலும் இதை அழகுப்படுத்தி இருக்கிறார்
தூக்கி வைத்துக்கொண்ட மாதிரியும் தெரிகிறது
தூக்கி வைத்துக்கொள்ளாத மாதிரியும் தெரிகிறது

Saturday, May 16, 2015

கொம்ப வச்சுக்கிட்டு....எமோஷன்...மோஷன்... பிடிச்சிருக்கு அன்னக்கிளிஆண்டாள் கொண்டை


எங்க தலவிதி(கொம்பு) அவ்வளவுதான்


ஹல்லோ.... டிஸ்கவரி சானல் கொம்புள்ள அனிமல்ஸ்...!என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறீர்கள்.கொடூரமான கொம்ப வச்சுகிட்டு உங்க இனத்தோட சண்டை போட்றீங்க. மரத்துல சொறிஞ்சுகிறீங்க.குட்டி அனிமல்ஸ்ஸ பயமுறுத்திறீங்க. ஆனா ஒவ்வொரு வாட்டியும் உங்களை வேட்டை மிருகங்கள் ஹைஸ்பிடில் துரத்தும்போது சடார் என்று திரும்பி(cricket reverse sweep கணக்கா)கொம்பால கொத்துபரோட்டா போடுவீர்கள் என்று எதிர்பார்ப்பேன். ஆனால் பொசுக்குன்னு மாட்டிட்டு கையும் காலையும் உதறுவீர்கள்.
கொஞ்சம் கொம்பையும் ஆட்டுவீர்கள். இப்ப ஆட்டி என்ன பிரயோஜனம்.


எல்லாம் பந்தாதான்.

பல கோடி வருட பரிணாம வளர்ச்சில இந்த ஐடியா ஜீன்ல வர சான்ஸ் இல்லையோ?Survival of the fittestக்கு எல்லா தகுதியும்(கொம்பு) இருக்கு. ஆனா.....ஏதோ ஒரு தடவை பல எறுமைகள் சேர்ந்து சிங்கத்த கொன்னத பார்த்தேன்.நீங்க எப்படி?

மோஷன்.... எமோஷன்..... கான்ஸிடிபேஷன் பின்னே கமோஷன்.....

இந்திப் படங்கள் நிறைய மாறி வருகிறது.தமிழ்ப் படங்கள்? ”சூதுகவ்வும்” ஹேங்ஓவரிலேயே இன்னும் இருக்கிறது.

PIKU நம்ம ஊர் கிரா அல்லது புதுமைப்பித்தன் டைப்பான சிறுகதை.”வெளிக்கு” சரியாக போகாத ஒரு “மூலசூடு”அப்பாவை வைத்துக்கொண்டு மகள் குப்பைக் கொட்டுவதுதான் கதை.இதை சுவராஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள் PIKU படத்தில்.

கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டால் யார் தன் (மலச்)சிக்கலை கவனிப்பார்கள் என்று She is not a virgin, sexually independent என்று மற்றவர்களிடம் சொல்லி அவள் கல்யாணத்தைப்பற்றி கண்டுக்கொள்வதே இல்லை.அவளும் அதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.

வழக்கமான ஷோபீஸ்ஸாக வரும் தீபிகா படுகோனுக்கு இது வரப்பிரசாதம்.முதலில் படத்தில் என்னைக் கவர்ந்தவர் இவர்தான். பின்னுகிறார்.அடுத்து இம்பிரஸ் செய்பவர் டிராவல்ஸ் உரிமையாளராக வரும் இர்பான்.இருவரும் அடிக்கடி மோதிக்கொள்வதும் பின்னர் புரிதலும் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அமிதாப் கொடுத்துவைத்தவர்.கிழடு தட்டினாலும் கிழட்டுத்தனத்திற்கு ஏற்றமாதிரி ரோல்கள் வந்து அமைகிறது. செட் ஆகி பின்னுகிறார்.முன்பு ”இளைஞன்” ஹீரோ.இப்போது “கிழட்டு” ஹீரோ.
படத்தில் நிறைய ஆங்கில உரையாடல் வருவதால் படத்தின் போக்கைப் புரிந்துக்கொள்ளலாம்.
இசை அனுபம் ராய் என்ற புதியவராம்.இந்த மாதிரி படத்திற்கென்றே stereotyped சிதார் வைத்திருக்கிறார்கள்.பின்னணியில்”சும்மா”  டொய்ங் டொய்ங்க்னு சிதாரை மீட்டினால் போதுமா? Soul இருக்க வேண்டாமா?.பாடல்கள் ரஹ்மான் சாயல்.

காட்ச் ”பிடி”ச்சிருக்கு

ஐபில் என்பது டிவி சீரியல் கணக்காக வணிக நோக்காக இருந்தாலும் சில சுவராஸ்யங்கள் இருக்கிறது. கடைசி ஓவர்களில் இதயதுடிப்பை எகிற வைக்கிறார்கள். ஒரு மாட்சில் சிஎஸ்கேயை “ஊத்தி மூடிட்டாங்க”  என்று பாதியிலேயே டிவி ஆஃப் பண்ணி படுத்து காலையில் எழுந்தால் சிஎஸ்கே வின் பண்ணிட்டாங்க.
சர்க்கஸ் கணக்காக பல்டி அடித்து வாயைப் பிளக்க வைக்கும் அற்புதமான காட்சுகள் பிடிக்கப்படுகின்றன.Stunned.... awesome.....!இன்னும் கூட பிரமிப்பு அடங்கவில்லை.நேற்று வாட்சன் அடித்த பந்தை சி எஸ்கே டீம் Dwayne Bravo காட்ச் பிடித்த காட்சி. வாட்சன் (ராஜஸ்தன் ராயல்ஸ்)ஆடிபோய்விட்டார்.நகைமுரண் என்னவென்றால் அதே மேட்சில் சாதாரண காட்ச் ஒன்றை சொதப்பி கைவிட்டார் Dwayne Bravo.

ஆண்டாள் கொண்டையுடன் அன்னக்கிளி ஹம்மிங்…..!

அன்னக்கிளி படத்திற்கு (ரிலீஸ் 14-05-1976) 39 வயது ஆகிவிட்டது.இந்தப் படத்தின் மாஸ் ஹிட்டிற்கு இன்னொரு முக்கிய காரணம் சுஜாதாவின் யதார்த்தமான பாத்திரப்படைப்பு.கொஞ்சம் உன்னிப்பாக படத்தைப் பார்க்க வேண்டும்.
”அன்னக்கிளி” படத்தின் முதல் காட்சியில் கிராமத்து பட்டிக்காட்டுப் பெண்ணான அன்னக்கிளி டெண்டு கொட்டகையில் “ஆண்டாள்” படம் பார்க்கிறாள்.காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பாட்டில் தன்னை மெய் மறக்கிறாள்.அதில் பத்மினி ஆண்டாளாக மணப்பெண் கோலத்தில் தோழியர்கள் படைசூழ தான் தினமும் பூஜிக்கும் நாராயணனை கைப்பிடிப்பதாக கனாக் கண்டதை மகிழ்ச்சிப் பொங்க பாடுகிறாள்.



”வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து .......………………………..
மைத்துனன் நம்பி மது சூதன் வந்தென்னை கைத்தளம் பற்ற கனாக் கண்டேன் தோழி நான்”
தன்னுடைய நீண்ட நாள் ஏக்கத்தயே கனவயே ஆண்டாளும் பிரதிபலிப்பதில் தாக்கம் உண்டாகி ரொம்ப உருகிபோகிறாள்.அவளும் ஒரு நாள் ஆண்டாள் மாதிரி தன்னுடைய காதல் கணவனை நினைத்து மெய்மறந்து கிராமத்து இயற்கை சூழ் நிலையில் எந்தவித லஜ்ஜையில்லாமல் சுதந்திர பறவையாக.....
காதலும் காமமும் ஏக்கமும் சோகமும் கலந்து வளைந்து நெளிந்துவரும் ஹம்மிங்கில் அழகாக ஆரம்பித்து…………..(பாட்டில் ஒரு வித சோகம் மைய்ய இழையாக ஓடுகிறது)
”உறங்காத……………………………..
.உறங்காத கண்களுக்கு ஓலைக்கொண்டு கையெழுதி
கலங்காம காத்திருப்பேன் கைப்பிடிக்க வருவாரோ?”
பாடுகிறாள்.தலையலங்காரம் கூட ஆண்டாள் ஸ்டைலில் இருக்கிறது.(கோயமுத்தூர் ஸ்டைல்?)

ஒரு கிராமத்துப் பெண்ணின் காதலை மிகைப்படுத்தாமல் இவ்வளவு இயல்பாக இதுவரை சொல்லவே இல்லை.இதுதான் ரசிகர்களை குறிப்பாக கிராமத்து ஜனங்களை பாதித்திருக்கிறது.அன்னக்கிளி சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள்.அப்போதைய வழக்கமான கிராமப் படங்களில் இருக்கும் மிகை உணர்ச்சிகள்,அபத்தக்காட்சிகள்,வசனங்கள்,பாடல்கள்,வில்லன்கள் 85% குறைவு.
பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியாக இருப்பதால் மனோரீதியாக தனக்கும் திருமணம் ஆகி காமம்*காதல் வயப்பட்டு சேர்ந்து இது மாதிரி வலி எடுத்து பிரசவிக்க வேண்டும் என்ற ஆசையின் அடைப்படையில் காதலில் கைப்பிடிக்க துடிப்பவளாக இருக்கலாம்..
சிவகுமார் –சுஜாதா சம்பந்தப்பட்ட காட்சிகள் அதுவும் இருவரும் மனசுக்குள் இருக்கும் காதல் ரொம்ப அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீகாந்த் பாத்திரம் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமாக படைக்கப்பட்டிருக்கிறது.யாரிடமும் வில்லத்தனம் இல்லை

அன்னக்கிளி பாடல் பற்றி இளையராஜா பேசுகிறார்.

எல்லோருக்கும் “ அம்மாடா” பட் பன்னீர்செல்வத்திற்கு மட்டும் “அப்பாடா”


Wednesday, January 7, 2015

புத்தகக் கண்காட்சி-ரேடியோ-டான்ஸ்-இளையராஜா- நோ இடம்

பதிவு போட்டு நாலுமாதம் ஆகிவிட்டது.காரணம்  பேஸ்புக் கும்மிதான்.இங்கு பதிவு போடவில்லையே என்று ஒரு ஓரத்தில் ஆதங்கம் இருந்துக்கொண்டே இருந்தது.அதுக்கென்ன போட்டால் போச்சு என்று தினமும் சமாதானம் செய்துக்கொண்டே நாலு மாதம் ஓட்டியாச்சு.போடவிட்டால்  இன்வாலிட் ஆகிவிடுமோ என்று ஒரு பயம் வேறு.

என்ன பதிவு போடுவது.....? எல்லாம் கதம்பமான பதிவுதான்.பேஸ்புக்கில் சுடசுடபோட்டுவிடுவதால் இங்கு தோண்ட வேண்டி இருக்கிறது.

என்னுடைய பேஸ் புக் முகவரி
https://www.facebook.com/ravishankar.krishnamurthy.3

மக்குத்தனமான ரேடியோ FMகள்




இரவில் சில நாட்களில் (10pm-1am) ரேடியோ கேட்கும் பழக்கம் உண்டு. இதில் ரெயின்போ எஃப் எம்தான் ரொம்ப பிரபலமாகாத பழைய பாடல்களை(60/70/80) ஒலிபரப்புகிறார்கள். மற்ற எஃப் எம்கள் அரைத்தமாவையே அரைக்கிறார்கள். 1970-80-90 பிரபலமாகாத பாடல்களை தேடிக் கண்டுப்பிடித்துபோட வேண்டும் என்று ஒரு துளி கூட ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.வெத்தாக ரேடியோ ஜாக்கிகள் நேரத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்குத்தனமாக  மார்க்கெட்டிங்.

ரொம்பவும் மெனக்கட வேண்டாம்.இருக்கவே இருக்கிறது சோஷியல் மீடியா இசை ரசனை குழுமங்கள்.அதில் வலம் வந்தாலே அபூர்வ பாடல்களை தெரிந்துக்கொள்ளலாம்.பாடல் உரிமை பிரச்சனைக் கூட இருப்பதாக தெரியவில்லை. ஏன் என்றால் சில பாடல்கள் டிவி மற்றும் யூ டூப்பில் ஒலி/ஓளி பரப்பப்படுகிறது.

இப்போதெல்லாம் இளம் வயதினர்தான் ரேடியோ கேட்பதால் கண்டுக்கொள்ளவில்லையோ?

கிழ் வரும் இசையமைப்பாளர்கள்  தமிழ்ப்பட உலகில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர்கள் என்று இவர்களுக்குத் தெரியுமா?
வி.குமார்,கோவர்த்தன்,சங்கர்-கணேஷ்,ஜி.கே.வெங்கடேஷ், டி.ஆர்.பாப்பா,விஜயபாஸ்கர்,வி.தக்‌ஷிணாமூர்த்தி, ஏஏ ராஜ்,எம்.பி.சீனிவாசன் ஜி.தேவராஜன்.

