Monday, February 28, 2011

ஆட்”டை”யைப் போட்ட இங்கிலாந்து

மூன்னூற்று முப்பத்தி எட்டு ரன்கள்.கொடுத்தக் காசுக்கு ரசிகர்களை குஷிப்படுத்திய டெண்டூல்கரின் ஆட்டம்(120 ரன்கள்) மற்றும் யுவராஜ் சிங்கின்
58 ரன்கள்.அடுத்த ஆடிய இங்கிலாந்து 68ல் ஒரு விக்கெட்டும் 111 ல் இரண்டாவதும் விழ இது போதும் மேட்ச் நம்ம கைலாதான் என்று ஒரு மிதப்பில் இருந்தார்கள்.27-02-11.
ஆனால் ரசிகர்களின் எண்ணத்தில் ஆட்”டை”யைப் போட்டு விட்டது இங்கிலாந்து அணி முன்னாள் கிழக்கிந்திய கம்பேனி கடைசி பந்தில்.நீ பாதி நான் பாதி கண்ணே என்று பாயிண்ட் பிரிந்துவிட்டது. win-win நிலை.50:50.

இந்த ஆட்“டை”யை போடுவதற்கு முன் கேப்டன் A.Strauss(அருமையான ஆட்டம்) and Bellம் நோகடித்து பின் இருவரும் அவுட்டாகி குஷிபடுத்தி அடுத்த வந்தவர்கள் சிக்ஸ் அடித்து நோகடித்து  அவர்களும் அவுட்டாகி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் என்று  விளையாட்டிற்கு ஒரு  த்ரில்லர் கிளைமாக்ஸ்ஸில் நிறுத்திவிட்டுப்போனார்கள்.

(அடிச்சுப் பிடிச்சு நாங்களும் 338 நிறுத்திட்டம்ல!)

சின்னசாமி ஸ்டேடியம் ஒன்றும் புரியாமல் விழித்தது.

முனாஃப் படேல் க”டை”சி பந்தை போட ஓட ரசிகர்களின் இதயம் ஸ்லோ மோஷனில் துடிக்க, இந்திய கடவுள்களின்பால் பிரார்த்தனை மேல் பிராத்தனை  கண்கள் வரைக் குவிந்து அவர்களால் கடைசிப் பந்தை நோக்க முடியாமல் முழுகி,கடைசியில் தங்கள் முயற்சியில் முனாஃப் படேல் தன் வீச்சையும் Graeme Swann தன் மட்டை வீச்சையும் காட்டி “டை” யில் நிறுத்தி மேட்சை முடித்தார்கள்.


கடவுளார்கள் நிம்மதியாக  பெருமூச்சு விட்டார்கள்.



Friday, February 25, 2011

இளையராஜா- King of Musical Beats-2

தாளம் என்று சொல்லும்போது முதன்முதலில் எனக்கு அறிமுகமான எம் எஸ்வி - ராமூர்த்தி பாட்டின் சில தாளங்களை என்னால மறக்க முடியாது.வித்தியாசமான தாளங்கள் மற்றும் பாட்டு. அந்தக் காலத்திற்கேற்ற இசைக்கருவிகளுடன். அவை:


தொட்டால் பூ மலரும் - படகோட்டி-1964,
காற்று வாங்கபோனேன் -கலங்கரை விளக்கம் -1965
அவளுக்கென்ன - சர்வர்சுந்தரம் -1964
பொன்மகள் வந்தாள்-சொர்க்கம்-1970
காற்றுக்கென்ன வேலி- அவர்கள் -1977
அன்புள்ள மான் விழியே -குழந்தையும் தெய்வமும் -1965
கண்ணன் என்னும் மன்னன் பெயரை -வெண்ணிற ஆடை-1965

இன்னும் இருக்கிறது.

இளையராஜா தாளத்தை அடுத்தக் கட்டத்திற்கு தன் நவீன இசையால் நகர்த்தினார்.தாளக்கட்டில் புரட்சியே செய்திருக்கிறார்.Master of  Musical Beats.பின் வரும் தாளத்துடிப்புகளே இதை சொல்லும்.



He is musical genius in blending the Melody(song) and Rhythm(beat) artistically. 

ஸ்ருதி(மெட்டு) மாதா லயம்(தாளம்) பிதா என்று சொல்வார்கள்.

பாட்டிற்குக்கொடுத்த அதே ஆளுமையை (personality)இதற்கும் கொடுத்து புதிய பரிமாணங்களைத் தொட்டு இருக்கிறார்.மெட்டில் இருக்கிற அதே உயிர் துடிப்பும் ஆத்மாவும் இதிலும் இழையாக ஓடுகிறது. ஆத்மா இல்லாத இசை வெறும் சவம்.

ஆச்சரியமான விஷயம் இவரின் ஆரம்பகால தாளங்களில் கூட பெரும்பாலும் “கத்துக்குட்டித்தனம்” இல்லை. மேதமை பொருந்தி இருக்கிறது.

ரசிகன் மனநிலையிலிருந்து  ஆராய்ச்சி மாணவன் மனநிலைக்கு கொண்டுப்போய் விடுகிறார்.(எப்போதும் நடப்பது)

கர்நாடக இசையில் உள்ள விதவிதமான தாளங்களை தன் இசையில் நவீனமாக உபயோகப்படுத்தி உள்ளார்.அதைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.

ஒரு காமன் சென்ஸ் பார்வையில் தாளத்தைப் பற்றி:(தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்)
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக:
  1. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
  2. சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
  3.  உன் பார்வையில் ஓராயிரம்
  4.  ஓ... உன்னாலே நான் பெண்ணானேனே...
  5.  பொதுவாக என் மனசு தங்கம்
இந்தப் பாடல்களை அதே மெட்டில் பாடியபடி கையால் மேஜையில் தாளம் போடுங்கள்.(நாம் மியூசிலாகத் தட்ட முடியாது.சும்மா தட்டுங்கள்). தட்டல் எண்ணிக்கை வித்தியாசப்படும். காரணம் 1.வார்த்தை 2.மெட்டு. 3.உச்சரிப்பு.

”சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்” ராஜாவின் மெட்டுலேயே பாடும்போது போடும் தட்டல் அதிகமாகும். காரணம் நீளமான பல்லவி.” ஓ... உன்னாலே” அந்த ஓவை ஸ்டைலாக உச்சரிக்கும்போது தட்டல் எண்ணிக்கை அதிகமாகும்.

அதே போல்”உன் பார்வையில் ஓராயிரம்” மாறுபடும்.

இப்படி தட்டல்களின் எண்ணிக்கையை வைத்து ஆதி தாளம்,மிஸ்ர சாபு, கண்ட சாபு என்று வகைப்படுத்தி உள்ளார்கள்.

மொத்தத்தில் ஒவ்வொரு வார்த்தையும் பாடும் வினாடிகள்  அதற்குள் தட்டப்படும் தட்டல்கள். இதுதான் பாட்டுக்கு ஏற்ற தாளம்.

நாம வேண்டியவர்களுக்கு அடிக்கும் அதே “ஜிங் சக்”தான் தாளம்.

ராஜா இதை வைத்துக்கொண்டு விளையாடுகிறார். பின் வரும் பாட்டெல்லாம் ஏதோ ஒரு தாளத்தில் அடங்கும்.எல்லாம் ஒரு கணக்குதான்.


நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.ராஜா 1975ல் வந்தது நல்லதாகப் போயிற்று.இல்லாவிட்டால் இவ்வளவு விதவிதமான தாளக்கட்டுக்கொண்ட பாடல்கள் கிடைத்திருக்காது.காரணம் படங்கள் மாறிவிட்டது.பாட்டுத் தேவையா என்ற கட்டத்திற்கு வந்துவிட்டோம்.


கிராமம்,நகரம்,திகில்,சரித்திரம், மாயஜாலம்,பக்தி,ஆர்ட்
பிலிம்,கிராபிக்ஸ் படம்,புராணம், குற்றம்,குடும்பம்,முடிச்சவ்ழிக்கி,மொள்ளமாரி என்று எல்லாவித பிரிவுகளுக்கும் பாட்டுப்போட்டதால் மேஸ்ட்ரோவுக்கு சோதனை முயற்சிகள் செய்ய நிறைய வாய்ப்பு.போட்டுப்பின்னியிருக்கிறார்.

Master Blaster Maestro  எல்லா fielding positionகளிலும்  தன் பேட்டை சுழற்றி ரன்(தாளம்) அடித்திருக்கிறார்.ரிவர்ஸ் பேட்டும் ஆடி இருக்கிறார்.

 
  •  தாளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மெட்டை(பாட்டு) கைவிடவில்லை
  • தாளமும் மெட்டும் இணைந்துப்போகிறது
  •  தாளத்திற்காகக் கூட மெட்டு அமைத்தப் பாடல்கள் இருக்கிறது
  • ஒரு சில பாட்டில் மேலோட்டமாகப் பார்த்தால் தாளம் இணைந்துப் போவது மாதிரி உணர்வோம்.ஆனால் சற்றுத் தள்ளிப்போகும்.அது ஒரு டெக்னிக் என்று சொல்லாம்
  • ஒரே பாட்டில் டிரம்ஸ்,தபலா,மிருதங்கம்,டோலக் என்று தாளம் தாவுகிறது
  • தாளத்தின்  சின்ன சின்ன உணர்ச்சிகளை கவனமாக கேளுங்கள் 
  • தாரை,தப்பட்டை,உறுமி,தப்பு,கஞ்சிரா,மிருதங்கம், தவில்,டிரம்ஸ்,கைத்தட்டல்,தொடைத்தட்டல்,காங்கா, பேங்கோ மற்றும் பல
  • தாளத்திற்கு முன்னும் பின்னும் பின்னப்படும் இசை முக்கியமானது

இதன் பெயர் Vibraslap.இதைக் கூட பயன்படுத்தியதாக நண்பர் சொன்னார். எந்தப் பாட்டிற்கு என்று தெரியவில்லை.
    குறைந்தப்பட்சம்  3 நிமிடங்கள்தான் ஆடியோ ஓடும்.பாட்டின் பின் வரும் தாளத்தை சற்று உன்னிப்பாக கவனித்தால் அதன் தனித்தன்மையைக் காணலாம்.முன்னும் பின்னும் பாட்டு ஒடுவது ஒரு முழுமைக்காகதான்.

    தென்ன மரத்துல” இருந்து ”பீட் பீட் பீட்” வரை 17 பாடல்களை சிவப்பு நிறத்தில்  கொடுத்திருப்பது இசைஞானியின் தாளத்தின் பன்முகத் தன்மையை முன்னிலைப்படுத்துவதற்காக.ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.அதற்குப் பிறகு வருபவையும் தனிதன்மை கொண்டவையே.

    தாளங்களை கூர்ந்து கவனியுங்கள்.

