Friday, September 27, 2013

ராஜா ராணி - விமர்சனம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  இளையராஜாவின் பிஜிஎம்மும் நொந்த ரெவிசெங்கரும் பின்னே ராஜா ராணியும்......


ரொம்ப ஆர்வமாக ஓ-ஆயும் படத்திற்கு முதல்நாள் முதல் ஷோ(12.00 Noon) சங்கம் தியேட்டரில் நெட்டில் புக் செய்து வைத்திருந்தேன்.தானைத் தலைவரின் பிஜிஎம் இந்தத் த்ரில்லர் படத்திற்கு எப்படி செட் ஆகிறது என்று மிக ஆர்வமாக  நுழைந்தால் “ சார்.... பொட்டி வரல..! க்யூப் எண்டர்டெயின்
மெண்டுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏதோ பிரச்சனை.ரீபண்ட் கொடுக்குறோம் இல்லேன்னா “ராஜாராணி”(இன்றுதான் ரிலீஸ்(27-09-13) படம் போடறோம் பாருங்க”.


படம் இல்லையா? நொந்தே போனேன்.ஓநாய் மாதிரி உள்ளுக்குள் ஓலமிட்டு ஆட்டுகுட்டி மாதிரி ம்ம்ம்மேமே என்று முடித்தேன். பின்னணியில் ஓ-ஆகுட்டியின் பிஜிஎம் “I Killed an angel" சோகமாக.அந்தக்காலத்தில்தான் “இதயவிணை” “அடிமைப்பெண்” ”உலகம் சுற்றும் வாலிபன்” போன்ற படங்களின் பொட்டி வராது.வரும் ஆனால் மூணு மணி என்றால் ஆறுமணிக்கு வரும்.

மிஸ்கினுக்கும் ராஜாவிற்கும் எட்டாம் பொருத்தம்.நந்தலாலா படம் ரெண்டு வருஷமா வரல.இது தியேட்டருக்கு வந்துவிட்டது. ஆனால் பொட்டி வரல.போஸ்டர்தான் வந்திருக்கு.


ஓநாய் இல்லை. ஆட்டுக்குட்டி இல்லை. ராஜாராணி? பார்ப்பதா வேண்டாமா? இதுமாதிரி வழக்கமான படங்களை பார்ப்பதை நிறுத்தி ரொம்ப நாள் ஆயிற்று. இப்போதெல்லாம் ரசிக்கமுடியவில்லை.ஏன்? என் எண்ணத்தை அப்படியே சுகாசினி சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

 //Unless we get out of these mindless comedies and a good-for-nothing fellow trying to win over the heroine kind of films,Tamil cinema will not be taken seriously//

இந்தப் படம் அதை அப்படியே அச்சுஅசலாக பின்பற்றுகிறது.

ஏதாவது வித்தியாசமாக இருந்ததால்தான் சினிமாவுக்கு போவது என்ற முடிவு எடுத்து ரொம்ப நாள் ஆச்சு.மனதை சமாதானப்படுத்திக்கொண்டு ஓநாய் -ஆட்டுக்குட்டி  பதிலாக ராஜா-ராணி.நல்ல காம்பினேஷன்.எதிர்பாராத ரிலீசால் ஆர்யா ரசிகர்களின் விசில் கத்தல் சத்தம் இல்லை.


விமர்சனம்

மெளனராகம்  படத்தை  கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாமல் வெட்டித்தனமாக எடுத்தால் எப்படி இருக்கும்.அதுதான் ராஜா ராணி.காதல் தோல்விக்கு பிறகும் காதல் உண்டு. வாழ்கை உண்டு.இதுதான் படத்தின் ஆங்கில டைட்டில் கார்டு மெஸ்ஸேஜ். ஆர்யா-நயன் திருமணம்.இருவருக்கும் இதில் இஷ்டமில்லை.இருவரும் ஒட்டாமல் டாம் அண்ட் ஜெர்ரி கணக்காக இருக்கிறார்கள்.படம் விழுகிறது. ரொம்ப சீரியஸ்ஸாக ஓட்டாமல் மெளனமாக இருப்பதாகக்  காட்டினால  மெளன ராகம் சாயல் வந்துவிடும் என்று டாம் அண்ட் ஜெர்ரி.