நந்தா என் நிலா(வி.தக்‌ஷிணாமூர்த்தி)
என்னோடு என்னன்னவே( வி.குமார்)
வானமெனும் வீதியிலே(ஜி.தேவராஜன்)
அன்பு மேகமே(விஜயபாஸ்கர்)
கங்கை நதியோரம்(கோவர்த்தன்)
இரு மாங்கனி இதழ்(டிஆர் பாப்பா)
தொடுவதென்ன தென்றலோ (ஜி.கே.வெங்கடேஷ்)
பூவே நீ யார் சொல்லி (ஏஏ ராஜ்)
ஏரியிலே ஒரு காஷ்மீர் (எம்.பி.சீனிவாசன்)
என் கண்மணி யார்(சங்கர்-கணேஷ்)

வீட்டுக்கு வீடு,அனுபவிராஜா அனுபவி,கலாட்டா கல்யாணம்,அஞ்சல்பெட்டி520,தேன் மழை,நீலகிரி எக்ஸ்பிரஸ்,உத்தரவின்றி உள்ளே வா,பாமா விஜயம்,பெண் ஒன்று கண்டேன்,அன்னை வேளாங்கன்னி படத்தின் பாடல்களும் கேட்டதாக ஞாபகம் இல்லை.


இளையராஜாவும் ஸ்வப்னமும் பின்னே ஞானும்







இளையராஜா இசையமைத்த பக்தி பாடல்களுக்கு(சினிமா பாடல்கள் அல்ல) பிரபல நடன பெண்மணி கிருத்திகா சுப்ரமணியம்  குழுவினர் நடனம் ஆடினார்கள்.95% பாடல்கள் ஏற்கனவே மற்றவர்களால் இயற்றப்பட்டு பல வருடங்களாக இசைக்கப்பட்டு வருகிறது.பின்னணி இசை மட்டும் ராஜா.இளையராஜா ரசிகர்களுக்கு இது புது அனுபவம்.சினிமா ராஜாவின் 90% soulful கம்போசிஷனை எல்லாம் திரையில்  நடன வடிவில் பார்க்கும்போது ரசனையே இல்லாமல் செய்திருப்பார்கள்.இது வணிகம்.
கிருத்திகா சுப்ரமணியம்
இந்த நாட்டியம் அப்படி அல்ல.பாடல்களில் இருக்கும் ஆத்மா,பக்தி,இசையை நம் கண் முன்னே நிறுத்துவது. எப்படி? வழக்கமாக ஆடும் பரத நாட்டியம் அல்ல.இது அழகாக அழகுணர்ச்சியுடன் கண் முன்னே காட்சிகளை நிறுத்துவது. மேடை அமைப்பு,மூட் லைட்டிங்.உடைகள்,பின்னணி, முகபாவங்கள், கவித்துவமான அசைவுகள்,பக்திரசம் இத்யாதி இத்யாதி.

அற்புதமாக நிகழ்த்தினார்கள்.ஆனால் ஒன்று விளங்கவில்லை.இதில் எல்லாம் வழக்கமாக சிவனை மையப்படுத்தி  பக்தி பிரவாகமாக இருந்தது. கனவு,பரவச நிலை,மனம்,கனவில் தொடர்ந்து பயணிக்கும் நிலை என்று தொடர்பு படுத்தமுடியவில்லை. ஏன் என்றால் இந்த நடன நிகழ்ச்சியின் விளம்பரம் இப்படி கூறுகிறது.
Swappnam is a fast paced journey into the hypnotic realms of mind.A trance which will leave you refreshed.Dreams connect people, playing in slow solitude and suddenly populated by all mankind.At once wistful, aware, traces of times bygone ,a peek into the future, a mirror of the mind shattering the facade, pointing inwards to the essential.Weaving webs, clearing up the clouds, demystifying the myths of the mind, dreams are the catalyst clarifying the clouded vision of our perception.
நோ இடம் பார் புக்ஸ் - புத்தகக் கண்காட்சியும் சென்ற வருட புத்தகங்களும்



ஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்குவதில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே சமயம் வருத்தமும் மனதில் இழையோடுகிறது.வைக்க இடம் இல்லாததுதான் பிரச்சனை.பழைய புத்தகங்களை தெரிந்தவர், நூலகம் என்று கொடுத்தாலும் அரை மனதோடுதான் கொடுக்க முடிகிறது.படித்த புத்தகம் என்றாலும் விட்டு பிரிய மனதில்லை. ஏன்?

எதோ ஞாபகத்தில் ஆர்வமாக திடீரென்று அதை எடுத்து படிக்கத்
தோணும்போது அந்தப் புத்தகம் இல்லாமல இருப்பது  மனதை பிறாண்டுகிறது. ஏண்டா கொடுத்தோம் என்று வருத்தம் அளிக்கிறது. இந்த மாதிரி ரெண்டும் கெட்டான் நிலை ஏற்பட்டு விடுகிறது.


என்னுடைய பேஸ் புக் முகவரி
https://www.facebook.com/ravishankar.krishnamurthy.3


கொடுப்பினை இல்லை



வாழ்க்கையில் எதற்கும் கொடுப்பினை வேண்டும்! எல்லாம் இருக்கு ஆனால் இருந்து என்ன பயன்..! எதையும் அனுபவிக்க முடியவில்லை..! பேரு பெத்த பேரு தாக நீள்ளூ லேது.முதல் அமைச்சர் பதவியில் இருக்கும் திரு ஓ.பன்னீர் செல்வம் நிலை அப்படித்தான்.

முதலமைச்சர் பதவி என்பது சும்மாவா? கோலோச்ச முடியவில்லை.மக்களின் முதல்வர் ஜெயலலிதாவானதால் இவர் தலைமை செயலகத்தில் மட்டும் முதல்வர்.பயந்து பயந்து முதல்வராக இருக்க வேண்டி இருக்கிறது.அடக்கியோ அடக்கி அப்படி அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது.கப் சிப் தான்.கொடுத்து வச்சது அவ்வளவுதான்.



ஆள் பார்ப்பதற்கு சினிமாவில் வரும் குணசித்திர நடிகர்கள் கணக்காக  அட்டகாசமாக இருக்கிறார்.மேக்கப் கூட போடவேண்டும் அப்படியே வந்து நடித்தால் போதும்.

Saturday, August 30, 2014

அம்மா காதல் பாட்டு-உருகும் குழந்தை

பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரொம்ப நெகிழ்ந்துபோன பிரபலமான வீடியோ.பாப்பாவிற்கும் அம்மாவிற்குமான தொப்புள்கொடிசார்ந்த ஹைவோல்டேஜ் எமோஷனல் கொந்தளிப்பு.அம்மா பாடும்பாட்டு நம்ம ஊர் தாலாட்டுப் பாட்டா இல்லை அவர்கள் ஊர் லல்லுபையா? இரண்டுமே இல்லை.

அது கணவன் வேறு ஒருத்தியுடன் தொடர்பு வைத்திருப்பதைக் கண்டு மனைவி நம்ம ஊர் சினிமா கதாநாயகிகள் கணக்காக கவித்துமாக  புலம்பும் பாடல்.அம்மாவிற்குப் பிடித்தப்பாடல்?