    தென்ன மரத்துல தென்றல் அடிக்குது-லஷ்மி-1979

    அழகே தமிழே அழகிய - கோவில் புறா-1981
    Two - in -One.மெட்டுக்குத் தாளமும் தாளத்திற்கு மெட்டும் திருப்பிக்கொள்ளலாம்

    ஆடும் நேரம் இதுதான் -சூரசம்ஹாரம் -1988

    தகிடதகிட தந்தானா - சலங்கை ஒலி-1982
    சும்மா குமுறவில்லை. ஒரு கலை அம்சத்தோடு குமுறுகிறார்.
     0.10ல்மிருதங்கத்திலிருந்து தபலாவுக்கு தாவுகிறது தாளம்.
     
    காதல் ஓவியம் -அலைகள் ஓய்வதில்லை-1981
    தாளம் புதுசு.பின் பாதியில் அப்படியே தாளத்தை மாற்றுகிறார்.அம்மாடியோவ்!ஹிட்சாக் படத்தில் அடுத்து வருவதை கூட யூகிக்கலாம்.ஆனால் இவர் பாட்டில்.

    குயிலே குயிலே - காதல் ஓவியம் -1982
    சோகமான பாட்டிற்கு மென்மையாகத்தான் தாளம் வைக்கப்படும்.இதில் சற்று
    கடினமாக தாளம் போகிறது.சோதனை முயற்சி?வெற்றியும் பெற்றுவிட்டார்.

    போற்றிப்பாடடி கண்ணே -தேவர்மகன் -1992

    கன்னிப்பொண்ணு கைமேல -நினைவெல்லாம் நித்யா-1982

    உன் பார்வையில் -அம்மன் கோவில் கிழக்காலே-1986
    28BeatUnParvaiyil.mp3
     
    என்ன சுகமான உலகம்- கர்ஜனை-1981
    மிருதங்கம் வயலின் கலவை அருமை.
    42BeatEnnaSougamana.mp3

    ஒரு ராகம் தராத பாடல் -உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்1992
    என்ன ஒரு மெட்டு..! தாளம் பேசுகிறது..!

    இப்போதென்ன தேவை - மக்களாட்சி -1995
    அமிர்தவர்ஷ்னி ராகத்தின் சாயலில் ஒரு பாட்டு.
    9BeatMakkalAati-IppothuEnna.mp3

    பார்த்த விழி பூத்திருக்க - குணா -1991
    29BeatPaarthavizhi-Guna.mp3

     கேளடிகண்மணி - புதுப்புது அர்த்தங்கள்-1989

    தாம்பூரின் என்ற இந்த  இசைக்கருவியின் ஓசை இதில் கேட்கலாம்.அதன் நாதம் எப்படி பாட்டை அழகுப்படுத்துகிறது.
    34BeatKeladiKanmani.mp3

    கொத்தமல்லிப்பூவே - கல்லுக்குள் ஈரம் -1980
    7BeatKoothamallepoove.mp3

    கிழே இருக்கும் ஜலதரங்கம் இன்னும் இசைக்கருவியில்தான்
    முதலில் வரும் இசை வாசிக்கப்பட்டிருக்கிறது.

    (திருமதி சீதாலஷ்மி துரைசாமி)

    இளநெஞ்சே வா - வண்ண வண்ண பூக்கள்-1992
    இந்தப் பாட்டில் தோல்கருவிகள்தான்.உரையாடலை
    கவனியுங்கள்.தாளக்கட்டை வைத்தே முக்கால்வாசி பாட்டு ஓடுகிறது.ஒரு மைல் கல். சோதனை முயற்சி.

     1.07 பிறகு பல்லவியில் ட்ரம்ஸ் ,தபலா என்று மாறி மாறி தட்டப்படுகிறது.

    தாளம் மெட்டை விட்டு தப்பிப்போகிறது ஆனால் போகவில்லை??!!

    பருவமே புதிய பாடல் பாடு -நெஞ்சத்தே கிள்ளாதே-1980
    தொடையில் தட்டித் தாளம் எழுப்பப்பட்டதாக கேள்வி. தொடைத் தட்டலில் ஆரம்பித்து மெதுவாக வெஸ்டர்ன் கிளாசிக்கலுக்குப் போய் ஹார்மனியத்தில் முடிகிறது.
    14BeatParuvamePudhiya.mp3

    சோலைப்பூவில் - வெள்ளைரோஜா-1983

    48BeatSolaiPoovil.mp3

    காத்திருந்தேன் தனியே - ராசா மகன் -1994
    7 beat cycle rhythm என்ற வகையில் போடப்பட்டதாம்.”காத்திருந்தேன் தனியே” “எதிர்பார்த்திருந்தேன் உனயே” “பூத்திருந்தேன் விழியே” ஒவ்வொரு வார்த்தையும்  முடிக்க ஐந்து  செகண்ட் ஆகிறது.அந்த ஐந்து செகண்டில் எத்தனை beat அடிக்கப்படுகிறது என்று மேஜையில் தட்டிப்பார்க்கவும். ஏழு வருகிறதா?

    மோகனராகமும் கூடவே மெட்டில் போகிறது.ஜிக்கியின் மகன் சந்திரசேகர் பாடுகிறார்.
    BeatKaathirunthen.mp3

    மிஷ்கின் பயந்து ஓடும் காட்சி - நந்தலாலா Trailer -2010
    Nandalaala miskin run.mp3

    பீட் பீட் பீட்

    ____________________________________________________________

    சிவகர தமருக -கொச்சு கொச்சு சந்தோஷங்கள்-2000
    சித்ரா குரலில் கொல்கிறார்.ராஜா தாளத்தில்.
    BeatShivkaradamaruka.mp3

    அடிடா மேளத்த-கண்ணுக்குள் நிலவு-2000
    25BeatAdidaMelatha.mp3

    நிலவு பாட்டு -கண்ணுக்குள் நிலவு-2000

    தாகம் எடுக்கிற நேரம் - எனக்காகக் காத்திரு-1981
    6BeatDhagmEdukkura.mp3

    ஆட்டுக்குட்டி முட்டையிட்டு 16 வயதினிலே-1977
     அட்டகாசம்.
    3BeatAatukkutiMuttai.mp3

    ஓ உன்னாலே நான்-என் அருகில் நீ இருந்தால் -1991


    மெலடியும் தாளமும் ரொமாண்டிக் ஆகப்போகிறது.ரொம்ப சிம்பிள் ரிதம்(தாளம்) அண்ட் மெலடி(பாட்டு).இப்போது இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களும் இந்தப்பாட்டை(முழுசு) காலை,மதியம்,இரவு மூன்று முறை வாக்மேனில் ஒரு மாசம்  கேட்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    4BeatOhUnnaleNaan.mp3

    தேவனின் கோவிலிலே யாவரும் -வெள்ளைரோஜா-1983
    BeatDevaninKovilVellaiRoja.mp3

    இது ஒரு நிலா காலம் - டிக் டிக் டிக் -1981
    முதலில் வரும் டிரம்ஸ் எவ்வளவு வித்தியாசம்!
     BeatIthuoruNilakalam.mp3

    செவ்வானமே -நல்லதோர்குடும்பம் -1979
    BeatSevvanameNallathorKudu.mp3

    நேத்து நேத்து ஒருத்தர - புதுப்பாட்டு -1990
    13BeatNethuOruthara.mp3

    ஆயிரம் மலர்களே - நிறம் மாறாத பூக்கள்-1979
    BeatAayiramMalargale.mp3

    பொதுவாக என் மனசு -முரட்டுக்காளை-1980
    15BeatPothuvaga En.mp3

    அந்தரங்கம் யாவுமே - ஆயிரம் நிலவே வா -1983
    BeatAntharanYaumE.mp3

    கா..கா..காக்கா கருப்பு -ஜுலி கணபதி -2004
    BeatJulieganapathy.mp3
      
    மாமா மச்சான் - முரட்டுக்காளை-1980
     (மாமனைத் தேடுகிறார் ராஜாவின் பின்னணியில்)

    0.42-0.57 முதல் பீட்டை கவனியுங்கள்.முன்னால் நளினமான புல்லாங்குழல் நாதமும் பின்னால் ரம்யமான தாளமும் awesome!

    Hats off Maestro!

    17BeatMamanMachan.mp3

    ஆகாயவெண்ணிலாவே - அரங்கேற்றவேளை-1990
    வித்தியாசமான  தாளக்கட்டில் போடப்பட்டது.(”முல்லை மலர்மேலே மொய்க்கும் வண்டுபோலே” யின் நவீன வடிவம் இது)

    உற்று உள்வாங்கினால் பாட்டின் போக்கிலிருந்து தாளம் சற்று தள்ளித்தான் போகிறது. பின்னால் சேருகிறது.மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது.
    19BeatAagayavennilave.mp3

    காயத்ரீ - வாழ்வே மாயமா-1977
    0.38-0.42 இரண்டு தாளங்கள் ஆனால் இரண்டு கருவிகளில்.
    20BeatGayathri-Vaazhvey.mp3

    மெளனம் ஏன் மெளனம் ஏன் - என் ஜீவன் பாடுது-1988
    BeatMounamenMounamen.mp3

    இளமை இதோ இதோ - சகலகலாவல்லவன் -1982
    21BeatElamaiSakala.mp3

    அம்மா என்றழைக்காத -மன்னன் -1992
    தாளத்திற்கு வயலினா வயிலினுக்கு தாளமா?வயலினைச் சுற்றி ஒரு வலையே பின்னப்படுகிறது.
    23BeatAmma Entrui-Mannan.mp3

    ஆதிஉஷஸ் சந்தியப்பூத்தது இவ்டே - பழசி ராஜா-2009


    இதழில் கதை எழுதும் - உன்னால் முடியும் தம்பி -1988
    26BeatIdhazhilKadhai.mp3

    புதிய பூவிது - தென்றலே என்னைத் தொடு -1985
    ஒரு சமயத்தில் எல்லாவற்றையும் இசைப்பது மாதிரி தெரியும்.ஆனால் தாளத்தின் புதிய பரிமாணம்.சோதனை முயற்சி.ராஜாவின் மாஸ்டர் பீஸ்
    30BeatPudhiyaPoo.mp3

    விழியிலே மலர்ந்தது - புவனா ஒரு கேள்விக்குறி-1977
     31BeatVizhiyilaeBhuvana.mp3

    ராஜா கைய வச்சா - அபூர்வ சகோதரர்கள் -1989
    பலவித  மணம் கொடுக்கிறார் பாருங்கள் ஒரு தெருப் பாட்டுக்கு.
    33BeatRajakaiyavecha.mp3

    செந்தூரப் பூவே-16 வயதினிலே -1981
    35BeatSenthooraPoove.mp3

    சுக ராகமே சுப கீதமே - கன்னிராசி -1985
    36BeatSuga Raagamey.mp3

    கொஞ்சி கொஞ்சி -வீரா -1994
    37BeatVeeraKonjiKonji.mp3

    அந்திமழை - ராஜபார்வை -1981
    39BeatAnthimazhai.mp3

    குழலூதும் கண்ணனுக்கு - மெல்லத் திறந்தது கதவு-1986
    40BeatKulaloothumKannanukku.mp3

    பாட்டுத்தலைவன் - இதயக்கோவில்-1985
    41BeatIdhayaKoil-PaatuThalai.mp3

    கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே-1991
    43Beatkalakalakum.mp3

    கஸ்தூரி மானே - புதுமைப்பெண்-1984
    44BeatKasthuriMane.mp3

    ஒரு ராகம் பாடலோடு - ஆனந்தராகம்-1982
    ஆரம்பத் தாளத்தில் உணர்ச்சிகள் அபாரம்

    45BeatOruragamPaadaloda.mp3

    ஓ மானே மானே - வெள்ளைரோஜா-1983
    46BeatOhManeMane.mp3

    சிறிய பறவை சிறகை - அந்த ஒரு நிமிடம்-1985
    0.17-0.32 இடையில் தாளம்  மற்றும் இதர நாதங்களுக்கிடையே நடக்கும் உரையாடல் stunning!