ஏன் ஒட்டவில்லை? இருவருக்கும் திருமணத்திற்கு முன் காதல் தோல்வி.பிளாஷ்பேக்.கட்டுடல் ஸ்மார்ட்டான ஆர்யா.லட்டான  அழகான நயன்.”சீக்கிரம் சேர்ந்து வாழுங்கப்பா.என்ஜாய் லைப்” என்றாலும் பொறுமையை சோதித்துவிட்டு சேருகிறார்கள்.

ஆரம்பிக்கும்போது ரொம்ப பிரமாதமாய் ஆரம்பிக்கிறார்கள்.ஆகா என்று நிமிர்ந்தால் கொஞ்ச நேரத்தில் படம் தொய்கிறது.


கதாநாயகன் - நாயகி-பிரெண்ட்(சரக்கு சந்தானம் அல்லது டாஸ்மேக் சந்தானம்)-அப்பா-கோபி எல்லோரும் ஜாலியாக இருக்கிறார்கள்.நன்றாக நடிக்கிறார்கள்.குடிக்கிறார்கள்.பெண்களை கலாய்க்கிறார்கள்.காதலிக்கிறார்கள்.குடிக்கிறார்கள்.சைட் டிஷ் சாப்பிடுகிறார்கள். மக்காக லாஜிக் சுயசிந்தனை ஒன்றும் இல்லாமல் இருக்கிறார்கள் அழுகிறார்கள்.செல் பேசுகிறார்கள். காதலிகளைப் பிரிகிறார்கள்.பின்னால் மீண்டும் அழுகிறார்கள்.

சந்தானம் வந்தால் தியேட்டர் அதிர்கிறது. வழக்கமான அவரின் “மச்சான் பொண்ணுன்ன” என்கிற prefixஓடு ஆரம்பிக்கும் வசனங்களை பேசி கைத்தட்டல் பெறுகிறார்.படத்தின் டைட்டில்தான் மாறுகிறது சந்தானம் மாறவில்லை.

கானா பாலா காதில் தோடுகளோடு வருகிறார். நல்ல வேளை பாடவில்லை. ஸ்டிரியோ டைப் ஆகிவிடும் என்று விட்டுவிட்டர்கள் என்று நினைக்கிறேன்.

நூறு ஆண்டு ஆன சினிமாவில் இன்னும் காமெடியன் கதாநாயனுக்கு பிரெண்ட் ஆக இருக்க வேண்டிய கட்டாயம்.கடந்து பத்துவருடமாக add-on ஆக சரக்கு அடிக்க வேண்டும்.அதுதான புதுமை.



ஜெய் இதில் மிகவும் “வித்தியாசமான” ரோல் பயந்தாங்கொள்ளி.நன்றாக செய்திருக்கிறார்.மனதில் நிற்கிறார்.படம் ரொம்ப ரிச்சாக இருக்கிறது.அட்டகாசமான கேமரா காட்சிகள்.பாடல்களில் அருமையான விஷுவல்ஸ் பாடல் காட்சிகள். ஆனால் இசை பொருத்தமில்லாத ஜி வி பிரகாஷ்குமாரின்  ஹை டெசிபல் இசை.கத்தல் பாடல்கள்.

ஆர்யா-நயன்-ஜெய் ரசிகர்களுக்குப் பிடித்த படம்.பொழுதுபோகிறது.

Wednesday, August 28, 2013

நான் மெட்ராஸில்தான் இருக்கிறேன்.

நான் மெட்ராஸில் இருந்துக்கொண்டே மெட்ராஸில்தான் இருக்கிறேன் என்று ஐந்து அல்லது ஆறு வயதில்தான் தெரியும்.

மெட்ராஸுக்குத் தள்ளி நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்து ஊர்காரர்கள் ஆவலோடு ”மெட்ராஸ்” போகிறேன் என்று சொல்கிற மாதிரி சும்மா 10 கி.மீ தள்ளி அதே சென்னை பின்கோடில் குரோம்பேட்டைக்காரர்களில் (வசித்த ஊர்) படிக்காதவர்கள் சிலர்  ”மெட்ராஸ்” போகிறேன் என்று சொல்வதுண்டு.படித்தவர்கள் “சிட்டி” போகிறேன் என்று சொல்வார்கள்.எங்களுக்கும் அவ்வளவு மோகம் மெட்ராஸ் மேல்.