ஆனால் அம்மா பாடும்போது பாப்பா கட்டுக்கடங்காமல் உணர்ச்சி
வசப்படுகிறது.

அம்மா முழுவதும் பாடவில்லை.”This time I won"t lose control" வரைப் பாடிவிட்டு'”So I let you in knowing" மீண்டும் பாடுகிறார்.ஒன்றை கவனித்தீர்களா? வரிகளைப் பாடும்போது அழுவதும் நிறுத்தியவுடன் சிரிப்பதும் மீண்டும் அழுகை-சிரிப்பு-அழுகை-சிரிப்பு.ஏதோ கண்ட்ரோல் பாயிண்ட் உள்ளுணர்வில் வைத்திருக்கிறது.அம்மா பாடும்போது முகபாவத்தைப் பார்த்து பாப்பா ரியாக்‌ஷன் காட்டுகிறதா?

இதில் இன்னொரு ரசிக்கும்படியான விஷயம் அம்மா குழந்தையோடு ஆரம்பம்  மற்றும் முடிவில் உணர்ச்சிபூர்வமாக உரையாடுவது.வீடியோவின் முடிவில் ‘.ஹனி... பாடல் ரொம்ப வலிக்குதா...!அழக்கூடாது. இது ஒரு ஜஸ்ட் பாடல்தான்....இது ஒரு ஜஸ்ட் பாடல்தான்” ஆறுதலாக  கொஞ்சுகிறார்.பாப்பா சிரிக்கிறது.”மம்மி தாங்க்ஸ்” வேறு பாப்பா சார்பாக சொல்லிக்கொள்கிறார்.

 வயது பத்து மாதம்.பெயர்:Mary-Lynne Leroux அம்மா: Amanda

பாடல் வரிகள் கிழே.




பாடல்:

I don't want you to come 'round here no more
I beg you for mercy
You don't know how strong my weakness is
Or how much it hurts me

'Cause when you say it's over with her
I want to believe it's true
So I let you in knowing tomorrow
I'm gonna wake up missing you
Wake up missing you
When the one you love's in love
With someone else

Don't you know it's torture
I mean it's a living hell
No matter how I try to convince myself
This time I won't lose control

One look in your blue eyes and suddenly
My heart can't tell you no
I don't want you to call me up no more
Saying you need me
You're crazy if you think just half your love
Could ever please me

But still I want to hold you, touch you
When you look at me that way
There's only one solution I know of
You've got to stay away from me
Stay away from me
When the one you love's in love
With someone else

Don't you know it's torture
I mean it's a living hell
No matter how I try to convince myself
This time I won't lose control
One look in your sad eyes and suddenly
My heart can't tell you no, my heart can't tell you no
I don't want you to come 'round here no more
I beg you for mercy

When the one you love's in love
With someone else
Don't you know it's torture
I mean it's a living hell
When the one you love's in love
With someone else

Don't you know it's torture
I mean it's a living hell, living hell
When the one you love's in love
With someone else
Oh, don't you know it's torture
I mean it's a living hell


குழந்தையின் பெற்றோர்
நம்மூர் மாதிரி இந்தக்குழந்தையின் பெற்றோர்களை ஒரு அமெரிக்கா டிவி நேர்காணல் எடுத்தது.இந்தக்குழந்தை இந்தப் பாட்டுக்குதான் அடிமையாம்.அம்மா அதே பாட்டை பாடுகிறார்.குழந்தை கொஞ்சமாக அழுகிறது.நிகழ்ச்சி நடத்துனரும் அழுகிறார்.

குழந்தை ஏன் இவ்வளவு உணர்ச்சியில் பீரிடுகிறது? அதெல்லாம் நமக்கு எதற்கு. பார்க்க நேர்காணல் வீடியோ

http://www.ellentv.com/videos/0-8slkmyjj/


ஒரிஜினல் பாட்டு:

Monday, August 11, 2014

திருட்டு தம் என்னாச்சு?

”சிகரெட் பிடி” (இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை-பனமா,Made for each other-வில்ஸ்) என்று வற்புறுத்தும் விளம்பரங்களால்/ஹீரோக்களால் எப்படி 1960/70/80 தலைமுறை இளைஞர்கள் சீரழிந்தார்களோ அதே  “சிகரெட் பிடிக்காதே” விளம்பரங்களால்/தடைகளால்/ ஹீரோக்களால்  இந்தத் தலைமுறை  இது உடல் நலத்தைக்கெடுக்கும் பழக்கம் என்று நிறையவே விழிப்புணர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி.
இந்த மாதிரி ஸ்டைலா பிடிக்கனும்னு கத்துக்கிட்டேன் நான்
எப்படி இருந்திருக்கிறோம்... மரமண்டைகளாக.

இதுவும் தூண்டிவிடும் விளம்பரம் பக்கத்தில் பெண் வேறு

1960/70/80 சினிமாவில் எம்ஜியார் தவிர சிவாஜி மற்றும் சிவாஜிராவ்/ரங்கராவ்,எம்ஆர்ராதா,நம்பியார்,அசோகன்,மேஜர் etc., etc., ஊதி ஊதி தள்ளுவார்கள்.இதெல்லாம் ஹாலிவுட் பட பாதிப்பு.இப்போது  ஊதுவது “ஸ்டைல்” பெண்களைக் கவர,கம்பீரம்,ஆண்மை அல்ல  என்பது உணரப்பட்டுள்ளது.இது முக்கியமானது.

(அப்போது பில்டர் சிகரெட் பிடித்தால்  ஸ்டைலோ ஸ்டைல் அண்ட் ஜென்டில்மேன். பெண்கள் டாவடிப்பார்கள்).

555 ,Malbro,Dunhill,Rothmans பாரின் பிராண்ட்  சிகரெட்டுகள் வாழ்நாளில் ஒரு முறையாவது பிடிக்க வேண்டும் அன்று அடுத்தக் கட்டத்திற்கு நகர்வோம் அப்போது.

இழுக்க இழுக்க இன்பம்  இறுதிவரை (சுடுகாடு வரை)
”திருட்டு தம்” இந்தச் சொல் இப்போது அவ்வளவாக  புழக்கத்தில் இல்லை.குறிப்பாக நகரத்து பள்ளி/கல்லூரி மாணவர்கள் விலக்குகிறார்கள்.

அன்புமணி ராமதாஸை பாராட்டியே ஆகவேண்டும்.

ஆனால்....இப்போது திரவ வடிவத்தில்....


இதற்கு ஹீரோ மட்டுமில்லாமல் காமெடியன்,காமெடியினின் நண்பன், வில்லன், கடுக்கன் போட்ட பாடகர்,ஹீரோயின்  மார்க்கெட் செய்கிறார்கள்.