    47BeatSiriyaparavai.mp3

    பொன்மேனி உருகுதே -மூன்றாம் பிறை-1982
    BeatPonmeni.mp3

    ஆனந்த ராகம் - பன்னீர் புஷ்பங்கள் - 1981
    ராஜாவின் மாஸ்டர் பீஸ்.அருமையான தபலா.1.00-1.15 பாட்டின் வேகம் சற்று கூட தபலாவின் தாளம் மாறுகிறது. சுருதி மாற லயமும் மாறுகிறது.எல்லாம் ஒரு கணக்குதான்.
    BeatPannerPushAnantha raa.mp3

    ராதா அழைக்கிறாள் - தெற்கத்திக் கள்ளன் -1988
    இதில் வெஸ்டர்ன் மற்றும் இந்திய தாளகட்டுக்கள் மாறி வருகிறது.

    BeatRadha AzhaiTherkkathiKallan.mp3

    பழமுதிர்சோலையிலே-வருஷம் 16 -1989
    BeatPazhamudhir.mp3

    தை பொங்கல் -மகா நதி -1993
    BeatMahanathi-Thai ponga.mp3

    காதல் கசக்குதுய்யா-ஆண்பாவம் -1985
    BeatKadhal KasakkuthaiyaAan Paavam.mp3

    ஆயிரம் தாமரை மொட்டுக்களே
    BeatAayiramThama.mp3

    பாட்டுக்கள் “பழசு” ஆகிவிட்டது உண்மைதான்.ஆனால் அதன் soulful தாக்கம் எப்போதும் உண்டு.

    .

    பி.ஏ.எகானமிக்ஸ்ஸும் Bus Dayயும்

    ”இவனுங்க பி.ஏ.எகானமிக்ஸ் இல்லேன்னா பி.ஏ.ஹிஸ்ட்ரி படிக்கிற வெட்டிப்பசங்க.அதான் பொறுப்பே இல்லாம பஸ் டேன்ற பேர்ல பொறுக்கித்தனம் பண்றாங்க” என்று படித்த பொதுமக்கள் அந்தக் காலத்தில் எரிச்சலடிப்பார்கள்.

    பி.ஏ.எகா அண்ட் ஹிஸ் மாணவர்கள் கையில் சின்ன நோட்புக் வசதியாக பஸ்ஸில் தொங்குவதற்கு.இப்படித்தான் கல்லூரிக்கு வருவார்கள்.படித்து முடித்ததும் கிளார்க் வேலைக்கு போக வசதி.

    மருத்துவமோ பொறியியலோ அல்லது மேற்ப்படிப்பு படிப்பவர்கள் சற்றுப் பொறுப்பாக நடந்துக்கொள்வார்கள் என்று ஒரு நம்பிக்கை. அப்படித்தான் இருந்தது அப்போது.
    சென்னையில் இருக்கும் மூன்று கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு பெண் கொடுக்கவே பயப்படுவார்கள் அப்போது.

    நடத்துனர்/ஓட்டுனர்- மாணவர்கள் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது இது.ஆனால் தலையில் கர்சீப் கட்டி பஸ்ஸின் தலையில் ஏறி விசிலடித்து,ஆணுறையை பலூன் போல் ஊதி பறக்கவிட்டு,லேட்டஸ்ட் குத்துப்பாடலைப் பாடியபடி,உலகத்திலுள்ள எல்லா சேனல்களிலும் தன் முக தெரியவேண்டும் ,பொதுமக்களுக்கு தொந்திரவு கொடுப்பது என்றாகிவிட்டது. கடைசியில் போலீஸ்-மாணவர் மோதலில் முடிவடையும்.

    பஸ் டே குஸ்ஸூ டே ஆகி நாறுகிறது.

    பல மாணவர்கள் சாமர்த்தியமாக முதலிலேயே நழுவிக்கொண்டு விடுவார்கள்.(கண்ணால் பார்த்தேன்.சினிமா தியேட்டரில்)அடிப்படையில் இவர்களுக்கு ரவுடித்தனம் அருவருப்பாக இருக்கிறது.

    இப்போது இந்த இழவை நிறுத்தப்போவது மகா சந்தோஷம்.அடைப்படையில் சென்னையில் உள்ள சில கல்லூரிகளை சீர்திருத்த வேண்டும்.அதில் வழங்கப்படும் பட்டப் படிப்புக்களும் மாற வேண்டும்.


    Wednesday, February 23, 2011

    உதிர்ந்த இலையும் பஞ்சபூதங்களும்


    உதிர்ந்த இலையும் பஞ்சபூதங்களும்
    பெயர் தெரியாத பறவை ஒன்று
    கிளையை விட்டு
    ரகசியமாய் ஒரு இலை உதிர்த்து
    விருட்டென்று பறக்கையில்
    சிறகின் படபடப்பில்
    பஞ்சபூதம் விழித்தெழுந்து
    ரெளத்ரம் கொள்கிறது

    சாட்சியான நான்
    பெயர் தெரிந்தப் பறவையை
    பெயர் தெரியாதப் பறவை என்று
    கவிதையின் முதல் வரியில்
    மாற்றி எழுதி தப்பித்து விடுகிறேன்
    ___________________________

    பட்டர்ஃப்ளை எஃப்க்ட் அல்லது கேயாஸ் தியரி
    ஒரு ஒழுங்கில்லாத
    புற நகர் மொட்டை மாடியும்
    நடு வானத்தில்  'V" வடிவத்தில்
    பறக்கும் பறவைகளும்
    ஒரு குழந்தையின் அழுகையும்
    தேவைப்படுகிறது
    எப்பவோ மறந்துப் போன
    ஒரு பாட்டின் முதல் அடியை
    பிடிப்பதற்கு

    Tuesday, February 22, 2011

    நடுநிசி நாய்கள் படமும் உண்மைத்தமிழனும்

    பதிவர் உண்மைத்தமிழன் அவர்கள் “நடுநிசி நாய்கள்” படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று தன் பதிவில் எழுதியதை படித்தேன்.அதில் சொல்லப்படும் விஷயத்தை இப்படி வெளிச்சம் போட்டுக்காட்ட அவசியமில்லை என்பது அவர் வாதம்.இவர் சிபாரிசு செய்யும் “சிறுத்தை”ப் படமும் மறைமுகமான ஆபாசக் காட்சிகள் இருக்கும்.

    இது தணிக்கை அதிகாரிகளால் தணிக்கைச் செய்யப்பட்டு  ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.முதலில் சான்றிதழ் காட்டும்போது யசேச்சையாக இரண்டு பெயர்களைப் பார்த்தேன்.புஷ்பா கந்தசாமி மற்றும் நிர்மலா பெரியசாமி. மற்ற உறுப்பினர் பெயர்களைப் பார்க்க முடியவில்லை.

    புஷ்பா கந்தசாமி இயக்குனர் பாலச்சந்தரின் மகள்.

    இதைப் பற்றி எதிர்வாதமோ அல்லது நேர்வாதமோ செய்ய அல்ல இந்தப் பதிவு.மேலும் இப்போது இருக்கும் தலைமுறை விவரமாகத்தான் இருக்கிறார்கள்.ரத்தசம்பந்த “ஏ” ஜோக்குகளிலும் கக்கூஸ் சுவர்களில் பச்சைப் பச்சையாக  கிறுக்கப்படும் வாசகங்களும் சினிமாவில் முழு
    (மறைமுகம்)முகமாகவே தூண்டப்படும் பாலியில் காட்சிகளுக்கு இது  பெட்டர்.

    ”எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பாத்துட வேண்டியதுதான்” என்று ஒரு  நினைப்பும் அடுத்து ”உண்மைத்தமிழன் சாருக்கு விவரம் பத்தலயோ”என்ற எண்ணமும் வந்தது. சார்.. கோச்சுக்காதீங்க!

    சரி எவ்வளவு பாத்தோம்?எவ்வளவு அதிர்ச்சிகளை கடந்து “நடுநிசி நாய்”களுக்கு வந்திருக்கிறேன்.

    இப்போதுப் பரவாயில்லை 70/80 களில் படங்களில் பாலியல் வக்கிர காட்சிகள் ஏராளம். crude sex!மனம் திரியத்தான் செய்தது.பாலியல் விஷயங்கள் ஆரோக்கியமான முறையில் சொல்லப்படவில்லை.

    அப்போது சரோஜாதேவி/கொய்யா/கொக்கரக்கோ/சிட்டுக்குருவி/வாலிபம் போன்ற ஆபாச புக்குகள். இப்போது நெட்.இப்போது ஆபாச நெட்வொர்க்கின் எல்லை விரிந்துவிட்டது.

    Puffed up breast is more obscene than bare breast என்று ஒரு சொலவடை உண்டு.

    இதை லூசாக மொழிப்பெயர்த்தால்.....

    ”பிரா போட்டு பில்ட் அப் கொடுத்துக்காட்டப்படும் மார்பகத்தை விட வெறும் மார்பகம் ஆபாசம் இல்லை”.


    (”என்னை விட்டால்” படம்: நாளை நமதே. இதன் இந்தி வெர்ஷன் “ஓ மேரி சோனி” யில்  ஆபாசம் கிடையாது)

    இதற்காகவே இந்தப் படத்தை இரண்டாம் முறைப் பார்ப்போம்.இதே உணர்வில் “நடுநிசி நாய்களை” எவ்வளவு இளைஞர்கள் இரண்டாம் முறை பார்ப்பார்கள்?

    இது  யூ டூப்பில் 347508 முறைப் பார்க்கப்பட்டுள்ளது.

    இவரின் சிஷ்யர் பாக்கியராஜ் 16 அடி பாய்ந்தார்.

    (லேட்டஸ்ட்!மறைமுகமாக பாலியல் உணர்வைத் தூண்டும்  காட்சி)

    மேலும் சில “எவ்வளவோ பாத்துட்டோம்”

    ”அசோக்குமார்” (1941)என்ற திரைப்படம் சிற்றன்னை தன் மகன் மேல் காமுறுவது போல் ஒரு கதை அமைப்பு. பாகவதர் நடித்தப் படம்.கேள்விப்பட்டது.

    அபூவர்வ ராகங்கள் படம் சற்றுப் பிரச்சனையானது.பொருந்தக் காமம்.

    தப்புத்தாளங்கள் படத்தில் கர்ப்பிணியை வன்புணர்ச்சி செய்யும் காட்சியும் பிரச்சனையானது.