மெட்ராஸின் நிறுவன நாள் 22-08-1639 என்று சொல்லப்படுகிறது.மெட்ராஸூக்கு 374 வயது முடிந்து 375 வயது ஆரம்பித்துவிட்டது.22-8-13முதல் 25-08-13 வரை மெட்ராஸ் வாரம் கொண்டாடப்படுகிறது.

ஈஸ்ட் இந்தியா கம்பேனி தெலுங்கு (அரசர்)நாயக்கர்களிடமிருந்து வாங்கி இருக்கிறார்கள்.அதனால்தானோ என்னவோ சென்னையின் நிலப் பத்திரங்களின்(Parent document) ஓனர்கள் நாயுடு அல்லது நாயக்கர் பெயர் கண்டிப்பாக இருக்கும்.

இப்போது வாங்கினால் சென்னையின் விலை என்னவாக இருக்கும்?ஒரு கொசுகூட இல்லாத 15 வருஷம் கேரண்டி கொடுத்தால் நான் வாங்குவதற்குக் தயார்.

மெட்ராஸ் எத்தனை மெட்ராஸடி..!

மின்சார ரயிலில் 15வது நிமிடத்தில் குரோம்பேட்டையிலிருந்து கிண்டியை நெருங்கும்போது மெட்ராஸ் வந்துவிடும்.ஆனால் சினிமாவில் மெட்ராஸ் என்றால் சென்ட்ரல் ரயில்வே அல்லது எல்.ஐ.சி. கட்டிடம்.

பள்ளிச்சுற்றுலாவில் மீயூசியம் (செத்த காலேஜ்),ஜு(உயிர் காலேஜ்),அடையாறு ஆலமரம்,அண்ணா சமாதி,செயின் ஜார்ஜ் கோட்டை.

வீட்டோடு பார்த்த மெட்ராஸ் ரங்கநாதன் தெரு,நல்லி,குமரன்,பாட்டா,மிதிலாபுரி,ஆனந்தவல்லி கல்யாண மண்டபம்,அடஞ்ஞான் முதலி தெரு,அறுபத்துமூவர் மைலாப்பூர்,அயோத்திய மண்டபம் மேற்கு மாம்பலம்.

தலைவர்கள் இறந்துவிட்டால் தெரியும் மெட்ராஸ் மவுண்ட்ரோடு மற்றும் ராஜாஜி ஹால்.

கல்லூரி பருவத்தில் பார்த்த மெட்ராஸுக்கு ஆங்கிலம் மற்றும் இந்திப்படங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.தியேட்டர் சத்யம், சபையர்,தேவி காம்ளக்ஸ்,உட்லெண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல்,புவுண்டன் பிளாசா,தி.நகர் ஐஸ்கிரீம் பார்லர்.


தேவி தியேட்டர்
தேவி தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு கெளரவம்.கொடுக்கும் காசுக்கு தரமான ஜிலுஜிலு ஏசி, செண்ட்,ஒலி-ஒளி,இருக்கைகள்.உள்ளே நுழைந்தது முதல் வெளிவரும் வரை மிதந்தபடி இருப்போம்.மூன்று வகையான ஜனங்கள் கலந்துகட்டியாக படம் பார்க்க வருவார்கள்.தேவி பாரடைஸ்(தமிழ்),தேவி(ஆங்கிலம்/தமிழ்/ஹிந்தி), தேவிபாலா(ஹிந்தி/தமிழ்).
காமதேனு தியேட்டர்-லஸ் கார்னர்

1978-நான் (உட்கார்ந்தபடி வலது கடைசி)கைக்கட்டி இருப்பவரின் இடதுபக்கம்
பைக்கிராப்ட்ஸ் ரோடில் இருந்த சந்திரிகா ஸ்டியோவில் எடுத்தது.இப்போது  அங்கு இருக்கிறதா????


போட்டோவில் எல்லோரும் அப்போதைய ஹேர்ஸ்டைலான “ஸ்டெப் கட்டிங்” வைத்திருப்போம்.நுங்கம்பாக்கத்தில் உள்ள ரஞ்சித் பியூட்டி பார்லரில் ரூ25 (சாதா கட்டிங் 3.00 குரோம்பேட்டையில்) கொடுத்து செய்துக்கொள்வோம்.
ஹிந்தி ஹீரோக்களின் பாதிப்பு.