Sunday, July 27, 2014

கங்கை அமரன் -ஜெயகாந்தன் - கோபிநாத்-ஆதித்யா

சினிமா பாடல் வரிகள் நேரடியாக சுட்டாமல் உள் மன வெளிப்பாடு கவித்துவமாக வெளிப்பட்டால் நான் ரொம்ப ரசிப்பதுண்டு.முக்கால்வாசி பாடல்கள் இப்படித்தான் புனைவார்கள். அதுதான் கவிதை.அதில் கங்கை அமரன் வாலி பாடல்கள் நிறைய பிடிக்கும்.வைரமுத்துவின் பாடல்களை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை.

கங்கை அமரன்: ஆனந்த ராகம்-என்னுள்ளில் எங்கோ-காற்றில் எந்தன் கீதம்-சிறு பொன்மணி அசையும்-ஒரு ராகம் பாடலோடு-அந்தி வரும் நேரம்-அதோ அந்த நதியோரம்-ஏதோ நினைவுகள்


சமீபத்தில் அவரை ஒரு பேஸ் புக் குழுமம் மூலமாக சந்தித்தபோது இதைப்பற்றி சிலாகித்தேன்.”சந்தோஷம்” என்றார்.இயல்பாகவே இவர் எந்த பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் பழகக்கூடியவர்.மனதில் பட்டதைப் பேசக்கூடியவர்.

நான் அவரிடம் ராஜாவின் முக்கால்வாசி பாடல்களில் மைய இழையாக ஒரு இனம் புரியாத சோகம் ஓடுவதாக என் பீலிங்.நிறைய பேர் இதை “அப்படித் தெரியலையே” என்றார்கள் ஆனால் கங்கை அமரன் உண்மைதான் என்றார். ராஜாவின் ஆழ் மனதில் இருக்கும் தேடல் இப்படி வெளிப்படுகிறது என்றார்.

_____________________________________________________

இந்தப் பாடல் கேட்டு எவ்வளவு நாள் ஆயிற்று.எல்.ஆர்.அஞ்சலியும் கோவை செளந்தரராஜனும் பாடியது.சும்மா ஒரு ஜாலி. ஹம்சத்வனி ராகம்.எழுதியது வாலி என்று என் யூகம். “மயிலாப்பூர் மாமி என்ன பாத்தா..............
சொல்லிட்டேண்டா டாட்டா ” வரிகள் சூப்பர். இதை தேடிக்கண்டுப்பிடித்து யூ டூபில் ஏற்றினேன்.

பாட்டு: அய்யர் ஆத்துப் பொண்னு சொன்ன  கேட்டுக்கோட அம்பி



______________________________________________________

இப்போதைய (மிடில் அப்பர் கிளாஸ்)இளைய தலைமுறையைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.விதவிதமான டிரஸ்,செல்போன், வண்டி,நெட்,ஸ்டேஷ்னரி,எண்டர்டெய்ன்மெண்ட்,.காஸ்மெட்டிக்ஸ் என்று அனுபவிக்கிறார்கள்.அப்படியே ஸ்டைல் காட்டுகிறார்கள்.

என் மகன் ஆதித்யா
உதாரணமாக என் காலத்தில் ஒட்டுவதற்கு சோற்றுபருக்கை,கோந்து என்று விரல்களை பிசுபிசு என்று அழுக்காக்கிக்கொண்டு அலைவோம்.கடந்த 15 வருடமாக gluestick என்ற கையில் ஒட்டாத கோந்து வந்துவிட்டது. இதை நான் என் ஆபிஸ் பருவத்தில்தான் பார்த்தேன்.Jeans அணிந்தது என் 24 வயதில்தான்.
இப்போது ஜீன்ஸ்ஸைத் தவிர ஏதும் அணிவதில்லை இவர்கள்.அடுத்து பென்பென்சில்.எல்லாமே ஸ்டைலிஷ் ஆக இருக்கிறது.

_________________________________________________________

போன வாரம் நீயா நானாவில் “ அரசு பள்ளிகள் -தனியார் பள்ளிகள்” கருத்து மோதல்.தனியார் பள்ளி குரூப்பிடம் “மாணவர்கள்  அரசு பள்ளி வேண்டாம்... உங்கள் பள்ளியில் ஏன் சேர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்” என்று கேட்டார் கோபிநாத்.சொன்ன பதில்களில் கோபி திருப்தியாகவில்லை.

தனியார் சேனலுக்கும் அரசு சேனலுக்கும் உள்ள அதே வித்தியாசம்தான் இதற்கும் என்று எனக்குத் தோன்றியது.கோபிநாத்திற்கு தோன்றியதா?

__________________________________________________________

ஜெயகாந்தன்  ஆவியில் எழுதிய கதைகளை அதே பார்மெட்டில் ஆவி புத்தகமாக வெளியிடபோகிறார்களாம்.அந்தப்பக்கத்தில் வெளியான அப்போதைய விளம்பரம்,ஜோக்ஸ்ஸும் பிரிண்டில் வருமாம்.பழைய பார்மெட்டில் படித்த பாக்கியசாலிகளில் ஒருவன் நான்.சில கதைகளைப் படிக்க விட்டாலும் பைண்டிங்கில் படித்த ஒருவன்.”அக்கரகாரத்தில் பூனை” எனக்குப்பிடித்தமான ஒன்று.

இவரை ஒரு முறை அவரது மொட்டை மாடியில் ஒரு குரூப்போடு சந்தித்திருக்கிறேன்.என் வயது அனுபவம் காரணமாக அவர் பேசியது(நிறைய கம்யூனிச சிந்தனை) ஒன்றும் மண்டையில் ஏறவில்லை.
_________________________________________________________



Friday, May 2, 2014

கர்நாடக இசை(கன்)பியூஷன்/சிம்பிள் சிவலிங்கம்/நிலாசோறு

கர்நாடக இசை என்பது  மரபு மீறாத அதற்குரிய இலக்கணச் சுத்தங்களுடன் பாடக்கூடிய சற்று கடினமான இசை.முக்கால்வாசி புரியாத தெலுங்கு மற்றும் வடமொழியில் புனையப்பட்ட பாடல்கள்.ஜனரஞ்கம் குறைவு.இப்படித்தான் பாட வேண்டும் என்று வரைமுறையோடு அதன் ஆதார ஆத்மாவை கலைக்காமல் தொன்றுதொட்டு பாடப்பட்டு வருகிறது.

ஆனால் அதே சமயத்தில்.........

சங்கீத மும்மூர்த்திகள்
இதை ஜனரஞ்கம்,கலப்பிசை(Fusion)அல்லது மெல்லிசைப்படுத்தி பல வருடங்களாக இளைய தலைமுறைகளால் கொடுக்கப்பட்டு வருகிறது.அதாவது இந்த இசைக்கு பின்னணி அல்லது முன்னணியாக சில சம்பிரதாய வாத்தியங்கள் தம்புரா,மிருதங்கம்,மோர்சிங்,கடம், வயலின்,வீணை,ஜலதரங்கம் உண்டு.அவைகளை நீக்கி(அல்லது குறைத்து) விட்டு கிடார்,ட்ரம்ஸ்,கீபோர்ட்,வயலின்,செல்லோ பின்னணியில் கர்நாடகப்பாடல்கள் வித்தியாசமாக பாடப்பட்டது.கிட்டத்தட்ட சினிமா மெல்லிசைக்கு அருகில் செலுத்தப்பட்டது.