    தமிழ்ப்படத்தில் வில்லிகள் தம்/தண்ணி அடிக்கும் காட்சிகள்.பயங்கர அதிர்ச்சி அப்போது.

    மறுபிறவி என்ற படமும் விவாதத்திற்குள்ளானது.மனைவியை நெருங்கும்போது கணவனுக்கு அம்மா ஞாபகம் வந்து விலகுவான்.

    நான் கல்லூரியில்  படிக்கும்போது ஒருவன்  அவன் குடும்பத்தில் ரத்த சம்பந்தப்பட்ட உறவு சகஜம் என்று சொன்னான்.முதல் மகா அதிர்ச்சி! அவன் சொன்ன பதில் “skin to skin no sin". இது மகா மகா அதிர்ச்சி.

    ஆபாசமான ரேப்பிங் சீன்  படங்கள்:

    1.வசந்த மாளிகை 2.தோரஹா3.வரவேற்பு4.உலகம் சுற்றும் வாலிபன்5.தப்புத்தாளங்கள்.

    அப்போதைய தூரதர்ஷனில் ஆபாசக் காட்சி வந்தால் கருப்பாக்கி விடுவார்கள்.

    காயத்ரீ படத்தில் மனைவியை வைத்து நீலப் படம் எடுப்பது.

    16 படத்தில் ஸ்ரீதேவி ஆற்றில் நடந்து வருவது.

    அடுத்தவன் பெண்டாட்டியை காமுறும் படங்கள் அப்போது நிறைய வரும்.

    பலாத்காரம் செய்ய நெருங்கும்போதுகதாநாயகி வசனம்” என்ன உட்ருங்க.. நா உங்க தங்கச்சி மாதிரி”

    பலாத்காரம் செய்பவர்(ராதாரவி? படம் புலன் விசாரனை?):”தங்கச்சின்னு சொன்னதுனால... இப்பவே உன்ன...”

    கிராமப் படங்களில் பாவாடைக் கதாநாயகிக்கு உள்ளங்காலில் முள் குத்தும். கதா நாயகன் பாவாடையைத் தூக்கி முட்டித் தெரியும் வரை காலை மடியில் போட்டுக்கொண்டுதான் முள் எடுப்பார். வெள்ளை உடை அணிந்தால் மழை நிச்சியம் பெய்யும்.ஆற்றில் குளிப்பதை வேடிக்கைப் பார்க்கும் காட்சிகள்.குளம் கிணற்றில் அடிக்கடி பெண்கள் விழுவார்கள். எதற்கு? விழும் பெண்களை வயிற்றை அமுக்கி தண்ணீர் எடுக்கத்தான்.

    பேனர்:
    வரிசையாகத் தொங்கும் பிராக்கள் நடுவே கமல் சேரில் உட்கார்ந்திருப்பார். இது சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான மவுண்ட்ரோட்டில் பேனர். பின்னால் அகற்றப்பட்டது. இதே மாதிரி “பகலில் ஒரு இரவு” ஸ்ரீதேவி ஸ்கர்ட் போட்டு நிற்கும் கட் அவுட்.காற்றில் எப்போது ஸ்கர்ட் அலையும் என்று சஸ்பென்சோடுக் காத்திருப்பார்கள் ரசிகர்கள்.

    பாடல்கள்:
    1.”இடைவிட்ட பூவினால் கடை விரித்துக்காட்டுவேன்”(படம்:வசந்த மாளிகை-பாடல்:”குடி மகனே”)”எதுவரை போகுமோ அதுவரைப் போகலாம்”
    2.”நேத்து ராத்திரி யம்மா” (சகலகலா வல்லவன்) பாட்டில் வரும் ஓசைகள்
    3.நிறைய காம முக்கல் முணகல் பாடல்கள் அதிகம் அப்போது.
    4.”எடுத்துப் பாத்த பயங்களிலே இம்மா சைசுப் பாத்தியா... கைக்கு அடக்கமா ..கடிச்சுப்பாக்க வாட்டமா...(”இலந்தபயம்” படம்: பணமா பாசமா)

    கதைகள்:
    1.ரிஷி மூலம் - ஜெயகாந்தன்
    2.சாளரம் -ஜெயகாந்தன்
    3.எல்டொரேடோ (El Dorado) -சுஜாதா
    4.புஷ்பா தங்கதுரை கதைகள்

    (முதல் மூன்றும் ஆபாசம் இல்லை.ஆனால் கரு விவகாரமானது)

    குமுதத்தின் நடுப்பக்க படங்கள் மற்றும் சினிமா.ஓவியர் ஜெ யின் கவர்ச்சிப் படங்கள்.சகட்டுமேனிக்கு வரைவார். துர்வாசர் என்பவர் துக்ளக்கில் பத்திரிக்கை ஆபாசங்களைப் போட்டுத் தாக்குவார்.மாட்டிக்கொண்ட எழுத்தாளர் ஹேமா ஆனந்ததீர்த்தன் என்பவர் இவருடன் விவாதம்  செய்வார்.

    அப்போதைய ஆபாச மலையாள (மாமனாரின் காம வெறி)(பாவாடை இல்லாத கிராமத்திலே)மற்றும் டப்பிங் தமிழ்ப்பட போஸ்டர்களை கிழிக்கச் சொல்லி அடிக்கடி குரல் வரும் பெண்களிடமிருந்து.

    நினைத்தால் குமட்டுகிறது. நடுநிசி நாய்களில் ஒரு அப்பா.ஆனால் 70/80களில் பல பேரால் வூடு கட்டி ஆபாசத்தால் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருக்கிறோம்.
    கெட்ட கனவாக நினைத்து கடந்து வந்துவிட்டோம்.

    இப்போது என்ன வாழ்கிறது?

    நடுநிசி நாய்கள் விமர்சனம்

    Monday, February 21, 2011

    நடுநிசி நாய்கள் - சினிமா விமர்சனம்

    சஸ்பென்ஸ் த்ரில்லர்களில் எனக்குத் தெரிந்து  இரண்டு வகை உண்டு.

    ஒன்று மர்மமான சம்பவங்களை விறுவிறுப்பாகக் காட்டி முடிவில் ஏன்?எதற்கு?எப்படி? என்று முடிச்சை அவிழ்ப்பார்கள். இரண்டு ஏன்?எதற்கு?எப்படி? என்று முடிச்சை முதலிலேயே அவிழ்த்துவிட்டு அதன் சம்பவங்களை விறுவிறுப்பாக சொல்லிக் கடைசியில் முடிப்பார்கள். மூன்று இரண்டும் கலந்தவாறு சொல்லுவார்கள்.இது ரொம்ப அபூர்வம்.
    ( ஸ்வப்னா ஆபிரகம்(பக்கத்து வீட்டு பெண்மணி).கவிதை எழுதுவாராம்.பெரிய பாடகர்.எம்பிஏ பட்டதாரியாம்.)

    கெளதம் இரண்டாவது வகையை தேர்ந்தெடுத்துள்ளார்.நடுநிசி நாயகள் தலைப்பு மட்டும் திகிலாக இருக்கிறது.தன்னுடைய கடைசி victimஐ ஒரு இரவில் வேட்டையாடுவதுதான் கதை.

    ஆனால் ஒரு தாக்கமும் இல்லை.மேக்கிங் பளபளவென்று இருக்கிறது.ஆனால் ஒன்ற முடியவில்லை.பல படங்களில் இதைப்போல் பார்த்தாயிற்று.அந்நியன்,ஆளவந்தான்,
    யுத்தம்செய்.மொட்டை அல்லது தலை முடியை விரித்துப்போட்டுக்கொண்டு உறுமுதல்.சைக்கோ/விசிட்டிங் அவர்ஸ் மற்றும் பல.

    இப்போதுதான் யுத்தம் செய் பார்த்த சீட்டின் சூடு ஆறவில்லை.அதை டைப்பில் இன்னும் ஒரு திரைப்படம்.அடுத்தது என்ன என்ற ஒரு பரபரப்பு இல்லாததால் த்ரில் இல்லை.திரைக்கதையில் ”மீனாட்சி அம்மா” தீடிரென்று “பக்கத்து வீட்டு ஆன்ட்டி”ஆவது பெரிய சறுக்கல்.அவனின் சுகன்யாவின் மேல் காதலும் சரியாகக் காட்டப்படவில்லை.

    இவன்தான் பக்கத்து வீட்டு ஆன்டியாகவும் சமராகவும் இரண்டு மனம் பிழ்ற்ந்த ஆளுமையாக (split personality) முதலிலேயே காட்டி இருக்கலாம்.முதல் கொலை அவள் செய்வதாகத்தான் காட்டப்படுகிறது.

    கதைக் கரு?இது சிகப்பு ரோஜாக்களின் வேறு வடிவம்தான்.ஆனால் அது வந்த காலம் வேறு.1978 கிட்டத்தட்ட 32 வருடம் ஆகிவிட்டது.அப்போது அது வித்தியாசம்.எடுக்கப்பட்ட விதமும் அருமை.

    சிறுவயதில் தன் தந்தையாலேயே பாலியல் தொந்தரவிற்கு ஆளாகி அதன் நினைவுகளால் மனம் பிழ்ற்ந்து பிற்காலத்தில் தவறான காம அணுகுமுறைக்கு அலையும் இளைஞனின் கதைதான் கரு.

    சிறுவயதில் தவறான அனுபவங்களினால் “மனம் திரிந்து”
    அதனால் எதிர்மறை காரியங்களை செய்யும் கருக்கள்
    இயக்குனர்களுக்கு லட்டு மாதிரி.அதில்தான்
    வன்முறையையும் பாலியில் காட்சிகளை அழகுப்படுத்திக்காட்டலாம்.

    அவன் மருத்துவத்திற்கோ அல்லது இந்திய ஆணைப் பணிக்கு படித்து பாஸ் பண்ணுவது மாதிரி காட்டுவதில்லை.காட்டினால் தியேட்டரில் ஈ அடிக்கும்.

    படத்தில் ஹிரோவாக நடித்திருக்கும் வீரா நன்றாக செய்திருக்கிறார்.கள்ள  விழி விழித்துக்கொண்டு “பீலா” விடும் இடங்கள் அருமை.(சிகப்பு ரோஜாக்கள் கடைசிக்காட்சி கமல் போலவே தோற்றம்).அவருடைய உடல் மொழியும் ஒத்துவருகிறது.சமீரா ரெட்டி ஒகே.மீனாட்சி அம்மாவாக வரும் ஸ்வப்னா ஆபிரகம் உணர்ந்து நடித்திருக்கிறார்.

    டெயில் பீஸ்-1:
    முதலில் காட்டப்படும் தணிக்கைச் சான்றிதழில் ஏதேச்சையாக இரண்டு உறுப்பினர்கள் பெயர் கண்ணில் பட்டது. 1.நிர்மலா பெரியசாமி 2.புஷ்பகந்தசாமி.