அப்போது மெட்ராஸில் மல்லிகைப்பூ விற்பவர்கள்  நிறைய பேர் தென்படுவார்கள்.பெரும்பாலும் பெண்கள்.இப்போது குறைந்துவிட்டார்கள். கல்லூரி மற்றும் அலுவலக  பெண்கள் மல்லிப்பூ சூடுவது குறைந்துவிட்டது. காரணம் உடை?
பின்னால் ஷோகேசில் இருக்கும் பெண்களுக்கு மல்லிப்பூ செட் ஆகுமா?



மாம்பலம் ஸ்டேஷனில் “இந்த வாரம் ஆனந்தவிகடன் வாசித்துவிட்டீர்களா” நீல கலர் இரும்புபோர்டு இருக்கும்.

இப்போது  இது உயிருடன் இல்லை





 காலத்தின் ஓட்டத்தில் பழையன எல்லாம் கழிந்து புதியன புகுந்து விட்டது. பழையன நினைவில் ஏக்கத்தோடு அவ்வப்போது நிழலாடும்.பெருமகிழ்ச்சி என்னவென்றால் நாம் இழந்ததை எல்லாம் நெட்டில் பொக்கிஷமாக கொட்டிவைத்து  நினைவுகளில் சர்ஃப் செய்ய வைக்கிறார்கள்.

Wednesday, August 21, 2013

கனகா/சேரன் பெட்ரூம்/ஜார்ஜியானா/சப்பாத்தி சில்வர் ஜூப்ளி

சமீபத்தில் படித்த சில செய்திகளைக் கடந்து போகும்போது ஏன் இப்படி என்று ரொமப யோசிக்கவே செய்தது.அறிவுக்கு அடங்காமல்  செய்திகளின் மையம் பிராண்டியது.செய்திகளின் நாயகர்கள் ஏன் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாக அணுகிறார்கள்.இது சரியா தவறா?


இவைகள் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் சற்று திகிலாகவும் இருக்கிறது.எல்லா செய்திகளும் ஜீனியர் விகடனில் படித்தது.

செய்தி - 1

செல்வி ஜார்ஜியான தாம்சன்( வயது 19) படிப்பில் கெட்டிக்காரி.மிகவும் துறுதுறுப்பான பெண்.பதினாறு வயதில் அமெரிக்கா நாசாவால் அழைக்கப்பட்டார்.அவருடைய கனவு விண்வெளி ஆராய்ச்சி,ராக்கெட் விஞ்ஞானம் இவற்றில் கொடிகட்டி பறப்பது.இதையொட்டி விண்வெளி படிப்புக்காக லண்டன் சென்றவர் அங்கு ஹாஸ்டலில்  தூக்கி மாட்டி இறந்துபோனார்.கொலையா தற்கொலையா விசாரணையில் இருக்கிறது.

அப்பா... ப்ளீஸ் சாரிப்பா...!


இனி செய்தியின் மையம்:
தன் பெண்ணின் கனவு நிறைவேறுவதற்கு அப்பா தாம்சன் இவரின் படிப்பு விஷயமாக செய்த ஒரு செயலை சொல்கிறார்....

“12ம் வகுப்பு தேர்வு நடக்கும்போது என் மனைவி இறந்துவிட்டாள்.அந்தச்சாவு என் மகளை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக மனைவியின் இறந்த உடலை வீட்டுக்கு எடுத்துவராமல் தனியார் குளிரூட்டும் நிலையத்தில் நான்கு நாட்கள் வைத்திருந்தேன்.தேர்வு முடிந்த பிறகுதான் அஞ்சலி செய்து அடக்கம் செய்தேன்”

செய்தி -2

இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரத்தில் தன் பெண் காதலனுடன் செல்போனில் பேசுவதைப்பற்றி  குறிப்பிடும்போது ....

“ நிறைய பணக்காரங்க வீட்டில மகள்,அப்பா,அம்மா எல்லோருக்கும் தனித்தனியா பெட்ரூம் இருக்கும்.ஆனா எனக்கு கல்யாணம் ஆனதில் இருந்து நான், மனைவி, என் ரெண்டு மகள் நாலு பேருக்கும் ஒரே பெட்ரூம்தான்”



செய்தி -3
நடிகை கனகா இறந்ததாக வதந்தியும் அதன் பிறகு நடந்த பரபரப்பான நிகழ்ச்சி ஒன்று... 