கார்த்திக் ஐயர் லைவ்
இப்படி fusion செய்யப்பட்ட பாடல்கள் வெற்றிப்பெற்றதா?பலரால் ரசிக்கப்பட்டதா? பாமரமக்களிடம் அல்லது இசை புரிந்த மக்களிடம் போய் சேர்ந்ததா?இதற்காகத்தான் இப்படிச் செய்யப்பட்டதா?அல்லது இளவயது துடிப்பு பரிசோதனை முயற்சியா?

பல வருடமாக இந்த முயற்சிகளை கேட்கிறேன்.ரொம்ப வெற்றிபெற்றார் போல் தெரியவில்லை.சில பாடல்கள் ஆத்மா பிசிறாமல் கொடுக்கப்பட்டது.பல பாடல்கள் பின்னணி இசை தூக்கலாக அபத்தமாக இசைக்கப்பட்டு முகம் சுளிக்க வைத்தது.பழமையும் நவீனமும் சேராமல் அசட்டுத்தனமாக இருந்தது.கருவிகளின் சத்தம் தூக்கலாக இருந்தது.சில சமயம் சம்பிரதாயத்தை அசட்டுத்தனமாக மீறுவதுபோல் பட்டது.

சிடிக்கள் கேசட்டுகள் விற்காமல் தேங்கிக்கிடந்தது.நவீன சிற்றுண்டி உணவகங்களிலும் நீண்ட பிரயாண சொகுசு பஸ்களிலும் பயன்படுத்தப்பட்டது.

இப்போது.....

இணைய வளர்ச்சியால் உலக மாற்றத்தால் மீண்டும் இவை தனித்தனி bandகள் பெயரில் அதிகமாகிவிட்டது.ஒவ்வொரு தலைமுறையும் தாங்கள்தான் முதன்முதலாக செய்கிறோம் என்று இதைச் செய்கிறார்கள்.செய்துவிட்டு “Fusionலேயே ஒரு வித்தியாசமான Fusion" என்கிறார்கள்.உருவாக்கபவர்கள் நேமாலிஜி/நியூமராலஜி அடிப்படையில் பெயர்களை வித்தியாசமாக வைத்துக்கொள்கிறார்கள்.

இணைய தளங்களில் சுடசுட பரிமாறப்பட்டு நெருங்கிய நண்பர்களால் 'awesome" 'stunning" "nice" beautiful" என்று அப்போதே கமெண்ட் போட்டு புல்லரிக்க
வைக்கிறார்கள்.இப்போது நிறைய ரசிக்கப்படுகிறது.ரசனை மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.கேட்கும்போது இப்போதும்  பழைய உணர்வுகள் வருகிறது.சிலது நன்றாகவும் இருக்கிறது.

சமீபத்தில் கேட்ட சில பாடல்கள்.
 













S.P.JANANIY


தாமரை பூத்த தடாகமடி

_______________________________________________________

சித்திரையில் நிலாசோறு


டிவியில் இந்தப் படம் பார்த்தேன்.ஏனோதானோ என்று நம்பும்படியாக இல்லை.ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த ஆர்.சுந்தர்ராஜன்  இயக்கம். அவர் மகன் அர்ஜீன் சுந்தர்ராஜன்,வசுந்தரா மற்றும் பிரபலமான குழந்தை நட்சத்திரம் சாரா.

”ஒரு காலத்தில்” கொடிகட்டிப்பறந்தவர்கள் மீண்டும் கொடிகட்டமுடியாதா? முடியும் ஆனால் கொடிகட்டிய காலத்தில் இருந்த டிராமத்தனத்தை விட்டுவிட்டு இப்போதைய டிரெண்டில் கதையை நகர்த்தவேண்டும்.இதே கதையை கொஞ்சம் சீரியஸ்ஸாக மகேந்திரன்/பாலு டைப்பில் சொல்ல வேண்டும்.யூத்துக்கு அப்பீல் ஆகும்.சுந்தர்ராஜன் தவறிவிட்டார்.நிறைய ரொமாண்டிக் காமெடிகள் கொடுத்தவர்.

அவர் காலத்தில் படம் பார்க்க வந்த குடும்ப மக்கள் இப்போது இல்லை.


சிவலிங்கம்

சமீபத்தில் முதன்முதலாக  பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்றிருந்தேன்.மூலவர் சிவலிங்க ரூபம்.லிங்கத்தை ரொம்ப அலங்காரம் செய்து அதன் ஒரிஜனல் உருவம் மாறி ஏதோ பிள்ளையார் பிரமை கண்ணில் தெரிந்தது.என் மனதில் படிந்துவிட்ட  சிவலிங்கம் அலங்காரம் இல்லாத சாதாரண லிங்கம். இதுமாதிரி ரொம்ப ஓவராக அலங்காரம் செய்தல் மனதில் “லிங்க” ரூபம் லிங்க ஆகமாட்டேன் என்கிறது.



என் மனதில் என்றும் உள்ள சிம்பிள் சிவலிங்கம்



அதுவும் இதுவும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு.


கிழ் இருப்பது மாதிரி சிம்பிளாக அலங்காரம் செய்யலாம்..





Wednesday, April 2, 2014

ஐ மெட் இளையராஜா அண்ட் வீ ஹேட எ டாக்?


மேஸ்ட்ரோவைப் பார்ப்பதற்கு முன் சற்று பின்னோக்கி முப்பத்திமூன்று வருடம்.......

கோடையில் மழை வரும் ......எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ...

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ

சராசரி இசை ரசிகனாக அப்போதைய இசையமைப்பாளர்களான எம்எஸ்வி கே.வி.மகாதேவன்,வி.குமார்,சங்கர்கணேஷ்,கோவர்தன்,விஜயபாஸ்கர்,ஷியாம் ஜி.கே.வெங்கடேஷ் மற்றும் பலர் இசைகளை மேலோட்டமாக கேட்டுக்கொண்டிருந்தவன்.பிறகு வந்த இளையராஜாவையும் மேலோட்டமாக கேட்க ஆரம்பித்து பிறகு உள்நோக்க ஆரம்பிக்க அவரின் பாடல்களின் இனிமையும் இடையிசையும் ஆச்சரியமும்  பிரமிப்பும் ஏற்படுத்தியது.