    டெயில் பீஸ்-1: 
    நான் படம் பார்க்கும்  வழக்கமான தியேட்டரில் நாகரிகமானவர்கள் வருவார்கள். அமைதியாக படம் பார்ப்பார்கள்.இந்த முறை இரண்டு “நடுநி”ச்சீ” நாய்கள்” ஆபாசமாக  குரைத்து எல்லோரையும் நெளிய வைத்தது.தனியாக படம் பார்த்த எனக்கே அருவருப்பாக இருந்தது.



    Sunday, February 20, 2011

    எஸ்கலேட்டர்


    தனக்கு முன்னமே சித்தார்த் வந்து காத்திருந்தது சந்தோஷமாக இருந்தது ஜன்யாவுக்கு.எஸ்கலேட்டர் முன்  புன்னகைத்தபடி ஸ்டைலாக நின்றிருந்தான்.நிச்சியதார்தத்தில் பார்த்த முகம் இல்லை.வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருந்தான்.தன் உடை அவனுடன் மாட்ச் ஆகிறதா என்று தன்னை ஒரு முறை முன்னும் பின்னும் வேகமாக ஸ்கேன் செய்துவிட்டு புன்னகைத்தப்படியே அவனை நெருங்கினாள்.

    எஸ்கலேட்டர் முன் பயந்தபடி நின்றாள் ஜன்யா.சித்தார்த் அவளின் இடது கையைச் சட்டென்றுப் பிணைத்து இருவரும் ஒரே சமயத்தில் கால் வைத்ததும் மெதுவாக ஒரு படி முளைத்து நகர ஆரம்பித்ததும் அவளுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

    பயம் எங்கேப் போயிற்று என்று தெரியவில்லை.

    சித்தார்த் முதல் முறையாக கைப்பிடிக்கிறான்.சிலிர்ப்பிற்கு உண்மையான காரணம் கைப்பிடித்த அடுத்த நிமிடம் ஜோடியாக எஸ்கலேட்டரில் மிதக்க ஆரம்பித்தது.

    ஊர்ந்துக்கொண்டிருக்கும் ரொமாண்டிக் தருணம் ரொம்பப் பிடித்திருந்தது.பாதுகாப்பாக உணர்ந்தாள்.Janya weds Siddarth என்று எஸ்கலேட்டர் சொல்லியபடி தேர் ஊர ஆரம்பித்த மாதிரி கூட இருந்தது.மேலே சென்று சேரும் வரும் ஜன்யாவும் சித்தார்த் மட்டும்தான் அதில் ஊர்ந்தார்கள்.இதுவும் ஒரு காரணம்.

    இன்னும் திருமணத்திற்கு நான்கு மாதம் இருந்தது.இது ஜன்யாவிற்கு மலைப்பாக இருந்தாலும் எஸ்கலேட்டரில் இந்தப் பக்கம் ஏறி அந்தப் பக்கம் இறங்குவதற்குள் ஓடிவிடும் என்று  இறங்கியவுடன் மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

    கைப்பிடித்தப்படியே அடுத்தப் பக்கம் இறங்கினார்கள்.அப்படியே மாலில் சில கடைகளை பராக்குப் பார்த்தப்படி  நடந்தார்கள்.

    ”இந்தா உனக்காக வாஙகின கிப்ட்”

    ஜன்யா மிதப்பிலிருந்து இறங்கி” என்ன சித்தார்த்?.”.

    ”இன்னும் பயம் போகலயா?” அவள் மணிகட்டை வலுவாகப்பிடித்து பிரேஸ்லெட்டை பரிசாக அணிவித்தான். ”வா இன்னும் பத்து தடவை ஏறி இறங்கலாம்” அவளை இழுத்தான்.

    ”அய்யோ வேணாம்...” வெட்கத்தோடு சிரித்தப்படி கையை உதறினாள்.

    மீண்டும் சிரித்தப்படியே தன்னிச்சையாக கைக்கோர்த்தப்படி வழுவழு தரையில் நடக்க ஆரம்பித்தார்கள்.பிரேஸ்லெட் உறுத்தல் இருவரின் கவனத்திலும் அட்டைப்போல் ஒட்டியபடியே வந்தது.

    மால் முழுவதும் சுற்றினார்கள்.எதைஎதையோ எல்லாம் குடித்தார்கள்.ஐஸ் கீரிம் சப்பியபடியே நடந்தார்கள். எதையோச் சாப்பிட்டார்கள்.காதலாக பேசினார்கள்.எதைஎதையோ வாங்கினார்கள்.ஆளுக்கொரு பளபளவென்ற பிளாஸ்டிக் பைகளை பிடித்தப்படி வீட்டிற்குப் புறப்பட்டார்கள். எஸ்கலேட்டர் முன் நின்றார்கள்.சித்தார்த் தள்ளி நின்று கொண்டான். 

    ”நீ போ முதல்ல” 

    ஜன்யா வாயை மூடி கண்களை இடுக்கிச் சிரித்தப்படி அவனைப் பார்த்தாள்.பொய் கோபத்தை உணர்ந்த சித்தார்த்அவளின் பைகளை வாங்கிக்கொண்டு தன் இடதுகையால் அவள் கையைப் பிணைத்து இருவரும் ஒன்றாக கால் வைத்து நிற்க படி ஒன்று முளைத்து அவள்  மீண்டும் மிதக்க ஆரம்பித்தாள்.

    சித்தார்த் பிணைத்திருந்த கையை உருவிக்கொண்டான்.ஜன்யாவும் அதைத்தான எதிர்பார்த்தாள்.இந்தப்பக்கம் ஏறி அந்தப்பக்கம் போவதற்குள்திருமணம் முறிந்துவிட்டது.எதுவும் ஒத்துப்போகவில்லை.சமரச ஏற்பாட்டின்படி பேசிப் பிரிந்தார்கள்.

    ஜன்யா நினைவு கலைந்து சகஜ நிலைக்கு வந்தாள்.அதே மால்.

    ஜன்யா எஸ்கலேட்டரின் இடதுப் பக்கமும் தன் புத்தம் புதுக் கணவன் சத்ய நாராயணன் வலதுப் பக்கமும் கால் வைக்க ஒரு படி முளைத்து இருவரும் ஊர்ந்தபடி  மேல் நோக்கிச் சென்றார்கள்.

    முற்றும்
    .

    Thursday, February 17, 2011

    கடைசியாக followerதான் கதவைத் திறந்தார்

    யாருமில்லாத வீட்டில் அழைப்பு மணி அடித்தது.

    குரூப் போட்டோவில் இருந்தக் குட்டிப்பையன் வினு விருட்டென்று கெளரியின் மடியில் இருந்து எழுந்துநான் தொறக்கரேம்மாஎன்றான்.கெளரி அவனை அதட்டி மடியில்அழுத்தமாக இருத்திநாம தொறக்கக்கூடாது.தப்பா ஆயிடும்”. அவனை முந்தி இருந்த போஸிலேயே சரி செய்து அவளும் போஸ் கொடுத்தாள்.

    அப்பா (கணவன்) எதுவும் காதில் வாங்காமல் போட்டோ ஸ்டியோவில் இருந்தவாரே இருந்தான்.போட்டோ எடுத்த அன்று கூட எடுத்து முடித்து மூன்று நிமிடம் கழித்துதான் அசைந்தான். 

    மீண்டும் அழைப்பு மணி அடித்தது.

    போன தடவை போகாத இடங்களுக்கெல்லாம் இந்தத் தடவை ஒலி அலைகள் சற்று முக்கியவாறு தொடமுயற்ச்சித்தன.அது கபடியில் ஏறு குந்தம் தொடும் முயற்ச்சியை ஒத்து இருந்தது. இந்த தடவை கிச்சனில் கிரைண்டர்,மிக்ஸி,பப்புள் டாப்,குத்துவிளக்கு இத்யாதிகளைத் தொட்டுவிட்ட்து சந்தோஷம்தான்.(ஆனால் ஒன்றும் பயனில்லை)

    இன்னோரு போட்டோவில் இருந்த கவிதாவால் ஒன்றும்
    செய்ய முடியாது.அவள் கேன்சரில் இறந்துவிட்டாள்.அவள் வந்து திறந்தாலும் அது அவ்வளவு நன்றாக இருக்காது.மேலும் பயந்துத்தொலைப்பார்கள்.பிரிஜ்ஜின் மேல் இருக்கும் ஜெலுசில் பாட்டில் சற்று குனிந்துப் பார்த்தால் சாவித்துவாரம் தெரியும்.ஆனால் அது அசதியில் இருந்தது.கடியார முட்களும் கண்ணாடியை விட்டு வெளிவரவில்லை.

    சாவிக்கொத்துகளும் கண்டுக்கொள்ளவில்லை.திறந்தால் வம்பாகிவிடும்.

    இரண்டு மின் விசிறிகளும் ஏதோ உடற்பயிற்ச்சி செய்வது மாதிரி தொங்கிக்கொண்டிருந்தது. தாங்கள் ஸ்விட்ச் கண்ட்ரோலில் இருப்பதாக அடிக்கடிச் சொல்லிக்கொள்ளும்.மற்றவைகளும் கண்டுக்கொள்ளவில்லை.செல்போனும் யாருக்காவது குறுஞ்செய்தி அனுப்பித் திறக்கச் செய்யலாம். மாட்டேன் என்றது.

    அழைப்பவர்களுக்கு இந்த வீட்டைப்பற்றித் தெரியும்.இவர்கள் சற்று அசமஞ்சமானவர்கள்.எதையுமே சற்றென்று செய்யமாட்டார்கள்.அதே போல்தான் இதுகளும்.திருத்த முடியாது.இதே காரணத்தால் அழைப்பவர்களும் அழைத்துக்கொண்டே இருப்பார்கள்.லேட்டாக இருந்தாலும் வந்துவிடுவார்கள் என்று.

    அழைப்பு மணிக்கு மூன்று மெட்டுகள் உண்டு.1.”Jingle bell”2.”Twinkle twinkle little star”.. 3.”Mary sheep”  என்று வரிசையாக வரும்.முதல் மெட்டு வலது சுவர் போட்டோவில் இருக்கும் பத்மாவதி தாயாருக்குப் பிடிக்கும்.அடுத்த இரண்டு அவ்வளவாகப் பிடிக்காது.கேட்டுக்கொண்டே வெங்கடேசப்பெருமாளை எழுப்பினாள்.

    அவர் திறந்தால் பிரயோஜனமில்லை.ஆந்திரா பேங்க் கடன் அட்டை பட்டுவாடா. நம் கையில் தரமாட்டார்கள்.சரி வேறு யாராக இருந்தாலும் திறந்தவுடன் நீங்கள் யார்என்று அழைத்தவர் கேட்டால் வெங்கடேசப்பெருமாள் என்று சொல்லவா முடியும்.ஒரு மாதிரி ஆகிவிடுவார்கள்"என்றார்.

    இருவரும் பழையபடி தம்பதி சமேதராய் போட்டோவில் போஸ்கொடுத்தார்கள்.

    ”Jingle bellமூன்றாவது தடவை மணி ஒலித்தது.இந்த முறை ஒலிகள் தம் பிடித்து எல்லா இடங்களுக்கும் கன்னபின்னாவென்று பரவியது.