தட கள போட்டிமுடிவு. வின்னர் இஸ் ..........
 ”(கனகா வீடு)வீட்டுக்குள் நுழைய முடியாதபடி கேட்டில் இரண்டு பூட்டுக்கள்.தட்டிப்பார்த்துத் திறக்கப்படாததால் பத்திரிக்கையாளர்களும் போலீஸாரும் கேட்டைத் திறக்குமாறு சத்தம் போட்டனர்.வீட்டுக்குள் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை.கேட்டை தாண்டிக்குதித்து போலீஸார் உள்ளே செல்ல,அவர்களோடு மீடியாக்களும் சென்றன.........

வீட்டின் கதவும் பூட்டப்பட்டிருந்ததால்,பின்பக்கம் சென்று பார்த்தனர்.பின்பக்க கதவும் உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கவே, கதவை உடைத்துத் திறந்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் போலீசார்”

செய்தி(கொஞ்சம் பழசு)-4

நீயா நானாவில்  ஒரு பெண்மணியின் பேச்சு:  
ஏய் சப்பாத்தி ....நீயா நானா ஒரு கை பாத்திடலாம்
 
கணவன்: இருபது வருஷமா சப்பாத்தி சரியா பண்ணதே இல்ல இவங்க

மனைவி: என்னமோ தெரியல நானும் டிரை பண்றேன்.ஒண்ணு தண்ணி கூடிடுது.அதுக்கப்பறம் எடுத்து தேய்ச்சா வரமாட்டேங்குது.நானும் மாவத்தொட்டு தொட்டு தேய்ச்சுப் பாக்கறேன் வரவே மாட்டேங்குது.இந்த ஜூலை வந்தா 25 வருஷம் ஆகப்போகுது.

பெண்ணின் பேச்சு 8.11 - 8.50



செய்தி(ரொம்ப பழசு)-4
முல்லைக்கு தேர் கொடுத்தான் மன்னன் பாரிவள்ளல்.


time being கொடுத்திருப்பாரோ?

_______________________________________


நீயா நானாவில் நான் ரொம்ப ரசிப்பது பங்கேற்பவர்களின் முகபாவங்கள்.விஜய் டிவி இதற்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து க்ளோஸ்-அப்பில் நிறைய முகங்களை காட்டுவார்கள்.இதில் கணவனோ மனைவியோ தங்களின் அன்றாட வாழ்வின் லூசுத்தனமான அல்லது காமெடியான நடவடிக்கைகளை சொல்லும்போது  மற்றவர் sadistic pleasureஓடு ரசித்தவாறே சிரிப்பது.

உண்மையான கலாய்த்தல்(கணவனை புலம்ப விட்டுட்டு ரசிப்பது)
மற்றவகை முகபாவங்கள்:


ரொம்ப ஓட்டாதிங்கடி




என்ன பண்றது இந்தக் காஸ்ட்யூம்க்கு இப்படித்தான் நளினமா சிரிக்கனும்



வெரி நைஸ்...

Thursday, July 11, 2013

சார்...தந்தி -காட்டன் சாரி- உடல் தானம்- எம்எஸ்வி


சார்.... தந்தி!


அந்தக் காலத்தில் “சார்..தந்தி!” திகில் கிளப்பும் பன்ச் டயலாக்.திகில்செய்தியைப் படித்துவிட்டு உடைந்துவிடக்கூடாது.”ஸ்டார்ட் இம்மியடியட்லி” என்று செய்தி அதட்டும்.போட்டது போட்டபடி வேஷ்டி பனியனோடு அலறியடித்தபடி ஓட வேண்டும்.சீரியஸ்ஸூக்கு ஸ்டார்ட் இம்மிடியட்லி ஓகே “எக்ஸ்பையர்டுக்கு”?அப்போது freezer box கிடையாதோ?

தந்தி மேல் பாசிட்டீவ் பார்வை 10% தான்.