கங்கையில் என் மனம் பங்கு வைக்க

முக்கியமாக பழைய நெடிபோய் ஒரு லேட்டஸ்ட் ஸ்டைல் இருந்தது.முக்கியமான பாட்டுக்கள் ”பனிவிழும் மலர்வனம்”."எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”.வழக்கமான கேட்ட பழகிப்புளித்துப்போன இசைக்கருவிகளின் நாதங்கள் எல்லாம் புதுசாக “உருவாக்கப்பட்டிருந்தது”.

இசை அடுத்தக்கட்டத்திற்கு  நகர ஆரம்பிக்கிறது என்று தெரியாமலேயே பல வருடம கேட்டுக்கொண்டிருந்தேன்.(இவர் ஆர்.டி.பர்மன் மற்றும் சலீல் செளத்ரியின் தாக்கத்தில் இருக்கிறார் என்று சொல்வார்கள் எதிர்பார்ளர்கள்)

ஆனால் இரண்டு பேரையும் தாண்டி இருக்கிறார் என்று அடுத்தக் கட்ட புரிதலில் தெரிந்தது

எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை...

ரொம்ப முக்கியமாக  பாடல்களில்  மையமாக இருக்கும் ஆத்மா படுத்தி எடுத்தது.அடுத்து விதவிதமான  சம்பிரதாயத்தை உடைத்த  ஹம்மிங்குகள் (காற்றினிலே வரும் கீதம்) என்னை ரொம்பவும் வசீகரித்தது.இவை  மேல் இனம் புரியாத நெருக்கம் ஏற்பட்டு கேட்பது போய் சில பாடல்களோடு வாழத்தொடங்கினேன்.

“காற்றில் எந்தன் கீதம்” (ஜானி) இடையிசைகள் மெலடி மிகவும் போட்டுத் தாக்கியது.இப்படியெல்லாம் ஆத்மாவை குழைத்து இசைக்கமுடியுமா என்று இன்றும் எனக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.

இப்படியாக தீவிர ரசிகனானேன்.இவை எல்லாம் அந்தக் கால சோனி,பயனிர் கேசட்டில்  டூ இன் ஒன் ஸ்டிரியோவில் கேட்கப்பட்ட பாடல்கள்.

நீங்காத நெஞ்சின் அலை ஓய்ந்தால் போதும்

தெரு நண்பர்கள் சேட்(அனந்தகிருஷ்ணன்),சுந்தரராஜன்,அன்வர்கான்,கிருஷ்ணன் கூடும்போதெல்லாம் பாடல்களை ”மயக்கமான” நிலையில் கேட்டு முழுகித் திளைத்தோம்.பிறகு அதே அலைவரிசையில் வந்த அலுவலக நண்பர்கள் பாலாஜி,ஸ்ரீதர்,முருகானந்தம்,கணேசன் ”ரூம் போட்டு” மயக்கமாகி பாடல்களை விடிய விடிய பிரித்து மேய்ந்தோம்.

(1983)ஸ்ரீதர்(கையில் பை) பாலாஜி(நடுவில்) நான் பாலாஜிக்கு இடது

இசையமைப்பில் ஒரு புத்திசாலித்தனம் இருந்தது.இது மாதிரி உயர்தர இசை கேட்பதில் எங்களுக்கு ஒர் பெருமிதம் இருந்தது.இசை நாதங்கள் சேரும்போது அசட்டுத்தனம் ஒட்டு இல்லாமல் வழுக்கிக்கொண்டுபோவது ஒரு பெரிய பிரமிப்பு. ஹிந்திப்பாடல்களை ஓரம் கட்டினோம்.

அடுத்து இதுவரை கவனிக்கப்படாத படத்தின் பின்னணி இசை இவர் மூலம் ரசிகர்கள் கவனத்திற்கு வந்தது.இதற்கும் பிரமிப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது.சிவப்பு ரோஜாக்கள் ஒரு உதாரணம்.

Nothing..... nothing....

ஓவ்வொரு பாடலும் ஒவ்வொரு பரவசநிலையைக்கொடுத்தது.எல்லாம் பாடல்களும்  Farm fresh.சந்தித்தவுடன்  “மொட்ட  லேட்டஸ்ட் பாட்ட கேட்டய” என்றுதான் ஆரம்பிப்போம்.”Mind blowing" " Absolutely Divine" "Absolutely  bliss" "Stunning" "What a soulful song" "Out of the world" என்ற சொற்கள் அடிக்கடி உபயோகப்படுத்தியது இவரின் பாடல்களுத்தான் அதிகம்.

முன்னோடிகளுக்கும் இவருக்கும் வித்தியாசம் தெரிந்தது.இடையிசைகள் மிகவும் மென்மைப்படுத்தப்பட்டிருந்தது. இனிமைப்படுத்தப்பட்டிருந்தது.பல அடுக்குகள் இருந்தது.அடுக்குகள் பலவித காம்பினேஷ்ன்களில் தொடுக்கப்பட்டிருந்தது.நாதங்களின் உணர்ச்சிகள் மொழிகள் வேறுபட்டது. மனதிற்கு  நெருக்கமானது.புதுவித முயற்சிகள் தெரிந்தது.

 
நாங்கள் கேசட்டில் போட்டு தேய்த்து தேய்த்துக் கதறிய பாடல்கள்:

1.ஒரு குங்கும செங்கமலம் 2.சிறிய பறவை 3.சந்தக் கவிகள் பாடிடும் 4.காற்றில் எந்தன் கீதம் 5.தாமரைக்கொடி 6.பூவே செம்பூவே 7.பனிவிழும் மலர் வனம் 8.பள்ளியறைக்குள் 9.எங்கெங்கோ செல்லும் 10.அந்தரங்கம் யாவுமே11.புத்தம்புது காலை 12.அந்திமழைப்பொழிகிறது13.தேன் பூவே பூ 14.தெய்வீக ராகம்(heavenly humming)15.என்றென்றும் ஆனந்தமே

பாடல்களை கவனித்தால் ஒன்று புரியும்.கிராமிய மெட்டு பாட்டுக்கள் குறைவு.காரணம் நகரம் சார்ந்து வளர்ந்த இளைஞர்கள் நாங்கள்.அடுத்த ரசிப்பு மேற்பாடல்களில் சிக்கலான இசைக்கோர்ப்பு. எல்லாம் புத்தம்புதுசு.

எல்லாம் 1979-1988 இடைப்பட்ட காலத்தில்

பாடல்களில் லயித்துப்போய்  எப்படி இவரால இப்படி மாஜிக்காக  பாடல்களை  கம்போஸ் செய்ய முடிகிறது என்று மண்டை காய்ந்து இவரை மறைமுகமாக  (அப்போது கெடிபிடி ஜாஸ்தி)சந்திக்க முடிவெடுத்து (1988) பிரசாத் ஸ்டியோவிற்குப் போனோம்.