    பொறுமை இழந்தார்கள் 197 பாலோயர்கள்.கூடிப்பேசினார்கள்.வெளி ஊரில் இருப்பவர்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிக அருகில் இருக்கும் ஒரு பாலோயர் திறப்பதாக முடிவாயிற்று.


    (இடையில்  இன்னோரு தடவை அழைப்பு மணி அடிக்கப்பட்டது)

    அருகில் இருக்கும் பாலோயர் ஒப்புக்கொண்டுத் திறந்தார்.

    ஏன் இவ்வளவு லேட்டா தொறந்தீங்கஎன்று செருப்பு அலமாரியில் செருப்பை விட்டு திரும்பி வெங்கடேசப் பெருமாளைப் பார்த்து புத்தி போட்டுக்கொண்டு கேட்டார் இந்தக்கதைச்சொல்லி.

    Monday, February 14, 2011

    யுத்தம் செய் -விமர்சனம்

    பல சந்தர்ப்பங்களில் நம் முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்க திராணி இல்லாமல்”இவனுங்களை எல்லாம் நிக்க வச்சு சுடனும்” என்று மனதிற்குள்ளேயே பல்லைக் கடித்துக்கொண்டு நிழல் யுத்தம் நடத்தி வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்.
    (அமைதியாக இருக்கும் இந்த இடத்தை அடுத்த சில நிமிடத்தில் ஜேஜேவென கூட்டம் காட்டுவது அருமை)

    ”யுத்தம் செய்” படத்தில் ”ஒரு குரூப்” தனக்கு நேர்ந்த அநியாயத்தைக்கண்டு மனம் திரிந்து பின் அதற்கு எதிராக ஒரு அர்ஜெண்ட் ரெளத்திரம் பழகி  பின்னால் ஸ்கெட்ச் போட்டு கொரில்லா யுத்தம் செய்கிறார்கள்.யுத்தம் செய்யும் போது  யாரிடமும் மாட்டாதபடி SOP,Six Sigma,Kaizen, why why analysis கடைப்பிடித்து யுத்ததில் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

    ஏற்கனவே இது மாதிரி ஒரு தாத்தாவும் (இந்தியன்),இன்னொரு தாத்தவும்(ஒரு கைதியின் டைரி) மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் கதாநாயகர்கள் தங்கள் நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கினார்கள்.

    என்ன அநியாயம்? காமவெறி பிடித்த வக்கிர(voyeuristic) மூத்த குடிமகன்கள் நேரலை செக்ஸ் காட்சிகளுக்காக நகரத்தில் பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.கொலை செய்யப்படுகிறார்கள்.இதை ரெளடிகளும், தீய ஆட்டோ டிரைவர்களும்,போலீஸ் கருப்பு ஆடுகளும் கூட்டணிப் போட்டு செய்கிறார்கள்.பணம் புரளுகிறது.

    சிபிஐ சிஐடி அதிகாரியான சேரனின் தங்கையும் கடத்தப்படுகிறார். தன் சொந்த வேலையாகவும் அரசு வேலையாகவும் இதை எடுத்துக்கொண்டு சேரன்
    துஷ்டர்களை கண்டுப்பிடிப்பதுதான்  கதை.இவரும் இந்த வளையத்திற்குள் நல்லவன் கம் கெட்டவன் என பயணிக்கிறார்.

    டைரக்டர் மிஷ்கின் கதையைச் சுவராசியமாகச் சொல்லி இருக்கிறார்.படம் கிரைம் த்ரில்லர் என்றாலும் ஒரு horror படத்திற்குண்டான திகிலும் கலந்திருக்கிறது.பாராட்ட வேண்டிய விஷயம்.பல காட்சிகள் அசத்துகிறது.
    முக்கியமாக கடைசிக் காட்சிகள் அருமை.

    ஆபாசம் காட்ட வாய்ப்பு இருந்தும் காட்டாமல் விட்டதற்கு பாராட்டியே ஆக வேண்டும்.

    மிஷ்கினின் காட்சி ஊடக மொழி வித்தியாசமாக இருக்கும்.இதன் குறிகோள் என்ன?காட்சியின் ஆழமும் உயிர்துடிப்பும்  பார்வையாளனை ஒன்ற வைத்து வசனத்திற்கு வேலை இல்லாமல் காட்சியை நகர்த்துவதுதான். காட்சியின் ஒவ்வொரு துளியும் பார்வையாளனைப் பாதிக்கவேண்டும்.


    இந்தப் படத்தில் இவரின்  காமிரா  மொழி சற்று ஓவராகி ஓட்டம் மெதுவாகிறது.கிரைம் த்ரில்லார் படத்துக்கு வேண்டிய விறுவிறுப்பு முன் பாதியில் இல்லை. பஸ் பயணத்தில் அங்குங்கு சாப்பாட்டுக்கு நிறுத்துவது போல் இவர் கேமராவை காட்சிகளில் காமிராவை நிறுத்தி நிறுத்தி ”பிலிம்”
    காட்டுகிறார்.காட்சியின் ஆழம்தான்(நடுநிசியில் அசோக் நகர் காவல் நிலையம் ) காமிராவின் போக்கிலேயே உறைக்கிறதே. இப்படி நிறுத்துவது படத்திற்கு என்ன மதிப்பு கூட்டுகிறது என்று தெரியவில்லை.

    (தன் ரூமில் இறைந்துக்கிடக்கும் புத்தகங்களில் நடுவில் உட்கார்ந்திருக்கும் காட்சி,எட்டுகால் பூச்சி காட்சி,மற்றும் வேறுஒரு காட்சி, காட்சியின் தீவிரத்தைக் காட்டாமல் வருடாந்திர காலண்டர் பக்கங்களுக்கான "photoshoot" போல் படுகிறது)

    அதற்குப்பதிலாக முன்பாதியின் கதையை பார்வையாளர்கள் புரிந்துக்கொள்ளும்படி புத்திசாலித்தனமாக நகர்த்தி இருக்கலாம்.பின் பாதி சுறுசுறு விறுவிறு.முடிச்சு அவிழ்ந்து மர்மம் விலகும் காட்சிகள் கலக்கல்.

    படம் எந்த ஒரு தனித்தன்மை இல்லாமல் ஒரு கலவையாக இருக்கிறது.அடிக்கடி யதார்த்தைவிட்டு  தடம்புரண்டு விலகி மீண்டும் சேருகிறது.காமிரா மொழி?இதே மாதிரி கிரைம் த்ரில்லர் ”ஈரம்” படம் எந்தவித பந்தா இல்லாமல் அதில் பார்வையாளர்கள் ஒன்றி சுவராசியமாக காட்சிகள் ஓடியது.இது ஏன் அப்படி இல்லை?

    இம்முறை கையோடு டார்ச் லைட் எடுத்துக்கொண்டுபோய் அடித்துப்பார்த்ததில் குறியீடு ஒன்றும் தெரியவில்லை.

     நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

    பாத்திரங்களுக்குத் தேர்வான எல்லா நடிகர்களும் அருமை. இசக்கியாக வரும் அசோக் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலக்குகிறார்.ஜெயபிரகாஷ்,செல்வா,
    லட்சுமிராமகிருஷ்ணன்,மகேந்திரன்,வில்லன்கள், போலீஸ் ஆபிசர்கள் அருமை.

    சேரனும் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.மிடுக்குக் காட்ட வேண்டிய இடங்களில் ஏன் காட்டமாட்டேன் என்கிறார்.குழப்பமாக இருக்கிறது.

    சேரனின் உதவியாளர்களாக வரும் திபா ஷா,ஷங்கர் இருவரும்தான் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவலில் வரும் பரத்,சுசீலா கணக்காக இருக்கிறார்கள்.

    இசையமைப்பாளர் கிருஷ்ண குமார்.

    இசை கே என்னும் கிருஷ்ண குமார்.முதல் படம். அதுவும்
    கிரைம் த்ரில்லர்.சவாலான வேலை.நன்றாகச் செய்திருக்கிறார். வித்தியாசமாக இருக்கிறது.வாழ்த்துக்கள். ஆனால் சில இடங்களில் காட்சியோடு ஒட்டாமல் அமெட்சூர் நெடி அடிக்கிறது.முதல் காட்சியில் ஏன் வயலினை இந்த உரசு உரசுகிறார்.இது என்ன விதத்தில் இந்தக் காட்சியின் ஆழத்தைக் காட்டுகிறது என்று புரியவில்லை.அதே வயலின் அட்டைப்பெட்டிக் காட்சிகளில் பொருந்தி அசத்துகிறது.

    சேரன் பாலத்தில் போடும் சண்டை, சண்டையா? காமெடியா?யதார்த்தமாகவே இல்லையே.ஜப்பான் படத்தில் இப்படித்தான் போடுவார்களோ?இந்தக் காட்சியின் பின்னணி ராஜாவின் இசையின் இருந்து சுடப்பட்டது?

    சேரன் தன் தொலைந்துப் போன தங்கையின் போட்டோவைக்காட்டி வருத்தத்தோடு ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் பதில் சொல்லாமல் நக்கல் அடிப்பது யதார்த்தமாகவே இல்லையே.இது மாதிரி சில இடங்கள் யதார்த்தைவிட்டு விலகி ஒட்டாமல் நிற்கிறது.

    குற்றம் குறைகள் இருந்தாலும் சுவராசியமான ஒரு கிரைம் த்ரில்லர்.மிஷ்கின் தன்னுடைய உலகத்தரமான காமெரா மொழியை காட்டாமல் அடுத்தப் படத்தில் ”காட்ட” வேண்டும்.

    Sunday, February 13, 2011

    ஹார்ட் அட்டாக் பெஸ்ட்டுப்பா..!

    ”காலா என் காலருகே வாடா...உன்னை  என் காலால் மிதிப்பேன் ” என்று பாரதி சாவை மிரட்டினார்.ஆனால் அறுபதை நெருங்கும் சில மூத்த குடிமகன்கள்  ரொம்ப செலக்டீவாக “ஹார்ட் அட்டாக்கை” பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று அணைத்துக்கொள்ள ஆசைப்படும் பேச்சுகள் நிறைய ரொம்ப வருஷமாக கேட்கிறேன்.(இன்னொரு பக்கம் இதய நோய் சம்பந்தமான விழிப்புணர்ச்சி இதே மூத்த/இளைய குடிமகன்களுக்கு நிறைய வந்துவிட்டது)

    அடுத்து ”சிரிச்சுக்கிட்டே இருக்கும்போது போய்டனும்” அல்லது ”தூக்கத்துல அப்படியே போய்டனும்” என்று ரெடிமேட் சாவு எதிர்பார்த்து மனசிலேயோ வெளிப்படையாகவோ பேசுவதுண்டு. ரொம்ப டீசெண்டான சாவு.உள் காயம் வெளிக்காயம் எதுவும் இல்லாமல்.

    ரொம்ப வருடம் முன்பு ஒரு பெரிய நீதியரசர் ராஜகுமாரி தியேட்டரில் “காசேதான் கடவுளடா” நகைச்சுவைப் படத்தைச் சிரித்தவாறே பார்த்து ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாக படித்ததுண்டு.”கொடுத்து வச்சவண்டா” என்று என் வீட்டு பெரியவர்கள் சொன்னதும் கேட்டதுண்டு.

