Monday, February 2, 2009

ஞானகக்தைகள் - முல்லா நசுருதீன்



முல்லா நசுருதீன் என்பவர் சுபி(sufi) ஞானி. இவர் ஒரு mystic என்றும் சொல்லுவார்கள். அதாவது சித்தர்கள் போல் மறை பொருள் உணர்த்திப்பேசுவார். ஆன்மிக அறிவு விரவிக்கிடக்கும்.இவரைப் பற்றிய கதைகள் ஏராளம். 

1. ஒரு நாள் இரவு முல்லா விளக்குக் கம்பத்தின் கிழே ஏதோ தேடிக் கொண்டிருந்தார். 

அங்கு வந்த அவர் நண்பர் என்ன தேடுகிறீகள் என்று கேட்டார். அதற்கு அவர் ஒரு வெள்ளி நாணயத்தைத் தொலைத்துவிட்டதாக சொன்னார். எந்த இடம் என்று சரியாகச் சொன்னால் தான் உதவுவதாகச் சொன்னார் நண்பர்.

அதோ அந்த இடம் என்று கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு இருட்டு இடத்தைக் காட்டினார். அந்த இடத்தில் தேடாமல் இங்கு ஏன் தேடுகிறீர்கள் என்று நண்பர் கேட்டதற்கு ,”இங்குதான் வெளிச்சம் இருக்கு” என்று பதிலளித்தார்.

பிரச்சனை ஒரு இடத்தில் இருக்கும். ஆனால் அதற்கானத் தீர்வை வேறு இடத்தில் தேடுவோம்




2 comments:

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!