Sow Rani matured என்று கொடுத்தத் தந்தி சேரும் போது How Rani matured என்று சேர்ந்ததாம்.என் வாழ்க்கையில் நாலு அல்லது ஐந்து தந்திகளாவது கொடுத்திருப்பேன்.(ஆபிஸ் தந்திகள்  போனில் கொடுக்கப்படும் போனோகிராம் கணக்கில் நிறைய உண்டு).”We liked your daughter proceed further" உறவுக்காரர்  வீட்டின் தந்தி ஒன்றை நான் வாங்கி இருக்கிறேன்.தாத்தா இறந்தபோது அப்பாவிற்குக் கொடுத்தத் தந்தி “Father expired start immediately". பாதர் இடத்தில் ஏன் கிராண்ட் பாதர் போடக்கூடாது என்ற குழப்பம் தீர ரொம்ப நாளாயிற்று.

கல்யாண மண்டபத்திற்கு வரும் வாழ்த்துத் தந்திகளை சரியாக இலை போடும் நேரத்திற்குக் கொண்டு கொடுப்பார்கள்.அதன் வாசகம் 'சொர்க்கத்திலிருந்து தனியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிர்வாதங்கள் தம்பதிகள் மேல் பொழியட்டும்”

செல்போன்கள்  மற்றும் அதன் டவர்கள் “டிவிட்.. டிவிட்...டிவிட் ”குருவிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தமாதிரி இந்தக் “கட் கடகட கடகட” தந்தியும் ஜுலை 15 முதல் முடிவுக்கு வருகிறது.கிராமத்து மக்களும் ராணுவத்தில் வேலை செய்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

சாவப்போவதை முன்கூட்டியே தெரியபடுத்திவிட்டதால் வேஷ்டி பனியோடு ஓட வேண்டாம்.

காட்டன் புடவை


ஒரு காலத்தில் (சூடிதார் இல்லாத காலம்) கல்லூரி மாணவிகள் மற்றும் ஆபிஸ் கோயிங் பெண்களிடம்  புசு புசு காட்டன் புடவை அணிவது ஒரு பேஷனாக இருந்தது.ஒரு சமயம் டிரெண்டாகவே இருந்தது.பாவாடைத் தாவணிக்கு நல்ல மாற்றாக இருந்தது.

இந்தப் புடவையில் ஆல் இன் ஒன் கிடைத்தது.அதாவது கண்ணியம்+ஸ்டைல்+ரிச்னெஸ்+கவர்ச்சி+பாரதமாத இந்தியத்தனம்+மெயிண்டனென்ஸ்+சிம்பிளிசிட்டி+மிடில்கிளாஸ் மற்றும் பல.

நடையே வித்தியாசமாக மாறிவிடும்.என் அபிமான நடிகை ஸ்ரீப்ரியாக்கு இந்த உடையில் கூடுதலாக ஒரு grace and poise(நேர்த்தி & நிதானம்?) இருக்கும்.


சினிமாவில் ஸ்ரீப்ரியா,சுகாசினி,ஷ்பனா ஆஸ்மி,ஸ்மீதா பாட்டீல்,ஷோபா அர்ச்சனா,அருந்ததி ( மிடில்கிளாஸ் ஆபிஸ்கோயிங் லுக்?) அணிந்து ஒரு டிரெண்டை உருவாக்கினார்கள்.படங்கள் மத்தியதர ரகத்தைச் சேர்ந்த படங்கள்தான் காரணம்.

இப்போது இரண்டுமே காணாமல் போய்விட்டது.
இவங்க மிடில் கிளாசா?








காண்டு:

திரைப்பட இசையில் எந்த இசையை மேற்கோள் காட்டினாலும் தொண்ணூறு சதவீதம் இளையராஜாவின் இசையை மேற்கோள் காட்டுவதால் அதற்கு முன் இருந்த ஜாம்பவான் எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர்கள் “காண்டு” ஆகிறார்கள்.

“மவனே ..ராஜாதான் இசையே கண்டுபிடிச்சாருன்னு சொல்வானுங்க போல”

எம் எஸ் வி சினிமா பாடல்களில் இருந்த கர்நாடக கடினத்தை மெலிதாக்கி மெல்லிசையாக்கியவர்.பல புதுமைகள் செய்தவர்.இவர் இளையராஜாவுக்கு முன்னோடி.அடுத்தக் கட்டத்திற்கு கடத்தியவர்.ஆனால் அதற்கு அடுத்தக் கட்டத்திற்கு கடத்தவில்லை.