    சச்சின்  பூஜ்யத்தில் அவுட்டானால் அல்லது கடைசிப்பந்து,அதில் ஒரு ரன் அடித்தால் ஜெயிப்போம் என்ற நிலையில் சில ஹார்ட் அட்டாக வந்து இறந்திருக்கிறார்கள்.இன்னும் நிறைய அதிர்ச்சி ஹார்ட் அட்டாக்குகள்.

    என் பள்ளி வயதில் பக்கத்து வீட்டு  அரசு அலுவலர் ஐம்பது  ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக மாட்டி ஹார்ட் அட்டாக் வந்து இறந்துப்போனார்.ஆனால் 1,75,000 கோடிக்கு ஒன்றும் ஆகவில்லை. நமக்குதான் தொகையைக் கேட்டால் ஹார்ட் அட்டாக் வருகிறது.

    ஏன் ஹார்ட் அட்டாக் பெஸ்ட்?
    •  பெட்ல  பீயும் மூத்திரமா கிடந்து யாரையும் துன்புறுத்தக் கூடாது
    •  தானும்  எந்த நோயாலும் நீண்ட நாள் துன்பப்படக் கூடாது
    •  மனைவிக்கு முன்னால் எஸ்கேப் ஆகிவிட வேண்டும்
    •  மருமகள்,மகன் தொல்லைகள்
    •  நோய்க்குண்டான  எகிறும் செலவுகள்
    •  முதியோர் இல்லத்திற்குப் போகக் கூடாது
    •  கடன் தொல்லை
    •  இன்னும் சில காரணங்கள்

    ஒவ்வொரு முறையும்  மருத்துவமனை சென்று அங்கு இருக்கும் வித விதமான நோயாளிகளைப் பார்த்துத் திரும்பும்போது எனக்குத் தோன்றுவது ”நோயற்ற வாழ்வே குறைவற்றச் செல்வம்”.ஆனால் உப்பும் உறைப்பும் உடலில் இறங்க அது அடுத்த நாள் ஆவியாகிவிடுகிறது.மருத்துவமனை வைராக்கியம்.

    பழிக்குப் பழி வாங்கும் ரவுடிகள் திடீரென்று கண் முன் தோன்றி எதிரியை ரவுண்டு கட்டி துடிக்க துடிக்கப் போட்டுத்தள்ளுவார்கள்.ஆனால் எந்த எதிரியும் போடுவர்களைப் பார்த்து அதிர்ச்சியாகி ஹார்ட் அட்டாக்கில் செத்ததாக கேள்விப்பட்டதில்லை.காரணம் எதிர்பார்த்துதானே?
     
    எனக்கு ஹார்ட் அட்டாக்  எப்போது வரும்?

    எனக்கு உண்மையிலேயே 500 கோடி கூகுள் ஸ்பாம் லாட்டரியில் விழுந்து  நம்ப முடியாமல் திகைத்து   என் மாரைப் பிடித்துக்கொண்டு உதடுகள் துடிக்க,கன்னக் கதுப்புகள் எகிறி, கண் சிமிட்டி,ஒரு கையை மேற்புறம் நீட்டி...ஓ கூகுள்ள்ள்ள்ள்ள்ள்.ஹா ஹா ஹா.....


    "நரகமாக  நான் நினைத்தது... இன்று சொர்க்கமாக மாறிவிட்டது... யாருக்காக..? இது யாருக்காக...?ஜொய்ங் சச்சர... ஜொய்ங் சச்சர...( கோரஸ் வயலின்)

    Wednesday, February 9, 2011

    இளையராஜா- King of Heavenly Hummings-2

    மேஸ்ட்ரோ ஹம்மிங்கை பாட்டின் இடைவெளியை வெத்தாக
    நிரப்புவது(just filling up) போல் அல்லாமல் கலையாக செய்கிறார்.எல்லாவற்றையும் போல இதற்கும் ஒரு
    ஒழுங்கு அணுகுமுறை (structured approach) வைத்திருக்கிறார்.ஹம்மிங்கிற்கும் நோட்ஸ் உண்டு என்று எண்ணுகிறேன்.

    இதை இசைக்கருவியாக பயன்படுத்துகிறார்.ஆச்சரியமான பரிமாணங்கள் கண் முன் விரிகிறது.பல கட்டங்களைத் தாண்டுகிறோம்.

    பெண்களுக்கு 33% அல்லாமல் 92% ஹம்மிங்கில் ஒதுக்கீடு.அவர்கள்தான் 92% ஹம்முகிறார்கள். ஆண்கள் ஜாலியாக ஹம்மிங் மழையில் குளித்தபடி டூயட் பாடுகிறார்கள்.ஆண் ஆதிக்க மனோபாவம்.

    பாரதி ராஜாவின் பாடல்களில்  வெள்ளை உடை தேவதைகள் வந்தப் பிறகு கோரஸ் ஹம்மிங்களின் ஜனத்தொகை அதிகமாயிற்று.
    படம்:”இளமைகாலங்கள்” மோகன் - சசிகலா மற்றும் ”தோழிகள்”

    முந்தைய பதிவு-1ல் குறைவானப் பாடல்களைத்தான் பார்க்க முடிந்தது. இதில் நிறைய பாடல்கள்.எடுக்க எடுக்க அலைஅலையாய் வந்துக்கொண்டே இருக்கிறது.ஒரு பெரிய பிராஜகெட் மாதிரி செய்ய வேண்டி இருக்கிறது.

    இளையராஜா ஹம்மிங் நிகர்நிலை பல்கலைக்கழகமே நடத்தலாம். அவ்வளவு ஹம்மிங்!

    தெரியாத பாடல்களில் எந்த இடத்தில் ஹம்மிங் வரும் என்று யூகிப்பது கஷ்டம்.கையில் துண்டு வைத்துக்கொண்டு கோழி அமுக்குவது போல் அமுக்க வேண்டி இருக்கிறது.

    ஏழுமலையான் மகிமை படத்தில் (பாட்டு:எந்த ஜன்மம் என்ன)முடியப்போகிறது என்று ஆடியோவை மூட யோசிக்கையில் 4.23ல் ஹம்மிங் வருகிறது.

    யோசித்துப் பாருங்கள்.கிட்டத்தட்ட (சுமார் கணக்குதான்)5000 பாடல்கள்.இதில் 80/90களில் வழக்கமான ராமராஜன்,முரளி,மோகன்,பாண்டியராஜன்,சுரேஷ் (ரஜனி,கமல் இதில் அடங்குவார்கள்) இத்யாதிகளின்  புளித்தமாவையே புளிக்கவைக்கும் கதைகள் அதில் டூயட்டுகள்,மற்ற பாட்டுக்கள்.ஒரு கையில் ஹார்மோனியமும் மற்றொரு கையால் மூக்கையும் பிடித்துக்கொண்டு
    (புளித்த மாவு நெடி) டியூன் போட்டிருப்பாரோ?

    முடிந்தவரை சாயல் வராமல் தனித்தன்மையோடு ஹம்மிங்குகளைப் போட்டிருக்கிறார்.காரணம்.இவரிடம் நிறைய  out of box thinking மற்றும் எல்லாவகை இசை ஞானங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.

    "You  just name it director.... I  create it" என்றபடி போட்டிருக்கிறார் ஞானி ராஜா.

    மொத்தம் எடுத்தது 55 ஹம்மிங்.(கைத்தட்டுங்ப்பா!)

                 Melody Queen of South India என்கிற ஹம்மிங் ராட்ஷசி

    ஹம்மிங்கில் ஜானகிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.சிலம்பாட்டம் ஆடுகிறார்.HATS OFF JANAKIAMMA!அவர் குரலின்  பன்முகத்தன்மை ஒரு காரணம்.2000 வோல்ட்ஸ் கம்பி இழைக் குரல்.குரலில் ஒரு சில்லிப்பு.கவர்ச்சியும் ஹிந்துஸ்தானி டச்சும் கூடுதல் பலம்.

    ஹம்மிங்கில் லட்சக்கணக்கான ரசிகர்களை இம்சைப்படுத்தியவர். 

    அறிவிப்பு:
    மிதக்கும் ஆடியோ பிளேயர்(fileden)தளம் தொழில் நுட்ப
    கோளாறு காரணமால்Divshare ஆடியோ பிளேயர் பாதி வைக்க வேண்டியதாய் போயிற்று.
     
    சோலை இளங்குயிலே - அண்ணனுக்கு ஜே -1989
    வித்தியாசமாக  டூயட்டில்  ஆண்களின் கோரஸ் ஹம்மிங்.அண்ணிக்கு ஜே? 0.57-1.15 ஹம்மிங்கின் ஊடே செல்லும் இசை அருமை.மென்மையாக ஹம்முகிறார்கள்.
    Humm2Annanukku-Solaiilam.mp3
    அடுத்து முக்கியமானது ஹம்மிங்குடன் இசைக்கப்படும் மற்ற இசை நாதங்கள்.இதனால் ஹம்மிங்கிற்கு ஒரு களை வருகிறது.புத்திசாலித்தனமும் மிளிர்கிறது.

    உதாரணம் சில:நான் என்பது, ஆறு அது,முத்தமிழ் கவியே,ராசாவே உன்ன,காதல் ஓவியம்,புத்தம் புது காலை.இதில் புத்தும் புது காலை பிரமிக்க வைக்கிறது.

    புத்தம்புது காலை -அலைகள் ஓய்வதில்லை-1981
    இனிமையான இசை நாதங்களுக்கு நடுவே மொட்டு விரியும் ஹம்மிங்.ராஜாவின் மேதைத்தனமான இசை.ஒரு வானவில் வர்ணஜால கற்பனை.மார்கழி மாத பனிகாலை இழைகள்.
    ஆறு அது ஆழமில்ல -முதல் வசந்தம்-1990
    தாளக்காட்டு ஹம்மிங்கிற்கு எக்ஸ்ட்ரா கிராமியம மணம் கொடுக்கிறது.எனக்கு பிடித்தமான ஒன்று.இதெல்லாம் மறுபடியும் உருவாக்கமுடியுமா.இதெல்லாம் classics ஆகிவிட்டது.
    Humm2Aaruathuazha.mp3

    முத்தமிழ் கவியே -தர்மத்தின் தலைவன் -1988
    ஹம்மிங்கிறகு இசைக்கப்படும் தபலா ரம்யம்.0.16,0.19,0.22 இல் எழுப்பப்படும் ”ஊஊ” ஹம்மிங் அல்ல.இசைக்கருவி. நான் எப்போதும் ரசிக்கும் ஹம்மிங்.சும்மா கணீர் கணீர் என்று வருகிறது. 