கதவருகில் ஒளிந்தவாறு இடுக்கு வழியாக பார்த்தோம். திருப்பதி பெருமாள்  தரிசனம் மாதிரி சில வினாடிகளே கிடைத்து.அன்றைய பாடல் கம்போசிங் “ மலையோரம் மயிலே”ஒருவர் வாழும் ஆலயம்.

அதற்கு பிறகு நண்பர்கள் பிரிந்தோம்.சில பேர் தொடர்பில் இருந்தோம். பலபேர் தொடர்பில் இல்லை.பிரிந்தாலும் அவரவர்கள் ராஜாவின் பாடல்களோடு தொடர்பில் இருந்தார்கள்.ராஜாவை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அடிமனதில் இருந்தாலும் முயற்சி எதுவும் எடுக்காமல் “அவரைப் போய் ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்” என்ற எண்ணமும் அடுத்து அவர் ரசிகர்களை அவ்வளவாக சந்திப்பதில்லை என்றும் கேள்வி.

கடைசி ஆறு வருட இடைவெளியில் (2008-2014) இணையதளத்தில் இளையராஜாவின் இசைப் பற்றிய அறிவு வேறு ஒரு தளத்திற்கு விரிந்தது.இணையதள ரசிகர்கள் அவரை அடிக்கடி சந்திப்பதும் போட்டோ எடுத்துக்கொள்வதும் நானும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. நிறைய சந்தர்ப்பங்கள் கதவைத் தட்டியதும் தவிர்க்கமுடியாத காரணங்களால்(அம்மாவின் உடல்நிலை) போக முடியவில்லை.

என் அபார்மெண்டில் குடியிருக்கும் சினிமா மற்றும் கமல் பிஆர் ஓ  நிகில் முருகனிடம் என் ஆர்வத்தைச் சொல்ல  “ சொல்லுங்க ... நான் அழைச்சுட்டுப்போறேன் ...”  என்று ஒரு நாள் சொன்னார்.அதற்குப்பிறகு பாலோ அப் செய்யவில்லை.

பிளாஷ் பேக் ஓவர்........

இருபத்தி மூன்று வருடம் கழித்து என்னைச் சந்தித்தார் பழைய அலுவலக நண்பர் முருகானந்தம்.அவர் கோயம்புத்தூர்.மீண்டும் ராஜா பாடல்களைப் பற்றி அலசல்.”ரெடியா இரு... அவரைப்போய் பார்க்கலாம்” மண்டைகாயும் வெய்யிலில் என் வீட்டிற்கு வந்து  ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ‘எப்படி அப்பாயிமெண்ட் இல்லாமல்....” இழுத்தேன்.’கிளம்புப்பா” என்றார்

முருகானந்தம் (குறும்பட  அப்பா கேரக்டர் நடிகர்?)

பிரசாத் ஸ்டியோ:


வடபழனி எப்படி இருந்தது எப்படியோ மாறிவிட்டது.பச்சைப்போய் கல்லும் சிமெண்டும் பெயிண்டும் கான்கிரீட் காடுகள்.ஸ்டியோ இருபத்தி எட்டு வருடத்திற்கு முன் பார்த்தது.மாற்றங்கள் தெரிந்தது.வாசலில் கார்களும் ஸ்கூட்டர்களும் பைக்குகளும் மர நிழலில்.

ரெக்கார்டிங் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிந்ததால் ராஜா இருப்பார் என்ற நம்பிக்கை மனதில் துளிர்விட்டது.வாசல் ரிசப்ஷனில் கார்த்திக்ராஜா புன்னகையுடன் நண்பரை வரவேற்றார்.”இருக்கிறார்” என்றார்.எனக்கு உடம்பில் ஒரு குறுகுறுப்பு.பக்கத்தில் இருந்த ஆபிசில் நண்பர் தகவலை தெரிவித்துவிட்டு உள்ளே போனோம்.


  
ரிக்கார்டிங் ஹால்

ராஜாவின் இசைக்குழு வல்லுனர்கள் தம்தம் வாத்தியங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.இதை பல தடவைப் போட்டோவில் பார்த்து பரவசப்பட்டிருக்கிறேன்.இன்று பரபரப்பு இல்லை.லன்ச் பிரேக் மாதிரி மெலிதான அலை அடித்துக்கொண்டிருக்கும் இசை ஆற்றைக் கடப்பது மாதிரி உள்ளுணர்வு.

அதையும் கடந்து அவரின் தனி அறைக்குச்செல்லும் வழியில்.....


நான்: “ போட்டோ எடுக்கனும்... ரெடியா செல்ல வச்சுக்கோ”

நண்பர்: “ இன்னொரு நாள் எடுக்கலாம்...முதல்ல அவர பாரு”


”இன்னொரு நாளா” எனக்கு உள்ளுக்குள் “பக்” என்றது.சற்று எரிச்சல் ஏற்பட்டது.எனக்கு எப்போதுமே “அன்றே செய்... நன்றே செய்” பாலிசி.அதுவும் மேஸ்ட்ரோவை பார்ப்பது என்பது.நாளை என்பது நமக்கு தெரியாத ஒன்று.
இன்றேதான் எனது மனதில் முடிவு செய்தேன்.நண்பரிடம் எதுவும் சொல்லவில்லை.


“வாங்க ....செளக்கியமா....”  நண்பரைப் புன்னகையுடன் வரவேற்றார்.

பரவசத்தில் புன்னகைத்துவிட்டு அவர் காலில் விழுந்தேன்.எழுந்தப்போது மார்பில் கையை வைத்தப்படி ஆசிர்வாத போசில் இருந்தார்.

பேசுவதற்கு ஒன்றும் இல்ல்லை.எழுந்து...” சார் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” மேஸ்ட்ரோவிடம் கேட்டேன். நண்பர் தயங்கியபடி இருக்க மேஸ்ட்ரோ “ எடுங்க முருகானந்தம்” என்று எனக்குஆதரவாக சொல்ல புல்லரித்தேன். பக்கத்தில் நிற்க நண்பர் போட்டோ எடுத்தார்.

 முடிந்தவுடன் கண்களாலேயே "டைம்  முடிந்தது" என்று சொல்லி மாரில் கைவைத்தப்படி விடைகொடுத்தார். புன்னகையுடன் விடைப்பெற்றோம்.

பரவசத்துடன் ரூமை விட்டு வெளிவந்தோம்


ஜன்மாந்திர  சாபம் தீர்ந்தது.ரொம்ப லேட்டாக தீர்ந்தது.புராணக்கதைகளில் சாபம் தீர்ந்தவுடன் ஒரு வசனம் வரும்.அதுமாதிரி  “ பக்தா..... இன்றுமுதல் உன்னுடைய  ராஜா ரசிகன் என்ற வட்டம் முழுமைப் பெறுகிறது.”




 டிஸ்கி:
”போட்டோவா ... இன்னொரு நாள் எடுத்துக்கொள்ளலாம் எவ்வளவு பெரிய வன்முறையான வார்த்தை