Wednesday, February 2, 2011

ஒரு இறகைக் கொன்றுவிட்டேன் -கவிதை

அதன் போக்கில் அதை
ரசித்தப்படி இருந்திருக்கலாம்

ஒரு கவிதை எழுதிவிட்டு
போய் இருக்கலாம்
தூரிகையில் வரைந்திருக்கலாம்
அல்லது படம் பிடித்திருக்கலாம்

அல்லது நான்  என் வேலையைப்
பார்த்துக்கொண்டுப்போய் இருக்கலாம்


பிரபஞ்சத்தின் இசைக்கு 
ஏகாந்தமாய் நடனமாடிக்கொண்டிருந்த
ஒரு மெல்லிய இறகை
உள்ளங்கையில் வாங்கி
வாயால் ஊதி இருக்கக் கூடாது


.

6 comments:

  1. மிகப் பிடித்திருக்கிறது. கடைசி வரி தேவையில்லையோ? (அதான் தலைப்பிலே சொல்லியாகிவிட்டதே)

    ReplyDelete
  2. ஆமாங்க.இப்போது எடுத்துவிட்டேன்.ரொம்ப நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  3. goodu
    கவிதைங்க...
    (கவிதைக்கு கமெண்ட் கூட அடுத்த அடுத்த வரில தான் போடனும்... )

    ஹி.. ஹி...

    ReplyDelete
  4. கமண்டேயே கவிதையா போட்றா போல.நன்றி ஸ்வர்ணரேகா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!