    அலைகள் ஓய்வதில்லை - காதல் ஓவியம் -1982
    0.20-0.32 தாளமும் ஹம்மிங் செய்கிறது.0.36-0.49ல் கவுண்டர் பாயிண்ட்.
    நான் என்பது நீ - சூரசம்ஹாரம் -1988
    முதலில் வருவது ஹம்மிங்கா இசைக்கருவியா?
     Humm2Nanenpathu.mp3
    ராசாவே உன்ன நான் எண்ணித்தான் - தனிக்காட்டுராஜா-1982
    தன தம் தம் தம் தம்மெல்லாம் ஹம்மிங்ல சேருமா? இதில் கவுண்டர் பாயிண்ட்0.33-0.52 வருகிறது.(ஹம்மிங் ஒரு மெட்டிலும் கிடார் வேறு ஒரு மெட்டிலும் வாசிக்கப்படுகிறது).0.16ல் ஹம்மிங்கில் இசை குறுக்கிட்டு அழகு படுத்துகிறது.
    Humm2RaasaveThanikati.mp3
    பாடல்களில் ஹம்மிங்கின் காம்பினேஷனை மாற்றி அழகுப்படுத்துகிறார்.back to back ஜிராக்ஸ் எடுப்பதில்லை.சிலது ஹம்மிங்கா இசைக் கருவியா என்று தெரியவில்லை.

    ஸ்டைலோ ஸ்டைல்
    ஒரு குங்கும செங்கமலம் - ஆராதனை -1981
    என்ன ஒரு ஸ்டைல்! அட்டகாசம்.
    Humm2Oru gunguma.mp3


    பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்-1981
    முன்பாதியில் வரும் ஹம்மிங் பின் பாதியில்  வேறுபடுகிறது.அதுவும் முந்தியதைவிட தரத்தில் மேம்படுகிறது.துள்ளல் ஹம்மிங்.
    Humm2PoonAada.mp3

    பூமாலையே தோள்சேரவா - பகல் நிலவு -1985
    இது தமிழிற்கு புதுசு.இதில் வார்த்தைகளும் ஹம்மிங்கும் கலந்து வருகிறது.ராஜா பாடும்போது ஜானகி செய்யும்  ஹம்மிங்கை  ஜானகி பாடும்போது ராஜா செய்வதில்லை.(ஆடியோவில் இல்லை)
    Humm2Poomalaye Thol.mp3

    இளையராஜாவின் சோதனை முயற்சி?
     பொன்னோவியம் கண்டேன் - கழுகு -1981
    4.05 நிமிட பாடலில் 1.54 நிமிடம் ஹம்மிங்.1.54 நிமிடங்கள் ஹம்மிங்கயே இசைக்கருவியாக பயன்படுத்தி உள்ளார்.
    Humm2PonnoviumKazhugu.mp3
     மதம் சம்பந்தப்பட்ட ஹம்மிங்:
    மாறுகோ மாறுகோ - வெற்றி விழா-1989
    சர்ச் சம்பந்தபட்ட கோரஸ் ஹம்மிங்(பிரார்த்தனை)(?).
    Humm2Marugo.mp3

    அல்லா உன் ஆணை -சந்திரலேகா - 1995
    இஸ்லாம் சம்பந்தபட்ட அரேபியன் டைப் ஹம்மிங்(?).அட்டகாசம்.
    Humm2Allahunanai.mp3
    டூயட்டில் கதாநாயகன் பாடல் வரிகளைப் பாடுவதும் அதை கதாநாயகி ஹம் (ஆரம்பம்/நடு/முடிவு)செய்வதும் அந்தக்காலப் பாடல்களில்  பார்க்கலாம். இப்போது  குறைந்துவிட்டது.

    ரொம்ப ஆச்சரியமான விஷயம் பாடகி சித்ரா ஹம் செய்யும் பாடல்கள் ரொம்ப ரொம்ப குறைவு.காரணம்?

     கீதம் சங்கீதம் - கொக்கரக்கோ - 1983
    இதில் முக்கியமானது 0.22ல் ஷைலாஜாவின் குரல் எக்கோவும் இசைக்கருவிகளும் கலந்து வித்தியாசமாக இருக்கிறது.அட்டகாசம்.

    Humm2Geetham Sangee.mp3

    அருமையான ஒரு குரல் ஹம்மிங்குகள்:
     
    Chamber welcomes Ilayaraja
    (புது முகம்?)
    Humm2Naan Thedum .mp3
    காதல் வந்திருச்சு-கல்யாணராமன் -1979  
    நல்லவர்கெல்லாம் - தியாகம் -1978
    ராஜாவின் இசையில் டிஎம்எஸ் ஹம்மிங் அருமை.சிவாஜி கண்முன் வருகிறார்.எஸ்பிபியையேக் கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுக்கு இது புதுசு.
    Humm2NallavaThiyagam.mp3
     
     ஏதோ நினைவுகள் - அகல் விளக்கு-1979
    Humm2EthoNinaivu.mp3
     இளஞ்சோலைப் பூத்ததோ-உனக்காகவே வாழ்கிறேன் - 1986
    Humm2Ilanjolai.mp3

    மன்றம் வந்த தென்றலுக்கு - மெளனராகம் -1986
    Humm2MandramVantha.mp3

    அழகே அழகே - ராஜபார்வை - 1981
    Humm2Azhake.mp3

    பெண்ணும் ஆணும் சேர்ந்த ஹம்மிங்:

    தென்றல் வந்து - தென்றலே என்னைத் தொடு -1985
    Humm2ThendralVanthu.mp3

    பெண் மானே - நான் சிகப்பு மனிதன் - 1985
    Humm2PennMaane.mp3

    அழகே உன் முகம் - அந்தப்புரம்(1999)

     Soul-stirring and ever haunting hummings
    ஆரோ பாடுன்னு - கதா பரயுன்னு-2010
    Humm2Aaro Padunnu .mp3
     காற்றில் எந்தன் கீதம் - ஜானி -1981
    (இந்தப் பாடலைப் பற்றிய தனி பதிவே என்னிடம் இருக்கிறது.இந்தப் பாட்டை R&D செய்வதற்குண்டான விஷயம் இருக்கிறது)
    (ஜானகி)கண்டேன் எங்கும் -காற்றினிலே வரும் கீதம்-1978

    (வாணி)கண்டேன் எங்கும் -காற்றினிலே வரும் கீதம்-1978

    தெய்வீக ராகம் -(உல்லாசபறவைகள் -1980)&ஆயிரம் மலர்களே (நிறம் மாறாத பூக்கள் - 1979)
    இது மாதிரி  மனதை பிழியும் ஹம்மிங் கடந்த முப்பது வருடத்தில் ஏதாவது இருக்கிறதா?ஹம்மிங்கை அழகாக டிசைன் செய்திருக்கிறார்.

      
    இளமையெனும் பூங்காற்று - பகலில் ஒரு இரவு - 1979
    இதில் 0.07ல் ஹம்மிங்கும்  தபலாவும் புல்லாங்குழலும் சங்கமமாகும் இடம்  மெலிதான பூங்காற்று  வீசத்தான் செய்கிறது.பிரமாதம் ஞானி சார்!
    Humm2Ilamaiennum.mp3
     

    பொன்வானம் பன்னீர் - இன்று நீ நாளை நான் - 1983
    Humm2PonvanamPanner.mp3
     
    ஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடிதென்றல் -1992 
    இதன் தாக்கத்தில்தான் “போறாளே பொன்னுத்தாயி”ன் ஹம்மிங் ரஹ்மான் போட்டிருப்பார் என்பது என் யூகம்.
    Humm2OruKanamOru.mp3

    எங்கே நான் காண்பேன் -  சாதனை - 1986
    Humm2EngeNaanKanpen.mp3

    ரோஜாவைத் தாலாட்டும் -நினைவெல்லாம் நித்யா-1982

    தென்றல் காற்றே - ஈரமான ரோஜாவே-1991

    ரொம்ப ஸ்டைலான ஹம்மிங்குகள்:
    இந்த மின்மினிக்கு - சிகப்பு ரோஜாக்கள்-1978
    Humm2Intha Minminikku.mp3

    ஏ ராசாத்தி- என் உயிர் தோழன் - 1990
    Humm2Hey Rasaathi.mp3

    ஏதோ மோகம் - கோழிகூவுது -1982
    Humm2Ethomogam.mp3

    ஹேய் ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன் -1984
    Humm2Hey I Love.mp3

    ஆகாய கங்கை - தர்மயுத்தம் -1979
    Humm2Agayagangai.mp3
    கிளாசிகல் ஹம்மிங்: 
    ராகவனே ரமணா - இளமைகாலங்கள்-1983  
    இன்றைக்கு ஏன் இந்த - வைதேகி காத்திருந்தாள் -1984 
    சோலைக்குயிலே - பொண்ணு ஊருக்குப் புதுசு-1979
    Humm2SolaiKuyile.mp3


    மான் கண்டேன் - ராஜரிஷி-1985
    Humm2Mankanden.mp3

     
    மாடத்திலே கன்னி - வீரா-1994
    இதில் ஆண்கள் ஹம்மிங் புதுசு.சூப்பர். குத்துப்பாட்டில் இது மாதிரி ஹம்மிங் கேட்டதாக ஞாபகம் இல்லை.
    Humm2Maadatthile.mp3
    நாதவினோதங்கள் - சலங்கை ஒலி -1982
    இதில்  எஸ்பிபி சொல்லும் காளிதாசன் எழுதிய  ரகுவம்சத்தில் வரும் ஸ்லோகத்திற்கு ஹம்மிங் ஒரு special effect கொடுக்கிறது.0.40-0.46  எஸ்பிபியை தொடர்ந்து ஒரு follower humming ஷைலாஜா கொடுக்கிறார்.அருமை.
    வித்தியாசம்.
    humm2Nathavinothangal.mp3



      ஊரடங்கும் சாமத்திலே - புதுப்பட்டி பொன்னுத்தாயி-1994
    Humm2Ooradangum.mp3

    இசைமேடையில் - இளமைகாலங்கள் - 1983
    Humm2Isaimedaiyil.mp3

    தாம்த தீம்த - பகலில் ஒரு இரவு -1979
    Humm2Pagalil-Thamtha.mp3

    கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்-1987
    மடைதிறந்து கூவும் - நிழல்கள்-1981
    சங்கத்தில் காணாத கவிதை - ஆட்டோ ராஜா-1982
    எள்ளு தாத்தா வெர்ஷன்.புது முயற்சி.

    யாரும் விளையாடும் - நாடோடி தென்றல் -1992

    Wednesday, February 2, 2011

    ஒரு இறகைக் கொன்றுவிட்டேன் -கவிதை

    அதன் போக்கில் அதை
    ரசித்தப்படி இருந்திருக்கலாம்

    ஒரு கவிதை எழுதிவிட்டு
    போய் இருக்கலாம்
    தூரிகையில் வரைந்திருக்கலாம்
    அல்லது படம் பிடித்திருக்கலாம்

    அல்லது நான்  என் வேலையைப்
    பார்த்துக்கொண்டுப்போய் இருக்கலாம்


    பிரபஞ்சத்தின் இசைக்கு 
    ஏகாந்தமாய் நடனமாடிக்கொண்டிருந்த
    ஒரு மெல்லிய இறகை
    உள்ளங்கையில் வாங்கி
    வாயால் ஊதி இருக்கக் கூடாது


    .