தங்கத்தில் முகம் எடுத்து.... சந்தனத்தில்
சிவாஜி(தெய்வமே.... தெய்வமே...) மற்றும் எம் ஜி யார் (என் அண்ணாவை ஒரு நாளும்) உடல் மொழிக்கு டியூன்களைப் போட்டு போட்டு போட்டு போட்டு இளைத்து போய்விட்டார்.ராஜா ரசிகர்கள் எம் எஸ் வியும் மற்றும் அவரின் முன்னோடிகளையும் கேட்பது  எம் எஸ்விக்கும்  மற்றும் ராஜாவிற்கும் நல்லது.

விரிவான கட்டுரை மற்றொரு நாளில்.


உடல் தானம்

இறந்தப் பிறகு உடலை  பரிசோதனைக்கு மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுப்பதாக சில பிரபலங்களும் மற்றவர்களும் உறுதி அளித்துள்ளார்கள். இந்தத் தானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.எங்கிருந்து வந்தோமோ அதே இயற்கையுடன் (நெருப்பு அல்லது மண்) கலப்பதுதான் உடல் மற்றும் ஆன்மாவுக்குச் செய்யும் மரியாதை.A decent funeral என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

அனதைப் பிணங்களைக் கூட அதற்குரிய  சகல மரியாதையுடன் புதைப்பது அல்லது எரிப்பதை சமூக நல சங்கம் ஒன்று செய்கிறது.

மருத்துவ கல்லூரியிலும் எவ்வளவு நாள் அதை பாடம் செய்து பாடம் நடத்துவார்கள்.அது கிழிக்கப்பட்டு திறக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டு மக்கிப்போய். இப்படி மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்னும்  இருந்துக்கொண்டே இருக்க வேண்டுமா? இதற்கும் ஆயுள் உண்டு என்று நினைக்கிறேன்.பிறகு (In)decent funeral???

டாக்டர்கள் யாரும் ஏன் உடல் தானம் செய்வதில்லை?

படைத்தானே....

ஒருகாலத்தில் ஒரு கும்பலில் இருந்து தனியாக படைத்தவர்கள் பின்பு அடுத்து வந்த கும்பலில் இருந்து  தனியாகாமல் காலாவதியாகி ஆகிவிடுகிறார்கள்.ஏன்?

எல்லாம் மாறிப்போச்சு!

பாரதிராஜா தன் செல்ல சப்ஜெக்ட்டான கிராமத்துக் கதையை எடுத்து சொதப்பிவிட்டார். நன்றாக எடுத்திருந்தாலும் பழைய கெத்துடன் மீண்டும் படங்களை இயக்கி இருப்பாரா?

படைப்பாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் சினிமா இயக்குனர்கள்  பலர் பல படங்கள் இயக்கிவிட்டு அப்புறம் காணாமல்போய்விடுகிறார்கள்.காணாமல்
போனாலும் முன்னாள் இயக்குனர் பந்தாவில் வலம் வருகிறார்கள்.

படைப்பாளிகள்(creative artists)  புதுசு புதுசாகப் படைத்துக்கொண்டே இருக்க வேண்டாமா?காணாமல் போவதற்கு முக்கிய காரணம்(முதுமை/உடல் உபாதை என்றால் தவிர்க்கமுடியாதது).தங்களை இதுதான் எங்கள் பிராண்ட் என்று நிருபித்துவிட்டதால் இதிலிருந்து வெளியே வந்து காலத்திற்கேற்றார் போல் சிந்திக்கமாட்டோம்.இதான் காரணமா? அல்லது கற்பனை வற்றிப்போய்விட்டதா?

விடியும் வரை காத்திரு/நூறாவது நாள்/ராசா மகள்/சிவப்பு ரோஜாக்கள்/டிக் டிக் டிக்/ஆண்பாவம்/மலையூர் மம்பட்டியான்/முந்தானை முடிச்சு/உதிரிப்பூக்கள்/
ராஜபார்வை/ஜானி/இதுமாதிரி இன்னும் விலகி வந்து கொடுத்தவர்கள் ஏன் மீண்டும் கொடுக்கவில்லை.

இப்போது இருக்கும் குறும்பட கும்பலின் கற்பனைத் திறம் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும்.

டெயில் பீஸ்:

ஒகே...ஒகே.... ரெடியா இருந்தாலும் யாருப்பா பைனான்ஸ் பண்ண தயாரா இருக்காங்க இவங்கள நம்பி?